மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உங்கள் இலக்குகளை அடைவது எப்படி ? தமிழ்ல வேடிக்கையான பழமொழிகள் நிறைய உண்டு. 'கிட்டாதாயின் வெட்டென மற'ன்னு ஒரு பழமொழி. 'முயற்சி திருவினையாக்கும்'னு ஒரு பழமொழி. என்ன இது ஒண்ணுகொண்ணு முரணா இருக்கு. 'முயற்சி திரு வினையாக்கும்'னு செய்யறதைத் தொடர்வதா? 'இது ஒண்ணும் கிட்டாது. வெட்டென மறப்போம்'னு எழுந்து போயிடலாமா? ஆசைகளிலே நிறைவேறக் கூடியது, நிறைவேற முடியாததுனு ரெண்டு வகை. எடுத்துக் காட்டா எனக்கு கணினி பற்றி நல்லா கத்துக்கணும்னு தோணினா, அதுக்குன்னு புத்தகம், சொல்லி தரும் இடம் எல்லாம் இருக்கு. முயற்சி எடுத்து படிச்சா திருவினையாகும். நான் அஞ்சடி எட்டங்குலம் உசரம், ஆறடி பத்தங்குலமா வளரணும்னா பேத்தல். அதை வெட்டென மறப்பது நல்லது. இலக்குகளை அடைவது எப்படினு ஒரு புத்தகம் இர…
-
- 0 replies
- 5.8k views
-
-
இலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படமாட்டாது. மாறாக கத்தோலிக்க மதத்தைப் பொறுத்த வரை கத்தோலிக்க சிங்களவர்களும் இருப்பதன் காரணமாகவும் வல்லாதிக்க நாடுகள் கத்தோலிக்க மதம் சார்ந்தவை என்பதாலும் இலங்கையில் கத்தோலிக்க நிந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு மேலாக இஸ்லாமியத்தில் கைவைத்தால், கழுத்து வெட்டும் நாடுகள் பெற்றோலை வெட்டி விடும் என்ற பயம். எனவே இஸ்லாமியத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக சைவ சமயம் இந்த நாட்டின் ஆதிச் சமயம். இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இலங்கையை சிவபூமி என்று திருமூலர் நாயனார் புகழ்ந்துரைத்துள்ளார். இப்படியயல்லாம் இருந்தும் சைவ சமயத்தை என்ன செய்தாலும் யாரும் கேட்க…
-
- 35 replies
- 4k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் நடராஜர் நடராஜ தத்துவம் திருமுகம்: எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித்திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும். பனித்தசடை: சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது. கங்கை: இறைவன் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது. பிறைசூடுதல்: சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.
-
- 12 replies
- 8.5k views
-
-
சித்தமெல்லாம் சிவமயம் – 108 சித்தர்களின் பெயர்கள் – தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள். சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலை…
-
- 0 replies
- 3.6k views
-
-
பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு? மூட நம்பிக்கைகள் நமக்கு ஒன்றும் புதியவை அல்ல. சமூகத்தில் பரவியிருக்கும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மூடநம்பிக்கைகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம். இதன் ஒருவகை வெளிப்பாடு தான் பிள்ளையார் சிலைகள் ‘பால் குடிப்பதாக’ மக்கள் கூட்டம் நம்பிய நிகழ்வுமாகும். இது அறிவியலாளர்கள் சிந்தனையையும் முட்டத் தவறவில்லை. பலரால் நோக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கத்திற்குத் தெளிவான விளக்கம் உண்டு. நீரோ, பாலோ வேறெந்த நீர்மமோ ஒரு கரண்டியிலோ சிறிய கிண்ணத்திலோ எடுத்துக்கொள்ளப்படும்போது அதன் புறப்பரப்பு தட்டையாக இல்லாமல் சிறிது வளைந்திருக்கும் என்பது நன்கு அறியப்பட்ட விடயம். புறப்பரப்பு விசையால் (‘surface tension’) நீர்மம் தனது மேற்பரப்பைச் சுருக்கிக்கொள்ள மு…
-
- 13 replies
- 4.4k views
-
-
சிறீலங்கா எனும் சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத தேசம் தமிழ் மற்றும் தனது சொந்தச் சிங்கள சனங்களை நாய்களை விடக் கேவலமாக நடத்தி அங்கு சன நாய் அக ஆட்சி நடத்தி வருவதையே அங்கு நடக்கும் அண்மைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க சனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரம், மக்களின் கருத்துரிமைச் சுதந்திரம், சொந்த தேசத்தில் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம், சொந்த மண்ணில் விரும்பிய இடத்தில் வாழும் சுதந்திரம் இவை அனைத்தும் மக்களுக்கு அவர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யும் அரசுகளால் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவை பல நாடுகளில் (அமெரிக்கா உட்பட) பகுதியாகவே மக்களால் அனுபவிக்கப்படுகின்றன என்பது உண்மையாக இருக்க சிங்களப் பேரினவாத கொடிய பயங்கரவாத தேசமான சிறீலங்காவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம் ‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது. உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும…
-
- 0 replies
- 959 views
-
-
-
நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர். இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாரா…
-
- 2 replies
- 883 views
-
-
சான்டா க்ளாஸும் சில விநோதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்! #XMas2020 றின்னோஸா Santa Claus | Christmas நாம் கேள்விப்படாத விசித்திரமான பண்டிகை மரபுகளில் ஒன்று ஐஸ்லாந்திலிருந்து வருகிறது. அங்கு ஒரு மாபெரும் பூனை கிறிஸ்துமஸ் நேரத்தில் பனிமூடிய கிராமப்புறங்களில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது. இன்று கிறிஸ்துமஸ் திருநாள். கிறிஸ்துமஸ் என்றால் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது Santa Claus. சான்டா இல்லாமல் கிறிஸ்துமஸ் பூரணமடையாது. கிபி 280-ல் நிக்கோலஸ் என்ற ஒரு பாதிரியார், தற்போது துருக்கி என அழைக்கப்படும் Myra எனும் இடத்தில் வாழ்ந்தாராம். அவர் மிகவும் கருணயுள்ளவராகவும் தன்னிடம், உள்ள எல்லா பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்தளிப்பவரா…
-
- 0 replies
- 491 views
-
-
சுப்பிரமணிய விரதம் 1. சுப்பிரமணிய விரதம் எத்தனை? சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 2. சுக்கிரவார விரதமாவது யாது? ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 3. கார்த்திகை விரதமாவது யாது? கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமா…
-
- 0 replies
- 959 views
-
-
யூதர்கள் ஒரு கடவுள் என்றும் அவர் தான் இவ்வுலகத்தை படைத்தார் ,எல்லாம் வல்லவர் என்றும் கருணை படைத்தவர் என்றும் கூறுகின்றது. " தோரா", என்பது பைபிள்,குர் ஆன்,திருக்குறள் போன்று,யூதர்கட்கு ஒரு புனித நூலாகும். தோரா என்பது கற்பித்தல் என்று பொருள் படும். யூதர்கள் இயேசு கிறிஸ்துவை ஒரு "மெசாயாவாக" என்று நம்புவதில்லை.அவர்கள் (யூதர்)மெசாயா ஒரு மனிதர் என்றும்,மெசாயா கடவுள் அல்லவென்றும்,அவரே உலகத்தின் அமைதிக்கும்,ஒற்றுமைக்கும் தலைவன் என்றும் அவர் அரசன் டேவிட்டின் குடும்பத்தில் இருந்து வருவார் என்றும் கூறுகிறது. Judaism is a monotheistic religion. Jews believe there is one God who created and rules the world. This God is omnipotent (all powerful), omniscient (all knowing) and …
-
- 7 replies
- 2.5k views
-
-
கற்பனை என்ற வார்த்தையே தவறானது இந்த பிரபஞ்சத்தில் இல்லாத எதனையும் ஒருவரின் மூளையால் சிந்திக்கவும் உணரவும் முடியாது. கற்பனை என்று சொல்வது உங்கள் தேடலுக்கும் உண்மை புரிதலுக்கும் இடையேயுள்ள ஒரு பெரும் சுவர் ( இன்றைய மொபைல் அப்டேட் இல் பெற்றுக்கொண்டது । அனுப்பியவர் பெயர் அமானுஷ்யம் என்று போட்டிருக்கு ) ஆதலினால் கற்பனை செய்வீர் - உண்மையை உணர்வீர் ( இது என்னுடையது ) ……….
-
- 4 replies
- 713 views
-
-
ஜீவகாருண்ய ஒழுக்கம் (Part-1) சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற் பிரிவு ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும். அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப…
-
- 0 replies
- 829 views
-
-
ஆழ்வார்களில் அறிவியல் – பா. பொன்னி ஆன்மீகமும் அறிவியலும் கண்ணுக்குப் புலனாகாத ஓர் இழையால் நெருங்கிப் பிணைக்கப்பட்டிருப்பதை அவற்றை ஆழ்ந்து படிப்போர் உணரலாம். ஆன்மீகத்திலிருந்து கிளைக்கும் அறிவியல் மீண்டும் ஆன்மீகத்திலேயே நிறைவு பெறுவதைக் காணமுடிகின்றது. வானியல், உடலியல் தொடர்பான செய்திகள் ஆழ்வார்களின் அருளிச் செயலில் காணலாகும் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அணுக்கொள்கை: அணுவினை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்ற இயலும் என்று அறிவியலார் கூறுவர். ஆழ்வார்களும் இறைவனை அத்தகைய அணுவிற்கு இணையாகக் கூறுகின்றனர். திருமால் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் வித்தாக அமைபவன். அவனில் இருந்து தான் உலகப் பொருட்கள் தோன்றுகின்றன. ஆயினும் …
-
- 0 replies
- 739 views
-
-
எந்தவொரு செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயல் எந்தவிதமான தடங்கலும் இன்றி இனிதே முடிவடைய விநாயகர் வழிபாட்டுடன் துவங்குவது வழக்கம். அத்தகைய சிறப்புப் பெற்ற யானைமுகத்தோனுடைய பன்னிரு அவதாரங்களை சிறப்பாக விளக்குகிறது விநாயகர் புராணம். பன்னிரு அவதாரங்களாவன: 1. வக்கிர துண்ட விநாயகர் 2. சிந்தாமணி விநாயகர் 3. கஜானன விநாயகர் 4. விக்கினராஜ விநாயகர் 5. மயூரேச விநாயகர் 6. பாலச்சந்திர சேகர் 7. தூமகேது விநாயகர் 8. கணேச விநாயகர் 9. கணபதி விநாயகர் 10.மகோர்கட விநாயகர் 11.துண்டி விநாயகர் 12.வல்லபை விநாயகர்
-
- 0 replies
- 396 views
-
-
சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந் திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர் ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப் பாலமுத முண்டாரு மரசு மெய்திப் பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே. சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வ…
-
- 0 replies
- 400 views
-
-
ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்? முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?... கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,…
-
- 4 replies
- 5.8k views
-
-
லட்சுமணனுக்கு ராமர் இட்ட சாபம்! ராம அவதாரத்தின் இறுதிகட்ட நேரம், ராமரை அழைத்துச் செல்ல எமதர்மன் வரும் நேரம். எனவே, தன்னை பார்க்க யாரையும் அனுமதிக்காதே என்று தம்பி லட்சுமணனுக்கு ராமர் கட்டளையிட்டார் ராமர். ஆனால், அந்நேரத்தில் அங்கு வந்த துர்வாச முனிவர், லட்சுமணன் தடுத்தும் ராமரை பார்க்க உள்ளே சென்று விட்டார். தன் கட்டளையை மீறிய லட்சுமணனை மரமாக பிறக்க சாபமிட்டார் ராமன். அப்போது, "உங்களை பிரிந்து என்னால் தனியாக இருக்க முடியாது!' என்று முறையிட்டார் லட்சுமணன். "கவலை வேண்டாம்... அடுத்த பிறவியில் காசி முனிவருக்கு மகனாக பிறப்பேன். அப்போது உன்னை நாடி வருவேன். இப்போது ஒரு மோதிரம் தருகிறேன். அது எங்கு கழன்று விழுகிறதோ, அங்கு புளிய மரமாக நிற்பாய் என்றார்!' அப்படி பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், எந்த ஈனர்களும் எம்மை அழிக்க முடியுமா...? https://www.facebook.com/photo.php?v=289486967787367&set=vb.126587470724769&type=2&theater
-
- 2 replies
- 1.2k views
-
-
உறவுகளை ஒன்றிணைக்கும் நவராத்திரி! தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைப்போலவே நவராத்திரி விழாவையும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அதாவது, அக்டோபர் மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து, விஜயதசமி வரை ஒன்பது நாட்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் பலதரப்பட்ட 'தீம்'களில் கொலுவைத்து கொண்டாட்டம் நடக்கிறது. வட மாநிலங்களில் துர்கா பூஜை என்கிற பெயரிலும், தென் மாநிலங்களில் நவராத்திரி என்கிற பெயரிலும் இந்த கொலுவானது வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, நங்கநல்லூரில் இருக்கும் நித்யானந்த் - மைதிலி தம்பதியரின் வீட்டில் மூன்று தலைமுறையாக நவராத்திரிக்கு தொடந்து கொலு வைத்து கொண்டாடி வருகிறார்கள். அவர்களிடம் பேசினோம். ''நவராத்திரியைப் பொறுத்தவர…
-
- 4 replies
- 1.5k views
-
-
"உண்மையில் கிருஷ்ணா ஒரு கடவுளா ? அல்லது அவர் மிகவும் தீய மற்றும் ஏமாற்றும் நபரா?" / "Was Krishna really a god or he was a very evil and deceiving person?" கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பெண்களிடமும்,…
-
-
- 2 replies
- 424 views
-
-
வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல்
-
- 5 replies
- 392 views
-
-
நன்றி சொல்வேன் தெய்வமே..! காயத்தில் இருந்து குணமடைந்த சிம்பன்ஸி குரங்கை மறுபடி காட்டுக்குள் விடும்போது நிகழும் சம்பவம்.. நன்றி மறந்த மனிதர்களுக்கு மத்தியில், நன்றியுடன் தன் காயத்தை குணப்படுத்திய மனிதர்களுக்கு ஒரு சிம்பன்ஸி கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவிக்கும் இக்காணொளி, உங்கள் மனதையும், கண்களையும் கலங்க வைக்கும். https://www.facebook.com/video.php?v=749300595104208 sourec:FB.
-
- 0 replies
- 852 views
-
-
பாரதியார் - பாரதி யார்? செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து …
-
- 0 replies
- 3k views
-