சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
[size=5]டைவஸ்க்கு பின் ஆண்கள் என்ன எண்ணுவார்கள்?[/size] திருமணம் ஆனப்பின் நடக்கக்கூடாத ஒன்று தான் டைவர்ஸ். திருமணத்திற்குப் பின் ஏற்படக்கூடிய ஒரு சில சண்டைகளும், நன்கு புரிந்து கொள்ளாமல் இருப்பதுமே, இந்த செயலுக்கு பெரிதும் காரணமாகின்றன. இவ்வாறு இந்த காரணத்திற்கு டைவர்ஸ் ஆகக் கூடாது தான், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையினாலே இந்த முடிவு அவர்களால் எடுக்கப்படுகிறது. மேலும் இத்தகைய பிரிவு இருவருக்குமே பெரும் வலியை ஏற்படுத்தும். அப்படி அவர்கள் டைவர்ஸ் ஆனப் பின் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும், அவர்கள் என்ன நினைப்பார்கள், எதற்கு கவலைப்படுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதை கொஞ்சம் படித்துப் பாருங்களேன்... டைவர்ஸிற்குப் பின்…
-
- 59 replies
- 5.7k views
-
-
தற்கொலைகள் கற்பிப்பது என்ன? – யாழி March 5, 2020 - யாழி · சமூகம் செய்திகள் கட்டுரை இப்போது தற்கொலைகள் என்பது தொடர் நிகழ்வாக மாறிவிட்ட தருணத்தில் எவ்வளவு துயரப்படுகிறோமோ? அந்த அளவுக்கு அச்சப்படவும் வேண்டியிருக்கு. நமக்கு நெருக்கமான ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும்போது நம்மிடையே ஒரு குற்றயுணர்ச்சி எழுவதை தடுக்கமுடியாது. தற்கொலைக்கான காரணங்கள் எதுவாக இருப்பினும் நம்மால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் கூட அந்த குற்றயுணர்ச்சியின் காரணியாக இருக்கக்கூடும். கடந்த காலங்களில் தற்கொலைகள் என்பது பெரும்பாலும் காதல் சார்ந்தே இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு வர்ணம் மற்றும் வர்க்கமே காரணம். சாதிய மனோபாவத்தால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைகளே அதிகம் அதில் சில க…
-
- 5 replies
- 889 views
-
-
இளமைக்காலத்தில் கனவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில சமயங்களில் இக்காலப்பகுதியில் எழும் அற்ப ஆசைகளுக்கும். உணர்வுகளுக்கும் அடிபணிந்து எடுக்கும் முடிவுகள் பலரின் கனவுகளைச் சிதைத்து, எப்படியெல்லாமோ வாழவைத்து விடுகின்றன. ஒரு வேளை அந்த நேரத்தில் அவர்கள் நன்கு ஆராய்ந்து, சிந்தித்து சரியானதொரு முடிவினை எடுத்திருந்தால் வாழ்வின் கனவுகளையும், உறவுகளையும் தொலைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்காது. அந்த வகையில் சிறைச்சாலைச் கதவுகளுக்கு முன்னால் தான் கருவில் சுமந்து பெற்றெடுத்த மகனைக் காண வேண்டும், அவனைக் கட்டித்தழுவி சுக, துக்கங்களை அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் கால் கடுக்கக் காத்திருந்தாள் சுது நோனா. நாம் அவருடன் கதைக்க முற்பட்ட போது விரக்தி கலந்…
-
- 0 replies
- 569 views
-
-
முதலில் ஒரு மூங்கில் குச்சி.உடனடியாக ஒரு உலர்ந்த சுள்ளி.சற்று நேரம் அமைதி. பின்னர் சரேலென்று வந்து ஒரு சணல் கயிறு.என் வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து ஒவ்வொன்றாகக் ’களவு’ போய்க் கொண்டிருக்கிறது. அண்ணாந்து பார்க்கிறேன். என் ஜன்னலுக்கு வெளியே விரிந்து நிற்கும் வேப்பமரத்தில் காகம் ஒன்று கூடுகட்டிக் கொண்டிருக்கிறது. ஓ! அதன் குடும்பத்தில் ஒரு புதிய தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதனை வரவேற்கதான் அந்தக் காக்கை அலைந்து திரிந்து அகப்பட்டதையெல்லாம் அலகில் ஏந்திச் சென்று அந்தக் கூட்டை அமைக்கிறது . எனக்குள் இருக்கும் குழந்தைக்கு இந்தப் பறவைக் கூடுகள் எப்போதுமே ஓர் ஆச்சரியம். எத்தனை வடிவம்! எத்தனை நுட்பம்! எத்தனை கரிசனம்! எத்தனை உழைப்பு! உலகில் உள்ள அத்தனை கூடுகளுக்கும் அட்ரஸ் …
-
- 19 replies
- 1.8k views
-
-
'மனைவி தனியுரிமை கோருவது கணவர் மீதான கொடுமை அல்ல': தில்லி உயர் நீதிமன்றம்! 'திருமணமான ஒரு பெண், தன்னுடைய புகுந்த வீட்டில் தனியுரிமையை (பிரைவசி) கோருவதை, கணவரைக் கொடுமைப்படுத்துவதாகக் கருத முடியாது. எனவே இதன் அடிப்படையில் கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது' என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2003-இல் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் மனைவி கூட்டுக் குடும்பத்தில் வாழ விருப்பம் இல்லாததால் தனிக் குடித்தனம் நடத்த வற்புறுத்துவதாகவும் அதற்காக தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி தில்லி கீழமை நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி 2010-ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 'தனிமை என்பது அவரவரது அடிப்படை உரிமை என்பதால் தனிக் குடித…
-
- 0 replies
- 615 views
-
-
நமக்குள் ஒரு தலைவர்! பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உள்ளடக்கியதே வாழ்க்கை. சூழல் கடினமாக இருந்தாலும், பிரச்சினைகள் சவால்மிக்கவையாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். இவற்றை நமக்கு அளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால் தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆள்வதும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? தன்னை ஆள முடியாதவன் ஒரு தலைவனாக முடியாது என்பதுதான் இதற்குப் பதில். தலைமைப் பண்பைப் பயில்வதற்குப் பள்ளிக்கூடங்கள்தாம் மிகச் சிறந்த இடம். வெளியுலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பவை அவைதான். அங்கு கல்வியைக் கற்பதோடு நம்மைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது. பின்னால், நாம் சந்திக்கப்போ…
-
- 0 replies
- 495 views
-
-
பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்! ஸ்ரீ விஜி ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன். எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உள்உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி இருப்பான், போலியாக. பெண் என்பவள் பாலியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு தயங்குவாள். அப்படி அவள் தயங்குவதற்குக் காரணம் – அவளை ஆரம்பத்திலிருந்து அடக்கி ஒடுக்கி வைத்துள்ள அவளின் சுற்றம்தான். இன்னமும…
-
- 0 replies
- 1.5k views
-
-
மக்கள் தொகையைக் குறைக்க தாமதமாக கல்யாணம் செய்யலாம் - ஆசாத் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 2009, 11:43 [iST] டெல்லி: எல்லோரும் லேட்டாக கல்யாணம் செய்தால் மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்று யோசனை கூறியுள்ளார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத். டெல்லியில் நடந்த உலக மக்கள் தொகை தினத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், நமது நாட்டில் நகர்ப்புறப் பெண்கள் சற்று தாமதமாகவே கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் 16 முதல் 18 வயதுக்குள் கல்யாணத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் டீன் ஏஜில் கல்யாணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கல்யாணங்களை சற்று தாமதமாக செய்தால், மக்கள் தொகைப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். …
-
- 5 replies
- 1.5k views
-
-
சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை…
-
- 18 replies
- 4.4k views
-
-
இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு Pathivu Toolbar ©2005thamizmanam.com இந்திய ஊடகங்கள், இடவொதுக்கீட்டினை எதிர்த்து நடைபெறும் வெறியாட்டங்களை ஓங்கி ஒலித்தும், இடவொதுக்கீடு சார்பான நிகழ்வுகளைப் புறக்கணித்தும் வருவதை நாம் அறிவோம். இதன் காரணம் ஊடகங்களின் அதிகாரம் ‘உயர்’சாதியினரின் கைகளில் இருக்கின்றது என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இந்த எளிய உண்மையை அறிந்திருந்தாலும் வம்படிக்காகவே புள்ளிவிபரம் கேட்கும் சில புள்ளிகளை நாம் எதிர்கொண்டே வருகிறோம். அவர்களுக்காக இந்தப் பதிவு. வழக்கம்போல இதிலும் அவர்கள் குறை கண்டுபிடிக்கக் கூடும். டில்லியிலிருந்து இயங்கும் 40 ‘தேசிய’(national) ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுதந்திரத்தின் குறியீடு மயிர் பெருமாள்முருகன் கல்வித் துறை சார்ந்து நான் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளைத் தொகுத்து ‘மயிர்தான் பிரச்சினையா?’ என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளேன். புத்தகம் நேற்று கைக்கு வந்து சேர்ந்தது. ரோஹிணி மணியின் கலையமைதி கூடிய பிரமாதமான அட்டை வடிவமைப்பு. பெண் மயிலின் தோற்றம் போன்ற தலைமயிருடன் கம்பீரமாக நிற்கும் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கிலான அட்டை. இந்நூலின் தலைப்புக் கட்டுரை ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றது. சமூக ஊடகங்களில் பரவி விவாதிக்கப்பட்டது. அதையொட்டி வெளியான கருத்துக்களால் மீண்டும் ஒரு கட்டுரையும் எழுத நேர்ந்தது. இரு கட்டுரைகளும் நூலில் உள்ளன. இன்றைய தலைமுறையினர் முடி வைத்துக்கொள்ளு…
-
- 4 replies
- 1.1k views
-
-
கடந்த இரண்டு தசாப்தங்களாக இங்கு புலம்பெயர்ந்த திருமணமான தம்பதிகள் மத்தியில் குழந்தை பேறு தள்ளிப்போதல் அல்லது குழந்தைப் பேற்றிக்கான வாய்புகள் குறைவடைந்து போதல் பாரிய உளவியல் சமூக பிரச்சனகளாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலும் இந்தப் பிரச்சனைகள் உள்ள தம்பதிகளுக்கு மகப்பேற்று நிபுணர்களால் பெரிதும் சிபார்சு செய்யப்படுவது பரிசோதனைக் குழாய் [(IN VITRO FERTILIZATION ( IVF) ]குழந்தை முறையே ஆகும். முதலில் இந்த தம்பதிகளை பல்வேறு கட்ட பரிசோதனைகழுக்கு உட்படுத்தி இறுதியிலேயே இந்த முறை மகப்பேற்று மருத்துவ நிபுணர்களால் சிபார்சு செய்யப் படுகின்றது.இந்த முறையில் பல நிறைகளும் குறைகளும் காணப்படுகின்றன.நிறைகளாக தம்பதிகள் இரட்டைக் குழந்தைகளாகவோ(TWINS BABY) அல்லது மூன்று குழந்தைகளாகவோ[ (TRIPIL…
-
- 0 replies
- 1.3k views
-
-
பாடசாலையிலேயே “கட்டிப்பிடி“: பால் சமத்துவத்திற்காக வித்தியாசமாக சிந்திக்கும் அதிபர்! July 4, 2018 பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காமல், அவர்களையும் சக மனிதர்களாக பார்க்கவும், ஆண் -பெண் சமத்துவத்தை புரிய வைக்கவும், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடசாலை அதிபர் ஒருவர். இடதுசாரிய சிந்தனையுள்ள கருணாகரன் என்ற அதிபரே இந்த வித்தியாசமான- முன்னுதாரண முயற்சியில் இறங்கியுள்ளார். நாவலப்பிட்டிய கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் இந்த முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. அந்த பகுதியில் அவரது முற்போக்கான நடவடிக்கைகளால் அவரை பெரிதும் மக்கள் மதிப்பதும் குறிப்பிடத்தக்கது. யட்டியாந்தோட்ட கருணாகரன் என்ற பெயரில் இலக்கியம், சமூகம், அரசியல் என பல துறைகளில் தீவிரம…
-
- 0 replies
- 1k views
-
-
உண்மையில் , இது வலை இயல் உலகம் பகுதிக்கு வரவண்டியது . ஆயினும் , நான் இதை சமூக சாளரம் பகுதியில் இணைக்க வேண்டியதன் நோக்கம் , இணையம் சம்பந்தமான அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் , கணணி என்றால் சினிமா பார்ப்பது , ஸ்கைப் மென்பொருளில் முகம் பார்த்து உரையாடுதல் தான் என்ற புரிதல்கள் , தாயகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களும் இதே நிலையில் இருப்பது கசப்பான உண்மை . மேலும் இங்குள்ள இளையவர்களும் , தாயகத்திலுள்ள இளையவர்களும் , கணணியிலும் இணையத்திலும் என்ன செய்கின்றார்கள் ? எனபதை அறியாத அப்பாவிப் பெற்றோர்கள் காரணமாகவும் , இந்தப் பதிவை சமூகசாளரத்தில் இணைக்கின்றேன் . அத்துடன் கணணியினுடனான தேடலில் எமது மக்களின் நிலைப்பாடுகளையும் உணர இந்தப்பதிவு ஓர் உரைகல்லாக அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
சும்மா இருப்பவள் ~ லறீனா ஏ. ஹக் ~ சமூக அமைப்பில் உள்ள பல்வேறு நிறுவனக் கட்டமைப்புக்களில் குடும்பமும் ஒன்று. என்றாலும், சாதாரணச் சமூக உளவியலில் அது ஒரு ‘நிறுவனம்’ என்பதான விம்பம் ஆழம் பெறவில்லை என்பதே உண்மை. சமூக, கலாசார, சமயம் சார்ந்த கருத்தியல்கள் கட்டமைத்துள்ள புனிதப் பிம்பம் மேலெழுந்து ஆழப்பதிந்துள்ளதன் விளைவே இதுவாகும். மனித உயிரி ஒரு சமூகப் பிராணி என்ற அளவில், சிறுகுழுவாக, பெருங்குழுமமாக ஒருங்கு சேர்ந்து வாழ்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில், குடும்பமும் ஆணும் -பெண்ணும் இணைந்து வாழும் ஒரு சமூகச் சிற்றலகாக இருக்கின்றது. நம்முடைய சமூக அமைப்பில் கணவன் – மனைவி- குழந்தைகள் இணைந்ததாக, சிலபோது இவர்களோடு மூத்த தலைமுறையினரையும் உள்வாங்கியதாகக் குடும்பம் கட்ட…
-
- 0 replies
- 894 views
-
-
http://youtu.be/oUU-IxqLF9o
-
- 2 replies
- 1.4k views
-
-
நாங்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை மிகவும் ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது. தயவு செய்து இனி வரும் காலங்களில் இயற்கையான கார்த்திகை பூவை சூடாமல் சேலைகளிலோ,மேற் சட்டையிலோ எவரும் அணியவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுகொண்டுள்ளனர். வரலாறுகளை மறந்து தயவு செய்து எமது மாவீரர்களுடன் விளையாடாதீர்கள் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://lankasee.com/2020/06/18/தமிழ்-இனத்தின்-புனிதத்தை/
-
- 0 replies
- 594 views
-
-
இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப் பெற்றோருக்கும் இந்நிலை தான…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று தந்தையர் தினம் இன்று தந்தையர் தினம் | புரியப்படாத தந்தையர்கள் சில வருடங்களுக்கு முன்னர் சி.பி.சி வானொலியில் கேட்ட் ஒரு நிகழ்ச்சி – அல்லது அதன் சாராம்சம். ஒரு இளம் மாது கதை சொல்கிறார். “நானும் எனது சகோதரியும் குமரிகளாக இருக்கும்போது எனது அப்பா பெரும் நிறுவனமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி வெளியூர்ப் பயணம். குடும்பத்தை அம்மாவே கவனித்து வந்தார். அப்பா …
-
- 1 reply
- 455 views
-
-
பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்? ஆர்.அபிலாஷ் ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூ…
-
- 14 replies
- 1.7k views
-
-
கேர்ள் பிரண்ட் என்றால்.. சும்மா வாங்கிக் கொடுக்கிறதை திண்டு கொண்டு.. தான் நினைக்கிற நேரத்துக்கு மட்டும் கோல் பண்ணிக் கொண்டு.. ஏதோ கடமைக்கு நாலு கதை கதைச்சுக் கொண்டு.. கவிதை கதை எழுதிக் கொண்டு.. வாங்கிக் கொடுக்கிற கிப்டை தடவிக் கொண்டு.. இருக்கிறதெல்லாம்.. செம போர். கேர்ள் பிரண்ட் என்றால் நம்மள விட புத்திசாலியா.. திறமைசாலியான.. செயல்வீரியா.. வழிகாட்டியா.. நிரந்தரமான நித்தியமான அன்பு காட்டிறவாவா இருக்கனும். குழந்தைகளை படிப்பிக்கிறதுக்கு ரீச்சரா ஒரு கேர்ள் பிரண்டை எதிர்பார்க்கக் கூடாது. அதில நீங்க சிலர் தப்புப் பண்ணுறீங்க என்று நினைக்கிறன். குழந்தைகளுக்கு தாயாகவும்.. ரீச்சராகவும் அவா இருக்கிறான்னா.. நீங்கள் தந்தையாகவும் அந்த ரீச்சருக்கு associate (not assistant)ஆகவ…
-
- 34 replies
- 4.4k views
-
-
வலைப்பக்கங்களில் தேடிப் படிக்கிற சில விஷயங்கள், நமக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களாகவும், வழிகாட்டுவதாகவுமே ஆகிவிடுவதுண்டு. தட்டுங்கள் திறக்கப்படும்! கேளுங்கள் கொடுக்கப்படும் என்று கிறித்தவ வேதாகமம் சொல்வது இணையத்தில் மட்டுமே நூறு சதவிகிதம் சாத்தியம்! ஆம்! நீங்கள், எதைத் தேடுகிறீர்களோ, எதைத் தட்டுகிறீர்களோ அது நிச்சயமாகக் கிடைக்கும் இடம் இந்த இணையம் மட்டும் தான்! டோனி மோர்கன் என்றொரு வலைப் பதிவர்! இவருடைய வலைப் பதிவுகள் பெரும்பாலும் கிறித்தவ சர்ச்சுகளின் நிதி நிர்வாகத்தைப் பற்றியது, கிறித்தவ சர்ச்சுக்களால் ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவுகள் என்றாலும் கூட, பதிவுகளில், மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம் குறித்த சில விஷயங்களைப் பற்றிய கருத்துக்கள் கொஞ்சம் யோசிக்க வைப்பத…
-
- 8 replies
- 2.1k views
-
-
புலத்தில் தமிழ்ப்பெண்கள் தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதல…
-
- 4 replies
- 1.4k views
-
-
பெரும்பாலானவர்கள் அறியாத ஓர் உண்மை! நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதற்கு ‘பாடி லாங்குவேஜ் (body language)’ என்று பெயர். எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள். அதே சமயம், அவரை நோக்கி புன்னகையுடன், நீங்கள் பேசுவதை, உங்கள் கைகளால் விவரித்தபடி பேசிப் பாருங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்! நீங்கள் வேண்டியதை அடைய வேண்டுமென்றால் கீழே உள்ள பாடி லாங்குவேஜ் பற்றிய எளிய குறிப்புகளை பயன்படுத்தி…
-
- 21 replies
- 8.9k views
-
-
பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்! என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்....அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது. வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாய…
-
- 0 replies
- 1k views
-