சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். மற்றவர்களை விட உங்களையே எப்பொழுதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்…
-
- 9 replies
- 1.9k views
-
-
-
ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை! யாழன் ஆதி தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக…
-
- 0 replies
- 788 views
-
-
நீங்கள் நாத்தீகனா இது கொஞ்சம் Controversial ஆன விசயம். இப்படியான விசயங்களை வாசிக்க விரும்பாதவர்கள் இந்த இடத்திலேயே நிறுத்தி விடுங்கள். ஆனால் அப்படி என்ன Controversial ஆன விடயம் என்று பார்ப்போமே என்று எண்ணுபவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். "முக்கியமாய்'' யோசிக்கலாம். நான் பேசிக்கொண்டு இருக்கிறபொழுது பலர் என்னிடம் கேட்கிற கேள்வி நீங்கள் நாத்தீகனா (Atheist)? கடவுளை நம்பமாட்டீர்களா? உலகப் படைப்பில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்பதுதான். எனக்கு கடவுள் என்கின்ற சக்தி வாய்ந்த ஒருவரில் நம்பிக்கை இல்லை. எதற்காக, எப்படி, நான் அதனை நம்புவது? அது சிரமமான விடயம் எனக்கு. என்னைப் பொறுத்த வரையில் கடவுள் என்பவர் இல்லை. கடவுள் என்பவள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்ல…
-
- 4 replies
- 1.7k views
-
-
மனிதக் குரங்கு - 56 வருடம் நீர் யானை - 54 வருடம் கொரில்லா குரங்கு - 53 வருடம் வாத்து - 50 வருடம் காண்டாமிருகம் - 49 வருடம் ஐரோப்பிய கரடி - 47 வருடம் கடல்நாய் - 46 வருடம் மலைப்பாம்பு - 40 வருடம் தவளை - 40 வருடம் ஒட்டக சிவிங்கி - 36 வருடம் ஒட்டகம் - 30 வருடம் காட்டெருமை - 33 வருடம் சிவப்பு கங்காரு - 30 வருடம் சிங்கம் - 29 வருடம் பேரியன் ஆமை -152 வருடம் ஆமை - 116 வருடம் திமிங்கலம் - 90 வருடம் விலாங்கு மீன் - 88 வருடம் நன்னீர் சிப்பி - 80 வருடம் ஆசிய யானையின் ஆயுள் - 78 வருடம் கழுகு வகை - 72 வருடம் ஆப்பிரிக்க யானை -70 வருடம் ஆந்தை வகை - 68 வருடம் …
-
- 17 replies
- 24.3k views
-
-
90, 95 இடம்பெயர்வுகளால் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பலரையும் உள்வாங்கிய பாடசாலை இந்த பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி (முன்னர் மகா வித்தியாலயமாக இருந்தது). பலரிடம் 10,000 ரூபாவரை அறவிட்டு அனுமதி வழங்கிய இக்கல்லூரி இன்று தேசிய பாடசாலைத் தரத்துக்கு உயர யாழ் இடம்பெயர்வுகளே காரணம். பாடசாலையின் பின்புறம் மற்றும் அருகில் உள்ள மதில்களில் எல்லாம் அசிங்கமா எழுதித் தள்ளிய பலரும் இங்கும் இருக்கிறார்கள் போல. எதற்கும் சோடாப் போத்தல்கள் சகிதம் யாழையும் கல்கிசை நோக்கி கொண்டு செல்லாதவரை....புண்ணியம்.
-
- 86 replies
- 9.6k views
-
-
"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே. என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது…
-
- 40 replies
- 5.8k views
-
-
அன்றொரு நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஏதோ தொடர் நாடகம் ஒன்று அதாவது சின்னத்திரை நாடகம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. ஓடிக் கொண்டு இருந்தது என்றால் அவர்கள் வாடகை கொப்பி எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று அர்த்தம். இன்று கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின் அதே வீட்டில் அதே நடிகர்களுடன் அதே கதாபாத்திரங்களுடன் (ஆகவே நான் அன்று பார்த்த அதே நாடகம்) திரும்ப ஓடிக் கொண்டு இருக்கிறது. அன்றும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இன்றும் அதே பிரச்சனை ஆனால் வேறு வடிவத்தில் (Episode 755). நான் தொடர் நாடகங்கள் பார்க்காதவன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நான் எதையும் தொடர்ச்சியாகப் பார்த்ததும் இல்லை அதைவிட அவை தமிழ் நாடகங்களும் இல்லை. இங்கே ஆங்கில தொலைக்காட்சிப் ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம் *மகளிர் தின சிறப்புக் கட்டுரை ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு வரும் வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட இந்த நாளன்று பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டவும் பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணவும் இந்த நாளில் முயற்சி மேற்கொள்ளும் வகையில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நம் நாட்டையும் அயல்நாடான இந்திய நாட்டையும் பொறுத்தவரை வளமான நாடாக உருமாற்றுவதற்கு பெண்கள் ஆற்றிவரும்…
-
- 12 replies
- 2.7k views
-
-
பெண் ஒடுக்குமுறையின் ஒரு வரலாறு ஆண்களைப்போன்றே பெண்களும் பல வர்க்கங்களினால் பிளவுபட்டு வாழ்கின்றனர். ஒவ்வொரு வர்க்கப் பெண்களுக்கும் தமது வர்க்கத்திற்குரிய தனித்துவமான பிரச்சினைகள் உண்டு. நம்முள் பெரும்பான்மையினரால் விளங்கப்படும் பெண்ணிலைவாதமோ பால்ரீதியான பிரச்சினைகளையே தனது மையக்கருத்தாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பெண்களை (அ) வர்க்கங்களாக (ஆ) வர்க்க நிலைப்பாடுகளையொட்டி ஸ்தாபனப்படுத்த வேண்டிய அவசியம் உருத்தெரியாமல் மழுங்கடிக்கப்படுகின்றது. இதுவும் காரணமில்லாமலன்று. தமது வர்க்க நலன்களைக் காப்பாற்ற விழையும் புத்திஜீவிகளின் வெளிப்பாடுகள் தாம் இவை. தற்போது, அபிவிருத்தியடைந்துவரும் முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிவரும் கருத்துகளும் இப்போக்கிற்கு தூபம் போடுவனவாகவே இருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சமத்துவத்திற்கொரு முயற்சி - ஆண்களின் சமையல் பயிற்சி காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாக அடுப்பின் நெருப்பு நம் பெண்களை வேகவைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உலகம் சமையலறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை அறியாதவர் எவரும் இல்லை. காலம் மாறி வருகிறது. வான்வெளிக்குக்கூட பெண்கள் செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார்கள். ஆனால் பெண்கள் செய்யும் சமையலை மட்டும் ஆண்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதுவே உண்மை. தொழில்முறை சமையல்காரர்கள் கூட தத்தம் வீடுகளில் தன் மனைவி கையால் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். அதை விருப்பம் என்பதை விட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். அறுசுவை நடராஜன் சொல்கிற…
-
- 0 replies
- 917 views
-
-
குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ. படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங…
-
- 17 replies
- 2.3k views
-
-
வணக்கம் எல்லோருக்கும் நலமா? சரி விடயத்துக்கு வருவோம். நம்மில் பலர் காதலித்திருப்பீர்கள் இல்லையா?? அவர்களில் சிலரின் காதல் திருமணத்தில் முடிந்து இருக்கலாம் சிலரின் காதல் முடியாமல் இருக்கலாம். சரி எண்ட கேள்வி என்ன எண்டால்... நீங்கள் காதலித்திருந்து உங்கள் காதல் தோல்வியில் முடிந்து வேறு பெண்ணையோ இல்லை பையனையோ திருமணம் செய்தீர்களாயின் உங்கள் பழைய காதலை உங்கள் கணவனிடமோ/ மனைவியிடமோ சொல்லுவீர்களா?? அப்படி சொல்வதால் சிக்கல் வருமா?? எப்படியான சிக்கல் வரும்?? களத்தில் பல அனுபவமிக்கவர் இருப்பீர்கள் உங்கள் கருத்து என்ன??
-
- 130 replies
- 14.3k views
-
-
எனக்கு தெரிந்த சமையல் வேலை செய்யும் ஒருவர் , கொஞ்சம் தன்னை சமையல் வேலை செய்பவர் வெளியே சொல்ல விரும்ப மாட்டார். ரொம்ப வலியுறுத்தினால் உணவுசாலையில் மாஸ்டராக இருப்பதாக கூறுவார். கொஞ்சம் தாழ்வுமனப்பாண்மை உள்ளதால் சக தொழிலாளிகளிடம் சச்சரவு செய்து இருக்கிற வேலையும் துறந்து வேலையில்லாமல் இருக்கிறார். யாராவது வீடு தேடி வந்து கூப்பிட்டால் வேலைக்கு செல்வார். தன் குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் இதர செலவுகளக்கு ரொம்ப கஷ்டப்படுவார் எனத்தான் நினைக்கிறேன்.ஆனாலும் யாரிடமும் கடன் கேட்க மாட்டார். எப்படி குடும்பத்தை சமாளிக்கிறார் என்று தெரியவில்லை.ஆனால் அவரது வீடு மற்றும் கட்டப்படாத இடத்தையும் சேர்த்து ரூ18 – 20 லட்சம் வரை மதிப்பு இருக்கும். அவரை லட்சாதிபதி என்று செல்லுவதா, இல்லை ஏ…
-
- 2 replies
- 1.2k views
-
-
காதலிக்கும் போது என்ன நடக்கிறது? Tuesday, 20 February 2007 காதல் என்றால் என்ன? என்னமோ தெரியலை, ‘அது’ வந்தா மட்டும் நெஞ்சு குறுகுறுக்குது என்கிறாள் ஒரு பதினாறு வயதுப் பெண். அவள் விளக்கத்தில், தனிப்பட்ட ஒரு நபரிடம் ஏற்படும் நெஞ்சுக் குறுகுறுவை காதல் என்கிறாள். ‘மனதில் தோன்றுகிற உணர்வுகளில் மிகத் தூய்மையானது’ என்கிறார் ஜான் ட்ரைடன். ‘அந்தப் பொண்ணு பக்கத்திலேயே இருந்தால் பரவாயில்லை போல இருக்கு..’ என்கிறான் ஒரு கல்லூரி மாணவன். ‘பரவாயில்லை’ போலவையே அவன் காதலாக உணர்கிறான். சிலருக்கு ஒரு பெண்ணை நினைத்து தூக்கம் வருவதில்லை. மாவீரன் நெப்போலியன் கூட ‘எனக்கு காதல் எல்லாம் வந்ததில்லை. ஆனால் ஜோஸபினிடம் மட்டும் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..’ என்றார். காதல் ஜோக்குகள், காத…
-
- 25 replies
- 4.9k views
-
-
குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் பலவிதம். இவற்றில் ஒன்று திருமணமானபின் துணைவி அல்லது துணைவன் அல்லது இருவரும் வேறு ஒருவரை காதலிக்க முனைவது. இந்த தலைப்பை பற்றி விவாதிப்பதற்குரிய களத்தை இங்கே நாம் திறந்துள்ளோம். மற்றைய தலைப்புக்களை விட இது கனமானதும் கடுமையானதுமான தலைப்பாகும். இதனால் குடுப்பத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டு குடும்பச் சண்டைகள், விவாகரத்து, கொலைகள் வரை பிரச்சனை நீண்டு செல்கின்றது. உங்கள் அனுபவங்களையும், அறிவுரைகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்! நமக்கு இல்லை!
-
- 6 replies
- 1.7k views
-
-
அது'வும் அல்வாவும்... ராகவனும், மேகலாவும் அன்பான தம்பதி. கல்யாணம் ஆகி 18 வருடங்கள் ஆனாலும், இருவருக்கும் இடையில் சின்ன சண்டை சச்சரவு கூட வந்ததில்லை. சில ஆண்களைப் போல் சபல புத்தி ராகவனுக்கு இல்லை. ரோட்டில் நடக்கும்போது எதிரே வரும் பெண்களைக்கூட ஏறெடுத்து பார்க்காதவர். அவ்வூரில் லட்சிய தம்பதிகளுக்கு உதாரணமாக இவர்களைத்தான் சொல்வார்கள். வழக்கமாக ராகவன்தான் மேகலாவை அலுவலகம் அழைத்து செல்வார். அன்று ராகவன் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்து வீட்டிலேயே ஓய்வெடுக்க, மேகலா ஆட்டோவில் வேலைக்கு சென்றாள். பாதித்தூரம் சென்றவுடன் திடீரென, முக்கியமான பைலை வீட்டில் மறந்துவிட்டு வந்தது மேகலாவிற்கு ஞாபகம் வந்தது. சரியென்று ஆட்டோவை வீட்டை நோக்கி திருப்பச் சொன்னாள். …
-
- 4 replies
- 1.9k views
-
-
இது ரசிகையின் திருமணத்துக்கு முன்னுள்ள காதல் விவாதத்தின் இன்னொரு பாகமாகத் தொடர்கின்றது.
-
- 18 replies
- 3.1k views
-
-
ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. . ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் . என்ர ஐயோ எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்ல . 100 தரம் போன் பண்ணிப்பார்த்திட்டன் நம்பரைப் பார்த்திட்டுக் கட் பண்றாள் போல கிடக்கு . எங்கோ கேட்டது மாதிரி இருக்கா ? பதின்ம வயதில் உள்ள பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள் ? அப்ப கட்டாயம் நிருஜான்ர கதை உங்களுக்குத் தெரியத்தான் வேண்டும் நிருஜாக்கு இப்பத்தான் 16 வயதாகிறது . 16 வயதிலேயே தன்னால பெற்றோரை விட்டுத் தனியா காதலனுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் . நிருஜாவினுடைய இந்த முடிவுக்கு அவளுடைய பெற்றோர்தான் முழுக்க …
-
- 7 replies
- 1.8k views
-
-
திருவாளர் திருமதி என்றொரு நிகழ்ச்சி சன் ரிவியில் ஒலிபரப்பாகும் ஓரு புதிய நிகழ்ச்சி.சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.உங்களில் பலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.சும்மா ஒரு பொழுது போக்கு நிகழ்சிதான்.முதல் சுற்றை டுயட் றவுண்ட் என்று சொல்கிறார்கள்.அதாவது கணவன் மனைவியிருவரும் தங்களுக்குப் பிடித்த ஒரு பாடலைத் தெரிவு செய்து அதற்கு நடனமாட வேண்டும்.புள்ளிகள் வளங்குவதற்கு பிரத்தியேகமாக அவர்கள் என்ன பொருட்களைப் பயன்படுத்தினார்கள் முகபாவனை தம்பதிகளுக்கிடையேயான அந்நியோன்யம் இப்படி பல அம்சங்களைக் கவனிக்கிறார்கள். அடுத்த சுற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் குடுக்கும் பட்ஜெட்டில் தம்பதிகள் சொப்பிங் செய்ய வேணும்.இரு தம்பதிகளில் யாருடைய பொருட்கள் பட்ஜெட்டையொட்டியிருக்கிறதோ அவர்களுக…
-
- 8 replies
- 2.2k views
-
-
மக்கள் பற்றாக்குறையில் மேலை நாடுகள் ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல, பல நாடுகள் மூழ்கியுள்ளன. அந்…
-
- 0 replies
- 964 views
-
-
-
கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்
-
- 14 replies
- 2.8k views
-
-
நான் வியாழக்கிழமை, மின்சார தொடர் வண்டியில் சென்று கொண்டிருந்தேன். வண்டி, கோடம்பாக்கம் நிலையத்திலோ மாம்பலத்திலோ நின்று கொண்டிருந்தாக ஞாபகம், வண்டியின் சாளரம் வழியாக பார்க்க நேர்ந்தது, மேல்நிலை படிக்கும் மாணவி வயதில் ஒரு பெண், பார்த்தாலே எந்த தவறும் செய்யமாட்டார் எனும் முகம், அவர் ,இரண்டு பெண் பயணசீட்டு பரிசோதகர்களின் பிடியில் மாட்டி கொண்டு , கண்ணீர் விட்டு அழுது கொண்டே தனது பர்ஸில் பணத்தை தேடி கொடுத்து கொண்டு இருந்தார். மாதந்திர பயணசீட்டோ/ பயணசீட்டோ வாங்காததையோ/ அல்லது மறந்து வைத்து வந்துவிட்டதையோ நினைத்து அழுதாரோ அல்லது இப்படி அவமானமாக நடைமேடையில் நிற்க வேண்டிதாய்விட்டதே என நினைத்து அழுதாரோ தெரியவில்லை. ரொம்ப வருத்தமாய் இருந்தது. இதே இடத்தில்…
-
- 7 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-