உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26850 topics in this forum
-
புத்தரின் மறுபிறப்பென நம்பப்படும் இளைஞன் 9 மாதங்களின் பின் மீண்டும் தென்பட்டார் [27 - December - 2006] [thinakkural] புத்தரின் மறுபிறவி என்று சிலரால் நம்பப்பட்ட இளைஞன் ஒருவன் கடந்த 9 மாதங்களாக காணாமற்போய் பின்னர் மீண்டும் கிழக்கு நேபாளப் பகுதியில் காணப்பட்டதாக நேரில் கண்டவர் ஒருவரும் தொலைக்காட்சி சேவையொன்றும் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு 150 கிலோ மீற்றர் கிழக்கேயுள்ள பாரா மாவட்டத்தின் பில்லுவா கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ராம் பகதூர் பாம்ஜன் ( வயது 16) என்ற இந்த இளைஞனைக் கண்டதாக உள்ளூர் பத்திரிகையாளரான ராஜு சிரஸ்தா `ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். பாம்ஜன் இரட்ணபுரி கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
சதாமுக்கு 30 நாட்களில் தூக்கு பாக்தாத்: ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட துõக்கு தண்டனையை பாக்தாத் அப்பீல் கோர்ட் உறுதி செய்தது. தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு துõக்கு தண்டனை நிறைவேற்றப்படும். கடந்த 1982ம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த நேரத்தில், துஜெய்ல் பகுதியில் 148 ஷியா பிரிவு முஸ்லிம்களை கொன்றதாக சதாம் <உசேன் மீது பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வக்கீல்கள் படுகொலை மற்றும் நீதிபதிகள் மாற்றம் என பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, கடந்த நவம்பர் 5ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன், சதாமின் சகோதரர் பர்…
-
- 77 replies
- 13k views
-
-
ஜெயகாந்தன், மனோரமாவுக்கு கலைஞர் விருது 26 டிசம்பர் 2006 பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன், திரைப்பட நடிகை மனோரமா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் ஆகியோருக்கு 2006ம் ஆண்டிற்கான கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அளிக்கப்படும் கலைஞர் விருதுகள் இந்த ஆண்டு இந்த மூவருக்கும் வழங்கப்படும் என அறக்கட்டளை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஜனவரி மாதம் 1ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி இந்த விருதுகளை வழங்குகிறார். இந்த விழாவுக்கு திமுக பொதுச் செயலாளரும் நிதி அமைச்சருமான க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். விருதுடன் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வ…
-
- 0 replies
- 1k views
-
-
நைஜீரியாவில் பெட்ரோல் குழாய் வெடித்து 500 பேர் பரிதாப பலி லாகோஸ்: நைஜீரியா லாகோஸ் நகரில் பெட்ரோல் குழாய் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.நைஜீரியாவில் உள்ள பெரிய நகரங்களில் லாகோஸ் நகரமும் ஒன்று. இங்கு பூமிக்கடியில் பெட்ரோல் குழாய் புதைக்கப்பட்டு அதன் மூலம் பெட்ரோல் கொண்டு செல் லப்பட்டு வருகிறது. இந்த குழாயின் ஒரு பகுதியை கொள்ளையர்கள் தகர்த்து பெட்ரோலை திருடி சென்றனர். அது முதல் அந்த இடத்தில் பெட்ரோல் கொட்டி கொண்டு இருந்தது. உடன் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்து கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். அப் போது எதிர்பாராதவிதமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட் டது. பெட்ரோல் கொட்டிக் கொண்டிருந்த பகுதியில் …
-
- 1 reply
- 976 views
-
-
109 மணி நேரம் பரதம் ஆடிய இளைஞர்! டிசம்பர் 26, 2006 சேலம்: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீதரன் என்ற இளைஞர் தொடர்ந்து 109 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார். வி.ஜட்டியல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பரதநாட்டியக் கலைஞராவார். நடனத்தில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக இடைவிடாமல் பரதம் நாட்டியம் ஆடி சாதனை படைக்க தீர்மானித்தார். இந்த சாதனை நடன நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சேலத்தில் தொடங்கியது. 50 பேர் நடன நிகழ்ச்சியை பார்வையிட தனது நடனத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதரன். இடைவிடாமல் பரதம் ஆடிய அவர் 24ம் தேதி மாலைதான் தனது நடனத்தை முடித்தார். மொத்தம் 109 மணி நேரம் ஆடினார் ஸ்ரீதரன். ஸ்ரீதரனின் இந்த சாதனை நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,468 …
-
- 1 reply
- 1.1k views
-
-
தண்ணீர் தரமாட்டோம் எனக்கூற வெட்கமில்லையா? கேரள கம்யூனிஸ்டுகளுக்கு தா. பாண்டியன் கேள்வி "பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் குழு அமைத்து, கேரள முதல்வர் அச்சுதானந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்' என தேனியில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் பாண்டியன் பேசினார். தேனியில் இந்திய கம்யூ., பொதுக்கூட்டத்தில் தா. பாண்டியன் பேசியதாவது : பூமி அதிர்ச்சி வந்துவிடும், அணை உடைந்துவிடும், சுனாமி வந்துவிடும், இடி விழுந்து விடும் என கேரளாவில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறான அழிவை இயற்கை கொடுத்தால் எல்லோரும் பங்கிட்டுக் கொள்வோம். இயற்கை நமக்கு அளிக்கும் தண்ணீரைத் தரமாட்டோம் என சொல்லுவதற்கு கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்ட…
-
- 1 reply
- 963 views
-
-
சென்னை: எனக்கு எம்.ஜி.ஆரின் ஆசி நிறைய உள்ளது என நடிகர் விஜய்காந்த் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மூவேந்தர் மக்கள் முன்னணி, ஜனநாயக முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 2,000 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகையில், நான் எம்.ஜி.ஆரை எனது குருவாக ஏற்று கொண்டிருக்கிறேன். அதனால் அவரது சீடனாகிய என்னை மக்கள் கறுப்பு எம்ஜிஆர் என்று அழைக்கின்றனர். அவரது ஆசி எனக்கு நிறைய உள்ளதால் தான் அவரது சிலை மட்டுமின்றி அவர் …
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: மதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் என்னை தாக்க திட்டமிட்டிருந்ததால் நான் அங்கு போகவில்லை என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார். மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. முதலில் இந்தக் கூட்டத்தில் நாங்களும் கலந்து கொள்வோம் என்று எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் கூறியிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் இருவரும் வரவில்லை. எல்.ஜி. தஞ்சையில் இருந்தார். செஞ்சியார் மட்டும் சென்னையில் இருந்தார். ஏன் கூட்டத்திற்குப் போகவில்லை என்பதை செய்தியாளர்களிடம் செஞ்சி ராமச்சந்திரன் விளக்கினார். அவர் கூறுகையில், அவைத் தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள்தான் இதுபோன்ற கூட்ட…
-
- 0 replies
- 858 views
-
-
பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர் நிலைக் கூட்டம் தாயகத்தில் இன்று காலை கூடியது. இதில் கலந்து கொள்வதற்காக பொது செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூடி இருந்தனர். வைகோவைப் பார்த்ததும் புரட்சிப் புயல் வைகோ வாழ்க என்று உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். தாயகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்கள் மத்தியில் வைகோ ஆவேசமாக பேசினார். அப்போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வைகோ வந்ததும் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தாயகத்தில் தொண்டர் வைத்திருந்த கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார். தொண்டர்…
-
- 0 replies
- 767 views
-
-
பெரியார் சிலை தகர்ப்பு- பின்னணிச் சதியை உணர்க! - பழ.நெடுமாறன் திருவரங்கத்தில் நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலை தகர்க்கப்பட்ட நிகழ்ச்சி தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரையும் கொதித்தெழ வைத்திருக்கிறது. தமிழ்நாட்டை கலவரபூமி ஆக்கும் திட்டத்துடன் இந்தச் செயலை இந்து பாசிச வெறியர்கள் செய்திருக்கிறார்கள். தமிழர்களைத் தட்டி எழுப்பி தன்மானம் உள்ளவர்களாக ஆக்கியவர் தந்தை பெரியார் ஆவார். அவருடைய தொண்டு என்பது தமிழர்களை விழிப்படைய வைத்து முன்னேற்றப்பாதையில் நடைபோட வைத்தது. ஆண்டாண்டு காலமாக வருண தருமத்தின் பெயரால் இம்மண்ணின் மைந்தர்களை சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி அடிமைச் சேற்றில் ஆழ்த்திய கூட்டம் பெரியார் மீது ஆத்திரம் கொண்டு அலைகிறது. தமிழ்நாட்டில் பார்ப்ப…
-
- 0 replies
- 763 views
-
-
துர்க்மெனிஸ்தானின் புதிய அதிபர் யார்? அஸ்காபாத்: மாரடைப்பால் மரணமடைந்த துர்க்மெனிஸ்தான் நாட்டின் அதிபர் சபர்முராத் நியாசோவில் உடல் அடக்கம் நடந்தது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் விரைவில் நடக்கிறது. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த மத்திய ஆசிய நாடான துர்க்மேனிஸ்தானின் அதிபராக இருந்தவர் சபர்முராத் நியாசோவ். இந்த நாட்டை இரும்பு கரம் கொண்டு ஆண்டு வந்த நியாசோவ் கடந்த 21ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். நியாசோவின் மரணத்தால் எண்ணெய் வளம் மிக்க நாடான துர்க்மேனிஸ்தானில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நியாசோவ் உடல் அஸ்காபாத்தில் உள்ள அரண்மனையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. நியாசோவின் சொந்த நகரான கிப்சக்கில் உடல் அடக்கம் செய்யப்படுவதற்க…
-
- 1 reply
- 837 views
-
-
இளைஞரை கடத்தி உடலுறவு: 2 பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை குவைத், டிச. 25: குவைத்தில் ஆண் ஒருவரை கடத்தி வலுக்கட்டயாமாக உடலுறவு கொண்ட இரு பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குவைத்திலிருந்து வெளியாகும் அல்-ரய் நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆண் மகனை கடத்திச் சென்ற அந்த இரு பெண்களும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் அவரை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். முதலில் கீழ் நீதிமன்றம் அவர்களுக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் அவர்கள் முறையீடு செய்தனர். அங்கு அவ…
-
- 2 replies
- 10k views
-
-
அந்தமானில் நிலநடுக்கம் நாகையில் சுனாமி பீதி நாகை, டிச.24: அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், நாகை கடலோர கிராமங்களில் சுனாமி பீதி ஏற்பட்டது. அந்தமான், நிக்கோபர் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு 6.1 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாகை பகுதியில் கடல் கொந்தளித்தது. அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பின. நேற்று காலையும் இதே நிலை நீடித்தது. ஊருக்குள் கடல் நுழைவதாக நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு பகுதிகளில் நேற்று காலை புரளி கிளம்பியது. இதனால் பீதியடைந்த மக்கள், குழந்தைகளையும், கைக்கு கிடைத்த பொருட்களையும் அள்ளிக் கொண்டு பாதுகாப்பான இடத்தை தேடி �#8220;டத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும்…
-
- 1 reply
- 908 views
-
-
உடைகிறது மதிமுக http://thatstamil.oneindia.in/news/2006/12/20/mdmk.html
-
- 17 replies
- 3.4k views
-
-
தோஹாவில் அண்மையில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஒருவர், ஆணா, பெண்ணா என்று அறிவதற்கான பாலியல் சோதனையில் தோல்வியடைந்ததால், அவரது பதக்கம் மீளப்பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய சாந்தி சௌந்திரராஜன் எனப்படும் தமிழகத்தைச் சேர்ந்த இந்த வீராங்கனையின் திறன் குறித்து, ஏனைய போட்டியாளர்களும், விளையாட்டு அதிகாரிகளும் கேள்வியெழுப்பியதை அடுத்து, அவர் மருத்துவர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சாந்தி, ஒரு பெண்ணுக்கான பாலியல் நடத்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்று சோதனை முடிவுகள் கூறுகின்றன. சாந்தியிடம் செய்யப்பட்ட பாலின சோதனையில், பெண்களுக்கு இருக்க வேண்டிய ஹார்மோன் அளவு சாந்தியி…
-
- 7 replies
- 2.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் நேற்று முன்தினம் சத்தியப்பிரமாணம் செய்தார். நியூயோர்க்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வில் ஐ.நா. பொதுச்சபையில் தலைவர் ஹாயா றாஷிட் அல் காலியாவின் முன்னிலையில் பான் கி மூன் தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஐ.நா.பொதுச் செயலாளர் கொபி அனான் உட்பட முக்கிய ஐ.நா. அதிகாரிகளும். பல்வேறு நாடுகளின் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர். பான் கி மூன் ஜனவரி முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை ஏற்கவுள்ளார். தனது முன்னோடியான கொபி அனானின் சேவைகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த பான் கி மூன் தான் அவருடைய வழியிலேயே செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் உ…
-
- 0 replies
- 701 views
-
-
டைம்ஸ் சஞ்சிகையின் விருது You Tube இணையத்தளத்திற்கு [Monday December 18 2006 02:20:44 PM GMT] [யாழ் வாணன்] பிரபல டைம்ஸ் சஞ்சிகை இவ்வருடத்திற்கான சிறந்த விருதை என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ளது. 1927ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதருக்கான விருதை தெரிவு செய்து வழங்கி வரும் டைம்ஸ் சஞ்சிகை ஒருசில காலகட்டங்களில் சர்ச்சைக்குரிய சிலரையும் தனது விருது பட்டியலில் உள்ளடக்க தவறவில்லை. இருப்பினும் இம்முறை ஒரு இணையத்தளத்திற்கு விருது வழங்கி புரட்சியை ஏற்படுத்தி விட்டது டைம்ஸ் சஞ்சிகை. இதற்கு முக்கிய காரணமாக அது சுட்டிக்காட்டுவது என்னவென்றால் குறிப்பிட்ட இணையத்தளம் மூலமாக உலகில் பல மில்லியன் கணக்கான மக்கள், பல வித்திலும், பல்வேறு விடயங்களை பெற்று, அற…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை அருகே கார்- லாரி பயங்கர மோதல்: 10 பேர் நசுங்கி சாவு சென்னை, டிச.16- சென்னை அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில், 10 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களில் 9 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். நெஞ்சை உருக்கும் இந்த கோர விபத்து, சென்னையை அடுத்த கோவளம் அருகே நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், வேர்கோடு இந்திரா நகரை சேர்ந்தவர், அந்தோணியார் அடிமை. அவருடைய மைத்துனர், ராஜசேகர். தங்கச்சி மடத்தை சேர்ந்த இவருடைய தம்பி ரமேசுக்கு, கொரியா நாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதற்காக நேற்று, அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்புவதற்காக, ராஜசேகர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காரி…
-
- 0 replies
- 925 views
-
-
பாலஸ்தீன காஸா பகுதியில் ஹமாஸ் பிரிவைச் சேர்ந்த நீதிபதி அடையாளம் தெரியாத நபர்களால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, அங்கு உள்நாட்டுப் போர் நடக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த விபரம் வருமாறு; காஸா பகுதியிலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் பாஸம் அல்ஃபரா (28). இவர் ஹமாஸின் ஆயுதம் ஏந்திய படைப்பிரிவிலும் அங்கம் வகித்து வந்தார். இந்நிலையில், அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியே காரில் வரும் போது அடையாளம் தெரியாத சிலர் அவரைக் காரை விட்டு வெளியே இழுத்துப் போட்டனர். பின்னர் அவரை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர். இதில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் , ஜனாதிபதியின் ஃபதா கட்சியினரே இக்க…
-
- 0 replies
- 920 views
-
-
கனடாவில் டொரன்றோ நகரில் கடந்த திங்கட்கிழமை இலங்கையைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் தமிழ் குடும்பப் பெண்ணொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தக் குடும்பப் பெண் அவர் வசிக்கும் வீட்டின் (9 ஆவது மாடிக்கு) கீழுள்ள குப்பை போடும் இடத்திலிருந்து பலத்த காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்டு சனிபுரூக் வைத்தியசாலையில் விரைந்து அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இது சந்தேகத்துக்கிடமான மரணமென நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் பெயர் கூட வெளியிடப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளைஇ குறித்த பெண்ணின் கணவரின் பெயர் தவகுமார் செல்வராஜா (வயது- 28) என தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 4 replies
- 3.1k views
-
-
கனிமொழி - குமுதம் - முழு பேட்டி! "விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது. ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனு…
-
- 2 replies
- 1.4k views
-
-
அக்கா கல்யாணத்திற்குத் தடை: தங்கை தற்கொலை டிசம்பர் 12, 2006 - தட்ஸ்ரமிழ். சென்னை: தான் அழகாக இருந்ததால் அக்காவின் திருமணம் தடைபடுவதை எண்ணி வருத்தமுற்ற தங்கை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பிரேமா, மீனாட்சி என்ற மகள்களும், குமார் என்ற மகனும் உள்ளனர். பிரேமாவை விட மீனாட்சி சற்று அழகாக இருப்பார். இதனால் பிரேமாவைப் பெண் பார்க்க வருபவர்கள் எல்லாம் மீனாட்சியையே விரும்பினர். இதனால் பிரேமாவின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இதனால் பிரேமா மனம் உடைந்தார். அவரது வருத்தத்தைப் பார்த்து மீனாட்சியும் மனம் உடைந்தார். தன்னால்தானே அக்காவின் திருமணம் தடைப்படுகிறது என அவர் வருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதத்தை பிய்த்தெறிந்த சாதி மகாராட்டிரா மாநிலத்தின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான கயர்லாஞ்சியில் வாழ்ந்த ஒரே தலித் குடும்பத்தினைச் சேர்ந்த 4 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். ஆதிக்க சாதியினரை எதிர்த்து கேள்வி எழுப்பிய ஒரே காரணத்திற்காக அக்குடும்பத் தலைவரான பய்யாலால் போட்மாங்கே வீட்டில் இல்லாத போது அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் 2006, செப்டம்பர் 29-ஆம் நாள்.. மாலை 5 மணிக்கு பய்யாலாலின் மனைவி சுரேகா, 19 வயது மகள் பிரியங்கா, 23 வயது மகன் ரோஷன், பார்வையற்ற 21 வயது மகன் சுதிர் ஆகிய நால்வரையும், வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்துள்ளனர். நால்வரின் ஆடைகளையும் உருவி, உடம்பில் துணியேயின்றி ஊரின் மய்யப் பகுதிக்கு இழுத்து வந்து மிகக் கொட…
-
- 0 replies
- 903 views
-
-
முத்த சர்ச்சையில் வசுந்தரா பெண்களுக்கு எதிரானவர்கள் கிளப்பி விடும் சர்ச்சை இது * "முத்த' விவகாரத்திற்கு வசுந்தரா பதில் புதுடில்லி: ""பெண்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் தான் கிரண் மஜும்தாருக்கு நான் முத்தம் கொடுத்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் இப்படி பேசுகின்றனர்,'' என்று ம.பி., முதல்வர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். பா.ஜ., ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் வசுந்தரா ராஜே சிந்தியா. 53 வயதாகும் வசுந்தரா மேல்நாட்டு நாகரிகத்தில் வளர்ந்த ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். சமீபத்தில் நடந்த ஒரு அழகிப் போட்டியில், பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தாரைக் கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்தார் வசு…
-
- 5 replies
- 4.4k views
-
-
காதலர்களை அடித்து விரட்டிய விஎச்பி!! டிசம்பர் 11, 2006 அகமாதாபாத்: அகமதாபாத்தில் பூங்காவில் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளை விசுவ இந்து பிரிஷச் அமைப்பைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் பிரம்பால் அடித்து விரட்டியடித்தனர். பூங்காவில் இளம் காதல் ஜோடிகள் அமர்ந்து பேசி கொண்டிருந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் சிலர் கையில் பிரம்புகளுடன் பூங்காவிற்குள் நுழைந்தனர். அப்போது அவர்கள் கண்ணில் பட்ட காதல் ஜோடிகளை பிரம்பால் அடித்து விரட்டினர். இதுகுறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில், பெண்களை போகப் பொருளாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்களை இந்த சமூகத்தில் இருந்து விரட்டியடிக்க விரும்புகிறோம், அதற்காகவே இந்த நடவடிக்கை என்றார். இந்தச் சம்பவத்தில் பிரம்படி…
-
- 21 replies
- 3.1k views
-