Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. புலிகள் ஊடுருவல் பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் - ஜெயலலிதா தெரிவிப்பு [Monday February 18 2008 05:00:51 PM GMT] [யாழினி] தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் தொடர்பான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பாராளுமன்றத்திலும் தமது கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இந்தப் பிரச்சினையை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பேரவையில் எழுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு …

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - மாலி தலைநகர் பமாகோவில் பயங்கரவாதத் தாக்குதல்! ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ள துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் பெரும்பான்மையானோர் விடுவிப்பு! - பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பை கடுமையாக்கவும், ஐரோப்பிய பிரஜைகளையும் தேச எல்லைகளில் பரிசோதிக்கவும் ஐரோப்பிய அமைச்சர்கள் ஒப்புதல்!

  3. வாஷிங்டன்: மற்ற நாடுகளை விட பெரிய அளவில் ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் கூறியதாவது: மற்ற நாடுகளை விட வேகமாக ராணுவத்தை கட்டமைத்து வரும் சீனா, உலகிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்காக, அந்த நாடு அமெரிக்க பணத்தை பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் பணத்தை, சீனா எடுத்து கொள்ள அமெரிக்க முன்னாள் அதிபர்கள் அனுமதித்தனர். எங்களின் அறிவுசார் சொத்துரிமையையும் சீனா திருடவும் அனுமதித்தனர். ஆனால், அதனை நான் விட மாட்டேன். வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. சீன பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருக…

    • 0 replies
    • 490 views
  4. Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்ட…

  5. நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு! நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக சென்ற 67 பேர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் கடந்த வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு கடுமை…

  6. கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பலர் ஈடிபாடுகளில் சிக்கியிருக்க கூடும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கிழக்கு உத்தர பிரதேசத்தின் மாவே மாவட்டத்தில் முகமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஒரு சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் தாக்கம் மிக வலுவாக இருந்துள்ளது. இதனால், அந்த முழு கட்டிடமே இடிந்து விழுந்தது. இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கூறும்போது, பெரும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத்தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் இருந்த பெரும் தீ பற்றி எரிந்தது என்று தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளா…

  7. 2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தாண்டில் மட்டும் உலகின் மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புத்துறை கணித்துள்ளது. முந்தைய 2023ஆம் ஆண்டை விட மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளதாகவும் அமெரிக்க அரசுத் துறை தெரிவித்தள்ளது. ஜனவரி மாதம் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் நாளில் உலக மக்கள் தொகை 809 கோடியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள்…

  8. ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்லும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஐரோப்பிய நாடுகளை நோக்கி செல்லும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் ஊடாகவே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பிரித்தானியர்கள் இடம்பெயர்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த தீர்மானம் கடந்த 2016ஆம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே பிரித்தானியர்கள் அதிகளவில் ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டில் 622 பிரித்தானியர்கள் ஜேர்மன் க…

  9. ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் ஷாஜகானின் உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் பிரிட்டனில் நடைபெற்ற இந்திய இஸ்லாமிய பாரம்பரிய கலைப்பொருட்கள் ஏலத்தில் மொஹலாய மன்னர் ஷாஜகான், பயன்படுத்திய உடைவாள் 26 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முழுக்க முழுக்க தங்கத்தினாலான இந்த வாளில் மன்னரின் பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி, அவருக்கு கிடைத்த பட்டங்கள் மற்றும் எப்போது இவ்வாள் தயாரிக்கப்பட்டது போன்ற விபரங்கள் மிகவும் நுட்பமான அழகிய வேலைப்பாடுகளுடன் பொறிக்கப்பட்டுள்ளது. ஷாஜகான் மன்னராக இருந்தபோது இவ்வாளை எப்பொழுதும் தன்னுடனேயே வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்நிகழ்வில் பழங்காலத்து மட்பாண்டங்கள் போராயுதங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியன…

    • 1 reply
    • 1.1k views
  10. மாவோ தீவிரவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய யுத்தத்தின்போது பெண்களைப் பயன்படுத்தி தாக்குதல் வியூகம் அமைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே வழிமுறையை தற்போது மாவோ தீவிரவாதிகளும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்களை பயன்படுத்தி படையினரின் கவனத்தைத் திசை திருப்பி அண்மைக்காலமாக மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் சட்டிஸ்காரில் மாவோ தீவிராவதிகள் காட்டுப் பகுதியில் பெண்களை அழ விட்டு, அந்தக் குரலைக் கேட்டு வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றுமொரு சந்தர்ப்பத்த…

    • 3 replies
    • 741 views
  11. தற்போது கொண்டாடப்பட்டு வருகின்ற பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை ஒன்றையும் வெள்ளி நாணயம் ஒன்றையும் கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கனடிய அரசின் சார்பில் கனடாவின் தபால் கூட்டுத்தாபனம் மேற்படி வெளியீடுகளைச் செய்துள்ளது. இங்கே காணப்படும் படங்களில் மேற்படி பிரிட்டிஷ் மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரையும் வெள்ளி நாணயமும் காணப்படுகின்றன. http://www.seithy.co...&language=tamil

  12. இவர் இந்திய நிதியமைச்சரானால்...! மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார். இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அன்னிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்ட…

    • 1 reply
    • 663 views
  13. நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல் – 71 இராணுவத்தினர் உயிரிழப்பு! ஆப்பிரிக்கா கண்டத்தில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நைஜரில் பயங்கரவாதிகள் நடத்திய கோரத் தாக்குதலில் இராணுவ வீரர்கள் 71 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜரின், உவால்லம் பகுதியில் முகாமிட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று (புதன்கிழமை) மாலை கடும் தாக்குதல் நடத்தியதிலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் குறித்து அறிவித்த நைஜரின் இராணுவ செய்தித் தொடர்பாளர் பவுக்கர் ஹசன், 10 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தார். குறித்த பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் அவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியி…

  14. மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, 'இராணுவ தரப்பினர் மற்றும் மேற்கத்தேய பயிற்றுவிப்பாளர்களை" இலக்கு வைத்து தாக…

    • 1 reply
    • 315 views
  15. [size=1] [size=5]டொரண்டோவில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதோடு சேர்த்து கடந்த ஆறு நாட்களில் டொரண்டோவில் மொத்தம் ஆறு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.[/size][/size] [size=1] [size=5]இந்த மூன்று துப்பாக்கி சூடு சம்பவங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தனவா என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. கடைசியாக நடந்த துப்பாகி சூடு Kennedy and Ellesmere roads area என்ற இடத்தில் அதிகாலை 4 மணியளவில் நடந்ததாகவும் இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரது வயிற்றில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளதாகவும் காவல்துறை அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனாலும் இவரது உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை என மருத்து…

    • 1 reply
    • 608 views
  16. ரஷ்யாவில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்த திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதற்காக, அதிபர் டிரம்ப்புக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் நன்றி தெரிவித்தார். பீட்டர்ஸ்பெர்க் நகரில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரஷிய பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியாகக் கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிருவரும் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த பொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இந்நிலையில், சரியான நேரத்தில் தகவல் அளித்ததற்காக டிரம்ப்புக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட…

    • 0 replies
    • 426 views
  17. வீரகேசரி நாளேடு 6/27/2008 9:50:54 PM - மலேசியாவிற்கு தொழில் நோக்கங் கருதி செல்லும் தமிழர்களை நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சார அதிர்ச்சியளிக்கும் கொடூரம் நிகழ்வதாக மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து மலேசியாவில் தமிழர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்த சட்டத்தரணி ஆர்வலன் மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் தமிழர்களை பாதுகாக்கத் தக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதழியல் சார்ந்த அமைப்புகள் சார்பில் நேற்று தமிழக தொழிலாளர்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் ஒன்று மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மே…

  18. தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தில் போராட்ட அமைப்புக்கள் ஒற்றுமையுடன் செயற்படவில்லை என்று விமர்சித்தார் கலைஞர் கருணாநிதி. போராட்டத்தின் பின்னடைவிற்கு அது தான் முக்கிய காரணம் என்ற தோரணையில் அவர் ஆகஸ்து 12ம் நாள் நடந்த டெசோ மேடையில் பேசினார். தமிழகத் தலைவர்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை தொடர்பாக ஒற்றுமை நிலவுகிறதா, இது தான் முக்கிய கேள்வி. மாநாட்டில் நிறைவேறிய 17 தீர்மானங்களில் இறுதியானது திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு இடையிலான பூசலை வெளிப்படுத்துகிறது. “டெசோ மாநாட்டிற்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்குக் கண்டனம்” என்பது அந்தத் தீர்மானத்தின் சாராம்சம். இரு கட்சிகளும் தமது மேலாண்மையைக் காட்டுவதில் குறியாக உள்ளன. ஈழத் தமிழர் நலன் இரண்டாம் பட்சமே. டெசோ மாநாடு வெற்றி – …

  19. “முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்! குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை – 2002 தொடர்பாக சிஎன்என் – ஐபின் தொலைக்காட்சியின் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில் கரண் தப்பார், “கலவரம் தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்ட போது நரேந்திர மோடி வெளிநடப்பு செய்ததை அறிவோம். அது பாசிஸ்டுகளுக்கே உரிய அடக்க முடியாத கோபம். ஆனால் அந்த கோபத்தை பாசிஸ்டுகளின் தலைவன் அமெரிக்காவிடம் காட்ட முடியுமா? மனித உரிமை என்.ஜி.வோக்களைத் திருப்பதிப்படுத்தும் வண்ணம் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் மோடி ஒரு மானக்கேடாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜபக்சேவும் அப்படித்தான் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்வத…

  20. வெயிலுக்கு கொரோனா வைரஸ் பரவாதா? உண்மை என்ன? உலக சுகாதார நிறுவனம் ஷாக் விளக்கம் வெப்பமான சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் யாரும் அந்தக் கருத்தை நம்பி, அலட்சியத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் (who) தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேரை தாண்டி உள்ளது. சுமார் 3500க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, சிங்கபூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட…

  21. சிரியாவில் 2 ஆண்டுகளில் 4,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஐஎஸ் கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4,000 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்ப மரண தண்டனை மூலம் கொன்று குவித்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. அதாவது ஜூன் 2014-ல் ஐஎஸ்ஐஎஸ். அறிவிப்பு தினம் முதல் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேண்டாதவர்களை, இயக்கத்தை எதிர்ப்பவர்களை, அயல்நாட்டினரை என்று பல்வேறு தரப்பினரையும், சுட்டுக் கொல்லுதல், தலையை துண்டித்தல், கல்லெறிந்து கொல்லுதல் மற்றும் கட்டிடங்களிலிருந்து தூக்கி வீசுதல் என்று பல்வேறு கொடூரமான விதங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது ஐ.எஸ். ஓர்பாலினச் சேர்க…

  22. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எஸ்சிஓ உச்சிமாநாட்டில் புதின், மோதி, ஜின்பிங் கட்டுரை தகவல் டாம் லேம் பிபிசி மானிட்டரிங் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சிமாநாட்டிற்காக தலைவர்கள் சீனாவின் தியான்ஜினில் சந்தித்தபோது புதிய வளர்ச்சி வங்கி தொடங்குவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டது. சீனா நீண்ட காலமாக இதனை முன்னிறுத்தி வருகிறது. எஸ்சிஓவின் இந்த வளர்ச்சி வங்கிக்கான சாத்தியங்களை சீன ஊடகங்கள் புகழ்ந்துள்ளன. இந்த வங்கி இயற்கை வளம் மிக்க எஸ்சிஓ உறுப்புநாடுகளில் உள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி சீனாவுக்கும் மத்திய ஆசியாவுக்குமான பொருளாதார இணைப்பை வலுப்படுத்தி, யூரேசியாவில் (ஆசியா மற…

  23. பிரித்தானியாவில் இப்போது பார்க்கிங் வார்டன்களின் எண்ணிக்கை முழுநேர வீரர்களை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுக்கு 2.3 பில்லியன் நாடு முழுவதும் பிரித்தானியாவின் தெருக்களில் ரோந்து செல்லும் சுமார் 82,000 போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரித்தானிய பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. அங்கு சாரதிகள் மீதான அபாரதங்களும், கட்டணங்களும் ஆண்டுக்கு 2.3 பில்லியனை எட்டுவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இது பிரித்தானிய இராணுவத்தில் வழக்கமான வீரர்களின் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 73,490 முழுநேர வீரர்கள் இருக்கிறார்கள். நிதி வெட்டுக்கள் சமீபத்தில் பிரித…

  24. சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோரை விடுதலை செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியும், அதேபோல ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் தங்களை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து வருகிறார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோர் தாக்கல் செ…

  25. ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை! ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். 2021 ஜூலை சயீத் அனைத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.