உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு : இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் போர்த்துக்கல் நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய கப்பல் லிஸ்பனின் புறநகரான கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் நறுமணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு போரத்துக்கல்லிற்கு சென்ற கப்பல் லிஸ்பன் அருகே கடலில் மூழ்கியது. இந் நிலையில் மூழ்கிய கப்பல் கடந்த 3ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகத்தில் 40 அடி ஆழத்தில் நறுமணப் பொருட்கள், 9 பித்தளை பீரங்கிகள், போர்த்துக்கேயர் பயன்படுத்தும் ஆடை அலங்கார கருவிகள், சீன…
-
- 4 replies
- 1.4k views
-
-
டேனிஷ் அஞ்சல் சேவை டிசம்பர் 30 அன்று தனது கடைசி கடிதத்தை விநியோகிக்கிறது, இதன் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியம் முடிவுக்கு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடித விநியோகத்தை நிறுத்துவது குறித்த முடிவை அறிவித்த, ஸ்வீடிஷ் மற்றும் டேனிஷ் அஞ்சல் சேவைகள் 2009-ல் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட போஸ்ட்நார்ட் நிறுவனம், டேனிஷ் சமூகத்தில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் டென்மார்க்கில் 1,500 வேலைகளைக் குறைத்து, 1,500 சிவப்பு அஞ்சல் பெட்டிகளை அகற்றப்போவதாகக் கூறியது. டென்மார்க்கை "உலகின் மிகவும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்று" என்று விவரித்த அந்த நிறுவனம், ஆன்லைன் ஷாப்பிங் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடிதங்களுக்கான தேவை "கடுமையாகக் குறை…
-
- 2 replies
- 410 views
- 2 followers
-
-
400 இலிருந்து 600 டொலர்களுக்கு கொத்தடிமைகளாக விற்கப்படும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் செல்லும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் லிபியாவில் கொள்ளையர்களால் 400 டொலருக்கு அடிமைகளாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அத்துடன் உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் மக்கள் ஐரோபிபய நாடுகளை நோக்கி பாதுகாப்பற்ற முறையில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையிலேயே லிபியாவில் உள்ள கொள்ளையர்களால் …
-
- 0 replies
- 1k views
-
-
சண்டிகர்: தனது ஆசிரமத்தைச் சேர்ந்த 400 சீடர்களுக்கு, ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்ய தூண்டிய பஞ்சாப் சாமியார் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் 'தேரா சாச்சா ஸவ்தா' என்ற சமூக நல மற்றும் ஆன்மீக அமைப்பையும், ஆசிரமத்தையும் நடத்தி வருபவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம். இவர் மீது வழக்கறிஞர் நவ்கிரண் சிங் பஞ்சாப் மற்றும் ஹரியான உயர் நீதி மன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்து உள்ளார். இவர், சாமியாரின் முன்னாள் சீடர் ஹன்ஸ் ராஜ் சவுகான் என்பவர் தரப்பில் ஆஜராகி உள்ள வழக்கறிஞர் ஆவார். அவர் அளித்துள்ள அந்த மனுவில்," குர்மீத் தன்னுடைய 400 சீடர்களூக்கு ஆண்மை நீக்கம் செய்து உள்ளார். இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளே…
-
- 2 replies
- 449 views
-
-
400 நாள் போர் நிறைவு; ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்: உக்ரைன் சூளுரை உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது கடந்த பிப்ரவரி 24-ந்தேதியுடன் ஓராண்டை நிறைவு செய்தது. எனினும், ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசும்போது, இந்த போரில் உக்ரைன் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்களது நிலத்தில் ரஷியாவின் ஒரு தடம் கூட இருக்காமல் செய்வோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்…
-
- 0 replies
- 554 views
-
-
400 பில்லியன் டொலர் சொத்துக்களைத் தாண்டிய முதல் நபரானார் எலோன் மஸ்க்! ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க்கின் (Elon Musk) சொத்து மதிப்பானது 400 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியுள்ளது. இதனால், வரலாற்றில் முதற் தடவையாக 400 பில்லியன் சொத்து மதிப்பினை கடந்த முதல் நபர் ஒன்ற பெருமையை எலோன் மஸ்க் பெற்றுள்ளார். SpaceX இன் அண்மைய உள் பங்கு விற்பனையானது அவரின் நிகர சொத்து மதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது அவரது செல்வத்தில் தோராயமாக 50 பில்லியன் டொலர்களை சேர்த்ததுடன் SpaceX இன் மொத்த மதிப்பீட்டை சுமார் 350 பில்லியன் டொலர்களாக கொண…
-
- 0 replies
- 194 views
-
-
பிரிட்டன் ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, 4000 ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பி தியானம் போன்றவற்றில் பயிற்சி கொடுக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து இடைவிடாது போரில் ஈடுபட்ட இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்களின் மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு விடுமுறை கொடுத்து, அவர்களை 100 வீரர்கள் கொண்ட பல பிரிவுகளாக பிரித்து, அவர்களை இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா என்ற இடத்திற்கு அனுப்ப ராணுவம் முடிவு செய்துள்ளது. அங்கு அவர்களுக்கு முறையான தியானப்பயிற்சி புனித போதி மரத்தடியில் கொடுக்க பீகார் மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 469 views
-
-
பிரமிட்கள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிட்கள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமிட்களில் “ஸ்டெப் பிரமிட்கள்” (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிட்கள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும். மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத…
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 11:04 AM ஹமாஸ் அமைப்பு மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளி…
-
- 2 replies
- 430 views
- 1 follower
-
-
வன்கூவர்- இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த வாரம் கனடாவிற்கு விஜயம் செய்கின்றார். இவரின் வருகையை இவரது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக கூறப்படுகின்றது. 42-வருடங்களில் முதல் தடவையாக ஒரு பெரிய ஜனநாயகத்தின் தலைவர் கனடா வருகின்றார். செவ்வாய்கிழமை ரொறொன்ரோவில் உள்ள Ricoh Coliseum- த்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் 1985-ல் எயர் இந்திய குண்டு வெடிப்பில் பலியான 331-பேர்களின் நினைவுச்சின்னங்களிற்கும் சென்று மரியாதை செலுத்துவார். 2002-ல் குஜராத்தில் மரணமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுபான்மை முஸ்லீம்கள் மற்றும் சீக்கியரின் மரணத்தில் மோடியின் பங்கு குறித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சீக்கியர்களின் சார்…
-
- 9 replies
- 562 views
-
-
பிரிட்டிஷின் பிரபல சூப்பர் மார்கெட் நிறுவனமான டெஸ்கோ, பிரிட்டிஷில் 43 சூப்பர்மார்கெட்களை மூடப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், சுமார் 2000 பேருக்கு வேலை பறிபோகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரிட்டிஷில் சுமார் 97 ஆண்டுகளாக இயங்கி வரும் மல்டிநேஷ்னல் நிறுவனம் டெஸ்கோ. இலாபத்தின் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற பெயரை எடுத்த இந்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக வருவாயில் பிந்தங்கி விட்டதாம். வளர்ந்து வரும் தொழில் போட்டிக்கு ஈடு கொடுக்க முடியாத நிலையில், தற்போது இந்நிறுவனம், அதிக வருவாய் இல்லாத 43 கடைகளை மூடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளது. கடைகள் மூடப்படுவதால், அங்கு வேலை செய்து வரும் 2000 பேர் வேலை இழக்க நேரிடும். இது மட்டுமல்லாது, வரு…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்: அதிர்ச்சித் தகவல்கள்! மெக்சிகோ நகரம்: பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண், 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். மெக்சிகோவை சேர்ந்தவர் கர்லா ஜாசின்டோ. அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் மனித கடத்தல் கும்பலிடம் சிக்கியதையும் அதனால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளையும் விவரித்துள்ளார். அதன் மூலம் மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் கொடூர மனித கடத்தல்களின் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்லா போன்று உலகில் 10 ஆயிரம…
-
- 5 replies
- 1.1k views
-
-
லாவோஸ் நாட்டில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான விபத்தில் 44 பேர் பலியானதாக தாய்லாந்து நாட்டு டெலிவிஷன் அறிவித்து உள்ளது. இறந்த பயணிகளில் 17 பேர் லாவோஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏழு பேர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வியட்நாம், …
-
- 0 replies
- 497 views
-
-
ஆர்க்டிக்: ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட தற்போது அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து லைப்சயின்ஸ் இதழில் டக்ளஸ் மெய்ன் விரிவாக எழுதியுள்ளார். ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் அங்குள்ள பல ஐஸ் மலைகள் உருகி வருகின்றன. இது நிச்சயம் கவலைக்குரியது என்று அத்தனை ஆய்வுகளும் ஒரு சேர கூறுகின்றன. இந்த நிலையில் கனடிய பகுதியில் உள்ள ஆர்க்டிக்கின் கோடைகால வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதை விட முக்கியமாக கடந்த 1,20,000 ஆண்டுகளிலும் இது மிகவும் அதிகமான வெப்பநிலை என்றும் இந்த ஆய்வு பயமுறுத்துகிற…
-
- 0 replies
- 471 views
-
-
45 லட்சம் ரூபாய் இருக்கிறதா? கனடா குடியுரிமை வாங்கலாம் புதுடெல்லி, மே 3: உங்களிடம் ரூ.45 லட்சம் இருக்கிறதா? உங்கள் குடும்பத்துக்கே கனடா குடியுரிமை பெற்றுவிடலாம். கொஞ்சம் அதிகம் பணம் வைத்திருந்தால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குடியுரிமை பெறலாம். இதற்கு சட்டரீதியாக மிகச் சுலபமான வழி இருக்கிறது. வெளிநாடுகளில் குடியேற வேண்டும் என விரும்பும் பலரும் அறியாத விஷயம் அது. அந்த ரகசியம் இதோ. வெளிநாட்டில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யத் தயார் எனத் தெரிவித்தால் போதும். எவ்வளவு தொகை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். ஆனால் இதன் மூலம் குடும்பத்துக்கே குடியுரிமை கிடைக்கும். முதலீட்டு தொகையை எப்படி திரட்டுவது என்ற கவலையும் தேவையில்…
-
- 3 replies
- 3k views
-
-
45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை இஸ்லாமாபாத்,பிப்.10 பாகிஸ்தானில் 45 வயதுடையவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மலைஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக இந்த பொருந்தா திருமணத்தை செய்துவைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணத்தில் மலை ஜாதியினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் டேரா இஸ்லாமி கான் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பரூக். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்தில் பரூக்கிற்கு ரூ.1.5 லட்சம்…
-
- 17 replies
- 3.3k views
-
-
45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு 1 Views 45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது. …
-
- 30 replies
- 3k views
-
-
466 பேருடன் சென்ற இத்தாலிய பயணிகள் கப்பல் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த கப்பலே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/35986.html#sthash.lpQHzSh2.dpuf
-
- 2 replies
- 499 views
-
-
டெல்லி: கோவை உலகத் தமிழ் [^] செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி [^] தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜுன் திங்கள் இறுதியில்; 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. இன்றைய கடிதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அண்ணா 1968-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் பேசியதை நினைவூட்ட விரும்புகிறேன். நாளைய தினத்திலிருந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்…
-
- 4 replies
- 1.5k views
-
-
476 பயணிகளுடன் கப்பல் மூழ்கியது ஏப்ரல் 2014 08:25 தென்கொரியாவின் பயணிகள் கப்பலொன்று 476 பயணிகளுடன் தென்கொரிய கடலில் இன்று புதன்கிழமை மூழ்கிகொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 476 பயணிகளில் 325 பேர் உயர்தர பாடசாலையின் மாணவர்கள் என்றும் 32 பணியாளர்கள் இருந்ததாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் 18 ஹெலிகொப்டர்களும் 34 படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/106966-476-.html
-
- 19 replies
- 1.6k views
-
-
48 டிகிரி செல்சியஸ் சஹாரா பாலைவனத்தில் 13,000 அகதிகளை நிர்கதியாக்கிய கொடூரம்: எங்கு செல்கிறது மனித குலம்? மே 8, 2018- அன்று அகதிகளை லாரியில் ஏற்றி கொண்டு விடக் காத்திருக்கும் அல்ஜீரியா ராணுவம் - படம். | ஏ.பி. கடந்த 14 மாதங்களில் அல்ஜீரியா அரசு சுமார் புலம்பெயர்ந்தோர் 13,000 பேர்களை கொதிக்கும் சஹாரா பாலைவனத்தில் துப்பாக்கி முனையில் அழைத்துச் சென்று நிர்கதியாக விட்டுவிட்டு வந்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட அனைவரும் அடங்குவர். உணவு, குடிநீரின்றி துப்பாக்கி முனையில் இவர்களை கொதிக்கும் சஹாரா வெயிலில் நடத்திச் சென்றதும் அதிர்…
-
- 0 replies
- 425 views
-
-
48 மணி நேரத்தில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிப்பு: துருக்கியில் ராணுவம் அதிரடி Ca.Thamil Cathamil December 17, 2015 Canada துருக்கியில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தென் கிழக்கு துருக்கியில் சிலோப்பி, சிஜ்ரே பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற குர்து இன போராளிகளுக்கு எதிராக கடந்த 48 மணி நேரத்தில் துருக்கி பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல்கள் தொடுத்தனர். இந்த தாக்குதல்களில் 23 குர்து இன போராளிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை துருக்கி அரசு செய்தி நிறுவனம் ‘ஆனடோலு’ வெளியிட்டுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/54265.html#sthash.A9IfWTCX.dpuf
-
- 0 replies
- 574 views
-
-
48 மணித்தியாலத்துக்குள் ரஷ்யாவுடன் பேச்சுவார்தை நடத்த விரும்பும் உக்ரைன்! உக்ரைன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக, ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களை சந்திக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா, துருப்புக்களைக் கட்டியெழுப்புவதற்கான முறையான கோரிக்கைகளை ரஷ்யா புறக்கணித்துள்ளது எனக் கூறியுள்ளார். ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து அறிந்துக் கொள்வதற்கு அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு சந்திப்பைக் கோருவதாக அவர் மேலும் கூறினார். உக்ரைனின் எல்லையில் சுமார் 100,000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால், சில …
-
- 0 replies
- 281 views
-
-
48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் bbc 48 வருடமாக பிரிட்டனில் வாழ்ந்த பெண்ணுக்கு வெளியேறும் அச்சுறுத்தல் பிரிட்டனில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் ஒரு பெண்ணை நாட்டைவிட்டு வெளியேற வேண்டிவரும் என்று உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் 48 வருடங்களாக வாழ்ந்துவரும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட பிரித்தானிய உள்துறை அலுவலகம், குறித்த பெண் தற்போது சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவதாகவும், ஆதலால் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளது. லன்காஷயரில் - பேர்ன்லி என்ற இடத்தை சேர்ந்த வின்னி பேர்க்கின்ஹெட், 1967 இல் மலேஷியாவிலிருந்து தனது தாயுடன், தாயின் கடவுச்சீட்டில் பதியப்பட்டு, அவருடன் வந்துள்ளார். அண்மையி…
-
- 2 replies
- 988 views
-
-
49 ஈரோ கொடுத்து ஐரோப்பாவிற்குள் பயணம் செய்யலாம்- எயர் பிரான்ஸின் அதிரடி அறிவிப்பு! Published on January 7, 2013-11:15 am · No Comments பிரான்சின் எயர் பிரான்ஸ் விமான நிறுவனம் இன்று அதிரடியாக விலைக்குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கனவே குறைந்த விலையில் பயணங்களை நடத்தி வரும் விமான நிறுவனங்களிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விமான பயண சீட்டுகளை மலிவு விலையில் அறிவித்துள்ளது பிரான்ஸின் உள்ளுர் சேவைகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான சேவைகள் மத்திய கடல் பிரதேச நகரங்கள் உட்பட 58 வழித் தடங்களிற்கான விமான பயண சீட்டுகளின் ஆரம்பவிலையாக 49 ஈரோவாக நிர்ணயித்துள்ளது. உள்ளுர் சேவையில் இரு வழி பயணத்திற்கும் இக்கட்டணமே அறவிடப்பட உள்ளது. இன்றிலிருந்து மலிவுவிலை பயண சீட்டுகளை பதிவு …
-
- 2 replies
- 743 views
-