உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
பராகுவே நாட்டின் 60 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது தென்னமரிக்கா பாராகுவே நாட்டின் 60 ஆண்டுகால ஆட்சி கிறிஸ்தவ பிஷப்பாக இருந்த பெர்னான்டோ லுகோ முடிவு கட்டி உள்ளார். 1947ம் ஆண்டு இக் கட்சி ஆட்சியை பிடித்தது. இதுவரை காலமும் கொலராடோ என்ற கட்சியின் ஆட்சி நடந்தது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெர்னான்டோ லுகோவுக்கு 41 சதவீத ஆதரவு கிடைத்தது. இது ஆளும் கட்சி வேட்பாளர் பிளாங்கா ஓவ்லருக்கு 31 சதவீதம் கிடைத்தது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளரான ஓவ்லர் தன் தோல்வி அடைந்துள்ளார். pathivu.com
-
- 0 replies
- 745 views
-
-
11 நாடுகளிலிருந்து 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர். கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல், பணியிடத்தில் இருந்து தலைமறைவு, ஒப்பந்தங்களை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் நாட…
-
- 3 replies
- 431 views
-
-
சோமாலிய கார் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக உயர்வு! Published by J Anojan on 2019-12-28 15:49:03 Share சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் இன்று காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் தொகை 60 ஆக அதிகரித்துள்ளதாக 'Sky News' சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதல் காரணாக மேலும் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளமையினால் உயிரிழப்புகள் அதிரிக்கக்கூடும் எனவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் காரணமாக பொது மக்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே அதிகாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மொகதீஷுவில் …
-
- 0 replies
- 515 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞரது உருக்கமான விருப்பத்தை நிறைவேற்றிய கனடிய பிரதமர்: [Friday 2016-02-19 20:00] கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த வாலிபர் ஒருவரின் உருக்கமான விருப்பத்தை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தயக்கமின்றி முழு மனதுடன் நிறைவேற்றியுள்ளார். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்டோன் நகரில் லக்கான்பால்(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 16 வயதாக இருந்தபோது புற்றுநோய் தாக்கியதை தொடர்ந்து கடுமையான சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். எனினும், புற்றுநோயிற்கு பலியாவதற்கு முன்னதாக தன்னுடைய இறுதி விருப்பத்தை அந்த வயதிலேயே பதிவு செய்துள்ளார். அப்போது, ‘விலைகொடுத்து வாங்க முடியாத ஒரு இறுதி விருப்பம் எனக்குள் இரு…
-
- 1 reply
- 548 views
-
-
பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரவித்துள்ளது. அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 350 views
-
-
வொஷிங்டன் டிசி நகரில் துப்பாக்கி சூடு; இஸ்ரேலிய தூதரக ஊழியர் இருவர் உயிரிழப்பு! வொஷிங்டன் டிசி நகர மையத்தில் அமைந்துள்ள ஒரு யூத அருங்காட்சியகத்திற்கு வெளியே இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) தெரிவித்துள்ளார். தலைநகர் யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்விலிருந்து வெளியேறும் போது பாதிக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாக சந்தேகிக்கப்படுகின்றது. அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (21) இரவு 9:05 மணிக்கு எஃப் தெருக் வடமேற்கில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இது ஏராளமான சுற…
-
- 0 replies
- 169 views
-
-
பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் கருத்துக்கள் - இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட ஐந்து நாடுகள் தடை 11 JUN, 2025 | 12:31 PM ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் உள்ள பாலஸ்தீனியர்களிற்கு எதிரான வன்முறைகளை தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களிற்கு எதிராக பிரிட்டன் உட்பட நான்கு நாடுகள் தடைகளை விதித்துள்ளன. பிரிட்டன் நோர்வே கனடா அவுஸ்திரேலிய நியுசிலாந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனுடன் இணைந்து தடைகi விதித்துள்ளன. ஆகிய இரண்டு இஸ்ரேலிய அமைச்சர்களும் பிரிட்டனிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் மேலும் பிரிட்டனில் உள்ள இருவரினதும் சொத்துக்களும் முடக்கப்படும். இருவரும் கடும் வன்முறைகளை த…
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
குடியுரிமை குறித்த மேன்முறையீட்டின் முதற்கட்டத்தை ஷமிமா பேகம் இழக்கிறார் by : S.K.Guna ஐஎஸ் மணப்பெண் ஷமிமா பேகம், தனது குடியுரிமை பறிக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீட்டின் முதற்கட்டத்தை இழந்துள்ளார். 20 வயதான ஷமிமா பேகம் இஸ்லாமிய அரசில் சேர்வதற்காக 2015 ஆம் ஆண்டு தனது 15 வயதில் லண்டனை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் பெப்ரவரி 2019 இல் சிரிய அகதிகள் முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார். முன்னாள் உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் கடந்த ஆண்டு பெப்ரவரி இறுதியில் ஷமிமா பேகத்தின் பிரித்தானியக் குடியுரிமையை ரத்துச் செய்தார். திருமதி ஷமிமா பேகம், தேசமின்றி விடப்படாததால் அவருடைய குடியுரிமையைப் பறிக்க முடியும் என்று நீதிமன்றம் த…
-
- 0 replies
- 573 views
-
-
காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை பயன்படுத்தி பெரும் இலாபம் சம்பாதிக்கும் சர்வதேச நிறுவனங்கள் - ஐநாவின் விசேட அறிக்கையாளர் அறிக்கை Published By: RAJEEBAN 04 JUL, 2025 | 11:00 AM காசாவில் இடம்பெறும் இனப்படுகொலை காரணமாக சர்வதேச நிறுவனங்கள் பெருமளவு இலாபத்தை சம்பாதிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனபகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளதுடன் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் அந்த நாட்டிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐநாவின் அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பெனிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை கடந்த 21 மாதங்களாக …
-
-
- 2 replies
- 187 views
-
-
ஏலத்திற்கு வரவுள்ள எலிசபெத் மகாராணியின் காதல் கடிதம் (PHOTOS) inS இங்கிலாந்து ராணி எலிசபெத் இவரது கணவர் இளவரசர் பிலிப் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது ‘Royal Wedding’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதிய பெட்டி ஸ்பென்சர் என்பவருக்கு ராணி எலிசபெத் ஒரு கடிதம் எழுதினார். இளவரசர் பிலிப்புடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் 2 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. ராணி எலிசபெத் கடந்த 1942-ம் ஆண்டில் 21 வயத…
-
- 5 replies
- 910 views
-
-
ஈக்வேடாரில் மீண்டும் நிலநடுக்கம்.! தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது. போர்ட்டோவிஜோ நகரில் இருந்து 100 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினமும் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஈக்வேடார் நாட்டை தாக்கியமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 367 views
-
-
மத்திய அரசுக்கு எதிராக பிரச்சனைகள் வரும் பொழுது புதிதாகவொன்றை கையிலெடுக்கும் மத்திய அரசு.இப்படியே முழு இந்தியாவையும் ஏய்க்கும் ஆட்சியாளர்கள்.சில வேளைகளில் குண்டு வெடிப்புகள் கூட மத்திய அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு தமீம் அன்சாரியின் கூட்டாளிகளை பிடிக்க கியூ பிரிவு போலீஸ் தீவிரம் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (35). இவர் இலங்கை வழியாக இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டுக்கு கடத்த முயன்றபோது திருச்சியில் கடந்த 17-ம் தேதி கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தமீம் அன்சாரியிடம் இருந்து, 8 பென்டிரைவுகள், சி.டி.க்கள், வரைபடங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தமீம் அ…
-
- 1 reply
- 631 views
-
-
உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டள்ளார். இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக பெஞ்சமின் நேதன்யாகு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை 4347 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.ibctamil.com/world/80/140206
-
- 1 reply
- 522 views
-
-
மாடிசன்: அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாண மக்கள், கொரோனா பரவல் அச்சமின்றி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான, 'பிரைமரி' தேர்தலில், பல மணிநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டுப் போட்டனர். எனினும், மில்வாகீ நகரில்,180 வாக்குச்சாவடிகளில், ஐந்தில் மட்டுமே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிற்கு அஞ்சி, பணிக்கு வருவதை தவிர்த்தனர். இந்த இக்கட்டான இத்தருணத்தில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்க, ஜனநாயக கட்சி கோருகிறது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி, திட்டமிட்டபடி, நவம்பரில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2517550
-
- 0 replies
- 362 views
-
-
கனடாவின் ஊடகங்களிலெல்லாம் 2007ம்; ஆண்டு சிறையில் இடம்பெற்ற ஒரு தற்கொலையே தற்போதைய செய்தியாகியுள்ளது. இந்தத் தற்கொலைத் தடுக்கப்பட்டிருக்கக் கூடியது என்ற வாதத்தை முன்வைத்து இடம்பெறும் குற்றச்சாட்டுக்கள் அரச நிர்வாக, பாதுகாப்புத்துறை சிறைச்சாலை நிர்வாகத்தை நோக்கிய எதிர்ப்பு வாதங்களை முன்வைத்துள்ளது. [size=3][size=4]1988ல் பிறந்த ஆஸ்லி சிமித் சாதாரண பிள்ளைகளைப் போல வளர்ந்து வந்தாலும் 2003ம் ஆண்டில் இவரது நடத்தைகளில் பல மாறுதல்களை கண்ட பெற்றோர் மாகாண சமூகசேவை நிறுவனங்களின் உதவியை நாடிய போது இவர் ஒருவகை உளத்தாக்க நோய்க்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அதே ஆண்டு ஒரு தபால் ஊழியரை அப்பிள் பழங்களை எறிந்து தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட ஆஸ்ல…
-
- 3 replies
- 619 views
-
-
பலூஜா நகரில் மனிதப் பேரழிவு: இராக் உதவிப்பணியாளர்கள் எச்சரிக்கை பலூஜா நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவிலான மனிதப் பேரழிவு அரங்கேறிக்கொண்டிருப்பதாக இராக்கில் உள்ள உதவிப்பணியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களாக, ஐ.எஸ் போராளிகளை விரட்டியடிப்பதற்கான முயற்சியில் அரசப்படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், சுமார் முப்பதாயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதிகப்படியான மக்களுக்கு நீர், உணவு மற்றும் மருந்துகள் வழங்க தாங்கள் போராடி வருவதாக, நார்வே நாட்டு அகதிகளுக்கான சபையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறந்த வெளியில், மிகுந்த நெருக்கடியான முகாம்களில் மக்கள் தூங்குகிறார்கள்.…
-
- 0 replies
- 319 views
-
-
[size=4]செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காககட்டணம் 5 00,000 அமெரிக்க டாலர் எனஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.[/size] [size=4]மஸ்க் முதன் முதலில் தனியார் விண்வெளி மையம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குசுற்றுலா அழைத்து சென்றவர் குறிப்பிடத்தக்கது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-091300043.html
-
- 0 replies
- 508 views
-
-
சோனியாவுக்கு அடிப்படை அறிவே இல்லை - மோடி கடும் தாக்கு 'சோனியா காந்திக்கு குஜராத் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமே இல்லை'' என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தல் வரும் 13, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கான தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடி, ராஜ்கோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில், '' மேடம் சோனியாவுக்கு குஜராத் பற்றிய அடிப்படை அறிவே இல்லை'' என்றார். குஜராத்தில் சோனியா பிரசாரம் செய்யும் போது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், ஆண்டுக்கு 6 மானிய விலை சிலிண்டர்களோடு கூடுதலாக 3 சிலிண்டர்களை தருவதாகவும், ஆனால் குஜராத்தில் கூடுதல் சிலிண்டர்கள் வழங்குவதில்லை என கூற…
-
- 2 replies
- 1.6k views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியை ஊடகங்கள் 'ஹீரோ' வாக சித்தரிப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.காஷ்மீரில் இஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறைச் சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கவலை அளிப்பதாகவும், தீவிரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் ஊடகங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். புர்ஹான் வானி ஒரு தீவிரவாதி, பீல தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன், நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டவன். ஆனால் அவனை ஒரு ஹீரோ போல சித்தரிப்பது தவறான உதாரணமாக…
-
- 2 replies
- 370 views
-
-
அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிய இருவர் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க மாகாணமான ஃபளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், போக்கிமான் கோ விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த இரு பதின்ம வயது நபர்களை திருடர்கள் என சந்தேகித்து, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இரவு நேரத்தில், ஒர்லாண்டோவின் வட கிழக்கு பகுதியில் உள்ள பனை மர கடற்கரை பகுதியைச் சுற்றி வந்துக் கொண்டிருந்த அந்த பதின்ம வயது நபர்களை, தனது வீட்டின் வெளியே கண்டார் அந்த மனிதர். வேகமாக அந்த இடத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த காரின் அருகில் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் அவர். அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களில் போக்கிமான் கோவிற்கு அதிக ரசிகர்கள் கிட்டியுள்ளனர். இந்த விளைய…
-
- 1 reply
- 213 views
-
-
துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களை கைது செய்ய உத்தரவு துருக்கியில் 40க்கும் மேற்பட்ட செய்தியாளர்களைக் கைது செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கைது பட்டியலில், துருக்கியின் முன்னணி வர்ணனையாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்லி லிகக் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு ஆயிரக்கணக்கான கைது நடந்தன. கடந்த ஞாயிறன்று, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்தான்புல்லில் உள்ள டக்ஸிம் சதுக்கத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். துருக்கியில…
-
- 0 replies
- 263 views
-
-
எல்லைப் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்தால் வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று இந்திய விமானப்படை தளபதி என்.ஏ.கெ. பிரவுன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இருநாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு இருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கிறது. கடந்த சில நாட்களால நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள நம்மிடமும் சில கட்டமைப்புகள் இருக்கின்றன. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து நீடித்து வந்தால் நாம் வேறு சில வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியதிருக்கும் . அந்த வ…
-
- 7 replies
- 738 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஹிலரி கிளிண்டனின் ஆதரவு கரைகிறது; டொனால்ட் ட்ரம்ப் நேர்மையானவர் என்னும் கருத்து அதிகரிக்கிறது. புளோரிடா மாநிலம் அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்குமா? * காலைஸ் காட்டு முகாமை மூட முயல்கிறது பிரான்ஸ்; அங்குள்ள அகதிகள் எங்கே போவார்கள்? மோசமான சூழலில் அங்கு வாழ்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? *முஸ்லிம் சிறுமிகளிடம் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் கிரிக்கெட் பயிற்சி; கிழக்கு லண்டன் கிரிக்கெட் பயிற்சியாளரின் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 522 views
-
-
ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹைஷென் புயல் இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து கியூசூ தீவை தாக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கு…
-
- 0 replies
- 385 views
-
-
இந்திய வி.வி.ஐ.பி.க்கள் பயணிப்பதற்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்கஇத்தாலி நிறுவனத்துடன் மத்திய அரசு 2010ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் மத்திய பாதுகாப்புத்துறை களமிறங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் பெற, ரூ. 400 கோடி அளவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/ஹ-ல-க-ப்டர்-ஒப்பந்-ம்-ர-்-121200295.html
-
- 2 replies
- 408 views
-