Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம். ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்க…

  2. இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், செயின்ட் சதுக்கத்தில் உள்ள பேராலயத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெனிஸ் நகரில் அண்மையில் பெய்த கனமழையால், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வெனிஸ் நகரத்தின் 85 சதவீதம் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அதிகபட்சமாக, 187 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதற்கு முன்பு 1966ம் ஆண்டு 194 சென்டிமீட்டர் அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தநிலையில், செயின்ட் மார்க் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பேராலயத்தில், ஒரு மீட்டருக்கு அதிகமான உயரத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மழை-வெள்ளம் காரணமாக, வ…

    • 2 replies
    • 982 views
  3. மெக்சிகோவில் பேருந்து-லொறி மோதிவிபத்து: 41 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் தெற்கு மாகாணத்தில் உள்ள கான்குனில் இருந்து டபாஸ்கோவிற்கு நேற்றைய தினம் 48 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்தொன்று எதிரேவந்த லொறி மீது மோதி தீப்பற்றி எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ் விபத்தில் 41 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்த மேயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உத…

  4. மியான்மாரில் (பர்மா) முஸ்லீம் காடைக் கும்பல் ஒன்று பெளத்த பெண்ணை (சிறுமியை) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்றதை அடுத்து ஆத்திரமடைந்த பெளத்தர்கள்.. முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தி 9 முஸ்லீம்களைக் கொன்றுள்ளனர்..! இவ்வாறு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. Muslims killed in attack in Burma's Rakhine province. Buddhist residents in western Burma have killed at least nine Muslims as sectarian tension worsens in the region, police say. http://www.bbc.co.uk...-18324614##_tab பிற்குறிப்பு: பிபிசி இச்செய்தி மூலம்.... முஸ்லீம் - பெளத்த மதக் கலவரத்தை தூண்டி.. பிராந்திய.. உலக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதோடு... இது ஒரு பிரிட்டிஷ் குறுந்தேசிய ஊடகத்தின் பொறுப…

  5. தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பலத்தை காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் சீனா கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு மிகமுக்கியமான கடல் வழியான தென் சீனக் கடலுக்கு, சீனா முழுஉரிமை கொண்டாடுவதை அமெரிக்கா ஏற்கவில்லை. இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். அப்போது தென்சீனக் கடல், ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் ((Wu Qian)) தெரிவித்துள்ளார். தென்சீனக் கடலில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும், அந்த பகுதியில் தனது ராணுவ பலத…

  6. சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல - வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் ஜனாதிபதி Published By: Rajeeban 25 Feb, 2025 | 11:41 AM சமாதானம் என்பதன் அர்த்தம் உக்ரைன் சரணடைவதல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைனின் பாதுகாப்பு குறித்த உத்தரவாதங்கள் அவசியம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நானோ அல்லது அமெரிக்க ஜனாதிபதியோ பலவீனமான சமாதானத்தை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் அதன் ஜனாதிபதியும் பிரான்சின் சிறந்த நண்பர்கள் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பாதுகாக்கும் விடயத்தில் ஐரோப்பா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என…

  7. சிரியாவில் 1,000 க்கும் அதிகமானோர் பலி! - ரஷ்ய விமானங்களே பொறுப்பு! [Thursday 2016-01-21 22:00] சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் …

  8. மேற்கு ஆப்பிரிக்கா நோக்கி 20 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் நைஜீரிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த எம்.டி. டியூக் ((MT Duke)) என்ற சரக்குக் கப்பல் ஒன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அதில் இருந்தவர்களில் 20 மாலுமிகள் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் கடத்தப்பட்டதை நைஜீரிய அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்திய மாலுமிகள் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது கவலையைத் தெரிவித்துள்ளதார். கடத்தப்பட்ட மாலுமிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஹாங்காங்கில் இருந்து சென்ற கப்ப…

    • 0 replies
    • 319 views
  9. Started by SUNDHAL,

    சிரியா அதிபர் காயமா? புதன் கிழமை நடை பெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Hassan Turkmani அசாத்தின் மைத்துனர் General Assef Shawkat மற்றும் இந்நாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பலி ஆகி இருப்பதாக Syria தொலைக்காட்சி உறுதிபடுத்தி இருக்கு இந்த கூட்டத்தில் இருந்த அசாத்தும் காயப்பட்டு இருக்கலாம்னு உறுதிபடுத்த தகவல்கள் கூறுகின்றன. யாழ். Com காக சுண்டல் இந்த தாக்குதலுக்கு சிரிய கிளர்ச்சி குழு பொறுபெடுத்து இருக்கு

    • 4 replies
    • 804 views
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே. கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 1 ஜூன் 2025, 02:13 GMT உலகின் மிகவும் சவாலான விஷயங்களுள் ஒன்று, எவரெஸ்ட் மலை உச்சியை ஏறி அடைவது. தற்போது வரை வெகு சிலரே இதனைச் சாதித்துள்ள நிலையில் பலர் இந்த ஆபத்தான மற்றும் சவால் நிறைந்த பயணத்தில் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 330-க்கும் அதிகமானோர் இத்தகைய பயணங்களில் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. 1953-ம் ஆண்டு தான் முதல் முறையாக மனிதர்களால் எவரெஸ்ட் உச்சியை அடைய முடிந்தது. இதனைச் சாதித்தவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளியரான டென்சிங் நோர்கே. உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்கள…

  11. வாஷிங்டன் சர்வதேச பயங்கரவாதியும், அல் - காய்தா தீவிரவாத இயக்க தலைவனுமான ஒஸாமா பின்லேடன் உயிருக்குப் போராடுவதாக அமெரிக்க உளவு ஏஜென்சியான சிஐஏ தெரிவித்துள்ளது. சிறுநீரக கோளாறால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லேடன், இன்னும் சில மாதங்களுக்கு உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு வரும் பின்லேடனுக்கு எந்த விதமான மருந்து அளிக்கப்பட்டு வருகிறது என்பது வரை சிஐஏ அதிகாரிகள் மோப்பம் பிடித்துவிட்டதாக கூறிஇ அந்த மருந்துகளின் பெயர்களையும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே இந்த இரண்டு சிஐஏ அ…

    • 2 replies
    • 1.3k views
  12. நார்வே நீதிமன்றத்தில் நாஜி வணக்கம் செலுத்திய கொலைக் குற்றவாளி நார்வேவில் பல கொலைகள் செய்த குற்றவாளியான அனொர்ஷ் பெஹ்ரிங் ப்ரேவிக், தன்னை அரசாங்கம் மோசமாக நடத்துவதாக தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார். I நார்வேவில் எழுபத்து ஏழு பேரை கொன்ற குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் கொலைக் குற்றவாளி நீதிமன்றத்தில் நுழையும்போது நாஜி வணக்கம் செலுத்தியுள்ளார். அரசு தன்னை மனிதத்தன்மையற்ற நிலைமையில் வைத்துள்ளதாக வலதுசாரி தீவிரவாதியான இவர் கூறிவருகிறார். அவர் செய்த கொடூரமான குற்றங்களையும் மீறி, அவரை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டாயிரத்து பதினோறாம் ஆண்டில் மத்திய ஆஸ்லோவ…

  13. மெக்சிகோ துப்பாக்கிச் சூடு; 12 பேர் உயிரிழப்பு! மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் புதன்கிழமை (25) இரவு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, புனித யோவான் ஸ்நானகரை கொண்டாடும் விதமாக மக்கள் தெருவில் நடனமாடி மது அருந்திக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க, அவர்கள் அலறி அடித்து ஓடும் காட்சிகளை ஆன்லைனில் பரவிய காணொளிகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக இராபுவாடோ அதிகாரி ரோடால்போ கோம்ஸ் செர்வாண்டஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில்…

  14. 27.8.12 அன்று அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, ‘அரசியல் முக்கியத்துவம்’ வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறதாம். சரி அதில் என்ன முக்கியத்துவம் என்று “நமது எம்ஜிஆர்” பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம். நிறுவனர் ஜெயலலிதா என்று தலையில் ஆரம்பித்து வெளியீடு ஸ்ரீ ஜெயா பப்களிகேஷன்ஸ் என்ற வால் வரைக்கும் மொத்தம் 12 பக்கங்களிலும் எங்கெங்கு பார்த்தாலும் ஜெயலலிதாதான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதையே விஞ்சும் அளவுக்கு துண்டு துக்காணியிலும், சந்து பொந்துகளிலும் இருப்பாள் என்று ரணகளம்தான். அந்த இதழில் இன்று மட்டும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் எழுபது முறை “முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா” என்ற ஜிஞ்சக்கு ஜிஞ்சா வார்த்தை ஓதப்பட்டிருக்க…

  15. உலகம் முழுவதும் வாழும் அரசியல் தலைவர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்கள் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் இன்று கசித்துள்ளதால் உலகமே பெரும் பரபரப்பில் உள்ளது. 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரால் அறியப்படும் இத்தாள்,விக்கிலீக்ஸ் போன்ற ஒரு தகவல் கசிவு விவகாரமாகும் . மொஸாக் ஃபொன்செகா என்ற சட்ட நிறுவனமானது பனாமா நாட்டில் இயங்கி வந்துள்ள நிலையில் அந்நிறுவனத்திலிருந்தே இத்தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல தசாப்தங்களாக இந்நிறுவனமே இம் மோசடி நடவடிக்கைகளை மிகவும் துல்லியமாகவும் ராஜ தந்திரத்துடனும் ரகசியமாக தமது வாடிக…

    • 11 replies
    • 2k views
  16. 1,500 தலிபான் கைதிகளை சிறையிலிருந்து விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி உத்தரவு! ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகால நடைபெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் 1,500 தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் அனைத்து தலிபான் கைதிகளும் "போர்க்களத்திற்கு திரும்பக்கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை" வழங்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப்கானி தெரிவித்துள்ளார். கைதிகள் எவ்வாறு சட்ட ரீதியான முறையில் விடுவிக்கப்படுவார்கள் என்பது …

  17. தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை! தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும். அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது. 2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார்…

  18. கொரோனாவின் அகோரம்: அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸில் என்றுமில்லாத உயிரிழப்பு..! by : Litharsan மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 718 பேரை வைரஸ் காவுகொண்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 820 பேர் உலக அளவில் மரணித்துள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதிலும் தற்போது உயிரிழப்புக்களின் வீதம் அதிகரித்த…

  19. நோபல் பரிசுக்கு இணையாக,ஈரான் நாடு,நபிகள் நாயகம்பெயரில்,புதிய விருதை அறிவித்து உள்ளது. சர்வ தேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்பவர் களுக்கு, 1901ம் ஆண்டு முதல், "நோபல் பரிசு' வழங்கப்பட்டு வருகிறது.கடந்த, 2003ல், ஈரான் நாட்டின் மனித உரிமை ஆர்வலர் ஷிரின் எபாடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் தற்போது, ஈரான் மீது, அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பான புகாரினால், பொருளாதாரத் தடை விதித்துள்ளன. அதுமட்டுமல்லாது, இந்த ஆண்டு ஐரோப்பிய யூனியனுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டு உள்ளது. நோபல் பரிசு ஒரே ஒரு முறை தான், ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசுக்குப் போட்டியாக, ஈரான் நாடு, நபிகள் நாயகத்…

  20. வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். https://www.cnn.com/2025/11/02/…

  21. துருக்கி வம்சாவளி ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு துருக்கிய வம்சாவளியை சேர்ந்த 11 ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆர்மேனியர்கள் இனப்படுகொலை பற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் துருக்கிய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் முதல் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என பிரகடனப்படுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்காக இவர்கள் அச்சுறுத்தல்களை பெற்ற பின்னர் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. “எங்கிருந்தாலும் உன்னை கண்டறிவோம்” அல்லது “உன்னுடைய ஜெர்மானிய நண்பர்கள் …

  22. ரஷ்யா, டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை! உக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இருந்து உக்ரேன் படையினர் வெளியேற வேண்டும், இல்லையெனில் மொஸ்கோ குறித்த பகுதியை கைப்பற்றும் என்று என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீண்டும் எச்சரித்துள்ளார். அதேநேரம், உக்ரேனில் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்த எந்தவொரு சமரசத்தையும் அவர் நிராகரித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதிகளை வலுக்கட்டாயமாக விடுவிப்போம், இல்லையெனில் உக்ரேனிய படைகள் இந்தப் பகுதிகளை விட்டு வெளியேறும் – என்றார். டான்பாஸின் 85% பகுதியை மொஸ்கோ கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, டான்பாஸ் பகுதியை விட…

  23. அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம் 26 Dec, 2025 | 01:19 PM அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதிகளில் நேற்று (25) வீசிய “கிறிஸ்மஸ் புயல்” மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று எழுந்ததால் “கிறிஸ்மஸ் புயல்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் காற்று, பனிப்பொழிவுக்கு சாத்தியமிருப்பதாக அந்நா…

  24. சிக்கன நடவடிக்கை குறித்த கொள்கைக்கு எதிரான ஐரோப்பா தழுவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. [size=3][size=4]இரு நாடுகளிலும் குறிப்பாக பொது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.[/size][/size] [size=3][size=4]ஸ்பெயின் நாட்டின் பல நகரங்களில் மோதல்கள் நடந்ததாக செய்திகள் வந்திருக்கின்றன.[/size][/size] [size=3][size=4]இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் போலந்து உட்பட 23 நாடுகளில் தொழிற்சங்க போராட்டங்களை நடத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.[/size][/size] [size=3][size=4]ஆனால் இந்தப் பிரச்சினையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட யூரோ வலயத்தில் உள்ள மத்தியதரைக் கடல் நாடுகள் மீதே க…

    • 4 replies
    • 704 views
  25. பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை 'மதிக்கிறேன்'- ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.