உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26678 topics in this forum
-
இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் அவலநிலை தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியனை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்ற சூடு தணிவதற்குள் மீண்டுமொரு தாக்குதலை இலங்கை கடற்படை நடத்தியுள்ளது. இது மிகுந்த மன வேதனையளிப்பதோடு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது. 22.1.2011 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், புஷ்பவனம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களான ஜெயக்குமார், ராஜேந்திரன் மற்றும் செந்தில் ஆகிய மீனவர்கள் கடலுக்க…
-
- 0 replies
- 467 views
-
-
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மகரஜோதி மனித தயாரிப்பா என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமையன்று கேள்வி எழுப்பியது. இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் தி இந்து நாளிதழ் ஈடுபட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினரை வெள்ளிக் கிழமையன்று சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. குறிப்பிட்ட நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் காணப்படும் ஜோதி மனித தயாரிப்பே என ஒப்புக் கொண்ட திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர், ஆனால் இந்…
-
- 0 replies
- 746 views
-
-
கொச்சி துறைமுகத்தின் இணையதளம்,பாகிஸ்தானைச் சேர்ந்த விஷமிகளால் சிதைக்கப்பட்டுள்ளது. ( http://www.cochinport.com/ ) கடந்த 19 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் விஷமிகள் அந்த இணையதளத்தை சிதைத்துள்ளனர். பின்னர்,இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயம் கொச்சி துறைமுக இணையதளத்தின் மாற்று முகப்புப் பக்கம் மட்டுமே சிதைக்கப்பட்டதும், இணையதளத்தின் உள்ளடக்கத் தகவல்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததும் தெரியவந்தது. இது குறித்து கேரள காவல்துறையின் இணையதள குற்றப்பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வில்,பாகிஸ்தானில் உள்ள கணினி ஐ.பி. முகவரியில் இருந்து கொச்சி துறைமுக இணையதளம் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கொச்சி துறைமுகம் …
-
- 0 replies
- 458 views
-
-
விரைவில் நல்ல முடிவுக்கு வருவேன்- ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம் சென்னை: சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார். இதன் மூலம் மீண்டும் அவர் முதல்வர் பதவியை வகிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் மகன் கோகுலகிருஷ்ணன், பாரு பிரியதர்ஷினி திருமணத்தை இன்று முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நம்முடைய மத்திய உள்துறை அமைச்சர் தன்னை மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்று அழைத்துக்…
-
- 6 replies
- 767 views
-
-
கலைஞர் தொலைகாட்சியின் ஊடக பயங்கரவாதம்! திரு.கபில்சிபல், மத்திய அரசில் அ.ராசா விட்ட இடத்தை தொடர்பவர்.தி.மு.க வையும் காங்கிரஸ் கட்சியின் இமேஜையும் கட்டி காக்க மத்திய அரசின் தனிக்கை துறை அமைப்பின் அறிக்கையயே அபத்தம் என்பவர்..... சட்டம் கொஞ்சம் தெரிந்தவர் (வழ்க்குறைஞர்) என்பதால், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தினை பூசி மொழுகி உண்மையை குழிதோண்டி புதைக்க சோனியா கபில்சிபலை பயன்படுத்தி வருகிறார். இதில் அகமகிழ்ந்த கபில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தனிக்கை துறை குற்றம் சாட்டியது அபத்தமானது,அடிப்படை இல்லாதது" என கூறினார். சி.ஏ.ஜி.யின் அறிக்கை அடிப்படையிலேயே இதுகுறித்…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள். இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கினாரே பால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நா…
-
- 3 replies
- 1.7k views
-
-
நித்யானந்தாவுடனான எனது உறவுகள் தொடரும்: கண்ணகி, சாவித்ரியைப் போல் நான் விடும் சாபமும் பலிக்கும் -ரஞ்சிதா நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார். கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்ற வசதியைப் பயன்படுத்தி, தோன்றுவதையெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் கூறி வருகிறார்கள் நித்யானந்தாவும் அவரது 'பக்தையான' ரஞ்சிதாவும். நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி ஒன்பது மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார். 'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் …
-
- 0 replies
- 1.1k views
-
-
காஷ்மீர் மனித உரிமை நிலவரம்: ஐ.நா. கவலை இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு பெருமளவு அதிகாரங்களை வழங்கும் சிறப்புச் சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற சிறப்புப் பிரதிநிதி மார்கரெட் செகாக்யா வலியுறுத்தியுள்ளார். படையினருக்கு எதிராக காஷ்மீரில் அண்மையில் பெரும் ஆர்ப்பாட்டங்களும் நடந்திருந்தன. ஏற்கெனவே பல முறை ஐ.நா. மனித உரிமைப் பிரிவினர் காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்திய அரசு தற்போது அவர்களது பயணத்துக்கு அனுமதியளித்திருந்தது. அதையடுத்து, காஷ்மீர், ஒரிஸா, மேற்கு வங்கம், அஸ்ஸாம்,…
-
- 0 replies
- 831 views
-
-
Would there be any possibility of establishing truth and reconciliation commission in Sudan? — Rajesh KC சூடானில் நடைபெற்ற கொலைகள் சம்பந்தமாக ஒரு உண்மையை கண்டறியும் விசாரணை நடக்குமா? I see little chance of establishing a truth and reconciliation commission unless it is part of a comprehensive peace agreement to end the conflict in Darfur. — President Carter I think the north would be very reluctant to have such a commission, and the south’s priority is moving on with independence. Beyond that — and this feels like heresy — I don’t know that there’s much evidence that truth and reconciliation commissions are a particularly great way to spend money. The South A…
-
- 0 replies
- 975 views
-
-
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ce.html சிங்களவன் முதலில் இலங்கை தீவிற்கு வந்ததாக இந்த சீ ஐ எ இணையத்தளம் சொல்கிறது. யாரவது இதை திருத்தி எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? Introduction ::Sri Lanka Background: The first Sinhalese arrived in Sri Lanka late in the 6th century B.C. probably from northern India. Buddhism was introduced in about the mid-third century B.C., and a great civilization developed at the cities of Anuradhapura (kingdom from circa 200 B.C. to circa A.D. 1000) and Polonnaruwa (from about 1070 to 1200). In the 14th century, a south Indian dynasty established a Tamil kingdom in northern Sr…
-
- 0 replies
- 870 views
-
-
சூடான் இரண்டாக உடைகிறது வெள்ளி, 21 ஜனவரி 2011( 18:49 IST ) 99 சதவீதம் பேர் பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால்: சூடான் நாடு, இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானின் வடபகுதியில் முஸ்லிம்களும், தென்பகுதியில் கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். கிறிஸ்தவர்கள், தனிநாடு கோரி, 20 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில், இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்; 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், தனிநாடு தொடர்பாக, தென்பகுதி கிறிஸ்தவர்களிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பிரிவினைக்கு ஆதரவாக 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இதனால், சூடான் இரண்டாக உடைந்து, தெற்கு சூடான் தனிநாடாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
சிங்கப்பூர் ஆலயங்களில் இன்று தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசம் இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை. சிங்கப்பூரில் வாழும் இந்துக்கள் பக்திப் பரவசத்தோடு இத்திருநாளில் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர். பால், வயது வேறுபாடுகள் இன்றி இறைவனை கும்பிட்டனர். குறிப்பாக உடலை வருத்திக் காவடிகள் எடுத்தனர். தலையில் பாற்குடம் ஏந்தினர். கற்பூர சட்டி ஏந்தினர். தீப, தூபம் காட்டி இறைவனின் அருளை வேண்டி நின்றனர். சிங்கப்பூர் தைப்பூச நிகழ்ச்சியின் அற்புதமான படங்கள் மற்றும் காணொளிகள் காண.... http://www.thedipaar.com/news/news.php?id=23401
-
- 0 replies
- 716 views
-
-
தாய்லாந்தின் 3 தென் மாகாணங்களில் சுயாட்சி கேட்டு போராடி வரும் போராளிகள் 60,000 பேர் கொண்ட தாய்லாந்து இராணுவத்தினர் தமது நிலத்தை ஆக்கிரமித்து நிற்பதை எதிர்த்து அவ்வப்போது சிறு சிறு தாக்குதல் நடத்தி வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது தான் முதற்தடவையாக தாய்லாந்து போராளிகள் ஒரு இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சில இராணுவ வீரர்களை கொன்றுள்ளதாகவும் தாய்லாந்துச் செய்திகள் கூறுகின்றன. தசாப்தங்கள் கடந்தும் தொடரும் இந்த ஆயுதப் போராட்டத்தில் கடந்த 2004 இல் இருந்து இதுவரை 4300 க்கும் மேற்பட்டோர் வன்முறைகளில் உயிரிழந்துள்ளனர் என்று சொல்கிறது பிபிசி. http://www.bbc.co.uk/news/world-asia-pacific-12238656 தமிழீழ விடுதலைப் போர…
-
- 0 replies
- 940 views
-
-
செய்திக் குறிப்பு -------------------- ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும், விதிமுறைகளின் படியே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவும் திருவாய் மலர்ந்திருப்பதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்கள் விரோத சோனியா காங்கிரஸின் திமிர்வாதப் போக்கையே ரெட்டியின் அறிவிப்பு பிரதிபலிக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறோம். இந்த பெட்ரோல் விலையேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது - என்று காங்கிரஸ் அறிவித்த ஒரே வாரத்தில் ரெட்டியின் விசித்திர விளக்கம் வெளிவ…
-
- 0 replies
- 935 views
-
-
106 பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்த இந்த கோர விபத்தை ஆந்திர, கர்நாடக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தந்து வெளியிட்டன. தமிழக தொலைக்காட்சிகள் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி, விபத்தை இருட்டடிப்புச் செய்ய, பலியானவர்களின் உறவினர்களுக்கே இந்தச் செய்தி தாமதமாகத்தான் தெரிந்திருக்கிறது. இந்தச் செய்தியை ஒளிபரப்புச் செய்த கேரள ஊடகங்கள், "விபத்தில் நூற்றுக்கும் அதிகமான கர்நாடக, ஆந்திர, தமிழக பக்தர்கள் பலி. நல்லவேளையாக மலையாளிகள் யாரும் மரணமடைந்திருக்கவில்லை" என திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, பிறமாநில் பக்தர்களின் எரிச்சலை அதிகப்படுத்தின. இறந்தவர்களில் 24 பேர் ஆந்திராவையும், 28 பேர் கர்நாடகாவையும் 32 பேர் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் சபரிமலை பக்தர்களுக்கு ஏற்ப…
-
- 1 reply
- 951 views
-
-
மனிதாபிமான விளையாட்டு வீரர்கள் முகமது அலி, ஆண்டி பிளவர் மற்றும் ஹென்றி ஓலங்கா என்னை நீக்ரோ என்றழைக்காத வியட்காங்கையர்களை (வியட்நாமிய கம்யூனிஸ்டுகள்) நான் ஏன் கொல்லப்போகவேண்டும்” தான் சார்ந்திருந்த தேசத்தை எதிர்த்து குரல் எழுப்பியது ஒரு அரசியல்வாதியோ ,போராளியோ அல்ல !! புகழின் உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர் கிளேஸியஸ் எக்ஸ் (அமெரிக்க இஸ்லாமிய தேசியத்தில் பரம்பரைப் பெயர்கள் நீக்கப்பட்டு எக்ஸ் என வைத்துக்கொள்ளப்படும் )என்றழைக்கப்பட்ட முகமது அலி, விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்படும்பொழுது விளையாட்டுவீரர்களும் குரல் கொடுக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். என…
-
- 0 replies
- 1.2k views
-
-
சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் 1. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது 2. கைகளை உயர்த்தி நிற்கும்போதும் கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைச் காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுத்தள்ளுவது 3. ஐஸ் கட்டி மீது படுக்கவைப்பது 4. ஐஸ் கட்டியைத் தலையில் சுமக்க வைப்பது 5. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டிபோட வைப்பது 6. கிரிஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது 7. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது 8. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல…
-
- 0 replies
- 857 views
-
-
ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம். அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, "உலகமெல்லாம் நடப்பதுதான்' என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர். இது நடந்தது 1983-ம் …
-
- 1 reply
- 1.6k views
-
-
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற தாகும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க மதுரை, தஞ்சாவூர், திருச்சி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் நேற்று இரவே அலங்காநல்லூருக்கு லாரி மற்றும் வேன்கள் மூலம் கொண்டுவரப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கு பெற 300- க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்து இருந்தனர். முன் பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு இன்று காலை அரசு மருத்துவர் வளர்மதி தலைமையில் 20- க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவினர் மது அருந்தி உள்ளார்களா? என மருத்துவ பரிசோதனை செய…
-
- 1 reply
- 1.1k views
-
-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான சுவீட் கடைகள் உள்ளன. அதில் அல்வா விற்பனையில் பிரபலமாக திகழும் சாந்தி சுவீட் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர். அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி அல்வா உள்ளிட்ட இனிப்பு வகைகள், கார வகைகளின் விற்பனை மும்முரமாக நடந்து வந்த நிலையில் மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மருது பாண்டி தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று இரவு 7 மணிக்கு சாந்தி சுவீட் கடைக்கு வந்தனர். பின்பு அவர்கள், வியாபாரத்தை நிறுத்துமாறும், கடை ஊழியர்கள் வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிட்டனர். பின்னர் கடையில் உள்ள சரக்கு இருப்பு, விற்பனை மற்றும் ரசீது உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடை உரிமைய…
-
- 0 replies
- 935 views
-
-
அற்ப நிலத்துக்காக ஆறு பேரின் ஆயுளையே முடித்த குற்றவாளியை, ஒரு மந்திரி ஜெயிலில் போய் குசலம் விசாரிப்பதா? இதற்குத்தான் மக்கள் ஓட்டு போட்டு உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா? ஸ்பெக்ட்ரம் விவகாரமும், ஆறு பேர் படுகொலையும்தான் இந்த ஆட்சியின் கரும்புள்ளிகள். சம்பந்தப்பட்டவர்களை தி.மு.க. தலைமை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்களே தூக்கி எறிவார்கள்!'' - இப்படி சேலத்தில் சிங்கத்தின் குகைக்கே சென்று, அதன் பிடரியை உலுக்கிவிட்டு வந்திருக்கிறார் யுவராஜா. இன்றைய தேதியில் இவர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்றாலும், கருணாநிதிக்கோ இடைஞ்சல் காங்கிரஸ்காரர்! ''பாதயாத்திரை, ஆலோசனைக் கூட்டங்கள் செல்கிறீர்கள்... மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?'' ''பதவிப் பல்லக்கி…
-
- 0 replies
- 631 views
-
-
சேலத்தில் விழிப்பு உணர்வுக் கூட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க. நடத்திய கூட்டத்தில், தி.மு.க. புள்ளிகள் அத்தனை பேருக்கும் அர்ச்சனை. ஆபாசத்தை சென்சார் செய்தே வாசகர்களுக்குக் கொடுக்கிறோம். அ.தி.மு.க-வின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்டச் செயலாளர் கிரிநடராஜன் டாப் கியரில் ஆரம்பித்தார். ''எட்டாம் வகுப்பு படித்து இருந்தால்தான் லாரி ஓட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று கருணாநிதி அரசு சட்டம் போட்டுள்ளது. நான்காவது படித்த கருணாநிதி, முதலமைச்சராக இருக்கலாம். படிக்காதவன், டிரைவராக இருக்கக் கூடாதா? எந்த ஊரு நியாயம் இது?'' என்று பேசிக்கொண்டு இருந்தபோதே, மைக்கைப் பிடுங்கினார் எம்.பி-யான செம்மலை. '' 'தோல் இருக்க, பழம் முழுங்கி!’ன்னு சொல்வாங்க. ஆனா, ராசாவோ பழத்தோடு சேர்த…
-
- 0 replies
- 406 views
-
-
தன் மகன் காந்தியை ஒரு நல்ல பேச்சாளராக்க வேண்டும்’ என நினைத்தார் தி.மு.க-வில் ஸ்டார் பேச்சாளராக இருந்த இளம்பரிதி. அந்தக் கனவில், 24 வயதான தன் மகனை வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேடை ஏற்றினார். காந்தி அந்த மேடையில் பொளந்து கட்ட... மு.க.ஸ்டாலின், அவர் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்! ஸ்டாலினின் அறிமுகம் காந்திக்குக் கிடைக்க... தி.மு.க-வில் எல்லோருக்கும் அறிமுகமானார் காந்தி. 'உனக்கு இந்தப் பேர் சரியில்லையே. மாத்திடலாமா?’ கருணாநிதி கேட்க... பவ்யமாகத் தலை அசைத்தார் காந்தி. 'இனி உன் பேர் பரிதி இளம்வழுதி!’ என்று பெயர் சூட்டினார் கருணாநிதி! 1984 தேர்தலில் பெரம்பூர் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக பரிதி இளம்வழுதி அறிவிக்கப் பட்டார். 25 வயதிலேயே தேர்தலில்…
-
- 0 replies
- 318 views
-
-
தன் மகன் காந்தியை ஒரு நல்ல பேச்சாளராக்க வேண்டும்’ என நினைத்தார் தி.மு.க-வில் ஸ்டார் பேச்சாளராக இருந்த இளம்பரிதி. அந்தக் கனவில், 24 வயதான தன் மகனை வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேடை ஏற்றினார். காந்தி அந்த மேடையில் பொளந்து கட்ட... மு.க.ஸ்டாலின், அவர் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தார்! ஸ்டாலினின் அறிமுகம் காந்திக்குக் கிடைக்க... தி.மு.க-வில் எல்லோருக்கும் அறிமுகமானார் காந்தி. 'உனக்கு இந்தப் பேர் சரியில்லையே. மாத்திடலாமா?’ கருணாநிதி கேட்க... பவ்யமாகத் தலை அசைத்தார் காந்தி. 'இனி உன் பேர் பரிதி இளம்வழுதி!’ என்று பெயர் சூட்டினார் கருணாநிதி! 1984 தேர்தலில் பெரம்பூர் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக பரிதி இளம்வழுதி அறிவிக்கப் பட்டார். 25 வயதிலேயே தேர்தலில்…
-
- 0 replies
- 370 views
-
-
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை நியமனம் செய்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை, மத்திய அரசின் அதிக அதிகாரம் கொண்ட 3 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள் என்றும் இதில் சுஷ்மா சுவராஜ் மட்டும் தாமசின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் தெ…
-
- 0 replies
- 258 views
-