உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அரேபியர்களைத் திகைக்கச் செய்திருக்கும் பாடல் ஆண்களையும் ஆணாதிக்கத்தையும் விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரேபியப் பாடல் காட்சியொன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கவலைகள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் காணொளி, பெண்களைக் கட்டுப்படுத்தும் சவுதி அரேபிய அரசின் சட்டங்கள் கேலிசெய்யும் வகையில் அமைந்துள்ளன. சவுதியில் பெண்கள் கார் செலுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கேலி செய்யும் வகையில், பெண்கள் அடங்கிய கார் ஒன்றை சிறுவன் ஒருவன் செலுத்துவது, பொம்மைக் கார் ஒன்றை ஒரு பெண் செலுத்துவது, சக்கரங்கள் பொருத்திய காலணிகளைப் பெண்கள் அணிந்துகொண்டு வீதியில் சுற்றிவருவது போன்ற மேலும் பல காட்சிகளும் அமை…
-
- 1 reply
- 695 views
-
-
தங்கள் நாட்டை ரகசியமாக உளவு பார்த்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிரிட்டனிடம் ஜேர்மனி கேட்டுக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் இருந்து இணையத்தின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை பிரிட்டனின் உளவு அமைப்பு கடந்த 18 மாதங்களாக பதிவு செய்து வந்துள்ளது. அதாவது தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் என அனைத்தையும் பிரிட்டன் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜெர்மனி சட்டம், நீதித்துறை அமைச்சர் சபினி லியுத்யூசர் கூறுகையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஜேர்மானியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இப்படிச் செய்வதற்கு எந்த நாட்டு சட்டத்திலும் இட…
-
- 0 replies
- 460 views
-
-
சிவசங்கர் மேனனைத் தெரியும் தானே. மேனனும், நாராயணனும் சேர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் செய்தவற்றை கதை கதையாகச் சொல்லலாம். ஆனால் மேனனுக்குப் பதிலாக வரும் நிருபமராவூம் லேசுப்பட்டவர் அல்ல. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக இருந்தவர் இவர். Nirupama Rao to replace Menon as foreign secretary NEW DELHI: India’s ambassador to China Nirupama Rao has been named the next foreign secretary to succeed Shivshankar Menon who retires on July 31. The government on Tuesday announced that the 1973 batch IFS officer will take over the foreign secretary’s post from Mr Menon, who has had a three-year-long stint as foreign secretary. Ms Rao has served in a number of key position…
-
- 4 replies
- 1.5k views
-
-
60 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கோரி தெலுங்கு தேசம் போராடியது.. இன்று பிரிவினைக்காக போராடுகிறது.. அத்துடன் எது தலைநகர் என்ற கோஷமும் உச்ச சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது.. இது 60 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்த கதைதான்.. பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்தைத் தொடர்ந்து உதயமானது ஆந்திரபிரதேச மாநிலம்.. ஆனால் அத்துடன் ஓய்ந்துவிடவில்லை விவகாரம்... தெலுங்கு பேசும் மக்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டனர். அன்று சென்னை ஆம்.. சென்னைதான் ஆந்திராவின் தலைநகரம் என்று முழக்கம் எழுப்பினர்.. அப்போது மிகவும் பிரபலமான கோஷம் ' மதராஸ் மனதே!".. அதாவது வடசென்னை ஆந்திராவின் தலைநகராகவும் தென்சென்னை 'சென்னை மாகாணத்தின்' தலைநகராகவும் இருக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஆனா…
-
- 2 replies
- 715 views
-
-
இன்றைய (20/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரான்ஸின் அடுத்த அதிபராக வரக்கூடியவர் யார் யார்? தேர்தலில் போட்டியிடும் நான்கு முன்னணி வேட்பாளர்கள் யார்? அவர்களின் நிலப்பாடுகள் என்ன? விளக்குகிறது பிபிசி. * அரசியல்வாதிகள் தங்களை கைவிட்டுவிட்டதாக குமுறும் பிரெஞ்சு வாக்காளர்கள்; இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவை திசைமாற்றுமா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு * உலக எரிமலைகள் அனைத்தையும் கண்காணிக்க புதிய வழி கண்டுபிடிப்பு; ஏழைநாடுகளின் எரிமலைகளை சுற்றிவாழ்பவர்களின் உயிர்காக்க உதவுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை.
-
- 0 replies
- 274 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயார்: - எந்த நாடுகள் தெரியுமா? [Friday 2017-05-05 15:00] அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொள்ளவிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயண அட்டவணை தயாராகியுள்ளது. அதன்படி இஸ்ரேல், வாடிகன், சவுதி அரேபியாவுக்கு அவர் செல்லவிருக்கிறார்.இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவர் இந்தப் பட்டியலில் உள்ள இடங்களுக்குச் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ட்ரம்பின் வெளிநாட்டுப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.முன்னதாக நேற்று ஜனாதிபதி ட்ரம்ப் பாலஸ்…
-
- 0 replies
- 323 views
-
-
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் சட்டவிரோத வேட்டை காரணமாக அங்கேயிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக வன உயிர் பாதுகாப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறையைத் தின்ன போட்டியிடும் கழுகு சட்டவிரோத வேட்டையை வன அதிகாரிகள் கண்டுபிடிக்கக் கூடாது என்ற நோக்கில், சிலர் கொல்லப்பட்ட யானைகள், காண்டாமிருகங்கள் போன்றவற்றின் உடல்களின் விஷத்தை செலுத்திவிடுகின்றனர். பொதுவாக இறந்த மிருகங்கள் இருக்கும் இடத்தின் மேல் கழுகள் மற்றும் பருந்துகள் வட்டமிடும். இதைவைத்து, குற்றம் நடந்த இடத்தை வனக்காவலர்கள் எளிதில் கண்டுபிடிப்பார்கள். இப்போது உலகில் 10 ஆயிரத்துக்கும் குறைவான கேப் கழுகுகள்தான் இருக்கின்றன. விஷம் வைக்கப்பட்ட ஒரு யானையின் உடல், 600 கழுகுகளைக் கொல்லக் கூடியது. இது …
-
- 0 replies
- 341 views
-
-
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தா அமைப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதேசமயம் ஏமனுக்கு உதவி செய்து வரும் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் மூலம் அல்கொய்தா அமைப்பினை அழித்து வருகிறது. இந்நிலையில் தெற்கு ஏமனில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்கொய்தா தாக்குதல் நடத்தினர். அல்-நஷாமாவில் உள்ள முகாமில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 48 வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். மேபாவில் உள்ள முகாமில் இன்று அதிகாலையில் துப்பாக்கியுடன் புகுந்தவர்கள் சரமாரியாக சுட்டதில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர். அரேபிய தீபகற்பத்தை சேர்ந்த அல்கொய்தா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித…
-
- 0 replies
- 441 views
-
-
லா பால்மாவில் எரிமலை வெடிப்பு: 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்! ஸ்பானிய கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் எரிமலை வெடித்ததில் வீடுகள் அழிக்கப்பட்டு, சுமார் 5,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கும்ப்ரே வீஜா எரிமலையில் இருந்து வரும் லாவா நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வெடித்ததில் இருந்து இதுவரை சுமார் 100 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், மீட்புப் பணிகளைக் கண்காணிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் லா பால்மாவுக்குச் சென்றார். எரிமலை எரிமலையில் இருந்து ஏற்படக்கூடிய தீயை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார். இராணுவம் மற்றும் சிவில் காவலர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 208 views
-
-
வரும் திங்கள்கிழமை உலகையே அதிர வைக்கும் முடிவு வெளியிடப்படுகிறது.. நாசா அதிகாரபூர்வமாக அறிவிப்பு..! 9 mins ago பிரபஞ்சத்தில் மனிதர்களாகிய நாம் மட்டும் தனியாக இல்லை என்பதை நிரூபிப்பதற்கான முதல் தடயங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தேடி வருகிறது. சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிரினம் வாழக்கூடிய அம்சங்களைக் கொண்ட கிரகங்கள் இருக்கிறதா என்பதை கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி கொண்டு ‘நாசா’வின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள். உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக் கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த பிரபஞ்சத்தில் பூமியைப் போன்ற வேறு கிரகங்கள் உண்டா? அந்த கிரகங்களில் மனிதர்களைப் போன்ற …
-
- 2 replies
- 838 views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி மீது... முட்டை வீச்சு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது அவர்மீது முட்டை வீசப்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த நபரை மடக்கி பிடித்தனர். இதேவேளை, முன்னதாக கடந்த ஜூனில் ஜனாதிபதியை ஒருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241797
-
- 0 replies
- 353 views
-
-
பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் மாடிக் குடியிருப்பில் தீ விபத்து – தீயணைக்கும் இந்திரங்களுடன் பணியாளர்கள் களத்தில்:- பிரித்தானியாவின் Bethnal Green பகுதியில் இன்று மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதாக திரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்த தீவிபத்தை கட்டுப்பாட்டுள் கொண்டுவர 10 தியணைப்பு யங்திரங்களுடன் 72 தீயணைக்கும் படை வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தி வெளியாகும் நேரத்தில் சுவாசி்பதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். FacebookTwitterGoogle+Teilen http://globaltamilnew…
-
- 0 replies
- 251 views
-
-
குர்துப் படையினர்... தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க, அமெரிக்கா- ரஷ்யா தவறிவிட்டது: துருக்கி! சிரியாவில் குர்துப் படையினர் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க அமெரிக்காவும் ரஷ்யாவும் தவறிவிட்டதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் காவுசோகுலு கூறுகையில், ‘துருக்கி மீது சிரியாவின் குர்துப் படையினர் அண்மையில் நடத்தியுள்ள தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் பொறுப்பேற்க வேண்டும். காரணம், எங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் குர்துப் படையினரைக் கட்டுப்படுத்தப் போவதாக அளித்த வாக்குறுதியை அவர்கள் மீறிவிட்டனர். குர்துப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சிரியா எல…
-
- 0 replies
- 291 views
-
-
சிங்கப்பூரில் மரண தண்டனை: அறிவுசார் மனநல பாதிப்புள்ள மலேசிய இளைஞரை காப்பாற்றத் துடிக்கும் குடும்பம் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHARMILA படக்குறிப்பு, நாகேந்திரன் தர்மலிங்கம் "உங்கள் மகன் நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை நவம்பர் 10, 2021 அன்று நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்." - சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இருந்து வந்துள்ள இந்தக் கடிதம் மலேசியாவில் உள்ள ஒரு குடும்பத்தை துயரக்கடலில் மூழ்கடித்துள்ளது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, தூக்குத் தண்டனையை எதிர்நோக…
-
- 8 replies
- 838 views
- 1 follower
-
-
கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களில் தொடர்புடைய 7,939 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. கைது செய்யப்பட்டவர்களில் தேசிய உளவுத் துறை மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் கரீம் மசிமோவும் ஒருவர் ஆவார். இதுதவிர, நாடு முழுவதும் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபை நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது. …
-
- 0 replies
- 282 views
-
-
அமெரிக்காவில் நியூஜெர்சி நகரின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதி அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்றையதினம் நள்ளிரவில் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.இந்த சம்பவத்தில் 13 வயது சிறுமி, 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக நியூயார்க் நகர போலீஸ் இயக்குனர் சாமுவேல் தெரிவித்தார். மேலும் 2 பேர் குண்டு காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்கள் யார்? சம்பவத்துக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=100042&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 396 views
-
-
ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு பகிர்க வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது. வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து'' என்று வர்ணித்துள்ளார். அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட …
-
- 2 replies
- 748 views
-
-
உக்ரைன் யுத்தம்: வரலாற்றுப் பின்னணியும் நிகழ்கால விபரீதமும்! மின்னம்பலம்2022-02-25 சைபர் சிம்மன் ஆகாயம், நிலம், கடல் ஆகிய மூன்று மார்க்கங்களின் வழியாகவும் ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலைத் தொடங்கியதை அடுத்து, ஐரோப்பாவும் ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியிலும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. அண்டை நாடான உக்ரைனைத் தாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ரஷ்யா மாதக்கணக்கில் மேற்கொண்டு வந்தாலும், அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று சொல்லிவந்ததை மீறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சிறப்பு நடவடிக்கை எனும் பெயரில் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்வோம் என உக்ரைன் அறிவித்துள்ள நிலையில் போரும் பாதிப்பும் தீவிரமாகும் என்றே அஞ்சப்படுகிறது.…
-
- 0 replies
- 333 views
-
-
உக்ரைனிலுள்ள இரசாயன ஆலை மீது... ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: அம்மோனியா கசிவினால் மக்கள் அச்சம்! உக்ரைனின் வடகிழக்கு நகரான சுமிக்கு அருகில் உள்ள இரசாயன ஆலையில் ரஷ்ய ஏவுகணை தாக்கியதால் ரஷ்ய ஏவுகணை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால், சுமிக்கு அருகில் உள்ள நோவோசெலிட்ச் வசிப்பவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலால் 50 டன் எடையுள்ள விஷ வாயு தொட்டி சேதமடைந்ததாக பிராந்தியத்தின் ஆளுநர் டிமிட்ரோ ஸிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார். இது அம்மோனியா மேகத்தை உருவாக்கியது. மேகம் சுமார் 2.5 கிலோ மீற்றர் (1.5 மைல்) பகுதியை பாதித்தது. சுமிகிம்ப்ரோம் இரசாயன ஆலையில் அவசர பணியாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். அ…
-
- 0 replies
- 182 views
-
-
மத்திய மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 19பேர் உயிரிழப்பு- பலர் காயம்! மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் உள்ள லாஸ் டினாஜாஸ் நகரத்தில் ஒரு கூட்டத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. துப்பாக்கி ஏந்தியவர்கள் சேவல் சண்டைக் குழிக்குள் நுழைந்து பங்கேற்பாளர்களை நோக்கிச் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்டவர்களில் 16 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக மாநி…
-
- 0 replies
- 320 views
-
-
எதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) !! 16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா? அப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் க…
-
- 0 replies
- 534 views
-
-
http://www.youtube.com/watch?v=oAFXMO53d4w சோனியா காந்தி அப்பன் பெயர் தெரியாதவராம்..........
-
- 1 reply
- 553 views
-
-
இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மீது தேசதுரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் ஒன்றின்போது பகையாளி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார்கள் என்பதற்காக இவர்கள் மீது இக்குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்ற வாரக் கடைசியில் ஆசியக் கோப்பை ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணியினர் இந்தியாவைத் தோற்கடித்ததை அடுத்து உத்தரப் பிரதேசத்தின் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்று வந்த அறுபதுக்கும் அதிகமான மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தனர். தேசத்துக்கு எதிரான செயலில் அம்மாணவர்கள் ஈடுபட்டனர் என்று கூறி அப்படியான ஒரு குற்றச்சாட்டு அவர்கள் மீது கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர். இந்தக் குற்…
-
- 2 replies
- 623 views
-
-
வெறும் கையை வீசிக்கொண்டு வந்த சோனியா உலகின் 6வது பணக்காரர் ஆனது எப்படி? - மேனகா காந்தி கேள்வி. [saturday, 2014-03-22 17:45:53] பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவரும், தனது அக்காள் முறையானவருமான சோனியாவை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:– சோனியாகாந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்ட…
-
- 3 replies
- 1.4k views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வயதான முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கணையான அலினா கபயெவாவுடன் இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரது திருமண வாழ்வு முறிவடையலாம் என கடந்த பல வருடங்களாக ஊகிக்கப்பட்டு வந்தது. லையுட்மிலாவுடனான விவாகரத்தை புட்டின் உறுதிப்படுத்தியதையடுத்து அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்த லையுட்மிலாவின் (56 வயது) சுயவிபரங்கள் அகற்றப்பட்டிருந்தன. புட்டினின் இரு மகள்மார் என மரியா மற்றும் கதரினாவின் பெயர்கள் குறி…
-
- 9 replies
- 860 views
-