உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகள் சேதம்-ஒலிம்பிக் விழாவிற்கு பாதிப்பா? பிரான்சின் பல்வேறு பகுதிகளில் அதிவிரைவு புகையிரம் செல்லும் பாதைகளில் மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர் தண்டவாளத்தை சேதப்படுத்துதல், தீவைத்தல் போன்ற சம்பவங்களால் புகையிர போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல புகையிரதங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவங்களுக்கு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இது ஒலிம்பிக் விழாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1393721 ############ ################# …
-
- 0 replies
- 240 views
-
-
அதிவேக ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த குட்டி விமானம் நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது. ரியாத்: எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அரபிக்கடலின் மீது சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட்…
-
- 0 replies
- 495 views
-
-
ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணித்து தொலைதூர இலக்குகளை மிக துல்லியமாக தாக்கவல்லது என்று அமெரிக்க பென்ரகனால் வர்ணிக்கப்படும் அணு ஆயுதங்கள் உட்பட பேரழிவாயுதங்களை தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணையை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை.. அமெரிக்க ஹவாயில் இருந்து பசுபிக்கின் அடுத்த முனையில் உள்ள ஒரு இலக்கை சுமார் 3700 கிலோமீற்றர்கள் தூரத்தை வெறும் 30 நிமிடங்களுள் பயணித்து தாக்கி அழித்து இந்தப் பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவியுள்ளது. அண்மையில் தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பில் சீனாவும் அமெரிக்காவும் நேரடியாக முறுகிக் கொண்டுள்ள நிலையில் இந்தப் பரிசோதனை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே பிற நாடுகள் பேரழிவு ஆயுதங்களையும்.. ஏவுகணைகளைய…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. Jump media playerMedia player helpOut of media player. Press enter to return or tab to continue. null ஃபூஜி மலைப் பகுதிக்கு அருகே நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 603 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும். தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம்…
-
- 0 replies
- 360 views
-
-
'அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்': அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் லியோனிங் கட்டுரை தகவல் Laura Bicker China correspondent Dalian, China 2 மணி நேரங்களுக்கு முன்னர் "சோசலிசம் நல்லது..." என்று மைக்கைப் பிடித்து ஓய்வூதியதாரர் ஒருவர் பேசுகிறார். அவரது குரல், அவரது நண்பர்களின் அரட்டை சத்தத்தில் குறைவாக கேட்கிறது. ஆனால் அவர்களும், அவருடன் சேர்ந்து, "கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பாதையில் சீனாவை வழிநடத்துகிறது!" என்று முழங்குகிறார்கள். இது பிரபலமான பாடல் அல்ல. ஆனால் அவர்கள் நின்று கொண்டிருக்கும் டாலியனின் சுயோயுவான் பூங்காவிலிருந்து பாடுவதற்கு பொருத்தமான…
-
-
- 1 reply
- 410 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=qC2eF0L-QAA இக்குழந்தை சிறு காயத்துடன் உயிர் தப்பி விட்டது.
-
- 2 replies
- 1.9k views
-
-
சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில். சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தி…
-
- 9 replies
- 4k views
-
-
ஓராண்டு மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் எல்லையை கடந்து ஆயிரக்கணக்கான வெனிசுவேலா மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கொலம்பியா செல்ல ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையால் கடுமையான பொருளாதார நெருக்கடியை வெனிசுவேலா சந்தித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்கள் என்று அது கூறியவற்றுக்காக வெனிசுவேலா முன்னதாக எல்லையை மூடியிருந்தது. ஜூலை மாத்ததில் சில நாட்கள் எல்லையை கடக்க அனுமதிக்கப்பட்டபோது, சமையல் எண்ணெய், சர்க்கரை, மற்றும் அரிசியை வாங்கி சேமித்து கொள்ள இலட்சக்கணக்கான வெனிசுவேலா மக்கள் எல்லையை கடந்து சென்றனர். கடந்து செல்லும் முக்கிய நிலை ஒன்றில் அதிகாலைக்கு முன்னரே நீண்ட வரிசையில் காத்திருந்த வெனிசுவேலா மக்களை, “இரு நாடுகளும் ச…
-
- 0 replies
- 413 views
-
-
அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு! ஜெர்மனின் மியூனிக் விமான நிலையத்தில் வியாழக்கிழமை (02) மாலை சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்ததை அடுத்து, விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, 17 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதுடன், ஜெர்மன் நகரில் சுமார் 3,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன், மியூனிக் விமான நிலையம் மேலும் 15 விமானங்களை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மியூனிச்சில் தரையிறங்க வேண்டிய விமானங்களை ஸ்டட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி அனுப்பி விடப்பட்டன. ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்படாத நிலையி…
-
- 0 replies
- 194 views
-
-
அத்துமீறும் சீனா – வலுக்கட்டாயமாக வெளியற்றப்படும் ஆபிரிக்கர்கள் சீனாவில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட்ட ஆபிரிக்கர்கள் அவர்களது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை ஆட்கொண்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் குறித்த வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவில் அதன் பாதிப்பு மிக வேகமாக குறைவடைந்து ஹூபே மாகாணம் உள்ளிட்ட முழு நாடும் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் மீண்டும் அந்நாட்டில் பரவாமல் இருக்க சீன அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீனாவில் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த ஆபி…
-
- 0 replies
- 387 views
-
-
டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங். அத்வானியின் எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் நாளையே மோடி பெயரை அறிவிக்க அவர் தீர்மானித்துள்ளாக லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. அத்வானியை இந்த விஷயத்தில் அவரால் சமாதானப்படுத்த முடியாமல் போன நிலையில் தற்போது சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து ஒருமித்த கருத்தை விரைவாக எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மோடி விவகாரம் டெல்லியில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைவருடனும் பேசி வருவதாகவும், விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியு…
-
- 0 replies
- 356 views
-
-
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் அடைந்த திருப்திக்கு முடிவே இல்லை. ஆனால், அண்மையில் கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பேயிஜி ஆகிய தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்தக் கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.…
-
- 7 replies
- 761 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என பாரதிய ஜனதா கட்சியும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் முட்டுக்கட்டைகளையும் மீறி ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களில் ஒருவரான இருந்தவர் நரேந்திர மோடி. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாக வலம் வந்தவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர். கடந்த சில ஆண்டுகளாக நரேந்திர மோடியின் விஸ்வரூபமானது அவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. ராஜ்நாத்சிங், பாஜகவின் தலைவரான பின்னர் மோடி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றார். பின்னர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபா…
-
- 0 replies
- 361 views
-
-
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாத அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. ஆனால், அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நேற்றிரவு பா.…
-
- 2 replies
- 566 views
-
-
புதுடெல்லி: மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 'சட்டவிரோத’ அரசு என்று பா.ஜனதா தலைவர் அத்வானி பேசியதால் காங்கிரஸ் தலைவர் சோனியா கடும் ஆவேசமடைந்தார். மக்களவையில் இன்று அசாம் கலவரம் மற்றும் சுரங்க ஊழல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, மத்திய அரசு ஒரு சட்டவிரோத அரசு என குற்றம்சாட்டினார்.அத்வானி இவ்வாறு கூறியதும் சோனியா கடும் ஆவேசமடைந்து,தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.அதனை தனது முக பாவனை மூலமும் அவர் வெளிப்படுத்தினார். மேலும் அத்வானியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு அவர் தனது கட்சி எம்.பி.க்களுக்கு கண் ஜாடை காட்டினார். திரும்ப பெற்ற அத்வானி இதனைய…
-
- 1 reply
- 916 views
-
-
அத்வானி மீது செருப்பு வீச்சு : மத்திய பிரதேசத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 4/16/2009 2:33:29 PM - பாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால், அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ, செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி வி…
-
- 3 replies
- 1.4k views
-
-
அத்வானியின் ராஜினாமா விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு குறிவைத்தே அவர் இந்த ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக அத்வானியின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் பதவி பிரதமர் பதவி மீது அத்வானிக்கு இருக்கும் தீரா காதல் நாடறிந்த ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதிலும், அதற்கு முன்னதாக அந்த பதவிக்கு வர துடியாய் துடித்தார் அத்வானி. ஆனால் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால் அத்வானி மீது படிந்த தீவிர இந்துத்துவா தலைவர் என்ற இமேஜ் அதற்கு வில்லனாய் அமைந்தது. அத்வானியை பிரதமராக ஏற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், மிதவாத முகமூடி கொண்ட வா…
-
- 0 replies
- 381 views
-
-
அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…
-
- 1 reply
- 1.1k views
-
-
டெல்லி: பாஜகவிலிருந்து தூக்கப்பட்டு விட்டமூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி நரேந்திர மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார் என்றும் அத்வானியால் தனக்குத் தேவையான ஆதரவைத் திரட்ட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஜெத்மலானி கூறுகையில், பிரதமர் வேட்பாளருக்கு மோடிதான் பொருத்தமானவர், சரியானவர். அவர் ஒரு அவதாரம் போன்றவர். நிதர்சனம் புரிந்து நடக்க அத்வானி முன்வர வேண்டும்.அவரால் தேவையான ஆதரவைப் பெற முடியாது. பிரதமர் வேட்பாளர் போட்டியில் மோடியே வெல்வார். அத்வானியால் வெல்ல முடியாது. http://tamil.oneindia.in/news/india/modi-is-the-best-option-bjp-s-pm-cadidate-advani-183336.html
-
- 2 replies
- 678 views
-
-
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பாஜக தலைவரும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மக்களின் மனநிலையை உணர தவறிவிட்டார் அத்வானிஜி. அடல்ஜியை பிரதமர் வேட்பாளராக அத்வானிஜி தான் அறிவித்தார். அதே போன்று தற்போது மோடியின் பெயரையும் அறிவிக்கலாமே. அரசியலில் மட்டும் தான் கடைசி வரை மக்கள் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவி ஒரு இறந்த அரசியல்வாதியை உயிர்ப்பிக்குமா? என…
-
- 0 replies
- 391 views
-
-
அநியாயம் ஆனால் உண்மை மேலே படத்தில் தாயாருடன் உள்ள பெண்ணின் பெயர் சமந்தா சிய்லர் வயது 21 .நான் வசிக்கும் நகரத்தில் வசிக்கின்ற ஒரு மாணவி.கடந்தவாரம் எங்கள் பிராந்தியப்பத்திரிகையான (nice matin) இவரது படத்துடன் வந்த செய்தி எங்கள் நகர மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் செய்தியினை தேவை கருதி தமிழில் தருகிறேன்.சிய்லர் ஒருநாள் பொழுது போக்காக இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்த பொழுது இணையத்தில் ஒரு விளம்பரத்தினை பார்க்கிறார். அது ஒரு இணையத்தின் மூலமான பயண முகவர் நிலையமொன்றின் ஒரு விழையாட்டு .அதில் வெற்றி பெற்றால் உலகின் பல இடங்களிற்கு ஒரு வார காலம் உல்லாசப் பயணம் போய் வருவதற்கான பயணச் சீட்டும் தங்குவதற்கான விடுதியும் பரிசாக அறிவிக்கப்பட்டு. பரிசு பெற்ற…
-
- 15 replies
- 2.8k views
-
-
அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு’ எதிராக போராட ஐ.நாவுடன் மீண்டும் இணையும்: அமெரிக்கா 25 Views உலகெங்கிலும் உள்ள “அநீதி மற்றும் கொடுங்கோன்மைக்கு” எதிராக போராடுவதற்காக, 2018 ல் டொனால்ட் ட்ரம்ப் விட்டுச் சென்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீண்டும் சேரப்போவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிக்க உள்ளார். கடந்த மாதம் பதவியேற்றதிலிருந்து அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மீட்டமைக்க அமெரிக்க அதிபர் பைடன் எடுத்த தொடர் நடவடிக்கைகளில் சமீபத்தில் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் காலத்தில் பின் இருக்கை பிடித்த கூட்டணிகளையும் சர்வதேச ஒத்துழைப்புகளையும் மீட்டெடுப்பதாக உறுதியளித்த நிலையில், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந…
-
- 1 reply
- 569 views
-
-
அநீதிக்கு ஆளான அலன் ஆனந்தன்- பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரான்சு நாட்டு கிளையின் அமைப்பாளருமான அலன். ஆனந்தன் டெல்லி வழியாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டுக்குச் சென்றபோது தடுத்து பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல் இந்திய அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டில் உள்ள டுக்னி நகராட்சியின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டின் குடிமகனாகவும் அலன். ஆனந்தன் உள்ளார். இந்தியா வந்து செல்வதற்காக அவருக்கு ஓராண்டு விசாவும் உள்ளது. கடந்த சூலை 18ஆம் தேதியன்று கோலாலம்பூர் செல்லும் வழியில் தில்லி விமான நிலையத்தில் அவர் விமானம் மாறுவதற்காக இருந்தபோது இந்திய குடியுரிமை அதிகார…
-
- 0 replies
- 901 views
-
-
அந்த 127 குழந்தைகளும் எப்படி இறந்திருக்கும்..? சிரியாவின் ரசாயனத் தாக்குதல் கதை! நின்றுகொண்டிருந்தார்கள். அவ்வளவு கவனமாக சூழலை கவனித்துக்கொண்டிருந்தார்கள். எந்த நடமாட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மணல் மூட்டைகளுக்குப் பின்னால் கனமான துப்பாக்கிகளைச் சுமந்தபடி இருந்த அவர்கள், அதிகம் பேசிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் பேசிக்கொள்ளவே இல்லை. சிலர் சில விஷயங்களைச் சைகைகளில் பகிர்ந்துகொண்டார்கள். உங்கள் கற்பனையை இன்னும் விசாலப்படுத்திக்கொள்ள இதன் காலம் உங்களுக்கு உதவலாம். இது நடப்பது ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, 1915-ம் ஆண்டு. முதலாம் உலகப் போர் சமயம். பெல்ஜியத்தின் ஈப்ரஸ் நகரம் (Ypres) . பிரெஞ்ச் மற்றும் அல்ஜீரிய ராணுவ வீ…
-
- 0 replies
- 368 views
-
-
அந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். ஒமரோசா மனிகால்ட் நியூமேன் கறுப்பர் இனத்தை சார்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒமரோசா அப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந் நிலையில் அவர் எழுதிய "அன்ஹின்ஜெட்" என்ற நூல் வெளியீடானது அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய அவர், "டிரம்ப், ஒரு இன வெறியர். தான் ஒ…
-
- 2 replies
- 610 views
- 1 follower
-