கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
சிவனெனும் பெருமான் ஓர்நாள் நகர்வலம் போனார். நடந்து நடந்தே ஊர்உலாப் போனார். தாகம் மேலிட தாகம் மேலிட "தண்ணீர்" "தண்ணீர்" சைகையில் கேட்டார். பெருமான் என்பதை ஊரறிந்தது. பஜனைகள் செய்து பக்தி கொடுத்தது. நாவுலர்ந்து போகப் போக பெருமான் "தண்ணீர்" "தண்ணீர்" நடனம் செய்தார். பக்தி மிகுந்து பக்தி மிகுந்து காணிக்கை அள்ளி ஊர் கொடுத்தது. பொன்னும் மண்ணும் பொருளுமென்று பெருமான் காலில் ஊர் குவித்தது. தாகம் மேலிட தாகம் மேலிட முடியாப்பெருமான் முடிவாய்ச் சொன்னார்... கடவுள் என்றே ஆனபோதும் முதலில் கொடுங்கள் தாகம்தீர குவளையில் தண்ணீர். - தயா ஜிப்ரான் - 03.04…
-
- 7 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 3.8k views
-
-
வானமே இல்லாத நிலவாய் தென்றலே தொடாத மலராய் எழுதப்பட்ட புத்தகத்தில் வர்ணிக்கப்படாத கவிதையாய் கண்களின் கண்ணீரைப் புரிந்து கொள்ளா உறவுகளின் சுமைதாங்கியாய் மூடநம்பிக்கையின் ஆணிவேரில் தொலைந்து விட்ட சந்தோஷங்ககளாய் இரவின் வரவிற்காய் காத்திருக்கும் அல்லிமலராய் கனவுக்குள் நிஜத்தை தோடுபவளாய் தலையணைக்கு மட்டும் தெரிந்த கண்ணீரின் ஈரத்தை சொல்ல யாருமில்லாத அவள் யார்?
-
- 9 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 722 views
-
-
கடவுள் என்ற கருத்து பிறக்க ஆலயம் என்ற கட்டிடம் எழும்ப மதம் என்ற கருத்து பிறக்க போதனையாளர் என்ற கூட்டம் கிளம்ப மாற்றுகருத்து பிறக்க மாற்று போதனையாளன் என்று கூட்டம் கிளம்ப சம்பிரதாயம் என்ற கருத்து பிறக்க சமூகம் என்ற கூட்டம் அமைய சமூகங்கள் கருத்தை உருவாக்க அவ்வுலகம் ஆத்மா பற்றிய கருத்தை மதம் போதிக்க மொழி என்ற கருத்தை குடும்பம் போதிக்க கலை,கல்வி என்ற கருத்தை பாடசாலை போதிக்க தகவல்கள்,செய்திகளை ஊடகங்கள் போதிக்க எமதுக்கு பங்கிற்கு யாழ்களத்தில் நாம் தகவலை வெட்டி ஓட்ட இவ்வளவு சோதனையும் தாங்கி நிற்கும் கருத்து உலகம்
-
- 7 replies
- 1.7k views
-
-
பெறுதல்: ஏதேனும் ஒரு கடவுள் சொர்க்கம் அனுப்புதல்: ஒரு மனிதன் பூமி. காது கேட்காத கடவுளுக்கு, காணவிரும்புபவன் எழுதுவது.... கோரிக்கைகள் பலவைத்தும் கணபொழுதும் செவிசாய்க்காமல் கல்லாய் நிற்பதனால் காது செவிடென நானே கொண்டேன்; பிறகு நான் என்ன செய்ய பரம்பொருளே? முதலில் நாமொரு முடிவுக்கு வருவோம்; நம்மில் சிறந்தவர் யார்? முன் ஆதியில் நீயொரு மனிதனை படைத்தாய் பின்பாதியில் நாங்கள் பலகடவுள்கள் படைத்தோம், உதடுகளை திறந்து உண்மைகளை சொல் நம்மில் சிறந்தவர் யார்? மறைந்திருக்கும் பொருளுக்கு மதிப்பதிகம் என்பதால் புலப்படாத உன்னை பெரியவனாக கொள்கிறேன். உலகத்தை படைத்தாய் சரி உடனே தூக்கிஎரிந்தோட உலகம் என்ன உனக்கு உசிலம்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
பட்டாம் பூச்சியின் கனவு மனம் வலிக்கிறது. சம்பிரதாயச் சடங்கின் வடிவில் கழுத்தை சுற்றிப் பொன்நாகம் பளபளக்கிறது. அவளுக்கு கட்டாயக் கைதும், விலங்கு மாட்டலும்.. உடல் அவளுக்கானதாக இல்லை. முதல் முத்தம், முதல் தழுவல் வலியாக.. ஒரு படர்கையின் கனத்தில் பெண்மை நொறுங்கிப் போனது. அவள் சுயம் மறுக்கப்பட்டது. குரல் ஒடுக்கப்பட்டது. இன்னொரு வடிவம் அவளுள் சங்கமிக்க அவள் அனுமதியின்றி எல்லாம் ஆகிவிட்டது. நீளும் ஒவ்வொரு இரவிலும் சுயம் ஏளனப்படுத்தப்படுகிறது இரவுகள் விடியும் ஒவ்வொருகணமும் படர்ந்த இன்னொரு வடிவம் வெற்றிக் களிப்பில் நெஞ்சு நிமிர்த்துகையில் அவள் மனதில் படிந்தவலி விசுவரூபம் எடுக்கிறது. உள்ளக்கிடக்கையில் கிடந்துழலும் சுயம் அடிக்கடி பீற…
-
- 10 replies
- 2.6k views
-
-
வரமான பூச்சரங்கள் அள்ள அள்ளக் குறையாத அன்புமனம் உனக்கு மட்டும் யார் தந்தது? அதனால் அம்மா நீ மட்டும் அதிசயமானவள் அன்புச் சுரபியை அமுதசுரபியாக இறைவன் இலவசமாக உன் அகத்தில் அர்ப்பணித்து விட்டானா? ஆயிரம் தடவைகள் உன் பெயரை என்அதரங்கள் உச்சரித்தாலும் அலுக்காத ஒருவார்த்தை அகிலத்தில் உண்டென்றால் அது அம்மா என்னும் அமுத மொழிதான் வசை பாடும் இதயங்களையும் வாழ்த்தும்படி உனக்கு வரமளித்தவர் யாரம்மா? உன் கண்களுக்குள் கருணையையும் மனதுக்குள் மென்மையையும் தந்த இறைவன் கோபத்தை மட்டும் குத்தகை எடுத்துக் கொண்டானோ? உன் கண்டிப்பில் கலையாத நாம் உன் கண்ணீரில் கரைந்து போவது நிஜம் நீ ஒரு தேவதை உன் தேன்மோழியோ வான்மழை என் மழலைகளுக்கு நான் அம்மா இருந்தும…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜம்முபேபி நிலாக்காவின் பிறந்ததினத்தை மறந்து நின்ற பொழுது எதிர்பாராத நாளில் யாழில் வெண்ணிலாவின் பிறந்ததினம் என்பதை அறிந்து மறாந்துபோயிட்டேன் என ரொம்ப ரொம்ப கவலைப்பட்டு நின்ற ஜம்முபேபியை ஆறுதல் படுத்த நான் அடைந்த கஸ்டத்தை என்னவென சொல்ல முடியும்? ஜம்முபேபிக்காக என் அன்பளிப்பு கவிதை
-
- 21 replies
- 3.3k views
-
-
எட்டுத் திக்கும் முட்டிப் பொங்கு! உறவுக் கொடியே உணர்வைப் பொங்கு! எழுந்தது ஈழக்கொடியது என்று எழுகைத் தமிழே உரத்துப் பொங்கு! இன்னல் தன்னை இடித்துப் பொங்கு! இமயம் கொண்ட தாகம் பொங்கு! இனிவரும் காலம் தமிழரின் கோலம் உயரும் உயரும் பொங்கு! அண்ணன் காட்டிய பாதையிலே - எங்கள் அன்னையைக் காக்கும் விதி செய்வோம். (எட்டுத் திக்கும்) கொற்றத் தமிழே கூவிப் பொங்கு! சுற்றம் கூடி ஆளப் பொங்கு! செங்களம் வந்த சிங்களத் திட்டம் வேங்கையின் முன்னால் வீழ்ந்திடப் பொங்கு! தாயகத் துயரெல்லாம் தீ விழும் தமிழரின் பூமியில் அழகேறும். (எட்டுத் திக்கும்) திக்குத் திக்காய் தமிழே பொங்கு! தேசப்பாடல் பாட…
-
- 1 reply
- 1k views
-
-
மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு மகளீருக்கு மட்டும் அனுமதி தொலைகாட்சியில் ஒளிபரப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன் சுவாமி தரிசனம் நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர் ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 960 views
-
-
வேர்களை நினைந்தழுதபடியே தூங்கிப்போன நீண்ட ஒரு துயரநாளின் நடு நிசியில் தூக்கம்களுக்கிடையே கனவுகளின் வீதியில் கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த ஊரை எரிக்கும் நினைவுகளை பின்தொடர்ந்தேன்... கழுகளுக்கஞ்சிய கண்களில் மிரட்சியுடன் சேதி சொல்லி அழைத்துச்சென்ற நினைவுகளின் கரங்கள் எல்லாவற்றிலும் தழும்புகள் நிறைந்து கிடந்தன... ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும் சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன... உற்றுப்பார்க்கிறேன்.. ஈழத்து இதிகாசங்களில் எழுத்தப்பட்ட பெயர்கள் எச்சங்களைத் தேடியவாறு.. முகவரி கொடுத்தவர்களின் எச்சங்களின் முகங்கள் எல்லாம் வறுமைக் குழிகளுக்குள் அடித்த சுழிகளுக்கிடையே செத்தழிந்துகொண்டிருந்தன.. …
-
- 29 replies
- 4k views
-
-
குளிர் காற்று… சுற்றிலும் மழை… என்னவள் நினைவோடு ஆற்றங்கரையில் நடை.. கையிலே ஓர் குடை… கதவற்ற ஓர் குடிசை… என்னவள் நினைவு என்மனது வாட்ட… கால்களோ மணலிலே புதைந்து போக… குளிர்காற்றும் வெப்பம் தேட… என்னவள் கைப் பற்றினேன் .. இறுக்கியே பிடித்துக் கொண்டேன்… குளிர் வாட்டி எடுத்தது… கட்டியே அணைத்துவிட்டேன்… பின்னர்தான் தெரிந்தது… வயதான பாட்டி என்று… குளிருக்கு சூடு கொடுத்ததற்காய் நன்றி சொல்லிச் சென்றாள் அந்த வயதான பிச்சைக்காரி …. www.nilavan.tk
-
- 0 replies
- 500 views
-
-
சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது க…
-
- 2 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய் வீரத்தின் உள்ளக் குமுறல்கள் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி உடுக்க உடையின்றி ஊனுக்கு மருந்தின்றி உள்ளம் ஒன்றே உறுதியென்று உயிரை தம் உடலுள் புதைத்து வாழ்ந்தால் மானத்துடன் வாழ்ந்திடுவோம் அஃதின்றேல் அழிந்திடுவோம் அரக்கன் சிங்களவன் உலகத்துணைகொண்டு நெருங்கி வந்து தடைகொண்ட ஆயுதத்தால் போர்விதி மீறி அழித்தபோது மௌனித்த இவ்வுலகில் வாழ்வென்னும் வளம் ஒன்று தேவைதானா? ஈழமது எங்கள் தேசம் அதில் சுதந்திரமா வாழ்வது தான் எங்கள் தாகம் இன்றேல் நீதியற்ற உலகத்திலே இதுவே நீதியற்ற விதியென்றால் எம்முயிரை மாய்ப்பது எங்கள் திண்ணம் முள்ளிவாய்தனில் எழு அழுவோசை காப்பாற்று காப்பாற்று எனும் அபயக்குரலெல்லாம் வானெழுந்து உலகமெல்லாம் ஒலித்தபோது …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஏய் சுதந்திரமே உன்னை எம்மால் தொட அகிம்சையாளும் முடியவில்லை ஆயுதத்தினாலும் முடியவில்லை ஆகவே வேண்டாம் நீ என ஒதுங்கிட முட்கம்பி அகதியல்ல புலம்பெயர் அகதி நாம்
-
- 1 reply
- 624 views
-
-
தேநீர் கவிதை: சுடரின் நெருப்பொன்று... ஒரு தீபத் திரியிலிருந்து இன்னொரு திரியை சுடர்விக்கும் நெருப்பென்பது வளர்கின்றதா... தேய்தலடைகிறதா? தீயைப் பயிரிட்டு வெளிச்ச அறுவடை. முதல் சுடரின் பிள்ளைகளெனலாமா மற்றவற்றை இல்லை நகல்களா... ஒற்றைச் நெருப்பில் ஏற்றிய ஆயிரம் சுடர்களின் தீ ஒன்றா பலவா இன்னொரு விளக்கை உயிர்வித்த சுடரின் நெருப்பு அடையும் மரணமென்பதும் மரணமாயிருப்பதில்லை... ஒதுங்க …
-
- 0 replies
- 934 views
-
-
பூத்திருந்த பாவையரும் காத்திருந்த காளையரும் கடிமணம் கொண்ட காலம் என்னவோ கம்பன் காலம் தான்_இன்று இருமனங்கள் இணைவதல்ல இருபணங்கள் இணைவதே திருமணம் அம்மிமிதித்து அருந்ததி பார்க்கும் திருமணத்தின் அரங்கேற்றம் என்னவோ அஞ்சாறு மில்லியனில் தான் மண்டபம் எடுத்து மணவறை கட்டி மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி கொடுத்து மாற்று மோதிரம் கொடுத்து முப்பதுபவுண் தாலி கூறையுடன் மூக்குமின்னிவரை பெண்பெற்றவர் கொடுத்து முடிந்தால் மோட்டார் வண்டியும் கொடுத்து மாலையிட வேண்டும் மங்கைக்கு இத்தனையும் செய்திட பெற்றவர்கள் சிந்துவது வியர்வையல்ல ரத்தமே எத்தனை ஆண்களுக்கு தெரியும் திருமணச் சந்தையில் விலைபோகும் கடாக்கள் தான் நாம் என்று... அதிகம் படித்தால் அதிகம் சீ…
-
- 11 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=OCsAMIe_kdY&NR=1 Thank you! for C S Baskaran
-
- 1 reply
- 1k views
-
-
தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால் ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்…
-
- 1 reply
- 514 views
-
-
தேநீர் கவிதை: வேனல் கோடையின் வாசனையை வேப்பம்பூ காட்டிவிடுகிறது. செய்கூலி இல்லாமல் வெயில் அதிகமாகவே ஜொலிக்கிறது. . பகல் பொழுது மிக நீண்டதாய் ... திண்ணைகளும் காலியாகின்றன செல்சியசும் புரியவில்லை பாரன்ஹீட்டும் விளங்கவில்லை எல் நினோ அத்துப்படியில்லை ஓசோனில் ஓட்டையும் அறியவில்லை போன வருஷத்தைக் காட்டிலும் வெயில் ஜாஸ்தி என்பதே பழகிப்போச்சு சூரியனுக்கும் பூமிக்கும் லட்சம் மைல்கள் தூரம் இல்லை கைக்கு எட்டும் தூரம் தான் சோஷலிசமாய் வெப்பம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
(அடியேனுக்கு கவி மணத்துக்கும் வராது, இரசித்தவைகளை கத்தரித்து காவி வரமட்டும் முடிகிறது.)
-
- 0 replies
- 597 views
-
-
-
- 14 replies
- 2.2k views
-
-
மலையாகி வாழ்ந்தார்...... மழையாகி பொழிந்தார்..... தாய் தந்த பாலுக்கு நன்றி சொல்ல...... தம்மையே நொறுக்கி போனார்! கூட்டுக்கு வெளிச்சம் தர.... குஞ்சுகள் தம்மை எரித்ததம்மா! வயலுக்கு உரம்தர...... நான் முந்தி நீ முந்தி என்றே....... நாற்றுக்கள் தம்மை நார் நாராய் கிழித்தே புதைத்தம்மா! நீர்கொண்டு போர் செய்யும் அலையே நில்லு...... நீலவானின் செல்லப்பிள்ளை..நீள்முகிலே..... நீயும் கொஞ்சம் நில்லு... ஓசையெழுப்பும் காற்றே நீயும்தான்......... எங்கள் ஓவியங்கள் உங்களிடமா சொல்லு! இது மன்னவர் நாள்! இது மண்ணை உயிர்ப்பிக்க.... தம்மூச்சு தந்தே தொலைந்துபோன.... தங்கங்களின் தவநாள்! கூனிகிடந்த தமிழனின் நரம்பில்....... ரோச இரத்தம் பாய்ச்சியவர் பெருநாள…
-
- 12 replies
- 4.7k views
-