கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
சைவப்பற்று -பாவேந்தர் பாரதிதாசன்- இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணையாக - இருக்கும் ஆயிரம் வேலியையும் பெருகும் வருமானம் - கொடுக்கும் பிறசொத்துக்களையும், ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும் மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியம்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த வட்டித் தொகையினையும், எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன்நடந்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
குருதி ஓடையும் பிண வாடையும் என் தேசத்து தெருக்களில்... உயிர் சுமந்து இருப்பதில் சில சுமந்து இடையில் குழந்தை சுமந்து நடையில் என் தேசத்து எல்லை கடக்கின்றனர் மக்கள்! என் மண்ணின் உயிர் ஆயிரமாயிரம் 'பூட்ஸ்' கால்களின் காலடியில் நசுங்குண்டு சுதந்திர தாகத்தோடு காத்திருக்கிறது! பலிகள் பல கொடுத்து நரிகளின் ஊளை கேட்டு பரிகளாகி மேனி விடைத்து அரிகளின் தேகத்தை 'ரவை' களால் கிழித்து கரிகாலன் கண்ணசைவில் பாய்கின்றனர் புலிகள்! இருந்தும் அரசு கட்டில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள் அலறும் ஒலி கேட்டு காது பொத்தி 'அடைத்த செவியினர்' ஆக வெளிநாடுகள்! படை மட்டும் நடாத்தி கிடைப்பதல…
-
- 1 reply
- 969 views
-
-
அம்மா அம்மா என்காத உயிர் இல்லையே அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே! எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள் எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்! எம்மை காக்க அரும்பாடுபட்டாள் எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்! திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள் நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்! எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள் எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்! தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு! நாம் உண்ணும் அழகு கண்டு தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்! தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை! அவள்தான் நான் உலகில் வந்து கண்ட முதல் தெய்வம்.
-
- 101 replies
- 11k views
-
-
மீண்டும் அங்கே! - சத்தி சக்திதாசன் உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைகிறது என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைப்பது சோக கீதம் என் மண்! என் மக்கள்! என் மொழி! நான் மீண்டும் அங்கே போக வேண்டும் பாதைதான் தெரியவில்லை பயணம்தான் புரியவில்லை சென்று வந்த நண்பனவன் சொன்ன ஒரு செய்தியொன்று கல்லிலே எழுத்துப்போல இளமையில் கல்வி தந்த இனிமையான கல்விச்சாலை இடிபாடுகளுடன் இடர்படுகிறதாம்! நானுதித்து தவழ்ந்த அந்த நினைவகலா இல்லமது தாய்மடியின்றும் தாவி அன்று தவழ்ந்திருந்த முற்றமது மழைபோல வானிலிருந்து மதியற்ற வீணர் தம்மால் வீசப்பட்ட குண்டுகளினால் வளமிழந்து வாடுகின்றதாம்! வாசமிக்க முல்லைய…
-
- 0 replies
- 894 views
-
-
அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்: இசையை மட்டும் நிறுத்தாதே எழுதியவர்: க.வாசுதேவன் 1. அமெலியா, போர்த்துக்கல் அழகியே, நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய் இன்று இது எம் இறுதி இரவு சாளரத்தினூடே பார் இருள் அடர்த்தியாக இருக்கிறது வானெங்கும் அளவிற்கதிகமாகவே விரவிக் கிடந்தாலும் நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்? …
-
- 5 replies
- 1.8k views
-
-
நங்கூரம் என்று ஒரு புது சஞ்சிகைக்கு எனது கவிதை கேட்டிருந்தார்கள். கனடா தமிழர் வாழ்வு குறித்த எனது எழுத்துக்களை ஆரம்பிபதற்க்கு ஒரு சந்தர்ப்பமாக் அந்த அழைப்பை எடுத்துக்கொண்டேன். கனடாவுக்கு மூன்று தடவைகள் சென்று ஒரு வருடங்களுக்கும் மேலாக ஒன்ராறியோவிலும் கியூபெக்கிலும் பயணம் செய்து கொஞ்சம் தங்கியிருந்து கற்றிருக்கிறேன். இரண்டாவது தடவை நான் சென்றிருந்தபோது "காங்" குழுக்களின் வன்முறைகள் உச்சதில் இருந்த காலம். குழு வன்முறை பற்றிய ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. முன்ன்றாவதுதடவை தேர்தல்காலம். கனேடிய அமைப்பை அறிந்துகொள்ளும் ஆவலில் ஜோன்காணிசுக்கும் மற்றும் பிளிண்டா ஸ்ரொனாச்சுக்கும் தேர்தல் வேலைகள் செய்தேன். இதற்க்குமேல் சொன்னால் என்னைத் தெரியாதவர்களுக்கு நம்பு…
-
- 9 replies
- 2.2k views
-
-
புறநானூற்றில் இருந்து தொடரும் தமிழ் இலக்கிய மரபில் புகழ்பூத்த சில கவிதைகளில் கவிஞர்களின் ஊடலும் கோபமும் பதிவாகியுள்ளது. சின்ன்ம் சிறுவயதில் சாதி ஒடுக்குதலுக்கு எதிரான வன்முறைப் போர்க் களத்தில் சந்தித்ததில் இருந்து கவிஞர் புதுவை இரத்தினதுரையும் நானும் ஆப்த நண்பர்கள். மாக்சிய கருத்தாடல்களோடும் கள்ளோடும் கவிதைகளோடும் கழிந்த நாட்கள் பல. 2006ம் ஆண்டின் பின்பகுதியில் வன்னியில் என்னுடைய அம்மா நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அம்மவை புதுவை சென்று பார்க்கவில்லையென கேழ்விப்பட்ட கோபத்தில் அம்மா கவிதையை எழுதினேன். அதனை புதுவையே தான் வெளியிடும் வெளிச்சம் 100 மலரில் வெளியிட்டது சிறப்பு. 1000 வருடங்கள் நிலைக்கவுள்ள எனது கவிதைகளுள் அ…
-
- 7 replies
- 1.9k views
-
-
தமிழ்க் கன்னி தோற்றம் எத்தனை எத்தனை இன்பன் கனவுகள்.... என்ன புதுமையடா! - அட புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே போடும் ஒலியிவளோ? - வந்து கத்துங் குயிலின் இசையோ? கலைமயில் காட்டும் புதுக்கூத்தோ? - அட முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு மொழியில் உரைப்பதோடா? மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள் மக்கள் உறவுடையாள்! - நல்ல செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில் சிரிக்கும் அழகுடையாள்! - சிறு கன்னி வயதின் நடையுடையாள்! - உயர் காதல் வடிவுடையாள்! - தமிழ் என்னு மினிய பெயருடையாள்! - இவள் என்றும் உயிருடையாள்! முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும் மூப்பு வரவில்லையே! - மணச் சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச் சாயல் கெடவில்லையே! - அட விந்தை மகளிவள் சிந்தும் …
-
- 10 replies
- 2.1k views
-
-
காலக் கலண்டரில் ஒருநாள் கிழிக்கப்பட ஓராண்டு ஓடிப் போனது! வெளிநாட்டிலிருந்து வரும் அப்பாவை எதிர்பார்க்கும் குழந்தை போல நானும் புதுவருட எதிர்பார்புடன்... வழக்கப் போல "இந்த வருஷத்திலாவது செய்யவேண்டியவை" என ஒரு பட்டியல் ரெடி... கண்மடலில் காதல் எழுதி வருவாள் ஒரு வஞ்சி... நேர்த்திக்கடன் செய்தவைபோல மொட்டத்தலையோடு முணுமுணுக்கும் என்னூர் மரங்கள் துளிர்க்கும்... இரத்தத்தில் உடல் நனைந்து... வெட்க்கத்தில் முகம் மறைத்து... ஏக்கத்தில் வாடும் வெண்புறா... சிறகு கழுவி உலர்த்தும்... புண்பட்ட ஈழ மண்ணின் காயங்கள் ஆறும்! "Gun" இல் பூக்காது சமாதானம் "கண்"கள்…
-
- 12 replies
- 2.1k views
-
-
முதற் காதல் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் பஸ் வரும் வீதியில் தடைக…
-
- 28 replies
- 5.7k views
-
-
மழை - கிரிதரன் ஊரே வேண்டி நிற்க எனக்குமட்டும் மழை விருப்பமில்லை ஏனென்றா கேட்டாய் தோழி? காலடியில் நீரோடையும் சுவரெல்லாம் நீர்வீழ்ச்சியும் அடுப்பில் எரியும் நீரும் பார்த்திருக்கிறாயா நீ? வா வந்துபார் எம் குடிசையில்!! அடுக்களையும் அடுக்குமிடமும் ஒன்றாயிருக்க படுக்கையும் கூரையும் பகலில் கைகோர்க்கும் ஒற்றையறைக் குடிசைக்குள் பார்! கொஞ்சம் முயன்றால் எண்ணிவிடலாம் வின்மீண்களையும் எம்குடில் கூரைக்கண்களிடம் பலிக்காது உன் திறமை! ஓட்டைக்கு ஒன்றாய் இறங்கினாலும்போதும் காலடியில் ஓடையென்ன, ஓராழியே ஓடும் தோழி! ஒருநாள் இல்லை ஒவ்வொரு நாளும் பிழைத்திருக்க இருட்டுமுதல் இருட்டும்வரை ஓடவேணும் நாங்கள் ஓரிடம் முடங்கினால் உண்டியேது? கையூன்றிக் கர…
-
- 3 replies
- 1.2k views
-
-
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளியின் நர்த்தனம்! மின்னொளியே! என்னரும் ஒளியே! உள்ளத்துக் கினிய ஒளியே! விழிகள் முத்தமிடும் ஒளியே! உலகை மூழ்க்கிடும் ஒளியே! என் கண்மணியே! நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள், வாழ்வின் வாலிபக் காலத்தில்! மோதி மீட்டும் ஒளிச் சிதறல், காதல் வீணையின் நாண்களை! மின்னலிடி திறக்கும் விண்ணை! மீறிக் கொண்டு ஏறி அடிக்கும் காற்று! என் கண்மணியே! வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு ஞாலத்துக்கும் அப்பால் தாவிச் செல்லும்! தமது பாய்மரத்தை விரித்துப் பட்டுப் பூச்சிகள் படகாய் மிதந்தேகும் ஒளிக் கடல் மீது! அல்லி மலர்களும், மல்லிகைப் பூக்களும் ஒளியலைகளின் சிகரத்தில்…
-
- 0 replies
- 736 views
-
-
-
ஐயையோ...ஐயையோ....என்னவோ பண்ணுது.... ------------------------------------------- யாழ் களத்தில் அஜீவன் அண்ணா தலைமையில் "டாவின்சி கோட்'டை தமிழில் சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ்ப் படமென்றபடியால் இடையிடையே ஒரு காதல் கதை ஓடவேண்டுமென்பதும் ......இரண்டு மூன்று பாடல் காட்சிகளும் இருக்கவேண்டுமென்பதும் படம் வெற்றி பெறுவதற்கான எழுதப்படாத சட்டமல்லவா...? . முழுக்க முழுக்க யாழ் கள நண்பர்களின் பங்களிப்புடனேயே இந்தப் படம் படமாக்கப்பட இருக்கின்றது. எனவே பங்கு பெற விரும்பும் கலைஞர்கள் உடனும் தொடர்பு கொள்ளுங்கள் முதல் முதல் படமாக்கப் படும் விடயம் மங்கள கரமாக இருக்க வேண்டுமென்பதனால் அந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் படமாக்குவதற்கு ப…
-
- 104 replies
- 12.6k views
-
-
கம்பனிற்கு கவி படித்தார்கள் நம் கற்றோர்கள் ஆறுமுகதானுக்கும் கவி படித்தார்கள் நம் அறிஞர்கள் கற்பனா சக்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள் நம் கவிஞர்கள் அட நம் அன்டனின் அறிவை அண்டம் புகழ பாட அறிஞர்கள் இல்லையா ஆசியா புகழ்பாடும் அரிடி உண்ணும் அண்டத்தில்
-
- 4 replies
- 1.3k views
-
-
சீமைக் கிளுவைக்குள் சீவியம் செய்தவள் சீமைக்குப் புறப்பட்டாள் சீறி எழுந்த சிறீலங்கன் எயார் லைன்ஸில்..! கூலி கொடுத்து தாலி வாங்கி வேலி போட்டனள் நாணி நின்றவள் கூனி நிற்பாள் என்று..! மாதம் பத்து சும்மா இருந்தவள் சுமந்தனள் சுமைகளோடு சுதந்திரக் கனவு..! தாலி பிரித்து வேலி தாண்டி நடப்பது பகற் கனவு கண்டனள் ஏங்கினள்.. படிதாண்டிப் பத்தினியும் பரத்தையானதில்..! சீமையில் சீதனம் சீர் தனம் சீ சீ.. என்பதில் சிந்திக்க இருக்கு சில சுயநலம்.. அதில் அடங்கி இருக்கு பலவீனம்.. பண வீக்கம்..! சீமைச் சிறப்புக்குள் சீரழியும் இயற்கைக்குள் சீமைக்கிளுவைகள் சீர் பெறுமா..??! விடை தேட ஆணும் பெண்ணும் எங்கே..??! கலந்தடி…
-
- 22 replies
- 8.6k views
-
-
பூ விழுந்த மனசு இன்னும் வெளிவராத கவிதைத்தொகுப்பில் இருந்து சில கிறுக்கல்கள். 1. எனக்கென உனக்கென பங்குபோட போராட்டமென்ன நிலமா ? சூரியன் கிரணம் படுமிடமெல்லாம் விரும்பி அருந்தி கொள்ளலாம் 2. மேற்கில் கரைந்து கிழக்கில் பரவும் கிரணங்கள் போல்த்தான் போராட்டமும் வெற்றி தோல்வி நிரந்தரமல்ல 3. விலைவிட்டு வளர்ந்த நகம் விரைவிலேயே ஓடிவது போல் உன்னை விட்டு விலகியதால் ஓடிந்து மடிந்து போகின்றேன் 4. வானவில்லிற்கு வண்ணமோர் வரப்பிரசாதம் என் வாசல் தேவதையே எனக்கு நீதான் வரப்பிரசாதம் 5. இரவின் சுவடுகளை தேடுவதுபோல் - இழந்துவிட்ட இளமையை தேடுகின்றோம் விரிந்து கிடக்கும் வாழ்நாளை விரயமாகவே கழிக்கின்றோம் 6. …
-
- 11 replies
- 1.9k views
-
-
கேள்வி ? நீ எந்த ஊர் என்று கேட்டனர் ஊரைச் சொன்னாள் ஊரில் எத்தனையாம் வட்டாரம் என்று கேட்டனர் இடத்தைச் சொன்னாள் எந்த வீதி என்று கேட்டனர் வழியைச் சொன்னாள் யார் மகள் என்று கேட்டனர் பெற்றவர் பெயர் சொன்னாள் அதன் பின் 'ஓ' 'நீ அந்த வாத்தியார் மகளா' என்று வாய் நிறையச் சிரித்தனர் அவளோ மனதுக்குள் அழுதாள் இத்தனை கேள்வி கேட்டது அவள் குலப் பெருமை அறிவதற்கு என்று புரிந்து கொண்டபோது அவளோடு அவர்களும் புலம் பெயர்க்கப் பட்டனர்.
-
- 5 replies
- 1.4k views
-
-
கொஞ்சும் நிலவு கொஞ்சா நெருப்பு நன்றி வெண்ணிலா. கண்கள் கெஞ்சும் அழவே துடிக்கும் உதடுகள் சுளித்து சிரித்து நடிக்கும் நெஞ்சம் உந்தன் நினைவில் வலிக்கும் மஞ்சம் என்னைப் பார்த்தே நகைக்கும்.
-
- 14 replies
- 2.5k views
-
-
கண்ணே!... வருகின்றேன். உறங்காத கண்மணிக்கு உயிர் நண்பன் வரையும் மடல் கூதலுக்குள் ஒடுங்கும் குருவிக் கூட்டம்போல - அன்று சுய தேவைகளுக்குள் ஒடுங்கிப்போனது என் சுதந்திரவேட்கை காதலுக்குச் சாவு மணி அடித்துவிட்ட பெண்ணே! சாதலுக்கு அழைப்புமணி கட்டிவிட்டாய் கண்ணே! உறவுகள் தேடும் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு உரிமைப்போருக்கு உன்னையே கொடுத்தவளே! உறவுகளை வாழ வைக்க உயிர்காத்து வந்தவன்நான். என்னுள்ளம் இங்கு இன்று உறங்கவில்லைக் கண்மணியே! களங்களில் சதிராடிக் காலிழந்து விட்டாயாம், இருப்பினும் கரும்புலிக் களத்திற்குக் காலாகி நிற்கிறாயாம்! செவிப்புலன் மோதும் சேதிகள் கேட்டுத் தவிப்புகள் என்னிடம் தளம் சமைத்துக் கொண்டன. உள்ளத்தில் எழுந்த அலையில் …
-
- 4 replies
- 1.3k views
-
-
இவன் ஒரு சிவன் புலியாடை அணிந்தவன்! சூலம் சிவனது ஆயுதம் சுடுகலன் இவனது ஆயுதம் பூதகணங்கள் புடை சூழ வருபவன் சிவன் சேனைத் தலைவர்கள் தனைச் சூழ வருபவன் இவன்! நஞ்சுண்ட கண்டன் அவன் நஞ்சைக் கழுத்திலே கட்டிய வீரன் இவன்! சுடுகாடு சிவன் நடமாடும் வீடு பலநாடு இவன் புகழ்பாடும் பாரு! சிவன் பாத தொழ அறுபடும் பிறவித் தளை பிரபாகரன் பாதம் தொடர நமதாகும் நாளை விடுதலை!
-
- 3 replies
- 8.6k views
-
-
ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
இதயத்தில் , உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! முகம் இழந்தது அகம் சிவந்து நடக்கின்றேன் வரைந்துவிடு பெண்னே எனக்கு ஒரு கவிதயை கல்லுக்குள் காதலை தேடினேன்-என் நெஞ்சுக்குள் உன்னைத் தூவினேன் எத்தனை இரவுகள் கடந்து சென்றுருக்கின்றேன் எத்தனை நினைவுகளை மறந்து சென்று இருக்கின்றேன்- பெண்னே உன்னை மட்டும் மறந்து செல்ல முடியவில்லை பூட்டிய உன் இதயத்தால் ஈட்டியாய் தைக்கும் என் உயிரை மீட்டிய பல்லவி கொண்டு தீட்டியே விடடி எனைக்கவியாய் -இனியவள் பூட்டிய இதயம் ஓலிவடிவில்.....
-
- 12 replies
- 2.5k views
-
-
கனவுகளைச் சுமந்தபடி தென்னங்கீற்றில் முகம் துடைத்து திங்கள் விழும் நிலாமுற்றம் கன்னல் தமிழ் பயின்றிட்ட கவின் கொஞ்சும் கலைக்கூடம் முன்னும் பின்னும் எல்லையிட்டு முப்புறமும் கடலேரி வான் நோக்கி உயர்ந்து வணங்கா மண்காக்கும் கற்பகத்தரு வைகறை மேகத்தைக் கிழித்து வாசல் தெளிக்கும் காலைக் கதிரோன் அந்த ஈரக் காற்றின் இதமான வருடல் முற்றத்து வேலிகளில் எட்டி நிற்கும் செம்பருத்தி இரட்டை வடக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடிய வேப்பமரம் கொத்தும் மீன்குஞ்சு குதித்து விளையாடும் குளக்கரைகள் இடையில் குடமசைய நடைபயிலும் இளமங்கையர் சிரிப்பொலிகள் மாதமொருமுறை எம்மை மகிழ்வூட்டும் திருவிழாக்கள் இன்றும் எம் இதயங்களில் இனிமையான நினைவலைகள் கனக்கும் இதயங்களி…
-
- 4 replies
- 1.3k views
-