Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. போயகலும் பொல்லாப் பொழுது விடுதலைப் போரில் விழுந்த உறவுகளே! மண் பட்ட வேதனையை மாற்றத் துடித்தெழுந்து புண்பட்டு மண்ணில் பூவாய் உதிர்ந்தோரே! நெஞ்சுருகி உங்கள் நினைவைச் சுமக்கின்றோம் அஞ்சாத நெஞ்சோடு அந்நியர் தமைத் துரத்த வெஞ்சமர்கள் செய்தீர் வெற்றி பல கண்டீர் ஆனாலு மந்தோ! அடைந்த பல வெற்றியெல்லாம் போனதென்ன மண்ணாய் புகழழிந்து தோற்றதென்ன? எங்கள் சரித்திரத்தை எழுதிடவே உங்களது செங்குருதி தன்னையன்றோ தீந்தையாய்த் தந்தீர்கள் சிதைந்த உடல்களன்றோ சித்திரங்களாயிற்று நீர்மேலெழுத்தாகி நிலைகுலைந்து உங்கள் புகழ் பார்மீதில் இன்று பழங்கதையாயப் போவதனை விட்டு விடலாமோ! வீணே எமையழித்த துட்டர்களெம் முன்னே தோளுயர்த்தி நிற்பதுவோ! தோற்றான் தமிழன் இனித் தொல்லையழிந்ததென்று ம…

    • 0 replies
    • 645 views
  2. போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம். நீயில்லாது போய் இன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து போகிறது. எல்லாமுமாய் நீ வாழ்ந்த எங்கள் தேசத்திலொரு நினைவுக்கல் நாட்டியுன்னை நினைவு கூரவோ நெஞ்சழுத்தும் துயர் கரைய ஊர்கூடி அழுது துயர் போக்கவோ யாதுமற்றுப் போன விதியை மட்டுமே நொந்து சாகும் விதி பெற்றோம். பிரகாசமாய் ஒரு பெயரும் எழிலாயொரு பெயரும் உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள் ஆயிரம் கதைகளும் அழியாத நினைவுகளும்....! அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய் நம்பும் உனது குழந்தைகள் அப்பாவைத் தங்களிடம் அனுப்புமாறு கேட்கிறார்கள். அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும் அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு கட்டளையிடுகின்றனர்.…

  3. நீ தானே நாள் தோறும் நான் கவி எழுதக் காரணம் உன் நினைவெல்லோ என் கவிதை சுர ராகம் உன் பாடல் கேட்டு எல்லோ என் இதயம் எழுதும் கவிதை எங்கெல்லாம் காற்றோடு எதிலும் உந்தன் ராகம் வாழ்வு எல்லாம் வர்ணங்கள் வரைந்த உந்தன் சுரங்கள் பொன்வானம் தன்னாலே பாடும் உந்தன் இசைகள். போய் வாருங்கள் எம் புல்லாங்குழலே இசையும் தமிழும் உள்ளவரை இந்த உலகு உம்மை நினைவு கொள்ளும் 🙏

  4. போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? கடற்காற்றின் மௌனம் உனது காலத்தை எழுதிச்சென்ற தடங்கள் கனவின் மீதத்தை இந்தக் கரைகளில் வந்தலையும் அலைகள் வந்து சொல்லியலைகிறது....! கால்புதையும் மணற்தரையில் உனது மௌனங்கள் நீ கரைந்த காற்றோடு வந்தலையும் வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒரு வரலாற்றின் சாட்சியாய்...! வழி நீளக்கிடக்கிற நினைவுத் துளிகளில் நீயும் நானும் எழுதத் துடித்த வாழ்வு ஈழக்கனவாய் ஆனபோது இடைவெளியின் நீளம் காலக்கரைவில் கண்ணீராய்....! நீ(மீ)ழும் நினைவுகளில் நிலையாய் காலம் கரையும் இந்தக் கடற்காற்று போய் வாவென்கிறது போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? மறுபிறவி உண்டென்றால் மறுபடியும் இதே கரைகள் தொடும் அலைகளோடு அலையாவ…

  5. சூரனை வதம் செய்தான் அந்த முத்துகுமரன் அதுவும் திருச்செந்தூரன் தன்னையே வதம் செய்தான் இந்த முத்துகுமரன் இதுவும் திருச்செந்தூரன் போன பொழுது உனக்குத் தெரிந்திருக்கும் எம் மாவீரர்களும் மக்களும் உனக்களித்த வரவேற்பு சாவின் நிமிடம் தெரிந்த சத்தியவான்களில் கரும்புலிகளுக்கு அடுத்து நீதானையா! மக்கள் எழுச்சியின் சிகரம் நீ ஈழ மக்களின் மகரம் நீ உனக்காக வருந்தாது மத்திய அரசு உனக்காக அழுகிறது தமிழ் ஈழ அரசு பிரபாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் திருமாவுக்கு சொல்லென்றாய் சொல்லிவிட்டோம் பிரமாவுக்கு ஒரு முறை சொல்லிவிடு - உன்னை படைத்ததற்கு கோடி நன்றி என்று தமிழ் ஈழ புல்லும் தமிழ் உயிர்கள் அத்தனையும் உனக்காக அழுவதனை ஒருதரம் கேளாயோ? போய்வா எம…

    • 5 replies
    • 1.6k views
  6. போய்வா காதலா போய்வா !!! என்னை பிடித்த என் காதலா..... என்னை சீண்டுவதிலே என்ன இன்பம் உனக்கு?? உள்ளம் குமுறியே ஊமையான நான் , பாடுவேன் என்று ஏன் நினைக்கின்றாய்?? உன் பார்வையில் நான் ஒரு கொடுமைக்காரி.... அப்படியே இருப்பேன் நான் உனக்கு. வார்த்தை ஊசியால் என் மனதை குத்துவதை விட்டுவிடு... என் மனம் பாறையாகி நாளாச்சு என்காதலா . எங்கள் காதல் வளரும் என்று எனக்குத் தெரியவில்லை ... என் கை பிடிக்க முதலே என் கண்ணீல் நீர் வருவது உனக்கு இன்பம்....... உன் நினைவை மறக்க நான் நினைக்கின்றேன் போய்வா காதலா போய்வா... நாம் நடந்த கடற்கரையில் என்கால் ஒற்றைத்தடம் பதிக்கும் ........ போய்வா காதலா போய்வா!!!! மைத்திரேயி 23 02 2013

  7. போய்விடு அம்மா வ.ஐ.ச.ஜெயபாலன் காலம் கடத்தும் விருந்தாளியாய் நடு வீட்டில் நள்ளிரவுச் சூரியன் குந்தியிருக்கின்ற துருவத்துக் கோடை இரவு. எழுப்பிவிட்டுத் தூங்கிப்போன கணவர்களைச் சபித்தபடி வருகிற இணையத்துத் தோழிகளும் போய்விட்டார். காதலிபோல் இருட்டுக்குள் கூடிக் கிடந்து மலட்டு மனசில் கனவின் கரு விதைக்கும் தூக்கத்துக்கு வழிவிட்டு எழுந்து போடா சூரியனே. பாவமடா உன் நிலவும் கணணியிலே குந்தி இணையத்தில் அழுகிறதோ மூன்று தசாப்தங்கள் தூங்காத தாய்களது தேசத்தை நினைக்கின்றேன். படை நகரும் இரவெல்லாம் சன்னலோரத்துக் காவல் தெய்வமாய் கால்கடுத்த என் அன்னைக்கு ஈமத்தீ வைக்கவும் எதிரி விடவில்லை. பாசறைகளை உடைத்து உனக்குப் புட்பக விமானப்…

    • 7 replies
    • 1.6k views
  8. போரடிக்கும் கருவி. எல்லாமே முடிந்து போனதாக இறுகிப்போனது மனசு. இருப்பினும் ஏதோவொரு தொடக்கத்தை நோக்கியே சஞ்சரிக்கிறது சிந்தனை. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு மௌனமாயிருக்கவும், பேசவும், பகைக்கவும், சிநேகிக்கவும். அதினதன் காலத்தில் அத்தனையையும் நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறது காலம். முந்தினதும் பிந்தினதுமாக சுழலும் காலத்தின் கைகளில் நானும் ஒரு போரடிக்கும் கருவிதான். 01.08.2015. தமிழினி ஜெயக்குமரன்

  9. எல்லா இடங்களிலிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் நகரங்கள், பள்ளிகள், கிராமங்கள் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களை கொல்கின்றனர் எல்லா இடங்களிலும் போர்களை நடத்துகின்றனர் குழந்தைகளை கொல்கின்றனர் சிறுவர்களை கொல்கின்றனர் பிறக்க இருக்கும் சிசுக்களைக் கொல்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்களை கொல்கின்றனர் கதறும் அப்பாக்களை கொல்கின்றனர் ஓடி ஒழியும் அப்பாவிகளைக் கொல்கின்றனர் அவர்கள் கூடிக் கூடிக் கதைக்கின்றனர் போர்களை நிறுத்துவதற்கு கூடுகின்றனர் பின் மீண்டும் போர்களை எப்படி திறமையாக நடத்துவது என்று கதைக்கின்றனர் போரால் சிதையும் மனிதர்கள் பற்றி கதைக்கின்றனர் பின் சிதையாது மிச்சமிருப்பவர்களை கொல்வது எப்படி என்று கதைக்கின்றனர் ஒருவர் இறப்பத…

  10. எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...? ஒன்றுமே புரியவில்லையே...! எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!! அனைத்துமே புரியாத புதிர்களாய்!!! சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும், நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்; அம்மா சொன்னா...!? பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும், நன்றாகத்தான் படிப்பேனாம்; ஆசிரியர் சொன்னார்கள்...!? வேலை செய்யும் இடத்தில் கூட, நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்; எல்லாருமே சொல்கின்றார்கள்...!? எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்... அது எனக்கே தெரியும்!? இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!? அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ??? என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம், எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை…

  11. மக்கள் எழுபத்து ஏழில் தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுளே காப்பாற்றவேண்டும் என்றார் வேறுவழியில்லை கைகளில் ஆயுதம் நாங்கள் அடித்தால் அடிவாங்க பயந்தாங்கோழிகளோ மகாத்மாக்களோ இல்லை அடித்தார் திருப்பி அடித்தோம் அடித்தவரில் குற்றம் சொல்லா உலகு திருப்பி அடித்தவரில் எங்ஙனம் குற்றம் காண்பது? எங்கள் கைகளை மட்டும் கட்டி எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது முதுகை குறிவைத்தது இயங்கிய உடல் ஓயலாம் போராட்ட ஆத்மா சாகாது அடிமைத்தனத்தை ஏற்காது நீறு பூத்த நெருப்பாய் விடுதலை தாகம் இருக்கும் ஒரு நாள் தீரும்

  12. போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல் சம்பூர் வதனரூபன் தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்.. தேசமாக்குவதற்கும் முடியாத போது உருவாக்குவதற்குமென அடிமைகள் எழுவர். அடிமைகள் என்பவர் எப்பொழுதும் அடிப்படையுரிமைகளுமில்லாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும் அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும் அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும் அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில் அடிமைகள் போராளிகளாவதும் போராளிகளான அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும் பின்பு பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென.. இதற்கு நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு உலகமெங்…

  13. போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்.... கவிதை.... அன்புள்ள மகளுக்கு உன் அம்மாவின் ஆசிர்வாதம் காவலுக்கு செல்கிறேன் என்றாய் எம் இனத்தை காக்க எழுந்துவிட்டேன் என்றாய்..... ! உன் ஆசைத்தம்பியை பட்டினிக்கு பறிகொடுத்தாய் அவனைப்போல் பலபேரைக்காக்க பகைவனுடன் மோதச் சென்றாய்..... எனக்கும் தெரியும் நீ புலியாக பிறக்கவில்லை புலியாக மாற்றப்பட்டாய் எங்களின் விடுதலைப் போரிலே புள்ளியாக என்னையும் ; எதிரி புலியாக வைத்துவிட்டான் அவன் உருவாக்கிய புலிகலெல்லாம் பிரம்மிட்டின் உருவம் போல் வியாபித்து எழுதிடுவர் ; என்று எதிரி இன்னமும் நினைக்கவில்லை என்று எழுதிவைத்து நீ சென்றாய்.... பட்டினி எங்களுக்கு பழகிவிட்ட ஒன்று என்றாய் பசிதாங்காப் …

  14. சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத்தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிம் சிறூவர்க்குக் கை கொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு கண…

  15. Started by Thamilthangai,

    என் கண்ணே சிரி!! எதற்காக அழுகிறாய் கண்மணி? என் ஒவ்வொரு தோல்விகளிலும் சோராமல் தோள் தந்தவள் நீ! "துவள்வதும், துவண்டு புரள்வதும் ஆண்மைக்கு அழகல்ல" என்று என்னையே எனக்கு அடையாளம் காட்டியவள் நீ!!.. இன்று உன் விழிகளில் ஏனடி நீர்த்துளி?!! முள் கிழித்த என் விரல்கள் பார்த்தா?! முட்டாள் மனிதர்கள் முதுகில் குத்திய தடயம் பார்த்தா?!!கண்ணி வெடி என் ஒரு கால் தின்றதைப் பார்த்தா?!! அடி பேதைப்பெண்ணே! உன் கையும் நம்(பிக்)கையும் இருக்கிறதே! துவளாதே கண்மணி வீரனுக்கு நம்பிக்கையே போதும்! சோராதே பெண்மணீ!. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!! எங்கே சிரி! துயரம் எரி!!...உன் புன்னகையில் தானடி என் வெற்றிக்கனி! நன்றி!

    • 8 replies
    • 1.9k views
  16. கல் நெஞ்சும் கசிந்துருக, இன்று கையேந்தும் நிலை வந்தும் சொல் பொறுக்காச் சோர்விலராய் கைகட்டி நிற்காத ஏர் பிடித்த நல் மனிதர் வல் வினையால் வாழ்விழந்து வாழாவெட்டி ஆகி நின்று நெல் மணிக்கும் வரிசை கட்டி கையேந்தும் நிலை கொடிது. பார் போற்ற வாழ்ந்திருந்து பசி விலக்கி வாழ்ந்தவர்கள் ஏர் பிடித்த கையாலே அள்ளி அள்ளிக் கொடுத்தவர்கள்- வந்தாரை வரவேற்று ஊர் மெச்ச உபசரித்தோர் நாதியற்று நடுத் தெருவில் அகதியாய் அலைகிறாரே போர் ஓய்ந்த பின்னாலும் ஊர் ஏக முடியாத கொடுமையினை யாருணர்வார்

    • 6 replies
    • 1.4k views
  17. போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள் ---------------------------------------------------------------- கவிதை:தீபச்செல்வன் _______________________________ 01 போராளிகள் மடுவைவிட்டு பின் வாங்கினர். நஞ்சூறிய உணவை தின்ற குழந்தைகளின் கனவில் நிரம்பியிருந்த இராணுவ நடவடிக்கைகளிலிருந்து போர் தொடங்குகிறது. நகர முடியாத இடைஞ்சலில் நிகழ்ந்து வருகிற எண்ணிக்கையற்ற இடப்பெயர்வுகளில் கைதவறிய உடுப்புப்பெட்டிகளை விட்டு மரங்களுடன் ஒதுங்கியிருக்கின்றன சனங்கள். போர் இன்னும் தொடங்கவில்லை. 02 போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு பின் வாங்கினர். பயங்கரவாதிகளை துரத்திக்கொண்டு வருகிறது அரச யுத்தம். மரத்தின் கீழ் தடிக்கூரைகளில் வ…

  18. என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே... இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன நான் தேநீர் குடிக்கின்றேன், என் வாய் யாரையும் சபிக்கவில்லை கொஞ்சம் புகை பிடிக்கின்றேன் ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... „நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை நான் தேடவில்லை.... வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன் ஆம்…

  19. போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே! ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான இன்முகத் தமிழ் எழிலே! பார் சுற்றி தாய் முற்றக் கதை சொல்லிப் பயணித்த பண்புநிறை தமிழ்செல்வா! உலகின்....... தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா, நீ தூங்கிப் போய்விட்டாய்? ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா, நீ உறங்கி ஓய்வெடுத்தாய்? நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா, நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள் நாயகனின் தோளான நல்லதொரு தோழனே! நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்? யார் குற்றம் செய்தோம்? விழிநீர் முட்டிக் காயாத விதி வ…

    • 1 reply
    • 1.2k views
  20. Started by ivann,

    பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள் மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள் நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள் தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள் கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள் அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள் கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள் ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள் தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள் காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள் மரணத்தை விட கொடுமையான ஊனங்கள் அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள் நீர் போல ஓடிய ரத்த ஆறுகள் குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள் கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள் தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்…

    • 8 replies
    • 1.7k views
  21. இரத்தக்களரியில் அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள் ஈழப் போர் எழுமென முரசறைகின்றன காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு ஈழமண் எரிய எரிய தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள் நாற்பதாயிரம் இளையதலைமுறையை கருக்கிப்போட்டது கையறு நிலையில் கடல் நீர் ஏரியில் குண்டு பட்டுச் சிதைந்து மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து கோமகன்கள் தடாகத்தில் எங்கள் குருதிதிதான் ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள் ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஏய்த்துப் பிழைத்த அரசியல் கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப் காசியண்ணைக்குப் போர் வேண்டும் ஆம் போரிடுவர் எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும் உரிமைக்காய்…

    • 17 replies
    • 2.7k views
  22. போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும் -------------------------------------------------------------- 01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின் உடல்கள் கைப்பற்றப்பட்ட படைகளின் உடல்களை கணக்கிட்டு பார்த்தபடி சிதைந்த உடல்கள் கிடக்கும் மைதானத்தில் பதுங்குகுழியிலிருந்து வெளியில் வந்த சனங்கள் நிறைகின்றனர். பக்கத்து வீட்டில் போராளியின் மரணத்தில் எழுகிற அழுகையுடன் இன்றைக்க…

    • 0 replies
    • 913 views
  23. போர்த்திட்டாண்டா.. தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..! காலம் காலமாய் வரலாறாய் எழுதி வைத்து.. தமிழினத்தை.. அழித்து துன்புறுத்தியவனுக்கே சொந்த இனத்தை.. ஊரை விட்டே துரத்தி அடித்தவனுக்கே.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா.. பாரடா பார்.. உலக மைந்தா. தமிழன் போல் சன நாய் அக வாதி உலகில் உண்டோ சொல் அவன் போல் வீரம் உனக்கும் வருமா கேள்..??! மானம் கெட்டதுகள் வாழ்ந்தென்ன வீழ்ந்தே தொலையட்டும் என்றே அன்னை சோனியாவின் எடுபிடிகளாய் வடக்கிருந்து வந்து.. தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா சிங்களத் தானைத் தளபதிக்கு பொன்னாடை போர்த்திட்டாண்டா..! வாழ்க தமிழ் வீரம் எழுக தமிழக புதிய வரலாறு.. காட்டிக் கொடுப்பதில் காக்கவன்னியன…

  24. Started by gowrybalan,

    கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டும் திசை யெட்டும் விடுதலை உணர்வு பொங்கட்டும்! போடட்டும் - குண்டு போடட்டும்...- பின் தமிழ் பெண்ணோடு வீரம் கண்டு - எதிரி மண்ணோடு சாயட்டும்! போடும் வரையும்- யாரும் தடையும் போடட்டும்... தமிழ் மானம் கண்டு-பின் தம் வாயை மூடட்டும் ! எட்டும் வரை எட்டி வெற்றிப் புலிக் கொடி வானை முட்டட்டும் ! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம்! (என்று) கொட்டட்டும் - போர் முரசு கொட்டட்டும் எட்டுத் திசை யெங்கும் எதிரி சிதறி ஓடட்டும் இல்லை- சாகட்டும்! இந்தத் தாயினம் செய்திடும் சத்தியம் - நாளை சரித்திரம் சொல்லிடும் தமிழீழம் !

    • 21 replies
    • 3.6k views
  25. Started by Thulasi_ca,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.