கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
தமிழினி என்னும் வலைப் பதிவாளரின் கவிதை, இது யாழ்க் களத் தமிழினியா என்று தெரியாது? :roll: http://eelavali.blogspot.com/2006/07/blog-post_20.html கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள்…
-
- 15 replies
- 2.6k views
-
-
ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது வேப்பங்கிளையில் தூளி.., ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில் கிளைநிரப்பிய கொய்யா.., யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன யாழும் குழலும்.., விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர் இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி.., புள்ளதாச்சி குழிகளின் சாபம் முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி.., மழைநீரால் ஒளிந்து கொள்ளும் பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி.., சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ.., விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர் முகவரி தொலைத்த விடுமுறைகாலம்.., மழைநீரை வெறித்தபடி கவலைகளில் மிதக்கின்றன சில காகிதங்கள்.., புதுவர்ண பூச்சு அலங்கோலம் தூரிகை மாயம் சுவற்றில்.., மதிப்பிழந்த சில்லறை காசுகள் அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்.…
-
- 54 replies
- 7.2k views
-
-
கண்கெட்ட கடவுளுக்கு ஓர் கடிதம் காப்புத் தெய்வமே கண்ண பரமாத்மாவே - எம் இனத்தின் கோர அழிவின்போது - எங்கே நீ ஒளிந்து பொண்டாய் . . . . . நவீன ஆயுதங்கள் எத்தனை தோன்றினாலும் - உன் அழிப்புச் சக்கரத்தின் முன் ஈடாகுமா?... இருந்தும் எங்கள் இனத்தின் அநியாய அழிப்பின் போது - உன் அழிப்புச் சக்கரத்தை எங்கே தொலைத்தாய்?...... திரௌபதியின் மானங்காத்த கண்ணனே தமிழ் ஈழத்து சகோதரிகளின் - மாணம் மோசமான முறையில் மாணபங்கப் படுத்தப்பட்டபோது - நீ எங்கே ஓடிப்போனாய்?... அல்லது உன் கையுள் இருந்த சேலைகளின் இருப்பு முடிந்து விட்டதா?.... இல்லை நீயும் துவேஷக்காரனோ?.... அரச குலத்துக்கொன்றென்றால் - முன்னிற்க்கும் நீ தமிழ் ஈழத்தில் அநீதிகளை பாரா முகமாய…
-
- 4 replies
- 1.8k views
-
-
கோவம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி குதூகலப்படுத்துபவனே சபை நடுவே துணிவுடன் உலாவரும் சகலகலா வல்லவனே விடிய விடிய தூக்கமின்றி விருப்போடு பேசிப் பேசி சிரிப்புகளோடு கூடிய அரட்டையில் சிந்திக்கவும் சிறகடிக்கவும் வைப்பவனே தேடலின் நாயகனே வானொலியின் தலைவனே அரட்டையில் மன்னவனே எனதன்புத் தம்பியே அன்றொரு நாள் எனை நீ திடீரென சந்தித்த போது அடைமழை பெய்கையில் குடையின்றி நான் நனைந்ததையும் பெரியம்மா வீட்டு நாயை தைரியமாக களவாடியதை தெருவோரமாக ஒதுங்கி நின்று தெரியாமல் பார்த்த நீ சொல்லமாட்டேன் யாருக்கும் லொலிபொப் வாங்கித் தா என செல்லமாக கேட்டதும் செலவழிக்கின்றேன் இப்போதும் நான் ஆனால்... யாவற்றையும் யமுனாவாக …
-
- 12 replies
- 3.4k views
-
-
யாருக்காக சிரித்தாயோ அவரை ஒருவேளை நீ மறந்துவிடலாம்... ஆனால் யாருக்காக அழுதாயோ அவரை ஒரு நாளும் உன்னால் மறக்கவே முடியாது...
-
- 0 replies
- 1k views
-
-
நான் நடந்த திசைகளின் பாதைகளில்... துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே, என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!! தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்! கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு... கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்... உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!! சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது, என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்! கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்! என் உடலினை... என் கால்களே சுமந்தாலும், மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்... கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!! …
-
- 15 replies
- 7.4k views
-
-
சட்டென்று ஒரு வெடிச்சத்தம்...! பட்டென்று போனது ஓருயிர்! சிட்டென்று பறந்த சின்னக் குருவி... வேட்டொன்றில் வீழ்ந்தது வீணாய்! பாழ்பட்ட யாழ் மண்ணில் ஒருநாள், தேள்கொட்டிய மாதிரி ஒரு செய்தி... நோபட்ட மனதோடு விடிந்தது... சிவந்த காலை, மார்தட்டி நின்றவன் புழுதியில் கிடந்தான்!!! கார்கொண்ட மேகம் கண்ணீர் அஞ்சலி செலுத்த, பேர் கொண்ட அவர் முகம் தணலாய் மறைக்க, வீறுகொண்ட நாலுபேர் இருக்குமிடம் விலகினார்! போர்கொண்ட உள்ளங்களின் காரியக் குணம் போல..! காரணம் தெரியாது...! காரியம் புரியாது...! ஆழங்கள் தாண்டி... தோண்டும் நேரம் இதுவோ? காரிருள் ஊடே ஒரு விடிவெள்ளி.. வெளிச்சம் காட்டிச் சிரிக்கிறது! விடைதெரியாத வினாக்களுக்கும், விடைகொடுக்கும் நேரமிது! கடை…
-
- 2 replies
- 907 views
-
-
ஒரு கவித படிச்சேங்க . ரெம்பவே ஃபீலிங்கா இருந்திச்சு . உங்ககூட ஷேர் பண்ணிக்கிறேன் . நிலந் தொடாமல் மிதந்தேன் உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது நான் லேசாகி உதிர்கிறேன் அலைகள் என்னை மோதுகின்றன யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது? திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின எவர் அவற்றை என்னிடம் துரத்தியது? யார் கரையில் என்னை வீசியது? எவரது கைகளவை? காணாமல் போகிறேன் நீரோடு கலக்கிறேன் கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில் உறைந்து கிடக்கிறேன் ஈரமண்ணாக. http://thoomai.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
-
- 3 replies
- 642 views
-
-
தூயவன் அழைப்பு..! யாழினில் ஒரு பகலவன் கலகங்களின் தலை இவன் அரிச்சகர்களின் துணை இவன் அவனே நம் தூயவன் சிறு ஊடல்கள் சில சில பெருஞ்சமர்களோ பலப்பல சினமது மிக வெளிப்பட வெளியேறினான் தனிப்பட வானவரில் நம்பிக்கை மதமது உன் தும்பிக்கை உன் தெய்வம் கணேசனோ கடுப்படித்தவன் சபேசனோ அடிக்கடி நீ வருபவன் அடிக்கு அடி நன்கு தருபவன் கெடுத்தவன் எந்த அரக்கனோ கொடும் நாரதக் கொடுக்கனோ களத்தில் கடுப்பு என்னையா நீ குளத்தில் எறிந்த கல்லையா நீ வருவதெப்போ சொல்லையா உன் மறுபிறப்போ பொன்னையா வருந்திப் பெறவில்லை தடை வெளியேறக் கிடைக்க இல்லை விடை உனக்கு இடம் இருக்கையா உடனிருப்பார் நம்ம தயா…
-
- 50 replies
- 7.6k views
-
-
ஓர் வெள்ளைப் புறாவின் இறகுகள் ஒடித்து........ தமிழ் செல்வனின் கண்ணீர் அஞ்சலிக்காய்..... கடந்த வருடம் கார்த்திகை இரண்டில் சமாதானம் கேட்டு பறந்து திரிந்த வெள்ளைப் புறாவின் இறகை ஒடித்து வீதியில் போட்டு புத்தரின் மைந்தர்கள் மகிழ்ந்த இன் நாள்..... உலகம் முழுவதும் வெட்கத்தால் தலை குனிந்த ஓர் நாள்....... தமிழன் இறுதி அமைதி முயற்சியும் அரை நொடிப்பொழுதில் அழிந்திட்ட கரி நாள்....! அகிம்சைக்காய் முதல் பலி எம் உயிர் திலீபன்...... அதன் பின் ஓர் வலி அன்னை பூபதி.... அரசியல் பேசி அமைதியை நாடிய அண்ணா நீயும் இறுதியாய் ஓர் பலி....! தமிழர் இனத்தின் விடுதலை வேண்டி வீரியம் கொண்ட வே…
-
- 8 replies
- 1.6k views
-
-
பிறந்த நாட்டில் .... பிறந்த ஊரில் .... ஒருபிடி மண் தான் .... எனக்கு .... பொன் விளையும் பூமி .....!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -01 --- பேசும் மொழிகளில் .... எந்த மொழியில் .... கலப்படம் இல்லையோ .... அந்த மொழி .... எனக்கு தாய் மொழி ..........!!! & கவிப்புயல் இனியவன் இவை எனக்கு சிறந்தவை -02 மேலும் தொடரும் ....................
-
- 6 replies
- 894 views
-
-
துரோகத்தின் தருணம் by ஃபெய்ஸ் அஹ்மத்ஃபெய்ஸ் இன்னும் சிறிது நேரத்தில் கூரைகளின் மீது தன் ஒளியை வாரி இறைத்துவிடும் தன்னுள் இருந்த பிம்பங்கள் மறைய கண்ணாடிகளுக்கு தாகம் எடுக்கும் தூசிபடிந்த தாரகை சொர்க்கத்தின் கண்ணீராய் கீழே விழும் சிலர் தங்கள் பாழடைந்த அறைகளில் தனிமையை போர்த்திக் கொள்வார் வேறுசிலர் விரக்தியை போர்த்தி இருப்பார் இது நீசத்தனமான துரோகத்தின் தருணம் அனைத்து கருணையும் முடிவுக்கு வரும் தருணம் அனைவருக்கும் சுயநலமே நோக்கமாக மாறும் தருணம் எங்கே செல்வாய் நீ என் ஊர் சுற்றி நெஞ்சமே உன்னிடம் யார் சினேகம் கொள்வார் இன்னும் கொஞ்சம் காத்திரு விடியலின் அம்பு பாய்ந்து குருட்டுக் கண்களுக்கு பார்வைகிட்டும் வரை அன்னியோன்னியமான முகங்களுக்கு காத்திரு …
-
- 8 replies
- 1.1k views
-
-
இத்தாலி எருமையின் எட்டப்பன் நீதி கவிதை - இளங்கவி தமிழனின் இனத்தையே நம்பவைத்து கழுத்தறுத்த கரு நாய் நீ தீயே...... தமிழினம் உனை மறவா இதுவே உன் தலைவிதியே..... துரோகத்தின் கலைக்கூடம் தமிழன் துன்பத்துக்கு ஓர் உருவம் தமிழனின் சரித்திரத்தில் நீ தவறிவிட்ட ஓர் அகரம்.... கவிதையால் நமை தடவிவிட்டு கத்தியால் கழுத்தறுத்த கடைசித்தமிழனாய் இருந்துவிடு :இல்லையேல் நம் ஆயிரமாம் உயிர்களுடன் உடன் கட்டை ஏறிவிடு..... தவறிய சகோதரத்தை தட்டிவைத்தான் நம் தலைவன் நெளிவான நடைபாதை நிமிர்த்திவைத்தான் நம் தலைவன்; அதை சகோதர யுத்தமென்று எம் தலையை குனியவைத்தாய் கடைசியில் இத்தாலி எருமையின் எட்டப்பனாய் மாறிவிட்டாய்..... தமிழுக்காய் உன் பதவி …
-
- 3 replies
- 1.8k views
-
-
எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே எங்களுக்காய் வாழ்ந்து எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே ! வணங்குகிறோம். சூரியனாய்ப் பிறப்பெடுத்துச் சுதந்திரத்தின் காவலனாய் கால்நூற்றாண்டையும் கடந்து காடும் மேடும் களவாழ்வுமென வாழ்வையும் உங்கள் வம்சத்தையும் எங்களுக்காய்த் தந்தவரே ! காலப் பெருநதியில் காணாமல் போகாமல் ஓயாமல் பாய்ந்த எரிமலையே ! காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள் அவதாரனின் துயரில் அனைத்தும் அசையவோ அடுத்து நகரவோ இயலாமல் போட்டு வைத்த பிணங்கள் போல் காலம் காப்பிடமின்றி அலைகிறது. வஞ்சம் கொன்றது எங்கள் வாழ்வைத் தின்றது இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க என்ன மர்மம் உள்ளதோ…..? வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல் இ…
-
- 0 replies
- 921 views
-
-
1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது பெண்போராளிகளதும் சமூக ஆர்வலர்களதும் பாரட்டைப் பெற்ற இக் கவிதை மறு வாசிப்புக்காக பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒர…
-
- 19 replies
- 1.7k views
-
-
இங்கு விசமாகிபோகும் மனிதர்களும் உண்டு உணர்வுகளை புரிந்துகொள்ளாத மனிதர்களும் உண்டு உடுத்தியிருக்கும் உடையின் உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனை தாக்கி அளிக்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே எத்தனை விதமான எண்ணங்கள் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு இல்லாத அத்தனை குணமும் இங்கு மனிதர்களுக்கு இருக்கிறது அத்தனையும் வன்முறையா? இல்லை குரூரமா? புரியாத புதிராய்!
-
- 1 reply
- 859 views
-
-
போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா மகிந்தரும் வந்தார் பொய்களைச் சொன்னார் நடந்தது நமக்கே புரியாது தோத்த முகத்துடன் கொழும்புக்குப் போனால் கோட்டையில் எமக்கு இடமேது மக்கள் மனதில் உறுதியடா அதை மாற்றற நினைத்தது கொடுமையடா இனி ஆழ நினைப்பது மடமையடா போனால் போகட்டும் போடா உரிமை உள்ளவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ஆசையைச் சொல்லி அழுவதனாலே ஆளச் சொல்லித் தருவானா கூக்குரலாலே கிடைக்காது இனி கோட்டுப் போடவும் முடியாது மக்களை மிரட்டுவும் முடியாது போனால் போகட்டும் போடா இந்த மாகாண சபையை வென்றவன் யாரடா போனால் போகட்டும் போடா மக்களை மிரட்டி வாக்கினை…
-
- 27 replies
- 2.4k views
-
-
நண்டலையும் கடற்கரையில் அன்று நாம் நின்று கதறியதை வேவு வண்டு விமானம் படமெடுக்க கண்ட பின்னும் சிங்கள தேசம் குண்டுகள் ஏவியெம்மைக் குதறியது. உலக நாடுகளின் தாராள மனசு அள்ளிக் கொடுத்த ஆயுதத்தை முள்ளிவாய்க்கால் நிலம் மீது சொல்லியழித்தார் தமிழினத்தை சிங்களதேசக் கொலைஞர்கள். சிதறிய சதைத்துண்டுகளுள் சிக்கிக் கிடந்த அடையாள அட்டை அது அப்பாவை அடையாளம் காட்டியது. ஐயோவென்று கதறிய அம்மா கையிலிருந்த அடையாள அட்டையோடு – அவள் கையும் பறந்தது. அருகிருந்த தங்கையோ அனுங்கியனுங்கிக் குனிந்து கொண்டே அவள் கிழிந்த வயிற்றுக்குள் குடலை அனுப்பினாள். நான்கு நிமிடத் துளிகள் கடந்து நான் கண்டேன் பேரவலம் அம்மாவும் தங்கையும் சதைத்துண்டங்களாய் ந…
-
- 0 replies
- 582 views
-
-
நினைவில் உருவாகி கனவில் கவிபாடி காதல் வழர்த்தேனடி... கனவை நினைவாக்க நினைவை நிஜமாக்க நீயே- வருவா யாடி....? உயிரில் உனதாகி உறவில் உனை வேண்டி மனதைக் கொடுத்தேனடி... உயிரில் உயிராகி உணர்வில் உனதாகி உலகை இழந்தேனடி... உலகில் நாம் வாழ உரிமை நீ யாக உனை நீ தருவாயா...டி........??
-
- 12 replies
- 2.2k views
-
-
1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் - மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! ----------------------------------------------------------------- 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் - மானமும் இருக்குமெனில் அதற்குள் - விடுதலையும் இருக்கும்!! ----------------------------------------------------------------- 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் - இனி வெற்று வாய்க்கு மெல்ல வெற்றிலை போல்; உடல் கீறி ஒழுகும் ரத்தம் நனைத்தேனும் சிவக்கட்டும் - இனி வெள்ளைக்கொடி!! ----------------------------------------------------------------…
-
- 1 reply
- 696 views
-
-
பதின்மூன்று கிடந்து படும் பாடு போதும் -பா.உதயன் இந்த முறையும் இந்தியா சொல்லலாம் 13 ஐ பார்த்து கொடுக்கச் சொல்லி செய்கிறோம் என்று இலங்கை சொல்லும் பின் தெரியாதது போல் மறந்து போய் இருக்கும் கொடுங்கள் என்றும் கொடுக்கிறோம் என்றும் சும்மா சொல்லிச் சொல்லியே காலம் போச்சு அவர் அவர் நலனில் அக்கறையே தவிர அது பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை ஏமாத்துக் காரன் இலங்கை என்று இன்னும் இந்தியாவுக்கு தெரியாமல் இல்லை இந்தியாவுக்கு தலையும் சீனாவுக்கு வாலும் காட்டும் இந்து சமுத்திரத்தில் கிடக்கும் நழுவல் மீன் இது என்று இந்தியாவுக் இன்னும் புரியாமல் இல்லை இருவரும் சேர்ந்து இன்றும் ஏமாத்துவது ஈழத் …
-
- 5 replies
- 866 views
-
-
என்ன இப்படி குளிர்கிறது .. உச்சி முதல் பாதம் வரை .. சில மணித்துளி கழிந்து .. அனல் வெட்க்கை உடலை தின்னுது .. ஓ ..நான் இறந்து விட்டேனா .. அரப்பு வைத்து தலைமுழுகி .. பின்தான் எரித்தார்கள் போலும் .. ஒருவேளை என் சாம்மல் ஆவது .. தூன்மையா இருக்கட்டும் என்றா .. மரணம் கூட சுத்தபத்தம் பார்க்கும் ஆ.
-
- 0 replies
- 615 views
-
-
எனது ஆன்மா காணாமல் போய்விட்டது... நேற்றுவரை என்னுடன்... இருந்த ஆன்மா.. இன்று தூக்கத்தால் எழுந்து பார்த்தபோது காணாமல் போய்விட்டது... இரவில் உறங்கும்போது தொலையக்கூடிய என் ஆன்மா பார்ப்பதற்கு பின்வருமாறு இருக்கும்... அன்பானது... அறிவானது... அமைதியானது... இனிமையானது... இரக்கம் மிக்கது... குழந்தை போன்றது.. குழப்பம் விளைவிக்காதது... விளக்கங்கள் கேட்காதது... ஆன்மா கடைசியாக உடுத்தியிருந்த உடை பேரன்பில் நெய்த நிறமற்ற ஆடை... அன்பனின் ஆன்மாவை ஒன்லைனில் கண்டவர்கள் ஒப்படைக்கவேண்டிய முகவரி... கலைஞன், ஆண்டவன் சந்நிதி.... தேடிக் கண்டுபிடித்து தருபவரிற்கு குடியிருக்க இதயம் ஒன்று பரிசாகத் தரப்படும்... ஓடிவிட…
-
- 13 replies
- 3.3k views
-
-
உன்னால் கவிஞன் ஆனதிலிருந்து உனக்காக எழுதி எழுதி என் அயுளைக் குறைத்துக் கொண்டத்துதான் மிச்சம் நீ என்னை புரிந்து கொண்டதுமில்லை இனியும் புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் இல்லை நீ என்னை வாசித்ததில்தான் தவறு என்று எண்ணியிருந்தேன் இப்போதுதான் புரிகிறது உனக்கு தெரிந்த மொழியில் நானிருக்கவில்லையென்று என்னை உனக்கு விளங்கப்படுத்திக் கொண்டேயிருக்க என் அயுளை உனக்காக கரும்பலகையாக்க முடியாது பொறுமைக்கும் எல்லை இருக்கிறது தண்ணீர் கூட மூன்று தடவைக்குமேல் பொறுக்காது நான் எத்தனை ஆண்டுகள் பொறுப்பது நீ என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று போதும் இதுவரை உனக்காக கவிதையோடு நான் காத்திரு…
-
- 1 reply
- 921 views
-
-
எதையும் தாங்கும் இதயம் எனக்குள் இருக்கிறதென நீண்ட காலமாய் நினைத்துக் கொண்டிருந்தேன் உண்மை அதுவல்ல என்று உண்மையைச் சொன்னது உனது பிரிவு!...
-
- 2 replies
- 1.1k views
-