கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
"பெட்டையள்" கூட கதைக்கப்படாது.. நேற்றைய ஒரு பெட்டையின் அன்றைய வேண்டுகோள்..!!! அது வேறு யாருமல்ல.. அம்மா தான்..! "கதைச்சால் என்ன".. பதில் கேள்வி ஆழ் மனதோடு தற்கொலை செய்துவிட பெற்ற தாயை எதிர்த்து ஒரு கேள்வியா.. மனம் தனக்குத் தானே பரிசளித்துக் களித்துக் கொள்கிறது.! "இவன.. போய்ஸ் ஸ்கூலில போடுங்கோ.." ஏன்... அப்பதான் ஒழுங்கா வளர்வான்..! இப்ப என்றால்.. gay என்று சொல்லுவாங்க என்ற பயம்.. அப்ப என்ற படியால்.. நானும் மகிழ்ச்சியாக அதை ஏற்க.. ஆண்டுகள் 6 அங்கேயே கழிகிறது..! பள்ளிக்காலம்.. பருவ மங்கைகளின் நினைவின்றி.. பக்குவமாய் கழிகிறது..! பாடங்களிலும் தொய்வின்றிய சித்திகள்.. பல்கலைக்கழகம் வரை காலடி விரைகிறது.. அங்கும்…
-
- 58 replies
- 4.9k views
-
-
Tuesday, September 20, 2005 அவள் அவள் வீட்டு கதவு தானே திறக்கும் உள்ளே அணைப்பதற் கென்றே ஏற்றப்பட்ட விளக்கெளியில் உரிவதற்காய் உடுத்திய சேலையில் கலைப்பதற்கென்றே செய்த ஒப்பனையில் கசக்குவதற்காக சில மலர்களை காதேரம் வைத்து அழிப்பதற்காக வைத்த அகன்ற அழகிய பொட்டுடன் காத்திருக்கிறாள். உடம்பில் எங்கும் உணர்சியில்லை வயிற்றைதவிர என்வாயிற்று இன்று ஆணினமே அழிந்துவிட்டதா சுனாமி வந்து சுத்திக்கொண்டுபோய்வட்டதா படுக்கைவிரிப்பு பத்திரமாய் இருக்கிறதே வைத்தபொட்டு வைத்தபடியே இருக்கிறதே அதுஅழியா விட்டால் அவளிற்கு அமங்கலமல்லவா செல்லாத இராத்திரி சிறுகச் சிறுக விடியும்பகல் ஜயோ..பட்டினிப்பகலா?? எங்கோ ஒருகட்சி தலைவன் …
-
- 4 replies
- 808 views
-
-
மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால் அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை... மனதை உருக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சோகங்கள்தான் எனது கவிதை... மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால் அவளின் பேச்சுதான் எனது கவிதை... மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சுவாசம்தான் எனது கவிதை... மனதை தொடுவதுதான் கவிதை என்றால் அவளின் முத்தம்தான் எனது கவிதை... மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால் அவள்தான் எனது கவிதை...
-
- 11 replies
- 1.5k views
-
-
என்- இடத்தில் என்னை இழந்தேன் வாழ்வது நானல்ல என்னினைவில் நீ தான் இங்கு....! களங்கமற்ற உன் நினைவில்- கனவில் நிழல்களுடன்....நிதமும்.. நிஜமாகுமா...........?? "அம்மா.......'' அலறிடத் துடித்தேன் அழுதால் வாய் விட்டு..... அயலில் இருந்து அன்னியமாவேன்...! மனதுள் விக்கி...முனகி... முடியாமல் கதவினை மூடி... தாப்பாள் போட்டு கட்டிலில் சாய்ந்து.. கண்களை மூடினால்...... ''அம்மா.......'' அலறிடத்துடித்தேன் அழுதால் வாய்விட்டு.......? களங்க மற்ற-உன் நினைவில்....கனவில்.... நிழல்களுடன்....நிதமும்.... நிஜமாகுமா...... :?: :?: :?:
-
- 17 replies
- 3.1k views
-
-
அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே! இதயத்தில் இடி விழுந்தது! எம் தேசத்தின் குரல் ஒடிந்தது! விடியும் வேளையில் விளக்கு அணைந்தது!-புலிக் கொடியும் இறங்கி அரைக் கம்பத்தில் பறந்தது! ஈழத்தின் அரசியல் யாப்பை எழுத வேண்டியவனே! எப்படித் தாங்குவோம் உன் இழப்பை! தமீழீத்தில் இன்னொரு சுனாமியாய் உன் இழப்பு! நீ இல்லாத பேச்சுவார்த்தைக் களம்!-அது நீர் இல்லாத குளம்! நோய் வந்த போதும்-புலிக்கு ஓய்வு மரணத்தில் தான்!-என்று சிரித்தபடியே நீ செப்பியதை! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!-நான் நினைக்கிறேன் இனிப்பேச்சு வார்த்தை இல்லை! பேச வேண்டியதெல்hம் நீ பேசி விட்டாய்! பேச்சுக்கு இனி ஓய்வு-அதனால் தானோ-நீ எடுத்து விட்டாய் ஓய்வு!-நீ பேச வருகின்றாய் என்றால் எ…
-
- 23 replies
- 3.9k views
- 1 follower
-
-
இருபத்தேழு ஆண்டு முன்னால் இதே போன்ற ஒரு நாளில் இருளிலே வெடிச் சத்தம் இஷாவின் பின் உலுக்கியது புலி நாய்கள் பூந்து புள்ளைகளையும் ஆட்களையும் பலியாக்கிப் போட்டாண்டா பாதையிலே அவலக் குரல். பக்கத்துப் பள்ளிக்கு பறந்து வந்த செய்து கேட்டு திக்கற்று ஓடினோம் விக்கித்துப் போனோம் அள்ளாஹ் அள்ளாஹ் என்று அடங்கும் உயிரோடு பிள்ளைகள் துடி துடிக்க.. உள்ளம் நொறுங்கியது இருண்ட பள்ளிக்குள் எங்கும் மரண ஓலம் கரண்டிக் கால் நனைய காட்டாறாய் ரத்தம் காயப் பட்டோரை கைகளால் தூக்கும் போதே சாய்கின்ற தலை கண்டு வாய் விட்டு அழுதோம். கலிமாவைச் சொல்லி கண்களை மூடி விட்டோம் புலி நாயைப் பிடித்து பொசுக்க வெறி கொண்டோம் நூற்றி சொச்சம…
-
- 0 replies
- 424 views
-
-
தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம் வினாக்கள். அடுத்ததென்ன? அப்ப நாளை காலையில் செயலாற்றும் இடத்தில் சந்…
-
- 1 reply
- 966 views
-
-
kavithaiஆகுதி போதாதோ?................... பாரடா தமிழா பாரினில் உன் நிலமை உலக நாடுகள் வாய்மூடி, கண் பொத்தி உணர்வின்றி ஊமையாய் வீற்றிருக்க உடல் சிதறி உறுப்பிழந்து உதிரத்தில் நீ தோய்ந்திருக்க உதவிடவோ யாரும் இல்லை உணவும் தான் உனக்கு இல்லை உணவின்றி மடிகின்றாய் உறக்கத்தில் மடிகின்றாய் முதலுதவி இல்லாமல் மடிகின்றாய் முப்பொழுதும் நீ மடிகின்றாய். காந்திதேசம் இன்று எம்மவரை காவுகொள்ள உதவுகிறது மூடர்கள் கையில் ஆட்சி மூர்க்கத்தனமான கொலைவெறி கடற்கரையில் வெட்டவெளியில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை ஏன் இந்த அவலம்? ஏங்குதடா இதயம். பூமாதேவி பொறுமை காப்பதேன்? பூக்களைக் கோடரியால் சாய்க்க விடுவதேன்? கோபம் கொண்டு பொங்கி எழுந்து போர…
-
- 1 reply
- 821 views
-
-
ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க... ஆலயங்களில் மணியொலிக்க ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க தாமாகவே கண்பனிக்க தரணியில் மீண்டுமோர் கார்த்திகை கார்த்திகை செல்வங்களான கண்மணிகளே மாவீரர்களே பார்தனில் தேடுகின்றோம் பாசங்களே உங்கள் கோவில் கோவிலதை உடைத்துப்பகை கோலவிழாக்கள் கொண்டாடினர் பாவியர்க்கு சந்தோசமாம் பாழாக்கி விட்டனராம் துயிலுமில்லங்களை துயிலுமில்லங்களைத் துடைத்தாலும் துடைபடுமோ உங்கள்நினைவு விழிகளில் வழிகின்றநீர் விபரத்தை விளம்பித்தான் நிற்காதோ நிற்கின்றவிக் கார்த்திகையில்நினைவெல்லாம் நீங்கள்தானே காற்றென வந்தவரே கனலென நின்ற கற்பூரங்களே கற்பூரங்களுக்கு விளக்குவைப்போம் கார்த்திகையில் விழாஎடுப்போம் தமிழராய் ஒன்றுபடுவோம் தரணியில் தமிழரசு அமைப்போம…
-
- 1 reply
- 670 views
-
-
ஆகையால் உதிர்ந்துகொண்டே இருக்கட்டும்.. ---------------------------- பூக்களைப்பிய்த்தெறிந்த காற்றுக்கு தெரியப்போவதில்லை பூக்கள் மென்மையானவை அழகானவை அன்பை பரப்புபவை என்று... ஆற்றாமையுடன் துவண்டுவிழும் இதயமொன்றின் பாடல்களைகேட்கும் பொறுமையும் அதற்கு இல்லை.. ஆயினும்... இதயத்தின்பாடல்களை கிழிந்து தொங்கும் இதழ்களின் ஓவியத்தை ஒடிந்த பல இறக்கைகள் சுமந்துகொண்டுதான் செல்லும்.. அவற்றில் ஒன்றாய் என் கவிதைகளும் பயணிக்கலாம்.. என் நேற்றைவரை எழுதி முடித்த விதிக்கிழவன் மார்பை பார்த்து என் மலர் மனதை பிய்த்தெறிய காற்றை ஏவிவிட்ட கதைக்கு நீதி கேட்க, அவன் எழுப்பிய ஆயிரமாயிரம் சிலுவைகளில் அறையப்பட்டு கனவழிந்து கண்ணீராய் செத்துப்போன காதல்களின் மொழியாய் பேச பூத்திருக்கலாம் என்கவித…
-
- 22 replies
- 1.4k views
-
-
ஆக்காண்டி ஆக்காண்டி... சண்முகம் சிவலிங்கம் ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். வைத்ததுவோ ஐஞ்சு முட்டை பொரித்ததுவோ நாலு குஞ்சு நாலு குஞ்சுக் கிரை தேடி நாலுமலை சுற்றி வந்தேன், மூன்று குஞ்சுக் கிரைதேடி மூவுலகம் சுற்றி வந்தேன். ஆக்காண்டி, ஆக்காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்? கல்லைக் குடைந்து கடலோரம் முட்டை வைத்தேன். குஞ்சு பசியோடு கூட்டில் கிடந்த தென்று இன்னும் இரைதேடி ஏழுலகும் சுற்றி வந்தேன். கடலை இறைத்துக் கடல் மடியை முத்தமிட்டேன். வயலை உழுது வயல் மடியை முத்தமிட்டேன். கடலிலே கண்டதெல்லாம் கைக்கு வரவில்லை. வயலிலே கண்டதெல்லாம் மடிக்கு வரவில்லை. …
-
- 10 replies
- 3.6k views
-
-
போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல்லவும் ஆசை முதல் நாள் …
-
- 27 replies
- 3.7k views
-
-
போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல…
-
- 14 replies
- 2.1k views
-
-
ஆசை அதிகாலை தன்னில் பறவைகளின் இசையில் எழுந்திட ஆசை சூரியன் தீண்ட முதல் பணித்துளிதன்னை-நான் தொட்டு விளையாடி மகிழ்ந்திட ஆசை தென்றலின் வருகையால் அசைந்திடும் மொட்டுக்கள் மலர்ந்திடும் அழகால் சிந்திடும் பனித்துளியில் நான் நனைந்திட ஆசை மென்மையான பூக்களின் இதழ்களில் - என் முகம் புதைத்து கண்முடி -இந்த வாழ்கை தன்னை மறந்திட ஆசை இளங்காற்றின் அசைவில் ஆடிடும் மரங்களின் ஓசை தனை ரசித்தபடி நதிக்கரை ஒரமாய் நடத்திட ஆசை சண்டை இல்லா உலகில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் மட்டும் வாழ்வதை பார்த்து ரசித்து விட ஆசை நிறைவு பெறுமா இவள் இறுதி ஆசைமட்டும் புரியாது …
-
- 9 replies
- 1.7k views
-
-
ஆளும் கட்சிக்கு வரி மீது ஆசை எதிர்க்கட்சிக்கு கரி மீது ஆசை மக்களுக்கு மானியம் மீது ஆசை தாத்தாவுக்கு முதல் போக ஆசை பாட்டிக்கு மகனோடு வாழ ஆசை மகனுக்கு - அம்மாவின் பென்சன் மீது ஆசை மருமகளுக்கு ஒரு சமையல் ஆசை கணவனுக்கு உழைக்க ஆசை மனைவிக்கு புருசன் வீட்டிலிருக்க ஆசை பிள்ளைக்கு அப்பா அம்மா வெளியில் போக ஆசை வாடிக்கையாளருக்கு வங்கிக்காட் மீது ஆசை வங்கிக்கு வட்டிமீது ஆசை விற்பவனுக்கு விலைமீது ஆசை வாடிக்கையாளனுக்கு கழிவு மீது ஆசை வாகன ஓட்டிக்கு வேகம் மீது ஆசை புகை பிடிப்பவனுக்கு- நூறு ஆயுள் மீது ஆசை இந்துவுக்கு இந்தியாவை ஆள ஆசை இசுலாமியருக்கு உலகை ஆள ஆசை கத்தோலிக்கருக்கு காசால் ஆள ஆசை வாலிபருக்கு திருமண ஆசை …
-
- 47 replies
- 5.2k views
-
-
நான் பிறந்த மண்ணை தொட்டுப்பார்க்க ஆசை வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்க ஆசை பலாமரத்து கனியை பறித்து திண்ண ஆசை பனை மரத்துக்கள்ளை களவாகுடித்துப் பார்க்க ஆசை ஒடியல் மா புட்டு சாப்பிடத்தான் ஆசை தேக்க மரத்துக்கிளியை பிடித்து வளர்க்க ஆசை தமிழ் வாத்தியாரிடம் குட்டு வாங்க ஆசை கோவில் மணியை ஒருக்கா அடித்துப்பார்க்க ஆசை புளியமரத்து பழத்தை சூப்பித்திண்ண ஆசை மாமரத்துக் காயை குத்திதிண்ண ஆசை கிணத்து தண்ணிரில் அள்ளி குளிக்க ஆசை கொடிகாமத்து தேங்காய் கொறித்து திண்ண ஆசை கீரி மலைக் கேணியில் நீச்சல் அடிக்கத்…
-
- 23 replies
- 2.5k views
-
-
பூட்டி வைத்த பைங்கிளிக்கும் பறந்து பார்க்க ஆசை வரும் பருவம் கண்ட பாவைக்கும் வாழ்ந்து பார்க்க ஆசை வரும்..! ஆசைகள் கோடி இதய அறைகள் எங்கும் பறந்தடிக்க.. சமுதாயக் கேடிகள் பூட்டிவிடுவர் அவளை கோட்பாட்டுக் கோட்டைக்குள்..! நாளும் அவள் அடக்கி வைத்த ஆசைகள் வேட்கைகளாகி வெறுமையில் கழிய ஆசைகள் அலுத்து மனதும் பாளடைந்து ஆகிறாள் பைத்தியம்..! இறுதியில் அருவமும் உருவரும் அற்ற பேய்களாய் அவள் ஆசைகள் ஆடுகின்றன. கூடி இருக்கும் மனிதரோ வேப்பிலையால் போக்குகின்றனராம் பேய்களை..!! யார் தான் புரிந்திடுவர் சமுதாயக் கோட்டைக்குள் சிறகடிக்க நினைக்கும் பேதையவள்.. உள்ளுணர்வை..??!
-
- 21 replies
- 2k views
-
-
ஆச்சி எடன அரிவாளை.. எதுக்கடா பேராண்டி பொங்கலுக்கு புதுக்கதிர் எடுக்கவோ..?! இல்லையன ஆச்சி இனமானப் போரில் பொட்டிழந்து பொலிவிழந்து.. குளிக்கும் உன்னைக் கூட கணக்குப் பண்ணும் சிங்கள **களை போட்டுத்தள்ள...! விடுடா அது அவன் பிறவிக் குணம்.. இல்லையன ஆச்சி தமிழர் நாங்கள் புலியாய் பாய பயந்தோடிய தெருநாய்கள் உலக உருண்டையின் பொய் நயத்தால் வெற்றிக் கோசம் சேர்த்து எம் தேசம் மேய்கின்றன. இன்னும் என்னை சும்மா இருக்கச் சொல்லுறியோ..??! தம்பி ராசா.. பொங்கிய இரத்தம் போதும் செத்து வீழ்ந்ததும் போதும் வீரம் விவேகம் விளையாடினதும் போதும் எனிக் கொஞ்சம் இராஜதந்திரம் படிக்கட்டும் எம் இனம் சும்மா கிடவடா..! என்னன ஆச்சி சொல்லுறா கண் முன்னால அநியாயம் கண்டும்...…
-
- 11 replies
- 906 views
-
-
ஆடிக்கலவரம்- கறுப்பு ஜீலை ஓடி ஓடிச் சிங்களம் ஈழத்தமிழரைக் கொன்று குவித்த நாளாம் அம்மா சொன்னாள்! கண்டதில்லை கலவரத்தின் நிலவரம் ஆனால் கண்டவர் உணர்ந்தவர் யாவரும் சொன்னார் "வாழை" போலே வெட்டிச் சாய்த்தார்களாம் நம் உறவுகளை தலைமுறைத் தளிர்களை" நாவினை அறுத்தால் கோஷங்கள் அடங்கலாம் தமிழீழம் எனும் உணர்வுகள் அடங்குமா?! கைகளை அறுத்தால் வேறு கதி இன்றி அடங்குவோம் என்று நினைத்தால் நம்பிக்கை அறுபட்டுப்போகுமா? அடிபட்டுப் போகுமா?! ஆண்ட பரம்பரை நாங்கள் என்று சொல்லித் திரிந்தால் போதுமா? மீண்டும் ஆளவேண்டும் என்று நினைப்பது தமிழனே தவறென்று ஆகுமா? கொன்று குவிப்பவன் காலைப் பிடித்தொரு கோழை பிழைப்பு இங்கு வேண்டுமா?! வென்று எங்கள் கொடி நாட்டுதல்…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஆடிப் போனது வாழ்க்கையா...? ------------------------ ஆடிக் கலவரத்தில் ஆடிப் போனது நாட்டு நிலவரம் என்பதால் ஆவணியில் அவனியின் ஆதரவுக்காய் ஆலாய்ப் பறந்தும் பயனில்லாது புரட்டாதியில் புதிய படை புறப்பட்டு புரட்சி செய்ய முற்பட்டு ஐப்பசியிலும் எப்பசியும் தீராத முட்டுக்கட்டை முகடாய் விரிய கார்த்திகையில் காரிருள் நீக்கும் காவலர் படை ஆகுதியாய் களமிறங்கி மார்கழியில் மரபுப் படையாய் மதங் கொண்டு போராடி தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் நம்பிக்கை பொய்த்துப்போய் மாசியிலும் மனதிலொரு நம்பிக்கை முளை விடும் எண்ணம் பொதிந்து பங்குனியில் சகுனிகளின் சதிவலை நீண்டு விரிந்து சதி செய்ய சித்திரையில் இத்திரை விலகும் கனவுடன் தமிழ் வருடம் தொடங்க வைகாசியில் வ…
-
- 11 replies
- 1.8k views
-
-
ஆடிப்பிறப்பு விடுதலையைத் தேடி... ... எத்தனையோ ஆடிகளை கடந்து போயிற்று என் வாழ்க்கை. இன்னமும் நானும் சேர்ந்துபாடிய பாட்டின் மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை நான் அனுபவித்ததேயில்லை. நாளைகள் கடந்து நிரம்ப நாட்களாயிற்று. இப்போ என் தோழர்களுமில்லை. ஆனந்தமுமில்லை. கொழுக்கட்டையும்..கூழும்.. கனவாகிப் போன வாழ்க்கைகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு. இப்போதும்.. பற்கள் விழுந்து போன என் தாய்.. என்னையும் நினைத்தபடி தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால் கொழுக்கட்டைக்கு பற்கள் பதித்துக் கொண்டிருப்பாள். எமது கனவுகளைப் போலவே குமிழிகளாய் வந்து வந்து வெடித்து வெடித்துப் போகிற கொதிக்கும் தண்ணீருக்குள் கூழுக்காக மா உருண்டைக…
-
- 3 replies
- 2.9k views
-
-
ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம் கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார் தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர் கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய். சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச் சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார். தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில் உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே. நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய் தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே. மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும் வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்…
-
- 3 replies
- 826 views
-
-
சாய்த்துச் செல்லப்பட்ட ஆடுகளில் பலியிடப்பட்டது போக மீதியானைவைகள் பட்டிக்கு திரும்புகின்றது இந்தச் சந்தையில் ஆடுகள் எப்போதும் பலியிடப்படுவதற்கே வளர்க்கப்படுகின்றது நரிகள் பரிகளானது போல் ;ஆடுகள் நாய்களாகி பலியில் இருந்து தப்பித்தும் கொள்கின்றது வெள்ளை நிற மேனி விரும்பி பன்றியான ஆடுகள் தெருவெங்கும் அசிங்கங்களை துப்பரவு செய்து மகிழ்கின்றது மான்களான ஆடுகள் வனவிலங்குச் சாலைகளில் துள்ளிக் குதிக்கின்றது பசுவான ஆடுகள் கோயில்களை சுற்றி பவ்வியமாக சாணிபோடுகின்றது நரிகளான ஆடுகள் ஊர்க்கோடிகளில் என்னும் ஊழையிடுகின்றது புலியான ஆடுகள் எல்லாம் மாண்டுபோனது எந்த வடிவமெடுத்தென்ன சிங்கத்துக்கு பசிவரும்போது இரையாவது வித…
-
- 13 replies
- 1.6k views
-
-
ஆடுகளுக்காக... அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம் விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக சலனமின்றி மூப்படைகிறது சந்ததிகளின் ஆயுள். விடியலைப் பறைசாற்றும் நோக்கில் ஆர்ப்பரித்த சேவல்களால் வாழ்தலின் வேட்கை அதிகரித்து உயிர்த்தெழுந்த போதெல்லாம் சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன. சிறை மீட்பாளர்கள் சிந்திக்கும் அவகாசத்தில் கூண்டுக்குள் வேட்டையாடல்கள் விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும். கசாப்புக் கடைக்காரனின் நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள பிடியளவு தழைகளையும் ருசித்துத் தின்னும் ஆட்டின் இறுதி நிமிட வாழ்தலின் நிதானத்திற்கு நிகரானது ஆதிக்குடிகளின் நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்…
-
- 0 replies
- 891 views
-
-
மேய்ப்பன் தடியோடு நடக்கிறான். தடி, ஆடுகளைத் திருப்பும் என்றும் அதுவே தன் பலமென்றும் இன்னும் இன்னும் நினைத்திருக்கிறான். மேய்ப்பனை மேய்க்கும் மேய்ப்பன் மேய்ப்பனை நம்பியதாக என்றுமே சொல்லியதில்லை. தடியைப் பற்றி மட்டும் பேசியிருக்கிறான். பல ஓநாய்களிடம் இருந்து காலனியைப் பெற்ற மேய்ப்பன் ஆடுகளை நோக்கி எப்போதும் பேசியதுமில்லை பசி தீர்க்கும் வழியில் அழைத்துக் கொண்டு சென்றதுமில்லை. ஆடுகளின் குரலில் பேச மட்டும் கற்றுக்கொண்டான். தன்னை மேய்க்கும் மேய்ப்பனோடு இரவுப்போசனங்களில், ஆடுகளின் கருகிய தசைகளை மென்றுவிட்டு கனவுகளைத் துப்பி விடுவான். ஆடுகள் தங்கள் முன் கையளிக்கப்பட்ட தடியை மட்டுமே நம்பின.. நம்பிக்கொண்டு இருந்தன மேய்ப்பனை ஏறெடுத்…
-
- 1 reply
- 1k views
-