கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
காதல் நவரசம் காதல் நவரசம்:.. கொஞ்சி நிற்கும் கருமை விழிகள் கெஞ்ச வைக்கும் செவ்வாய் இதழ்கள்! விரல் தொடுகையின் போது செல்ல மிரட்டல்! வாரி அணைக்கையில் படபடக்கும் நெஞ்சம்! காலை வணக்கம் சொல்ல மறந்தால் சின்னப்பிள்ளைக் கோபம்! ஊட்டி விடுகையில் உன் விரல் பிடித்துக் கடித்தால்!! அருவருப்பாய் ஒரு நெளிப்பு! அலுவல் முடிந்து களைத்து வருகையில் கருணைவழியும் கவனிப்பு!! என்ன தருவாய் பெண்ணே என்றால்!! நாணத்தில் விழி மூடி உன் வீரம்மொத்தமும் கூட்டித் திரட்டி’வைப்பாய் இதழ் முத்தம்!! காதல் நவரசம் யாவும் உன் செல்ல முகத்திலே காண்கிறேன்!! பெண்ணே உன்னால் வாழ்கிறேன்! நன்றி.. எல்லாம் என் பாதி சொன்னதைக்கோர்த்தொரு வடிவம்..)))
-
- 9 replies
- 3.4k views
-
-
பெரியார் ஒருவர்தான் பெரியார் அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் - தந்தை பெரியார் பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி - தந்தை பெரியார் மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான் மனிதனைத் தீண்ட மறுத்தானே! நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன் நரிகளின் வாலை அறுத்தானே! கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில் கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்! காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார் மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை! வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை -கவிஞர் காசி ஆனந்தன்
-
- 5 replies
- 3.4k views
-
-
என் செல்லமே செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ கடுங்கோவங்கொண்டு பிறர் உனை கடி நாய் என அழைத்த போதிலும் ரொம்ப பாசத்தோடு நான் உனை ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில் செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே காலை மாலை என தவறாமல் பாலை நான் தட்டில் ஊற்றுகையில் நன்றியோடு என நோக்கி நாவால் வருடும் நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே எங்கு நான் வெளியில் சென்றிடினும் என் வழித்துணையாக வந்த உனை எவர் கடத்தி சென்றனர் இன்று எப்படி இருக்கின்றாய் அங்கு நீ நான் உறங்கிய போதில் என்னருகில் விழித்திருந்து காவல் செய்வாயே நீ இன்று இல்லாத இந்த நாட்களில் விழிகள் …
-
- 19 replies
- 3.4k views
-
-
அம்மா தாய் அவள் தந்த உயிர் துடிப்புக்கள் சேயாய் தந்தவிட்ட சிறு சிணுங்கல்கள் தாய் மடி மீது கண் உறங்கிய பொழுதுகள் பாய் மீது படுத்த போதே தொலைந்ததே தாய் மீது கொண்ட எல்லையில்லா அன்புக்கும் தாய் மண் மீது கொண்ட பற்றுதலுக்கும் பாய் சொல்லி விட்டு பவித்திரமாய் ஹாய் ஆக புகுந்துவிட்ட வாழ்வின் அந்நியம் தேயாமல் மறையாமல் வளரும் நினைவுகள் தாய்மைக்கு தாயாக நானிங்கே பார்த்திட இயலாமல் இயங்குகின்ற பொழுதுகளில் தாயின் நோய் கண்டு மனம் நொந்து அம்மா என்றே வாய் விட்டு அழைக்கும் ஆன்மா இங்கே
-
- 23 replies
- 3.4k views
-
-
மையவாதச் சகதிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகள் அரிப்பெடுக்கும் முதுகை சொறிய எவன் வருவான் என தேடுகின்றது உலகின் எந்த மூலைக்குள் போனாலும் ஊர்க்காரனே சொறிந்துவிடவேண்டும் நாலுபேராவது சொறிந்தால் தான் வாழ்வுக்கு அர்த்தம்கிடைக்கின்றது இருந்தும் நாற்பதுபேர் சாட்டையுடன் நிற்பதை என்னும் உணர்ந்துகொள்ளவில்லை. எதிர்பார்த்தபடி அரிப்பு வழமைபோல விரைவில் கூடிவிட்டது தங்களுக்குள் சொறிய ஆரம்பித்துவிட்டார்கள் இம்முறை உங்களுக்குள் சொறிந்து விழையாடும் கோமாளி ஆட்டத்தில் மக்களுக்கு ஆர்வமில்லை ஏனெனில் துப்பாக்கிகளால் எமக்குள் சொறிந்துவிழையாடிய ஆயிரமாயிரம் விழையாட்டை கண்டு சலித்தவர்கள் கள்ளன் பொலீஸ் விழையாட்டு எமக்கு உயிரை எடுத்து விழையாடும் துரோகி த…
-
- 17 replies
- 3.4k views
-
-
தமிழக சினிமாவில் பா.விஜயின் “ள”கரமும் தமிழீழப்பாடலில் அறிவுமதியின் “ழ”கரமும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் சினிமாப்பாடல்களின் போக்கில் ஒரு வித்தியாசத்தைக் காட்ட வேண்டும். அதற்கேற்ப கவிவரிகளை செதுக்க வேண்டும் என்பது தமிழக கவிச்சிற்பிகளின் பேராவல்.இதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இதில் எத்தனை பேர் வெற்றி பெற்றார்கள். “வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கலியாணம்” போன்ற கவி வரிகள் சினிமாப்பாடல்களின் போக்கில் தனித்துவந்தான். பாடல்களில் புதுமைஇ தனித்துவம் இ இரசிகர்களுக்கு திடீரதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய புதுச்சொற்களை புனைதல் என்பன பாடல்களை இமயத்திற்கு உயர்த்தியது என்பது கூட மறுக்கப்பட முடியாததே. பாட்டு இ படம் இசினிமா நடிகர் இந்த சொற்களை கேட்டவுடன் உலகில் எந்த மூலையில் இருக்கும…
-
- 3 replies
- 3.4k views
-
-
புலம் பெயர் சிட்னி தமிழனே புண்ணியம் தேடி அழைகிறாய் ஆடி கலவரத்தை ஏன் மறந்தாய் ஆடி கலவரத்தை காட்டி அவுஸ்ரேலியா வந்தாய் :x மெழுகாய் உருகிய எம்மவருக்கு மெழுகுவர்த்தி ஏற்ற ஏன் மறந்தாய் அழைக்கவில்லை உன்னை ஆயுதம் ஏந்த, ஆயுதம் ஏந்தும் எம்மவருக்கு குடைபிடிப்பதற்கும் :evil: . சூரசம்சாரத்துக்கு விடுமுறை எடுத்து குடும்பத்துடன் செல்லுகிறாய் தமிழ் தெய்வமான முருகனுக்கு நன்றி சொல்லுகிறாய் அசுரர்களால் அழிக்கபட்ட தமிழனை நினைவு கூற ஏன் மறந்தாய் :?: உலக சமாதானம் வேண்டி யாகம் செய்கிறாய் உன் ஊரே சுடுகாடாய் கிடக்குதே உறவுகள் சமாதான போர்வையில் அழிக்கபடுகிறார்கள் உலக சமாதானம் செய்யதான் முடியுமா உன்னால் :?: புட்டபத்தி செல்கிறாய் விடுமுறையில் புளுகுக…
-
- 20 replies
- 3.4k views
-
-
நேற்று மொட்டாய் நின்று... இன்று பூத்த பூவது! கட்டுக்குள் அடங்காத காளையை, கட்டியிழுத்த தேரது! இழுத்தலும் பூத்தலும் பூவின் புன்னகைக்குள், தேனாய் இனித்தது! தேன் குடிக்கப் போன வண்டு தேருழுத்துக் களைத்தது! காரிருளில் கதவடியில், கண்ணான கண்மணி கண்ணருகே நின்று நெஞ்சருகே வந்தாள்! தொட்ட இடமெல்லாம் சுட்டன மாமல்லபுரச் சிற்பங்கள்! பதைபதைத்த நெஞ்சம் தப்பி வந்த முயல் போல் தாவி நின்று மூச்சுவிட, மேவிவிட்ட உச்சந்தலையில் ஈரப்படுத்தியது என்னிதழ்! பூச்சூடிய குங்கும வாசம் வாவென்றழைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் பூவிதழோடு போராடி வெற்றிகண்ட வண்டு, கட்டிலறைத் தேன்கூட்டே கவர்ந்து சென்று ஆறுதலாய் ரசித்து ருசித்து... முழித்தேனும் முழுத்…
-
- 27 replies
- 3.4k views
-
-
நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. ஆனையிறவின் நாயகனே வன்னிவிக்கிரமவில் புயலவனே..! தீரத்தின் விளைநிலமே வன்னியின் செல்வ மைந்தனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. தமிழர் சேனைத் தலைவனின் வீரத் தளபதியே தலைவன் செய்திகள் சேருமுன் சாதிக்கத் துடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீரம் நெஞ்சைத் தொடுகுது நெஞ்சைச் சுடுகுது அண்ணா உன் மரணம் நெஞ்சைச் சுடுகுது. கூவி வந்த யாழ்தேவி புரட்டி விட்டவனே திமிரெடுத்து வந்த சிங்களத்தின் கதை முடித்தவனே..! நெஞ்சைத் தொடுகுது அண்ணா உன் வீர…
-
- 18 replies
- 3.4k views
-
-
-
- 17 replies
- 3.4k views
-
-
காதல் ஒன்றும் பரீட்சையல்ல காகிதத்தில் எழுதிச் சொல்ல கண்களின் உரையாடல் மொழியொன்றும் தேவையில்ல இமைகளின் அசைவில் புகுந்திடும் காதல் இடைவெளியின்றி தொடர்ந்திடும் மோதல் ஆயிரம் கோடி ஆசைகள் ஆன்மாவில் ஊறும் அன்பின் பெருக்கம் அருவியாய்ப் பாயும் இதயத்தின் துள்ளல் இணைவினைச் சொல்லும் விநாடிகள் வந்து உணர்வுகள் ஊறும் விளக்கமின்றி உதடுகள் விரியும் விடிவினைக் கண்கள் விரைவாய் அழைக்கும் காதலன் முகம் காண ஆசைகள் பறக்கும் விழித்துக் கொண்டே கனவுகள் மிதற்கும் காதல் உள்ளம் அத்தனையையும் வெல்லும் ஆழ்கடல் தொலைவில் ஆன்மாக்கள் உலாவும் அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல் உணர்ந்தவர்களுக்கு மட்ட…
-
- 15 replies
- 3.4k views
-
-
நீயா அவள் ???? நித்தம் நித்தம் வந்து முத்தம் கொடுத்த என்னை சித்தம் கலங்கிய பித்தா என்று நெட்டித் தள்ளியதும் ஏனோ ?? எந்தன் பிழைதான் என்னவோ?? பள்ளியறையில் பங்காக சிந்து பாட வந்த பொழுது என்னை நீ , முட்டித் தள்ளியதும் ஏனோ ?? கொத்துக் கொத்தாக நீயாக , வந்து முத்தம் கொடுத்ததும் , முன்பு நீ , அத்தான் !! அத்தான் !! என்று நொடிக்கொரு தடவை அழைத்த நினைவு , என் நினைவில் முட்டித் தள்ளியதே........ அடி கள்ளி..... நீயா அவள் ???? கோமகன் 11 மார்கழி 2013
-
- 19 replies
- 3.4k views
-
-
செவ்விளநீர் மர நிழலில் மண்ணழைந்து- செம்பருத்தி பூ இதழ்பிரித்து பொட்டு வைத்து மெல்லிய காற்றில் அணிஞ்சில் பழ கோது கொண்டு விசில் ஊதி.......... ஐஸ் பழ வான் பின்னால் ஓடி அடித்து பிடித்து சில்லறை கொடுத்து நாவில் பனியுருக நாவால் உதட்டை துடைத்து துடைத்து சுவைத்தோமே வருமா வருமா? மீண்டும்-அந் நாட்கள் ? சுகம் தருமா தருமா? பாட நேரம் வெளியோடி காளிகோயில் மாமரம் மீதேறி பறித்து வந்த மாம்பிஞ்சை ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே அக்காலம் வருமா வருமா? சுகம் தருமா தருமா? கள்ளன் பொலிஸ் விளையாடி கள்ளனுக்கு பொலிஸ் "ஊண்டி போட " அவன் அழுதுகொண்டு வீட்டை -ஓட அப்பா கிட்ட உதை வாங்கினோமே வருமா வருமா அந்நாள்? சுகம் தருமா தருமா? …
-
- 23 replies
- 3.4k views
-
-
வணக்கம் பிள்ளைகள், வயசுபோன நேரத்திலை இந்தக் குளிருக்குள்ளை நானும் என்னத்தைத் தான் செய்யுறது. ஊரிலை மாதிரிக் காத்தாட வெளியிலை போகேலுமோ அல்லது நாலு பேர் சேந்து விடுப்புக் கதைக்கேலுமோ அல்லது பேரப் பிள்ளைகளைப் பிடிச்சு வைச்சுப் பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லிப் பேக்காட்ட ஏலுமோ. சரி உந்த ரீவீப் பெட்டியிலை எங்கடை நாடகப் பெண்டுகள் அழுதுகொண்டு இருப்பாளவை. அதைப் பாக்கலாமெண்டால் உந்தச் சின்னவன் தான் காட்டூன் பாக்கவேணும் எண்டு போட்டு தூரத்திலை இருந்து ரீவீ போடுற கட்டையைப் பறிச்சுக்கொண்டுபோய் வைச்சுக் கொண்டு இருக்கிறான். பின்னை இந்தக் கட்டிலிலை வந்து கூரையைப் பாத்துக் கொண்டு கிடக்கேக்கை தான் அந்தக் கால ஞாபகம் வந்துது. அதுதான் எழுதி உங்களிட்டைக் காட்டுறன். நீங்களும் வாசிச்சுப் போட…
-
- 15 replies
- 3.3k views
-
-
வெல்க தமிழ் இயல்பாய் எழுவாய்! புயலாய் சுழல்வாய்! தமிழா!..... இதுவே முடிவாய் முயல்வாய்! எழும் தழல் மூச்சில் தமிழ் முகம் சிரிக்க, விழும் கனி மடியினில் உலகமும் வியக்க. விழுதுகள் பலமெது? - இது விடை தரும் காலம் அழுது தொழுது அலைந்தது போதும். விழி மடல் திறவா விதியையும் தகர்ப்போம் விரைவீர்! எழுவீர்! வெல்க உரைப்பீர்! அழுகிய பண்டமாய், அனாதிப் பிணங்களாய், குருதிவடி நெஞ்சமாய் குமுறியது போதும். எழுவீர்! எழுவீர்! எண்திசை வெளிக்கும் எங்களின் எழுச்சியில் எல்லாமே சிறக்கும். அழகுறு அன்னையின் விழி நகை மலர, உலகொரு சொல்லதில் உயர்வதைப் பகர, தெளிவுறு தலைவனின் திறனது வெல்ல எழுவீர்! எழுவீர்! வெல்லும் தமிழ் சொல்ல. ப…
-
- 5 replies
- 3.3k views
-
-
சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்! சூடான பாலை-வனத்திலே .... நீராடினோம்!! என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது! மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!! தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என் முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ??? பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு! பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!! இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில், நம் பயணம் தொடர்ந்தபோதும்..., சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்..., பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!! மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்... அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு பாதி தெரிந்த உருவங்கள்... தெறி…
-
- 41 replies
- 3.3k views
-
-
அட்சய பாத்திரம் பணத்தை பங்கிட்டேன் பாதியாய் குறைந்தது அறிவை அளித்தேன் அணுவளவும் குறையவில்லை அன்பை பங்கிட்டேன் என்ன விந்தையிது அளவில்லாமல் பெருகியதே!!!
-
- 11 replies
- 3.3k views
-
-
அது ஒரு நிலம்... விடுதலைக் கனிதனைச் சுவைக்க உயிர்தனைக் கருவியாக்கி உடல்தனை வித்தாக்கி வலிதனை தனதாக்கி... தசாப்தங்கள் மூன்று குருதி பாய்ச்சி செய்த விளைச்சல்தனை அறுவடை செய்யக் காத்திருந்த நேரம்...... முதுகு கூனியதுகளும் முள்ளந்தண்டு விலகியதுகளும் சகுனிகளும் சோனியாக்களும் தம் பழி தீர்க்க உயிர்ப் பலி தனை ஒரு இனம் மீதளிக்க.. விடியற் சூரியனின் திசையில் அன்றி நிலமே சிவப்பானது தமிழர் குருதி தோய்ந்து..! கற்புக்கு அரசி கண்ணகியும் சிலையாகி மெளனமாக.. சேலை வழங்கி மங்கை தன் மானம் காத்த கண்ணனும் கண் மூட சிங்கள ஓநாய்களின் துகில் உரிதல் இச்சைப் பசிக்கு அனுதினம் ஆளாகின்றார் தமிழ்ப் பெண்டிர்..! வீரத் தமிழன்…
-
- 23 replies
- 3.3k views
-
-
பரீட்சை(பிரசவம்!) தாய்மார்கள் மாத்திரமே பிரசவ வலியுடன் பிள்ளைகள் பெறுவதாய் எவர் சொன்னார்? பள்ளியில் கற்கின்ற மாணவர் நாமுந்தான் வருடத்தில் மூன்றுமுறை மகப்பேறு அடைகின்றோம்! கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை! தைமாதம் பள்ளியில் தொடங்கும் தேனிலவு சித்திரை புது வருடத்தில் பிரசவ வலியாகி எமது உயிரைக் கொல்லும்! தொடர்ந்து தேனிலவு தொழிலாளர் தினத்துடன் தொடங்கி மூன்று மாதங்களில் எமக்கு மறுபடியும் பிரசவம்! மார்கழியில் குழந்தை யேசுவின் பிறப்பு வரும்வரை தேனிலவும் பிரசவமும் பள்ளியில் எமைச் சக்கரமாய் சுற்றிவரும்! மூன்று மாதங்களில் வருந்த…
-
- 21 replies
- 3.3k views
-
-
கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தத் திரியில் நான் என்னுடைய சில குறுங்கவிதைகளை( அது கவிதையா இல்லை மொக்கையா என்று நாங்கள்தானே சொல்லணும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்யுறது எல்லாம் நானும் ஒரு கவிதை எழுதிடவேணும் என்ற ஆர்வக்கோளாறுதான். ) பதியலாம் என்றிருக்கிறேன். நீங்களும் உங்களுடைய குறுங்கவிதைகளைப் பதியுங்கள் (பார்ரா..சேர்ந்து அடிவாங்குறதுக்கு ஆட்கள் சேர்க்கிறான் என்று இன்னும் சிலர் முறைப்பது இப்பவே மனக்கண்ணில் தெரியுது.) எதுநடந்தாலும் நான் பின்வாங்கிறதா இல்லை.(அப்ப என்ன ஆணிவாங்கப்போறியா என்று யாரும் கடந்தநூற்றாண்டில் காலவதியான மொக்கையை போடாதீங்க.) இந்த திரியை நானே தைரியமாக தொடக்கி வைக்கிறேன்.(பயப்படுறது எழுத்தில தெரியலைதானே) அடைத்துச் சா…
-
- 25 replies
- 3.3k views
-
-
யாயும் ஞாயும் - கவிதைகள் ஓவியங்கள்: ரமணன் பழைய முகப்படக்காரி தன் பழைய புகைப்படத்தை பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள் புதையுண்ட இளமை கிடைத்தவளாய் உற்றுப் பார்க்கிறாள். இப்போதில்லாத நீண்ட தலைமுடியின் இரட்டை ஜடைப் பின்னலை விரலால் தடவிப்பார்க்கிறாள். தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள். கடன்வாங்கி அணிந்திருந்த தோழியின் நீலநிறத் தாவணியில் நட்பின் வாசத்தை நுகர்கிறாள். `ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன் தவறவிட்டப் புன்னகையை நினைவூட்டிக்கொள்கிறாள். அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தின…
-
- 0 replies
- 3.3k views
-
-
இவளும் இரவும்..!! விண்மினி வானை கண் சிமிட்டி தாலாட்டிட வான் மெல்ல கண்ணயர கனவில் நிலா வந்து செல்லமாக வானை அணைத்திட... இவள் மட்டும் மெழுகு விளக்கேற்றி சாரளம் வழியே வானை ரசித்தாள் தனிமையில்... நம் இரவுதான் மின்மினியின் பகலோ எவ்வளவு ஆனந்தமாக சுதந்திரமாக பறந்து இரவை அழகூட்டுகிறது என அதிசயித்தாள்.. மின்னி மின்னி ஒளிர்வதால் இவை மின்மினி ஆயினவா என் கேள்வி எழுப்பினாள்..!! விடைதெரியாது தோற்றுப்போய் கடைக்கண்ணால் நோக்கினாள் இவள் அழகை ரசித்த வானிலாவை பரந்த வானில் தவழும் வட்ட நிலாவை நினைத்து பெருமூச்சு விட்டாள் என்ன அழகு என்ன ஒளி எல்லாம் இயற்கையே என்று எண்ணியவள் நட்சத்திரங்களோடு கதைபேச எத்த…
-
- 21 replies
- 3.3k views
- 1 follower
-
-
மண் காக்க தனை தந்த மாவீரரே மனங்களில் நாம் பூஜிக்கின்றோம் இந்நாளிலே சுதந்திர தாகத்தை நெஞ்சில் நிறுத்தியே சுகங்களை எல்லாம் உங்கள் நினைவிலிருந்து அகற்றினீரே உற்றம் சுற்றம் நம் மக்கள் என்றும் கொண்டீரே உயிரையும் துச்சமாக எண்ணிக் கொண்டீரே எதிரியை சூறையாட வெறி கொண்டீரே எமக்காக மண் மீட்க புறப்பட்டீரே தேசத்தின் கனவை சுமந்தபடியே தேகத்தை கொடுத்தீர்கள் ஒரு கணமும் தயங்காமலே வீழ்ந்தாலும் நீங்கள் விதைகளாகவே வீரத்துடன் மீண்டும் எழுவீர் விருட்சமாகவே நமக்காக நம் தேசம் மலரும் என்று நம்பிக்கையுடன் உங்களை போற்றுகின்றோம் இந்நாளிலே …
-
- 4 replies
- 3.3k views
-
-
பூக்கள் கூட உன்னைப் ப்போல் புன்னகையால் முகம் மலர்ந்ததில்லை சமாதான புறா கூட உன்னைப்போல் சமாதானம் பேச உலகம் சுற்றியதில்லை உலக பேச்சுவார்த்தை மேசைகளுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த சமாதான புறா நீயல்லவா உன்னோடு ஆயுதம் குழந்தையாய் உறங்கியபோதும் அழகு தமிழ் சொல்லெடுத்து செல்வன் நீ அற்புதமாய் போரடினாயே வழிகாட்டி பலகைகூட காட்டிவிட்டு இருந்துவிடும் தளபதியாய் நீ இருந்தபோதும் கூடவே கைபிடித்து கூட்டி வந்து விட்ட தாயல்லவா நீ தேசத்தின் குரலோடு ஈழத்தின் விடிவிற்காய் அகிலம் சுற்றி வந்த ஈழத்தின் குயிலே கூட்டைவிட்டு நீ வாரக்கணக்கில் அல்லவா உலகம் சுற்றி வந்தாய் ஏன் ஏன் எங்கள் கூட்டில் இருந்தபடியே நீ நிரந்…
-
- 4 replies
- 3.3k views
-
-
-
- 16 replies
- 3.3k views
-