கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாழ்கை போல் வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல கண்களில் இருந்து மறைக்கிறது . சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது ஏகாந்தம் பேணிக்கொண்டு இறக்கையின் துடிப்பில் உலகை அளக்கும் தனித்த பறவைபோல் மெல்லிய குளிரின் வருகை அணைப்புகளற்ற வாழ்கையின் ஏக்கத்தை நினைவுபடுத்துகிறது வருடம் ஒருமுறை மாறிவரும் பருவத்தின் புதுமை முதுமையின் நீளம்போல் சோர்ந்து கிடக்கின்றது பிரிந்த நாள் முதலாய் ஊர்நினைவு வருமானமின்றிக் கட்டமுடியாத வட்டிக் கடனைப்போல் உள்ளுக்குள் பெருக்கி கொண்டே இருக்கின்றது
-
- 3 replies
- 3.6k views
-
-
தீபத்திருநாள் எங்கள் வீட்டு புன்னகையை இறைவன் தின்ற வீரம் செறிந்த நாள் என் வீடு முழுக்க நிறைந்து கிடந்தது இரத்தச் சிதறலும் சிதைந்த உடலும் என் உடலம் தினமும் குளித்து துவண்டது பெருக்கெடுத்தோடிய உறவுகளின் செந்நீரில் என் பதுங்ககழியில் பாம்பு தூங்கியது சுகமாக தறப்பாள் கொட்டிலில் தம்பி தூங்கினான் பிணமாக தந்தை மூட்டிய தீயில் கொதித்த நீரின் சுவையறிய துடித்தது நா ஆனால் தர மறுக்கிறது காலம் தங்கையின் அழுகுரலிலும் தாயின் அசையாத உடல் இயக்கத்திலும் நான் தவித்துக் கிடந்தேன் சிங்களத்தின் தீபாவளி கொண்டாட்ட வானவேடிக்கைகள் எம்மை தின்று தீர்த்தன பிறந்தகம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
நிச்சயதார்த்தம் முடிந்ததும்... புதுப் பெண்பிள்ளையும், புது ஆண்பிள்ளையும் செல்போனில் பேசிக்கொள்கிறார்கள்... ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்! பெண்: நீ என்னைவிட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம். இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும். பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதைவிட நான் செத்துப் போயிடலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக... அதுதானே எனக்கு மிகப்பெரிய இன்பமான தருணம். பெண்: நீ என்னை அடிப்பாயா? ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன். பெண்: நீ என்னுடன் கடைசிவரை கை கோர்த்து வருவாயா? …
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
கலை நயம் பாதி மெய்யறிவு பாதி கலந்து செய்த கலவை நீ. நாத்திக மொழியில் நீ பேசினாலும் - அதில் ஆன்மிக உணர்வு கொண்டேன் நான். நடிப்புக்கு இலக்கணம் நீ என்பர் - அன்பு மனிதத்துக்கு இலக்கணமும் நீ என்பேன் பரந்த அறிவாற்றல், தூரநோக்குப் பார்வை, சீரிய சிந்தனை தொனிக்கும் உன் வீரியப் பேச்சு. சமூகப் பிரச்சினைகளின் ஆழம் அறிந்தோன்; சிக்கல்கள் நீக்க அதுவே வழி என்பான். தமிழின் அழகை உன் வாய் மொழி மொழியும்! கலையின் வனப்பை, புதுமையின் பொலிவை கமலின் ஆளுமையை அவன் படைப்புகள் பேசும்!
-
- 0 replies
- 872 views
-
-
ஒழித்து விளையாடும் அம்மாவும் தெருவும் தேயிலை மலையும் மீண்டும் வருமெனக் காத்திருக்கும் குழந்தையின் முன்னால் குருதியை உறிஞ்சும் அட்டைகளும் வெறும் கூடைகளும் துளிர்த்திருக்கும் கொழுந்துகளும் அடர்ந்த செடிகளுமாயிருக்கும் தேயிலைத் தோட்டங்களும் உழைத்துழைத்துக் கூனிய முதுகளுடன் கொழுந்துப் பைகள் கொழுவிய தலைகளுடன் மலைக்கு வந்த நலிவுண்ட பரம்பரையின் புகைப்படங்களுடன் எல்லாவற்றையும் மூடியது மண் ஒவ்வொருவராய் தேயிலைச் செடிகளுக்குள் புதைக்கப்பட அதன்மீதேறி கொழுந்தெடுத்த சந்ததியை ஊரோடு மலை விழுங்கிற்று எவ்வளவெனிலும் சம்பளம் எத்தகைய குடிசைகளெனிலும் வாழ்வு மயானங்களுமற்றவர்களின்மீது சரிந்தது பெருமலை ஒடுங்கியிருக்கும் லயன்களிலிற்குள் வெளியில் வர முடியாதிருந்தவர்கள் ஒரு நாள் மலைகள…
-
- 0 replies
- 471 views
-
-
ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
-
- 6 replies
- 1.8k views
-
-
என் தாயே ...உன் பாத திருவடியே ...உலகில் அத்தனை ஆலயங்களின் ...திறவு கதவு ....!!!என் தாயே ....உன் கருணை கொண்ட பார்வையே ....நான் வணங்கும் இறைவனின் ...கருணை பார்வை ....!!!என் தாயே ....என்னை விட்டு நீங்கள் இறை ...பயணம் சென்றாலும் ....உன் திருப்பாதத்தின் நினைவுகள் ...தான் நான் வணங்கும் இறைவன் ...!!!+கவிப்புயல் இனியவன் குடும்ப கவிதைகள் (அம்மா கவிதை )
-
- 2 replies
- 2.6k views
-
-
தமிழினி.. எனி... முகநூலில் தெரிந்தவள்.. படைப்பில் என்னை கவர்ந்தவள்.. வந்த இடத்தில் அறிமுகமானவள்.. போர்க்களத்தில் துணிந்து நின்றவள்.. சேனைகள் அழிந்த போதும் சோரமே போகாதவள்.. பொய்யில் புலம்பெயர விரும்பாதவள்.. நோயில் கூட உதவி தேடாதவள்.. போர் முடிந்தும் மங்கை மறைமுகமாகப் போராடினள்.. வாழ்ந்து பார்க்க ஆசை இருந்தும் அடக்கிக் கொண்டவள்.. இன்னும் என்னென்னவோ பிறர் தரும்.. அடைமொழிகளை தாங்கி நிற்பவள்.... இத்தனை இதயங்களிலும் யார் உளர் அவள் கனவை இனங்காண.. நனவாக்க....??! தமிழினி எனி......................................................!!
-
- 9 replies
- 1.5k views
-
-
ஞாபக சக்தி குறைவானவர்கள் ....காதலில் பொய்சொல்ல ....முயற்சிக்க கூட்டாது ....அதுவே சந்தேகமாக ....உருப்பெற்று விடும் ....!!!பெற்றோர் காதலித்து ....திருமணம் செய்தாலும் ...பிள்ளைகளின் காதலுக்கு ....தடையாகவே இருப்பார்கள் இல்லையேல் விருப்பம் ....இன்றி ஏற்கிறார்கள் ....!!!காதலின் பின்னால் ஓடாதீர் ....காதல் இல்லாமலும் வாழாதீர் ....காதல் பேச்சை கூட்டி ....மூச்சை நிறுத்தும் ,,,,,!!!+கவிப்புயல் இனியவன்ஈழக்கவிஞர் காதல் தத்துவ கவிதை
-
- 0 replies
- 2.4k views
-
-
கிளைகளை வெட்டி விட்டேன் பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் காணியை கடத்து கொப்பு வருவதாக மீண்டும் மீண்டும் துளிர்த்து அத்திசையே போகிறது கொஞ்சம் யோசிச்சேன் மரம் இருந்தால் தானே மாதம் மாதம் வெட்டும் வேலை நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை இனி ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் அட ஆறுதலா அமரும் இடம் எந்த போக்கத பயல் வெட்டியது பக்கத்துக்கு வீட்டு கிழவி இது ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி எதிரில் வந்த வேலிக்காரன் ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் இருக்கும் போது என்னை நீ இருக்க விட்டியா இப்ப சோகம் வேர் இருக்கு மீண்டும் துளிர்க்கும் கிளை என் பக்கம் வரட்டும் பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் இது அவன் சேர்த்து இருத்து கதை பேசலாம் இனி இது நான் .
-
- 0 replies
- 770 views
-
-
போருக்குப் புதல்வர்களை தந்த தாயக வானம் அழுகிறதென எழுதிவளுக்காய் கவிழ்ந்து கிடக்கிறது பூமி பாலையை கிழிக்கும் குரலில் பேரன்பு கந்தகம் படிந்த முகத்தில் அழகிய புன்னகை இரும்பு மனுசியின் கம்பீரத்தில் சீரழகு தாய்மை நிறைந்த நிகரற்ற தலைவி வீரக் கதைகளில் சீருடைகளுடன் இன்னும் உலவும் தலைவியின் மௌனத்திலும் இறுதி வார்த்தைகளில் உறைந்திருந்தது மாபெரும் நெருப்பு வாதையின் பிணியே சூழ்ச்சியாய் தன் புதல்வியை தின்றதென புலம்புகிறாள் தாயொருத்தி நெஞ்சில் மூண்ட காலத் தீயே தன் தலைவியை உருக்கியதென துடிக்கிறாள் சேனைத்தோழியொருத்தி மௌனமாகவும் சாட்சியாகவும் வாழட்டுமென நினைத்திருந்த தலைவியையும் இழந்தோம் பரந்தன் வெளியில் அலறி விழுமொரு பறவையை தேற்ற வார்த்தையற்றிருக்கிறது துயருண்ட தேசம் …
-
- 1 reply
- 759 views
-
-
மீள் நினைவு கொள்வோம். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, July 11, 2012 கால விதிகளின் கட்டறுத்தெறிந்த வீரத்தின் விலாசங்களோடு வனவாசம் போனவர்களுடன் ஆழுமையின் வீச்சாய் அடையாளம் காட்டப்பட்டவள் நீ. பெண் விதியின் முழுமைகளை நீ பேசிய மேடைகள் பதிவு செய்து கொண்டதோடு நீயொரு பெண்ணியவாதியாய் பெருமை கொள்ளப்பட்டவள். உன்னையும் உனது ஆழுமைகளையும் உச்சத்தில் ஏற்றி எழுதியோரும் உன் குரலில் பதிவு செய்தோரும் எண்ணிலடங்காதவவை.... எழுச்சியின் காலங்களை இப்படித்தான் காலம் கௌரவப்படுத்துவது வரலாறு. வீழ்ச்சியின் பின்னரே யாவும் விழித்துக் கொள்கிறது. அதுவே உனக்கும் உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது. 000 2009 மே, காலச் சூரி…
-
- 4 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழினி ஜெயக்குமாரன் அண்மைக்காலமாக பல நல்ல காத்திரமான கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி இலக்கிய உலகின் கவனத்தினை தன் பக்கம் திருப்பிக் கொண்டு இருப்பவர். அவரது பெயரிடப்படாத இன்னொரு கவிதை இது. தன் முகநூலில் பதிந்து இருந்தார். யாழில் பிரசுரிக்கவா எனக்கேட்டு அவர் அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கின்றேண் ------------ போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கித் தீர்த்திருந்த இரவின் கர்ஜனை பயங்கரமாயிருந்தது அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்த வார ஆனந்த விகடனில் (8.10.15-14.10.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! வடை மழை வயற்காட்டிலிருந்து திரும்பும்போது கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில் தேன் மிட்டாயோ வரிக்கியோ மறக்காமல் வாங்கி வருவார் அப்பா வானம் இருட்டிக்கொண்டு மழை வரும் அறிகுறி தெரிந்தால் உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா. மழை வரும் நாளில் கண்டிப்பாக வடை சுடுவாள் என்று தூறலோடு ஓடிவருவார் அப்பா, அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு. ‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று ஓடிவரும் பிரியாக்குட்டியிடம் அம்மா சொல்வாள் ‘இன்னைக்கு உங்கப…
-
- 0 replies
- 1.5k views
-
-
முகம் மற்றுமோர் உயிருள்ள கண்ணாடி.. உண்மையும் பேசும் -அதுபோல் பொய்யும் பேசும் ...! அகத்தின் அழகு முகத்தில் என்றார்... அகம்,முகம் அப்படியென்ன இணைப்பு அதற்குள்.? ஒன்று பேசுவதை மற்றொன்று காட்டிக் கொடுக்கிறதே...! முகம் முதலில் ஓர் அறிமுகச் சாதனம் ...¨! முகமே பலசமயம் நம் முகவரியும் ஆகும்..! நினைவின் விம்பங்கள் - பதியப்படும் நிலம் முகம்..! மனம் மகிழ்ந்தால் முகம் ஒளிரும்...! துக்கமானால் அது அழும்...! முன்னால் நிற்பவருடன் பேசுவதா வேண்டாமா , நல்லவரா கெட்டவரா - முகம் தீர்மானிக்கும்...! உள்ளே இருப்பது அன்பா விஷமா ...! முகம் சொல்லும்...! அன்பை சொல்ல சொல் தேவையில்லை - முகமே போதும் நம் எண்ணங்கள் சொல்ல...! விருப்புக்களுக்கு முதலில் சம்மதம் சொல்வதும் - வெறுப்புக்கள…
-
- 0 replies
- 1.4k views
-
-
காந்தீயம் (அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்காக.) இமயத்தின் முன் ஓர் சிறுவனாய் அண்ணாந்து நிற்கிறேன் பிரமாண்டம்! அது ஒன்றுதான் புரிகின்றது. கலப்பு, பிறப்பு, இளமை, ஒழுக்கம், கல்வி, குடும்பம், வாழ்வில் எளிமை சமூகம், பண்பு, சமயம். சேவை, தர்மம், சத்தியம,பக்தி அகிம்சை அரசியல், தொழிலில் அறம் எனப் பலவாய் பாறைகள் அடுக்கிப் பார்க்கவே எட்டா உச்சமாய்த் திகழும் தியாகப் பாறை எட்டிப் பிடிக்க முடியாத் தெலைவில் எங்கோ முடியாய் இருக்க நானோ பிரமாண்டத்தின் வைர மலைகளை யானையைப் பார்த்த குருடனைப்போல ஒன்றொன்றாகத் தொட்டுத்தடவி... ... கூழாங்கற்களாய் உணர்ந்து மயங்கும் முட்டாள்தனத்தில் மூழ்க முடியுமா? ஏனோ எனக்கு எதுவும் புரியவி;லை கலப்புப் பற்றி காந்தீயம் சொல்கிறது: இயற்கை உனக்குக் காமக் கிளர…
-
- 4 replies
- 1.1k views
-
-
மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி யாரும் அறிந்திரா விதமாய் உறிஞ்சினர் வாழ்பவர்களின் குருதியையும் மாபெரும் சவக்கிடங்கைமூடும் மாபெரும் இரத்தப் பெருவெளியை துடைக்கும் உதவிக்கு மாபெரும் சனங்களை வீழ்த்திய அதே கரங்கள் வெடிலடிக்கும் கொடிகளோடு எலும்புக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட ஐ.நாவில் பேரம் பேசும் கொலையாளிகள் இடைவேளையில் அருந்தினர் ஒடுக்கப்பட்ட குழந்தைகளின் குருதியை இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர் கொன்று தின்றவனே தன் வாயினை துடைக்கட்டுமென பூமியெங்கும் நீங்க மறுக்கும் குருதிக்கறைகள் அது அவ்வளவு எளிதல்ல மிக மிக எளிதாக சிந்தவைக்கப்பட்டதுபோல மிக மிக எளிதாக துடைக்க முடியாத குருதி எளிதாக மறைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உட…
-
- 0 replies
- 478 views
-
-
சத்தம் ... உற்றுக் கேட்டால் உனக்கும் எனக்கும் புரியும்... உலகம் முழுவதும் இடையறாது ஒலிக்கும் .... ஓம் எனும் சத்தம் .....! இதனை இயற்கையின் இரைச்சல் என்கிறார் சிலர் ....!-மற்றும் சிலரோ ஓம்கார மந்திரம் என்றனர்....! சத்தமில்லா உலகமும் இல்லை- மனித உள்ளமும் இல்லை....! நித்தமும் ஒரு சத்த யுத்தம் மனங்களுக்குள் சத்தமின்றியே நடக்கும்...! வாய் திறந்தால் சத்தமும் -திறக்காத போது மௌன யுத்தமும் நடக்கிறது...! மலர்கள் அசையும் போதும் - பட்டாம் பூச்சி பறக்கும் போதும் சத்தம் வருகிறது - மலர்களின் அசைவிற்கு ஒலி அளவுண்டு, விஞ்ஞானம் சொல்கிறது...! மனிதன் தான் கேட்பதில்லை மலர்கள் பேசும் போது ...! நம் வாழ்க்கையில் .. மனிதன் அழுவது சத்தம் ! அவன் சிரிப்பது சத்தம்...! பேசுவது சத்தம்!…
-
- 1 reply
- 804 views
-
-
இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! உள்ளுறையும் ஈரம் ஊருக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி மழையேதும் பெய்துச்சா? அம்மா கூடுதலாக இன்னொரு பதிலும் சொல்வாள் விடுப்பில் வந்தபோது நீயும் வீட்டுக்கு வந்து போனாய் வழக்கம்போல் என் நலத்தை விசாரித்துச் சென்றாய் என்று. நான் இல்லாதபோதும் என் மண்ணில் மழை பொழிவதும் என் மனையில் நீ புகுவதும் எனக்கு மகிழ்ச்சியே. பிடிவாதம் என்ற செல்லாக்காசின் இரு பக்கங்களாய் நீயும் நானும்! -சேய…
-
- 5 replies
- 1.7k views
-
-
இனவாதச் சிங்கள அரசின் - தமிழ் இனப் படுகொலைப் பாதிப்பால் ஐ.நா.சபையில் நீதி தேவதை தற்கொலை மரணவிசாரணை மட்டும் தொடர்கிறது.
-
- 0 replies
- 804 views
-
-
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டிருக்கும் நிலையில், இது குறித்து கவிஞர் பழநிபாரதி தன் வலிமையான வார்த்தைகளால் அவரது மரணத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். உருக்கமான அந்த கவிதை இங்கே.... உண்மை கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது... கண்கள் ஆழ்ந்த இருளில் இரண்டு விளக்குகளைப் போல பிரகாசித்தன விலை பேச முடியாத அழகு அதன் கர்வமாக இருந்தது யாருடைய கைகளோ கண்ணாடிக்குப் பின்னிருந்து பாதரசத்தை உரிக்கத் துடித்தன முடியாத ஓர் இறுக்கத்தில் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது உடைந்த சில்லுகளில் உண்மையின் ஒரு முகம் பத்து நூறு ஆயிரம் லட்சமென விரியத் தொடங்கின - பழநிபாரதி
-
- 2 replies
- 699 views
-
-
தேன் சிந்துதே வானம்........... இரவல் ஒளியெடுத்து இரவில் ஒளிஉமிழும் அழகில் மயங்க வைக்கும் ஒற்றைத் திங்கள் வளையில் ஒளித்திருந்து வாகாய் படம் பிடித்து வளைய வரும் எட்டுக் காலில் நண்டு காற்றடிக்கும் திசைகளெங்கும் காலாற நடைபயின்று பூப்பந்தாய் உருண்டு வரும் இராவணனின் மீசை வெள்ளி நிலா விளக்கேற்ற வீச்சுவலை இழுத்து வரும் கடலோரக் கவிதைகளாய் கட்டுமரம் சோளகத்தில் மோதிவரும் சுழற்காற்றில் தலையாட்டி தாளலயம் தப்பாத தென்னம்பிள்ளை வானக் குடைபிடிக்க வண்ணமலர் சிரிக்க சோலையிலே இசைபாடும் கானக் குயில் வாடைக் காற்றுரச வயல்களிலே கதிருரச பூமணத்தை சுமந்து வரும் காலைத் தென்றல் காலைப் பனித் துளியில் மேனி தனைத் துவட்டி தளுக்காகச் சிரிக்கின்ற செம்பருத்தி ஆத வன் எழும்பு முன்பு அடிவானம் சிவக்கு முன்பு ம…
-
- 8 replies
- 1.4k views
-
-
வான்மகளின் துயரத்தில் கண்ணீராய் நீ துளி துளியாய் வழிந்து மழையாக நீ தூயவள் நீ துள்ளலுடன் குதித்து ஓடி நீரோடையில் தேங்காது நெகிழ்வாய் நடை பயின்று கள்ளங் கபடமில்லா உன் சிரிப்பில் கனவுகள் பல நெஞ்சில் சுமந்து காதலில் கரைகண்டு காவியங்கள் படைக்க எண்ணி தன்னலம் நீ கொண்டாயில்லை தார்மீக பொறுப்பை மறந்தாயில்லை கடந்து செல்லும் பாதை எங்கும் அன்பினால் நனைத்தாய் உலகை கருணை, நெஞ்சில் ஊற்றெடுக்க கதிர்களை வளர்த்தாய் தாயாய் ஆயிரம் இடர்கள் இடைமறித்தாலும் கவனத்தை மட்டும் சிதறடித்தாயில்லை பாறைகள் தடைக்கல்லாயின கற்கள் சேர்ந்து வலிகள் தந்தன காலபோக்கில் உன் சிரிப்பை மறந்தாய் கண்களில் சுமந்து வந்த உன் கனவை துறந்தாய் எத்தனை துன்பம் கொண்டாய் பெண்ணாக நீ பிறந…
-
- 3 replies
- 861 views
-
-
நீலவானம் சொரியும் மலர்களாய் வெண்முகில் கூட்டம் கூடி வேலவன் கோவில் தேடியோடி...! கோபுரத்தை உரசும் தென்றல் பணிந்து வேம்பைத் தழுவி எழுந்து பனையைத் தொட்டுச் செல்லும்...! வீடுகளில் முற்றத்தில் தோட்டத்தில் வள்ளல்களாய் மலர் மரங்கள் செடிகள் கொடிகள் பயிர்கள் பந்தல்கள்....! நல்லூர் வீதிதோறும் கூந்தல்களில் மணக்கும் வண்ண வண்ண மலர்கள் நகரும் நந்தவனங்கள் ஒயிலாய் இடை அசைவில் சிதறும் மணிகள்...! ஆறுமுகம் அருகில் இரு தேவியரும் அலங்காரமாய் அமர்ந்திருக்க அழகு இரதம் புறப்பாடு ஆரம்பம்...! வீதிகளில் தேர் ஓடுவது ஊர்களிலே மாந்தர் வியர்வையில் திளைத்து தேர் மிதப்பது நல்லூரினிலே...!!
-
- 1 reply
- 704 views
-