கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டிருக்கும் நிலையில், இது குறித்து கவிஞர் பழநிபாரதி தன் வலிமையான வார்த்தைகளால் அவரது மரணத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். உருக்கமான அந்த கவிதை இங்கே.... உண்மை கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது... கண்கள் ஆழ்ந்த இருளில் இரண்டு விளக்குகளைப் போல பிரகாசித்தன விலை பேச முடியாத அழகு அதன் கர்வமாக இருந்தது யாருடைய கைகளோ கண்ணாடிக்குப் பின்னிருந்து பாதரசத்தை உரிக்கத் துடித்தன முடியாத ஓர் இறுக்கத்தில் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது உடைந்த சில்லுகளில் உண்மையின் ஒரு முகம் பத்து நூறு ஆயிரம் லட்சமென விரியத் தொடங்கின - பழநிபாரதி
-
- 2 replies
- 699 views
-
-
இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! உள்ளுறையும் ஈரம் ஊருக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி மழையேதும் பெய்துச்சா? அம்மா கூடுதலாக இன்னொரு பதிலும் சொல்வாள் விடுப்பில் வந்தபோது நீயும் வீட்டுக்கு வந்து போனாய் வழக்கம்போல் என் நலத்தை விசாரித்துச் சென்றாய் என்று. நான் இல்லாதபோதும் என் மண்ணில் மழை பொழிவதும் என் மனையில் நீ புகுவதும் எனக்கு மகிழ்ச்சியே. பிடிவாதம் என்ற செல்லாக்காசின் இரு பக்கங்களாய் நீயும் நானும்! -சேய…
-
- 5 replies
- 1.7k views
-
-
வான்மகளின் துயரத்தில் கண்ணீராய் நீ துளி துளியாய் வழிந்து மழையாக நீ தூயவள் நீ துள்ளலுடன் குதித்து ஓடி நீரோடையில் தேங்காது நெகிழ்வாய் நடை பயின்று கள்ளங் கபடமில்லா உன் சிரிப்பில் கனவுகள் பல நெஞ்சில் சுமந்து காதலில் கரைகண்டு காவியங்கள் படைக்க எண்ணி தன்னலம் நீ கொண்டாயில்லை தார்மீக பொறுப்பை மறந்தாயில்லை கடந்து செல்லும் பாதை எங்கும் அன்பினால் நனைத்தாய் உலகை கருணை, நெஞ்சில் ஊற்றெடுக்க கதிர்களை வளர்த்தாய் தாயாய் ஆயிரம் இடர்கள் இடைமறித்தாலும் கவனத்தை மட்டும் சிதறடித்தாயில்லை பாறைகள் தடைக்கல்லாயின கற்கள் சேர்ந்து வலிகள் தந்தன காலபோக்கில் உன் சிரிப்பை மறந்தாய் கண்களில் சுமந்து வந்த உன் கனவை துறந்தாய் எத்தனை துன்பம் கொண்டாய் பெண்ணாக நீ பிறந…
-
- 3 replies
- 862 views
-
-
பரம பிதாவே இறுதிச் சுற்றறிக்கையில் அவர்கள் அப்படித்தான் கட்டளையிட்டு இருந்தார்கள் கவனமாக எழுதப்பட்ட எழுத்துகளின் மூலம் எம் சாவை பற்றி அவர்கள் அறிந்து கொண்டுதான் இருந்தார்கள் நீர் அறிவீர் அதை பிதாவே அடைக்கப்பட்ட குறுநிலம் ஒன்றில் எல்லா அதிகாரங்களும் குவிந்து கொண்டன உலகின் இண்டு இடுக்குகளிலும் இருந்து அதிகாரத்தின் குரல்கள் எம் சாவை வலியுறுத்தி கட்டளையிட்டன நாம் சாவதற்காகவே அடைக்கப்பட்ட மந்தைகள் என்றனர் எம் சாவின் மூலம் உலகின் முதலாம் தர நியாயம் வலியுறுத்தப்படும் என்றனர் எம் குழந்தைகளின் இரத்தத்தினால் மட்டுமே தம் பாதைகள் செப்பனிடப்படும் என்றனர் பரம பிதாவே நீரே ஒத்துக் கொள்வீர் அந்த வார்த்தைகளில் அந்த எழுத்துகளில் அந்த எத்தனிப்புகளில் வஞ்சகம் நிறைந்து இருந்தன என்று ஆ…
-
- 9 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழினி ஜெயக்குமாரன் அண்மைக்காலமாக பல நல்ல காத்திரமான கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி இலக்கிய உலகின் கவனத்தினை தன் பக்கம் திருப்பிக் கொண்டு இருப்பவர். அவரது பெயரிடப்படாத இன்னொரு கவிதை இது. தன் முகநூலில் பதிந்து இருந்தார். யாழில் பிரசுரிக்கவா எனக்கேட்டு அவர் அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கின்றேண் ------------ போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுது கொண்டேயிருந்தது. வெடியதிர்வுகளின் பேரோசைகளால் குடி பெயர்ந்தலையும் யானைக் கூட்டங்களாக இருண்ட முகில்களும் கூட மருண்டு போய்க் கிடந்தன. பகலை விழுங்கித் தீர்த்திருந்த இரவின் கர்ஜனை பயங்கரமாயிருந்தது அம்பகாமப் பெருங்காட்டின் போர்க்களத்தில். காதலுறச் செய்யும் கானகத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
தேன் சிந்துதே வானம்........... இரவல் ஒளியெடுத்து இரவில் ஒளிஉமிழும் அழகில் மயங்க வைக்கும் ஒற்றைத் திங்கள் வளையில் ஒளித்திருந்து வாகாய் படம் பிடித்து வளைய வரும் எட்டுக் காலில் நண்டு காற்றடிக்கும் திசைகளெங்கும் காலாற நடைபயின்று பூப்பந்தாய் உருண்டு வரும் இராவணனின் மீசை வெள்ளி நிலா விளக்கேற்ற வீச்சுவலை இழுத்து வரும் கடலோரக் கவிதைகளாய் கட்டுமரம் சோளகத்தில் மோதிவரும் சுழற்காற்றில் தலையாட்டி தாளலயம் தப்பாத தென்னம்பிள்ளை வானக் குடைபிடிக்க வண்ணமலர் சிரிக்க சோலையிலே இசைபாடும் கானக் குயில் வாடைக் காற்றுரச வயல்களிலே கதிருரச பூமணத்தை சுமந்து வரும் காலைத் தென்றல் காலைப் பனித் துளியில் மேனி தனைத் துவட்டி தளுக்காகச் சிரிக்கின்ற செம்பருத்தி ஆத வன் எழும்பு முன்பு அடிவானம் சிவக்கு முன்பு ம…
-
- 8 replies
- 1.4k views
-
-
நீலவானம் சொரியும் மலர்களாய் வெண்முகில் கூட்டம் கூடி வேலவன் கோவில் தேடியோடி...! கோபுரத்தை உரசும் தென்றல் பணிந்து வேம்பைத் தழுவி எழுந்து பனையைத் தொட்டுச் செல்லும்...! வீடுகளில் முற்றத்தில் தோட்டத்தில் வள்ளல்களாய் மலர் மரங்கள் செடிகள் கொடிகள் பயிர்கள் பந்தல்கள்....! நல்லூர் வீதிதோறும் கூந்தல்களில் மணக்கும் வண்ண வண்ண மலர்கள் நகரும் நந்தவனங்கள் ஒயிலாய் இடை அசைவில் சிதறும் மணிகள்...! ஆறுமுகம் அருகில் இரு தேவியரும் அலங்காரமாய் அமர்ந்திருக்க அழகு இரதம் புறப்பாடு ஆரம்பம்...! வீதிகளில் தேர் ஓடுவது ஊர்களிலே மாந்தர் வியர்வையில் திளைத்து தேர் மிதப்பது நல்லூரினிலே...!!
-
- 1 reply
- 704 views
-
-
27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்
-
- 17 replies
- 3k views
-
-
மலரே என்பான் அவன் வண்டே என்பாள் அவள் மலர் மீது வண்டு உறவாட மலரும் உறவுக்குள் விளையும் குண்டுமணிகள் விடப்படுவது குப்பையில்...! கடைசியில்.. தகாத உறவென்று பெயர் வைக்கும் சமூகம்... மனிதம் குப்பையில் சேர்வது அறிவதில்லை.!!!
-
- 1 reply
- 1.7k views
-
-
என்னணை அப்பு? இடிஞ்சு போய் இருக்கிறாய்! எல்லாம் முடிஞ்சுது...! அது தான் இப்படி! என்னப்பு நடந்தது? ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்! இல்லை...இல்லை..! இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்! என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ? கள்ளில முன்னேற்றம் ! அதை விடு..! பிளாவிலை குடிச்சனாங்கள், இப்ப..., கிளாசில குடிக்கிறம்! ஆயிரமாய்த் துலைச்சு..., அலங்கோலங்கள் சுமந்து..., விலாசங்கள் கலைந்து,,, தலையில துண்டோட...! என்னப்பு நடந்தது? கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை! அது தானே சொல்லிறன்.., ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்!
-
- 13 replies
- 2.6k views
-
-
ஏன் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறோம் நாங்கள் இன்னும் ஏன் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ன பாவம் செய்தோமென்று எங்களுக்குப் புரியவில்லை வாசலில் சுடுகலனேந்திய அன்னியப் படை அடக்குமுறை அரசு சொல்கிறது பாதுகாப்பென்று.. காணாமற் போதல்கள் கைதுகள் பாலியல் வன்புணர்வுகள் அடையாளமற்ற கொலைகள் தொடர்கிறது.. மக்களைப் பேசாத ஊமைகளாக்க முகாம்கள் முளைக்கின்றன புதிய அணிகள் புதிய திசைகாட்டுவதாக உறுமுகின்றன. விசையிருந்தால் பறக்க முயற்சிப்பதாய் சிறகசைக்கின்றன! நாமே ஆசீர்வதிக்கப்படவர்கள் நாமே அனுபவமுள்ளவர்கள் நாமே ஆற்றலாளர்கள் முடிநரைத்துக் கூன்விழுந்தாலும் முடியும் வரை தொடர்வோம் தீர்வுதேடித் தருவோம்…..! சிங்களமும் தொடர்கிறது புதிது புதியாய் நடுகிறது சித்தார்த்தன் சிலைகளை.. வீதி முலையில் இருந்து எங்களுக…
-
- 0 replies
- 676 views
-
-
போரடிக்கும் கருவி. எல்லாமே முடிந்து போனதாக இறுகிப்போனது மனசு. இருப்பினும் ஏதோவொரு தொடக்கத்தை நோக்கியே சஞ்சரிக்கிறது சிந்தனை. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு மௌனமாயிருக்கவும், பேசவும், பகைக்கவும், சிநேகிக்கவும். அதினதன் காலத்தில் அத்தனையையும் நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறது காலம். முந்தினதும் பிந்தினதுமாக சுழலும் காலத்தின் கைகளில் நானும் ஒரு போரடிக்கும் கருவிதான். 01.08.2015. தமிழினி ஜெயக்குமரன்
-
- 0 replies
- 2.8k views
-
-
சிறையை உடை சிறகை விரி இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் காற்றோட்டமான அறை பெரிய மண்டபம் செயற்கைப் பூந்தோட்டம் பார்த்துப் பார்த்துக் கவனிக்க பலர் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களையும் பார்த்துப் பார்த்து சுமைகளை எமதாக்கி சுகங்களை உமதாக்கி தோளிலும் மாப்பிலும் தூக்கிச் சுமந்தோம் எந்த உணவு பிடிக்கும் எந்த உடை பொருத்தமாக இருக்கும் எந்தப் பாடசாலை உங்களை உயர்த்தும் எந்தப் படிப்பு உங்களுக்கு இலகுவாக அமையும் ஆம், பார்த்துப் பார்த்து படியேற்றி விட்டோம் அதற்கு பிரதியுபகாரமாக நீங்கள் எம்மை இங்கு படியேற்றி விட்டுள்ளீர்கள் நேரத்திற்கு உணவு நாளுக்கோர் உடை வசதியான படுக்கை வளமான இருக்கை பிரயாணிக்க சொகுசு வண்டி கூப்பிட்ட குரலுக்கு செவிலி குறிப்பறிந்து கவனிக்க தாதி எல்லாமே எல்லாமே இருக்கும…
-
- 8 replies
- 3.5k views
-
-
காதலின்,,,, வாழ்நாள் மூலதனம்....நினைவுகள் தான் ....!சுகமான நினைவுகள் ...இதயத்தில் தென்றல் ...!சோகமான நினைவுகள் ...இதயத்தின் முற்கள் ...!காதலில் நினைவுகளின் வலியே அதிகம் ....!!! +காதல் நினைவுகளின் வலி என் கற்பனை வலிகள் ( 01)
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் எமது வேணடுகோளை ஏற்று கவிதைத் தொடரில் பங்குபற்ற ஆதரவு தந்த தங்கள் அனைவருக்கும் தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின் சார்பாக பணிவன்பான நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்து இத்திட்டத்தில் இணைந்துள்ள படைப்பாளிகளின் பெயளர்களை இங்கே மகிழ்வோடு பதிவு செய்கின்றோம். திரு.பொலிகை ஜெயா - சுவிஸ் திருமதி. கோசல்யா சொர்ணலிங்கம் - ஜேர்மனி திருமதி.சுமதி பாலசசந்தர் - பிஜித்தீவு திருமதி. சுபாஜினி சிறீரஞ்சன் - டென்மார்க் திருமதி. ரஜனி அன்ரன் - ஜேர்மனி திரு. ஆதவன் கதிரேசர்பிள்ளை – டென்மார்க் திருமதி. பாமா இதயகுமார் - வன்கூவர், கனடா திருமதி.வேதா இலங்காதிலகம் - டென்மார்க் திருமதி. மாலினி மாலா – ஜேர்மனி செல்வி. சறீகா சிவநாதன் - ஜேர்மனி திரு. நோர்வே நக்கீரா – நோர்வே திரும…
-
- 25 replies
- 3.1k views
-
-
சமீபத்தில் நடந்த பேஸ்புக் சந்த வசந்தக் குழுமத்தின் காணொளிக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதை.
-
- 0 replies
- 661 views
-
-
மனசு போல வாழலாம் கலகலன்னு சிரிக்கலாம் காலமெல்லாம் சிறக்கலாம் நிலவிலேறிக் குதிக்கலாம் நிம்மதியாய் இருக்கலாம் வழ வழன்னு கதைக்கலாம் வண்டு போலப் பறக்கலாம் மலையிலேறி இறங்கலாம் மழையிலேயும் நனையலாம் மழலையாகப் பேசலாம் மரங்கள் மீது ஏறலாம் பனித்துளிகள் சேர்க்கலாம் பறவையோடு பாடலாம் கலைகளிலே திளைக்கலாம் தென்றலோடு நடக்கலாம் மலர்களிலே உறங்கலாம் மனசு போல வாழலாம் http://www.lankasripoems.com/?conp=poem&pidp=214612
-
- 1 reply
- 1.1k views
-
-
(இராஜரட்டையின்) கொடு வனம் புகு படலம். காரிருள் சாமம் ஒன்றிற் கரு வரியுடை தரித்த தமிழ் மறவர் படையணி ஒன்று, கரந்து, கானகம் நடுவே எதிரி வானகப் பாசறை புகுந்து, வானிடை ஏகி வல்ஈய எச்சமிடும் கொடிய எந்திரப் பறவைகள் வாழும் கூட்டினைச் சிதைத்து எரித்துத், தாமும் அக் களமிடை ஆகுதி ஆகியே, தம் மக்கள் இடர்தனைக் களைந்து வீரகாவியம் ஆகினர். (நினைவுகள்) -------------------------------------- அருண்டனர், பகைவரெல்லாம் மெய் விதிர்த்திட அஞ்சியேயோடி ஒளிந்தனர் நிலவறை தேடிக் கண்ணுறு இடமெலாம் மண்தூர் நிறைய மாண்டதம் மாந்தர் யாக்கை நில வரை பழித்து நிறைய நாலிரு திக்கும் அதிரக் கானகக் காவல் தகரக் கருவரியுடை கண்ணிடை தெரிய. ஊடுடிடைப் புகுந்த புலியோ உறுமியே எழுந்து பாய்ந்து வானிடையேக…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் ஹைகூக்கள் ------------------------------------------------------------------------விஞ்ஞான தந்தை மெய்ஞான தந்தை கலாம் --------இளமையிலும் மாணவன் இறப்புவரை மாணவன் கலாம் --------கிராமத்தில் பிறந்து கிரகத்தை ஆராய்ந்தவர் கலாம் ---------இளைஞனின் கனவு விஞ்ஞானத்தின் அறிவு கலாம் --------அறிவியலின் அற்புதம் அரசியலின் தியாகம் கலாம்
-
- 8 replies
- 12.5k views
-
-
தமிழினத்தை உலகறிய ..... உச்சத்துக்கு கொண்டுசென்ற ..... உத்தம மனிதர்களில் ஒருவர் ..... மேன்மை தங்கிய தமிழ் .... விஞ்ஞான தந்தையே கலாமே ...! உங்கள் பங்கும் வற்றாத நதி அய்யனே .....!!! அடுத்த வேளை உணவுக்கு .... அல்லல் பட்டாலும் நம்பிக்கையை .... தளராமல் விடாமல் முன் செல் ... வெற்றி நிச்சயம் சாதனை நிச்சயம் .... வாழ்துகாட்டிய எம் தந்தையே ... அய்யனே .....!!! எப்போது எதிர்காலம் உங்கள் ... கையில் இளைஞர்களே மாணவர்களே .....! உச்சாகம் ஊட்டுவதில் உம்மை தாண்டிய .... எவரையும் நாம் பார்தத்தில்லை -சான்று ..!!! உயிர் பிரியும் வேளையிலும் மாணவர்களின் .... அருகிலேயே உயிரையும் விட்டீர்களே ....!!! அய்யனே ..... நீங்ககள் விதையை ஊன்றிவிட்டு .... சென்றுள்ளீர்கள் - நிச்சயம் ... மரமாகும்... தோப்பாகும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
யூலை 1983... படித்துக்கொண்டிருந்த என்னை தெருவில் ஓடத்துரத்தியநாள் இலங்கையனாக இருந்த என்னை தமிழனாக மாற்றியநாள் இலங்கை என் தாய்நாடு என்பதை வடக்கு கிழக்கு என்றநாள் தமிழன் என்று அடையாளமிட்டு கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்.. இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை நான் தரிசித்தநாள் அகப்பட்டிருந்தால் இன்று 31வது நினைவஞ்சலி நாள்............
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈரமாக இருந்த நிலம் .... வறண்டு வருவதுபோல் .... விவசாயியின் மனமும் .... வறண்டு வருகிறது .....!!! கடனை கொடுக்கமுடியாமல் ..... உயிரை கொடுகிறார்கள் .... உலக மயமாக்கலின் ..... ஈர்ப்பு உலக முதலீட்டை .... அதிகரிக்க செய்கிறது ..... உணவளிப்பவனை.... உதறி தள்ளி விடுகிறது .....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்
-
- 4 replies
- 7.5k views
-
-
எனக்கும் அவளுக்கும் .... உயிர் பிரியும்வரை .... காதல் பிரியாத காதல் .... இருக்கிறது .....!!! அவளூக்கு ஏதும் நடந்தால் .... நான் இறந்து பிறப்பேன் .... எனக்கு ஒன்றென்றால்.... அவளும் இறந்து பிறப்பாள்.....!!! நாம் ஒருவரை ஒருவர் .... சந்திக்கும்போது ..... கீறியும் பாம்புமாய் .... இருப்போம் -காதல் நகமும் சதையும்போல் இனிமையாய் இருக்கும் ....!!! + கே இனியவன் ஈகோ காதல் கவிதை
-
- 0 replies
- 2.4k views
-
-
மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )------வலது கை விரல்கள் மெருமை காட்டியது " மோதிரவிரல் "-----கும்பிடுகிறேன் பெருமை படுகிறது "சின்ன விரல்கள் "----கோபத்தின் தொடக்கி சண்டையில் தொடக்கி "சுட்டுவிரல் "----குட்டை கவலையில்லை அம்பு எய்வேன் "கட்டை விரல் "---நான் தான் வீமன் உயரமானவனும் "நடுவிரல் "
-
- 1 reply
- 658 views
-
-
" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் "-------------------------------------------------------------------" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் "-------------------------------------------------------------------" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு "-------------------------------------------------------------------" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் "-------------------------------------------------------------------"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் "
-
- 6 replies
- 8.1k views
-