Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்த மலைகளுக்கப்பால் தான் நான் இருக்கிறேன் மலைமுகட்டில் ஊற்றெடுக்குமிந்த நதி இந்த மலைகளுக்கப்பால் சமவெளிகளை விளைவிக்கிறது பகலிரவு காலத்தை நகர்த்தும் உக்கிரச் சூரியன் உதிப்பதும் இந்த மலைகளுக்கப்பால் இருந்தே மேய்வன விரும்பும் புல்வெளிக்காடும் தவழ்வன பொழியும் மழைக்காடும் இந்தமலைகளுக்கப்பால் தான் சந்திக்கின்றன ஒலியின் மொழியை நூற்றாண்டுகளாக எதிரொலித்தபடியுள்ளன பள்ளத்தாக்குகள் இந்த மலைகளுக்கப்பால் காற்றும் நிலமும் நீரும் ஆதிநிர்வாணாத்தோடிருக்கும் முடிவிலா ஆரண்யமிருப்பதும் இந்த மலைகளுக்கப்பால் தான் இரவு அந்தகார சுவையுடன் இருளாகவேயுள்ளது இந்த மலைகளுக்கப்பால் கடவுள் எல்லைக்கோடு அகதிகள…

  2. Started by putthan,

    போராட ஆசை போர்களம் செல்லாமல் ஆயுதம் ஏந்த ஆசை-எதிரியிடம் ஆயுதம் இல்லாத பொழுது களத்தில் வீரநடை போட ஆசை கன்னிவெடி அகற்றப்பட்டபின்பு உண்மையை சொன்னா என்ன உயிருக்கு ஆசை புலத்துக்கு பறந்தோடினேன் புலத்திலும் புதிய ஆசைகள் புகை பிடித்து புனிதனாய் வாழ ஆசை நவ நாகரிகமாக வாழ்ந்து நமது கலாச்சாரம் பேணிட ஆசை மாற்றான் குழந்தை தமிழ் பேச மம்மி என்று என் குழந்தை அழைத்திட ஆசை தமிழ் பேசாமல் தமிழ் வளர்த்திட ஆசை அணு அளவும் உண்மை பேசாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்திட ஆசை களத்தில் தமிழர் படையின் வெற்றியை கேட்க ஆசை புலத்தில் சிங்கள கிரிக்கட் அணி வெற்றி செய்தியை கொண்டாட ஆசை சிறிலங்கன் என்ற பெருமையை சிரிப்புடன் சொல…

    • 14 replies
    • 2.1k views
  3. ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால் ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது அதிர்வின்றி அமைதியாக ஆழ்கடல் அசைந்து வந்து ஓசையற்று ஒட்டுமொத்தமாய் ஒன்றுமிலாது கொண்டு போனது அன்னை மடியென ஆடிக் கழித்தவர் அலைகடலோடு கூடிக் கழித்தவர் ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர் அத்தனை போரையும் அரை நொடியுள் அள்ளிக் கொண்டு சென்று விட்டாய் அந்த நொடிவரை ஆயிரமாய் அகம் முழுதும் ஆசைகளோடு அடுத்தநாளின் கனவுகளோடு ஆடிப் பாடிக் களித்திருந்தார் அனைவர் மீதும் கோபமென்ன அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் பத்து மாதம் சுமந்த பிள்ளையை பள்ளிக்கனுப்பிய பாலகனை கட்டிய கணவனை காதலனை அத்தனை உறவையும் அக்கணமே அகதியாக்கிச் சென்றுவிட்டாய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள் ஏகாந்தமாய்த் திரிந்த வீதிகள் எழில் பொங்கும் எங்களின் ஊர்கள் …

  4. வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்..... கவிதை - இளங்கவி அம்மா இந்த இடம் வேண்டாம் நாங்கள் போவம் வாங்கோ.... சிணுங்கிறது ஓர் சிட்டு... மலராத அம் மொட்டு..... உன் அண்ணாவை காணவில்லை அவன் சென்ற இடமும் தெரியவில்லை.... அவனின்றி நாம் மட்டும் எங்குமே செல்வதில்லை........ ............................................... பெரும் முற்றுகையில் நடுவினிலும் பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்.... சிரித்திட்ட மழலைகள்; இன்று சிந்திய முத்துக்களாய்..... பல முகங்களை பார்க்கவில்லை தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை... பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கின்றன....... ................................................... குளித்திடும் வேளையிலே …

  5. ஏன் உதைத்தீ ( ர )ர்களே ?? இருட்டில் இருந்த உங்களுக்கு வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள் உங்கள் பசியெடுத்தபொழுது குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்..... உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய் துடித்தவர்கள் நாங்கள்....... உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும் குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்..... எங்களுக்கு என்று ஒரு சந்தோசம் நீங்கள் கண்டதுண்டா ?? உங்கள் வாழ்கையில் மெழுகுதிரியாய் எரியும் எங்களை ஒருகணம் உங்கள் , பார்வை திரும்பியதுண்டா ?? உங்கள் ஏற்றம் இறக்கம் எதிலும் ஒன்றாய் கலந்த எங்களை ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ?? மைத்திரேயி 19/01/2013

  6. பெற்றால் தான் பிள்ளையின் பெருமை தெரியும் என்பார்கள் உண்மைதான் நாங்கள் எல்லாம் உனக்கு தெருவில் கிடந்து கரையை சேர்ந்தவர்கள் தானே அது தான் உயிர் வாழ உன் மீது வலை வீசிய எம் உயிர் பறிக்க அலை வீசினாய் அழித்த நீ எம்மை அடியோடு அளித்திருக்கலாம்,ஏன் அங்கொன்று இங்கொன்று விட்டு வைத்தாய் நீ அழியா வரம் பெற்றவள் என்ற திமிரிலையா எம்மை வதைக்கிறாய் தாயே ??? கொன்றுவிடு எம்மை மீதமின்றி கொன்றுவிடு,,, கொன்று விட்டு திரும்பி பார் உன்னை கண்டு கொள்ள ஒரு நாய் கூட வராது, அன்றாவது உணர்வாய் அர்த்தமற்ற உன் செயலின் விளைவால் நாம் பட்ட வேதனையை......... *எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.

  7. கொஞ்சும் நிலவு கொஞ்சா நெருப்பு நன்றி வெண்ணிலா. கண்கள் கெஞ்சும் அழவே துடிக்கும் உதடுகள் சுளித்து சிரித்து நடிக்கும் நெஞ்சம் உந்தன் நினைவில் வலிக்கும் மஞ்சம் என்னைப் பார்த்தே நகைக்கும்.

  8. பாயுது வேங்கை பதறுது...சிங்களம்.. பாரடா தமிழா பாரடா.. இந்த சரித்திர வெற்றிக்கு.. உதிரங்கள் ஊற்றிய மறவனைப் பாடடா.. வெகுண்டது வேங்கை.. வெடிக்கின்றபோது... தமிழன் வெற்றிக்குத் தடைகள் ஏது.. சீரிய தவைவன்... கூறிய பாதையில்.. போரிடும்..புலிகளைப் பாடு... தமிழனின் மானத்தை காத்திட உயிர் தந்த வித்துடல்.. ஆடையைக் கலைந்தாய்.. தமிழ் விழிகள் சிந்தும்.. கண்ணீர் மூடும்... அம்மணமேலுடை ஆகும்.. உணவைப் பறித்தாய்.. உயிர்கள் தவிக்க.. உயிரைப் பறித்தாய்.. உன் மத்தம் சிரிக்க.. இதுதான் கரிகாலன் அடி.. இப்போ சிரிடா சிரி... இருக்குது..பின்னூட்டமுனக்கு... இது வெறும்.. முன்னோட்டக் கணக்கு.. எத்தனை உயிர்கள் போனாலும்.. சத்திய வேள்வியில் வ…

  9. முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஆயிரம் காலங்களைக் கடந்த கடல் ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல இன்றும் புது அலைகளை எழுப்புகிறது. அந்த அலைகளின் எல்லைக்குமேலே யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த இடைச்சிகளின் மேச்சல் நிலம். அந்தக் கானல் பொட்டலின் கந்தல் குடையான சிறு மரம் நோக்கி கத்திக் கம்போடும் செல்பேசியோடும் பெயர்கிறாள் ஒரு புல்வெளியின் இளவரசி. நூல் பாவையாய் அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம் ஆடித் தொடர்கிறது நாய். அந்த நான்கு கண்களின் பார்வையில் கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள் செம்புழுதி போர்த்த பற்றைகளிடை காடைகள் மிரளாமல் ஊரும். ஆயிரம் காலத்து வளமையாய் நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு பழமும் வைத்திருக்கிறது இலந்த…

    • 14 replies
    • 3.1k views
  10. Started by nunavilan,

    அப்பா எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கை…

  11. வன்னியில் கற்பழிப்பாம் யாழில் கொலையாம் தீவில் மண் பறிப்பாம் அகதி முகாமில் கருவறுப்பு தொடர்கதையாம் எழுதுகிறார் பேசுகிறார் சாவீடு போல் பறை அடித்து அழுகின்றார் எல்லாம் சரிதான் இதை மாற்ற என் செய்தார் நாலு பேர் சேர்வோம் என்றால் நாலே நாலு பேர் தானா... சுமை யாவும்அவர் மேலா..... வேலை வீடு வீடு வேலை நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார் துளியளவும் அதற்கான உழைப்பில்லை ஆனாலும் மண் வேண்டும் தான் பிறந்த தனை ஏற்ற மண் வேண்டும் அதற்காக உழைப்பதெப்போ...? அதற்கான உனது நேரம் என்ன..? பாதை தெரிந்ததுதான் பாதையில் நடந்தாயா ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல் பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்? வா வாரத்தில்…

  12. நிர்வாணமாக கொலையுண்டவர்களின் பின்பக்கம் தேங்கிய நீரில் துடித்து மிதந்து கொண்டிருக்கின்றன பிடரிகளும் கண்களும் கைகளும். நிருவாணம் எல்லோரது உடைகளையும் களைந்து விடுகிறது. மிகவும் அஞ்ச வைத்தபடி கோணல் துவக்கு தலையின் பின்பக்கம் துளையிடுகிறது. நிலம் பரிதாபமான குருதியால் நனைகிறது. யாருடைய முகமும் தெரியவில்லை. எல்லோரிடமும் எங்கும் குருதி கொட்டிக்கொண்டிருக்கிறது. பேரூந்திலும் நகரத்தின் உள் தெருக்களிலும் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டியிலிரு

  13. வெல்ல வையுங்கள் வெட்டி வீழ்த்துகிறோம் வீர வசனம் பேசி இரத்தத் திலமிட்டு வீடுகள் தோறும் தன்னாட்சிக்கு உரிமை கேட்டு உரிமையோடு வர.. மக்களோ அள்ளிக் கொடுத்து நம்பிக் கெட்ட காலம் ஒன்று.. 70 களில் வந்து போனது..! மீள அது மீளாதிருக்க தம்பி வழியில் போர்த் தரையில் இட்ட விதை.. மக்கள் இரத்தம் சொரிந்து மாவீரர் தியாகத்தால் உரமிட்டு வளர்த்து விட்டது தமிழ் தேசிய விருட்சமாகி இன்று.. ஊர் கூடி தேர் இழுக்கும் தேரடியாகி நிற்குது. மீண்டும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அண்ணல் திலீபனின் நோன்பிரு நாளில் ஓர் வெற்றிச் செய்தி “கோட்டை வீழ்ந்ததாம்” என்றது போல் ஆனது செவிகள் இனிக்க கடந்து போன துயரங்கள் நினைவில் ஆட..! பிபிசி.. ராய்டர் எல்லாம் உற்று நோக்க நடந்து முடிந்திருக்கு தேரோட்டம். “தன்னாட்சிய…

    • 14 replies
    • 2.1k views
  14. என் இதயமே எங்கு செல்கிறாய் என்னை பிரிவதில் இன்பம் கொள்கிறாய் தன்னம் தனிமையில் நான் தவிக்கின்றேன் எந்தன் இளமையை இன்று வெறுக்கின்றேன் அடி பூவாய் வந்தாய் புயலாய் சென்றாயே புரியவில்லை சகியே ...... இது நியமா என்று நிழலினை கேட்கிறேன் விடியவில்லை சகியே ............ கண் மூடி வாழ்கிறேன் கனவில் கண்ணோடு வாழ்கிறாய் நினைவில் அடி பொய்யாகி போனதே உறவு - பெண்ணே மெய் தானா உந்தன் பிரிவு என் மெய்யான சோகம் உன் மனம் அறியவில்லை அன்பே உன்னை சுடும் வரை நீ வெயிலென இங்கு எரியும் நிலவு நானே அன்பே ஆசை என்னும் வலியுடனே நடை பிணமாய் தெருவில் திரிகிறேன் அடி காரணம் அற்று கழட்டி விட்…

  15. சிங்காரச் சிறகு விரித்து சிறகடித்த வானம் அழுகிறது.. நர்த்தன நடை பயின்று நடந்து திரிந்த பூமி கனக்கிறது.. சுதந்திர வானில் உயரப் பறந்த நீங்கள் உயிரற்ற உடல்களாய் உடை களைந்து கிடந்தீர் அங்கே... புதையுண்டு போன உண்மைகள் விக்கித்து நிற்கின்றன காட்சிகளோடு.. வினாக்கள் மட்டுமே மிச்சமாய்..! தமிழீழ மண்ணில் சென்ரி போட்டு தாய் நிலம் காத்து நின்று மக்கள் கையெடுத்து கும்பிட்ட வாழ்ந்தீர்..! இறுதியில்.. தாயக பூமியில் பேரினப் பிசாசுகளின் அடிமை விலங்கு உங்களை... விலங்கிலும் கேடாய் நசுக்கிக் கொல்ல கையறு நிலை சென்றோம் நாம்..! இன்று முற்றே கைவிட்டு விட்டோம் தப்பியோர் உம்மில் பலரை நட்டாற்றில்..! தேச விடுதலை என்றும் மகளிர் விடுதலை என்றும் அடுப்படிக்கு ராரா எ…

  16. வெறி பிடித்து திரியுது பார்... சிங்கள இனம்- இங்கே சொறி பிடித்து அலையுது பார்... சில தமிழரினம்! கொள்கை என்று குழு பிரிந்த குரங்குக் கூட்டம்-இப்ப கொப்புத் தாவி போனது பார்... கொள்கை வேஷம்! இருந்தாலும்.... மக்களுக்காய் மடிகின்ற மறவர் கூட்டம்! எதிரி வந்தால்தான்-பதில் அடி கொடுப்போம்.... என்குது பார்..! அன்று தொட்டு இன்றுவரை பேச்சு வார்த்தை இடை..இடையே.... எல்லைச் சண்டை....! எதிரி அழைப்பது.... இப்ப-போருக்கு இன்னும் நாம் சொல்லவில்லை இ....தோடா வாறம் என்று! இன்னும் எதற்காக வெயிற்ரிங்.... அடிக்கின்ற மணிக்கும்.. பாடுகின்ற குருவிக்கும்... செயலால காட்ட வேணும்.... இறுதி போரிங்கு …

  17. ஏழையும் இறைவனும் வ.ஐ.ச.ஜெயபாலன் 1 தந்தன தான தனாதன தந்தன // தந்தன னானானா .........// தந்தன தான தனாதன தந்தன // தந்தன தானானா - தன // தந்தன தானா....னா // அகதிகளாகி உலக உருண்டையில் // அலைகிற செந்தமிழா // கபோதிகளாக இருளின் புதல்வராய் காணாமல் போவோமோ - நாம் காணாமல் போவோமோ. // ( தந்தன...... ) அகிலத்தில் எங்கள் இளைய தலைமுறை // அடியற்றுப் போகாமல் // புகழ்மிகும் எங்கள் கலைகளில் வேரோடி // பூத்திட வேண்டாமோ - நாம் // பூத்திட வேண்டாமோ // ( தந்தன .... ) பாட்டியின் பாட்டி பாட்டனின் பாட்டன் சொல்லிய கதை ஒன்றை நாட்டியம் ஆடி * ச…

    • 14 replies
    • 2.9k views
  18. சாதிவெறி இன்னும் சத்தியமாய் தீரவில்லை எங்கள் தமிழ் போராட்டமும் அவ்வெறியை தீர்க்கவில்லை பலநூறு மைல்கள் பறந்து வந்தும் ஐயையோ பார்கின்றோமே சாதியது இங்குமல்லோ ஆதியிலே சாதியில்லை பாதியிலே வந்ததென்று சேதியாகச் சொல்லுறாங்க ஓதியே வைச்சாங்க மோதித்தான் சாகிறாங்க கோதித்ததான் பார்க்கிறாங்க மீதியாய் ஒன்றும் இல்லை சாதியால் அழிவுதாங்க. பார்பனரோ கொண்டு வந்தார் ஏற்பவரோ ஏற்றி விட்டார் தீர்ப்பவரோ இன்று இங்கு திண்டாட்டப் படுறாங்க மோர்மிளகாய் செய்து தந்தால் முட்டி மோதித் தின்னுவாங்க ஊர்காரர் உள்ளே வந்தால் எட்ட நில்லு என்கிறாங்க சாதியில்லை என்று தான் அம்பேத்கர் சொன்னாங்க வாதியாக பெரியாரும் அதைத்தானே சொன்னாங்க நாதி…

    • 14 replies
    • 2.4k views
  19. Started by slgirl,

    இதயதின் வலிக்கு ஆறுதல் தருவது இணையத்தளம் சரிதானே??? நாம் சந்தித்ததும் அங்கு தானே என்றும் போல நீயும் உலவாவந்திருப்பாய் நானும் அதே வளமை போலவே வந்தேன் நினைத்திருப்போமா நீயும் நானும் இணையத்தினாலே இணைவோம் என்று எத்தனை சண்டைகள் சச்சரவுகள் வந்தாலும் இறக்கவில்லியேடா நம் உறவு வியக்கின்றேன் நீ பலமுறை எழுதி இருக்கின்றாயேயடா பிரிவு என்பது உறவுக்காகா தானே என்று சந்தித்தபோது சாதாரணமாய் தோன்றினாய் பத்தும் பலதும் பேசி மகிழ்ந்தோம் நண்பர்களாய் இன்று நீ இன்றி வேறில்லை என்று நினைக்கும் அளவுக்கு என்னில் நீ ஊறிவிட்டாயடா இதனால் நீ என்னவனும் ஆனாயடா... இன்று நமக்குள் இருக்கும் உறவுக்கு பெயர் என்ன என்று நீ சொல்லுவாயா சொல் என்னவனே காலம் தன் வேகத…

    • 14 replies
    • 1.7k views
  20. கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள் கண்களில் ஏன்படவில்லை உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை எங்கள் இனமது ஏதிலியான எதுவும் அடைந்திட அருகதையற்ற செத்துப் போகவே பிறந்த இனமென்று செய்வத…

  21. Started by கஜந்தி,

    ஆணிடமிருந்து பெண்ணிற்கு விடுதலை பெண்ணிடமிருந்து ஆணிற்கும் விடுதலை காதலில் இருந்து கற்பிற்கு விடுதலை கற்பிற்குளிருந்த காதலுக்கும் விடுதலை பெற்றோரிடமிருந்து பிள்ளைக்கு விடுதலை பிள்ளையிடமிருந்து பெற்றோருக்கும் விடுதலை உறவில் இருக்கும் பாசத்திற்கு விடுதலை பாசத்திற்குளிருக்கும் உறவிற்கும் விடுதலை பணத்திலிருக்கும் சொந்ததிற்கு விடுதலை சொந்ததிற்குளிருக்கும் பணத்திற்கும் விடுதலை நட்பிலிருந்து தூய்மைக்கு விடுதலை தூய்மைக்குளிருக்கும் நட்பிற்கும் விடுதலை இறுதியில் பூமியிடமிருந்து மனிதனுக்கு விடுதலை மனிதனிடமிருந்து உயிருக்கும் விடுதலை!!

  22. என் ஆக்கங்களை எல்லாம் ஒரு புளொக்கில் இணைப்பம் என்று கூகிள் ஆண்டவரின் உதவியுடன் தேடும் பொழுது நான் எழுதி சரிநிகரில் வெளிவந்த கவிதை ஒன்று கண்ணில் பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதியில் எழுதிய கவிதை இது இக் கவிதையை யாழில் இதுவரைக்கும் இணைக்கவில்லை என்று நினைக்கின்றேன் (சில பழைய கவிதைகளை முன்னர் இணைத்து இருந்தேன்). நூலகம் தளத்தில் இருந்து PDF வடிவில் இருப்பதால் அதனை படமாக மாற்றி இணைத்துள்ளேன். பழைய கவிதை என்பதால் 'இதெல்லாம் கவிதையா' என்று கோபிக்க கூடாது ------------

  23. உளி பல வலிதாங்கி அடிதாங்கி மெய் வருத்தி கோணம் பாகை என எல்லா பக்கமும் தட்டுப்பட்டு தெறிபட்டு மெதுவா செதுக்கிய பாறை ... மெல்ல உருவம் பெற்று பல கை இரத்தம் சிந்தி துடைத்து எடுத்து மேல் அலங்காரம் பூசி வண்ணம் இட்டு மென்மையா கரம் கோர்த்து தூக்கி நிமிர்த்தி அவ் உருவத்தை தோற்றத்தை .. எல்லோரும் அழகு பார்த்து வியந்து நிக்க நாம் செதுக்கிய சிற்பம் என இறுமாந்து நடந்து எம் திமிரை நெஞ்சின் உறுதியை உலகம் பார்த்து வாய் பிளந்து நிக்க நம்மை மிஞ்சிய ஒரு சிற்பியா இருக்க கூடாது என முடிவெடுத்து செய்த சதி .... சிற்பம் முடியமுன் சிற்பியை காணவில்லை உளி பட்ட வலிக்கு கூலியும் இல்லை இதுதான் உருவம் என சொன்னதை வைத்து சிலர் அதை தாமே செய்ததாய் சொல்லி தலையில் கீரிடம் தோளில் மலை…

  24. Started by N.SENTHIL,

    நீ தூரக்கிழக்கு, நான் வடமேற்கு இடையில் கடல், வானம் அலை, மழை தீவுகள் , திட்டைகள் எல்லைகள், சட்டங்கள் கடவுசீட்டுகள், காவல்கள் இவை தாண்டியும் வந்துதான் - போகின்றன சில பறவைகள், ஒரு பறவையின் பலம் கூட எனக்கில்லாமல் போகுமா போனாலும்தான் என் வாழ்வு முழுமை பெறுமா

    • 14 replies
    • 2.3k views
  25. கடற்புறம் காலமகள் மணலெடுத்து கோலமிட்ட கடற்புறத்தில் ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முது கடலின் பின்னாடி விண்ணோ தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி, தள்ளி ஒரு சிறு குடிசை; சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் சிறு குழந்தை ஆழ்க்கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக் காற்று சுமந்து வரும். காற்று பெருங்காற்று காற்றோடு கும்மிருட்டு. கும்மிருட்டே குலைநடுங்கி கோசமிட்ட கடல் பெருக்கு. கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது. திரை கடலை வென்று வந்தும் திரவியங்கள் கொண்டு வந்தும் இந்த சிறு குடிசை, இரண்டு பிடி சோறு, தோணி உடையான் தரும்பிச்சை என்கி…

    • 14 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.