Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    இவ்வார ஆனந்தவிகடன்(aug 9th) இதழில் வெளிவந்த கவிதை ''கள்ளத்தோணி"

  2. அன்பும் அறமும் சவப் பெட்டிக்குள் வைத்து அடைக்கப் பட்ட தினம்..! ******************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* காடுகள் கண்ணீர்விட்டு அழுத தினம்.. அதுவே தமிழன் செந்நீர் விட்டு மடிந்த தினம்! கூடுகள் பிய்த்தெறியப்பட்டு எமது குஞ்சுகள் ஆதரவின்றிக் கூக்குரல் இட்ட தினம்..! நாடுகள் பல ஒன்றுசேர்ந்து ஒ..நாய்கள்போல் நிம்மினத்தை வஞ்சகத்தால் அழித்த தினம்.. நம்.. பேடுகளின் சிறகுகள் நடுத்தெருவில் பெருச் சாளிகளால் சிதைக்கப் பட்ட தினம்..! முள்ளி வாய்க்கால் என்னும் களப்போரில் மூர்க்கப் புலிகள் வீர காவியம் ஆன தினம்..! கொள்ளிதனைக் கையில் ஏந்தி..வீதி வீதியாய் கொத்திவாய்ப் பிசாசுகள் கொடூரம் புரிந்த தினம்! அன்பும் அறமும…

  3. குறுக்கால போனவங்கள் வேலை அவசரத்தில் வீட்டை போற வழியிலை நிக்கிறாங்கள் அறுவான்கள் கறுத்த துணியோடை மரங்களுக்கை உருவை மறைச்சு நிக்கிறாங்கள் அறுவான்கள் வண்டிகளை இளைகுழையாக்கி இரக்கமில்லாமல் நீட்டிப் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாங்கள் அறுவான்கள் சரி அந்தப் பக்கம் தானே ஆர் பெத்த பிள்ளையோ மாட்டக் கூடாதெண்டு கைகாட்டி அவனை மட்டாப்போடாப்பா மரத்துக்குள்ளை நிக்கிறாங்கள் அறுவான்கள் ஐரோப்பா முழுதும் அள்ளித் தெளிப்பான்கள் மக்கள் கட்டும் வரிப்பணத்தை கனவான்கள் கிரீசுக்கு இன்னும் காணாதாம் என்னத்தைச் செய்ய கிறுக்கர் நாங்கள் தான் இருக்கோமாம் போத்துக்கல்லும் போதாதாம் பொதுமகன் கையில் வைக்கிறாங்கள் சுமையை நிக்கிறாங்கள்அறுவான்கள் ஆழ்ந்த சிந்தனையில்…

  4. எஞ்சி இருக்கும் உடலங்களையும் அரிக்கத்தொடங்கிவிட்டது வார்த்தைகளால் வளைத்த கூட்டம், புதிய ஏற்பாடு என்றும், மீள்ந்தெழல் என்றும், அறையப்பட்ட ஆணிகளை அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும் செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர். நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய, மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும் தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும் அவல ஓலங்களையும் கடந்து, நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில் குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும் இறந்தவர்களின் உறுதிகளால் இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும் அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து, எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து குறிகசக்கி பல்லிழிப்பவனையும், சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து, த…

  5. சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...! கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து விளையாடும் பால்நிலவைப் பார்த்து தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...! பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது காற்றடிக்கும் போக்கில் இங்குவரை கேட்கிறது...! நேற்று இங்கு நடந்ததை எத்தனை தடவைதான் நினைத்து நோவது...?! அப்படியே தூங்கிவிட்டேன்...! எனக்குத் தெரியும்... நான் தூங்குகின்றேன்... அதை உணர முடிகிறது என்னால்! கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன... குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்... இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!? நிலவொளியின் வெளிச்சத்தில் நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்! சவுக்கு மரக்காடுகளின் நடுவே... சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்த…

  6. கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..! தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!! ஞாலத்தின் ஒளியாகி... ஞானத்தின் வழியாகி... முத்தேவிகளில் முத்தானவளே...! முத்தமிழின் வித்தானவளே...!! தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் -உனைத் தாயாகத் தொழுகின்றேன்! -என் தயவாக நீயிருந்து - என்றும் நான் தவறாமல் பார்த்துக்கொள்!

  7. என் வீட்டுக்கு வா வாசலில் கோலம் இல்லை கண்ணாடியில் பொட்டு இல்லை காலையில் கால்கொலுசின் ஓசை இல்லை என் வீட்டுக்கு வா ... நிலா முற்றம் வெற்றிடமா இருக்கு முற்றத்து மாமர ஊஞ்சல் ஆடாது நிக்கு குயில் இப்பொழுது எல்லாம் கூவுவது இல்லை ஒரு கிளிமட்டும் கிளையில் சோகமாய் என் வீட்டுக்கு வா ... அம்மா எப்பொழுதும் விரதம் .. கோயிலில் நித்தம் தீபம் ஏற்றியபடி பூசுமஞ்சள் வாங்கி வைத்து இருக்குறா சோப்பில் வாசனை கூடியதும் இருக்கு உன் வரவுக்காய் அடி என்னவளே என்னோடு வா என் வீட்டுக்கு பெண்ணே .. சீயக்காய் அரைத்து முழுகி உன் தலைவாரி தூபம் காட்டி பின்னல் இட்டு அதில் மல்லிகை வைத்து அழகு பார்க்க உன் மாமி காத்து இருக்கா என் அம்மாவா என்னோடா வா என் வீட்டுக்கு காதலியே .

  8. விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது… ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது… (விழியிரண்டும்……) சுற்றிவர நரிக்கூட்டம் நடுவில் நாமோர் ஆட்டு மந்தை வெட்டவெளிப் பூமியிலே வெறுங்கையாய் நடைப்பயணம்… முள்வேலி முகாம் நோக்கி யாதொன்றும் பிழைபுரியாப் பாவியரின் நடைப்பயணம்… பாவியரின் நடைப்பயணம்… (விழியிரண்டும்……) பூனைகளின் குகை நோக்கிச் சுண்டெலிகள் நாங்களிங்கே ஏதிலியாய்ப் பாவியராய் பயணிக்கும் நேரமித…

  9. காசுதான் வாழ்வா ???? வெண்பனிப் புகார் அடர்த்தியாய் மண்டியிருக்க பைன் மரத்துக் காடுகளில் பையப் பைய நடக்கையிலே உன் நினைவும் என்னை ஊஞ்சலாய் ஆட்டுகின்றது...... காலப் பெருவெளியில் உன்னைக் காசுக்காய் தொலைத்தவனுக்கு காலம் தந்த தண்டனை காலத்தால் அழியாதது..... என்மீது நீ கொன்ட அன்பு சுத்தமானது , அதை நான் அசுத்தமாக்கியது என் பிழைதான் பெண்ணே ....... என்னிடம் வந்தவளோ என் காசைக் கணக்குப் பாக்க , பாலை மணல் வெளியில் வழியைத் தொலைத்த வழிப்போக்கனைப் போல நானோ அவளிடம் அன்பைத்தேடி அலைகின்றேன்........ அன்பை மட்டுமே அள்ளித் தரத் தெரிந்த உனக்கு என்னைப் போல் வண்டுக் குணம் இல்லைத்தான் வாழ்க்கையில் வெற்றி... வெற்றி ....... என்று மார்தட்டிய எனக்கு காலம் …

  10. முதற் பெண்மாவீரரான மாலதி அவர்களின் 26வது நினைவு சுமந்து வீரவணக்கங்கள்! தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்! ----------------------------------------------------------------------- வென்றிடச் சென்றவள் பெண்வேங்கையுள் முன்னவள் தாலியைத் தாங்கிடும் மரபிலே வந்தவள் தடை யுடைத்தவள் நஞ்சினைச் சூடினாள்! வேதனை கண்டவள் வெஞ்சினம் கொண்டவள் போரிலே புகுந்தவள் புதுயுகம் படைத்தவள் பாரிலே நிலைத்தவள் செங்கொடி ஏந்தினாள் போர்க்கலை காட்டினாள் தமிழ்ப்பெண்நிலை மாற்றினாள் அஞ்சுதல் போகினாள் ஆயுதம் சூடினாள் தூற்றுதல் துடைத்தவள் களப்பணி யாற்றினாள் வீறுடன் நடந்தவள் வித்தென வீழ்ந்தவள் அடையாளம் ஆகினாள் தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்!

    • 8 replies
    • 1.5k views
  11. பொய்யுக்கு தானடா பொம்பள வாழுறாள் மெய்தனை காட்டியே மாயங்கள் செய்யிறாள் ஆம்பள மனச கஷ்ட படுத்திறாள் கல்யாணம் கட்டிப்பின் கைவிட்டு செல்கிறாள் உலகம் சுத்துது தன்னாலே உலக சுத்திறன் பெண்ணாலே காதல் பற்றியே சொன்னாலே கோபம் கொள்கிறன் தன்னாலே பேஸ்புக்கில் காதல் மலர்வது தப்பப்பா பேஸ்புக்கால் காதல் அழிவதும் தப்பப்பா பட்ட துன்பமிது கேட்டால் நீ நண்பேண்டா ஏற்கமறுத்தால் நான் என்னத்த சொல்வேண்டா பேஸ்புக்கில் பசங்கள தேடிப்பிடிக்கிறாள் வயசுக்கு ஏற்றதாய் வேசங்கள் போடுறாள் அப்பப்ப பெயரை மாற்றி இடுகிறாள் செல்லம் என்றழைத்து சேட்டைகள் செய்கிறாள் எங்கடா எங்கடா காதல் மலருது வாலிபம் இப்போ காமத்தில் அலையுது காலேச்சு பொண்ணுக கர்ப்பமா போகுது சின்னச்சிறுசுக அப்பா ஆகுது ஆணுக்கும் பெண்ண…

  12. http://youtu.be/bKy6lO-TJvw உடல் இரசாயனங்களின் உந்துதலில் உன்னைக் கண்டேன். உன்னதமாய் தோன்றிய உன்னால் பைத்தியமும் ஆனேன் - கூடி உலவவும் செய்தேன்..! உயிர்மெய்யென உன்னில் நானே உளறியும் கொட்டினேன். உன்னை நீயே உத்தமன் இவனென்று எனக்குத் தந்தாய்...! உறவுகள் விரிந்தது உண்மைகள் என்பதாய் வளர்ந்தது. உடலும் உறவு கொண்டது உயிர்களும் தோற்றம் பெற்றன. உடைக்க முடியாத பந்தம் உன் - என் உறவென்று உறுதியாய் நம்பி இருந்தேன் உன் அன்பை உண்மை அன்பெனக் கண்டதால்.! உறுத்தலாய் உருண்டது ஓர் நாள்..!! உன் முன்னவன் என்று உதிரியாய் ஒருத்தனை உதாரணம் காட்டினாய். உள்ளதில் படர்ந்தது உதவாக்கரை எண்ணம். உன்னை அது உறவால் வெறுக்க வைத்தது. உறவுகள் விரிசல் காண... உயிர்கள் அந்நிய…

  13. தனியாக நானும் அலைகின்றேன் துணையாக நீயும் வருவாயா தூக்கங்கள் இன்றி தவிக்கின்றேன் கனவாக மட்டும் வருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) தவமாக நானும் இருகின்றேன் வரமாக நீயும் வருவாயா சுகமாக நானும் தொலைந்துவிட இதமாக உன்னை தருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) காதல் ஒன்றின் அர்த்தம் கண்டுகொண்டேன் பெண்ணே நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி வைத்த பின்னே சாயங்கால பூவாய் நீயும் பூத்திருந்தாய் சாலை தோறும் பெண்ணே உன்னை பார்த்திருந்தேன் (2) மலரே நான் மயங்கிவிட்டேன் மனதில் உன்னை சுமந்துவிட்டேன் (2) உயிரே என்னை வாழவிடு உயிரை கொஞ்சம் வாழவிடு (2) அங்கும் இங்கும் சுற்றும் வாலிபத்தில் பெண்ணே உன் காலுக்குள்ள நானும் சுற்றுகின்றேன் கண்ணே இரவினை பகைத்தேன் விழிகளினால் இதயமும் த…

  14. மகரந்தங்களின் கண்ணீரும் பருவம் தப்பிப்போன பாலணுக்களின் திட்டைக்களும் நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில், சுடர் தின்ற விட்டிலின் கனவுகள் கருகி பரவுகின்றன அழகோடு இயைந்த நிலவினைப் புணர தேடியலைகிறான் சூரியன் இரவினை கொன்றும் பிறக்கிறது இரவும் நிலவும். இலைகளை வெறுத்த கிளைகள் காத்திருக்கின்றன, பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக, சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின் மடிகள் கறக்கின்றன ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு, அன்பு... ஒருவர் மனம் நெகிழும்படி மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் என்று தெளிவாக வரையறை செய்கிறது அகராதி. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் விடைகள…

  15. எங்கள் அரசியல்வாதிகளின் முகங்களில், இறுக்கம் தெரிந்தது! சிங்கக் குரலோன் செருமிய போது, கூட்டம் கொஞ்சம் கலங்கித் தான் போனது! சங்கம் வளர்த்த இனம் நமதினம் என்றீர்கள்! எங்கள் தோள்கள் கொஞ்சம் அசைந்ததும் உண்மை! செருக்களமாடியது எமதினம் என்றீர்கள்! பெருமையில் விரிந்தன எமது மார்புகள்! ஒரே ஒரு தடவை மட்டும் ஒற்றுமை காட்டுங்கள், உலகத்தின் கண்கள் உற்றுப் பார்க்கின்றன! ஓடோடி வரக் காத்திருக்கின்றன! உங்கள் வாக்குகள் தான் எங்கள் அஸ்திரங்கள், மீண்டுமொரு முறை நம்பினோம்! எத்தனை தலைமுறைகள் நம்பினோம், இன்னுமொரு முறை நம்புவதால், என்ன கேடா வந்துவிடப் போகின்றது? இந்த முறை வாக்குகளைக் கிள்ளித் தரவில்லை! அள்ளியே தந்தோம்! வாக்குகள் எண்ணி முடிந்ததும், வார்த்தைகள் தடுமாறுகின்றன…

    • 24 replies
    • 1.5k views
  16. பெய்து கொண்டே இருக்கட்டும் நினைவுகள்.. ----------------- கனவுகளில் காய்ந்த நிலத்தில் விதைகளைதேடுகிறேன் என் காதலை துளிர்ப்பதற்காய்.. மனவெளியெங்கும் இன்னும் எழுதாத என் கவிதைகளைப்போல காய்ந்துகிடக்கிறது கண்ணீர் வற்றிய காதல் பூக்கள்.. ஆவியாகி இன்னமும் பொழிவதற்காய் சிலிர்த்துக்கொண்டே இருக்கின்றன ஒரு மாலைப்பொழுது எமை நனைத்த மழைத்துளிகள்.. நாம்தான் கரைபிரித்துக்கட்டப்பட்ட துருவ நதிகளாக திசை பிரிந்து... எம் காதலுக்கு ஒளியேற்றமுடியாத சோகத்தில் அழுதபடி கடந்துபோகிறது ஒவ்வொரு இரவும் நிலவு.. இப்போதெல்லாம் நாம்பேசிய வார்த்தைகளில் சிதறிக்கிடக்கின்றன அன்பைத்தொலைத்த கண்ணீர்ப்பூக்கள்... ஏன் மெளனம் உன் கரைகளில்..? உன் எண்ணங்களை வனையத்தெரியா வண்ணாத்திப்பூச்சி நீயோ..? இல…

    • 14 replies
    • 1.3k views
  17. பாற்கடலில் பாவை குளிக்க அதைப்பார்த்துக் கண்கள் களிக்க நனைந்த தேகத்தில் அங்கங்கே மின்னிச் சிரிக்கின்றன மொட்டுக்கள்! மெல்ல மெல்லப் பாலாடை விலக சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற முழுதான நிர்வாணத்தின் அழகில் சொக்கிப்போகிறது மனசு! பாவையவள் பார்வையாலே எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்! ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே! கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி தன் அவசரத்தைக் காட்டுகிறாள்! ஜன்னலைத் திறந்துவைத்தால் என் கட்டில் வரை வருவாள்! காலையில், அவள் கணவன் வரும்வரைக்கும் என் இரவு.... இவளோடு கழியும்! அழகான, இவள் தேகம் புணர்வதினால் என் இதயம்.... இதமாகக் களிக்கும்! காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை காலையில் பார்க்கும்போது... நேற்ற…

  18. தேடிக்கொண்டிருக்கிறேன்! --------------------------------------- என்னைத் துடைத்து அழகு பார்த்தவன் இன்னொருவனுக்கு பரிசாய்க் கொடுத்துப் புதைந்து போனான்! விதையென்றானதாய் விழி துடைத்தவள் என்னைத் தாங்கினாள் வீறுடன் நடந்தாள் பேருடன் வந்தாள்! பெரும் பேறினைப் பெற்றவள் தானென கருமையில் கலந்தாள் கடமை முடித்தாள்! மீண்டும் தோள்களில் மிடுக்குடனிருந்தேன் நாட்கள் கழிந்தன! வங்கத்திலாடிய வஞ்சகர் கூட்டம் நஞ்செடுத்தாடி நாயகர் சாய்ந்தனர் நானுமிப்போ தமிழீழ மக்களைப்போல அனாதையாய் சாய்தேன் யாருமிப்போ தீண்டுவதில்லை யார்வருவாரோ தேடிக்கொண்டிருக்கிறேன்!

    • 6 replies
    • 1.2k views
  19. இன்று தமிழ்த்தேசத்தின் புதல்வன் பாலச்சந்திரன் பிறந்தநாள். சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை இது. # பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. https://www.facebook.com/parani.krishnarajani?hc_location=stream

  20. பகல்கள் மீதான நினைவுகளால் இறக்கும் இரவின் பாடல்.. ------------------------ காற்றையும் கடந்துபோகும் நிலவையும் கரைந்துபோகும் இரவையும் நினைவுகளால் கழுவிக்கொண்டே தொலையும் இந்த நாளொன்றில் கசிந்துகொண்டிருக்கின்றன கண்ணீர்த்துளிகளாய் ஞாபகங்கள்... அன்புச்சிதைவுகளின் காலப்படுக்கைகளுள் புதைந்துபோய்விடாமல் இன்னமும் என் இமையோரத்தில் எஞ்சி இருக்கின்றன உன் மேலான பிரியத்தின் படிமங்கள்.. ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் சிரித்தபடி உப்புக்கரிக்கும் இமைகளின் ஓரங்களில் ஓலமிடும் விசும்பல்களாய் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறது மனது தனியாக... முன்னொரு நாள் சேர்ந்து நடந்த நீயில்லாத தெருவொன்றில் துருவக்காற்றில் ஒடுங்கிப்போகும் ஓரிரு ஓர்க் மரங்களும் நடுங்கியபடியே கடந்துபோகும் நாலைந்து ச…

  21. ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி.. நானென்பது யாதென்பேன்..? ------------------------------------------- நானென்பது யாதெனப் புரியவில்லை... தேடித் தேடிக் களைத்து முதிர்ந்த மனக்காலத்தின் ஒரு மூலையில் பெருங்கேள்விக்குறியுடன் விழித்துக் கிடக்கிறது அறிவு... நானென்பது யாதென்பேன்..? எனை வனைந்த அனுபவங்களா..? மூளைத்திரட்சிகள் எங்கும் நீந்திக்கொண்டிருக்கும் நினைவுகளின் தொகுப்புகளா..? படித்து முடித்த புத்தகங்களா..? நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..? ஜீன்களின் வழி புகுந்த காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும் மூதாதைகளின் கனவுகளா..? சொல்லற்று நிற்கிறேன்... விளங்க முடியாப் புதிராக வெளியிலிருந்து …

  22. ஈழம் என் உயிர் என்பார் தடைகள் உடைத்து தலைவன் வழியில் ஈழம் காண்போம் என்பார் வீர வசனம் பேசித் தம்மை விசுவாசி என்றும் கூறி வீணே காலத்தைக் கழிக்கின்றார் உணவின்றி மக்கள் உழல்கையில் உள்ளம் இரங்கார் ஒருபிடி உணவும் கூட உண்மையில் கொடார் கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு காப்பாற்றுவார் போல் மாற்றார் முன் கதறித் துடித்து நாடகமும் ஆடுவார் தன்னைத்த் தானே பீற்றித் தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து தானே தன்மானத் தமிழன் என்றுவேறு எக்காளமிடுவார் வார்த்தைகளில் வண்ணம் வைத்து வருவோரை மயக்கி வக்கணையாய்ப் பேசி வலைவீசி வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார் இத்தனை கேடு கேட்ட தமிழனை தெரிந்தும் போற்றுவோர் மனிதம் தெரியாத மூடர்களே உணர்ந்தும் உறவு கொள்வோர் உலகறியா மூடர்கள் …

  23. ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி சிங்களம் மகிழ்ந்து இருந்த போது... கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி எம்மை காக்க எவர் வருவார் என தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம் என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் .... நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு நானோ இறையாண்மை அடிமை நீயோ இன்னொரு அடிமை உனக்கு... என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம் சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை.. தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய் வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி எம்மை ஒரு பாதையில…

  24. Started by கோமகன்,

    சுழிகுளம் சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். “கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா” பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும் . நன்றி : முகனூல்

    • 7 replies
    • 1.3k views
  25. வலிமிகு கணங்கள் சுற்றிலும் ஒளிவெள்ளம் சுடர்விட இதயங்கள் மட்டும் இருள் மண்டிக்கிடந்த அந்த அந்தகார இருளின் நடுவே அலைகடலாய் குமுறி அனலாய் கொதிக்கும் அடங்காத வலிகள் வலிகளும் வாதைகளும் மருந்தின் வாடைகளும் மௌனமாய் ஓலமிடும் ஏக்கங்களுமாய் ஏகாந்தமாய் அந்த இரவுப் பொழுது நகர என் உயிரின் இறுதி ஊசலாட்டம் புன்னகை சிந்தும் வதனம் புதர் மண்டிக்கிடக்க நெற்றியிலோ முத்துமுத்தாய் வியர்வைத் துளிகள் சொர்க்கத்தின் கதவுகளாய் சொக்கவைத்த உதடுகளோ பாலைவனமாய்… உள்ளும் வெளியும் ஓடிக்கொண்டிருக்கும் உயிரோட்டம் ஒட்சிசன் குழாய்களினூடே… பக்கத்தில் இருந்த எலக்ரோனிக் இயந்திரம் சுவாசத்தை வாசித்துக்கொண்டிருந்தது ஒழுங்கற்ற முறையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ஒப்புதல் அறிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.