கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5134 topics in this forum
-
"நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்?" கண்களை திறந்து காலங்கள் மறந்து கடைசியில் வானத்தை பார்த்துக் கொள்வேன். மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன். உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்! நாளை உலகம் இல்லை என்றானால் அன்பே என்ன செய்வாய்? ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன். உன் இதழ்களின் மேலே இதழ்களை சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன். மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து மரணத்தை மரிக்க வைப்பேன். நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என்ன செய்வாய்? காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும் பூலோகம் அழிவதில்லை. ஆயிரம் மின்னல் பிரிக்கின்றபோதும் வ…
-
- 6 replies
- 2.7k views
-
-
வாழத் தெரிந்த வல்லவருக்கோ வாழ்க்கை என்பது வரமாகும் வழிதெரி யாமல் தவிப்பவருக்கோ வாழ்க்கை முழுதும் வலியாகும் தாழ்வும் உயர்வும் மனநிலை என்பது தரணியில் சிலர்க்கே தெளிவாகும் தாழ்ந்தால் தரிசன மாகும் குருவின் தாளில் புதைவதே வாழ்வாகும்! உடலுக் குள்ளே நம்மைத் தேடி உளுத்துக் களைத்து நின்றோமே உடலைத் தனது உயிருள் துகளாய் உடையவன் சன்னிதி சேர்ந்தோமே! கடலுக் குள்ளே கனலாய் நின்று கனவை நனவைக் கடைந்தானே! கட்டி வெண்ணையாய் மிதக்க விட்டுக் கைகள் கொட்டிச் சிரித்தானே! தோட்டம் முழுதும் பட்டாம் பூச்சி துரத்தத் துரத்தப் பறக்கிறது தொட்ட கணத்தின் துன்ப நிதர்சனம் தொல்லை யுகமாய்த் தொடர்கிறது வேட்டைக் கிறங்கும் வேங்கை தானே வேட்டை யாடப் படுகிறது! வீழும் கணத்தில் விடிந்த ஞானம்…
-
- 0 replies
- 499 views
-
-
அறிவினுயிர் கற்பனையென்றான் ஐன்ஸ்டீன். என்னுயிர் கற்பனைகளும் அவளாலே. அறிவியல் விந்தைகளும் அவளைப்போலவே... இவள் நெற்றிப்பிறை பூமிப்பெண் சூடும் வளர்பிறை இவள் விழிவீச்சு ஒசோனை ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சு இவள் சிரிப்பலை உலகமியங்கும் மின்காந்த கதிரலை இவள் கண்ணங் கருவிழிகள் விண்மீன்களை விழுங்கும் கருந்துளைகள் இவள் கவுல்கள் வெண்ணிலவின் பால்வண்ணப் பரப்புகள் இவள் செவ்விதழ்கள் செவ்வாய் கிரகத்தின் மண்வளைவுகள் இவள் மறைமேடுகள் ஆழ்கடல் பனிமுகடுகள் இவள் உந்திச்சுழி பால்மவீதிகளில் சுழலும் சூரியசூறாவளி கருந்துளைகள் – black holes சூரியசூறாவளி – solar wind
-
- 8 replies
- 1.1k views
-
-
குதிரைக்கு கொம்பு முளைத்த காலமிருந்து கற்பனைக் குதிரைகளின் இனப்பெருக்கத்திற்கும் குறைவில்லை..! களத்தில் அன்று ஒரு லங்காபுவத்..! கடல் கடந்த தேசங்களில் இன்று எல்லாமே அதுவாய்…! இல்லாத… பிரபா அணி கிட்டு அணி சண்டை..! இருந்த… கிட்டு மீது பொட்டு தாக்கு பொட்டு மீது மாத்தையா தாக்கு மாத்தையா மீது யோகி தாக்கு யோகி மீது கரடி தாக்கு….. இப்படியே திண்ணைப் பேச்சில் பொழுது கழித்த கூட்டம் புலம்பெயர்ந்து மட்டும் திருந்தவா போகுது..??! இறுதியில்… சூசை மகன் மீது பிரபா தாக்கு பிரபா மீது சூசை கடுப்பு… அன்ரன் மீது பிரபா விசனம் விசனம் மீது பிரபா கொலைவெறி… போராட்டம் நெடுகிலும் எம்மவரின் கற்பனைக் குதிரைகளின் தடாலடி ஓட்டப் போட்டிகளுக்கும் குறைச்சலில்ல…
-
- 40 replies
- 3.1k views
-
-
என் கவிதையின் சொற்களைக் கொண்டு பழைய காலத்தை மீட்க முடியுமாவென்று கேட்கிறார்கள் பசித்த நிலங்களுக்கு நீர் வார்க்க முடியுமாவென கேட்கிறார்கள் ஒரு நாட்டின் விடுதலையை கவிதையின் சொற்கள் வாங்கித்தருமா என்கிறார்கள் எனக்கும் என் கவிதைக்குமிடையே எவ்வித கடிதத் தொடர்புமில்லை ஒரு கவிதையின் வேலை என்னவென்று கவிதைக்குத்தான் தெரியும் சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியுமென்று யாரும் மதவாதிகளைக் கேட்டதில்லை வேதங்கள் புராணங்கள் புனித நூல்கள் இறைவசனங்கள் இன்ன பிற இத்தியாதிகள் எல்லாவற்றிலும் சொற்கள் அந்த சொற்களின் ஆயுள் நீளம் எவ்வளவோ அவ்வளவு காலத்திற்கு உண்மை போராட வேண்டியிருக்கும் கவிதைகள் எலி வலையல்ல; யுத்த கால முகாம்கள் கனவுகளை கவிதையில் வைக்கப் பழகியிருக்கிறோம் போராட்ட…
-
- 0 replies
- 701 views
-
-
காங்கேசன் துறைவீதியில் இணுவைப்பதியின் எல்லையை இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால் ஊரின் நடுவில் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம். புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம். சீனிப் புளியடி பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் . எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான் புவி எங்கும் அறிமுகம் குடை போல விரிந்த மரம் குளிரோடு தந்த நிழலில்தான் இடைவேளையில் அம்மா கட்டித் தந்த இடியப்பமும் முட்டைப் பொரியலும் கவளமாய் களம் இறங்கும். வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு தொண்டை தண்ணி வத்த ச ப சொல்லித் தந்தும் அங்குதான். கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான் உடற்பயிற்சி வேளை முடிய உற்சாகம் த…
-
- 8 replies
- 676 views
-
-
என் கண்ணீரில் கப்பல்விட்டு விளையாடுகிறாள்! அந்தக் கப்பலைப்போலவே... நனைந்து பாரமாகிறது என் மனசும்! என் மனதின் மழைக்காலங்களில்... அவள் நனைந்து பூரிக்கின்றாள்! இடியும் மின்னலும் நிறைந்த கார்மேகமாய், என் வாழ்வும் வேகமாய் ஓடிப்போகிறது! என்னைப் படுத்தும் காலங்கள்... அவளைமட்டும் ஒன்றுமே செய்வதில்லை! வரவிருக்கும் வசந்தத்தையும்... வண்ணத்துப் பூச்சிகளோடும் பூத்துக் குலுங்கும் பூக்களோடும் அவள் இரசிப்பாள்! அதிகாலைப் பனித்துளிகள் போல... கொஞ்சங்கொஞ்சமாய் நான் மறைந்து போவேன்! மீண்டும் ஒரு மழை வரும்...! அந்த மழையிலும் அவள் கப்பல்விட்டுச் சிரிப்பாள்! சிரிக்கும் பொழுதில் தோன்றும் அவளின் கன்ன மடிப்புக்களில்... நான் அடங்கிப்போவேன்! சிறகடிக்கும் சிட்டுக்குருவிய…
-
- 7 replies
- 1.2k views
-
-
அன்னை கருவில் அழகான வாழ்வு அகிலம் கண்டும் ஆனந்தம் கொண்டு மனிதப்பிறவியாய் மண்ணில் ஆர்ப்பரித்து மனிதனாய் வாழ மறுக்கின்ற உலகம் செய்த பிழை எதுவென்று சொல்லாது தளம்பறித்து சிசுவாய் இருந்தாலும் சிதைத்து சுகம் கண்டு ஓடு மட்டும் துரத்தி ஓட்டாண்டியாக்கி ஒய்யாரமாய் படம் போட்டு ஒப்பாரியில் வாழ்கிறார்கள் எல்லார் வாழ்விலும் எட்டப்பர்களாய் எட்டி உதைத்து எரித்துப் போட்ட சுதந்திரம் அங்குமிங்குமாய் அலைமோதும் அகதியாய் அல்லல் படுத்தும் அறிவு கெட்ட உலகம் சுதந்திரம் என்ற சுவாசம் அடைந்து பெற்றவர்களும் அதனை அளிக்க மறுத்த ஆட்சியாளர்களாய்.... மரத்துப்போன வாழ்வுடன் மடிந்தொழிந்து போகுமுன் மனிதன் என்றாவது மறதியிலாவது ந…
-
- 0 replies
- 439 views
-
-
அப்பா எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கை…
-
- 14 replies
- 6.3k views
-
-
அணைக்கப்பட்ட ஒளியில் பிணைக்கப்பட்ட நிலையில் ஆண்மையின் வன்மையிலும் பெண்மையின் மென்மையிலும் அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்! செளித்து வளர்ந்த புல்வெளியும்... அதில் வளைந்து நெளிந்த நீராறும்... நெடிதுயர்ந்த மலைமுகடும்... கொஞ்சும் இயற்கை எழிலை விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள் ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை! மங்கிய ஒளியில் நிகழும்... மங்களமான நிகழ்வுகளெல்லாம் மயங்கிய நிலைகொடுக்க, தயங்கியே தஞ்சமடைவதாய் ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை! இயங்கிய ஈருடலும்... கிறங்கிய நால்விழியும்... காரிருள் கானகத்தை உரசி... சூடேற்றிப் பற்றவைக்க, அடித்தோய்ந்த மழையில் நனைந்து நின்ற மரக்கிளைகள்போல் ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!! …
-
- 15 replies
- 1.1k views
-
-
நுதலில் உலவும் அளகமே வேய்கொள் தோளுடன் புலவியோ ?? கன்னக் கதுபபுகளில் தவழ்ந்து காதுமடலுடன் கலவி கொள்கிறாய் !! நுதல் - நெற்றி அளகம் - முன்னுச்சி மயிர் வேய்கொள் - மூங்கில் போல் வளைந்த தோள் புலவி - ஊடல்
-
- 4 replies
- 1.2k views
-
-
கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த நிழல் படிந்து மறையும், வெயில் பட்டு தேகம் சிலிக்கும், மெல்லிய கூதல் காற்றில் பரவும். மாலை சரிகையில் _அந்தரத்தில் மழைப்பூச்சிகள் உலாவும் பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். நீர் மோதும் வரப்புகளில், கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் இரை தேடி, சிலநேரம் இடம் மாறும். வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம் மிதப்பவற்றில் எல்லாம் எரியெறும்புகள் ஏறித்தவிக்கும். காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில் விதைக்காத சில நிலத்தில் அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். பச்சைபிடித்து, அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் அடங்கி இருக…
-
- 16 replies
- 1.4k views
-
-
போருக்கு பின் எனது கிராமத்துக்கு ஒரு முறை செல்ல முடிந்தது உடைந்த சட்டி பானைகளும்..... விளக்குமாறு தும்புத்தடிகளும்... அகப்பை காம்புகளுமே - அம்மாவினது அடையாளமாக மிஞ்சியிருந்தது. அப்பாவின் இருப்பு சரிந்து விழுந்து கிடந்த கோர்க்காலியிலும்... பழைய முடிச்சு பொட்டாளியிலும்.... புலப்படுத்தப்பட்டது. வீட்டின் பின்பகுதியில் - கிழிந்து புதைந்து கிடக்கிறது எனது பழைய காற்ச்சட்டை ஓரிரு நாட்களேனும் தம்பி அதை பயன்படுத்தியிருக்கலாம். உரலும் அம்மியும் முற்றத்தில் சிதறிக்கிடந்தது. ஊரார்கள் தூக்க முடியாமல் விட்டு விட்டார்கள் போல...... தங்கச்சியினது - எந்த அடையாளங்களும் அங்கே காணப்படவில்லை... எதிரிகளால் அவள் கொலை செய்யப்பட்டிரு…
-
- 20 replies
- 5.7k views
-
-
முன்பை விட அதிகமாக கோபம் வருகிறது உன் கவிதைக்கு இன்னும் அது திருந்தவில்லையென பேசிக்கொள்கிறார்கள் அநீதிகள் இழுத்துச் செல்வதை அது விட்டு விடவில்லை உரத்து குரல் கொடுப்பதை அது நிறுத்திக்கொள்ளவில்லை துரத்தப்பட்டவனோடு கைகோர்த்து நிற்கிறது வெளியே நிறுத்தப்பட்டவனோடு வெயிலில் கிடக்கிறது பள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் குழந்தைகளோடு ஏன் பேசிக்கொண்டிருக்கிறது அவர்களின் கைகளைத் தடவிக் கொடுப்பதும் இனி சுத்தம் செய்யாதீர்கள் எனச் சொல்வதும் கவிதையின் வேலையில்லை மனு இன்னும் சாகவில்லை என்று குற்றம் சாட்டும் உன் கவிதை என்ன வக்கீலுக்கா படித்திருக்கிறது சாதியத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் பங்கி குழந்தைகளை வண்டியில் ஏற்ற மறுப்பவர்கள் வால்மீகி பெண்களுக்கு கட்டளையிடுபவர…
-
- 1 reply
- 483 views
-
-
என்னை மன்னித்து விடு குவேனி மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது அம் மோசமான நிலா மண்டபத்திலிருந்து மயானத்தின் பாழ்தனிமையை அறைக்குக் காவி வருகிறது - இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெர…
-
- 3 replies
- 2.1k views
-
-
நாங்கள் வாய்பொத்தி இருக்கிறோம்-ஆனால் ஊமைகள் அல்ல. நாங்கள் கைகட்டி நிற்கிறோம் என்பதால் முடங்களும் அல்ல. ஆறாத புண்களோடும் மாறாத வடுக்களோடும் தான் கைகளில் எழுதுகோல்களை தூக்கியிருக்கிறோம். எழுதுகோல்களை பிடிப்பதற்காக மட்டுமே எங்களின் கைகளை மெளனித்துள்ளோம். எங்கள் கைகளும் உயர்ந்து இருந்தது “ஒருகாலம்”. நாங்கள் சொல்ல நீங்கள் கேட்டது “அந்தக்காலம்”. நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கவேண்டியதாய் இடக்குது “இந்தக்காலம்” காலங்கள் மாறும் அது விதி. கவலைகள் தீரும் அதுவும் விதி. “எதை” முற்றாக முடித்து விட்டதாய் எக்காளம் இடுகிறாயோ “அது” ஆரம்பித்த இடத்தில் நிற்பதை மறந்துவிடாதே..!!! “எதை” குழிதோண்டி புதைத்து விட்டதாய் கொக்கரிக்கிறாயோ “அது” முழைத…
-
- 0 replies
- 471 views
-
-
உடலிருந்தும் உறவிழந்து அழுகுதே தமிழினம் துயர் துடைக்க யார் வருவார் நீங்கள் இல்லையே தமிழன்னை காத்த மலை ஒன்று சரிந்ததே அன்று உலகத்தில் எம்மை உரைத்த பிறந்தாக வேண்டும் நீங்கள் இன்று !!! (முகநூல்) உலகமெங்கும் ஏற்றுக்கொண்ட ஈழ ராஜ தந்திரி உலகமெங்கும் தமிழரின் உரிமை சொன்ன மந்திரி தழு தழுத்த குரலோடு தர்மம் சொன்ன வாய்மொழி தலைவன் மீது அன்பு கொண்டு அனலில் நின்ற பெரும்புலி எம் தேசம் தந்த பெறுமதி எம் தேசத்தின் குரல் !!!
-
- 0 replies
- 581 views
-
-
பாரதியார் ஒரு நல்ல கவிஞர்.அவர் மறுபிறவி எடுத்து யாழ்களத்திற்கு வராமல் ஈழதமிழனாக சிட்னிக்கு வந்திருந்தால் எப்படி கவிதை வடித்திருப்பார் என்பதை பற்றி சிந்தித்தேன். அப்படியே கவிதையும் எழுதி விட்டேன்,அதற்காக எனக்கும் ஒரு மன்றத்தை ஆரம்பித்து போடாதையுங்கோ தொடர்ந்து பாரதியார் கவிதைகளை நான் ரீமிக்ஸ் பண்ண போறன். காணி நிலம் வேண்டும் - சாய்பாபா காணி நிலம் வேண்டும் - அங்கு அழகிய பளிங்கு மேல்மாடி "கோஸ்டிலி விட்டிங்குடன்" கட்டி தர வேண்டும் சுவீமிங்பூல் அருகினிலே - அப்பிள் மரத்தினிலே காயும்,பழமும் பத்து,பன்னிரன்டு -பார்ம் மரம் முற்றத்தில் வேண்டும் - நல்ல முத்து சுடர் போல் நிலாவொளி முன்பு வரவேண்டும் - அங்கு கத்தும் குக்குபுரா ஓசை - சற்றே வந்து காதில் ப…
-
- 34 replies
- 4.5k views
-
-
வதையின் மொழி வதை என்பது ஈழத்தமிழனின் வாழ் வென்றானது -இன்று உயிர்த் தமிழுக்கும் தமிழனுக்கும் அதுவே மொழியானது சிறை என்றும்,சித்திரவதை என்றும்- அது இலக்கணம் சொன்னது கொலை என்றும்,கொடும் அவலம் என்றும் நா கூசாமல் பேசியது என்ன இது ? பெண்னென்றும் ஆணென்றும் அது பேதமற்று வதைத்தது.. தெருவில் வாழும் உயிருக்கும் கருவில் வளரும் உயிருக்கும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டன ... ஏன் என்றார்கள் மக்கள் ...?நீ தமிழன் ! அதனால் என்றது வதைமொழி .. தமிழ்த் தாயின் கருவறையில் உயிர் பெற்றதால் -தனக்கென கல்லறை கூட இல்லாது போனான் தமிழன் ...! கலங்கி தவிக்கின்றன- ஈழத்தில் கருவறைகளும் கல்லறைகளும் ...! உயிர் தாங்க கருவறைகளும், உடல் தாங்க கல்லறைகளும் மௌனமாய் மறுக்கின்றன- இருந்து வாழ்வ…
-
- 1 reply
- 1k views
-
-
வாழ்வுண்டோ? மண்ணை இழந்து மனையைத் துறந்து வருந்தியும் வாழ்வுண்டு! பொன்னை இழந்து பொருளைத் துறந்து புழுங்கியும் வாழ்வுண்டு! கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து கலங்கியும் வாழ்வுண்டு! உன்னை இழந்தால் தமிழே உலகில் ஒருநொடி வாழ்வுண்டோ? இன்பத் தமிழே! இயக்கும் இறையே! இனிமை படைத்தவளே! துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக் துயரைத் துடைத்தவளே! அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை அளிக்கும் அருந்தமிழே! உன்றன் புகழை உலகில் பரப்ப ஒருநாள் மறவேனோ! ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்! உயர்மிகு நன…
-
- 0 replies
- 466 views
-
-
இந்த பிஞ்சு வயதினிலே உனக்கு நேர்ந்த கொடுரம் நினைக்கும் போது வாழ்வே வெறுகுதே நெஞ்சு முழுதும் சோகம் கண்களில் எல்லாம் ஈரம் இமைகள் மூடித் தூங்கும் வேளை பகை மீது கோபம் (முகநூல்)
-
- 0 replies
- 483 views
-
-
எனக்கும் உனக்கும் நீதி சொல்லும் பிரதம நீதி தேவதை இன்று நீதி கேட்டு புத்தரிடம் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் புத்தர் கண் திறப்பாரோ ?
-
- 6 replies
- 606 views
-
-
எல்லோரும் அவரவர் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணத்தால்.. வசதியால் மட்டும் மனிதருக்கு மகிழ்ச்சி வந்து விடாது.. நம் செயல்களால்தான் இல்லறம் இனிக்கும்... பெண்களின உடல் சார்ந்த பலவீனங்கள்.. தொல்லைகள் எத்தனை ஆண்களுக்குத் தெரிகிறது...? “அனாசின் போட்டுக் கொண்டு வேலையைக் கவனி...” என்று சொல்லி விட்டு டி.வி பார்க்கும் என் அன்புக் கணவனே... மாத்திரை எதற்கு...? அலறும் டி.வி சப்தத்தைக் குறைத்து விட்டு நிறையப் போச்சா.. சோர்வா இருக்கா என்று அன்புடன் கேளேன்... உதடு கடித்து.. கண்மூடி சாய கொஞ்சம் உன் தோள் கொடேன்.. வயிறு வலியால் பெருகும் கண்ணீரைத் துடைத்து விடேன்... சுமை இறக்கும் குழந்தையை அலம்பி விட்டு..உடை மாற்றி தொட்டிலாட்டி கொஞ்சம் தூங்க …
-
- 1 reply
- 465 views
-
-
ஒரு கூதல் மாலை ............. குளிருக்குப் பயந்து ஒதுங்கிய பகலவன். இருட்டின் அரசாட்சி. பனி மூடிய மலைகள் வழிய வழி இல்லை. நாட்கள் விறைத்தபடி. காற்றில் ஈரம் இறுகி பனிப் பாதையாகி, வழுக்கி வழுக்கி தெருவில் திரிவதோ செப்படி வித்தையாய். உடைகள் பாதணிகள் பாரமாய் மனம் அதைவிட கனமாய். என்றாலும் ஓர் இதம் பனியின் உறைதலில். பனி கிழித்து சாணகம் தெளித்து கோலம் வரைய நினைக்கிறேன். நிமிடங்கள் சேமித்து ரசிக்க மறுக்கும் தெருப்பாடகனின் பாடலாய், அவரவர்க்கான அவசர அழைப்புக்களாய் அலுவல்கள். கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள். பூச்சாண்டி மனிதர்கள். பனி ரசித்து பார்வைகள் கண்ணாடி உடைக்கும் படியோடு நடை நிறுத்தும் பூனைக…
-
- 4 replies
- 768 views
-
-
ஒற்றையடிப் பாதை கன்னங் கரிய இருட்டு சில் வண்டின் ரீங்காரம் உடலை சிலிர்க்க வைக்கும் குளிர் தூரத்தில் கோட்டானின் கதறல் பக்கத்தில் இருந்த பதிந்த மரக்கிளையில் தொங்கி விழிகளை உருட்டிய வௌவால் எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம் எதையும் இவன் இலட்சியம் செய்யவில்லை இலட்சியம் எல்லாம் எதிரே தூரத்தில் ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை. இன்றோ நாளையோ இடிந்து விழுவேன் என்றே சொல்லிய குடிசை மண் மதில் அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில் எரிந்தும் எரியாததுமான மங்கலான கலண்டர் முருகன் படம் விடிந்தால் சூரியன் விழுந்தடித்து உள்ளே வரும் வித்தியாசமான ஓலைக் கூரை மூலையில் கிடந்த முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில் முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி முழுவட்டமாய் …
-
- 2 replies
- 1.3k views
-