கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
நீர்தேடச் சென்று தொலைந்து போனவற்றைத் தேடி மணற்பாதைகளில் சங்கமிக்கின்றன கால்தடங்கள். ஊதமுடியா சங்குகள் வெடித்துப் போய் இருக்கின்றன திங்கமுடியா பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன உச்சி வெயில் உக்கிரத்தில் பாதமும் வெளுக்கிறது பிழிந்த வியர்வைகள் மகிழ்கின்றன இன்றாவது இங்கே இருக்கிறோமே என்று.. தொண்டை அடைத்த ரணத்தோடு ஓவியங்கள் படர்ந்த பாதங்கள் வீடு திரும்ப, பாதச்சுவடுகளை அழிக்கமுடியா விரக்தியில் ஊர் கதைப் பேசி திரிகுதுகள் பிளவுபட்ட கரைகள்.
-
- 12 replies
- 2k views
-
-
சிறு பருவத்தில் பார்த்து வியக்க வைத்தது - உன் நட்பு வாலிபப் பருவத்தில் பேசி ரசிக்க வைத்தது - உன் நட்பு துன்பத்தின் போது கண்ணீர் துடைத்தது - உன் நட்பு மகிழ்ந்த போது மனம் மகிழ வைத்தது - உன் நட்பு முதிர்ந்த பின்னும் என்றும் தொடருமடி - நம் நட்பு நட்புடன் இனியவள்
-
- 20 replies
- 2.8k views
-
-
தேவியே, தேவாரம் பாடும் பக்தன் நான் ஆவியே ஆராதனை உனக்கானபோது ஆரவாரம் எதற்கு தாரை தப்பட்டைகள் எதற்கு - உந்தன் முத்திரை ஒன்று என்மூச்சாக ஆகாதா! அபிசேகமும் ஆராதனையும் உனக்கென் றானபோது உன்வரம் ஒன்றே என் வார்த்தைகளின் வளமல்லவா வாய்பேசா விட்டால் என்ன உன் னுதடுகளின் ஒவ்வொரு ரேகைகளும் ஊட்டச் சத்தல்லவா? மனமேடைதனிலே மழைபொழியும் அன்பில் உளிபொழியும் அம்மி உணர்வுகளில் உயிர்த்தேன் தனமிடையில் சரிந்து தலைபுதைய மகிழ்ந்து உயிரோடு பரவும் உறவாக வளர்ந்தேன்!
-
- 0 replies
- 642 views
-
-
தும்மலுக்கு மருந்தெடுக்க போனவன் குண்டுமழையில் நனைந்தபடி வீடு வந்து சேர்ந்தான் பிணமாக * கொள்ளி வைக்க யாரும் மிஞ்சவில்லை ஒரே குண்டில் குடும்பமே பலி * குழந்தையில் வீட்டில் ஊர்ந்து பழகியது உதவி செய்கிறது குண்டுவிமானம் வருகையில் தெருக்களில் ஊர * பத்து மாதம் சுமந்தவளும் இறந்து போகிறாள் பதினைந்து நிமிடம் சுமக்க முடியாத விமானத்தின் குண்டுகளால் * எனக்கும் யோதிடம் தெரியும் என் சாவும் குண்டுகளால்தான் எந்த குண்டால் என்பதைத்தான் கணிக்கமுடியவில்லை * குண்டுகளை தயாரிப்பவர்களே நீங்கள் அக்கா,அண்ணா,தம்பி, தங்கையோடு பிறந்ததில்லையா...? -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.4k views
-
-
-
தமிழீழம்பற்றி கவிஞர் வாலியின் கவியரங்கம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N_EkyTVgT8k என்னே வியப்பு! சோழனும் நானும் ஒரே விடயத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்துள்ளோம்
-
- 3 replies
- 899 views
-
-
[size=4]உயிரொன்று கரைகிறது...[/size] [size=3]கவிதை - இளங்கவி[/size] பெயரில் சிவந்தன் - அவன் தமிழீழத்தின் சிவந்தமண்... தன் இனம் சிறிது சிறிதாய் அழிவதைப் பார்க்கமுடியாமல் தம் உயிரையே உருக்கி நம் உரிமையை உரக்கச் சொல்லத் துணிந்தவன்..... அன்று... ஆயிரம் மைல்கள் நடந்தான் அவன் உடலிலன்று வலுவிருந்தது.... இன்று.... உணவையும் நீரையும் மட்டும் கொண்டு இயங்கும் உயிர்க் கோளத்தையே உருக்கத்துணிந்து விட்டான் அதை உயிரின் எல்லைவரை உருக்கியும் விட்டான்... பெற்றோரை மறந்து... மணம் கொண்ட மனையாளை மறந்து.... தன் உயிரணுவில் உதித்த பிள்ளையையும் மறந்து...... உரிமையை இழந்து தவிக்கும் உனக்கும் எனக்குமாய் திலீபன் வழினின்று த…
-
- 12 replies
- 958 views
-
-
-
உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! கருணைப் பெருங்கடலே! கன்னல் சுவையூறும் தமிழ் பூத்த திருநாடே! உண்மை ஒளி குன்றா உறவின் பெருங்கொடியே! திண்மை கொண்டெழுந்த உங்கள் திடல் தோளில் சிறிது சாய்ந்து இளைப்பாறிக் கொள்கிறோம். தாயின் மடியில் தமிழ்ப் பாலுண்ட கோடி நெருப்பொன்றாய் தகிக்கக் கண்டோம். வீசும் தமிழ் காற்றும், உணர்வின் அலையும் தீய்ந்து கருகும் எங்கள் வாழ்வை ஆற்றும். உக்கித் தனிமரமாய் துயர் சுமந்த எங்களுக்கு உயிர்ப்பின் கொடி பிடித்து அரவணைக்கும் உறவுகளே! தெக்கும் உணர்விடையே உயிர்ப்பூ கசிகிறது. தேம்பும் விம்மலொலி சிறிதடங்கிக் கிடக்கிறது. பால் வாசம் வீசும் மார்பிடையே அணைத்தவளே! பனித்த விழிகளால் பாசத்தைப் பொழிபவளே! மனித்த…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
முத்தேவியரின் புகழ் பாடிடும் இனிய இரவு முத்தமிழ் இன்பத்தில் மூழ்கித்திளை மனது மெய் ஒன்று உளதென ஆன்மா உணரும்; மெய்யன்போடு வையத்தை வாழ்த்தி மகிழும். ********* வண்ண நறுமலர்கள் கண்கவர் அலங்காரம் எண்ணெய் தீபம் காண் உள்ளமும் பிரகாசம். பண்ணுடன் இசை வாணி புகழ் கேள் மனம் மண்ணிலே ஓர் சொர்க்கத்தை உணரும். ********* சங்கீத சுரங்கள் செவி தனைச் சேர்ந்திட சிந்தையில் உதித்திடும் அழகுக் கோலமும், அசைவிலா வண்ணச் சித்திரம், சிற்பம் மனதை அசைவுறும் வண்ணம் செய்திடும் விந்தையும், அழகுறு மங்கையர் அபிநய நடனம் காண் ஆன்மா செய் நடனத்தின் அற்புத உணர்வும் கலைமகள் உந்தன் இருப்பினை உணர்த்திடும் ; கலைத்தாய் உன்னைப் போற்றிடும் என்னுள்ளம்! ********* ப…
-
- 2 replies
- 8.1k views
-
-
புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் முனைவர் இரா.செங்கொடி மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்க…
-
- 1 reply
- 767 views
-
-
ஆக்கிரமிப்புப் பூதம் எல்லையின்றி ஊதித் தள்ளிய கந்தகப் புயலில் சிக்கி குருதியில் குளித்து கறுத்துப் போன பூமியே.. ஆடவன் என்றும் மகளிர் என்றும் குழந்தை என்றும் வேற்றுமை உணரா உருக்குத் துகள்களுக்கு உடலைப் படையல் செய்த பூமியே.. விடுதலைக்காய் எழுந்த ஓயாத அலைகளின் தொடக்கப் புள்ளியே முடிவுப் புள்ளியுமானது கண்டு இரத்தம் வடித்த தாயே... ஆடை மறைப்புக்குக் கூட அருகதையற்ற நிலையில் எதிரிமுன் அம்மணமாய் நின்ற தமிழர் தேகம் சுமந்து வேதனையில் வெந்த தேசப் பூமியே.. சிங்களச் சாத்தானின் இனவெறி வெற்றி இச்சைக்கு உன்னையே தந்திட்டு வெறித்துக் கிடக்கும் தேசமே.. தமிழ் தாயிவள் சேயை இரும்புக் கவசம் அல்ல தேகக் கவசம் தந்து காக்க உறுதுணையாய் நின்ற தீரமே... …
-
- 6 replies
- 1.2k views
-
-
கண்ணே இதுவரை துப்பாக்கியும் தோட்டாவும் போல் இணைந்திருந்த எம்காதல் இத்துடன் முடிந்ததா என்று எண்ணாதே இது என்ன சாதாரண காதலா தண்ணீரும் உரமும் இட்டா எம்காதலை வளர்த்தோம் இரத்தமும் தசையும் இட்டல்லவா எம்காதலை வளர்த்தோம் எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக வேர்விட்டு தளிர்விட்டு பூவிட்டு கனிவிட்ட காதலல்லவா இத்தனை இலகுவில் அழிந்துவிடுமா என்ன என்மேல் நீ கொண்ட காதல் மாறாதிருப்பது போல உன்மேல் நான் கொண்ட காதலும் அப்படியே இருக்கும் காலம் வரும் வரை காத்திரு கண்ணே நான் மீண்டும் உன்காட்டில் புலியாக வருவேன் அதுவரை உன்காலில் முள்ளாகவாவது இருப்பேன் http://gkanthan.wordpress.com/index/eelam/kaathal/
-
- 8 replies
- 5k views
-
-
என்றோ ஒரு நாள், எனது அபிமானத்துக்குரிய கள உறவு, சாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவீரன் சிட்டுவின் நினைவாக,அவரது வலைத்தளத்துக்காக அடியேன் எழுதிய கவிதையொன்றை, இன்று தேசக்காற்று இணையதளத்தில் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில், இங்கு பதிகின்றேன்! மேஜர் சிட்டுவுக்கு எனது வீர வணக்கங்களுடன்...... மரணத்தின் முகநூலுக்கு, மனம் விரும்பி, நட்பு நாடிய, மாவீரர்கள் வரிசையில், முண்டியடித்து முன்னேறியவன்! வாழ்வின் வசந்தத்திற்கு விடை கொடுத்தனுப்பிய, வீரத் தளபதிகளின் வரிசையில் விதையாகி வீழ்ந்தவன்! வீசும் வாடைக் காற்றின் வெறி அடங்கும் ஓசையில்… அசையும் காவோலைகளின் சர சரப்புச் சத்தத்தில் , ஆசையுடன் நிலம் தழுவும் அலைகளின் முனகலில், சிற்றா…
-
- 5 replies
- 1.1k views
-
-
எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. சுற்றி நிற்கும் இந்தியப்படைகளின் முற்றுகைக்குள்ளால் நீயும் உனது தோழர்களும் இருள் கனத்த பொழுதொன்றில் - எங்கள் ஊரிலிறங்கினாய்....! சிகரங்கள் தொடவல்ல வீரர்களின் முகமாய் அந்த நாட்களில் எங்களின் சூரியன் எங்களின் தோழன் எல்லாமுமாய் எங்களின் வசந்தம் நீ. பூவிதழ் விரியும் அழகாய் புன்னகை யாரெவரெனினும் சினேகப் பார்வை ஊரிலே உனக்காயொரு சிறுவர் படை அங்கே நீயும் சிறுவனாய் ஆசானாய் வீடுகளில் உனக்காயென்றும் காத்திருந்து எரியும் விளக்குகளின் கீழ் உன் வரவைத் தேடும் நாங்கள்....! எப்படியெல்லாமோ எங்கள் மனங்களில் வந்து குடியேறிய புலி எங்கள் அன்புக்குரிய றோயண்ணா உங்களின் வரவில் மகிழ்ந்ததும் உங்களின் அன்பில் நனைந்ததும் இன்று போலவ…
-
- 2 replies
- 879 views
-
-
ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம் தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம் தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம் வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம் வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம் உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம் ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம் துளசி
-
- 11 replies
- 2.5k views
-
-
கவிதயாலே கவிதை இங்கு புனையாப் பார்க்கிறேன் கவிதை என்னும் பாற்கடலை நக்கி குடிக்கப் பார்க்கிறேன் அந்த பாற் கடலில் பள்ளி கொள்ள ஆசை கொள்கிறேன் பாற்கடலை நானும் கடைந்து பருகப் பார்க்கிறேன் தேவர்கள் அசுர்கள் போல நானும் முயன்று பார்க்கிறேன் விடம் உண்ட கன்டன் போல கவிதையில் சிக்கிதவிக்கிறேன் மொத்தத்தில் நானும் யாழ் இணையம் கவிமழையில் முழ்கிப்போகிறேன்
-
- 2 replies
- 1.1k views
-
-
வன்னியில் கற்பழிப்பாம் யாழில் கொலையாம் தீவில் மண் பறிப்பாம் அகதி முகாமில் கருவறுப்பு தொடர்கதையாம் எழுதுகிறார் பேசுகிறார் சாவீடு போல் பறை அடித்து அழுகின்றார் எல்லாம் சரிதான் இதை மாற்ற என் செய்தார் நாலு பேர் சேர்வோம் என்றால் நாலே நாலு பேர் தானா... சுமை யாவும்அவர் மேலா..... வேலை வீடு வீடு வேலை நேரமிருந்தால் கொஞ்சம் சினிமா பெரும் பகுதி தொடர் நாடகம்என தூங்கிக்கிடக்கின்றார் துளியளவும் அதற்கான உழைப்பில்லை ஆனாலும் மண் வேண்டும் தான் பிறந்த தனை ஏற்ற மண் வேண்டும் அதற்காக உழைப்பதெப்போ...? அதற்கான உனது நேரம் என்ன..? பாதை தெரிந்ததுதான் பாதையில் நடந்தாயா ஒரு அடியேனும் பாதையில் வைக்காமல் பயணமுடிவை எவ்வாறு கணக்கிட்டாய்? வா வாரத்தில்…
-
- 14 replies
- 1.5k views
-
-
-
- 10 replies
- 1.8k views
-
-
மௌனங்கள் பேசட்டும் அன்பே நீ பூமியில் அவதரித்த நேரம் நிசப்த நேரமா??? அதனால் தானோ என்னவோ நீ உன் மொழியாக மௌனத்தை தேர்ந்தெடுத்துள்ளாய் போதும் உன் மௌனம் பிறப்பில் இருந்து நீ மௌனமாய் இருந்தது பேசிவிடு உன் மௌனத்தை கலைத்து விட்டு என்னுடன்... உன் மௌனங்கள் பேசும் என்ற நம்பிக்கையில் நான்...
-
- 4 replies
- 1.1k views
-
-
உன்னை எல்லாம் பெண்ணென்று கூறுவதா....??? அம்மணியின் ஆட்சியிலே ஜயோ பாவி நீ இழந்தாய்... கட்டியவன் தனையிழந்து கண்ணீரதை நீ வடித்தாய்.... நெஞ்சத்து குமுறல்களை கொட்டியன்று நீ எறிந்தாய்.... விதவை என்ற பட்டமதை விருப்பின்றி நீயும் ஏற்றாய்... அத்தனையும் மறந்து வந்தா அவ் அணியில் நீ இணைந்தாய்....??? உன்னவனை ஏன் கொன்றார் என்னவென்று கேட்கலயே.... கொலை காற கூட்டனியில் வந்து கூட்டு வைத்தாயே.... வெட்கம் கெட்டு மதியிழந்து வெட்கமின்றி வாழிறியே.... சதி காற கூட்டமுடன் சம்பந்தம் வைக்கிறியே.... சீ...தூ.... உன்னை எல்லாம் பெண்ணென்று உலகமதில் செப்பலாமோ....??? …
-
- 2 replies
- 1.1k views
-
-
வந்தால் போவாய் அடி வேண்டி.....!!! கடலிலே நடக்குது தொடரடி பகை கலமது வாங்குது தொடர் இடி..... எண்ணில பகையது பல அழி பிறக்குது தழிழுக்கு புது வழி.... பகையது இது கண்டு முழி பிழி எங்கள் பலமது கண்டது அது விழி..... தொடராய் வாங்குது அது அடி இனி தொடரவே போகுது இவ்வடி..... நாலு ''பிப்ரி'' நம்மடி இனி நாளுமே போடுமே அது வெடி.... கூடவே படை நாலு உயிர் பிடி இது கடலில நடந்த முதல் பிடி.... வாங்குமே பகை கலம் தொடர் இடி இது விடுதலை விடியலின் முதல் படி.... இது கடலிலே நடக்கிற காவியம் புலிப்படை வரைகிர ஓவியம்.... வருவாயா எம் கடல் மேவியே....??? வந்தால் அடி …
-
- 3 replies
- 1k views
-
-
அப்பாவி சுந்தரேசன் அழகிய லாவண்யா... டாக்டர் சுந்தர்..அசைவம் கலக்காத அப்பாவி.. வல்லினம் பேசாத நல்லவன்.. இனிமையின் இருப்பிடம்.. எளிமையின் வாழ்விடம்.. வயது திருமணத்தை செய்க என கோவிலில. பெண் பார்ப்பு ரம்யமான சூழல்.. தேவதையாய்.. லாவண்யா.. கூரை சரசரக்க.. கூந்தலெல்லாம் பூச்சூடி வண்ணமையிட்டு வட்டமெனப்பொட்டுவைத்து முகம் பார்க்காமல் சிரித்தபோது நாணமென எண்ணிக்கொண்டான்.. தேன்குரலில் எப்படி இருக்கிறீர்கள் கேட்டபோதே முடிவு செய்தான் இவள்தான் என் மனைவியென்று.. இவன் தலையாட்டலுக்காகவே காத்திருந்த பெற்றோர் கட்டி வைத்தார்..அக் கன்னிப்பெண்ணை ? முதலிரவே இவனுக்கு நினைத்தமை போல் அமையவில்லை.. பாலுடன் வருவாளெனப் பார்த்திருந்தான்-அவள் செல…
-
- 4 replies
- 1.5k views
-
-
உன் காதலுக்குதான் கண் இல்லை நீ இல்லாமல் என் கவிதைகள் அழுகின்றனவே அதாவது கேக்கிறதா? என்னை மறந்து வாழத்தான் இடம்பெயர்ந்தாய் என் நினைவுகளை மறந்து வாழ என்ன செய்தாய்... என் கண்ணைத்தான் அதிகம் பிடிக்குமென்றாய் உண்மைதான் அதை மட்டும்தான் என்னால அடக்க முடியவில்லை என்னை உண்மையாக காதலித்தாய் என்றால் என்னை மறந்துவிடு என்றாய் அப்போதுதான் பொய்யானது என் காதல் வாழ்க்கை ஒரு போர்க்களம் புரிந்து கொண்டேன் காதலி என்ற ஆயுதத்தை தொலைத்தபின் என்னை எனக்கே பிடிக்காத போதுதான் உன்னை மட்டும் பிடித்தது அதே என்னை எல்லாருக்கும் பிடிக்கும் போது எப்படி பிடிக்காமல் போனது உனக்கு மட்டும் என்னை என்னை ஞாபகப்படுத்த எந்த கவிதையும் எழுதியதில்லை எழ…
-
- 6 replies
- 1.8k views
-