வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
திரை விமர்சனம்: மாவீரன் கிட்டு இயக்குநர் சுசீந்திரனும், விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கும் 3-வது திரைப்படம் இது. கிரிக்கெட் விளை யாட்டில் இருக்கும் சாதி அரசியலை ‘ஜீவா’ திரைப்படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்த சுசீந்திரன், இத்திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைப் பற்றி பேசியிருக்கிறார். புதூர் என்ற கிராமத்தில் 1980-களில் நடக்கும் சாதியப் பாகுபாடுகளைப் பின்னணி யாக வைத்து இந்தப் படம் பயணிக்கிறது. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் தெருவின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கும் அவலத்தைக் காட்டும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. தொடர்ந்து சாதிப் பிரச்சினை…
-
- 1 reply
- 486 views
-
-
5 பில்லியன் பார்வைகள்… சாதனை படைத்த புஷ்பா ஆல்பம்! Jul 16, 2022 07:08AM தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குநராக இருப்பவர் சுகுமார். இவர் இயக்கத்தில் 2021 டிசம்பர் 17 அன்று ரிலீசான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.தெலுங்கு, தமிழ்,இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகி ப வெற்றிபெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் 385 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் குக்கிராம தேநீர் கடை வரை எதிரொலித்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டை கிளப…
-
- 1 reply
- 343 views
-
-
கமல்ஹாசன் | கோப்புப் படம்: ஜெ.மனோகரன். Published : 04 Dec 2018 18:49 IST Updated : 04 Dec 2018 18:49 IST 'இந்தியன் 2' திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம்தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கு…
-
- 1 reply
- 779 views
-
-
இனி தங்கை வேடங்களில் நடிக்க மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்றார் சரண்யா மோகன்.இதுபற்றி அவர் கூறியதாவது: யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் படங்களில் தங்கை வேடங்களில் நடித்தேன். இப்போது உருவாகி வரும் ஆறுமுகம் படத்திலும் பரத்தின் தங்கையாக நடித்திருக்கிறேன். இப்படம் நான் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு ஒப்புக்கொண்டது. இனிமேல் ஹீரோயினாகத்தான் நடிப்பேன். தமிழில் ஹீரோயினாக நடித்த முதல்படம் பஞ்சாமிர்தம். திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்தது. அடுத்து ‘அ ஆ இ ஈ’ படத்தில் நடித்தேன். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ஈரம், வெண்ணிலா கபடி குழு படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இரண்டுமே இரு மாறுபட்ட கதைக்களம். வெண்ணிலா கபடி குழு கிராமத்து பின்னணியில் உருவாகிறது. கல…
-
- 1 reply
- 1.5k views
-
-
'அந்த டிஸ்க்ளைமர்லாம் டூ மச்!' - 'கலகலப்பு 2' விமர்சனம் தனக்குச் சொந்தமான பூர்வீகச் சொத்தைத் தேடி காசிக்கு வரும் ஜெய்... காசியில் ஒரு பாடாவதி மேன்ஷன் நடத்தும் ஜீவா... ஒரு பொருளைத்தேடி அடியாள்களோடு காசிக்கு வரும் ஓர் அரசியல்வாதி... போலிச் சாமியார் யோகி பாபு... இவர்களுக்கும் சென்னையில் இருக்கும் சீட்டிங் சாம்பியன் சிவாவுக்கும் என்ன சம்பந்தம்? என்கிற கதையைத் தன் டிரேட்மார்க் காமெடி- க்ளாமர் காக்டெய்ல் கலந்து கலகலப்பாக்கி தந்திருக்கிறார் சுந்தர்.சி. அதே டெய்லர் அதே வாடகை என்பதுபோல ’கலகலப்பு1’-ன் டெம்ப்ளேட்டை எடுத்துவைத்துக் கதை பண்ணி இருக்கிறார். முதல் பாகத்தில் வந்த கேரக்டர் பெயர் முதற்கொண்டு அதே அதே! விமல்-மிர்ச்சி…
-
- 1 reply
- 914 views
-
-
சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன்; ஆர்.ஜேவாக நடிக்கும் ஜோதிகா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வார கோலிவுட்சினிமா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். இடைவெளிக்கு பிறகு நடிப்புக்கு திரும்பிய ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் அஜித், விஜய், சூர…
-
- 1 reply
- 554 views
-
-
மரணத்தைக் கண்ணில் பார்த்துவிட்ட ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன் (கமல்ஹாசன்). ஒரு டீன் ஏஜ் பையனின் தந்தையான மனோரஞ்சனுக்கு ரகசியக் காதலியும் உண்டு (ஆண்ட்ரியா). வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைச் சுவைத்துக்கொண் டிருக்கும் தருணத்தில் கொடிய நோய் தாக்க, செய்யத் தவறிய பரிகாரங்கள், கடமைகளை வேகமாக நிறைவேற்ற முடிவுசெய்கிறான். ஒரு கலைஞனாக மக்கள் மனதில் இறவா இடம் பிடிப்பதற்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியிடம் (கே. பாலசந்தர்) சென்று ஒரு சினிமா எடுக்கவும் வேண்டுக…
-
- 1 reply
- 551 views
-
-
லிங்குசாமி இயக்கும் படத்துக்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்றார் நயன்தாரா. குசேலன், சத்யம் படங்களில் இவரது கவர்ச்சி ஆட்டத்தை பார்த்துவிட்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் புது படத்துக்கு கேட்டுள்ளனர். கொஞ்சம் கவர்ச்சி என்றால் 1 கோடி ரூபாய், அதிகம் என்றால் ஒன்றரை கோடி என மிரட்டியிருக்கிறார் நயன். சமீபத்தில் அவரிடம் கால்ஷீட் கேட்கப்போன தெலுங்கு தயாரிப்பாளரிடம்தான் இந்த சம்பளத்தை கேட்டிருக்கிறார். சம்பளம் அதிகம் வாங்குற நடிகைனு சொல்றாங்க. அது எனக்கு சந்தோஷம்தான். ஆனா இதுதான் என்னோட சம்பளம்னு எந்த நடிகையுமே சொல்லமாடடாங்க. சம்பளம் எனக்கும் தயாரிப்பாளருக்குமுள்ள விஷயம். அதப்பத்தி எதுவும் கேட்காதீங்க என்கிறார் நயன். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=264
-
- 1 reply
- 939 views
-
-
தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்ட அம்பு, அயல்நாட்டில் செட்டில் ஆகியிருக்கும் தீவிரவாதிகளை பஞ்சராக்குகிறது. ஏன்? 'அம்பு' யாரென்று சொல்லத் தேவையில்லை. கொலைகள் ஏனென்பதுதான் கதையின் மைய முடிச்சு. குக்கிராமத்திற்கு வரும் நயன்தாராவை ஒரே நொடியில் மனசுக்குள் வீழ்த்துகிறார் விஜய். காதலாகி கசிந்துருகும் நயனின் உதவியோடு வெளிநாட்டுக்கு பறக்கிறார். அங்குதான் நயனின் அப்பா பிரகாஷ்ராஜ் இருக்கிறார். சம்பந்தம் பேசுவதற்காகதான் இந்த பயணம் என்று நாம் யோசித்தால், அடுத்தடுத்த படிகள் என ஃபாஸ்ட் ஸ்டெப் வைக்கிறார் விஜய். ஏகப்பட்ட கொலைகள். எக்கச்சக்க சண்டைகள். இறுதியாக அப்பாவை கொன்ற நால்வரை நசுக்கிவிட்டு அம்மாவின் விரதத்தை முடித்து வைக்கிறார் விஜய். நம்பி கழுத்தறுக்கிற வேடம் விஜய்க்கு. நம்…
-
- 1 reply
- 2.9k views
-
-
தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்....... அ.ஜீவதர்ஷன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை சினிமாவின் தாக்கம் சற்று அதிகமாகவே அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!! பொழுதுபோக்கு சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில்…
-
- 1 reply
- 2.4k views
-
-
1,200 திரையரங்குகளில் ரஜினியின் சுல்தான்! 'சிவாஜி' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில், ரஜினியின் 'சுல்தான்' படத்தை 1,200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள். உலக அளவில் வசூலில் பல சாதனைகள் படைத்த சிவாஜிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் 'சுல்தான்-தி வாரியர்'. இந்தியாவை ஆட்சி செய்த சுல்தானாக இதில் நடிக்கிறார் ரஜினி. வரலாற்றுப் படம் என்பதால் சுல்தானை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கி வருகிறார் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பெல்ஜியம், பிரேஸில், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆறு வாரங்கள் நடந்தது. முதலில் ரஜினியை நடிக்க வைத்து பின்னர், அந்தக் காட்ச…
-
- 1 reply
- 1.5k views
-
-
நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம் முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் 7 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் நேர்கொண்ட பார்வை நடிகர்கள் அஜித் குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன…
-
- 1 reply
- 972 views
- 1 follower
-
-
பொன்ட் கேர்ளாக நடிக்க தீபிகா, பிரியங்கா போட்டி? 2016-05-22 10:39:53 பொலிவூட் திரையுலகின் முன்னிலை நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரும் ஹொலிவூட்டிலும் கால்பதித்துள்ள நிலையில் ஜேம்ஸ் பொன்ட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு முயற்சிக்கின்றனராம். 33 வயதான பிரியங்கா சோப்ரா நடித்த குவான்டிகோ தொடர் அமெரிக்கத் தொலைகாட்சியொன்றில் ஒளிபரப்பாகுகிறது. ட்வைன் ரொக் ஜோன்ஸன் கதாநாயகனாக நடிக்கும் பே வோட்ச் திரைப்படத்திலும் பிரியங்கா நடிக்கிறார். 30 வயதான தீபிகா படுகோனே வின் டீஸல் கதாநாயகனாக நடிக்கும் “எக்ஸ் எக்ஸ் எக்ஸ்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்…
-
- 1 reply
- 364 views
-
-
சிம்பு தனது காதலை ஒப்புக்கொண்டதில் இருந்தே அடுதடுத்து அதிரடி டுவிட்களைக் கொடுத்து கலங்கடித்து வருகிறார் சிம்பு! நேற்றய சிம்புவின் டிவிட்டரில் “ எனது பெற்றோர்களின் சம்மதத்துடன் ஹன்சிகாவைத் திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். சிம்பு- ஹன்ஷிகா இருவரும் வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்களில் ஒப்பந்தமான போதே இருவருக்கும் காதல் என்று செய்தி பலரும் பரவியது. அப்போதும் இருவரும் மறுக்கவில்லை. See more at: http://vuin.com/news/tamil/what-is-the-connection-between-ajith-shalini-and-simbu-hansika
-
- 1 reply
- 3.2k views
-
-
சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் விதமும், அப்போது எடுக்கும் முடிவுகளுமே நம்முடைய வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கின்றன. சில சூழ்நிலைகள் நம்முடைய வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடும் வல்லமை பெற்றவை. அத்தகைய அசாதாரணச் சூழ்நிலையைச் சந்திக்கும் காவலர்கள் மூவரின் இன்னல்களும், அவற்றிலிருந்து மீள அவர்கள் எடுக்கும் முயற்சிகளும், அந்த முயற்சிகளின் ஊடே நீளும் அவர்களுடைய வாழ்க்கையுமே 'நாயாட்டு' மலையாளத் திரைப்படம். நெட்ஃபிளிக்ஸில் வெளியான சில நாட்களிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தப் படம், அதன் அரசியல் நிலைப்பாட்டுக்காகப் பரவலாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் பலியாடுகள் மார்டின் பிரபாகட் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், குஞ்சாக்கோ போபன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெள…
-
- 1 reply
- 642 views
-
-
நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில் நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார். ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. இதையொட்டி அவர் டொரன்டோ நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். குழந்தை பிறந்ததையொட்டி ரம்பாவின் கணவர் இந்திரன் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கினார். - See more at: http://www.canada…
-
- 1 reply
- 1.7k views
-
-
’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம். தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி... மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யத…
-
- 1 reply
- 521 views
-
-
நடிகை புளோராவைப் போல விசா மோசடியில் ஈடுபட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டுத் தூதரகம் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் பெற்றுக் கொண்டு பெண் ஒருவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக நடிகை புளோரா நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த இப்படிப்பட்ட 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல அந்த நாட்டு அரசு அதிரடித் தடை வித…
-
- 1 reply
- 970 views
-
-
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நாயகனாக நடிக்கும் கேசனோவா படத்திலிரு்து திடீரென விலகியுள்ளார் நடிகை ஷ்ரியா.மோகன்லால் நடிக்கும் புதிய படம் கேசனோவா. இதில் சமீரா ரெட்டி நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்திற்கு ஸ்ரேயா புக் செய்திருந்தனர். இந்த நிலையில் திடீரென அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் ஷ்ரியா. ஏன் இந்த திடீர் விலகல் என தெரியாமல் கேசனோவா குழுவினர் குழம்புகின்றனர். சர்வதேச இயக்குநர் தீபா மேத்தா புதிதாக இயக்கப் போகும் படம் மிட்நைட் சில்ட்ரன்ஸ். சல்மான் ருஷ்டியின் நாவலைத்தான் படமாக்குகிறார் தீபா. இப்படத்தில் கவர்ச்சிகரமான பெண் வேடத்திற்கு ஷ்ரியாவை சல்மான் ருஷ்டி பரிந்துரைத்துள்ளார். இதை தீபாவும் ஏற்றுள்ளார். ஏற்கனவே குக்கிங் வித் ஸ்டெல்லா படத்திலும் தீபா மேத்தா இயக…
-
- 1 reply
- 738 views
-
-
வியாழக்கிழமை, 14, ஜூலை 2011 (8:50 IST) ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக…
-
- 1 reply
- 634 views
-
-
-
அண்மையில் எதேச்சையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு படம் தபால் பெட்டியில் முகவரி மாறி வந்து விழுந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டுப் பார்க்கும் மசாலாத் தமிழ்ப் படங்களைத் தவிர பார்க்க உருப்படியாக ஒன்றும் இல்லை என்னும் நிலையில், படம் எதுவுமே பார்க்காமலே இருந்த ஒரு பொழுதிலையே Attonement பார்க்கக் கிடைத்தது. படத்தின் மூல நாவல் Ian McEwan என்னும் பிரித்தானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகக் கருதப்பட்டு பல இலக்கிய விருதுகளைப் பெற்று ஆங்கில இலக்கிய விமர்சகர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தலை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது.இலக்கிய வடிவத்தைப் பொறுத்தவரை metafiction, அதீதப் புனைவு (?) psychological realism உளவியல் மெய்மை(?) என்னும் யுக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்? ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து. இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும…
-
- 1 reply
- 1.1k views
-
-
திரைவிமர்சனம்: உள்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத் லோகிதஸ்வா, ஜான் விஜய், சாயா சிங், திலிப் சுப்பராயன் ஒளிப்பதிவு பி.கே. வர்மா இசை ஜஸ்டின் …
-
- 1 reply
- 383 views
-
-
தேசிய விருதுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மதிக்கப்படும் சினிமா விருது, ஆங்கிலப் பத்திரிகையான பிலம்பேர் அளிப்பது. வருடாவருடம் இந்திப் படங்களுக்கும் பாலிவுட் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறவர்கள் சில வருடங்களாக தென் மாநில மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். இவ்விரு நிகழ்ச்சிகளும் தனித்தனியே நடத்தப்படும். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சில சுவாரஸியங்கள். சென்ற வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருது அபிஷேக்பச்சனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யா ராய் அளித்தார். இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயபச்சனுக்கு வழங்கினர். இவ்விருதை அவரது கணவர் அமிதாபச்சன் வழங்கியபோது அரங்கில் கைதட்ட…
-
- 1 reply
- 757 views
-