வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பட மூலாதாரம்,24 AM STUDIOS கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2016-ல் அறிவிக்கப்பட்ட ’அயலான்’ படத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
25,000 சினிமா பாடல்களுடன் 50,000 பாடல்கள் பாடிய பாடகர் மனோவுடன் சிறப்பு நேர்காணல்
-
- 0 replies
- 274 views
-
-
'1500 படங்களுக்கு பிறகு சொல்கிறேன்...' - வெற்றி மாறன் பற்றி இளையராஜா கூறியது என்ன? பட மூலாதாரம்,RS INFORTAINMENT 4 மணி நேரங்களுக்கு முன்னர் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கிறது விடுதலை திரைப்படம். பொதுவாக வெற்றி மாறன் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். விடுதலை படத்தில் இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்த சூரி காவலர் வேடத்தில் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
"பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை" - உண்மையை உடைத்த பிரியங்கா சோப்ரா! இந்தியாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த வார்த்தைகள் பாலிவுட் சினிமாவில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகை கங…
-
- 1 reply
- 409 views
-
-
பட மூலாதாரம்,VIJAYSETHUPATHI FB கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பைலட் பிரேம்நாத், நங்கூரம், தீ, மோகனப் புன்னகை போன்ற இலங்கை - இந்திய கூட்டு தயாரிப்பில் உருவான சுமார் 10திற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட வரிசையில் 800 திரைப்படமும் இடம்பிடிக்கின்றது. இலங்கையிலிருந்து உருவான பிரபல்யங்களுக்கு மத்தியில், இலங்கையின் விளையாட்டுத்துறையில் பாரிய சவால்களுக்கு மத்தியில் தனக்கென்று இடத்தை பிடித்து, வரலாற்றில் இடம்பிடித்தவர் முத்தையா முரளிதரன். 1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி இலங்கையின் மலையக பகுதியான கண்டியில…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SRI VENKETESWARA CREATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபிஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் எழுதப்பட்ட ஒரு காதல் நாடகம். சிறந்த கவிதைகளை கொண்டுள்ள இந்த படைப்பிற்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் உள்ளது. அபிஞான சாகுந்தலத்தில் காதல் இருக்கிறது, விரகம் இருக்கிறது. இது வேதத்தில் உள்ளது. குழந்தைக்காக ஏங்கும் தாயின் ஏக்கம் இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுயமரியாதை போன்றவையும் இந்த காவியத்தில் உள்ளன. தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்க முயன்றுள்ளார். …
-
- 0 replies
- 707 views
- 1 follower
-
-
விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் ஒன்லைன். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம். இதில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுட…
-
- 15 replies
- 2.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் உருவாக்கிய படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றியடைந்தவை என்பது தமிழ் சினிமா அறிந்ததுதான். இருப்பினும் அவருடைய படங்கள் அவை தழுவி எடுக்கும் புனைவுகளுக்கு முழுதும் நியாயம் செய்தனவா என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்னும் சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம், விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் ரசிகர்களிடை…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும். மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம். படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம். கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன். --------------------------------------------------------------- இரட்டை இரட்டையர்களில் ஒருவன் காமுகன், குடிகாரன்,…
-
- 14 replies
- 1.8k views
-
-
மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா! -தயாளன் இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன் சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது. சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை…
-
- 2 replies
- 657 views
-
-
மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ JegadeeshMar 24, 2023 18:26PM பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று (மார்ச் 24 ) அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம்ஏற்பட்டு ச…
-
- 0 replies
- 220 views
-
-
அரை நூற்றாண்டில் 10,000 பாடல்கள் பாடிய டி.எம்.எஸ் எப்படி சினிமாவுக்குள் வந்தார் தெரியுமா? பட மூலாதாரம்,T.M.SOUDARARAJAN 24 மார்ச் 2023, 08:49 GMT புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி,…
-
- 0 replies
- 650 views
- 1 follower
-
-
நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்? சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. ’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம். மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம். எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM 13 மார்ச் 2023, 01:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன. அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருதுகளை வழங்கு…
-
- 7 replies
- 976 views
- 2 followers
-
-
முதலில் நேற்றைய தினம் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.” இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே. 🛑 எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்…
-
- 12 replies
- 1.2k views
-
-
த்யா காயத்ரி Entertainment கோவை குணா விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் முதல் டைட்டில் வின்னர் கோவை குணா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலமாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இன்று கோவை குணா உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்திருக்கிறார். பல குரல் பேசி பலரையும் வியக்க வைத்தவர். மிமிக்ரி உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்தவர். அவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அவருடன் கலக்கப்போவது யாரு மேடையில் பழகி நண்பனாக பயணித்த வெங்கடேஷை தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசினேன். "கோவை குணாவுக்கு சிறுநீரகப் பி…
-
- 8 replies
- 791 views
- 1 follower
-
-
லோகேஷ் கனகராஜ்: திரையரங்க அனுபவத்தை மீட்டெடுத்தவர் பட மூலாதாரம்,LOKESHKANAGARAJ கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது. 2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாக…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
19 மாதங்கள், 95 நடன அசைவுகள் - ‘நாட்டு நாட்டு’ பாடல் உருவான கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசி தெலுங்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/RRR வயது வித்தியாசம் இல்லாமல் மக்கள் விரும்பும் சில திரைப்படப் பாடல்களில் ஒன்றாக அமைந்தது ‘நாட்டு நாட்டு’ பாடல். ‘ஆர்ஆர்ஆர்’ தெலுங்கு திரைப்படத்தின் இந்தப் பாடல் திரைப்படப் பிரியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த ‘நாட்டு நாட்டு’(ஹிந்தியில் நாச்சோ நாச்சோ) பாடலுக்கு என்டிஆர்-ராம் சரண் ஜோடி நடனமும் எஸ்எஸ் ராஜமௌலியின் இயக்கமும் மேலும் உயிரூட்டம் கொடுத்துள்ளன. கோல்டன் க்ளோம் விருத…
-
- 4 replies
- 406 views
- 1 follower
-
-
'அயோத்தி' பட கதையை திருடினாரா எஸ்.ரா? பிரபல எழுத்தாளர்கள் சர்ச்சை புகார் - முழு பின்னணி கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SOCIAL MEDIA அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தியின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படம் அயோத்தி. இப்படத்திற்கான கதையை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். ஆனால் இந்த படத்தின் கதை மீதான உரிமை குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. எழுத்தாளர் மாதவராஜ், எழுத்தாளர் நரன், சங்கர் தாஸ் ஆகியோர், இந்த படத்தினுடைய கதை எஸ்.ரா…
-
- 1 reply
- 686 views
- 1 follower
-
-
பாலியல் ரீதியாக என் அப்பா என்னை துன்புறுத்தினார் -குஷ்பூ கொடுத்த ஷாக்! JegadeeshMar 06, 2023 10:32AM தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகச் சமீபத்தில் குஷ்பூ பொறுப்பேற்றார். இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குஷ்பு, தனது சிறு வயது வாழ்க்கை குறித்து தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. ரஜினி, கமல் என 80-களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூ சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மம்தா குமாரி, டெலினா கோங்தூப் ஆகியோருடன் குஷ்பூ-வும் தேசிய மகளிர் ஆ…
-
- 8 replies
- 942 views
- 1 follower
-
-
ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல் Play video, "ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல்", கால அளவு 2,44 02:44 காணொளிக் குறிப்பு, ஆஸ்கர் மேடையில் தமிழில் பேசியது ஏன் - ஏ.ஆர். ரகுமான் பகிர்ந்த தகவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2009ல் ஆஸ்கர் விருது வென்றதும், விழா மேடையில் ஏ ஆர்.ரஹ்மான் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இது தொடர்பாக பல சுவாரஸ்யமான அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில், ஸ்லம்டாக் மில்லினியனர் படத்திற்காக சிறந்த பின்ன…
-
- 0 replies
- 500 views
- 1 follower
-
-
ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் படங்களின் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது “தி இந்தியன் கிச்சன்” என்ற படத்தில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் ஜோ பேபி இயக்கத்திற்கு இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தற்போது வெளியாகி இருக்கும் படம். மலையாளத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழிலும் அதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என்பதை பார்க்கலாம் வாருங்கள். கதைக்களம் : சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடன ஆசிரியரான ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியரான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு பழமையை சுமந்து கொண்டிருக்கும் தன்னுடை…
-
- 0 replies
- 303 views
-
-
இலங்கைப் பெண்ணை திருமணம் செய்யவுள்ள சிம்பு? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடு இலங்கையைச் சேர்ந்த தீவிர ரசிகையொருவரை சிம்பு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர். இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில்…
-
- 0 replies
- 435 views
-
-
நடிகர் மயில்சாமி காலமானார்: மிமிக்ரி, காமெடி, மேடை நாடகம் என பல முகம் கொண்ட ஆளுமை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/ACTOR MAYILSAMY OFFICIAL தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்துள்ள நடிகர் மயில்சாமி, இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மயில்சாமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிச…
-
- 23 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஆம்.. இன்றளவும் தமிழ் திரை உலகின் முதல் கவர்ச்சி கதாநாயகி என்ற அடைமொழிக்கு சொந்தக்காரரிவார்… இத்தனைக்கும் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தந்தை கதிரேச சுப்பிரமணியன் கண்டியில் நீதியரசராக இருந்தவர்… தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்து சீனியர் பி.ஏ., பட்டம் பெற செய்தவர்… ஆனாலும் நடிப்பில் உள்ள மோகத்தால் தந்தையின் அனுமதியை போராடிப் பெற்று சினிமாவில் நடிக்க தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டவர். எல்லிஸ் ஆர்.டங்கன் தனது ‘சதி அகல்யா’(1937) படத்தில் கதாநாயகியாக தவமணிதேவியை அறிமுகம் செய்தார்… உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே கால் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி இவர். அழகா…
-
- 2 replies
- 832 views
-