வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5562 topics in this forum
-
நான் திரைத்துறையை சாராமல் வெளியே இருந்து திரைக்கதைக்கு தமிழில் உள்ள இடமென்ன என்று பார்க்கையில் பெரும்பாலான படங்கள் தோல்வியடையவோ பார்வையாளர்களின் மனதைத் தொடாமல் போக காரணம் திரைக்கதையில் உள்ள அடிப்படையான பிழையே என்று தோன்றுகிறது. இதையே வேறு சில நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நானும் வெகு சிலருமே இப்படி நம்புகிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால் வெகுஜன ஊடகங்களில் பலரும் அப்படி நினைப்பதில்லை. அண்மையில் ராஜூ முருகனின் “லாலாகுண்டா பொம்மைகள்” பார்த்தேன். அது தழுவி உருவாக்கப்பட்ட கதைதான் என்றாலும், தேய்வழக்கான கதையே என்றாலும் அதில் ஒரு நேர்த்தி இருந்தது - கதைக்குள் ஒரு வளர்ச்சி இருந்தது, பாத்திரங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட இயல்பு, உடல்மொழி, ஒரு துவக்கம் முடிவு இருந்தது, கதை…
-
- 0 replies
- 611 views
- 1 follower
-
-
யாதும் ஊரே யாவரும் கேளிர்: திரை விமர்சனம். இலங்கைத் தமிழரான புனிதன் (விஜய் சேதுபதி), லண்டனில் நடக்கும் இசைப் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இருக்கிறார். கொடைக்கானலில் இருக்கும் தேவாலயத்துக்கு வரும் அவர், தன் இசையால் அங்கிருப்பவர்களைக் கவர்கிறார். அங்குள்ள இசைக்குழுவைச் சேர்ந்த மெடில்டா, புனிதனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். இதற்கிடையே கேரட் தோட்டத்தில் வேலைபார்க்கும் இலங்கை அகதியான கனகவள்ளி (கனிகா)யின் தம்பி கிருபாநிதி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு அவளைத் தேடுகிறான். அந்தப் பகுதி போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) தன் தந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்ட கிருபாநிதியைத் தேடிப் பிடித்து கொல்ல முயல்கிறார். புனிதன் யார்? அவனுக்கும் கிருபாநிதிக்கும் என்ன தொடர்பு? லண்டன்…
-
- 3 replies
- 345 views
-
-
படக்குறிப்பு, சரத்பாபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்சிஸ் என்பது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் த…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
விமர்சனம்: பிச்சைக்காரன் 2 KaviMay 20, 2023 16:18PM ஷேர் செய்ய : பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்துமா? குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படமும் அவ்வகையில் உருவானதே! சென்டிமெண்டும் ஆக்ஷனும் கனகச்சிதமான கலவையில் அமைந்த அப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. அது போன்றதொரு வெற்றியை மீண்டும் சுவைக்க வேண்டுமென்ற ஆசையில், ‘பிச்சைக்காரன் 2’ என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு விஜய…
-
- 0 replies
- 567 views
-
-
பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உ…
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
-
தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' Published By: PONMALAR 11 APR, 2023 | 01:02 PM தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தென் திசையை குறிப்பிடும் சங்க கால சொல்லான 'யாத்திசை' எனும் பெயரில் தமிழில் புதிய படைப்பொன்று வரவிருக்கிறது. இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. எயினர்கள், ரணதீர பாண்டியன், போர்க்களம், சங்கக் கால தமிழில் உரையாடல், விறலியர் ஆட்டம் எனும் நாட்டியத்தை ஆடும் தேவரடியார்கள்... என பல விடயங்கள் இடம் பெற்றிருந்ததால், இந்த முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே ஆச்சரியப்படும் வகையிலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இந்நிலையில் வீனஸ் இன்ஃபோ…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா. 1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார். குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனோபாலா பங்கேற்றிருக்கிறார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். …
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு. முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது. குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது. குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாக…
-
- 147 replies
- 14.3k views
- 2 followers
-
-
கடல் சீற்றத்தில் சிக்கிய அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) உயிரிழந்துவிட்டதாக சோழர்களுக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், எப்போதும்போல அருண்மொழி வர்மனை ஊமைராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றிவிடுகிறார். உயிர்பிழைத்தாலும் விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளவரசனை வந்தியத்தேவனும் (கார்த்தி) பூங்குழலியும் (ஐஸ்வர்யா லக்ஷ்மி) மீட்டு நாகப்பட்டினத்தில் உள்ள புத்த மடத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுக்கின்றனர். அருண்மொழி வர்மன் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்ட பாண்டிய ஆபத்துதவிகள் சுந்தரச் சோழரையும் (பிரகாஷ்ராஜ்), அவரது மகன்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்து நந்தினியின் வழிகாட்டுதலில் சதித்திட்டம் தீட்ட, இறுதியில் சோழர்கள் மூவரும் கொல்லப்பட்டனரா? பட்டத்து இளவரசனாக அருண்மொழி வர்மன் முடிசூடப்…
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,@ARRAHMAN 3 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் புனே இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி புனேவின் ராஜ்பகதூர் மில்ஸ் எனும் இடத்தில் 'AR Rahman Concert for Feeding Smiles' இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ₹ 999 முதல் ₹ 50,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றிருந்தனர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் தன் இசையமைப்பில் உருவாகி பெரும் வெற்றியடைந்த பாடல்களை பாடினார். இதனால், ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் பெ…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AJITH PR TEAM கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 1 மே 2023, 05:18 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் அஜித்... தமிழ் சினிமா கண்ட தனித்துவமான கலைஞர்களில் ஒருவர். ‘அமராவதி’ படம் தொடங்கி இப்போதைய ஏகே62 வரை தன் ரசிகர் பட்டாளத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர். ரசிகர் மன்றங்களைக் கலைத்தது, தன்னை ‘தல’ என அழைக்க வேண்டாம் எனத் தெரிவித்தது என அவரது முடிவுகள் அனைத்தும் அவரது ரசிகர்களைத் தாண்டியும் பலரால் பாராட்டப்படுபவை. சமகால நடிகர்களைப் போல் அரசியல் வருகை குறித்தோ, ஆட்சியாளர்களை விமர்சித்தோ அஜித் ஒருவார்த்தை பேசியதில்லை. அதுமட்ட…
-
- 0 replies
- 346 views
- 1 follower
-
-
'அகநக முகநக' பாடல் வரிகள் எப்படி உருவானது ? - குந்தவையின் காதலை சிலாகிக்கும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பட மூலாதாரம்,MADRAS TALKIES 31 நிமிடங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான அன்றைய தினம், நடிகர்கள் கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவையாக உரையாடி வந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ”அகநக அகநக முகநகையே” என தொடங்கும் இந்த பாடல் வரிகள்தான் கடந்த இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களின் முனுமுனுப்பாக மாறியிருக்கிறத…
-
- 10 replies
- 716 views
- 1 follower
-
-
நடிகை வனிதாவின் 3வது கணவர் மறைவு. வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.thanthitv.com/latest-news/actress-vanithas-3rd-husband-passes-away-183159?infinitescroll=1
-
- 0 replies
- 621 views
-
-
குஷ்பு, நமீதா, நயனை தொடர்ந்து... நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்! இது எங்க? நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள அவரது தீவிர ரசிகர், அந்தக் கோவிலை சமந்தாவின் பிறந்தநாளன்று திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பே காரணம். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமா நடிகைகள் மீதான அதீத அன்பால், அவர்களுக்காக கோவில்கள் கட்டும் சம்பவங்கள் இதற்கு முன் நட…
-
- 0 replies
- 288 views
-
-
பட மூலாதாரம்,24 AM STUDIOS கட்டுரை தகவல் எழுதியவர்,ச. பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2016-ல் அறிவிக்கப்பட்ட ’அயலான்’ படத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். …
-
- 0 replies
- 444 views
- 1 follower
-
-
25,000 சினிமா பாடல்களுடன் 50,000 பாடல்கள் பாடிய பாடகர் மனோவுடன் சிறப்பு நேர்காணல்
-
- 0 replies
- 285 views
-
-
'1500 படங்களுக்கு பிறகு சொல்கிறேன்...' - வெற்றி மாறன் பற்றி இளையராஜா கூறியது என்ன? பட மூலாதாரம்,RS INFORTAINMENT 4 மணி நேரங்களுக்கு முன்னர் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கிறது விடுதலை திரைப்படம். பொதுவாக வெற்றி மாறன் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். விடுதலை படத்தில் இதுவரை நகைச்சுவை நடிகராக நடித்த சூரி காவலர் வேடத்தில் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜீவ் மேனன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை மற்…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
"பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை" - உண்மையை உடைத்த பிரியங்கா சோப்ரா! இந்தியாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த வார்த்தைகள் பாலிவுட் சினிமாவில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிவருகின்றனர். குறிப்பாக நடிகை கங…
-
- 1 reply
- 420 views
-
-
பட மூலாதாரம்,VIJAYSETHUPATHI FB கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,இலங்கையில் இருந்து பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பைலட் பிரேம்நாத், நங்கூரம், தீ, மோகனப் புன்னகை போன்ற இலங்கை - இந்திய கூட்டு தயாரிப்பில் உருவான சுமார் 10திற்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட வரிசையில் 800 திரைப்படமும் இடம்பிடிக்கின்றது. இலங்கையிலிருந்து உருவான பிரபல்யங்களுக்கு மத்தியில், இலங்கையின் விளையாட்டுத்துறையில் பாரிய சவால்களுக்கு மத்தியில் தனக்கென்று இடத்தை பிடித்து, வரலாற்றில் இடம்பிடித்தவர் முத்தையா முரளிதரன். 1972ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி இலங்கையின் மலையக பகுதியான கண்டியில…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SRI VENKETESWARA CREATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபிஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் எழுதப்பட்ட ஒரு காதல் நாடகம். சிறந்த கவிதைகளை கொண்டுள்ள இந்த படைப்பிற்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் உள்ளது. அபிஞான சாகுந்தலத்தில் காதல் இருக்கிறது, விரகம் இருக்கிறது. இது வேதத்தில் உள்ளது. குழந்தைக்காக ஏங்கும் தாயின் ஏக்கம் இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுயமரியாதை போன்றவையும் இந்த காவியத்தில் உள்ளன. தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்க முயன்றுள்ளார். …
-
- 0 replies
- 720 views
- 1 follower
-
-
விடுதலை பாகம் 1 Review: அதிகாரத்துக்கு எதிரான வாழ்வியல் போராட்டத்தின் அழுத்தமான பதிவு பன்னாட்டு நிறுவனத்துக்கு மலை கிராமம் ஒன்றில் கனிம வள சுரங்கம் அமைக்க அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து அப்பகுதியில் உள்ள தமிழர் மக்கள் படை நடத்தும் போராட்டமும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தின் ஒன்லைன். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மூலக்கதையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம். இதில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். அருமபுரி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்களில் கனிம வள சுரங்கம் தோண்ட ஒரு பன்னாட்டு கம்பெனியுட…
-
- 15 replies
- 2.3k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE கட்டுரை தகவல் எழுதியவர்,கவியரசு வி பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் உருவாக்கிய படங்கள் அனைத்தும் விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் வெற்றியடைந்தவை என்பது தமிழ் சினிமா அறிந்ததுதான். இருப்பினும் அவருடைய படங்கள் அவை தழுவி எடுக்கும் புனைவுகளுக்கு முழுதும் நியாயம் செய்தனவா என்ற கேள்வி தொடர்ந்து விவாதமாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஜெயமோகனின் ‘துணைவன்’ என்னும் சிறுகதையைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம், விமர்சனரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் ரசிகர்களிடை…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும். மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம். படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம். கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன். --------------------------------------------------------------- இரட்டை இரட்டையர்களில் ஒருவன் காமுகன், குடிகாரன்,…
-
- 14 replies
- 1.8k views
-
-
மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா! -தயாளன் இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன் சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது. சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை…
-
- 2 replies
- 688 views
-