Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. "நான் தமிழ்நாட்டின் தங்கமகன்!” தனுஷுக்கு இது ஹாட்ரிக் சீஸன்! 'அனேகன்’, 'மாரி’யைத் தொடர்ந்து 'தங்கமகன்’ எனத் தடதடக்கிறார் தனுஷ். சென்னையின் மழை வெள்ளத்தில் நீந்தி 'வொண்டர்பார்’ அலுவலகத்துக்குள் நுழைந்தால், செம ஃப்ரெஷ் தனுஷ். ''சினிமாவுக்குள்ள வரும்போது நான் ரொம்பச் சின்னப் பையன். அதனால பெத்தவங்க பேச்சைக் கேட்காத, மத்தவங்க பேச்சை மதிக்காத பையன் கேரக்டர்களா நிறைய நடிச்சேன். அந்தப் படங்கள் அடுத்தடுத்து ஓடினதால, தொடர்ந்து அதே மாதிரியான கதைகளே எனக்கு வந்தது. இன்னமும் ஒட்டியிருக்கும் அந்த இமேஜை இப்போ 'தங்கமகன்’ உடைப்பான்'' - நம்பிக்கையுடன் நிமிர்ந்து அமர்கிறார் தனுஷ். '' 'வி.ஐ.பி-2’ என்பதால் பெரிய பிரஷர் இருந்திருக்குமே... எப்படிச் சமாளிச்சீங்…

  2. "நான்கு நாள்களுக்கு ஒருமுறைதான் சாப்பாடு!'' - பழம்பெரும் நடிகை கீதா கண்ணீர் வயதானவர்களை அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடும் அவலநிலை தற்போது அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பதுபோல, முதியோர் இல்லங்களும் திறக்கப்பட்டுவருகின்றன. சாதாரண மனிதரிலிருந்து பிரபலங்கள் வரை இந்தக் கொடுமையிலிருந்து தப்ப முடியவில்லை. பழம்பெரும் இந்தி நடிகையான கீதா கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் மீனாகுமாரியுடன் நடித்த 'பகீஷா ' மற்றும் 'ரஷ்ய சுல்தான் ' படங்கள் பிரசித்திப்பெற்றவை. வயது முதிர்ந்த நிலையில், தன் மகனுடன் வசித்துவந்தார் கீதா. கடந்த ஏப்ரல் மாதம் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்…

  3. சரத்குமாருக்கு நேற்று பாராட்டு விழா! நடத்தியது அரிமா சங்கம். நூறு படங்களில் நடித்ததற்காக நடத்தப்பட்ட இந்த விழா மினி குடும்ப விழாவாக அரங்கேறியது. விழாவில் சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. "என் கணவரைப் பற்றி நானே புகழ்ந்து கூறக் கூடாது" என்று ஆரம்பித்த ராதிகா சரத்குமார் பற்றி புகழ்மாலை படிக்கத் தொடங்கினார். விமானநிலையத்தில் ராதிகா சரத்குமாரை சந்தித்தது, நீங்களே ஹீரோ போலதான் இருக்கீங்க, நீங்களே நடிக்கலாமே என்று அட்வைஸ் செய்தது என பல மலரும் நினைவுகள் ராதிகாவின் பேச்சில் இடம் பெற்றது. "சரத்குமாரால்தான் 'வேட்டையாடு விளையாடு'படம் ரிலீஸானது" எனறு கமல் முன்பு குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய ராதிகா, நிஜவாழ்க்கையிலும் சரத் நாட்டமைதான் என்று கூற சரத் முக…

  4. "பாகுபலி" வெற்றிக்காக, தியேட்டர் வாசலில் ஆடு பலி கொடுத்த ரசிகர். ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பாகுபலி டிக்கெட் வாங்க ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பை பார்த்து பாகுபாலி படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைத…

  5. மௌனம் கலைகிறார் சீதா. மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என செய்திகள் பரபரப்பாக வந்தபின்னும் ஆழ்கடலைப் போன்று அமைதியாக இருந்தவரின் உள் மனதில் இருப்பவற்றை இன்று நம்மிடம் கொட்டினார். அதெப்படி அன்று பார்த்த மாதிரியே இன்றும் அதே அழகுடன், அப்படியே இருக்கிறீர்கள்? அதன் ரகசியம் என்ன? ”முதல்ல அழகு என்பதே அப்பா, அம்மா கொடுக்கிறதுதான். நான் எப்பவுமே மனசை நல்லா வைச்சுக்கணும்னு நினைப்பேன். மனசு நல்லா இருந்தால்தான் அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு அழகைக் கொடுக்கும்.முகத்துக்கு ப்ளீச் பண்றதோ,ஃபேஸ் பேக் போடுறதோ உண்மையான அழகைக் கொடுக்கிறது இல்ல. மனசை ஒருமுகப்படுத்தி தியானம் பண்ணினா வசீகரம் தானாகவே வரும். இது ஒரு ரகசியமான்னு தெரியல.(சிரிக்கிறார்)’’ திடீரென உங்களுக்கும்,சத…

    • 0 replies
    • 4.4k views
  6. ரொம்ப தேங்க்ஸ்ங்ணா... சினிமாவுல நான் பாட்டுக்கு ஓடிட்டே இருக் கேன். அப்போ நடிக்கிற படங் களைப் பத்தி மட்டும்தான் மனசுல நினைப்பு ஓடிட்டு இருக் கும். ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 20 வருஷமாயிருச்சுனு ஃப்ரெண்ட்ஸ் சொன்னப்போ, 'அட’னு சின்ன ஆச்சர்யமா இருந்துச்சு. சிறந்த நடிகனுக்கான விகடன் விருது அந்த ஆச்சர்யத்தைப் பெரிய சந்தோஷமாக்கிருச்சு!''- நெஞ்சில் கைவைத்துச் சிரிக்கிறார் விஜய். 'துப்பாக்கி’யின் 100 கோடி வர்த்தகம், அடுத்த படத்துக்கான எதிர் பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்திருக்கிறது. ''அந்த எதிர்பார்ப்பை ஒவ்வொரு நிமிஷமும் நான் உணர்றேன். பிசிக்கல் ஸ்ட்ரெய்ன், மென்ட்டல் ஸ்ட்ரெஸ்... இது இரண்டுமே சேர்ந்ததுதான் ஒரு நடிகனோட வாழ்க்கை. 'Life of an actor gets tough and tougher' சொல்வாங்க…

  7. "பிசாசு" - விமர்சனம். நடிப்பு: நாகா, ப்ரயாகா, ராதாரவி இசை: அரோல் கொரோலி தயாரிப்பு: பாலா எழுத்து - இயக்கம்: மிஷ்கின் ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர். அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா. மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது. ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்…

    • 5 replies
    • 2.3k views
  8. மும்பை: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி வென்றால் தனது பிராவை ஒருவருக்கு பரிசாக அளிப்பேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் நடிகை பூனம் பாண்டே. மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் பூனம் பாண்டே. அவர் நடிப்புக்காகவும், மாடலிங்கிற்காகவும் பிரபலமாகவில்லை. மாறாக அவ்வப்போது அவர் விளம்பரத்திற்காக அரை மற்றும் முக்கால் நிர்வாணமாக வெளியிடும் புகைப்படங்களால் தான் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் அடுத்த பரபரப்பை கூட்ட ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அவ்வளவு தான் பூனம் தனது பிராவை பரிசாகத் தருகிறேன் என்றும் சொன்னதும் சொன்னார் எனக்கு ஏன் பூனம் பாண்டேவின் பிரா வேண்டும் அதாவது #WhyIWantBRAofPoonamPandey என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிர…

  9. "மண்டேலா படம் எடுக்கப் போன ஊர் மாரி செல்வராஜின் ஊர் என்று பின்னர் தான் தெரிந்தது" - மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2022, 08:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மண்டேலா திரைப்படத்திற்காக 2 தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின். சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மடோன் அஸ்வினுக்கு ஏற்கெனவே தேசிய விருது கிடைத்தாலும் அது பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், இம்முறை கிடைத்த தே…

  10. "மயக்கம் என்ன": செல்வராகவன் தவறி நுழைந்த ஏரியா ஆர்.அபிலாஷ் செல்வராகவனின் படங்கள் இறந்த காலத் துயரில் இருந்து மீள முடியாது தவிக்கும் தனிமனிதர்களின் தனிமை, வன்மம், சீரழிவு, இறுதியில் மீட்பு என்று முழுக்க முழுக்க உள்குவிந்தவை. கடந்த சில வருடங்களில் தமிழ்-உலக சினிமா என்ற பெயரில் சேப்பியார் டோனில் ஏகப்பட்ட தனிமனித சீரழிவு சினிமாக்கள் இங்கு எடுக்கப்பட்ட போதும் செல்வராகவனின் படங்கள் ஒரு முக்கிய காரணத்துக்காக காலாவதியாகவில்லை. அதற்கு ஒரு காரணம், அவரது மையபாத்திரங்கள் அனுபவிக்கும் தத்துவார்த்த தனிமை. காலத்தின் முன் தன்னை வெறும் பகடைக்காயாக உணரும் முத்துவும் கொக்கிகுமாரும் தமிழ் சினிமாவின் தளத்தை நிச்சயம் விரிவடைய வைத்தனர். "மயக்கம் என்ன" படத்தில் செல்வராகவன் இப்படியான …

  11. மாசு படத்தில் இரண்டு சூர்யா.. ஒருவர் ஈழத் தமிழர்! "மாசு என்கிற மாசிலாமணி" படத்தில் இரு வேடங்களில் தோன்றும் சூர்யா, ஒன்றில் ஈழத்து இளைஞராக நடித்துள்ளாராம். சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மாசு என்கிற மாசிலாமணி' படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா அப்பா-மகன் என இருவேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, 'மாசு படத்தில் சூர்யா இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஈழத் தமிழனாக ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். ஒரு ஈழத்தமிழனாக சூர்யா நடிப்பது இதுதான் முதல…

  12. "மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம். 'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை, துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'. தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் …

  13. முத்தக் காட்சியில், முக்கி... முக்கி.... 36 டேக் - ”டி.இ.என்” டீம் காதில் புகை வரவைத்த ஜி.வி.பிரகாஷ்! சென்னை: முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க திரும்பத் திரும்ப டேக் வாங்கி படக்குழுவினர் அனைவரது காதிலும் புகையை வரவழைத்துள்ளார் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "டார்லிங்" படத்திற்கு பின்னர் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா". ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டூ லிப் மு…

  14. நடிகர்கள் - ராகவா லாரன்ஸ், வேதிகா, ராஜ்கிரண், கோவை சரளா இயக்கம் - ராகவா லாரன்ஸ் இசை - பரத்வாஜ் தயாரிப்பு - சரண் சிரமமான ஒரு விஷயத்தை நடத்தி காட்டியிருக்கிறார் ராகவா.... இருட்ட ஆரம்பித்தால் போதும், உச்சா போக கூட அம்மா துணை கேட்பான் இந்த லாரன்ஸ்! வயசுப்பையன் இப்படி இருக்கலாமா என்று யோசிக்கிறீர்களா? லாரன்சின் வீக்னஸ் இது. இவரையே ஆவி பிடித்தால் எப்படியிருக்கும்? லாஜிக்காக படத்தை நடத்திக் கொண்டுபோக நினைத்திருக்கிறார் இயக்குனர் கம் நடிகர் லாரன்ஸ் ராகவா. லாரன்ஸ’ன் பயத்தை பற்றி அறிந்த ஒருவரும் அவனுக்கு பெண் தர மறுக்கிறார்கள். ஆனால் லாரன்ஸோ கிராமத்து பெண் வேதிகா மீது காதல் கொள்கிறார். வேதிகாவின் பெற்றோர்களை சம்மதிக்க வைத்து அவரை மணக்கிறார் லாரன்ஸ். இந்த சூழலில் …

    • 14 replies
    • 2.5k views
  15. "முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ரீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். https://athavannews.com/2021/1217423

  16. "மூங்கில் காற்றோரம்" பாடகர் அபேயின் செவ்வி

    • 0 replies
    • 506 views
  17. "மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் வழக்கமான பேய் கதையை வழக்கத்திற்கு மாறாகச் சொல்வதில்தான் அடங்கியிருக்கிறது பேய் படங்களின் வெற்றி. ஆனால், ‘மோகினி’யில் அது மொத்தமாக மிஸ்ஸிங்! தவிர, பேய் வரும்போதெல்லாம், 'அட நீ வேற... இரும்ம்மா!' என்று நினைக்கும் அளவுக்கு பேயை 'செட் பிராப்பர்டி'யாக மட்டும்தான் டீல் செய்திருக்கிறார்கள். தன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் வழக்கமான அதே பேய் கதைதான், த்ரிஷாவின் 'மோகினி'யும்! சென்னையில் கேக் ஷாப் வைத்திருக்கிறார், த்ரிஷா. தன் தோழியின் திருமணம் நடக்கவேண்டுமெனில், யோகிபாபுவுடன் அவர் லண்டனுக்குச் செல்லவேண்டும் என்ற நிலை. த்ரிஷா, யோகி பாபு, சாமிநாதன் மூவரும் லண…

  18. அளவுக்கு மீறி அநியாயம் செய்துவிட்டு மன அமைதிக்காக ஆன்மிகம் பக்கம் ஒதுங்குகிறவர்கள் உண்டு. அதுமாதிரி கட்டற்ற கவர்ச்சி காட்டிவிட்டு அதை மறைக்க யோகா பண்ணப் போறேன் கவர்ச்சியை கைவிடப்போறேன் என பீலா விட்டு திரிகிறார் ஒரு நடிகை. 'ஒரு காதல் செய்வீர்' ஹீரோ சந்தோஷும் இயக்குனர் பார்கவனும் இணைந்து உருவாக்கும் அடுத்த கவர்ச்சி வெடி 'ஸ்ரீரங்கா.' இதில் ஸ்ரீ என்பது வடமொழி என்பதால் இப்போது பெயரை 'திருரங்கா' என்று மாற்றியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் சந்தோஷுக்கு அங்கீதா, தேஜாஸ்ரீ என இரண்டு ஜோடிகள். இதில் அங்கீதா பாடல் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் தாராளமயத்தை கொஞ்சம் தாராளமாகவே கடைபிடித்திருக்கிறார். படம் வெளிவந்தால் 'இது காதல் வரும் பருவம்' கிரண் ரேஞ்சுக்கு பெயரும் வரவேற்ப…

    • 0 replies
    • 1.4k views
  19. "ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive சினிமா செலிப்பிரிட்டிகளின் இயல்பு மாறாமல் அப்படியே க்ளிக்குவதுதான் போட்டோகிராஃபர் தீரனின் ஸ்பெஷல். ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பல பிரபலங்களையும் க்ளிக்கித் தள்ளியிருக்கிறார். "நான் இப்படி வருவேன்னு கனவுகூடக் கண்டது இல்லைங்க. அரக்கோணம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு கேமரா இருந்துச்சு. அதை எங்க அண்ணன்தான் எப்பவும் வெச்சிருப்பான். அவன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கேமராவை எடுத்துப் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அப்பவே கேமரா மேல லவ் ஆகிடுச்சு. மரம், செடி கொடினு தொடங்கி வீட்டுல உட்கார்ந்து இருக்கும் பாட்டி வரை எல்லாத்தையும் க்ள…

  20. நடிகர் ரஜினிகாந்தின் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நீக்கும் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை கூறுகிறது. நடிகர் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர். இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கையை காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினிகாந்த் நேற்று சிறிய தலைசுற்றலுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் (Carotid Artery) அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்…

    • 3 replies
    • 931 views
  21. "வடிவேலுவுக்குப் பதில் விஜய். ஆனால், நிறைய மாத்தினோம்!" இயக்குநர் எழில் #19YearsOfThulladhaManamumThullum விஜய் நடித்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்த்துக்கும் ஒரு தனி இடமுண்டு. இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களையும், இயக்குநர் எழிலிடம் அவரது முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். * விஜய்க்கு இது 21-வது படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் வேல்யூ உருவானது. …

  22. பட வாய்ப்ப்புகள் இல்லாமல் கிடைக்கிற படங்களை கமிட் செய்து நடித்து வரும் ஸ்ரேயா தற்போது பவித்ரா என்ற படத்தில் படு செக்ஸியாக நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இந்த படம் தமிழில் "பவித்ரா பெயரில் மட்டும்" என்ற டைட்டிலில் டப் ஆகிறது. ஸ்ரேயாவை இதுவரை மாடர்ன் ட்ரெஸ்களில் மட்டுமே பார்த்து ரசித்துள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தில் அவரது விலைமாது கேரக்டரும், படுக்கையறை காட்சிகளும் புதிய விருந்தாக அமையும் என்பதால் தமிழில் டப் செய்கிறார்கள். இதற்கிடையே இந்தப்படத்தில் விபச்சாரி கேரக்டரில் நடித்ததைப் பற்றி வாய் திறந்திருக்கும் ஸ்ரேயா “விலைமாது கேரக்டரில் நடித்திருப்பதை சில நடிகைகள் ஏதோ அருவருப்பாக பார்க்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார். மேலும…

  23. 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமானவர் சமிக்ஷா. அழகு, இளமை இரண்டையும் பிரம்மா அபிரிதமாக அள்ளிக் கொடுத்த நடிகை. அஷ்டலட்சுமிக்கு மட்டும் ஏனோ இவரை இஷ்டப்படவில்லை. சமிக்ஷாவின் அறிமுகப்படம் தவிர்த்து வேறு படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. பிற மாநிலங்களிலும் வரவேற்பில்லை. இதனால் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார் சமிக்ஷா. விரைவில் தாலிகட்டி தமிழ்திரையிலிருந்து விலக தீர்மானித்துள்ளார் இவர். இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்பது சஸ்பென்ஸ். சமிக்ஷாவின் காதலர் என்ற ஒரே தகவல் மட்டும் லீக் ஆகியுள்ளது. பெயரையோ போட்டோவையோ கண்ணில் காண்பிக்க மாட்டேன் என சமிக்ஷா அடம்பிடிக்கிறார். தற்போது 'தீ நகர்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் சமிக்ஷா. தவ…

  24. நண்பர்களே, பெண் இயக்குநர்கள் சிலர் இணைந்து, 'விறலி விடு தூது' என்னும் திரைத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம், என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மூலக்கதை ஆசிரியர், திரைக்கதையாசிரியர், திரை இயக்குநர், திரைத்தயாரிப்பாளர் இவர்களை ஒருங்கிணைத்துத் திரைப்படைப்புகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது தான் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மையான நோக்கம். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடருக்கான தரமான கதைகளைக் ...கொடுப்பதிலும், திரைக்கதை எழுதுவதில் ஆர்வமுள்ள இளைய கலைஞர்களை இப்பணியில் ஈடுபடுத்துவதிலும், நவீன சினிமாவைக் கதைகள் வழியாக மாற்றுவதிலும் இந்நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும். இன்றைய சினிமாவில் இருக்கும் கதைப்பற்றாக்குறையைப் போக்குவதிலும், அதற்கான திரைக்…

  25. தமிழ்திரைப்படத்துறையின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சிகளுக்கு ஒளிப்பரப்பும் முடிவை எதிர்த்து அந்த திரைப்படத்தை இலவசமாக ஒளிபரப்பப்போவதாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தனது “விஸ்வரூபம்” திரைப்படத்தை டி டி எச் தொழில்நுட்பத்தின் மூலம் ஒளிப்பரப்பும் கமலஹாசனின் முடிவை தமிழ்நாட்டின் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கெனவே எதிர்த்து வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து இப்போது தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்கமும் கமலஹாசனின் முயற்சியை எதிர்த்திருக்கிறது. கமலஹாசனின் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி. எச்.சில் ஒளிப…

    • 0 replies
    • 534 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.