Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. "பாகுபலி" வெற்றிக்காக, தியேட்டர் வாசலில் ஆடு பலி கொடுத்த ரசிகர். ஹைதராபாத்: பாகுபலி படம் வெற்றி பெற வேண்டி ஹைதராபாத் அருகே உள்ள தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் ஆடு ஒன்றை பலி கொடுத்துள்ளார். எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பாகுபலி படம் இன்று உலகம் முழுவதும் தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளில் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பாகுபலி டிக்கெட் வாங்க ரசிகர்கள் முந்தியடிக்கிறார்கள். ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பை பார்த்து பாகுபாலி படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் செய்த செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைத…

  2. செவ்வாய்க்கிழமை, 7, டிசம்பர் 2010 (22:31 IST) சென்னை சர்வதேச திரைப்பட விழா:அறிமுக கூட்டம் சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 7 வருடங்களாக நடைபெற்றுவருகின்றன. தற்போது 8 வது விழா வரும் 15ம் தேதி துவங்கவிருக்கிறது. இதற்கான அறிமுக கூட்டம் சென்னையில் இன்று ஜி.ஆர்.டி ஹாட்டலில் நடந்தது. நடிகைகள் ரோகிணி,ரேவதி,சுஹாசினி,குஷ்பு,பூர்ணிமா பாக்கியராஜ்,லிஸி பிரியதர்ஷன், நடிகர்கள் மோகன்,எஸ்.வி.சேகர் உட்பட பலர் இந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டனர். வரும் 15ம் தேதி திரைப்பட விழாவை மாலை 6 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் தலைமையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். 43 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரைய…

  3. தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு சென்னை திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் விசு மற்றும் விக்ரமன் போட்டியிட்டனர். அதே போல் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டனர். 2700 உறுப்பினர்களை கொண்ட இயக்குநர் சங்கத்தில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்த தேர்தலில் விக்ரமனுக்கு 716 வாக்குகளும், விசுவுக்கு 556 வாக்குகளும் கிடைத்தது. 716 வாக்குகள் வாங்கிய விக்ரமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.http://www.d…

  4. ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் கைது, புழல் சிறையில் அடைப்பு. சென்னை: ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் த…

    • 3 replies
    • 547 views
  5. காங்கிரஸில் சேருகிறார் அஜீத்?! அஜீத்தைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் இருந்து கொண்டேயிருக்கும் போலுள்ளது. சமீப நாட்களாக அவர் பற்றி உலா வரும் சர்ச்சை... "அஜீத் காங்கிரஸ் [^] கட்சியில் சேரப் போகிறார்" என்பதே. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் சைதை துரைசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் பங்கேற்ற அஜித், அங்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் ‌பெற்றார். அதனைத்தொடர்ந்து அஜித் அதிமுகவில் சேரப்போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அஜித் தரப்பு அதனை மறுத்தது. ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்கிற முறையில் அவரிடம் அஜித் ஆசீர்வாதம் பெற்றார் என்று அஜித் வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் விரைவ…

  6. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO INDIA, YOUTUBE நடிகர்கள்: கேப்ரியல் லியோன், ஃப்ளாவியோ டொலஸானி, ஃபிலிப் ப்ரகன்கா, ராக்கல் வில்லர், மரியானா செரோன், லைலா காரின்; இசை: மெலிசா ஹார்ட்விக்; இயக்கம்: ப்ரெனோ சில்வெய்ரா. வேறு ஒரு கலாச்சாரம், நிலப்பரப்பு, மனிதர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள், திரில்லர், ஹரார், ஆக்ஷன் தொடர்களாக இல்லாத பட்சத்தில் அவை கவனிக்கப்படும் வரவேற்கப்படுவதும் மிக அரிதாகவே நடக்கும். அந்தப் பட்டியலில் சேர்கிறது இந்த DOM தொடர். இந்த முதல் சீசனில் மொத்தம் எட்டு எபிசோடுகள். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது கதை. பிரேசிலில் போதைப் பொருளான கொக்கெய்ன் அ…

  7. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்தநாள்: 15 சுவாரசிய சினிமா தகவல்கள் கிட்டத்தட்ட 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 74ஆவது பிறந்தநாள். இவர் குறித்த சில முக்கியத் தகவல்கள் இதோ. எஸ்.பி.பியின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இளம் வயதிலேயே இவருக்கு இசையின் மீது அளாதி பிரியம். இளம் வயதில் தெலுங்கு இசை நிறுவனம் ஒன்று நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார். அந்தப் பரிசுதான் பாடகராக வேண்டும் என்கிற ஆர்வத்தை அவருக்குள் விதைத்தது. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரின் இசையில் 'ஶ்ரீ ஶ்ரீ மரியாத ராமண்ணா' என்கிற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலைப் பாடினார் எஸ்.பி.பா…

  8. மரணத்தைக் கண்ணில் பார்த்துவிட்ட ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது. தமிழ் சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன் (கமல்ஹாசன்). ஒரு டீன் ஏஜ் பையனின் தந்தையான மனோரஞ்சனுக்கு ரகசியக் காதலியும் உண்டு (ஆண்ட்ரியா). வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைச் சுவைத்துக்கொண் டிருக்கும் தருணத்தில் கொடிய நோய் தாக்க, செய்யத் தவறிய பரிகாரங்கள், கடமைகளை வேகமாக நிறைவேற்ற முடிவுசெய்கிறான். ஒரு கலைஞனாக மக்கள் மனதில் இறவா இடம் பிடிப்பதற்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியிடம் (கே. பாலசந்தர்) சென்று ஒரு சினிமா எடுக்கவும் வேண்டுக…

  9. நயன்தாராவை பார்த்தால் வியப்பாக இருக்கிறது: ஜோதிகா சிறப்பு பேட்டி ஜோதிகா | கோப்புப்படம். தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 2018-ம் ஆண்டு சிறப்பான ஆண்டு என்கிறார் நடிகை ஜோதிகா. பாலாவின் 'நாச்சியார்', மணிரத்னத்தின் 'செக்கச் சிவந்த வானம்', ராதா மோகனின் 'காற்றின் மொழி', புதிதாக இரண்டு படங்களில் ஒப்பந்தம் என்று பிஸியாக இருக்கிறார் ஜோ. அவருடனான சந்திப்பில்.., 'செக்கச் சிவந்த வானம்' இசை வெளியீட்டு விழாவில் அத்தனை நடிகர்களும் வந்திருந்தனர். உங்களைப் பார்க்க முடியவில்லையே... அந்த நேரத்தில் என்னுடைய குழந்தைகளுக்கு விடுமுறை விட்டிருந்தது. இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்றிருந்தோம். அவர்களின் விடுமுறையின்போது பொதுவ…

  10. திரை விமர்சனம்: தோழா சர்வதேசத் திரைப்படங்களை அதிகார பூர்வமாகவே ரீமேக் செய்யும் போக்குக்கு கோலிவுட் மாறியிருக் கிறது. ‘தூங்காவனம்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களைத் தொடர்ந்து ‘தோழா’. ‘தி இன்டச்சபிள்ஸ்’ என்னும் பிரஞ்சுத் திரைப்படத்தைத் தழுவி, ‘தோழா’வை இயக்கியிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் வம்சி பைடிபள்ளி. அக்கினேனி நாகார்ஜுனா குவாட்ரி பிளேஜியாவால் (கழுத்துக்குக் கீழே உடலியக்கம் இல்லா நிலை) பாதிக்கப் பட்ட கோடீஸ்வரத் தொழிலதிபர். அவரைக் கவனித்துக்கொள்ளும் காப் பாளர் பணி நேர்காணலுக்குச் செல்கிறார் சிறையிலிருந்து பரோ லில் வெளியே வரும் கார்த்தி. கார்த்தியின் இயல்பான, கலகலப்பான சுபாவம் பிடித்துப்போக அவரையே காப்பாளராக நியமிக்கிறார…

  11. ''டைம் ஃபிக்ஸ் பண்ணிட்டு அழுவேன்'' - என்ன சொல்கிறார் டிடி? #VikatanExclusive ‘டாப் சின்னத்திரை ஸ்டார்கள்’ என்று லிஸ்ட் போட்டால், தவிர்க்கவே முடியாத நபர்... டிடி! சர்ச்சைகளைத் தாண்டி, திவ்யதர்ஷினியிடம் பேச எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 'அன்புடன் டிடி' நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் மூலம் நிதிஉதவி பெற்று, தான் படிக்க வைக்கிற மாணவரை அறிமுகப்படுத்தினார் டிடி. அதே மாணவரின் தம்பியைப் படிக்க வைப்பதும் டிடிதான். வாரம் ஒருமுறை ஆதரவற்ற முதியோர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வருவதும் டிடியின் வழக்கம். அதைப் பற்றியெல்லாம் கேட்டால் அநியாயத்துக்குக் கூச்சப்படுகிறார் டிடி. ''இதையெல்லாம் வெளியில சொல்லிக்கணுமா? வேணாமே ப்ளீஸ…

  12. ஓர் இரவு, இரண்டு கோடி பணம்... தமிழ் சினிமாவின் 186-வது த்ரில்லர் படம்..! - 'போத' விமர்சனம் சுரேஷ் இயக்கிய 'போத' படத்தின் விமர்சனம் ஒரு நாள் இரவு, இரண்டு கோடி பணம், மூணு கார், நான்கு துப்பாக்கி, ஐந்தாறு கதாபாத்திரங்களென தமிழ் சினிமா தந்திருக்கும் 186-வது த்ரில்லர் படமே இந்த `போத'. சினிமாவில் பெரிய ஹீரோவாகும் லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறான, மணிகண்டன் (விக்கி). ஏ.வி.எம் உருண்டை, பிரசாத் லேப் என ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கியும் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கையை வெறுக்கிறான். அப்போது ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவன் சட்டையை பிடித்து இழுக்கிறது, அதேநேரத்தில் அதற்கு முப்பதாயிரம் பணமும் வேண…

  13. விமர்சனம்: பிச்சைக்காரன் 2 KaviMay 20, 2023 16:18PM ஷேர் செய்ய : பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்துமா? குறிப்பிட்ட சில பெயர்களை, உச்சரிப்பினை டைட்டிலாக வைக்கத் தயங்கும் வழக்கம் இன்றும் திரைப்பட உலகில் நிலவுகிறது. அப்படியிருக்க சைத்தான், எமன், பிச்சைக்காரன் என்பது போன்ற டைட்டில்களை தொடர்ந்து தந்து வருபவர் விஜய் ஆண்டனி. சசி இயக்கத்தில் அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ படமும் அவ்வகையில் உருவானதே! சென்டிமெண்டும் ஆக்‌ஷனும் கனகச்சிதமான கலவையில் அமைந்த அப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. அது போன்றதொரு வெற்றியை மீண்டும் சுவைக்க வேண்டுமென்ற ஆசையில், ‘பிச்சைக்காரன் 2’ என்ற டைட்டிலை வைத்துக்கொண்டு விஜய…

  14. யாதும் யாவரும்.. பல அவுஸ்திரேலிய தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஒரு திரைப்படம். படத்தைப் பார்க்கும் எம்மவருக்கு சங்கடங்களை தரும் சில விடயங்கள் உள்ளது என்பதால் கட்டாயம் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அசெகளியப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். என்னைப் பொறுத்த வரை இயக்குனர் தைரியத்துடன் தனது சிந்தனையை தெளிவாக கூறியுள்ளார். இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி பிரசங்கம் செய்யவில்லை, ஆனால் எங்களது சமூகத்தில் மறைக்கப்பட்ட/மறைக்க விரும்பும் சில பிரச்சனைகளுக்கு தனது தீர்வு இது என்பதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 3 முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் சிந்தனையையும் இன்றைய அவுஸ்ரேலிய தமிழர்களின் வாழ்வியல…

  15. பூ ஒன்று புயலானது என்கிற படத்தின் மூலம்தான் நடிகை விஜயசாந்தி கொஞ்சம் அதிரடி நாயகியாக மாறினார். அது தெலுங்கு பட ரசிகர்களுக்குப் பிடித்து போகவே, வைஜயந்தி ஐ பி எஸ், லாக்கப் என்று தொடர்ந்து அதிரடிப் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தைப் பிடித்தார். அந்த சமயத்தில் நடிகை விஜயசாந்தியின் தெலுகு படங்களை தமிழில் டப் செய்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட்தான். இதே பார்முலாவை இப்போது, நடிகை அனுஷ்காவுக்காக கையில் எடுத்துள்ளனர் தெலுகு திரைப்படத்துறையினர். அனுஷ்காவும் பல வருடங்களாக உள்ள தெலுங்கு லேடி சூப்பர் ஸ்டார் இடம் காலியாக உள்ளதை ராணி ருத்ரமாதேவி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மூலம் மிக நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார். டெல்லி, சிறீவைகுண்டம் பா…

  16. 2015-ன் டாப் 10 ஹீரோக்கள்! ’ஹீரோ’ - இன்றும் பெரும்பாலான தமிழ் சினிமாக்களின் ‘ட்ரம்ப் கார்ட்’! படத்தின் கதை, களம் குறித்தெல்லாம் கண்டு கொள்ளாமல் ஹீரோ பெயருக்காகவே படம் பார்க்கப் படையெடுக்கும் பழக்கம் தமிழர்களிடம் இன்னும் உண்டு. அப்படி நம்பி வந்தவர்களை நம் ஹீரோக்கள் எந்தளவுக்கு குஷிப்படுத்தினார்கள்? அவர்களில் யார் டாப்-10. சின்னதாக அலசுவோமா! http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/56777-2015-top-10-heros-in-tamil.art

  17. 'வாரிசு' விஜய் பிறந்தநாள்: ஜோசஃப் விஜய் இளைய தளபதியாகி தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத பல தகவல்களுடன் விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 21 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@ACTORVIJAY நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த தினத்தை, கொண்டாடும் நிலையில், அவர் திரையுலகுக்கு வந்து தனக்கென இடத்தைப் பிடித்து இன்று தளபதி என்ற பெயரில் வளர்ந்து நிற்பது எப்படி என்பதை விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய்தான், இன்றைய த…

  18. சத்தியராஜ் மகளின் உன்னத கனவு நனவானது!! பிரபல நடிகர் சத்தியராஜ்ஜின் மகள் திவ்யா தென்னிந்தியாவில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் என்பதுடன், இலாப நோக்கமற்ற உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவராகவும் உள்ளார். இந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தமிழ்நாட்டின் அரச பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர் அதற்கு அனுமதியும் வழங்கினார். இதையடுத்து அக்சய பாத்ரா தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து இன்று முதல் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க ஆரம்பித்துள்ளன. இதன் தொடக்க விழாவை இ…

  19. சினிமா செய்திகள் கமல் கூட்டத்தை தவிர்த்த ரஜினி, சரித்திர நாயகியாக சன்னி லியோன் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். காவிரிக்காக கமல் நடத்திய கூட்டம் காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். ஆனால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 9 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழரசன், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், தெய்வ சிகாமணி …

  20. முதல் பார்வை: காற்றின் மொழி உதிரன் பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்து…

  21. செவ்வாய், 4 ஜூன் 2013 இந்தியில் நிஷாப்த், கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஜியாகான், அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை ஜூகூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் நேற்று இரவு 11.45 மணியளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு விரைந்த காவல்துறையினர் படுக்கையறையில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஜியாகான் பிரிட்டனை சேர்ந்தவர் பாலிவுட்டில் பிரபல திரைப்படங்கள் மற்றும் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து …

  22. தலைவா படத்தின் வெளியீட்டிற்காக சத்யராஜ் நடிப்பில் வெளிவர இருக்கும் கலவரம் படமானது முடக்கப்பட்டுள்ளது என்றும் இதற்குக் காரணம் தலைவா படத்தின் தயாரிப்பாளர் என்று அதிரடியாக புகார் அளித்திருக்கிறார், சசிக்கலாவின் அக்காள் மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் ‘தலைவன்’ படத்தின் பினாமி தயாரிப்பாளருமான ரமேஷ் செல்வன்! இவர் உளவுத்துறை, ஜனனம் போன்ற படங்களை இயக்கியிருக்குமம் இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தலைவா திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில்... “தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து கலவரம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்…

    • 0 replies
    • 544 views
  23. UTV மோஷன் பிக்சர்ஸ், விஷால் பிலிம் பாக்டரி இணைந்து தயாரித்து வரும் படம் “நான் சிகப்பு மனிதன்”. இதன் படப்பிடிப்பு கடந்து ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடலை ஜீ.வீ.பிரகாஷ் உருவாகியுள்ளார். வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீளம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளார். “ஏலேலோ மெதப்பு வந்திருச்சி...” என்ற இப்பாடலை ஜீ.வீ.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணி சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ‘சர்ச்’ செட் போடப்பட்டது. “பருத்திவீரன்”, “ஆடுகளம்” படங்களுக்கு பணிபுரிந்த ஜாக்கி இதை உருவாக்கியுள்ளார். திடீரென உருவான இந்த ‘சர்…

  24. நல்ல விஷயம்ப்பா... இன்னும் நல்லாப் பண்ணியிருக்கலாம்ப்பா! - `எழுமின்' விமர்சனம் விகடன் விமர்சனக்குழு குழந்தைகளுக்கான படங்கள் என்பது சுத்தமாக நின்றுவிட்ட கோலிவுட் சூழ்நிலையில் குழந்தைகளுக்குத் தற்காப்புக்கலை மிகவும் அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தி வெளியாகியுள்ளது `எழுமின்'. கோடிகளில் புரளும் தொழிலதிபரான விவேக்கிற்கு தன் மகனை பாக்ஸிங் சாம்பியனாக்க வேண்டும் என்பதுதான் லட்சியம். அவரின் மகனும் அதற்கேற்றார்போல நிறைய போட்டிகளில் வெற்றி பெறுகிறார். அவரின் நண்பர்களும் சிலம்பாட்டம், கராத்தே, குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்கள். மகனுக்காக, அவனின் நண்பர்களுக்காக ஒரு பயிற்சி மையமும் தொடங்குகிறார் விவேக். இங்கேதான் ஒரு ட்விஸ்ட். அதன்பின் என்ன நடக்கிறது எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.