Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தனது காதலனுடன் இன்று காலை வீட்டைவிட்டு ப்ரியாமணி ஓடி விட்டதாக வந்த செய்தியால் கோடம்பாக்கமே பரபரப்பாகிவிட்டது. ப்ரியாமணியும் கிரிக்கெட் வீரரும் தெலுங்கு நடிகருமான ராஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும், காதலுக்கு ப்ரியாமணியின் அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இன்று அதிகாலை இருவரும் எஸ்கேப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதைத் தொடர்ந்து சில எப்.எம்களிலும் இந்த செய்தி ஒலிபரப்பானது. இதுகுறித்து ப்ரியாமணியின் அம்மாவிடம் கேட்டபோது, "நெனச்சேன்... இந்த வருஷம் ஏப்ரல் முதல் தேதி யார் மாட்டப் போறாங்களோன்னு யோசிச்சப்பவே, ப்ரியாமணி பத்திதான் ஏதாவது பரபரப்பு கிளம்பும்னு எதிர்பார்த்தேன். அது இப்ப நடந்துடுச்சு. என் பொண்ணு யாரையும் லவ்வும் பண்ணல... இ…

    • 4 replies
    • 1.8k views
  2. நான்கு வருசங்கள் படுக்கையில் இருந்த நாட்கள் – விக்ரம்: முழுமையான நேர்காணல் -மு.ராமசாமி “ராவணன் படத்தின் வணிகரீதியான வெற்றியைப் பொறுத்தவரை சலசலப்புகள் இருந்தாலும் ராவணனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நடித்தவர் – விக்ரம். அடுத்தடுத்து இரண்டு படங்களுக்காகத் தேசிய விருதுகளைப் பெற்றிருக்கும் விக்ரம் தன்னுடைய பயணத்தின் சிரமங்களை விவரிக்கிற விரிவான நேர்காணலை இங்கே தருகிறோம். பேட்டி கண்டவர் வஸந்த் செந்தில். இந்தியாவின் சிறந்த நடிகர் விருது ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. 14 வருடப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த விருதை அடைந்திருக்கும் விக்ரம் கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. தன்னம்பிக்கையின் வேரை அசைத்துப் பார்க்கும் புயல் …

    • 2 replies
    • 1.8k views
  3. சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை, சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் 'மார்க்கண்டேயனுக்கு வைரவிழா' என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒ…

  4. தமிழ்த்திரைக்கண் வழங்கும் முழு நீளத் திரைப்படம் 'விடுதலை மூச்சு"

  5. அதிர்வு திரைப்பட பட்டறையின் சார்பில் த.மணிவண்ணன் தயாரிக்கும் 'மகிழ்ச்சி' பட ஆரம்ப விழா சென்னை வடபழநியில் உள்ள ஏ.வி.எம். படப்பிடிப்பு அரங்கில் நடை பெற்றது. இந்நிகழ்வில் திரைத்துறைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை வ.கெளதமன் இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கின்றார். இதில் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் சீமான் முக்கிய கதா பாத்திரத்தில் தோன்றி நடிக்கின்றார். தமிழகத்து இளைஞர்களின் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பியதைப் போன்று. தமிழ் ரசிகர்களின் தமிழ் உணர்வுகளையும் தூண்டி விடப்படும் வகையில் இவரது பாத்திரம் வடிவமைக்கப் பட்டிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு தமிழை நேசிக்கும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நன்றி . thedipaar.com படங்களைப் பார்வையிட‌ http…

  6. ஐந்து படங்கள் வெளியானால், அதில் மூன்று படங்களில் இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். குணச்சித்திர வேடம், மிரட்டாத வில்லத்தனம் என்று ஒரு பக்கம் ஜெயப்பிரகாஷ் ரவுண்டு கட்ட, மறுபுறம் ஜெ யப்பிரகாஷின் மகன்கள் நிரஞ்சன், துஷ்யந்த் இருவரும் 'வந்தோமம்மா வந்தனம்!’ என்று ஆஜராகிறார்கள் 'ஈசன்’ திரைப்படத்தில். ''அப்புறம்... கலைக் குடும்பம் ஆகிட்டீங்க!'' என்றால், ''ஐயையோ... அப்படி எல்லாம் இல்லைங்க!'' என்று மென்மையாகச் சிரிக்கிறார் ஜெயப்பிரகாஷ். ''ஒரு தயாரிப்பாளரா படங்கள் தயாரிச்சு, அப்புறம் சினிமாவில் இருந்து விலகி... கொஞ்சம் ஊசலாட்டமான ஒரு வாழ்க்கை. சேரன்தான் முதலில் 'மாயக் கண்ணாடி’ படத்தில் நடிக்க அழைத்தார். 'பொற்காலம்’ படம் தயாரித்த காலத்தில் இருந்து சேரனைத் தெரியும். 'சார், வேணாம்... இத…

  7. ’சின்ன பின் சார்ஜர் இருக்கா? ‘ கலகலப்பான முதல் வார தெலுங்கு பிக் பாஸ்! #BiggBossTelugu சேவ் பரணி, ஓவியா ஆர்மி, பிந்து மாதவி என வாரம் ஒரு ட்ரெண்டாக லீடிங்கில் போய்க்கொண்டிருக்கிறது பிக் பாஸ். தமிழ் போலவே தெலுங்கு பிக் பாஸிலும் பரபரப்புக்குப் பஞ்சம் கிடையாது. ப்ராங்குகள், தண்டனைகள் என செம ஸ்ட்ரிக்ட் காட்டுகிறார் தெலுங்கு பிக் பாஸ். இரண்டு வாரங்களை நிறைவு செய்திருக்கும் தெலுங்கு பிக் பாஸின் முதல் வாரத்து ஹைலைட்ஸ் இதோ... 16 ஜூலை தமிழ் போலவே முதல் நாள் ஜூனியர் என்.டி.ஆர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ''இது கிச்சன், இங்கே சமைக்கலாம், காய்கறி நறுக்கலாம், பால் காய்ச்சலாம். இது பெட்ரூம்... படுக்கலாம், உறங்கலாம்'' என வீட்டைச்…

  8. சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். இந்த காலத்து பெண்கள் மத…

    • 20 replies
    • 1.8k views
  9. சமந்தா - நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பை நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா ட்விட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார். …

  10. என் நண்பர் ஒருவர் சொன்னதால், ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்த்தேன். தமிழ் மொழியில் பார்க்க முடியும். மலையாளிகளால் எப்படி இப்படி ஒரு சின்ன கதையை ஆழமாக சொல்ல முடிகின்றது எனும் வியப்பை மீண்டும் ஏற்படுத்திய படம். படத்தின் இறுதி வரைக்கும் உங்களால் முடிவை / யார் அவரைக் கொன்றார்கள் என்பதையும் ஏன் என்பதையும் ஊகிக்கவே முடியாது. ஒரு ஆழமான சிறுகதை ஒன்றை வாசிக்க விரும்புகின்றவர்கள் இப் படத்தை பார்க்கலாம். கீழே இப்படத்திற்கான விமர்சனம். இவ் விமர்சனத்தை நண்பர் காட்டியதால் தான் இப் படத்தை பார்க்க தெரிவு செய்தேன். --------------------------------------------------------------- இரட்டை இரட்டையர்களில் ஒருவன் காமுகன், குடிகாரன்,…

    • 14 replies
    • 1.8k views
  11. கார்த்தி - வருங்கால மக்கள் திலகம் உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ்ர். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார். பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்த‌க் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல். பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்ச‌ரியம். …

  12. நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தேன். மிக நல்ல படம். உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் கண்களில் கண்ணீரை சில கட்டங்கள் வரவழைக்காமல் விடாது. சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தினம்தோறும் வரும் செய்திகளாக மாறிவிட்ட காலத்தில் இப்படியான காத்திரமான படங்கள் வருவது நல்ல விடயம். வாய்ப்புக் கிடைத்தால், பிள்ளைகளுடன் சேர்ந்து பாருங்கள் ------------------------------------- திரை விமர்சனம்: சித்தா பழநியில் துப்புரவு ஆய்வாளராக இருக்கும் ஈஸ்வரன் (சித்தார்த்), அண்ணி (அஞ்சலி நாயர்), அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ர ஸ்ரீ) ஆகியோருடன் வாழ்கிறார். சுந்தரி மீது உயிரையே வைத்திருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் தன் நண்பன் வடிவேலுவின் அக்கா மகளும் சுந்தரிய…

    • 18 replies
    • 1.8k views
  13. இந்த இருண்ட காலத்திற்கு காரணமாயிருந்தது அவர் தயாரித்த 'த்ரீ ரோசஸ்'. ஹாலிவுட் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' பாதிப்பில் தயாரான 'த்ரீ ரோசஸி'ல் ரம்பா, ஜோதிகா, லைலா என மூன்று ஹீரோயின்கள். ஈகோ மோதலில் மூவரும் ஒவ்வொரு திசையில் இழுக்க,ரோசஸ் ரேசரானது பரிதாபம். இனி தமிழ்ப் படங்களில் நடிக்க மாட்டேன் என சைலன்ட்டாக சபதம் செய்து இந்தி, 'பேஜ்பூரி' என தார்த்தாடனம் சென்றவர், கடன் தீர்ந்ததும் திரும்பு வந்திருக்கிறார். வழக்கம்போல வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் ரம்பாவையும் வாரி அனைத்துக் கொண்டுள்ளது. ரஷ்யன் என்பவர் இயக்கும் 'விடியும் வரை காத்திரு' படத்தில் ரம்பாதான் நாயகி. பாவேந்தர் இயக்கும் 'மறு அவதாரம்' பட்ததிலும் நடிக்கிறார் ரம்பா. இதில் நடிகர் முரளிக்கு ஜோடி. மீனா, சுகன்யா, தேவயானி, கவுசல்…

    • 8 replies
    • 1.8k views
  14. குள்ளமான உருவம்.. சற்றே விகாரமான, மன வளர்ச்சி பிறந்த மாணவனின் தோற்றம்... 'பா' (Paa) படத்தில் இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் மிரண்டு போவார்கள்... அது பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்!. உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை 'சீனி கும்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குநர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் மேக்கப்புக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்தி…

  15. http://sinnakuddy1.blogspot.com/2007/04/provoked-movie.html 1979 ஆண்டு கால கட்டத்தில்லண்டன் சவுத் கோல் பகுதியில் வாழ்ந்த இந்திய பஞ்சாபி பெண்ணொருவர் கணவனின் சித்ரவத்தை தாங்க முடியாமால் கணவனை கொலை செய்தமைக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்று விடுதலை பெற்று வாழ்கிறார் .இந்த படத்தை பற்றி தனது பாத்திரம் நடித்த ஜஸ்வரராய் புகழ்ந்து உரைக்கிறார்

    • 2 replies
    • 1.8k views
  16. [size=4]ஈழப்புரட்சிக்கு உதவும் பில்லா அஜீத்[/size] [size=4]1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜீத் நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம். [/size] [size=4]அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார். அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியா…

  17. சும்மா சொல்லக்கூடாது... உண்மையிலேயே புயல்தான்! 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மீண்டும் ஹீரோவாகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் பெயரை கேட்டால் பெரிய நடிகர்களுக்கே பொறாமை வரும். இம்சை அரசனுக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கலாமா வேண்டாமா என வடிவேலுக்கு டபுள் மைன்ட். அதை சிங்கிளாக்கியவர் ரஜினி. தொடர்ந்து ஹீரோவாக ஜாமாய்ங்க என்று ரஜினி சொன்னதை வேதவாக்காக எடுத்திருக்கிறார் வடிவேலு. 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'. இதுதான் அடுத்து வடிவேலு நடிக்கப் போகும் படம். புராணத்தையும் நவீனத்தையும் இழுத்து கோர்த்திருக்கும் கதைதான் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'! முதல் படத்தில் இரண்டு வேடத்தில் வடிவேலு. இந்தப் படத்தில் அதை முறியடிக்கிறார். புதிய படத்தில் அவருக்கு நான…

  18. ரஜினி கதை எஸ்.விஜயன் ரஜினி சினிமாவில் சம்பாதித்து சொந்தமாக வீடு கட்டிக் கொண்டது முதலில் சென்னையில்தான். இங்குள்ள தமிழ்ப் பெண் லதாவை கலப்புமணம் புரிந்து தானும் ஒரு தமிழராக குடும்பத்தோடு ரஜினி இங்கு வசித்து வருகிறார். தமிழகம் வந்து இருபது வருடங்களுக்குப் பின்பு இப்போதுதான் இவர் பெங்களூரில் பிளாட் ஒன்று வாங்கியிருக்கிறார். "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும். உங்க பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும், துள்ளும்" என்று "ராஜா சின்ன ரோஜா" படத்தில் ரஜினியைப் பற்றி பாடல் வரிகள் உண்டு. அதில் எள்ளளவும் மிகையில்லை என்பதற்கு நமது வீட்டுக் குழந்தைகளே சாட்சி. அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இன்று ரஜினியின் பெயரைச் சொன்னால் போதும். சோறு ஊட்டுவதற…

    • 2 replies
    • 1.8k views
  19. மிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம்! - யூ டர்ன் விமர்சனம் #Uturn கண்ணாடியும் ஃப்ரெஞ்சு தாடியுமாக என்ட்ரியான அந்த இளைஞரை 'யாரு சாமி நீங்க? எங்க இருந்து வந்தீங்க?' என ஆச்சரியமாக பார்த்தது கன்னட திரைப்பட உலகம். இன்று அதே இளைஞர் தமிழில் காலெடுத்து வைத்திருக்கிறார். 'லூசியா' என்ற மேஜிக்கல் படம் கொடுத்த பவண்குமாரின் பை-லிங்குவல் படமான 'யூ'டர்ன்' நம்மையும் அப்படி கேட்க வைக்கிறதா? இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆங்கில இதழில் இன்டெர்னாக சேரும் சமந்தாவுக்கு வீட்டிலிருந்து கல்யாண பிரஷர், அலுவலகத்திலிருந்து வேலை பிரஷர். தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயத்தில் ஒரு வித்தியாச அசைன்மென்ட்டை கையிலெடுக்கிறார். வேளச்சேரி பாலம் பற்ற…

  20. உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால் வருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான். “நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில்…

  21. நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார். இதோ இனி கமல் உங்களோடு பேசுவார் ‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்? இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அ…

  22. நடிகை மனோரமாவுக்கு தலையில் உறைந்திருந்த ரத்தம் நேற்று ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டதால் அவர் கோமாவிலிருந்து மீண்டார். ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகை மனோரமா கழிவறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட்டது. முறையாக சிகிச்சை பெறாததால் மூளையில் ரத்தம் உறைந்தது. தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் மூலம் ரத்தக் கட்டி நேற்று அகற்றப்பட்டது. பின்னர் மனோரமா அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. டியூப் மூலம் மனோரமாவுக்கு திரவ உணவு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பார் என்று கூற…

  23. நடிகர் ரஜினிகாந்த் நடிகை சிம்ரன் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இசை அனிருத் ரவிச்சந்தர் ஓளிப்பதிவு திரு ஊட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார் பாபி சிம்ஹா. கல்லூரியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அராத்து பண்ணுகிறார். இந்த கல்லூரியில் தான் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில், அந்த கல்லூரிக்கு வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்கி, கல்லூ…

    • 2 replies
    • 1.8k views
  24. 2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்! இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ... 2006: எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலை…

  25. Print | E-mail : Email this Article சனிக்கிழமை, 6, பிப்ரவரி 2010 (15:4 IST) நடிகை கனகா எங்கே? தந்தை உருக்கமான கடிதம் கனவரை காணவில்லை என்று புகார் கூறிய நடிகை கனகாவையும் இப்போது காணவில்லை.கனகாவின் தந்தை எழுதி வைத்துள்ள கடிதம் மூலமாகவே கனகா மாயமானது தெரியவந்துள்ளது. நடிகை தேவிகாவின் மகள் கனகா, கரகாட்டக்காரன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் போனதால் நாயகி என்பதை தவிர்த்து கேரக்டர் ரோலில் நடித்தார். அதன்பின்பு அவரைப்பற்றிய செய்தியே இல்லை. அவருக்கு திருமணம் நடைபெற்றதா எங்கே இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.