வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறந்தவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'. சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் …
-
- 4 replies
- 747 views
- 1 follower
-
-
சென்னை: காதலும் வேண்டாம் காதலனும் வேண்டாம் என நீதிமன்றத்தில் கூறிவிட்டு மகள் தாமினி தன்னோடு வந்ததில் மிகுந்த சந்தோஷமடைந்த இயக்குநர் சேரன், மீடியாவுக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தார். நீதிமன்றத்தில் இன்று தாமினி காதல் வழக்கு விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பழையபடி தாய் தந்தையுடன் சேர்ந்துவிட்டார் தாமினி. தன் மகள் திரும்பக் கிடைத்தது சேரனுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்துள்ளது. இதற்காக அவர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் அவரைச் சுற்றி நின்றிருந்தனர். ஏராளமான மீடியாக்காரர்களும் வந்திருந்தனர். தரையில் விழுந்து... அப்போது அனைவர் மத்தியிலும் பேசிய சேரன், 'என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எ…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஓபனிங் கிங் நான்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் அஜித். இவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் 'பில்லா' முதல் மூன்று நாட்களில் மற்ற அனைத்துப் படங்களையும் விட அதிகம் வசூலித்து முதலிடத்தில் உள்ளது. சென்றவார இறுதிவரை, சூர்யா நடித்த 'வேல்' சென்னையில் மட்டும் 1.8 கோடி வசூலித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ளது தனுஷின் 'பொல்லாதவன்'. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்' ஐந்துவார இறுதியில் 1.28 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. சென்னை திரையரங்கு நிலவரம் இது. அஜித்தின் 'பில்லா' முதல் மூன்று நாள் ஓபனிங்கில் தீபாவளிப் படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. சென்னை சிட்டியில் இப்படம் முதல் மூன்று நாளில் ஐம்பது லட்சத்திற்கு மேல் வசூலித…
-
- 4 replies
- 2.2k views
-
-
முதல் பார்வை: அடங்க மறு உதிரன்சென்னை சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'. சென்னை அண்ணா நகரில் காவல் உதவி ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் சுபாஷ் (ஜெயம் ரவி). உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஒரு மதுக்கடையை மூடக் கோரி நடைபெறும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தச் செல்கிறார். ஆனால், எஸ்.ஐ. சுபாஷின் நூதன ஆலோசனையால் மாணவர்கள் மதுக்கடையைச் சூறையாடுகின்றனர். ஓர் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (மைம் கோபி) முடிவெடுக்கிறார். சுபாஷ் அதையும் முறியடிக்கிறார். அந்தக் கொலை வழக்கு சம்பந…
-
- 4 replies
- 925 views
-
-
சென்னை: தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு நீக்கமற நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக (சாதிப் பெயர் இல்லீங்) அழைக்கப்படும் கவுண்டமணி. கவுண்டமணி -செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும், தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி…
-
- 4 replies
- 576 views
-
-
என் ஆயுள் காலத்துக்குள் நிச்சயம் ஆஸ்கர் விருதினை வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வாங்கும்போது, என்னால் வாங்க முடியாதா? என்றார் சரத்குமார் [^]. விடியல் படத்தின் பிரஸ் மீட்டில் போதும் போதும் எனும் அளவு சரத் பேசித் தள்ளிவிட்டார். விடியல் படத்தைவிட வேறு விவகாரங்கள் பற்றியே அவர் பேச்சு அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்கர் விருது பற்றி அவர் பேச்சு திரும்பியது. அப்போது அவர் இப்படிச் சொன்னார்: நான் சினிமாவில் 27 வருஷமா இருக்கேன். சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவன் நான். நடிக்க வந்ததிலிருந்தே ஆஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. எப்படியாவது ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டு…
-
- 4 replies
- 694 views
-
-
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் (ஜெயம் ரவி) ஜிம் பயிற்சியாளர். பணக்காரனைக் காதலித்து வசதியாக வாழவேண்டும் என்று நினைக்கும் விமானப் பணிப்பெண் ஐஸ்வர்யா (ஹன்சிகா). பணக்காரர் என்று நினைத்து கார்த்திக்கை காதலிக்கிறார். உண்மை தெரியும்போது பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி, காதலை முறித்துக்கொள்கிறார். உண்மையாகக் காதலித்த கார்த்திக்கால் அதுபோல உதறித் தள்ள முடியவில்லை. ஐஸ்வர்யா எதிர்பார்த்ததுபோல பணக்காரத் தொழிலதிபர் அர்ஜுனுடன் (வம்சி கிருஷ்ணா) அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. தன் காதலை இழக்க விரும்பாத கார்த்திக், காதலியை மீட்க வித்தியாசமான உத்தியைக் கையாள்கிறார். அது அவருக்கு கைகொடுத்ததா, இல்லையா என்பது படத்தின் கதை. காதலை முடிவு செய்வதில் பணம், அந்தஸ்துக்கு பங்கிருக்கிற…
-
- 4 replies
- 678 views
-
-
Vantage Point - ஆரம்பம் புள்ளியில் இருந்து ஒரு பார்வை என்னும் படம் இந்த வருடம் மாசியில் வெளியாகியிருக்கிறது. இது நிகழ்கால உலக சூழ்நிலையைக் மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பற்றி வரலாற்று மாநாடு ஒன்று ஸ்பெயின் நகரான சலமன்கா இல் நடக்கிறது. அதற்கு வந்த அமெரிக்க சனாதிபதியை கொலைசெய்யத முயற்சிக்கப்படுகிறது. இந்தக் கொலை முயற்சிக்கு கிட்டத்தட்ட 23 நிமிடங்களிற்கு முன்னர் நடந்த சம்பவங்களை இதில் சம்பந்தப்பட்ட பலதரப்பினரது பார்வை கண்ணோட்டம் அவதானிப்புகள் மூலம் பல கோணங்களில் காட்டுவது தான் படத்தின் முக்கிய பாகம். இதில் சம்பந்தப்பட்ட தரப்புகளாக 1) ஒரு தொலைக்காட்சி செய்திச் சேவையின் தயாரிப்பாளர் எவ்வாறு தனது களத்தில் உள்ள ஒளிப்…
-
- 4 replies
- 1.2k views
-
-
எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 – டாக்டர் ஜி. ராமானுஜம் September 25, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · மற்றவை இசை ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும் எஸ்பிபாலசுப்பிரமணியம் இருந்தால்தான் அந்த கச்சேரி மேடை நிறையும். சரீரத்திலும் சாரீரத்திலும் வஞ்சகமில்லாதவர். ‘ஹோட்டல் ரம்பா’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் ‘அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு ?’ என்ற பாடல்தான் அவர் முதலில் தமிழுக்காகப் பாடியது. எம் எஸ் வி இசையமைப்பில். படம் வரவே இல்லை.பாடலும் நம்மிடம் இல்லை. 1969 இல் வெளிவந்த இயற்கை என்னும் இளைய கன்னி (சாந்தி நிலையம்) , ஆயிரம் நிலவே வா (அடிமைப்பெண்) ஆகிய அவரது முதல் இரண்டு பா…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஷங்கரின் அடுத்த படத்தின் பட்ஜெட் 120 கோடி!? வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007( 16:49 IST ) ஷங்கர் அடுத்து இந்தியில் படம் இயக்கப்போகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்..எல்லாம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. யெஸ்..ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். ரோபோ படத்தின் அவுட்லைன் சொல்லிவிட்டார் ஷங்கர். ஏற்கனவே கமல்,அஜித் என்று நினைத்து பண்ணப்பட்ட கதை. இப்போது ஷாருக்கானுக்காக சில மாற்றங்களை செய்திருக்கிறார். கேமெராமேனாக மீண்டும் கே.வி.ஆனந்த் பண்ணுகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.120 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் இந்தப்படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். Webdunia .com
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ்ப்பட உலகின் தந்தை கே.சுப்பிரமணியம் பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரியை அறிமுகப்படுத்தியவர். கே.சுப்பிரமணியம் "காளிதாஸ்" படம் வெளிவந்தபின், வரிசையாகப் படங்கள் வரத்தொடங்கின. தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் கட்டப்பட்டன. புகழ் பெற்ற நாடகங்களையெல்லாம் சினிமாவாகத் தயாரிக்கத் தொடங்கினார்கள். அவை பெரும்பாலும் புராணக் கதைகள். சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். புகழும், பணமும் ஒருங்கே வரக்கூடிய துறை. எனவே, படத்தயாரிப்பில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம், படித்த இளைஞர்கள் சிலருக்கும் ஏற்பட்டது. அப்படி படத்தொழில் மீது ஆர்வம் கொண்டவர்களில் கே.சுப்பிரமணியமும் ஒருவர். தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் 1904_ம் ஆண்டு …
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழக அரசு விருது அறிவிப்பு: சிறந்த நடிகர்களாக ரஜினி, கமல் தேர்வு சிறந்த படம் சந்திரமுகி, கஜினி, வெயில் சென்னை, செப். 6- தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் திரைப் பட விருதுகள் வழங்கும் திட்டத் தின்படி சிறந்த முழு நீள தமிழ் திரைப்படங்களுக்கும், நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோ ருக்கும் பரிசுகளும் தமிழ்த் திரையுலகில் சாதனை புரிந்த வர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகளும், திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகளும் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. 2005 மற்றும் 2006 ஆகிய 2 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற் றும், 2004-05, 2005-06 ஆகிய 2 கல்வி ஆண்டுகளுக்…
-
- 4 replies
- 2.2k views
-
-
'ஸ்பெக்ரர்' பொன்ட் படத்தின் வசூல் வேட்டை ஆரம்பம் ஜேம்ஸ்பொன்ட் வரிசையில் புதிய திரைப்படமான ஸ்பெக்ரர் திரைப்படம், கலக்கலாக தனது வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. டேனியல் கிறேக் 4 ஆவது தடவையாக ஜேம்ஸ் பொன்ட் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை சாம் மெண்டிஸ் இயக்கியுள்ளார். லண்டனிலுள்ள ரோயல் அல்பர்ட் அரங்கில் கடந்த 26 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஸ்பெக்ரர் படத்தின் முதலாவது காட்சி காண்பிக்கப்பட்டது. பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் வில்லியம் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். அக்காட்சி ஆரம்பமாகி 15 நிமிடங்களின்பின் பிரிட்டனில் 647 அரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது. முதல் நாளில் இப்படம் 41 லட்ச…
-
- 4 replies
- 1.8k views
-
-
மலையாள சினிமாவில் தமிழர் சித்தரிப்புகள்! செவ்வாய், 1 ஏப்ரல் 2008( 14:17 IST ) தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை. தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த சித்திரம் இன்னும் விசேஷம். ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் உதட்டை அழுத்தி, புட்டு வேணுமா என்று கேட்க…
-
- 4 replies
- 1.7k views
-
-
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியாக உள்ள படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் 16 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பின் கண்விழிக்கிறார் ஜெயம் ரவி. இத்தனை ஆண்டுகாலமாக கோமாவில் இருந்ததை நம்பாத ஜெயம் ரவியை நம்ப வைக்க டிவியில் வீடியோ ஒன்றை போட்டு காட்டுகிறார்கள்.அதில் “நான் அரசியலுக்கு வருவ…
-
- 4 replies
- 1.1k views
-
-
அஞ்சலி தேவி: 1. கிளி மார்க் பீடி! ‘ஆந்திர வட்டாரத்தில் ஓர் அழகுப் பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசினார்கள். நன்றாக நடனமாடுகிறாள். அவள் நாட்டியத்தைப் பார்க்காத கண்கள் இருந்து என்ன பயன்...?’ காக்கிநாடாவில் யுத்த நிதிக்காக அந்த ஆரணங்கு ஆடினாள். அந்த ஆட்டமும் அவள் அழகும் என்னை ஆகா...! என்று பாராட்ட வைத்தன. அந்தப் பெண்ணைப் பற்றிய பூர்வீகத்தை அறிந்து அவளின் தந்தையிடம் போய்ப் பேசினேன். ‘உங்களுடைய மகளை என்னுடன் நம்பி அனுப்புங்கள். அவளுடைய அழகும் ஆட்டமும் இந்தச் சிறு இடத்துக்குள் அடங்கிவிடக்கூடாது. என்னிடம் ஒரு நாடகக் குழு இருக்கிறது. அதில் தங்களுடைய குமாரி…
-
- 4 replies
- 3.5k views
-
-
துட்டகைமுனுவின் வேடத்தில் மேர்வின் சில்வா வீரகேசரி இணையம் 4/16/2011 10:46:36 AM அமைச்சர் மேர்வின் சில்வா திரைப்படம் ஒன்றில் துட்டகைமுனுவின் வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. சுரங்கனா லொவின் எவில்லா (தேவலோகத்திலிருந்து வந்துள்ள..) என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ள திரைப்படம் ஒன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு துட்டகைமுனுவின் பாத்திரம் வழங்கப் படவுள்ளதாம். இதேவேளை அவர் அடிக்கடி தான் துட்டகைமுனுவின் பரம்பரை என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் எல்லாளன் பாத்திரம் ஒன்றும் உள்ளதாகக் கூறப் படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
'ரவுடி ரத்தோர்' படம் கொடுத்த மிரட்டலான வசூலில் கொஞ்சம் தெம்பாக இருக்கும் பிரபுதேவா இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழுக்கு வருகிறார். ஆமாம், ஹிந்தியில் ரிலீஸான ஏ.பி.சி.டி( Any Body Can Dance ) என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப்படத்தை அவர் தமிழில் டைரக்ட் செய்ய மிக ஆவலாக இருக்கக் காரணம் என்னவென்றால் இது ஒரு 3டியில் வெளிவந்த முதல் டான்ஸ் படமாகும். ஹிந்தியில் இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனரான ரெமோ டிசோஸா டைரக்ட் செய்ய, யுடிவி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப்படத்தில் பிரபுதேவாவும் கணேஷ் ஆச்சார்யாவும் நிஜ நடன இயக்குனர்களின் கேரக்டர்களில் நடித்திருந்தார்கள். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெள…
-
- 4 replies
- 801 views
-
-
இப்படியான சினிமா எங்களுக்கு வேண்டாம் : சஞ்ஜயன் நேற்று இங்கிலாந்துத் தமிழர்களின் தயாரிப்பான ”யாவும் வசப்படும்” என்னும் முழு நீ(ல)ளத் திரைப்படத்தை பார்க்கக்கிடைத்தது. அண்மையில் NorTamil.no என்னும் இணையத்தளத்தில் ஈழத்து திரைப்படத்துறையின் இயக்குனர்களில் ஒருவரும், பெரும் அனுபவசாலியும், நோர்வேயில் வாழ்பவுருமான சிவபாலன் காசிநாதர் அவர்கள் ”ஈழத்தமிழரும் சினிமாவும் – ஒரு முதியவனின் சில அனுபவக் குறிப்புக்கள்” என்னும் கட்டுரையில் சிறந்த திரைப்படங்களைப் பாருங்கள், என பலதையும் வகைப்படுத்தி, அவை உங்களுக்கு பலதையும் கற்றுத்தரும் என்று மறைமுகமாக சில கருத்துக்ளை தற்போதைய திரைப்படக்கலைஞர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அவரின் கருத்து மிகவும் கச்சிதமாக ”யாவும் வசப்படும்” குழுவின…
-
- 4 replies
- 927 views
-
-
ஜெயிக்காமலே இருந்திருக்கலாம்- மனம் வருந்தும் ஆனந்த் அரவிந்தக்ஷன்! விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி. பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இத்தனை ஆண்டுகளாக …
-
- 4 replies
- 617 views
-
-
தமிழக முதல்வரை சந்திக்க விரும்பும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்னையில் வரும் 15ஆம் தேதியன்று பிரபல டைரக்டர் ஷங்கர் இயக்கியுள்ள 'ஐ' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதன் சிறப்பு விருந்தினராக பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னருமான அர்னால்ட் ஷ்வாஸ்நெகர் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடுகின்றார். தமிழக முதல்வரைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்னால்டு ஷ்வாஸ்நெகர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது குழுவின் மூலம் தலைமைச் செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார் என்று 'ஐ' படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனிடையில், இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள சம்மதித்த…
-
- 4 replies
- 600 views
-
-
சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட கலைஞர் பாரதிதாசனார் பற்றி பார்ப்போம். பார் போற்றும் பாவேந்தர் "மகாகவி பாரதி நமக்களித்த ஒப்பற்ற உயர்ந்த முதல் பாடலே பாரதிதாசன்" என்கிறார் நீதியரசர் மகாராசன். தமது ஆசான் பாரதியாரை அடியொற்றியே பாவேந்தரும்,"எளிய சொற்கள், எளிய சொற்றொடரழகு, எளிய சந்தம்,மக்கள் மனதில் பதியும்படியான இசை" என்றவாறாக பாடல்களை உருவாக்கினார். அவர் காலத்தின் திரைப்படங்களின் பிற்போக்கினை கண்டித்து ,கவிதையிலேயே ஒரு விமர்சனம் எழுதியுள்ளார் புரட்சிக்கவிஞர். சினிமா பாடல்கள் எழுதுவதில் இவருக்கு ஆர்வமிருந்ததில்லை. சினிமா பாடல்கள் எழுதும்படி வேண்டுபபவரிடம் "சினிமாப் பாட்டுத்தானே,அது கிடக்கட்டும்,எழுதினாப்போச்சு " என்று கூறிவிட்டு, இலக்கியம் சம்பந்தமா…
-
- 4 replies
- 3.1k views
-
-
Nikesha Patel (மேலும் படங்களுக்கு படத்தை அல்லது பெயரை அழுத்தவும் ) Sanya Anaika
-
- 4 replies
- 710 views
-
-
ஒரு படம் எப்படி எடுக்கப்படக் கூடாது என்பதற்கான சகல கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள படம் ‘புலிப்பார்வை’. ஒளிப்பதிவு, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்ட காட்சிகள், இப்படத்தில் இரண்டே இரண்டு காட்சிகள் தான் இருக்கின்றன. ஒன்று – படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சி. அடுத்தது – இடைவேளை முடிந்து படம் மீண்டும் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் காட்சி. இந்த இரண்டு காட்சிகளிலும் நடித்த நடிகர்களுக்கு வசனங்கள் இல்லை என்றாலும், அவர்கள் இவ்விரு காட்சிகளிலும் சிறப்பாக நடித்து தங்கள் திறமையை வெளிபடுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு காட்சிகளையும் அனைத்து திரைப்படங்களிலும், தேவையென்றால் இணையத்தில்கூட பார்க்கலாம். இந்த இரண்டு காட்சிகளும் “புகைபி…
-
- 4 replies
- 1.2k views
-
-
தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்…
-
-
- 4 replies
- 471 views
-