Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய்? வைரமுத்துவின் கேள்விக்கு தாயின் பதில் 3/23/2008 5:38:59 PM வீரகேசரி நாளேடு - சென்னை, என்னை ஏன் கறுப்பாய் பெற்றாய் என்று என் தாயிடம் கேட்டதற்கு, கரியில் பிறந்த வைரம் போல் வளர, வளர வைரமாவாய் என்றார் என் தாய் என கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் சார்பில் புகழ்பெற்ற புத்திரர்களைப் பெற்ற அன்னையர்களை கௌரவிக்கும் வகையில் ""தாய்மைக்கு வணக்கம்'' என்ற விழா சென்னையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள், பேச்சாளர் சுகிசிவத்தின் தாயார் கோமதி சுப்பிரமணியம், கெவின் கேர் தலைவர் சி.கே.ரங்கநாதனின் தாயார் ஹேமா சின்னி கிருஷ்ணன், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் தாயார் இந்திர…

    • 1 reply
    • 1.3k views
  2. முறைப்பையன் தங்கராசுவை பார்வதி காதலிக்கிறாள். காத்திருக்கிறாள். கசிந்துருகி கதறுகிறாள். இதுதான் கதை. ``அந்தப் புள்ளை பாவம்பா. சீக்கிரமா ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு கதைய முடிங்க'' என ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் புலம்பவிட்டு, ``இதெல்லாம் தப்பு... சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறக்குற குழந்தை சுகவீனமாயிடும்''னு பிரசார நெடியுடன் முடிகிறது `பூ'. செம்மண் புழுதி படிந்த சிவகாசி மண்ணுக்கு, புதுமுகம் பார்வதி `பூ' மாதிரி சரியாகப் பொருந்துகிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் மளிகைக்கடை காட்சிகளும், கணவன்-மனைவி அன்னியோன்யமும் `பளிச்'. குறிப்பாக, பார்வதிக்குக் கணவராக வரும் அந்த நபர், வெகுவாகக் கவர்கிறார். இயல்பான காட்சிகளைப் பார்த்து `அடடே...' போட்டுக் கொண்டிருக்கும்போதே த…

    • 0 replies
    • 1.3k views
  3. நடிகை சன்னி லியோன் சமீபத்தில் 'கரென்ஜித் கெளர்' என்ற அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெயர் சர்ச்சைக்குள்ள நிலையில், தமது தொழில் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பிபிசிக்கு சன்னி லியோன் அளித்த நேர்காணல்.

  4. கேபியின் உடல் நிலையும்..... மீடியாக்களின் ‘கொலை’ப் பசியும்! கடந்த சில நாட்களாக சினிமா வட்டாரத்திலும் மீடியாக்கள் வட்டாரத்திலும் பெரிய பரபரப்பு ஏற்படுத்திய செய்தி தமிழ் சினிமாவின் பிதாமகன் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் உடல் நிலை பற்றியதுதான். இது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அதைவிட பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது இந்த விஷயத்தில் சில மீடியாக்களின் அநாரீகமான அணுகுமுறை. இரண்டு நாட்களுக்கு முன் கே.பி அவர்கள் லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆழ்வர்பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சில விஷமிகள் மூலம் வாட்ஸ் அப்பில் கே.பி இறந்து விட்டதாகவே ( மன்னிக்கவும்) பரபரப்பப்பட்டது. உடனே ஒட்டு மொத்த மீடியாக்களும் தங்கள் ஊழியர்களை மருத…

  5. தமிழ் சினிமாவின் மேலுமொரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சம்சார சாகரத்தில் இணைகிறார். 'ரோஜாக்கூட்டம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு அவரது பெற்றோர் பெண் தேடி வந்தனர். வழக்கம்போல, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என டபாய்த்து வந்தார் ஸ்ரீகாந்த். இவரது நழுவலுக்கு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறார் வந்தனா. அண்ணாநகரை சேர்ந்த துபாய் தொழிலதிபர் சாரங்கபாணி. இவரது மகள் வந்தனா. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் குடும்பமும் ஸ்ரீகாந்த் குடும்பமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இரு குடும்பத்தினரும் இணைந்து ஸ்ரீகாந்த், வந்தனா திருமணத்தை நிச்சயித்துள்ளனர். "இது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். வந்தனாவை ஏற்கனவே எனக்கு தெரியும். படித்தவர், அழகானவர், குடு…

    • 3 replies
    • 1.3k views
  6. எமது நடிகை நிரஞ்சனியுடன் ஒரு பரபரப்பு உரையாடல் மணி ஸ்ரீகாந்தன். ‘வடபகுதி தமிழ்ப் பெண்ணாக தோன்றும் என்னை நிர்வாணமாகக் குளிக்கும் காட்சியொன்றில் நடிக்கும்படி என்னிடம் இயக்குநர் கேட்டுக் கொண்டார். தமிழ் பெண்கள் குளியல் ஆடை இல்லாமல் நீராடும் வழக்கம் இல்லை என்றும் அது யதார்த்தத்துக்கு புறம்பானது என்றும் அவரிடம் விளக்கியதும் அவர் காட்சியை மாற்றிவிட்டார்’ இலங்கை சிங்கள திரையுலகில் ரொம்பவும் பிஸியாக இருக்கும் நடிகைதான் நிரஞ்சனி சண்முகராஜா, கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தமிழச்சிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இலங்கையின் முன்னணி இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இயக்கியுள்ள ‘சுனாமி’ படத்தில் நாயகியாக இவர் நடித்துள்ளார். “அட…

  7. பிரபல கன்னட நடிகை யமுனா. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். யமுனாவை பெங்களூர் போலீசார் விபசார வழக்கில் கைது செய்தனர். அவருடன் மேலும் சில அழகிகளும் கைதானார்கள். யமுனா பற்றி ஏற்கனவே போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டு இருந்தன. ஆந்திரா போலீசாரும் யமுனா விபசாரத்தில் ஈடுபடுவதாக தகவல் அனுப்பினர். இதைத் தொடர்ந்து கர்நாடக போலீசார் பொறி வைத்து கைது செய்தனர். யமுனாவிடம் விசாரணை நடத்தியபோது விபசாரத்தில் ஈடுபடும் மேலும் நடிகைகள் பற்றிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் விபசாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். அந்த நடிகைகளின் பெயர் பட்டியலையும் அளித்துள்ளாராம். அவர்களை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தயாராகி வர…

    • 0 replies
    • 1.3k views
  8. ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்! சென்னை: ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். ரஜினி அடிக்கடி மாறுவேடத்தில் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நண்பர்களுடன் உலா வருவது தெரிந்த விஷயம். ஒரு முறை இமயமலை கோவில் ஒன்றில் அப்படி மாறுவேடத்தில் சென்றபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கோவிலில் ரஜினி எளிமையான உடையில் ஒரு தூண் அருகே உட்கார்ந்திருக்கிறார். அப்போது கோவிலுக்கு வந்த 40களில் உள்ள ஒரு பெண் ரஜினியை யார் என்று தெரியாமல் அவரது உடையைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்துவிட்டார். உடனே தனது கைப்பையில் இருந்து 10 ர…

  9. மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன்.‘கும்கி, ‘சுந்தரபாண்டியன், ‘குட்டிப் புலி’ என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களில் நடித்து ஹட்ரிக் அடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ‘ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இதில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக வேடம் ஏற்கிறார். இதற்காக மதுரை சென்ற அவர், நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென்று அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். கடை எப்படி நடத்தப்படுகிறது. கஸ்டமர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கடையின் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்து பயிற்சி பெற்றார். இது பற்றி லட்சுமி மேனனிடம் கேட்ட போது...‘இப்படத்தில் …

  10. வல்லதேசம் திரை விமர்சனம் ஆக்‌ஷன் கதைகளில் பல படங்கள் தமிழ் சினிமாவில் இறக்கப்படுகிறது. பெண்களை மையப்படுத்திய படங்களும் சில வந்துள்ளன. கமர்சியல் படங்களுக்கு நடுவில் ஒரு சில சின்ன பட்ஜெட் படம் போல வந்திருக்கிறது இந்த வல்ல தேசம். இந்த தேசம் எப்படியான தேசம், என்ன சொல்கிறது என பார்க்கலாம். கதைக்களம் வித்தியாசமான பெண்ணான அனுஹாசன், கணவர், தன் குழந்தை அஞ்சலி என சந்தோசமாய் வாழ்ந்து வருகிறார். மேஜர் ஆதிலிங்கமாக வரும் நாசரின் தலைமையின் கீழ் ராணுவத்தில் நன்கு பயிற்சி பெறுகிறார். தமிழ்நாட்டில் ஏதோ பெரிய சதி நடக்கிறது எப்படியோ தெரியவர போலிசார் ராணுவத்தின் உதவியை நாடுகின்றனர். அப்போது படைவீரர்களுடன் அனுப்பப்படும்…

  11. ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம். கதைக்களம் வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது. ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்…

  12. போராளி : விமர்சனத்திற்கு மாற்றாகப் பிறிதொரு பார்வை -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன் பாசாங்குகள் அற்றுச் சொல்வதானால் தமிழ் மனங்களின் ஞாபகத்தில் போராளிகள் எனும் வார்த்தை ஈழ விடுதலைப் போராளிகள் பற்றிக் குறிப்பிடுவதாகத்தான் இருக்கிறது. மிலிட்டன்ட் எனும் ஆங்கிலச் சொல் போரையும், போர்ச்சூழலில், போரோடு வாழும் மனிதனையும் குறிக்கிறது. போராளி எனும் தமிழ்ச் சொல்லும் குறிப்பாகப் போர்ச்சூழலில் வாழுபவன், போரை ஆள்பவன், போரை வாழ்வாகக் கொண்டிருப்பவன் என்பதனையே குறித்து நிற்கிறது. இங்கு போர் என்பது ஒரு சமூகச் செயல்பாட்டுக்கானதாக, சமூகக் கடப்பாடு கருதியதாக, தன் நலன் அல்லாத, ஒரு மக்கள் கூட்டத்தின் நலன் கருதியதாகவே நாம் குறிப்பிடுகிறோம். தன்மறுப்பில் விளைந்த, பிற…

  13. விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து…

  14. லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகள் விபரம் : சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன் சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ் சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை) சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா சிறந்த மேக் ஆப் : லிசா…

  15. சினிமாவில் யாரிடமும் ஆலோசனை கேட்க மாட்டேன் என்றார் நயன்தாரா. இதுகுறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் எனக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்கிறேன். யாருடைய ஆலோசனைகளையும் கேட்பதில்லை. என் மானேஜரிடம் மட்டுமே கலந்தாலோசிப்பேன். இந்த கேரக்டர் செய்யவேண்டாம், கிளாமராக நடிக்காதே போன்ற அட்வைஸ்களை மற்றவர்கள் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட பிரச்னை. தொடர்ந்து கிளாமருக்குத்தான் முக்கியத்துவமா என்கிறார்கள். அப்படியில்லை. கதையையும், உடன் நடிக்கும் ஹீரோ மற்றும் நிறுவனத்தை பொருத்தது அது. நான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிற போது நல்ல கேரக்டர்கள் கிடைப்பதில்லை. பெரிய ஹீரோ, பேனரிலிருந்து கிளாமராக நடிக்கச் சொல்லி கேட்கும் போது, அதை எப்படி மறுப்பது?…

    • 4 replies
    • 1.3k views
  16. நன்றி: facebook.com

  17. நடிப்பு - விஜய், ஸ்ரேயா இயக்கம் - பரதன் (அறிமுகம்) இசை - ஏ.ஆர். ரஹ்மான் (கதை ) எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஓர் இளைஞனின் கதை. ( நடிப்பு) விஜய், ஸ்ரேயா, நமிதா மற்றும் பலர். (சிறுதுளிகள் ) * அப்பச்சன் படத்தை தயாரித்துள்ளார். * தரணியின் உதவியாளரும் 'கில்லி' வசனகர்த்தாவுமான பரதனுக்கு இது முதல்படம். * முதன்முறையாக விஜய்யுடன் ஸ்ரேயா, நமிதா ஜோடி சேர்நதுள்ளனர். * ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். * நமிதாவுடன் விஜய் ஆடும் பாடலொன்றை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர். * 'சொர்க்கம்' படத்தில் இடம…

  18. பதினைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரு பாடல் காட்சி! - ஒளிப்பதிவாளர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி பேட்டி! சனி, 16 பிப்ரவரி 2008( 16:02 IST ) ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி 'ஆலயம்' படத்தின் ஒளிப்பதிவாளர். காசி, லடாக் என்று முக்கியமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்த அவரிடம் அந்த இடங்களின் தனித்தன்மை குறித்து உரையாடினோம். காசியில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன? படத்தோட கதையே காசி பேக்ட்ராப்லதான் நடக்குது. காச அபூர்வமான நகரம். ஒவ்வொரு பகுதிக்கும் அதோட முழுமையான அழகு, தனித்தன்மை வெளிப்படுற காலம்னு ஒண்ணு இருக்கு. காசிக்கு அது பிப்ரவரி, மார்ச். காசியில அது வின்டர் சீஸன். ஊரெல்லாம் புகை மாதிரி பனி படர்ந்திருக்கும். இந்த காலகட்டத்துலதான் ஆஸ்திரேலி…

    • 0 replies
    • 1.3k views
  19. Started by Tamilcowboy,

    www.tamilcowboy.com

    • 1 reply
    • 1.3k views
  20. அமலாபால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்தார். இருவரும் காதலித்து வந்ததாகவும் இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்பொழுது வாஸ்தா நீ வேணுகா என்ற தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் அமலா பாலை தன்னுடைய படத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். இது குறித்து பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறும்போது, அமலா பால் திருமணம் செய்யப்போகிறார் என்பதை பத்திரிகைகளில் பார்த்தபிறகுதான் தெரிந்துகொண்டோம். இப்படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் அமலா திருமணம் செய்துகொண்டால் அது படத்தை பாதிக்கும். எனவே அவரை நீக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம…

  21. விஜயகாந்த் பக்கம் சரியும் திரைப்பட நடிகர்கள் May 20, 2011 வாயை வைத்துக் கொண்டு சும்மா கிடக்காமல் உளறியதால் வடிவேல் பெற்றிருக்கும் தண்டனை மிகவும் பெரியது. சிங்கமுத்து சொன்னதுபோல வடிவேலுவுக்கு கண்டத்து சனி பிடித்துவிட்டது. இது இவ்விதமிருக்க வடிவேலுவுக்கு போட்டியாக காமடி பாத்திரங்களில் நடித்துவந்த நடிகர் விவேக் நேரடியாக விஜயகாந்த் வீடு சென்று அவருக்கு பொன்னாடை அணிந்து வாழ்த்துக் கூறியிருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு திரையுலகம் பாராட்டு விழா நடாத்தியபோது கலைஞர் பட வசனம் பேசி நடித்து கலைஞரை குஷிப்படுத்திய விவேக் தேர்தல் மேடைக்கு வரவில்லை. இப்போது அவர் நேரடியாக விஜயகாந்தை வாழ்த்தியதன் மூலமாக இரண்டு தகவல்களை சொல்லா…

  22. பிறந்து நான்கு மாதங்களாகிறது. இன்னும் சரியாக தனது குழந்தையை பார்க்கவில்லையாம் நடிகர் பிரஷாந்த். குழந்தையை பார்ப்பது ஒரு தந்தையின் உரிமை. அதனை நிலைநாட்ட நேற்று குடும்பநல நீதிமன்றத்துக்கு தனது வக்கீலுடன் வந்தார் பிரஷாந்த். பிரஷாந்தின் மனைவி கிரகலட்சுமி கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்கிறார். என் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என கடந்த மாதம் 24-ந் தேதி கோர்ட்டுக்கு போனார் பிரஷாந்த். அவரையும் அவர் மனைவியையும் ஒன்றாக பேச வைத்தார் நீதிபதி. ஆனால், பலன் பூஜ்யம்! இந்நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றம் வந்தார் பிரஷாந்த். வாரத்திற்கு இருமுறை பொது இடத்தில் வைத்தாவது என் மகனை பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு கொடுக்க வந்தவர் திடீரென தனது மனதை மாற்றிக் கொண்டார். …

  23. "ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ. உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. …

  24. May 11, 1973. 49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது.. காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம். இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை. MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

  25. பிரபல ஹாலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது இரண்டு மார்பகங்களையும் மாஸ்டெக்டோமி மூலம் அகற்றிக்கொண்டுள்ளார். தனக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தை தவிர்ப்பதற்காகவே மாஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை முறைமூலம் மார்பகங்களை அகற்றிக்கொண்டுள்ளதாக ஏஞ்சலினா ஜோலி நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். 6 குழந்தைகளுக்கு தாயான ஏஞ்சலினா ஜோலிக்கு வயது 37. அவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு 87 சதவீதமும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கு 50 சதவீதமும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்தவரை புற்றுநோய் அபாயத்தை குறைத்துக்கொள்வதற்காகவே' மாஸ்டெக்டோமி செய்துகொண்டுள்ளதாக ஏஞ்சலினா கூறுகிறார். கடந்த பிப்ரவரியில் தொடங்கிய சத்திரச…

    • 7 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.