Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்! சகாப்தம் படத்திற்காக சில தினங்களுக்கு முன் மலேசியாவில் உள்ள பினாங் என்ற இடத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக போட் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் கதாநாயகன் சண்முகப் பாண்டியன் ஐம்பது வில்லன்களுடன் 15 போட்டுகளில் இரு நூறு துணை நடிகர்களோடு சேர்ந்து நடுக் கடலில் சண்டைக் காட்சியில் பங்கேற்றார். அந்த சண்டைக் காட்சி ஐந்து கேமிராக்கள் வைத்து பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. மேலும் பிரமாண்டம் சேர்ப்பதற்காக ஹெலிகாப்டர் மூலமாகவும் இந்த சண்டைக் காட்சியைப் படமாக்கினர். இந்த சண்டைக் காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற்றது. தாய்லாந்தைச் சேர்ந்த பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கேச்சா இந்தக் காட்சியை அமைத்தார். …

  2. சிவாஜியால் பெரும் நஷ்டம் - விநியோகஸ்தர்கள் போர்க்கொடி! சிவாஜி படத்தால் தங்களுக்கு ரூ. 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக 3 விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை ஏவி.எம். நிறுவனம் ஈடு கட்ட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். உலகெங்கும் 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளுடன் திரையிடப்பட்ட படம் சிவாஜி. தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. சிவாஜி படத்தை தமிழகத்தில் திரையிட 8 விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கினர். விநியோக உத்தரவாத அடிப்படையில் இப்படத்தை அவர்கள் வாங்கினர். சிவாஜியால் பெரும்பாலான விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் திருச்சி, செங்கல்பட்டு - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி பகுதி விநியோகஸ்தர்கள…

    • 2 replies
    • 1.9k views
  3. Started by arjun,

    ஏனோ நல்ல பிரதி பிந்தியே வந்தது. ஒரு செய்தியுடன் கூடிய நல்ல படம் .தற்போதைய சினிமாக்கள் போல் பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் செங்கல் செய்யும் ஒரு சூழலில் குழந்தை தொழிலாளிகளையும்,அடிப்படை கல்வி இல்லாமையையும் தொட்டு செல்கின்றது .விமல்-இனியா காதலும் இனிமையாக இருக்கின்றது .இசையும் பாட்டுகளும் மிக வித்தியாசமாக இருந்தது மவுனகுருவிற்கு பின் பார்த்த நல்ல படம் .

    • 2 replies
    • 1.1k views
  4. நேற்று வந்த நடிகர் சூர்யா கூட "அகரம் அறக்கட்டளை" தொடங்கி......... ரஜினி என்னும் மகா அரசியல்வாதி : 2014- ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட கடிதத்தை உங்களுக்கு தருகிறேன். சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் ரசிகன் ஒருவன் எழுதும் கடிதம் இது. உங்களை பற்றி பேசினாலும் ஹிட். ஏசினாலும் ஹிட் என்ற கணக்கில் இந்த கடிதத்தை நான் நிச்சியமாக எழுதவில்லை. உங்கள் படங்களை பற்றி நான் இங்கே விமர்சிக்கபோவதும் இல்லை. ஏனென்றால், ஓவர் ஆக்டிங் இல்லாமல், கதைக்கு தேவையான எதார்த்த நடிப்பை தருவதில் தமிழில் உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை என்பது என் கருத்து. "ஆறிலிருந்து அறுபது வரை", "ஜானி" போன்ற படங்களில் உங்களது நடிப்பை பார்த்து விய…

  5. வெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌ல் ‌வீர‌ப்ப‌ன் கதை! செவ்வாய், 17 ஜூன் 2008( 19:53 IST ) இறு‌தி‌யி‌ல் ச‌ந்தன ‌வீர‌ப்பனு‌ம் வெ‌ள்‌ளி‌‌த் ‌திரை‌க்கு வரு‌கிறா‌ர். ‌வீர‌ப்ப‌னி‌ன் சாகச‌க் கதையை‌த் ‌திரை‌ப்படமா‌க்க‌ப் பல‌ர் முய‌ன்றன‌ர். ‌வீர‌ப்பனை ‌வி‌ல்லனா‌க்‌கி ‌விடுவா‌ர்க‌ள் எ‌ன்று அ‌ந்த முய‌ற்‌சிகளு‌க்கு‌த் தடை‌யி‌ட்டா‌ர் ‌வீர‌ப்ப‌னி‌ன் மனை‌வி‌ மு‌த்துல‌ட்சு‌மி. தானே ‌திரை‌ப்பட‌ம் எடு‌க்கவு‌ம் அவ‌ர் முய‌ன்றது த‌னி‌க்கதை. இ‌தி‌ல் ஒரு ‌கிளை‌க் கதையாக நடிக‌ர் ‌பிரகா‌ஷ் ராஜையு‌ம் ச‌ந்‌தி‌த்தா‌ர். இ‌ந்த நெடிய ஓ‌ட்ட‌‌ம் தொட‌‌ங்‌கிய இட‌த்‌தி‌ற்கே வ‌ந்தபோது, ‌திடீ‌‌ர் ‌திரு‌ப்பமாக மு‌ம்பை‌யி‌ல் இய‌க்குந‌ர் ராமகோபா‌ல் வ‌ர்மாவை ச‌ந்‌தி‌த்தா‌ர் மு‌த்துல‌ட்சு‌மி. வ‌ர்மா ‌வ…

  6. இக்கட்டுரை ஆசிரியர் ஷோபா சக்தி ஈழத் தமிழர். பிரான்சில் வசிப்பவர். ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் செயல்பாடுகளில் மனம் கசந்து பிரான்ஸ் சென்றவர். எழுத்தாளர். இவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் தமிழ் இலக்கிய சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சிங்கள பேரினவாதத்துடன் ஆயுத குழுக்களின் அபாயத்தையும், ஈழத் தமிழர்களின் சாதீய கட்டுமானத்தையும் விமர்சனத்துக்குள்ளாக்க தயங்காதவர். இவரது இந்த கட்டுரை சீமானின் 'தம்பி' திரைப்படத்தை குறித்தது என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கால அளவை, எல்லையை கொண்டது. ஆயினும் ஷோபா சக்தி 'தம்பி' யை முன்வைத்து பேசியிருக்கும் தமிழ் சினிமா குறித்த புரிதல், அதன் போக்கு, வணிக நோக்கம் மற்றும் அதன் அரசியல் எல்லா காலத்திற்குமானது என்பது…

  7. பிரேமம் - ஏன் இத்தனை காதல்? கடந்த வாரம் சென்னையில் 200வது நாள் கொண்டாடி இருக்கிறது பிரேமம் என்கிற மலையாளப்படம். அப்படி என்னதான் இருக்கு இதில் இருக்கு என்றுதான் கதையை கேட்ட எல்லாருக்கும் தோணும். ஆண்டாண்டு காலம் அடிச்சுத்துவைச்ச 'பப்பி, பெப்பி, கப்பி' லவ் தான் கதை. சமீப காலத்தில் ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. படம் பெயரோ, ஹீரோவோ, டைரக்டரோ எதுவும் சொல்லத்தேவையில்ல. ஒரே ஒரு வார்த்தை போதும், உங்க உதட்டில் மைக்ரோ, மிக மைக்ரோ புன்னகை வர வைக்க. அந்த வார்த்தை... "மலர் டீச்சர்". வரலாற்றை சற்றே கிளறிப்பார்த்தால் கேரளாவோட தொடர்பிருக்கிற மாதிரி எடு…

    • 2 replies
    • 2.5k views
  8. கனடாவில் கச்சேரி... கலக்கல் விளம்பரங்களில் இசைஞானி! சென்னை: சினிமா மட்டுமின்றி, அதைத் தாண்டி மேடைகளிலும் முழுவீச்சில் கவனம செலுத்த ஆரம்பித்துள்ளார் இசைஞானி. கடந்த ஆண்டு சென்னையில் என்றென்றும் ராஜா என்ற தலைப்பில் 5 மணி நேரம் மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்த முறை வெளிநாட்டில் கனடாவின் டொரன்டோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சிக்குப் பெயர் ‘எங்கேயும் எப்போதும் ராஜா'. இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் வெள்ளைக் கோட் - சூட் அணிந்து அட்டகாசமாகக் காட்சி தருகிறார் இளையராஜா. முழுக்க முழுக்க வாத்தியங்களைக் கொண்டு இசைக் கலைஞர்கள் மட்டுமே வாசிக்கும்படி இந்த நிகழ்ச்சி வடிவமைத்துள்ளார் ராஜா. 100 இசைக்கலைஞர்களுடன் செல்லும் அவர், வரும் …

    • 2 replies
    • 665 views
  9. இந்த வயதிலும் நாட்டியத்தில் அளவு கடந்த ஆசையில் மேடையில் ஆடிக்கொண்டு இருக்கிறார் நிர்மலா. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்காக சிதம்பரம் வந்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பரத நாட்டியம் ஆடுவதால் உடல்வலிமை, உற்சாகமும் இருக்கும். இதை மறந்தவிட்டு, நம்மிடையே மேற்கத்திய நடன கலாச்சாரம் அதிகமாகியுள்ளது. இக்காலக்கட்டத்திலும், பரத நாட்டியத்தை முறைப்படியாக கற்றுக்கொள்ள இளம் தலைமுறைகள் சிலர் வருகின்றனர். நான் சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நிர்மலாஸ் அகாடமி பைன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் பரத நாட்டிய பள்ளி அமைத்து மாணவ, மாணவிகளுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகின்றேன். பரத நாட்டியத்தை முறைப்படி இ…

  10. கஞ்சா கருப்புவின் அதிரடிப் பேட்டி "ரகசியாவின் உதட்டை தெரியாத்தனமாகத்தான் கடிச்சேன்" வேல்முருகன் போர்வெல் என்ற கஞ்சா கருப்புவின் சொந்தப்படப்பிடிப்பில் அவரை நேரில் சந்தித்து எடுக்கப்பட்ட பேட்டி மணி ஸ்ரீகாந்தன் வசதி வாய்ப்புகள் வந்து விட்டால் தனது நடை, உடை பாவனைகளை மாற்றிக் கொள்ளும் எத்தனையோ மனிதர்களை நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சிலர் அதற்கு விதிவிலக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர்தான் நடிகர் கஞ்சா கருப்பு. விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து பெயரும், புகழும் பெற்றிருந்தாலும் இன்றும் அவர் மனதளவில் மிகவும் எளிமையாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஜீன்ஸ், டீ ஷர்ட், பெஷன் உடைகள…

    • 2 replies
    • 4.7k views
  11. Started by kurukaalapoovan,

    இது படமாக கடந்தவருடம் வெளியிடப்பட்ட விபரணம். இதன் முக்கிய பங்கை வகித்த அல் கோர் இற்கு இந்தக் கிழமை நோபல் பரிசும் ஜநாவின் சுற்றுச்சூழல் மாற்றங்கள் பற்றிய குழுவோடு இணைத்து வழங்கப்பட்டிருந்தது. http://en.wikipedia.org/wiki/An_Inconvenient_Truth இதில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒவ்வொரு நிமிடமும் பலனுள்ள தகவல்களை சாதாரணமானவர்களிற்கு உறைக்கக் கூடி முறையில் அதே நேரம் சுவாரசியமாகவும் வழங்கப்படுகிறது. அல் கோர் உலகம் வெப்பமாதலை நிராகரிக்கும் தரப்பினரின் இன்றை பிரச்சார யுக்திகளை புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என்பதை நிராகரித்துக் கொண்டிருந்து சிக்கெரெட் கொம்பனிகளின் முயற்சிகளோடு ஒப்பிட்டுள்ளார். அடுத்து நாம் உலகம் வெப்பமாதல் சடுதியாக நிகழாது மெதுவாக நிகழ்வதா…

  12. பொழுதோட கோழி கூவுற வேளை... என்று சினிமாவில் மட்டுமே பாடிக்கொண்டிருக்கிற திருநங்கைகளின் (அரவாணிகள்) வாழ்வில், விடியலை சொல்ல ஒரு கோழியும் கூவுவதில்லை என்பதுதான் வேதனை! இந்த வேதனைக்கு மருந்து போடுகிற விதத்தில், பொழுதுபோக்கு மீடியாவிற்கு கம்பீரமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார் ரோஸ்! தான் அரவாணி என்பதே அவரே வாய் திறந்து சொன்னால்தான் அறிய முடிகிறது. நேரில் பார்த்தால் மாடல் மங்கைகளுக்கே மூச்சிரைக்கும்! அப்படி ஒரு அழகு! சின்னத்திரை உலகில் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் விஜய் டி.வி, ரோஸ் மூலமாக அரவாணிகளின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. என்ன செய்யப்போகிறார் ரோஸ்? வாழ்க்கையை ஒட்டிய அத்தனை விஷயங்களையும் அலசப் போகிறார். 'லேட் நைட் ஷோ' என்ற சப்…

  13. சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா !! திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?! திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார். இசைஞானி கொளுத்தும் வெயிலில் ப…

  14. இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் கொண்டாடுவர்: '2.0' குறித்து ரஜினி '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக…

  15. கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் பாராட்டிற்குரியவர்கள். இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார். 1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம் 12 நாட்களிலேயே அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இதன் மூலம் இந்தப் பட…

    • 2 replies
    • 1.2k views
  16. நடிப்புக்கு முழுக்கு போடும் கமல்ஹாசன் அ-அ+ மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்த பிறகு நடிக்க மாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். #Kamal #Kamalhaasan நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை விரைவில் வெளியிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தபோது அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். எனவே, இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. …

  17. Started by kurukaalapoovan,

    இந்தப்படத்தின் பெயரையும் முகப்புப் படத்தையும் பார்த்தவுடன் நான் நினைத்தது அமொரிக்கா தனது புகழ்பாடும் வழமையான விளம்பரப்படமாக இருக்கும் என்று. ஆனால் இது உண்மைச்சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட Flags of Our Fathers என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. புத்தகத்தை எழுதியவர் James Bradley. புத்தகத்தை எழுதியவரின் தந்தையான கடற்படையின் களமுனை வைத்தியரும் 2 அமெரிக்க ஈரூடகப் படையினரும் 2 ஆம் உலகமா யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அரசு தனது மக்களிடம் போர்க்கால கடன் அடிப்படையிலான நிதிதிரட்டல் (war bonds) முயற்சியில் முக்கிய கதாநாயகர்கள் ஆனார்கள். அமெரிக்கப்படைகள் யப்பானை ஆக்கிரமிப்பதற்கு முன்னோடியாக Iwo Jima என்ற தீவை கைப்பற்ற முடிவெடுத்தது. அதுவே அமெரிக்கா யப்பானியர்களை அவர்களத…

    • 2 replies
    • 1.5k views
  18. கபாலி – திரைவிமர்சனம் 25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டத…

  19. http://tamil.thehindu.com/cinema/cinema-gallery/film-events/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/article6777570.ece?photo=25

  20. இனிய நண்பர்களே. திரைப்படங்கள் எல்லாமே எம் மனதில் பதிவுகளை விட்டுச் செல்வதில்லை. ஆனாலும் சில திரைப்படங்கள், மனதை ஊடுருவி தத்தம் தனித்துவத்தை நிலைநாட்டி சென்றுவிடுகின்றன. அந்த வகையில், என் மனதைக் கவர்ந்த ஒரு திரைப்படம் “சங்கராபரணம்”. இது 1979ல் தெலுங்கில் வெளிவந்தது. கர்நாடக இசை மீது பிரியம் உள்ளவர்களுக்கு இது ஒரு இனிப்பான பட்ஷணம். இதில் “சங்கராபரணம் சங்கர சாஸ்த்திரிகளாக” வரும் சோமையஜுலு நடிக்கவே இல்லை; வாழ்ந்தே இருக்கிறார். இவரின் பேச்சும், மௌன மொழிகளும் அற்புதம். இசை, காதல் என்பன மிக அற்புதமாக நெய்யப்பட்ட ஒரு காவியம் இது. இசை மேதை தனக்கு தகுந்த சீடனை தேர்வு செய்வதிலும், சீடனின் குருபக்த்தியும் விவரிக்கப் பட்டிருக்கும் விதம் அற்புதம். “மானஸ சஞ்சரரே” எனு…

  21. வடிவேலு என்ற பெயரைக் கேட்டாலே தமிழர்களுக்கு உற்சாகம் கொப்பளிக்கும். சினிமாவில் அவருக்கு நீண்ட இடைவெளி விழுந்துவிட்டாலும் இன்னமும் நகைச்சுவை சேனல்களின் நாயகன் வடிவேலுதான். பலரின் இரவு, வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரசித்து சிரிப்பதிலேயே முடிகிறது. தொடக்கத்தில் ‘கறுப்பு நாகேஷ்’ என்ற அடையாளத்துடன் கிராமத்து அப்பாவி இளைஞன் கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த வடிவேலு, குறுகிய காலத்திலேயே சுதாரித்துக்கொண்டு தனக்கான தனித்துவமான பாணியையும் பாத்திரங்களையும் வடிவமைத்துக்கொண்டார். வடிவேலுவை ஒருவகையில் சிவாஜிகணேசனோடு ஒப்பிடலாம். விதவிதமான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் விதவிதமான கெட்டப்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டியவர் சிவாஜி. அதேபோல் ஒரு பா…

  22. ஹரி நாடாருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார்: புதிய படம் பூஜையே போட்டாச்சு..! கழுத்திலும் கைகளிலும் கிலோ கணக்கில் தங்க நகைகளுடன் வலம் வரும் ஹரி நாடார், தமிழ்த் திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் இடத்தில் இவருடன் ஜோடி சேரப் போகிறவர் வைரல் ராணி வனிதா விஜயகுமார். கிலோ கணக்கில் அணிந்திருக்கும் ஆபரண அணிகலன்களாலேயே மிகவும் பிரபலமானவர் ஹரி நாடார். இவர், ‘பனங்காட்டுப் படை’ எனும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா உலகத்திற்கு ஹரி அறிமுகமாகிறார். ஹரி நாடாரின் தயாரிப்பு நிறுவனமான ‘அண்ணாச்சி சினி மார்க்’ தயாரிப்பில், முத்தமிழ் வர்ம…

  23. அவ்வை சண்முகியில் நடித்த குட்டிப்பாப்பா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா? . அவ்வை சண்முகியில் நடித்த அழகு குட்டிச் செல்லத்தை ஞாபகமிருக்கிறதா? அவர் பெயர் ஆன். இப்போது என்ன செய்கிறார்? எங்கே இருக்கிறார்? இதே சென்னையில்... தான் உண்டு... நாய்க்குட்டிகள் சூழ்ந்த தன் தனிமை வாழ்க்கை உண்டு என ஆரவாரமின்றி இருக்கிறார் ஆன். ஆனைப் பார்க்கிறவர்களுக்கு அவரை நிச்சயம் அடையாளம் தெரிய வாய்ப்பில்லை. அவ்வை சண்முகியில் கொழுக் மொழுக் பார்பி பொம்மையாக அட்டகாசம் செய்தவர், இன்று சைஸ் ஸீரோ ஸ்மைலி. ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி இருக்கிறார். தேடிக் கண்டுபிடித்து 'ஹாய்... ஹலோ' சொன்னால், படத்தில் பார்த்த அதே உற்சாகத்துடன் வரவேற்கிறார் ஆன். ''20 வரு…

  24. 86வது ஆஸ்கார் விருதுகள் அறிவிப்பு! லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஆஸ்கார் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவின் 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்துக்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு 'தி கிரேட் கேட்ஸ்பை" படத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.