ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
நாட்டில் அன்றாடம் 64 இலங்கையர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத் துறை, நாளொன்றுக்கு 38 உயிரிழப்புகள் பதிவாகுவதாகவும் கூறியுள்ளது. 2008 முதல் இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது மற்றும் இலங்கை புற்று நோயாளர்களில் 16 சதவீதம் பேர் வாய்வழி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபதிரண தெரிவித்தார். மேலும், புற்றுநோய் நோயாளிகளை அடையாளம் காண நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலையிலும் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். https://www.virakesari.lk/article/90892
-
- 0 replies
- 337 views
-
-
தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கரை, அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில்வைத்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் சாரா என்ற குண்டுதாரி உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதாவது குறித்த…
-
- 4 replies
- 861 views
-
-
ஆசிரியர்களினது விபரங்களை திரட்டும் பொலிஸார் – அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது என தொழிற்சங்கம் குற்றச்சாட்டு பொலிஸார் ஆசிரியர்களினது விபரங்களை திரட்டிவருகின்றனர் என இலங்கை ஆசிரியர் சேவை என்ற தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. ஆசிரியர்களின் விபரங்கள் தொழிற்சங்க ஈடுபாடுகள் அவர்களது அரசியல் தொடர்புகள் குறித்த விபரங்களை பொலிஸார் அதிபர்கள் ஊடாக திரட்டுகி;ன்றனர் என தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை பொலிஸார் ஆசிரியர்களையும் அதிபர்களையும்அச்சுறுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளரிடம…
-
- 0 replies
- 320 views
-
-
தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் - சிவாஜிலிங்கம் அறைகூவல் (எம்.நியூட்டன் ) தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கட்சிகள் தொடர்ச்சியாக ஒற்றுமையுடன் பயணிக்கவேண்டிய தேவையை நாங்கள் உணர்கின்றோம் எனத் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நாங்கள் ஒற்றுமையாக பயணிப்போம் என்பதை உரிமையுடன் கூறிக் கொள்கிறோம் எனத் தெரிவித்தார் ஐனநாயக அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு மக்களின் ஒற்றுமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் இனத்தின் விடுதலைக்…
-
- 0 replies
- 345 views
-
-
சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2019/12/R.Sanakiyan.jpg தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர…
-
- 1 reply
- 582 views
-
-
இலங்கைக்கு பெருமளவு ஆயுததளபாடங்களை வழங்க இந்தியா திட்டம்-பாதுகாப்பு தேவைகளுக்காக 50 மில்லியன் டொலர் கடனையும் வழங்குகின்றது இலங்கையின் பாதுகாப்புதுறைக்கு 50மில்லியன் கடனை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இந்தியாவின் எகனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்து சமுத்திரபிராந்தியத்திலும் வங்களாவிரிகுடாவிலும் சீனாவின் அபிலாசைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த பகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வருப்படுத்துவதற்கு சனிக்கிழமை உச்சிமாநாட்டில் தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்தியாவின் இலங்இலங்கை பாதுகாப்பு துறையை நோக்கி இந்த சைகை அமைந்துள்ளது என எகனமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடனடிப்…
-
- 2 replies
- 465 views
-
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இவ்வாறு 10 தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளன…
-
- 0 replies
- 472 views
-
-
மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை; புதிய அமைப்பு யாழில் ஆரம்பம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார். ஆயினும் தானே அமைப்பின் தேசிய அமைப்பாளராகத் தொடர்ந்தும் செயற்படுவேன் என்று மணிவண்ணன் கூறினார். இதனை அடுத்து கட்சி உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில் மணிவண்ணனைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை…
-
- 7 replies
- 1.3k views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உடன்பட்டமைக்குப் பதிலாகவே இந்தியாவினால் அந்த நிதி வழங்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணைவழி மாநாடொன்று நடைபெற்றது. இதன்போது இருநாடுகளினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. எனினும் அதுகுறித்து வெளியான செய்திகளில் சில பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவைகுறித்த…
-
- 1 reply
- 470 views
-
-
வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் – முடங்கியது யாழ்ப்பாணம் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (திங்கட்கிழமை) வடக்கில் முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறித்த அழைப்பிற்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி தமது ஆதரவினை அளித்துள்ளார்கள். அதற்கமைய யாழ்ப்பாணத…
-
- 4 replies
- 870 views
-
-
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் அரசுக்கு எதிராக வட,கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இராணுவத்தின், பொலிஸார் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து சில கடைகளை திறக்க செய்துள்ளனர். அச்சுவேலி பகுதியில் கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில் அங்கு சென்ற வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோசுக்கு பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்துக்கு முன் இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ உயரதிகாரிகள் சொகுசு வாகனங்களில் அப்பகுதியில் பிரசன்னமாயிருந்தனர். சந்தி…
-
- 0 replies
- 436 views
-
-
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார். இன்றய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக்கலவரங்களினாலும், போரிலும், போர்க்காலத்திலும், போராட்டங்களிலும் தம…
-
- 1 reply
- 334 views
-
-
நாட்டில் இன்றையதினம் திங்கட்கிழமை மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில், அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை மற்றும் இரணவில வைத்தியசாலையிலிருந்து தலா ஒருவர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,210 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் 3,360 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 137 பேர் நாடு முழுவதும் உள்ள 05 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன் 38 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். இ…
-
- 0 replies
- 344 views
-
-
(நா.தனுஜா) இலங்கைக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட 21 கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டமையைப் பாராட்டியிருக்கும் நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம், அமெரிக்காவும் ஐரோப்பாவும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கழிவுப்பொருட்களை அனுப்புவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். கழிவுப்பொருட்கள் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் இலங்கையினால் மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திலிருந்து 263 கழிவுப்பொருள் கொள்கலன்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 21 கொள்கலன்களே இவ்வாறு மீண்டும் திருப்பி அனுப்ப…
-
- 0 replies
- 243 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது By BATTINEWS MAIN (ரீ.எல்.ஜவ்பர்கான்) மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை இலங்கை தமிழ் அரசுக்கட்சி உட்பட பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு நகரம் வாழைச்சேனை செங்கலடி களுவாஞ்சிக்குடி உட்பட பல தமிழ் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. போக்கு வரத்துச் சேவைகள் இடம்பெற்றன.உண்ணாவிரதமிழுந்து மரணமாக முன்னாள் விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் திலீபனின் நிவைவு தினத்தை அனுஸ்டிக்க அரசு மறுத்தமையைக் கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஸடடிக்கப்படுவதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி தெரிவித்துள்ளது.இது …
-
- 1 reply
- 524 views
-
-
எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது, எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுக…
-
- 35 replies
- 2.8k views
-
-
பலத்த பாதுகாப்புடன் பிள்ளையான் கொழும்பிற்கு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டார். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காகவே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்…
-
- 6 replies
- 1.1k views
-
-
வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் ;வவுனியாவில் கடைகளைத் திறக்கக்கோரி பொலிசார் அட்டகாசம் வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான நிலமை ஒன்று ஏற்பட்டிருந்தது. எனினும் பொலிசார்…
-
- 0 replies
- 478 views
-
-
கோட்டாபய -மகிந்த இடையே வெடித்தது பனிப்போர் -புபுது ஜயகொட கண்டுபிடிப்பு அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் வர்த்தமானியில் வெளியாகிய 20 ஆவது திருத்தத்தை மீளாய்வு செய்ய பிரதமர் 9 பேர் அடங்கிய மீளாய்வு குழுவை நியமித்தார். 20 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் தான் திருத்தம் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவுகள் நாளாந்தம் உயர்வடைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் 20 ஆவது திருத்தத்தினால் அரசாங்கம் முரண்பாட்டுடன் செயற்படும் போது அதன் விளைவையும்…
-
- 0 replies
- 473 views
-
-
கொரோனா வைரஸ்: சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான முழுமையான விபரம் ஒக்டோபரில் வெளியிடப்படுமென அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் YICAI ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 2 ஆம் …
-
- 11 replies
- 1k views
-
-
சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாகாண சபைகள் மாற்றியமைக்கப்படும்?- சரத்வீரசேகர மாகாண சபைகளை சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற யோசனை தன்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபைகளின் எல்லைகளை பண்டைய காலத்தில் காணப்பட்ட ராஜ்ஜியங்களின் அடிப்படைகளில் மீளவரையறை செய்யவேண்டும் என்ற யோசனை எமக்கு கிடைத்துள்ளது. அதாவது மாகாண சபைகளை, சிங்கள வரலாற்று ராஜ்ஜியங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கவேண்டும் என்றே பெரும்பாலானோர் யோசனை முன்வைத்துள்ளனர். மேலும், தற்போதைய மாகாண சபை முறையை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. …
-
- 18 replies
- 3k views
-
-
கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் சிறீலங்காவில் குறைவடைந்திருந்த டெங்கு நோய் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக சிறீலங்கா டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது டெங்கு நோயின் தாக்கம் சிறீலங்காவில் மிகவும் குறைவடைந்திருந்தது. ஆனால் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 மாதங்கயில் 30 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர். கோவிட்-19 நோயின் தடுப்பு முறைகளால் டெங்கு நோயின் தாக்கம் இந்த வருடம் குறைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.ilakku.org/கிழக்கு-மாகாணத்தில்-டெங்/
-
- 0 replies
- 425 views
-
-
நாடாளுமன்றில் மக்களின் பிரச்சினைகளை அதிகம் பேசுகிறார் டக்ளஸ்..! நாடாளுமன்றத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நலன் சார் பிரச்சினைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம் பெற்ற நிதி அறவீடுகள் தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்தனினால் குறித்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் - " பொது மக்கள் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றில் கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வரையறைகளும் கிடையாது " எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தினமும் பல்வ…
-
- 18 replies
- 1.7k views
-
-
திருகோணமலைக்கு கப்பலில் வந்த 17 பேருக்கு கொரோனா உறுதி திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது. இந்த நிலையில், கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து, கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகளும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க கலந்துரையாடல்கள்…
-
- 0 replies
- 413 views
-
-
மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை கைது செய்யுங்கள் – கூட்டமைப்பு வேண்டுகோள் மட்டக்களப்பில் வன்முறையில் ஈடுபட்டு வரும் பிக்குவை உடனே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்றைய தினம் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தலைமையில் சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் , மட்டக்களப்பு மங்களராம விகாரையின் புத்தபிக்கு அம்பிட்டிய சுமணரத்ண தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கோரிக்க…
-
- 4 replies
- 625 views
-