Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நா தீர்மானத்தில் மாற்றமில்லை – ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைத்தலைமை நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் அப்படியே தான் உள்ளது. அதில் இருந்து சிறீலங்கா விலகினாலும் தீர்மானத்தில் மாற்றம் வராது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் கூட்டத்தொடரில் அது விவாதிக்கப்படும். இனநல்லிணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது என சிறீலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டெனிஸ் சையபி கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ”எமது தரப்பில் ஜேர்மனியே இந்த தீர்மானத்தின் பங்குதாரராக உள்ளது. நாம் அதில் பிரதான பங்கெடுக்கவில்லை. சிறீலங்கா அரசின் முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம். சிறீலங்கா …

  2. அனலைதீவு மீன்பிடி படகுத் துறை மக்களிடம் கையளிப்பு அனலைதீவு கடற்தொழிலாளர் சங்க வேண்டுகோளிற்கமையவும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கமையவும் j/38 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் பயனுறும் விதமாக அனலைதீவு தெற்கில் புனரமைக்கப்பட்ட மீன்பிடி படகுத் துறை, நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேற்படி மீன்பிடித் துறையை ஆழப்படுத்தல் திட்டமானது கடற்தொழிலாளர் சங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு செயற்குழுவின் செயலாளர் திரு.தவசெல்வம் சிற்பரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலுக்கமைய ரூபா. 5 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு மீனவர்களிடம் வைபவ ரீதியாக கையளிப்பு செய்யப்பட்டுள்ளது…

  3. தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டிலான 20ஆவது திருத்தம் குறித்த ஆய்வரங்கு SayanOctober 4, 2020 இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான ஆய்வரங்கு யாழில் நடைபெற்றது. தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொடக்கவுரையை ஆற்றியதுடன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான கோசலை மதன் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, 20ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் அரசியல் விளைவ…

  4. நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் - இரா.சாணக்கியன் Admin (ரூத் ருத்ரா)நாங்கள் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி என்ற பாதையில் தொடர்ச்சியாக செல்வோம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகத்தினால் பிரதேச கழகங்களுக்கிடையே கடினப் பந்து சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கழகத் தலைவர் சி.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இரா. சாணக்கியன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது, காணாமல் ஆக்கபட்டவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின…

  5. சமஷ்டி தீர்வுகான கருவியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இருக்கிறது – முழுமையாக அமுல்படுத்த இந்தியாவை வலியுறுத்துகிறார் விக்னேஸ்வரன் இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு சமஷ்டி தீர்வினை இந்தியாவின் உதவியுடன் வென்றெடுப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கமுடியாது என்றும் ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். முழுமையான பேச்சின் விபரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. “இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங…

  6. நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது கம்பஹாவில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று இன்று சற்றுமுன்னர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதேவேளை கம்பஹாவில் தனியார் கல்வி நிலையங்களும் நாளை முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.இதன்படி 9ம் திகதி முதல் ஆரம்பிக்க இருந்த 2ம் தவணை விடுமுறை நாளை (05) ஆரம்பிக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பகுதியில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் ஒவ்வொரு இலங்கையர்களும் கொரோனா தொற்று நோயின் தீவிரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக…

  7. அரசையும், சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள். அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில் நடந்தால் அவர்களிற்கான அரசியல் தீர்வு தானாகவே கிடைக்கும். ஆனால் அந்த தீர்வு ஒற்றையாட்சி தீர்வாகவே இருக்கும். அதையும் அவர்கள் உதறி எழுந்தால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழர்கள் செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமக்கான தீர்வை கேட்க வேண்டி வரும் என சபை முதல்வரும், வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியலமைப்பை மதித்து, அரசை மதித்து தமிழர்கள் நேர்வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் ஒன்று நடந்திருக்க வாய்ப்பே …

    • 89 replies
    • 6.3k views
  8. இருபதாவது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம்.கே.கே.மஸ்தான். இருபதாவது திருத்தத்தையும் மக்களுக்கு நன்மை பயக்குமாறு செய்து தருவோம் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதியின் விசேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக கற்குளம் படிவம் 1,2,3,4 ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதான வீதி புனரமைப்பிற்கு 78 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப பணிகள் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்…

    • 1 reply
    • 657 views
  9. வனஜீவராசிகள் திணைக்களம் அடாவடி..! சொந்த காணியில் விவசாயம் செய்த 14 விவசாயிகள் கைது, அலுவலகத்தை முற்றுகையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் தமது சொந்த காணிகளில் வயல் விதைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த 14 விவசாயிகள் வன வள ஜீவராசிகள் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விவசாயிகளிடம் காணிகளை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் உள்ள போதும் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தை முற்றுகையிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் விவசாயிகள் இணைந்து தமது எதிர்ப்பை காண்பித்துள…

  10. தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் தீர்வும் தானாக வந்து சேரும்.! - ராஜபக்ச அரசு அறிவுரை.! இலங்கை மூவினத்தவர்களுக்கும் சொந்தமான நாடு. இங்கு தமிழர்கள் அரசை மதித்து - அரசமைப்பை மதித்து நேர் வழியில் நடந்தால் அவர்களுக்கான அரசியல் தீர்வும் தானாகவே கிடைக்கும்." - இவ்வாறு சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டின் அரசமைப்பை மதித்து - அரசை மதித்துத் தமிழர்கள் நேர் வழியில் நடந்திருந்தால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பல இழப்புகளையும் தமிழர்கள் சந்திக்க வேண்டி வந்திருக்கமாட்டாது. நாம் எமது படை வ…

    • 6 replies
    • 1.1k views
  11. இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் 39 வயதான பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதேவேளை, அந்த வைத்தியசாலையைச் சேர்ந்த பணியாளர்கள் 15 பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய நிறுவனத்தைச் சேர்ந்த 45 பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/பிர…

  12. தமிழரசுக் கட்சியின் மட்டு- அம்பாறை சிறப்பு பொறுப்பு தலைவராக செல்வராசா நியமனம்! By Staff Writer II இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சிறப்பு பொறுப்பு தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த துணைத்தலைவருமான பொன்.செல்வராசா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக இதுவரை பதவி வகித்து வந்த கி.துரைராசசிங்கம் இதுவரை கிழக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமது விருப்பத்துடன் பதவி விலகியதால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழரசுகட்சியின் செயல்பாடுகளை தீவிரமாக முன்னெடுக்கும் படி தலைவர் மாவை சேனாதிராசாவால் பணிக்கப்பட்டு இந்த சிறப்பு பொறுப்பு தலைவர் பதவி பொ.செல்வராசா…

  13. ரிஷாத்தின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமா ? - மெல்கம் ரஞ்சித் (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார். விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிர…

    • 4 replies
    • 852 views
  14. யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசுவதைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது பசு வதைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து சிலர் பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெ…

  15. தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முன்னேற்பாட்டு கலந்துரையாடல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் பெற்றுள்ளது. தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைப்பதுடன், சம நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பதிவு செய்யப்படும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளை ஒன்றிணைக்க கடந்த சில வாரங்களாக பகிரங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. எனினும், கடந்த பொதுத்தேர்தலிற்கு சற்று முன்னதாகவும், தேர்தலின் பின்னதாகவும் திரைமறைவில் பேச்சுக்கள் ஆரம்பித்த விடயத்தை அப்போதே தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. தமிழ் கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் அப்போதிருந்தே திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக “ஒரேயொரு தியாகி“யென தமிழ் தேசிய ப…

  16. கிழக்கு மாகாணத்தில் தீவிரப்படுத்தப்படும் தொல்லியல் செயற்பாடுகள் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற நாமம் இன்று உலகளவில் உச்சரிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்ற காரணத்தினால் தமிழர்களின் தாயகப்பகுதியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய நிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில், வடகிழக்கு தமிழர்களின் தாயகம் இல்லை என்பதை நிறுவும் தீவிர முயற்சியில் பௌத்த பேரினவாதம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினை தமிழர்களின் தாயகம் என்ற உச்சரிப்பில் இருந்து முற்றாக நீக்கும் நடவடிக்கையினை புதிய அரசாங்கம் மிகவும் திட்டம் போட்டு முன்னெடுத்து வருகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற காலம் தொடக்கம் வடகிழக்…

    • 11 replies
    • 1.7k views
  17. பிரதமர் மஹிந்த என்னை ஏமாற்றிவிட்டார்; அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தன்னைத் தொடர்புகொண்டு பேசுவார் என நினைத்தபோதிலும் அது இதுவரை நடக்கவில்லை என மட்டக்களப்பு மங்களராமைய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- “கடந்த 21ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் நான் முன்னெடுத்த நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. என்னோடும் அவர்கள் பேசினார்கள். இது குறித்து நீதிகிடைக்குமா என்பது குறித்து நாம் பார்த்து கொண்டுள்ளோம். நியாயம் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இந்த நாட்டின் பௌத்த கலாசார…

    • 3 replies
    • 756 views
  18. புங்குடுதீவில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்த கும்பல் யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் வீடு புகுந்து பூசகரை அடித்துக் கொலை செய்துள்ள கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றது என்று ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவில் பல ஆலயங்களில் பூஜை செய்யும் அவர், மாடு வெட்டுவதற்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்ததுடன், பொலிஸாருக்கும் தகவலை வழங்கி அவற்றைக் கட்டுப்படுத்தி வந்தார…

  19. மாவை கொடுத்த ராஜினாமா கடிதத்தை துரைராஜசிங்கம் மறைத்து வைத்தாரா? குலநாயகத்தின் கடிதம் அம்பலப்படுத்திய விடயங்கள் Bharati October 3, 2020மாவை கொடுத்த ராஜினாமா கடிதத்தை துரைராஜசிங்கம் மறைத்து வைத்தாரா? குலநாயகத்தின் கடிதம் அம்பலப்படுத்திய விடயங்கள்2020-10-03T05:24:01+05:30 “தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தான் பதவி விலகுவதாக எழுதிய கடிதத்தைத் தங்களிடம் தந்தபோது, அதனை மத்திய செயற்குழுவில் அல்லது அரசியல் குழுவில் சமர்ப்பிக்காது மறைத்து வைத்திருந்தீர்கள். ஓராண்டுக்குப் பின்னரே சேனாதிராசா கூறி மற்றவர்களுக்குத் தெரியவந்தது” என தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கி.துரைரட்ண…

  20. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி -கனகராசா சரவணன்- மட்டக்களப்பு பொலிசாரால்; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது தவறான செயல் என நீதிபதி தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். …

    • 2 replies
    • 886 views
  21. மகாத்மா காந்தியின் 151வது பிறந்த தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியின் நினைவு தூபியில் இன்று (02) அனுஷ்டிக்கப்பட்டது. யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந்நிகழவில் காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்ளான சுரேஸ் பிரேமசந்திரன், ஈ.சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், மாவை சோ.சேனாதிராசா, மாகாண சபை அவைத் தலைவர் சிவஞானம், முன்னாள், மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், எதிர்கட்சி தலைவரின் இணைப்பு செயலாளர் உமாசந்திரா பிரகாஷ், யாழ் பல்கலைகழக துணைவேந்தர் சிறிசற்கு…

    • 11 replies
    • 1.4k views
  22. காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறுசிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என்று வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (02) வருகைதந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும், “வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானது அல்ல. யுத்தகாலத்தின் போது காணாமல் போனவர்கள், மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது. குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகள…

  23. “தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.” இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும், “பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https:/…

    • 24 replies
    • 1.9k views
  24. 13வது திருத்தம் பற்றிய அனுபவங்கள் – கருத்துக்களை பகிர்வது எனது கடமை - விக்னேஸ்வரன் October 2, 2020 கேள்வி: ‘இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் இன்றைய நிலையும் இந்தியாவின் பங்கும்’ என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய வெளிநாட்டு சேவைகள் அதிகாரி நடராஜன் ஆகியோருடன் காணொளி உரையாடல் ஒன்றில் வரும் ஞாயிரன்று நீங்கள் ஈடுபடப் போவதாக அறிந்தோம். இந்த உரையாடலில் நீங்கள் கலந்துகொள்வதன் மூலம் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டர்கள் என்பதாகுமா? 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக…

  25. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக சத்தியலிங்கம் October 2, 2020 இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் பதவிவிலகியதனை வெற்றிடமாக காணப்பட்டு வந்த பொதுச்செயலாளா் பதவிக்கே அவா் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளாா். கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.