ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
Published By: VISHNU 31 JUL, 2024 | 03:13 AM யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் மூலம் அதிகபட்ச நீதியை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில், பாதுகாப்பு அமைச்சு நாட்டை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மக்களுக்கு சிறந்த பாதுகாப்பான சூழலை உறுதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ''இரண்டு வருட முன்னேற்றமும…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் முகமாலை கண்டல் பகுதியில் இன்று நடைபெற்ற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 904 views
-
-
ஜே.வி.பி இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மகிந்த அரசை தோற்கடிக்காமல் பாதுகாக்கும் என்ற கருத்து ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. ஜே.வி.பியினுடைய அந்த நிலைப்பாட்டிற்கு அடிப்படையாக இரண்டு விடயங்களைக் கொள்ளலாம். ஒன்று கட்சிநலன். இரண்டு, ஜே.வி.பியிடம் இருக்கின்ற மிகமோசமான இனவாதம்;. இங்கே ஜே.வி.பி அல்லது மகிந்த ராஜபக்ச இருவருக்கும் மட்டும்தான் போர்வெறி, இராணுவ நடவடிக்கை மூலம் தமிழினத்தை அழித்தொழித்து விடவேண்டும் என்கின்ற அந்த இனவாதவெறி இருக்கின்றது என்பதல்ல. ஐ.தே.கட்சிகூட தமிழருக்கெதிரான போரை பகிரங்கமாகவே நியாயப்படுத்திவருகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக சிங்கள தேசமே இனவெறித் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. அதில் ஜே.வி.பி, இருக்கின்ற இனவெறியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவுக்கு சென்றுள்ள அமெரிக்க உயர்பிரதிநிதி Stephen Rapp, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு, சிறிலங்கா அரசினை சீற்றம் கொள்ள வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்ற விவகாரங்களுக்கான, அமெரிக்கா அரசாங்கத்தின் சர்வதேச உயர்பிரதிநிதி Stephen Rapp அவர்கள் இருக்கின்றார். இந்தச் சந்திப்புக் குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள்…. 90 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், பேசவேண்டிய விடயங்கள் சகலது பற்றியும் பேசினோம். இதுபற்றி மேலதிகமாக சொல்ல வேண்டியதில்லை. சுமூகமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்…
-
- 4 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 22 AUG, 2024 | 02:29 AM (இராஜதுரை ஹஷான்) தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பேன். மொழி உரிமையும் வழங்குவேன். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஒன்றிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புதன்கிழமை (21) அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்த…
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு, மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிற்றிய சுமணரத்தினதேரர் இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கொண்டு வந்துள்ளார். மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விகாராதிபதியின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பின்னர் தேரரின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. சிங்களம், முஸ்லிம், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியும் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொ…
-
- 0 replies
- 514 views
-
-
முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளுக்கு தீனி போடவும் வேண்டாம் அமைச்சர் ஹக்கீம்- சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. புழைய புண்களை சொறிந்து சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாமென நகர திட்டமிடல், நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போத…
-
- 9 replies
- 889 views
-
-
சுதந்திர, அமைதியான நாட்டிற்காக சமூகங்கள் மத்தியில் மொழி அறிவை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரச கரும மொழிகள் கொள்கையில், இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரிகள் இன்னும் சரியான அவதானம் செலுத்தவில்லை என்பதால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெளிவுப்படுத்தினார். hirunews
-
- 1 reply
- 631 views
-
-
கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார். ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது எ…
-
- 0 replies
- 159 views
-
-
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் காயமடைந்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை பழ. நெடுமாறன் கூறுகின்றார் [sunday December 30 2007 10:15:10 PM GMT] [யாழ் வாணன்] விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் காயமடைந்ததாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை. ஏற்கனவே இதனைப்போல் நான்கு முறை வதந்திகள் வந்துள்ளன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்களுக்கு உதவுவதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது ஈழத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்துப்பொருள்களை அனுப்ப இந்திய…
-
- 1 reply
- 1k views
-
-
அமைதியான முறையில் பொதுமக்களால் நடாத்தப்படும் போராட்டங்கள் மீது இராணுவபலம் பிரயோகிப்பதால் சிரியாவைப் போன்றதொரு புரட்சி நிலைமை இலங்கையிலும் உருவாகக் கூடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களது அமைதிவளிப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என அரசாங்கம்அறிவித்துள்ள போதிலும், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தும் அளவிற்கு நாட்டில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலவசக் கல்வியை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழகமாணவர்கள் நடத்திய போராட்டங்கள் மீ…
-
- 5 replies
- 573 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்கும் என நம்புவதாக இந்திய மத்திய பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க இருக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என உள்ளுர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான தீர்மானத்தை தனிப்பட்டரீதியில் தான் ஆதரிப்பதாகவும் பிரதமரிடமும் இவ்விடயத்தை வலியுறுத்துவேன் எனவும் பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி மேலும் தெரிவித்…
-
- 9 replies
- 1.9k views
-
-
வெலே சுதாவுக்கு மரண தண்டனை கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/156505/வ-ல-ச-த-வ-க-க-மரண-தண-டன-#sthash.ePqGW60g.dpuf
-
- 2 replies
- 652 views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள பொகவந்தலாவைக்கு செல்வதற்காக ஹற்றன் பேருந்து நிலையத்தில் காத்து நின்ற தமிழ் இளம் பெண் ஒருவர் அங்கு ஜீப்பில் மதுபோதையில் வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது பொரளை பகுதியில் வைத்து சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான 111 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/10/21/வெலே-சுதாவின்-சகோதரி-உட்பட-மூவர்-ஹெரோயினுடன்-கைது
-
- 0 replies
- 515 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க மாணவர் மன்றம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்று கைலாசபதி கலையரங்கத்தில் கூட்டு மத நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகமும், விசேட பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், பௌத்த சகோதரத்துவ சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஶ்ரீ நாகவிகாரை சர்வதேச மத்திய நிலையத்தில் பௌத்த மதப் பிரார்த்தனைகளும், கத்தோலிக்க மாணவர் மன்…
-
- 1 reply
- 992 views
- 1 follower
-
-
உலகையே உலுக்கப் போகும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட காட்சிகள் அடங் கிய பதைபதைப்பூட்டும் வீடியோ காட்சி களை லண்டனின் சனல் 4 நிறுவனம் இன்று இரவு வெளியிடுகிறது. இதனால் உலகம் எங்கும் உள்ள அத்தனைத் தமிழர் களும் இன்றைய இரவை நோக்கி பெரும் சோகத்துடன் காத்துள்ளனர். பன்நாட்டு ராணுவ உதவியுடனும், ஏராளமான சதி வேலைகளின் உதவியுடனும், விடுதலைப் புலிகளின் நிழலைக் கூட நெருங்க முடியாத இலங்கை ராணுவம், கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் ஈழப் போரை கொடூரமாக முடித்தது. லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து தமிழ் இனத்தையே ஈழத்தில் சின்னாபின்னமாக்கி விட்டது. ரத்த வெறி பிடித்த ஓநாய்களை விடவும் மோசமாக ச…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எதிர்ப்புத் தெரிவிக்கும் இனவாதிகளின் கருத்துக்களுக்கும், அமைச்சரவையின் குழப்பங்களுக்கும் நாம் பொறுப்பல்ல. எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் எமக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எமக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் மீறினால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைள் தொடரும் எனவும் கூட்டமைப்பு குறிப்பிட்டது. தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துக்குள் திடீர் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த…
-
- 0 replies
- 415 views
-
-
எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயார் – ரிசாட் In இலங்கை August 2, 2019 2:50 am GMT 0 Comments 1434 by : Benitlas நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்ட பின்னரும் எதிர்கால அரசியலுக்காக சிலர் என் மீது பழி சுமத்தி பேசுகிறார்கள். ஆனால் எத்தகைய சவால்களையும் நான் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கின்ற ஒர…
-
- 0 replies
- 247 views
-
-
இருட்டில் வழிதவறிய நமக்கு தூரத்து வெளிச்சம் ஒன்று தெரிகிறது.இந்தத் தருணத்தில் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பிழைகளைத் திருத்திக்கொண்டு காலத்துக்கும் வல்லமைக்கும் பொருத்தமாக நகர்வது அவசியமாகும். சர்வதேச அரசியலுக்கு பொருளாதார/அரசியல் நலன்கள் அடிப்படை. ஆனாலும் நாடுகளின் அரசியல் நலன்களும் அவற்றின் பொது அரசியல் அவிப்பிராயங்களும் சர்வதேச அரசியலில் வலுவாகச் செயல்படுகிறது. இவற்றுக்குள்ளேதான் நம்போன்ற சிறு அமைப்புகள் செயல்படும் வெளியை கண்டடைய வேண்டி உள்ளது. மேலும் நமது அரசியல் அவர்களது நலன்களுக்கு குந்தகமானதல்ல என்பதை நாம்தான் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டியும் உள்ளது. நம் தொடர்பான சந்தேகங்களின் ஆதாயம் எப்பவும் எதிரிக்கே கிட்டுகிறது என்பதை நாம்தான்…
-
- 3 replies
- 794 views
-
-
மணல் கடத்தல் வாகனத்தை நீண்ட தூரம் துரத்திப் பிடித்த பொலிஸார் கொடிகாமம், பாலாவி பகுதியிலிருந்து நேற்று இரவு மணல் கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தை நீண்ட தூரம் துரத்திப் பிடித்து கொடிகாமப் பொலிஸார் கைப்பற்றினர். எனினும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேக நபர்களும் தப்பித்துச் சென்றுள்ளனர். குறித்த கன்ரர் ரகவாகனத்தை மீசாலைப் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர். மணல் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸார், கடத்தலில் ஈடுபட்ட கன்ரர் வாகனத்தை மறித்தனர். எனினும், அந்த வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்றமையால் பொலிஸார் வாகனத்தை துரத்தினர். இதன்போது, மணல் ஏற்றிச் செல்லப்பட்ட வாகனத்தில் இருந்தவர்கள் வாகனத்தில் இருந்த மண…
-
- 0 replies
- 619 views
-
-
பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சஹீர் அஹமட்டின் அழைப்பின் பேரில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, பிராந்தியத்தில் இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தலைமையகத்தில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் விமானப்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இங்கு முதன்மையாக பிராந்திய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இரு நாடுகளின் விமானப்படைகளின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
யாழ் குடாநாட்டில் சேவையாற்ற தென்பகுதி சிங்கள வைத்தியர்கள் முன்வந்துள்ளனர். 2/11/2008 3:10:04 PM வீரகேசரி இணையம் - குடாநாட்டு மக்களின் வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தென்பகுதிச் சிங்கள டாக்டர்கள் பதினொரு பேர் மீண்டும் சேவையாற்றுவதற்கு முன்வந்துள்ளனர். இதனால் யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது குடாநாட்டுக்கு வந்துள்ள பதினொரு தென்பகுதி டாக்டர்களில் 04 பேர் மந்திகை ஆஸ்பத்திரிக்கும், 03 பேர் தெல்லிப்பழை ஆஸ்பத்திரிக்கும் இருவர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கும் மற்றும் சங்கானை, கோப்பாய், காரைநகர், நெடுந்தீவு ஆஸ்பத்திரிகளுக்கு…
-
- 7 replies
- 1.6k views
-
-
"ஹிலாரி கிளின்டன்அம்மணம்' "ஒபாமா அம்மணம்' என்று சிங்கள மொழியில் கொழும்பின் சுவர்களில் எழுதப்பட்டுள்ளது. தமது அரசாங்கத்தின் தலைமையின் கீழ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க முயற்சியுடனான தீர்மானத்திற்கு எதிராக இலங்கையர்கள் பலர் விசனத்துடன் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கோரி இத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது என்று த எக்கனேம்மிஸ்ட் சஞ்சிகை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 2009 இல் முடிவடைந்த யுத்தமானது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தும் புலிகள் தோற…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழினியின் தாய் சின்னம்மா:- நேர்காணல், படப்பிடிப்பு – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மு.தமிழ்ச்செல்வன்………. தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவயில்லை இனியென்ன மகளே இல்லை எனவே நாங்கள் இப்படியே இருந்தாலும் பரவாயில்லை. தயவு செய்து தமிழினியை வைத்து அவவின்ர மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம். அதைதான் எல்லாரிட்டையும் கேட்கிறன். மற்றது பாருங்கோ இயக்கத்தில் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்த என்ற மகளின்ர வாழ்கையை தடுப்பால வந்த பிறகு …
-
- 2 replies
- 870 views
-