ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்குமான வழிமுறைகள் மூடப்பட்டு விட்டன : அவுஸ்ரேலியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் எவருக்கும் அந்த வழிமுறைகள் அவுஸ்ரேலியா மற்றும் இலங்கையால் மூடப்பட்டு விட்டன என்ற செய்தியை தான் தெரிவிக்க விரும்புவதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியா புகலிட கோரிக்கையாளர்களை அந்த நாடு கையாளும் விதம் குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து இரு படகுகளை இலங்கையிடம் கையளித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள மொரிசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleID/109189/Default.as…
-
- 0 replies
- 385 views
-
-
ரணிலின் பொக்கெட் சம்பந்தன் – மஹிந்த. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கெட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்; கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ‘பொக்கேட்’ தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வ…
-
- 6 replies
- 563 views
-
-
வணக்கம், Gather Page இணையத்தளம் மாணவர்களின் கல்வி கணணிமயப் படுத்தவேண்டும் என்பதனையும் தரமான கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும் என்பதனையும் அடிப்படையாகக் கொண்டு ITSO அமைப்பினரினால் 2010 புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எமது சமூகம் போரினாலும் வேறு பல காரணிகளினாலும் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் வெளிவந்த சாதாரண , உயர்தர மற்றும் 5 ம் ஆண்டு புலமைப் பரீட்சை முடிவுகளும் அதனயே உறுதிப் படுத்துகின்றன. வறுமை, அதிகரித்துச் செல்லும் கல்விக் கட்டணங்கள், தரமான கல்விச் சேவை இலவசமாக கிடைக்காமை போன்ற பல்வேறு காரணிகளால் எமது மாணவர்கள் தமது கல்வியினை தொடர முடியாது கஷ்டப்படுகின்றனர். இதற்க்கான தீர்வாகவே Gather Page இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட…
-
- 7 replies
- 11.7k views
-
-
இலங்கைக்கு எதிராக வலைப்பின்னல்; மூத்த இராஜதந்திரி எச்சரிக்கை! சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிரான வலைப்பின்னல் படிப்படியாக வலுவான முறையில் பின்னப்பட்டு வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக எச்சரித்துள்ளார். ஆனால் இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்தை அலட்சியம் செய்து வரும் நிலையில் திடீரென்று ஒருநாள் பாரிய அழுத்தமொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் கடமையாற்றிய அமெரிக்கத் தூதுவர் நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதித் தூதுவராக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் சஹீத் நியமிக்கப்பட்டுள்ளார்…
-
- 1 reply
- 577 views
-
-
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை... 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு, வெளியிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1297151
-
- 1 reply
- 171 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி மாத்தளை நகரின் மணிக் கூட்டு கோபுரத்துக்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மற்றும் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார தலைமையில் சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பொன்சேகாவை விடுதலை செய்யகோரியும் தற்போது நாட்டில் நிலவிவரும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்(வீரகேசரி ) http://www.tharavu.com/2010/11/blog-post_9253.html
-
- 2 replies
- 603 views
-
-
மகிந்த ராஜபக்ஸவின் மீள்வருகையை வரவேற்று, சு.சுவாமி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்… மகிந்த ராஜபக்ஸ இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரதீய ஜனதாகட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது ருவீட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை அரசியலில் ராஜபக்சஸ மீண்டு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. ராஜபக்ஸ விரைவில் இலங்கையின் ஜனாதிபதியாக வேண்டும். என சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். …
-
- 1 reply
- 333 views
-
-
நாட்டில்... குற்றச்செயல்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தல்... அதிகரித்துள்ளது – பொலிஸ். நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் குழுவிற்கான பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கு சாதாரண பிரஜைகளின் கடமைகளில் ஈடுபடுவதற்கான நேரம் குறைக்கப்பட்டமையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “சமீபகாலமாக சாதாரண பொலிஸ் கடமைகளில் ஈடுபடுவத…
-
- 0 replies
- 212 views
-
-
நாவற்குழி அரச காணிகளை கைப்பற்றும் யாழ்.மக்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-14 08:26:30| யாழ்ப்பாணம்] நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை யாழ்ப்பாண மக்களும் நேற்றுக் கைப்பற்றிக் கொண்டனர். நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் சுமார் 70 சிங்கள குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி இரவோடு இரவாக குடியேறினர். இது பல்வேறு மட்டத்திலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இந் நிலையில் நேற்று அப்பகுதிக்குச் சென்ற சாவகச்சேரி மற்றும் குருநகர் வாசிகள் எஞ்சிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப் பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர்.…
-
- 0 replies
- 747 views
-
-
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர். எனினும் மக்களின் இந்த அசௌகரியங்களை போக்கும் விதத்தில் பேருந்து நிலையத்தை சுத்தமாக்கி காகக் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். இதேவேளை பேருந்து நிலையத்தை நோக்கி வரும் காகங்கள் மக்களின் மேல் எச்சங்கள் போடுவதுடன் நிலையத்தையும் அசுத்தமாக்குகின்றன. எனவே மக்களின் நலன் கருதி இந்த பேருந்து நிலையத்தை சுத்தப்படுத்த உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=137133253924637328
-
- 0 replies
- 257 views
-
-
மஹிந்தவை கொல்ல திட்டம் தீட்டியமை : முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பகிர்வு பத்திரம் By VISHNU 14 SEP, 2022 | 01:32 PM ( எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலைச் செய்ய சதி செய்ததாக கூறி முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் முன்னிலையில் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ள…
-
- 2 replies
- 256 views
- 1 follower
-
-
A suspected war criminal who allegedly played a key role in the slaughter of 40,000 civilians in Sri Lanka has landed a cushy job at the United Nations -- with full diplomatic immunity. Human-rights groups are outraged that Shavendra Silva, 46, a top ex-military commander, was named Sri Lanka's deputy permanent UN representative in August, after which he moved to New York. His arrival came a year after his troops defied international pleas and shelled a no-fire zone packed with women, children and elderly refugees, according to observers. Silva also stands accused of mowing down a group of separatist political leaders who agreed to surrender and were waving…
-
- 2 replies
- 948 views
-
-
முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்புவிரதம் "இப்தார்" என புனித திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால்தான் எந்த ஒரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்டபோது அது தொடர்பாக அரியம் எம்.பி. கூறியவை வருமாறு:- ஒவ்வொரு மதமும் அவர்களின் மத சம்பிராயங்களுடனும் பக்தியுடனும் வழிபாட்டுடனும் நோன்பு நோத்து அந்த உன்னத விரதத்தை பூர்த்தி செய்வது அந்தந்த…
-
- 0 replies
- 547 views
-
-
இன்று மாவீரர் நாள்... உருத்திரகுமாரன் அறிக்கை நவ.17,2010 உன்னத மாவீரர் நினைவோடு உறுதியுடன் விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் கூறியுள்ளார். மாவீரர் நாளையொட்டி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாவீரர் நாள்! தமது வீரத்தாலும் ஈகத்தாலும் இலட்சிய உறுதியாலும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் களமாடி நம்தேசத்தின் மீது விதையாய்ப் பரவிநிற்கும் நமது மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மதிப்பளித்து வணங்கி நிற்கும் நாள்! ஈழத் தமிழர் தேசத்தை, இத் தேசத்தின் விடுதலை வேட்கையை, இத் தேச மக்களின் வீரமிகு விடுதலைப்போராட்டத்தை உலகப்பந்தின் அனைத்து மூலைகளிலும் நிலைநிறுத்திச் சென்ற நம் வீரமறவ…
-
- 7 replies
- 1.1k views
-
-
அவசரமாக இந்தியா பறந்துள்ள மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமானம் நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகியுள்ளார். மஹிந்தவுடன், லொஹான் ரத்வத்த, செயலாளர் உதித லொக்கு பண்டார உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இன்று இரவு 10.30 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அவசரமாக-இந்தியா-பறந்துள்ள-மஹிந்த/175-212081
-
- 7 replies
- 585 views
-
-
மைத்திரியை... சுடச் சென்ற, அமி சுரங்க.. கைது!! முல்லேரிய வல்பொல பிரதேசத்தில் நேற்று இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பாதாள உலக உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர். ரஞ்சிலு பேடியின் புத்திக பிரசாத் எனப்படும் அமி சுரங்க மற்றும் சாமர சதுரங்க ஆகிய இரு பாதாள உலக உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அமி சுரங்க என்ற நபர், பாதாள உலகக் குழுத் தலைவரான உரு ஜுவா மற்றும் கோத்தா அசங்க குழுவைச் சேர்ந்த தனுஷ்க ஆரியவன்ச என்றழைக்கப்படும் ரங்கா ஆகியோரின் சகோதரரும் கூட என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் இதற்கு முன்னரும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், 2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டி…
-
- 1 reply
- 624 views
-
-
Buddhist Extremists Attack Christian-Run Children’s Home in Sri Lanka Christian Solidarity Worldwide has reported of attacks by extremist Buddhist monks in Sri Lanka on a children's home in the country run by the Dutch Reformed Church http://www.christiantoday.com/news/south-a...i.lanka/360.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஐபக்ச தற்போது பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு போய் ஒழிந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் அங்கும் மக்கள் சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்மை அழித்ததை தமிழன் மறந்து விட்டான் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று அவனுக்கு தற்போது புரிந்திருக்கும் புரியணும் புரிய வைப்போம் நன்றி :- IBC
-
- 13 replies
- 2.7k views
-
-
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நாய்கள் விற்பவர்களாக சித்திரிக்கப்பட்ட பரிதாபம்! கொழும்பு புகையிரத நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு என்ற சுவரொட்டிகள் புதன்கிழமை நள்ளிரவு முதல் காணப்படுவதுடன் நாய்க்குட்டிகளை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசிகள் என குறிப்பிட்டு மனித உரிமை பணியாளர் நிமல்ஹா பெர்ணாண்டோவினதும் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜெயசேகரவினதும் தொலைபேசி இலங்கங்களை இனந்தெரியாத நபர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இருவரையும் அவமானப்படுத்தும் துன்புறுத்தம் நடவடிக்கையின் ஒரு பகுதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது குறித்து நிமால்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாவது. இன்று காலை கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்த…
-
- 0 replies
- 274 views
-
-
நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ்த் தரப்புகளது இன்றைய நிலைப்பாடும்! நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ்த் தரப்புகளது இன்றைய நிலைப்பாடும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான சபைகளைக் கைப்பற்றியுள்ளபோதிலும், வலுவான ஆட்சியை நிறுவுவதற்குப் போதுமான பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியுள்ளது. இதன் காரணமாக வேறு தரப்புகளுடன் இணைந்து ஆட்சிமைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு…
-
- 0 replies
- 286 views
-
-
மோதவிட்டு குளிர் காய வேண்டாம் என சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம் – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம். வடபகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்த வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடபகுதியில் சீனா ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்காக சீனா பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் ஒரு வடிவமாக யாழ் மற்றும் கிளிநொச்சி பகுதிக் கடல்களில் சீனா முதலீட்டுடன் அட்டைப்…
-
- 9 replies
- 680 views
-
-
சிறீலங்கா அரசபடைகளின் மீலேச்சத்தனமான விமானக் குண்டுவீச்சுகளாலும் எறிகணை வீச்சுகளாலும் 141 அப்பாவி பொதுமக்கள் ஆடி 08 -15 வரையான காலப் பகுதிகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முழு விபரங்களோடு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கை. http://www.ltteps.org/?view=1528&folder=2
-
- 0 replies
- 806 views
-
-
சுவிஷ் தமிழர் பேரவை வரதராஜபெருமாளை சந்தித்து பேச்சு சுவிஷ் தமிழர் பேரவை பிரதிநிதிகள் அண்மையில் சுவிசர்லாந்திற்கு வருகை தந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணியின் தலைவர் வரதராஜபெருமளை சந்தித்து பேசியுள்ளனர். சுவிஷ் தமிழர் பேரவையின் உபதலைவர் சண்.தவராசா தலைமையிலான குழுவினரே சுவிஷ் பேர்ன் நகரில் வரதராசபெருமளை சந்தித்தனர். தானும் சுவிஷ் தமிழர் பேரவையும் வரதராசபெருமாளுக்கு ஆதரவை வழங்கும் நோக்கில் இச்சந்திப்பில் கலந்து கொண்டதாக சண்.தவராசா தெரிவித்துள்ளார். சுவிசர்லாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் செயற்பட்டு வந்த சுவிஷ் தமிழர் பேரவையும் அதன் உபதலைவராக செயற்பட்ட சண்.தவராசாவும் மகிந்த ராசபக்சவின் ஆதரவுக்கட்சியான வரதர் அணிக்கு ஆதரவை வழங்க முன்வந்திருப்பது சுவிஷ் தம…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையிடம் இருந்து போர் இரகசியங்களைப் பெறும் 20 நாடுகள்! [Tuesday 2014-08-12 11:00] இலங்கையிடமிருந்து போர் இரகசியங்களை 20 நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொடிய பயங்கரவாதிகளை இலங்கை படையினர் தோற்கடித்துள்ளனர். போர் தந்திரோபயங்கள் மற்றும் போர் இரகசியங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்கு விஜயம் செய்த வண்ணம் இருக்கின்றார்கள். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பாடங்களை கற்றுக்கொள்ள பல நாடுகள் விரும்புகின்றன. சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு புறம்பாகாத வகையில் போர்த் தந்திரோபாயங்களை படையினர் பயன்படுத்தியிருந்தனர். …
-
- 4 replies
- 503 views
-
-
சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் ; இரு மாணவர்கள் சி.ஐ.டி.யினரால் கைது இனங்களுக்கு இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய இரு பாடசாலை மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் ஹோமாகம, கொள்ளுப்பிட்டி பகுதிகளில் வைத்து அவர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஹோமாகமவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு 17 வயது எனவும் கொள்ளுப்பிட்டியில் நேற்று காலை கைது செய்யப்பட்டவருக்கு 18 வயது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர…
-
- 0 replies
- 236 views
-