ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
யுத்த சூழ்நிலை காரணமாக இலங்கையிலிருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் பிரித்தானியாவின் குரோய்டன் எனும் இடத்தில் வாகனம் மோதியதால் மரணமடைந்துள்ளார். குரோய்டொன் பகுதியிலுள்ள இவரது வீட்டிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால், வாகனச் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது நண்பர்களினால் செல்வம் என அறியப்படுகின்ற ஜெயரட்னம் கந்தையா (வயது 43) என்பவரே நேற்றையதினம் இவ்வாறு மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்று 14 வருடங்களாகின்றன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/131136-2014…
-
- 0 replies
- 368 views
-
-
சம்பூரில் அவசர அவசரமாக மின் நிலையம்; அமைக்கும் அரசின் முயற்சி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கண்டனம் - பண்டார வன்னியன் வுhரசளனயலஇ 28 னுநஉநஅடிநச 2006 12:04 சம்பூரில் அவசர அவசரமாக அனல் மின்நிலையத்தை நிறுவ அரசு மேற்கொண்டுவரும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் அரசு எடுத்திருக்கும் இத்தீர்மானம் பிழையானது என்றும் தமிழ்ப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்காகவே அரசு இவ்வாறு செயற்படுகிறது என்றும் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் கருத்துக் கூறுகை…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளது 13 மார்ச் 2011 அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததன் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சரவையில் புதிய முகங்கள் இணைக்கப்பட உள்ளதாகவும், சிரேஸ்ட அமைச்சர்களின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சரியான முறையில் பங்களிப்பு வழங்கவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி; தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சில புதிய அமைச்சுப் பொ…
-
- 0 replies
- 435 views
-
-
கிழக்கு மக்களை ஏமாற்றிய இந்திய அரசியல்வாதிகள்..! இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய அரசியல் வாதிகள் வட மாகாணத்துக்கு மட்டும் சென்று அங்குள்ள பிரச்சினைகளை கேட்டு அறிந்து சென்றுள்ளனர். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை முன் வைப்பதற்காக பாரிய எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர். ஆனாலும் இந்திய குழுவினர் வடக…
-
- 1 reply
- 832 views
-
-
தமிழின அழிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் கண்டனப் பேரணி. இன அழிப்பு நோக்கோடு தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற சிறிலங்கா அரசபடைகளின் தாக்குதல்களைக் கண்டித்து கிளிநொச்சியில் இன்று காலை கண்டனப்பேரணி நடைபெற்றுள்ளது. குறிப்பாக இலுப்பைக்கடவை படகுத்துறை தாக்குதலைக் கண்டிக்கும் கோசங்களை எழுப்பியதோடு சுலோக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டோர் தாங்கியிருந்தனர். கிளிநொச்சி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான இக்கண்டனப் பேரணி கிளி மாவட்ட அரசார்பற்ற இணையத்தைச் சென்றடைந்து அங்கு மகஜர் கையளிப்பும் கண்டன உரைகளும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்விலும் பேரணியிலும் அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் வர்த்தக நிறுவனங்களின் பணி…
-
- 0 replies
- 713 views
-
-
கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட இலங்கையும் மாலைதீவும் இணக்கம் 19 மார்ச் 2011 இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரும் மாலைதீவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக செயற்பட இலங்கையும் மாலைதீவும் இணக்கம் கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கையும், மாலைதீவும் இணங்கியுள்ளன. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ள. இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரும் மாலைதீவின் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். 2009ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடை…
-
- 3 replies
- 911 views
-
-
சிங்கள இனம் அழிகிறது -கவலைப்படுகிறார் மகிந்த!! நாட்டில் சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போகிறது. மக்கள் தொகை குறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியடையும். ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார். http://newuthayan.com/story/12/சிங்கள-அனம்-அழிகிறது-கவல…
-
- 1 reply
- 345 views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை சிறிலங்கா அரசு கைப்பற்ற வேண்டும் என விரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்களையே நடத்துகின்றது என பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனினும் விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக வடக்கு - கிழக்குப் பகுதிகளை கைப்பற்றுவோம் என இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அண்மையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அரச ஊடகம் ஒன்றுக்கு தகவல் தருகையில் 'நியாதை ஜெயா' என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையினர் புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றை கிழக்கில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில், படைத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் இறுதிக்கட்ட போர் ஆதரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மறைத்துள்ளது - இன்னர் சிற்றி பிரஸ் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட போரின்போது நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதாக ஐ.நா சபையின் உள்ளகத் தகவல்களை வெளியிடும் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2009 ஜனவரி 20 ஆம் திகதி முதல் 2009 மார்ச் 7 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2683 பொது மக்கள் கொல்லப்பட்டும் 7241 பேர் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா தலைமையகத்திற்கு கிடைத்திருந்த புள்ளிவிபர தரவுகள் குறித்த ரகசிய தரவுகள் அடங்கிய அறிக்கையொன்று தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே இன்…
-
- 1 reply
- 531 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படவில்லை என சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டு இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள், கப்பம்கோரல்கள் மற்றும் கறுப்புப் பண கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும். செல்வாசுக் நிறுவனத்திற்கும் புலிகளின் கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் க…
-
- 0 replies
- 446 views
-
-
யாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தெற்கில் இருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில், பாராளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து விஜயகலாவின் உரை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக விஜயகலா நேற்று (…
-
- 7 replies
- 842 views
-
-
கோத்தாபயவின் ஆட்டம் ஆரம்பம்- எம்.ரீ.வி/எம்.பீ.சி ஊடக வலையமைப்பிற்கு சொந்தமான சிரச ரீ.வி, சக்தி ரீ.வி. மற்றும் எம்.ரீ.வி. ஸ்போர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளை பியோ ரீ.வி மற்றும் டயலொக் ரீ.வி வலையமைப்புக்களின் ஊடாக பார்வையிடும் வசதியை அரசாங்கம் தடை செய்துள்ளது. இவற்றைப் பார்வையிடும் நேயர்கள், யூ.எச்.எவ். மற்றும் வி.எச்.எவ் அலைவரிசைகள் ஊடாக பார்வையிட முடியும் என அவ்வவலைவரிசை நிறுவனம் அறிவித்துள்ளது. பியோ ரீ.வி மற்றம் டயலொக் ரீ.வி ஆகிய இரண்டு வலையமைப்புக்களின் ஊடாகவும் தமது அலைவரிசைகளை பார்வையிட முடியாதுள்ளதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொடர்ச்சியாக நேயர்கள் தமக்கு முறைப்பாடுகளை தெரிவித்த வண்ணம் உள்ளதாக சிரச எம்ரீவி நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, இரவு 7.…
-
- 0 replies
- 348 views
-
-
செவ்வாய் 30-01-2007 13:48 மணி தமிழீழம் [செந்தமிழ்] இலங்கையின் அமைதி முயற்ச்சிகளில் இந்திய மறை முக மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் இராஜதந்திர தரப்புகளில் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தியா சென்றுள்ளமை குறித்து பல்வேறு இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பிரதமர் ரட்ன ஸ்ரீ விக்கிரமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு தலைவர் இரா சம்பந்தன் ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர் இதேவேளை ஸ்ரீலங்காவின் சமாதான செயலக பணிப்பாளரும் வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகன்னவும் இந்தியா சென்றுள்ளார் ஸ்ரீலங்காவின் புதிய வெளிநாட்டமைச்சர் ரோஹத போகொல்லாகம…
-
- 5 replies
- 2.1k views
-
-
பிரபாகரனின் ஊரிலே கொண்டாட்டம் ,இராணுவம் முனைவு April 14th, 2011 nila கடந்த 30 வருடங்களாக இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் தமிழ் மக்கள் புத்தாண்டுகளை எதிர்கொண்டார்களோ அதேபோன்றே இம்முறையும் புத்தாண்டை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நிலைமை இப்படி இருக்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை பெருமெடுப்பில் நடத்துவதன் மூலம் தமிழர் பகுதிகளில் சுமுக நிலை திரும்பிவிட்டது என்று காட்ட இராணுவம் முனைகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் தெரிவித்தவை வருமாறு:- யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் மீள்குடியமர்ந்த மக்கள் அவலத்துக்கும் துன்பத்துக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்த அனந்தி சசிதரன், தன்னை கைது செய்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என மறுத்தார். நேற்று முன்தினம் தொடக்கம் தன்னுடைய வீடு மற்றும் அலுவலகம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் தன்னுடைய நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை கைது செய்வதற்கு எவ்விதமான காரணங்களும் அரசாங்கத்திடம் இருக்க முடியாது என அவர் கூறியதுடன், தன்னை கைது செய்…
-
- 0 replies
- 341 views
-
-
ஒற்றுமையை வலியுறுத்தி பௌத்த மத குரு யாழில் இருந்து பாதயாத்திரை! நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு நடை பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூரநோக்கமானசெயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும் நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு ஆரியகுளம் நா…
-
- 3 replies
- 592 views
-
-
சந்தேகம் வெளியிட்டுள்ளது சிங்கள இணையத்தளம்:- முன்னாள் ஜே.வீ.பீ உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான லொக்கு அத்துள அலரி மாளிகையில் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக லங்கா ஈ நியுஸ் செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விஜயமுனி தேவகே நிமால் ஜெயசிங்க என்ற லொக்கு அத்துள ஜேவீபியின் 1971 காலத்தில் இருந்து முக்கிய இடத்தில் 4 ஆவது இடத்தில் அவ் அமைப்பை வழி நடத்தியவர்... மிகவும் திடகாத்திரமான அவர் காராட்டியில் புகழ் பெற்றவர். ஜேவீபீயில் இருந்து விலகி சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த இவர் எரிபொருள் சக்த்தி இஇணை அமைச்சராக பதவி வகித்தவர்.. தற்போதைய கம்பகா மாவட்ட அமைப்பாளராக இருந்த இவர் மைத்திரிபால சேனநாயக்கவை ஆதரிக்கும் முடிவில் இருந்த வேளை அலரிமாளிகை…
-
- 0 replies
- 639 views
-
-
மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் அண்மையில் வாகரைப் பிரதேசத்தை சிறிலங்கா படையினர் ஆக்கிரமித்த பின்பு இங்கே புலம் பெயாந்த நாடுகளில் விடுதலைப்புலிகளுடைய பலம் மற்றும் பலவீனங்கள்பற்றி அதிகளவுக்கு பேசப்படுகிறது. ஆய்வாளர்கள், விமர்சகர்கள், பத்தி எழுத்தாளர்கள், இணைத்தளங்களின் கருத்தாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்தியல் தளத்தில் நின்று தங்களது அரசியல் சார்புத் தன்மைக்கு எற்றவாறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். சிறீலங்கா அரசதரப்பினதும் அதன் ஒட்டுக் குழுக்களினதும் தகவல் தொடர்பு சாதனங்கள் விடுதலைப்புலிகளின் கதை முடிந்துவிட்டது.அவர்களின் போரிடும் அழிக்கப்பட்டுவிட்டது. அரசபடையினரில் படை வலிமைக்கும் நவீனரக ஆயுதங்களுக்கும் முன்னால் விடுதலைப்புலிகளின் படையணிக…
-
- 54 replies
- 10.4k views
-
-
ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது? வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் அநியாயமாகப் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற உண்மையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் வன்னி இறுதிக் கட்டப் போரில் ஒலித்த அவலக் குரல்கள் அந்த மக்களுடன் மரணித்து விடவில்லை; சர்வதேசத்தின் மனச்சாட்சியை உசுப்பிக் கொண்டிருப்பதின் சாட்சியாகவே நிபுணர் குழு வடிவமெடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின்போது கனத்த மனதுடன் மனதுக்குள் அழுது புலம்பும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு வெற்றிக் கோஷங்கள் தமிழ் மக்களை வாய் மூடி மௌனிகளாக்கியது. இன்றும்கூட அதே நிலைதான். ஆ…
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
முன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை அலரிமாலிகையில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் ஆதரவை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தினார். http://virakesari.lk/articles/2014/12/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81 -ரஞ்சித் ராஜபக்ஷ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை தெரிவித்து ம…
-
- 0 replies
- 675 views
-
-
எறிகணை வீச்சில் மயிரிழையில் உயிர்தப்பிய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி [ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2007, 06:45 ஈழம்] [க.திருக்குமார்] யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் இருந்து அப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான பிரிக்கேடியர் சிறீநாத் ராஜபக்ச மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: "புதிதாக உருவாக்கப்பட்ட 'மெகனைஸ்' படைபிரிவின் தலைமையக திறப்பு விழா கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்திருந்த அதிகாரிகள், 53 ஆ…
-
- 12 replies
- 3k views
-
-
கிளிநொச்சி வர்த்தகர்களிடையே முரண்பாடு!! கிளிநொச்சி பொதுச் சந்தையில் சந்தை வர்த்தகர்கள் இன்று ஊடக சந்திப்பு நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், வர்த்தக சங்கத் தலைவரும், உப தலைவரும் வருகைதந்ததால் இரு வர்த்தகர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய மூன்று மாடி சந்தைக் கட்டடத் தொகுதி தேவையில்லை என்ற கோரிக்கையுடன் கிளிநொச்சி சநற்தை வர்த்தகர்கள் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன் போது வர்த்தக சங்கத் தலைவர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்டவர். அக் கட்சியினர் ச…
-
- 2 replies
- 741 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 01:53 PM எந்தவொரு குடிமகனும் தமிழ் அல்லது சிங்கள மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்துள்ளார். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அரசியலமைப்பில் அரச கரும மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு குடிமகன் இந்த நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனத்தில் சேவையைப் பெறும்போது, நபர் ஒருவர் தனக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் கோரலாம். அந்த உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்…
-
- 2 replies
- 411 views
- 1 follower
-
-
பெருமளவான புலி உறுப்பினர்கள் இன்னும் கைது செய்யப்படவுள்ளனர் - நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு விடுதலைப்புலிகள் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடாமல் நாட்டின் பாதுகாப்புக் குறித்து பேச முடியாத நிலை இன்னும் தொடர்வதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விட்டு வெளிநாடு சென்றுள்ள மற்றும் இன் னும் பாதுகாப்புப் படையினரிடம் சிக்காது மறைந்து வாழ்கின்ற புலனாய்வு மற்றும் தாக்குதல் படை உறுப்பினர்கள் முன்னைய விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும்பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே…
-
- 4 replies
- 999 views
-
-
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும் உடனடியாக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வென்றால், மூன்றாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு சத்தியப்பிரமாணத்தை 2015ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் திகதி செய்துகொள்வார். சல குழுவினர் கூறுவது போல இரண்டாவது பதவிக்காலத்துக்கான 6 வருடங்கள் முடிந்த பின்னர் அல்ல என அரசாங்கம் நேற்று புதன்கிழமை கூறியது. ஜனாதிபதி ராஜபக்ஷ வெற்றி பெற்றதும் பதவியேற்கக்கூடாது. அவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்ற தினமான நவம்பர் 19இலே தான் பதவியேற்பார் என அமைச்சர் டிலான் பெரேரா, ஸ்ரீ லங…
-
- 1 reply
- 543 views
-