ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
யாழ்.நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையினையும், வைத்திய வசதிகள் இல்லாமையினையும் கண்டித்தும், வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரியும் நெடுந்தீவில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றய தினம் ர.டிலாஜினி என்ற 18 வயது மாணவி திடீர் சுகயீனமுற்ற நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை. மேலும் உடனடி வைத்திய உபகரணங்களும் இல்லாத நிலையில், குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் வைத்திய வசதிகளை மேம்படுத்தக்கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 8 replies
- 851 views
-
-
20ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் – செல்வராசா கஜேந்திரன் 20ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் பாரிய ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அரச கம்பனிகளைக் கணக்காய்வு செய்யும் பொறுப்பு கணக்காய்வாளர் நாயகத்தில் பொறுப்புக்கள் அதிகாரங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.உறுப்புரை 154 (ஏஐ) இன் பிரகாரம் பகிரங்க கணக்குகளை கணக்காய்வு செய்து நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் கடமைகளும் பொறுப்புக்களும் அதிகாரங்களும் 20ஆவது திருத்தயோசனையில் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.எனவே, இவ்…
-
- 0 replies
- 279 views
-
-
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கண்டன பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 432 views
-
-
ஜெனீவா அமர்வுகள் குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்கவுகள் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு சவால்களை எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=76500&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 234 views
-
-
Global எனும் பெயரில் சில சமூக விரோதிகள் அப்பாவி மக்களை இத் திட்டத்தால் ஏமாற்றி வருகின்றார்கள். பிரமிட் திட்டத்துக்கு மாற்று பெயர்கள் வைத்து நடத்துகிறார்கள் ….. தயவு செய்து மக்கள் இவற்றுக்கு ஏமாற வேண்டாம் … கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பிரமிட் வியாபாரம் / வலையமைப்பு வியாபாரம் (Network Business) அல்லது GLOBAL LIFE STYLE எனும் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றி வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பல அமைப்புக்களை கானக் கூடியதாக இருக்கின்றது. இவ் அமைப்புகள் பொது மக்களை மூலைச் சலவை செய்து அவர்களது வியாபாரமானது நன்மை பயக்கக் கூடியது என்று பொது மக்களை ஏமாற்றுகின்றார்கள். இவ் வியாபாரத்தில் அதிகம் எமது தமிழ் சமூகம் ஏமற்றப்பட்டிறுப்பதை அறிந்ததனால் பதிவேற்றம் செய்கிறோம் பிரமி…
-
- 4 replies
- 889 views
-
-
வன்னி பகுதியில் இருந்து வரும் மக்கள் அனைத்துலகத்தின் தராதரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட வேண்டும். அவர்களை பராமரிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நோர்ட்டிக் நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 526 views
-
-
அரசாங்கத்தை கவிழ்ப்பதனை விடவும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது மிகவும் சவால் மிக்கது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 40 - 45 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியொன்று இருந்தது. அந்த எண்ணிக்கை 50 வீதமாக குறைவடைந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடையும் என்பதில் சந்தேகமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் நிலவி வரும் தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, வெளியில் சிரித்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் கட்சியில் ஒற்றுமை கிடையாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளத் தயார், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுப்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்த…
-
- 4 replies
- 660 views
-
-
தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள்: - தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் [Thursday, 2013-02-28 19:16:05] தமிழ் தேசிய அழிவுக்கு காராணமாக இருந்தவர்கள் இன்று தேசியவாதம் போசுகின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் செயலாளர் சுப்பிரமனியம் சிவகரன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, தமிழர் விடுதலைக்கூட்டனியின் செயலாளர் வி;ஆனந்த சங்கரி அண்மைய நாட்களில் மிக மோசமான அறிக்கைகளை வெளியிட்டு தமிழ் மக்களின் தேசிய வாதி போல் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார். கடந்த ஒரு தசாப்த…
-
- 2 replies
- 697 views
-
-
யாழ் மாவட்டத்தில் இன்று வரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்... யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது. அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும், யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள். கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து த…
-
- 0 replies
- 304 views
-
-
ஈழத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை ஆக்கிரமித்து நிற்கும் சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாத இராணுவம் தனது பிடிக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ள ஆக்கிரமிப்புச் சுதந்திரத்தின் தன்மைகளை இப்படங்கள் சொல்லுகின்றன. இப்படங்களை சிறீலங்காவில் சிங்கள மேலாதிக்கத்தை விரும்பும் சிங்களவர்கள் நடத்தும் ஆங்கில ஊடகங்களில் ஒன்றான dailymirror தனது சிங்களப் படைகளின் வீரத்தையும் தமிழர்களை அவர்கள் அடிமைகளாக்கி உள்ளதையும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் பறைசாற்ற பிரசுரித்துள்ளது.
-
- 10 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அதிருப்தி தெரிவிப்பது எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்றும், அரசியல் கட்சிக்குள் ஜனநாயகம் முழுமை பெறுவது நல்ல விடயம்;தான் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புது டில்லி சென்றடைந்த அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழோசையின் ஃபேஸ் புக் நேரலையில் பங்கேற்றார். இதன் போது அங்கு கருத்துரைத்த சுமந்திரன், மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான விடயம் தான் அதற்காக மக்களுடைய கருத்தை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறுவதால் த.தே.கூட்டமைப்பு…
-
- 1 reply
- 413 views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்த மங்கலத்தில் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் தெற்காசியாவின் கிட்லர் ராஜபக்சே. ராஜபக்சே நாசமா போவான் சபிக்கும் தமிழகம் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பேனரை வைத்த அப்பகுதி தமிழ் ஈழ உணர்வாளர்கள், ராஜபக்சேவின் படத்திற்கு செருப்பு மற்றும் துடைப்பத்தால் கட்டிய மாலையும் அணிவித்திருந்தனர். படத்தை பார்க்க..... http://www.tamilskynews.com/index.php?opti...amp;Itemid=56//
-
- 2 replies
- 989 views
-
-
'என் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்' திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 18:08 -நவரத்தினம் கபில்நாத் விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள் இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர். எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்;. நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவை…
-
- 4 replies
- 1.4k views
-
-
அநுராதபுரம் கொண்டு சென்ற கஞ்சா பரந்தனில் சிக்கியது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 2050 கிராம் கேரளா கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் போது, ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி விமானப்படையினரால் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் நபர் ஒருவர் அனுராதபுரம் நோக்கி எடுத்துச் சென்ற பொதி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்ட தையடுத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதாக கிளிநொச்சி விமானப்படையினர் தெரி…
-
- 2 replies
- 358 views
-
-
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு – நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த வெளியேற்றம் கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது.அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர்.தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதா…
-
- 18 replies
- 2.1k views
-
-
திட்டங்கள் நிறுத்தப்படுவது எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது -சீனத்தூதுவர் வலியுறுத்து கொழும்பு துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் மீண்டும்இட ம்பெறாதிருப்பதை ,ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத் தூதுவர் யி ஷியாங்லி யாங் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்த போது இந்த விடயத்தை தாம் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக சீனத் தூதுவர் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்த முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான சீன- இலங்கை வர்த்தக கூட்ட த்தில், உரையாற்றிய போதே, சீனத் தூதுவர் இந்தத் தகவலை வெ…
-
- 0 replies
- 159 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் கேட்கிறோம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக தாங்கள் காத்திருந்ததாக தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் முகமாக நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் பைடனின் புகைப்படத்தை தாங்கிய பதாகையையும் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளையும் உறவினர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தம…
-
- 0 replies
- 290 views
-
-
பளை, கிளாலி இராணுவ நிலைகள் நோக்கி புலிகள் ஆடடிலெறி தாக்குதல் - படைதரப்பு அதிர்ச்சியில் திகதி: 10.03.2009 // தமிழீழம் // [எல்லாளன்] யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துக…
-
- 9 replies
- 3.1k views
-
-
முல்லையில் 11 பாடசாலைகள் அபிவிருத்திக்கு 11 கோடி ஒதுக்கீடு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 11 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இதற்காக 11 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, ஆய்வு கூடம், வகுப்பறை கட்டடம் என்பன அபிவிருத்திசெய்யப்படவுள்ளன. பாலி நகர் மகாவித்தியாலயம், பாரதி வித்தியாலயம், யோகபுரம் வித்தியாலயம், குமுழமுனை வித்தியாலயம், மாங்குளம் மகாவித்தியாலயம், இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலயம், புதுக்கு…
-
- 0 replies
- 187 views
-
-
வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலயத்திற்குள் பக்தர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.கந்தசஷ்டி விரதத்தின் ஆரம்ப நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை பெருமளவான அடியார்கள் ஆலயத்திற்கு சென்றிருந்தபோதும் வெளி வீதியில் வைத்தே சந்நிதியானையை தரிசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே இவ்வாறான நடைமுறை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆலய வெளி வீதிக்குள் செல்லும்…
-
- 0 replies
- 478 views
-
-
Today in an article titled “LTTE plot for mass scale chemical attack bared” the government has posted the following photograph, which is so obviously altered that it is ridiculous: Please zoom the photo and check it. The entire photograph has been created using repetitive pattern brushes. Note the bushes on the left of the two people. See how the exact same pattern repeats itself throughout the bush. A similar pattern occurs on the right side of the people. There is a very clear split in the photo between the people and the background, indicating the photograph was not taken in the Vanni at all. This is a studio photograph, pasted on top of a picture in the Van…
-
- 14 replies
- 2.5k views
- 1 follower
-
-
மஹிந்த -ரணில் இணக்கப்பாடு அம்பலம் மஹிந்தவின் சீன விஜயத்திற்கான அனைத்துவித ராஜதந்திர வசதிகளையும் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியிருப்பதன் மூலம் மஹிந்த மற்றும் ரணிலுக்கு இடையிலுள்ள இண க்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தனது சீன விஜயத்தினுள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் தீர்மானிக்கப்பட்டுள்ள 15000 ஏக்கரிலான கைத்தொழில் வலயத்திற்கு இணக்கப்பாட்டினை பெற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குறுதியளித்துள்ளார். அந்த இணக்கப்பாட்டிற்கான நன்றியாக சீன விஜயத்தில் இர…
-
- 0 replies
- 194 views
-
-
வன்னிப் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 317 views
-
-
மாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி! நாடாளுமன்றில் கடுமையான கூச்சல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-