ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
ராமதாஸ் - மனோகணேசன் நேற்று சந்திப்பு தமிழகம் சென்றிருக்கும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று புதன்கிழமை இரவு திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்து சிறிலங்கா தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக உரையாடியுள்ளார். குறிப்பாக வடக்கு,கிழக்கு பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்த டாக்டர் ராமதாஸ், சிறிலங்காவின்; வடக்கு,கிழக்கிற்கு அப்பால் பரந்துபட்டு வாழும் வேறுபட்ட தமிழ் சமுதாயப் பிரச்சினைகளை மிகவும் அந்நியோன்யமாக கேட்டறிந்தார். இலங்கைப் பிரஜையான தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும் இதற்கப்பால் தமிழ் வர்த்தகர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல், கப்பம், கொலைகள் பற்றி எடுத்துர…
-
- 1 reply
- 984 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றில் ஆஜர்: பிடியாணை ரத்து _ வீரகேசரி நாளேடு 2/12/2011 9:59:20 AM பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணையில் அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த…
-
- 0 replies
- 893 views
-
-
நகைகளை மீளளிப்பதாக கூறி ஏமாற்றிய ஜனாதிபதி மஹிந்த! [Monday 2014-10-13 09:00] தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்த 2352 பேருக்கு அவர்களது தங்கத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிளிநொச்சில் வைத்து மீளளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று கிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி வெறும் 25 பேருக்கு மாத்திரமே அவற்றை மீளளித்தார். இதனால் தாங்கள் அடகு வைத்த நகைகள் மீள கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காலை முதல் கால் கடுக்க காத்திருந்த 2352 பேர் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். எனினும் இவர்களுக்கான நகைகளை அவர்களுக்கு உரிய இராணுவ சிவில் அலுவலகங்களில் ஒட்டப்பட்ட பெயர் விபரம் உறுதிப்படுத்தப்பட்டத்தை அடுத்து விரைவில் வழங்குவோம் என்று அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, புலிகளிடம் நகைகளை அடகுவை…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 10:58 AM தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் திங்கட்கிழமை (9) நடைபெற்றது. https://www.virakesari.lk/article/145381
-
- 0 replies
- 326 views
-
-
இனப்பிரச்சினை தீர்வுக்கான புதிய யோசனை முன்வைக்கப்பட்டது. வடக்கு கிழக்குக்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்க பரிந்துரை.10:02:45 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையிலான கட்சிகளின் பிரதிநிதி நிபுணர்கள் குழு இனப்பிரச்சினை தீர்வுக்காக புதிய யோசனைகளை முன்வைத்துள்ளது. 37 பக்கங்களை கொண்ட இந்த பரிந்துரைகள் நேற்று சர்வகட்சி மாநாட்டு குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த பரிந்துரைகள் சர்வகட்சி மாநாட்டு குழுவால் ஆராயப்படவுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அதில் அடங்கியுள்ள யோசனைகளை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த பரிந்துரைகள் நேற்று இரவே இந்து ஆசிய செய்திசேவை இணையத்தளத்தில் வெளியிடப்பட…
-
- 0 replies
- 860 views
-
-
1 வடமாகாணசபையால் நடாத்தப்படும் நடமாடும் சேவை வவுனியா வடக்கு புளியங்குளம் இந்துக் கல்லூரியில் 17.10.2014, 18.10.2014 ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையில் தொடக்க நாள் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா ................... அன்புள்ள அமைச்சர்களே, அலுவலர்களே, சகோதர சகோதரிகளே. இன்று ஒரு முக்கியமான தினம். நடமாடும் சேவை ஒன்றை நடத்தி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று பல மாதங்களாக எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் பல காரணங்களால் இதனைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வர வேண்டிய அவசியம் எழுந்தது. இன்று இங்கு நடத்த நாம் எத்தனிக்கும் போதும் பல சிக்கல்களையும் புறக்கணிப்புக்களையும் எதிர் கொண்டே நடத்த வேண்டியுள்ளது. இன்று பிரதம செயலாளர் சமூகமளிகவில்…
-
- 1 reply
- 681 views
-
-
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பேட்டியொன்றின் போது தெரிவித்த கருத்திற்காக இலங்கைக்கான சீன தூதரகம் அவரை கடுமையாக சாடியுள்ளது. அமெரிக்க தூதுவரை இலங்கைக்கான சீன தூதரகம் கபடம் மிக்கவர் என விமர்சித்துள்ளது. இலங்கையின் கடன் திட்டம் தொடர்பான பிரிட்டனின் சமீபத்தைய தொலைகாட்சி நிகழ்ச்சியின் போது எங்களின் அமெரிக்க நண்பர் சீனா சீனா என்ற மந்திரத்தை ஓதினார்சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளிற்கு சீனா பாதிப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. தனது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விரிவுரைகளிற்கு முன்னர் எங்களின் அமெரிக்க சகா சில கேள்விகளை கேட்டிருக்கவேண்டும்,- சர்வதேச நாணயநிதியத்தில் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பான வீட்…
-
- 1 reply
- 697 views
-
-
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்ப்பாணத்தில் புகையிரத நகரம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். அதற்கமைய யாழ். புகையிரத நிலையப்பகுதியைச் சுற்றி 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் புகையிரத நகரம் அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான நிர்மாணப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ். புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கத்தில் ஸ்ரான்லி வீதி, தெற்கில் யாழ் புகையிரத நிலைய வீதி, கிழக்கு பக்கம் இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கம் வைத்தியலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக…
-
- 0 replies
- 402 views
-
-
கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் கடனுதவியை இறுதிசெய்ய முடியும் - நாணயநிதியத்தின் முக்கிய அதிகாரி By RAJEEBAN 26 JAN, 2023 | 05:00 PM சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சிக்காக இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் கடுமையான வரிகளை அமுல்படுத்;துவதற்கும் காண்பித்துவரும் அரசியல் உறுதிப்பாடு பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சர்வதேசநாணயநிதியத்தின் கடன் உதவிக்கான அனைத்து தேவைகளும் பூர…
-
- 2 replies
- 675 views
- 1 follower
-
-
பாலசிங்கம் மறைவு....சமாதானத்தின் மரணமா? ஆன்டன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம் இறந்து விட்டார். இது எதிர்பாராமல் நடந்ததல்ல. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும் அவரது இழப்பு, ஈழத்தமிழர் களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. எதற்கும் கலங்காத விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக்கூட கொஞ்சம் அசைத்திருக்கிறது பாலசிங்கத்தின் மரணம். ‘‘துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து நெஞ்சத்தை பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறுபோல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்ட முடியாது. மனித மொழியில் இதற்கு இடமும் இல்லை’’ என்று பிரபாகரன் துடித்துப் புலம்பியிருக்கிறார். ஒரு மூ…
-
- 4 replies
- 1.9k views
-
-
இந்த இடத்தில் ஒரு விடயம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உரையாடலை பதிவு செய்தது யார்? இந்த உரையாடல் இப்போது பிரிசித்தப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன? அனைத்து தூதுவர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையாடல்களை ஒரு பலம் மிக்க சக்தி பதிவு செய்கிறது. தமக்குத் தேவைப்படுமிடத்து அவற்றை பிரசித்தப்படுத்தி தமது செயல்களுக்கு நியாயம் கற்பிக்கத் தயாராயிருக்கிறது.
-
- 3 replies
- 705 views
-
-
தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் - சி.வி.விக்னேஸ்வரன் By Digital Desk 5 04 Feb, 2023 | 09:27 AM ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் வருடந்தோறும் பெப்ரவரி 4 ஆம் திகதி என்ற கரிநாள் வந்து போய்க்கொண்டிருக்கும். நாமும் அன்றைய தினம் எமது மனோநிலையை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்போம் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும…
-
- 2 replies
- 872 views
-
-
வெளிநாட்டுச் சிங்களவரிடம் நிதியினைத் திரட்டி போரை முன்னெடுக்க மகிந்த திட்டம். சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்களிடம் இருந்து பெருந்தொகை நிதியினைக் கோரியுள்ளார். இது தொடர்பான பரப்புரைகள் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் ஐரோப்பாவில் இயங்கும் சிங்கள சேவைத் தொலைக்காட்சியில் ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னர் இந்த அவசர நிதியினை கொடுத்துதவுமாறு வலியுறுத்தப்படுகின்றது. நிதியினை வழங்க வரும் சிங்கள் மக்கள் டொச் வங்கி மூலம் குறைந்த அனுப்பு கூலியைக் கொடுத்து நிதியினை வழங்க முடியும் என அப்பரப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
லிபியாவுடனான உறவில் இரட்டை வேடம் போடும் சிறீலங்கா! மார் 13, 2011 லிபியா அதிபருக்கு ஆதரவுகளை தருவதாக உற்சாக வார்த்தைகளை கூறிய சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, ஐக்கிய நாடுகள் சபையில் லிபியா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து லிபியாவை வெளியேற்றும் தீர்மானம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஐ.நாவின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக சிறீலங்கா அரசு வாக்களித்துள்ளது. சிறீலங்கா மட்டுமல்லாது, லிபியாவின் நெருக்கிய நண்பர்களாக திகழ்ந்த வெனிசுலா, ஈரான் ஆகியனவும் நிலைகுலைந்து ஆதரவாக வாக்களித்துள்ளன. SANGATHIE
-
- 1 reply
- 673 views
-
-
மார்ச் 9 க்கு பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் – எச்சரிக்கும் பீரிஸ் திட்டமிட்டபடி மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசாங்கம் நிர்பந்திக்கப்படலாம் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்துவது தொடர்பில் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்த பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதோடு அதன் முடிவுகள் பெரிய அலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் மிக…
-
- 0 replies
- 145 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன?: இந்தியத் தூதுவர் விளக்கம். இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிடாதென சென்னையில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் தெரிவித்த கருத்தே புதுடில்லியின் நிலைப்பாடென இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத் தெரிவித்திருக்கின்றார். சிங்களக் கடும்போக்குக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு ஒன்று இந்திய தூதுவரை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேச்சுக்களை நடத்திய போது இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமயவின் தூதுக்குழு இலங்க…
-
- 0 replies
- 723 views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை மீள இணையுமாறு அழைப்பு. இலங்கையில் இடம்பெற்று வரும் போரை தீவிரமாக்கும் நோக்குடன் சிறிலங்கா இராணுவத்திலிருந்து தப்பியோடிய 17,000 படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: போர் உக்கிரமடைந்த காலப்பகுதியான 1983 இலிருந்து இன்றுவரை 50,000-க்கும் மேற்பட்ட படையினர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். எனினும் 2003 இலிருந்து முறைப்படி விடுமுறை கோராமல் கடமைக்கு சமூகமளிக்காத படையினரை இணைத்துக்கொள்ளவே அரசு தீர்மானித்துள்ளது. இவர்களே மீள் பயிற்சிக்கு உகந்தவர்கள் என கருதப்படுகின்றது. பொதுமன்னிப்பு வழங்…
-
- 0 replies
- 960 views
-
-
வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில்- மீண்டும் ஒரு கொடூரச் செயல்- 59 வயதுப் பெண்ணின் வாயைக் கட்டி மிருகத்தனமாக வன்புணர்ந்த அரக்கர்கள்!! முகமூடி அணிந்தவர்கள் அராஜகம்; 20 பவுண்களை அள்ளிச் சென்றனர் ஓடு பிரித்து வீடு புகுந்த கொள்ளை யர், 59 வயதுடைய குடும்பத் தலை வியின் வாயைக் கட்டிவிட்டு மிருகத் தனமாக வன்பு ணர்ந்துள்ளனர். வன் புணர்ந்தபின்னர் 20 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவரது கணவனின் வாயையும் கைகால்க ளையும் கட்டிப்போட்டு விட்டே கொள்ளையர் இந்தக் கொடூ ரமான இழிசெயலைப் புரிந்…
-
- 4 replies
- 634 views
-
-
HOT NEWS நாகர்கோவில் மோதலில் இராணுவ வீரர் பலி****இலங்கையில் அக்கிரமத்துக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்-அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டவுணர்****சூடுபட்ட இளைஞன் உதவி கோரி அவலக்குரல் எழுப்பியபோதும் ஒருவரும் உதவ முன்வரவில்லை-வவுனியா மாவட்ட நீதிபதி விசனம்***வவுனியாவில் ஒருவர் சுட்டுக் கொலை****முகத்துவாரம் எலி ஹவுஸ் வீதியில் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை* `புதிய அரசியல் கலாசாரம்' வெறும் பசப்பு வார்த்தை [19 - January - 2007] [Font Size - A - A - A] ஆளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இன நெருக்கடிக்கு அரசியல் இணக்கத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள்…
-
- 0 replies
- 920 views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! - சொல்கிறார் ராஜபக்சே சனிக்கிழமை, ஏப்ரல் 2, 2011, 12:33[iST] திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார். மும்பையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி சென்றார். அவருக்கு வழி நெடுகிலும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பதி மலைப் பாதையில் அதிரடிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி கோவிலில் மத்திய போல…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…
-
- 4 replies
- 1.8k views
-
-
வாஷிங்டன்: மனித உரிமைகள் தொடர்பான பதிவுகளில் ஏற்படும் முன்னேற்றமும் இறுதி யுத்தத்தின் போதான நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் விடயத்திலுமே இலங்கையுடனான எதிர்கால ஒத்துழைப்பு தங்கியிருப்பதாக அமெரிக்கா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக பங்களிப்புகளை வழங்குதல் மற்றும் கேந்திரோபாய அமைவிடம் போன்ற அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இலங்கையானது அதற்குரிய ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் அதேசமயம், வன்முறையான தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தைச் செயற்பாட்டுத் திறனுடன் கையாளுதல்,கடற்கொள்ளை போன்ற விடயங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுத்தல் என்பது தொடர்பாக கொழும்புடன் பங்காளியாகச் செயற்படுவதற்கும் அமெரிக்கா விருப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனவரி மாதம் நடைபெறப் போகும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கோக்தபாஜா ராஜபக்சாவால் அரங்கேற்றப் போகின்ற அரசியல் கொலைப் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சா தோல்வியடைந்தால், அந்தப் பரம்பரையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும். அப்படி ஒரு நிலைமையை வரவிடாமல் தடுப்பதற்காக கோத்தபாஜா எதையும் செய்ய துணிந்துவிட்டார். இந்த ராஜபக்சா குடும்பம் அரசியல் கொலைகளை செய்து அதனை விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் வீண்பழிகள் போடும் திட்டத்தை வகுத்துள்ளார்கள். மேற்குலக நாடுகளினதும் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் உதவிகளும் இருந்தால் மட்டும் தான் கோத்தபாஜாவின் திட்டத்தை முறியடிக்கலாம். http://www.jvpnews.com/srilanka/87590.…
-
- 2 replies
- 901 views
-
-
கோத்தா விவகாரத்தினால் கூட்டு எதிரணிக்குள் பிளவு அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில், கூட்டு எதிரணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம், நேற்று முன்தினம் இரவு மகிந்த ராஜபக்சவில் இல்லத்தில் இடம்பெற்றது. பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை, தாமரை மொட்டு சின்னத்தில், கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், முன்னெடுப்பது என்று இணக்கம் காணப்பட்டது. கூட்டத்தின் முடிவில், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம், கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நிறுத…
-
- 0 replies
- 216 views
-
-
[செவ்வாய்க்கிழமை, 30 சனவரி 2007, 22:50 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் அடுத்த இரண்டு வருட அபிவிருத்திக்கான நிதியாக 4500 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புக்களும் இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு இன்று அறிவித்துள்ளது. காலியில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற 2007 ஆம் ஆண்டிற்கான சிறிலங்காவுக்கான அபிவிருத்திச் சபை மாநாட்டில் கலந்துகொண்ட உதவி வழங்கும் கொடையாளி நாடுகளும், நிதி அமைப்புக்களும் அடுத்துவரும் மூன்று வருட காலத்துக்காக இந்த உதவியை வழங்க இணங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் மாநாட்டின் இறுதியில் இன்றுமாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இந்தத் தகவல்…
-
- 4 replies
- 1.5k views
-