ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
சிங்கள ராணுவத்தின் உதவியுடன் குடியிருப்பாளரை வெளியேற்றிய புலத்து உரிமையாளர். புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்று யாழிற்கு சென்று ராணுவத்தின் உதவியுடன் தமது வீட்டில் குடியிருந்த குடும்பம் ஒன்றை பலாத்காரமாக வெளியேற்றியுள்ளது. . நேற்றுச் செவ்வாய்க்கிழமை மதியம் பொன்னையா வீதி, ஆறுகால்மடம், ஆனைக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றது. . வெளியேற்றப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் பாடசாலைச் சீருடையில் வீதியில் நின்றிருந்ததோடு மற்றைய சிறுவர்கள் பசியினால் அழுதவண்ணம் வீதியில் நின்றிருந்தனர். குறிப்பிட்ட வீட்டில் வாடகைக்கு குடி யிருந்து வந்த குடும்பத்தை அந்த வீட்டுக்கு முன்னால் வசிக்கும் குடும்பத்தினரே அங்கு குடியமர்த்தியுள்ளனர். . உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அவர்களி…
-
- 2 replies
- 655 views
-
-
இரணைமடு தனியார் விடுதியை நேற்று விடுவித்தது இராணுவம் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுச் சந்தியில் இராணுவத்தின் பிடியில் இருந்த ஒரு ஏக்கர் நிலப்பரப்புடன் கூடிய தனியார் விடுதி மாவட்டச் செயலரிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளது. உரிமையாளரிடம் அதனைக் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியத்து வம் வாய்ந்த இரணைமடுச் சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதியை, பாதுகாப்புத் தரப்பினர் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். போர் முடிவுக்கு வந்ததிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் அத…
-
- 0 replies
- 305 views
-
-
‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கம் உலகத் தமிழினத்துக்கு வலிமை சேர்க்கும் – விடுதலை இராசேந்திரன் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் ‘ஈழப் பிரச்சினையில் ஊடகங்கள் போக்கு’ என்ற தலைப்பிலும், தகவல் தொழில் நுட்பத் துறையினர் லயோலா கல்லூரியில் நடத்திய ஈழத் தமிழர் கருத்தரங்கிலும் பங்கேற்ற தமிழகத்திலுள்ள இதழியலாளரும் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆகிய விடுதலை இராசேந்திரன் அவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசுக் குறித்து ஆற்றிய உரையிலிருந்து: உலக வரலாற்றில் விடுதலைப் போராட்டத்தில் புதிய அத்தியாயங்களை எழுதிய இயக்கம் – விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை உலக நாடுகளின் பல்வேறு விடுதலைப் போராளிகள் இயக்கங்களே பெருமையுடன் கூறுகின்றன. உலகத்தின் எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்ற…
-
- 0 replies
- 810 views
-
-
சிலை உடைப்பை கண்டித்தும் குற்றவாளிகள் கைது செய்யடாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு பேரணியொன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் மாங்காடு பிரதேசத்தில் இன்று காலை நடைபெற்றது. மாங்காடு மாணிகம்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை இடம்பெற்றது. கோவில்கள் உடைக்கப்பட்டமை, கோவில் உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை ஆகியன தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பவற்றை கண்டித்தே குறித்த கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றது. "யாரிடம் நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்" எனும் தொனிப்பொருளில் …
-
- 0 replies
- 502 views
-
-
விடுலைப்புலிகள் அமைப்புடன் நேரடியான தொடர்புகளை வைத்திருந்த 05 பேர் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி ஒருவரே இவர்களை மீண்டும் அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அரசியல்வாதி புலிகளின் யாழ்ப்பாண கட்டளை தளபதியான தீபனின் நெருங்கிய உறவினர் எனவும் திவயின கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஆனந்தி என்ற பெண், புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95005/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 273 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட 'ஈழம்' வங்கியின் தலைவர் எனக்கூறப்படும் ஒருவரை கொழும்பில் தாம் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். கொலின் ரூபன் எனப்படும் இவர் கொழும்பில் உள்ள தங்குவிடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 358 views
-
-
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் முறிகண்டில் உள்ள பழைய முறிகண்டி ஆலயத்தை இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று மோதி அடியோடு பிரட்டியிருந்தது. பன்னெடுங்காலமாக இருந்த தொன்மை மிகுந்த ஆலயத்தை பிரட்டிய செயற்பாடு இப்பகுதி மக்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் இந்து ஆலயங்கள் பலவும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியமை, விக்கிரகங்கள் அழிப்பு என தொடர் சம்பவங்கள் இடம்பெற்று வந்த வேளை விபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆனால் எதிர்பாராத விபத்தினாலேயே ஆலயத்தில் தமது வாகனம் மோதுண்டதாக வாகனச்சாரதி தெரிவித்தார். திருமுருகண்டிப் பிள்ளையார் ஆலயம் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. அதற்கு முன்பாக பழைய முறிகண்டியிலேயே இந்த ஆலயம் இருந்ததாகக் கூறப்படுகிற…
-
- 1 reply
- 407 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் மொழியில் வழங்கப்படாதமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் குற்றம் சுமத்தியதுடன், தமிழ் மொழியை அரச மொழியாக அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொண்டும் இன்றுவரை எமது மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் ஆவேசப்பட்டார். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சுமந்திரனின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தவறுக்கு மன்னிப்புக்கேட்பதாக அறிவித்ததுடன் உடனடியாக இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, சிறப்புரிமை பிரச்சினை ஒன்…
-
- 3 replies
- 454 views
-
-
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடா கிளை ஒழுங்குபடுத்தியிருந்த, ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்க, கடந்தவார இறுதியில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கனடாவுக்குச் சென்றிருந்தனர். இதுகுறித்து, சிறிலங்கா அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ள அரச புலனாய்வுப் பிரிவு, இவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் நிகழ்வில் பங்கேற்கவே அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்காவின்…
-
- 0 replies
- 398 views
-
-
வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான இந்தியப் படை மருத்துவப் பிரிவினரின் சேவைக் காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்தக் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வன்னியில் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியப் படை மருத்துவக் குழுவினர் இலங்கை வந்தனர். போரில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கினர். இந்திய மருத்துவக் குழுவில் நிபுணர்கள், பொது மருத்துவர்கள், பெண் மருத்துவ அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய 60 பேர் அடங்கியுள்ளனர். இதுவரைக்கும் 21 ஆயிரம் பேருக்கு அவர்கள் சிகிச்சை வழங்கியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய மருத்துவக் குழு தமது சேவையை வழங்கி வருகின்றது. அப்போ…
-
- 0 replies
- 375 views
-
-
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இல்லாதிருந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போர் இருந்திருக்காது, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இல்லாதிருந்தால், வெற்றி சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க. கொழும்பில் நேற்றுமாலை இடம்பெற்ற சி.ஏ. சந்திரபிறேம எழுதிய, 'கோத்தாவின் போர்' என்ற ஆங்கில நூலின், சிங்கள மொழிபெயர்ப்பான 'கோத்தாபயகே யுத்தய' என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அதிபரின் தலைமையின் கீழும், கோத்தாபய ராஜபக்சவின் முயற்சியினாலும் தான் வெற்றி கிடைத்தது. கடந்தகாலத் தலைமைகள் பலவீனப்பட்டு, தோல்வியை சந்தித்த நிலையில் தான், சிறந்த தலைமைத்துவம் மூலம் கோத்தாபய ராஜபக்ச இதனை …
-
- 97 replies
- 4.5k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சி மற்றும் கடற்படையின் முன்னாள் தளபதியை படைகளின் அதியுயர் பதவியில் அமர்த்துவதற்கு எடுக்கப்படும் முயற்சி என்பவற்றால் படையினர் மத்தியில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக 'லங்கா' வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 501 views
-
-
வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் மோசமான வாழ்க்கை நிலை மற்றும் பருவமழை காரணமாக நோய்கள் பரவ தொடங்கியிருப்பது காரணமாக சிறிலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படப் போகின்றது என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கட்சியின் தேர்தல் அமைப்பாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் 80 விழுக்காட்டினரை இந்த ஆண்டு இறுதிக்குள் மீளக்குடியமர்த்தி விடுவார் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தபோதும், இதுவரையில் சிறிய எண்ணிக்கையானோரே விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் ரணில். இந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் தொடக்கம் அடுத்த ஆண்டு பெப்ரவ…
-
- 0 replies
- 511 views
-
-
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கைக்கு வருகை வந்தடைந்தார். http://www.virakesari.lk/article/19910 நாட்டை வந்தடைந்தார் மோடி சர்வதேச பௌத்த மாநாட்டு வைபவத்தை ஆரம்பித்து வைப்பதற்கும், ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாட்டை வந்தடைந்துள்ளார். மோடி பயணித்த விசேட விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார். தற்போது கொழும்பு, கங்காராமை வி…
-
- 2 replies
- 567 views
-
-
நிரூபித்தால் எம்.பி பதவியைத் துறப்பேன்! - சிறிதரன் சவால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று கோரியே ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை என்றும், நான் அதற்காகவே சென்றேன் என்பதை எவராவது நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சவால் விடுத்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அங்கு சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது, இலங்கை பார…
-
- 1 reply
- 331 views
-
-
பிரிகேடியர் ஜானக விமலரத்னவிற்கு ஆலையடிவேம்பில் கௌரவிப்பு SayanolipavanAugust 7, 2021 (வி.சுகிர்தகுமார் ) அக்கரைப்பற்று இராணுவமுகாமில் இயங்கிவரும் இராணுவத்தின் 241ஆம் படைப்பிரிவின் பிரதானி பிரிகேட் கொமாண்டர் பிரிகேடியர் டபிள்யு.வி.ஜே.கே.ஜானக விமலரெத்தின ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச மக்கள் சார்பாக இன்று பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டார். கடந்த இரு வருடங்களுக்கு மேலாக 241ஆம் படைப்பிரிவின் பிரிகேட் கொமாண்டராக கடமையாற்றி மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கியமைக்காகவும் பதவி உயர்வு பெற்று இராணுவத்தலைமையகத்தில் இயங்கும் ஆட்சேர்ப்பு பணியகத்தின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றமையினை பாராட்டும் முகமாகவும் …
-
- 2 replies
- 348 views
-
-
காஞ்சீபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் பாலவாக்கம் சோமுவின் மகளும், ஊராட்சி மன்ற தலைவியுமான டாக்டர் தமிழரசி-ஐகோர்ட்டு வக்கீல் பரமசிவதாஸ் திருமணம் நீலாங்கரையில் இன்று நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர், ‘’லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு கடற்கரை சாலையில் கடந்த 3 நாட்களாக எங்கு பார்த்தாலும் கொடி தோரணங்களுடன் பாலவாக்கம் சோமு நகரை அலங்கரித்து உள்ளார். ம.தி.மு.க. வீழ்ந்து விட வில்லை. இது ஆயிரங்காலத்து பயிர் என்பதை பறை சாற்றுவதாக இது அமைந்துள்ளது. அண்ணா புகழ் இருக்கிற வரை ம.தி.மு.க. இருக்கும். இது நெருப்பின் மடியில் பிறந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாரும் அழிக்க முடியாது என்பதை எடுத்துக்க…
-
- 2 replies
- 954 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) சிறிலங்கா பேச்சாளர் ஜேம்ஸ் எல்டரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு விடுத்த உத்தரவை மீள்பரிசீலனை செய்யுமாறு பிரித்தானியா விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது. பதிலாக எல்டர் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (21.09.09) வெளியேறிவிட வேண்டும் என்ற இரண்டாவது நினைவூட்டல் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். எல்டரின் வெளியேற்றம் குறித்து சிறிலங்கா மீண்டும் ஒருமுறை சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார். ஆனால், எல்டரின் விவகாரம் குறித்து அரசு மீள்பரிசீலனை…
-
- 0 replies
- 463 views
-
-
வெள்ளம் வடிந்தது உயிரிழப்புகள் 203 96 பேர் மாயம் ஒன்றரை இலட்சம் குடும் பங்கள் பாதிப்பு 9 ஆயிரம் வீடுகள் சேதம் (எம்.எப்.எம். பஸீர், ஆர்.யஷி) நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட வெள் ளம் மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்கள் காரணமாக 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களை பாதிக்கும் விதமாக ஏற்பட்ட இந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக மொத்தமாக ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து…
-
- 0 replies
- 344 views
-
-
உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு! கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் இதுவரையில் மாற்று தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமைக்கு மத்தியில் இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சிலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ அண்மையில் கலந்துரையாடல்கள் எவையும் முன்னெடுக்கப்படவில்லைஎன்றும் அவர் மேலும் கூறினார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும் , உயர்தர பரீட்சைகளை நவம்பர் 15 …
-
- 0 replies
- 191 views
-
-
வெலிக்கடை சிறையில் உண்ணாநிலைப்போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் வெலிக்கடை சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் சிறீலங்கா சிறைக்காவலர்களால் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். எவ்விதமான நீதி விசாரணைகளும் இன்றி கடந்த பல ஆண்டுகளாக வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளால் நேற்றுப் பட்டினிப் போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று அதிகாலை வேளையில் சிறைக்கூடங்களில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளை இழுத்துச் சென்ற சிறீலங்கா சிறைக்காவலர்கள், அவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இதில் முப்பத்தாறு தமிழ் அரசியல் கைதிகள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக நம்பகமான தகவல்…
-
- 2 replies
- 600 views
-
-
இன்று Toronto star இன் இணையத்தள செய்தியில் முகப்புச் செய்தியாக இலங்கைத் தமிழர்கள் தேர்தலில் முகம்கொடுத்த வன்முறைகள் பற்றி இவ்வாறு போட்டுள்ளார்கள். சர்வதேச அளவில் வடக்கு தேர்தலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், அதில் சிங்கள அரசு செய்கின்ற சனநாயக அத்துமீறல்களும் தமிழர்கள் தொடர்பான பார்வையை மாற்றுவதில் பங்களிப்பை செய்யும் என நினைக்கின்றேன். செய்தி. முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது. JAFFNA, SRI LANKA—In the crowded hospital, there are no beds for the beaten. They languish on rugs unrolled across the ward floor, nursing their injuries: a fractured forearm, a gash on the forehead, broken fingers. This is what a “free and fair” election looks like in the Northe…
-
- 0 replies
- 564 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தை வழங்க கோரி போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) மாலை தொடக்கம் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த தமிழ் இளைஞன் கடந்த 2011 ம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சாதாரண பொலிஸ் உத்தியோகத்தராக யாழில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றியுள்ளார். பொலிஸ் சேவையிலிருந்து அண்மையில் திடீரென நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்.இன்று மாலை 6 மணியிலிருந்து குறித்த இளைஞன் தனது பொலிஸ் வேலையை மீண்டும் வழங்க கோரி யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=92120
-
- 0 replies
- 347 views
-
-
தேசிய தலைவரின் வார்தையை மதிப்பவர் எவரும் போர்க்களத்தை விட்டு ஒதுங்கமுடியாது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தைகளை மதிப்பவர்கள் எவரும் போர்க் களத்தை விட்டு ஒதுங்கிப் போக முடியாது! விடுதலைப் புலிகளது இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பலம் பொருந்திய சக்தியாக புலம் பெயர் தமிழர்களே உள்ளனர். தமது தாயக மக்களின் விடுதலைக்காகவும், தாயக மண்ணின் விடுதலைக்காகவும் புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் தேசத்து மக்களையும் அரசையும் தமது நியாயங்களை ஏற்றுக்கொள்ள வைப்பதன் மூலமாக சிங்கள தேசத்திற்கு மேலும் மேலும் பல நெருக்கடிகளை உருவாக்க முடியும். இந்த மக்கள் சக்தியைச் சிதைப்பதற்கான பெரும் திட்டமிடல்களுடன் சிங்கள தேசம் பலரை நம் மத்தியில் ஊடுருவச் செய்து…
-
- 32 replies
- 2.8k views
-
-
வடமாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய பெரும்பான்மையை பெற்றுள்ளதால் சிறு கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவையில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்ல முயற்சிகளுக்கு ஆதரவளி த்தும் விபரீத முயற்சிகளை விமர்சித்து சுமுகமான உறவைப் பேணிச் செல்ல எண்ணியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் முஸ்லிம்கள் உள்ள போதும் அனேகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதால் வாக்களிப்பில் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டதால் கனிசமான வாக்குகளைப் பெற முடியாது போனதென அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக செயற்பட …
-
- 2 replies
- 344 views
-