ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
Nalini, Rajiv murder accused, now Master’s in Computers Jaya MenonPosted online: Thursday, December 20, 2007 at 0000 hrs Print EmailRajiv killing: Her husband and co-accused Murugan is ‘most brilliant’ student, says academic counselor; he too will get MCA Chennai, December 19: Nalini, “accused no. 1” in the Rajiv Gandhi assassination case, will soon be an MCA, most probably with a First Class. Serving a life term in a prison in Vellore, Nalini has just completed her three-year-long Master’s in Computer Applications from the Indira Gandhi National Open University (IGNOU), and could well be among the first batch of convicts to receive a post-graduate degree, possi…
-
- 6 replies
- 2.7k views
-
-
படைத்தளத்தில் புகுந்த கரும்புலிகள் விமான எதிப்பு பீரங்கிகளை கைப்பற்றி அவற்றினால் விமானங்களை அழித்தனர் அநுராதபுரம் விமானத் தளத்துக்குள் புகுந்த விடுதலைப்புலிகளின் அணிகள் அங்கிருந்த விமான எதிப்புப் பீரங்கி நிலை களைப் கைப்பற்றின. அவற்றைக் கொண் டும் விமான நிலையத்தை தாக்கியுள்ளனர். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ஊடகம் தெரிவித்துள்ள மேலும் தகவல்கள் வருமாறு: அநுராதபுரத் தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்அதிகம். அவை குறித்த சரியான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. புலிகளின் விமானங்களைத் தாக்குவதற் காக மேல் எழுந்த பெல் 212 ரக ஹெலி மிகுந் தலையில் வீழ்ந்து நொருங்கியதாக அரசுத் தரப்புக் கூறுகின்றது. ஆனால், விடுதல…
-
- 1 reply
- 2.7k views
-
-
நுணாவில் படைமுகாமில் குண்டுவெடிப்பு. தென்மராட்சி நுணாவில் சிறிலங்காப் படைமுகாமில் நேற்று முன்தினம் இரவு 9.00மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள லேக்கவுஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பலதடவை பலாலிப் படைத்தளம் நோக்கி காயமடைந்த படையினரை எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் இக்குண்டுவெடிப்புத் தொடர்பான தகவல்களை யாழில் உள்ள படைத்தரப்பு முற்றாக மூடிமறைத்துள்ளது. - சங்கதி
-
- 0 replies
- 2.7k views
-
-
அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது. இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால்ää இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் ட…
-
- 14 replies
- 2.7k views
-
-
கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி கேட்டு பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்! ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம் - "கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" - இப்படி தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கின்றார் வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தலைமையிலான கட்சி பெரு வெற்றியீட்டியமையைப் பாராட்டித் தாம் வரைந்த கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார் அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் அம்மணி …
-
- 33 replies
- 2.7k views
-
-
சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர் வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுத எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த நூலை வெளியிடுவதற்கு இருக்கிறார் டெக்கான் குரோனிக்கலின் ஆசிரியரான பகவான் சிங். இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸின் நண்பர் ஆவார் , இவர் 2009 ஆண்டிற்கு பின்னர் சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். அங்கே நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங், சிங்கள அரசினரைச் சந்தித்துவிட…
-
- 35 replies
- 2.7k views
-
-
பெப்ரவரி 04 ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை பறிக்கப்பட்ட கரிநாள்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சிறிலங்காவின் 72வது சுதந்திர தினத்தை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சிறீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச அதிபராக கோத்தபாய ராஜபக்ச அநுராதபுரத்தில் பதவியேற்ற நிலையில் சிறீலங்காவின் 72ஆவது சுதந்திர தினம் இன்னும் சில தினங்களில் சிங்களப் பேரினவாதம் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைத்துக் கொண்டாடத் தயாராகின்றது. ஈழத்தமிழ் மக்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை, ஏனெனில் இந்நாள் வட…
-
- 8 replies
- 2.7k views
-
-
22 ஆம் திகதிக்குப் பின் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது: சூரியாராச்சி. விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் புதுமைமிக்க யுத்தம் என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார். பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்…
-
- 11 replies
- 2.7k views
-
-
அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறையில் பதற்றம் : பள்ளிவாசல் மீது தாக்குதல் அம்பாறை நகரத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் இனந்தெரியா நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது என அம்பாறை தலைமைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது. இந்த சம்பவத்தால் இந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் …
-
- 31 replies
- 2.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கனடாவை மையமாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்து வருவதாக கனடாவின் பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும், கனடாவில் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சில தலைவர்கள் இருப்பதாகவும் கனடா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், தெற்காசிய ஆட்கடத்தல்காரர்களால் மேலும் இரண்டு கப்பல்களில் பிரிட்டஷ் கொலம்பியா கடற்பரப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அதில் 50ற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவிற்குச் …
-
- 0 replies
- 2.7k views
-
-
புலிகளின் வான்பலம் குறித்து குழப்பமடைய தேவையில்லை [30 - March - 2007] * இந்திய விமானப்படை புதுடில்லிக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்குள்ள வான்வழி செயற்பாட்டு திறமை குறித்து அதிகளவு குழப்பமடையத் தேவையில்லையென இந்திய அரசாங்கத்துக்கு கூறியுள்ள இந்திய விமானப்படையினர் எதிர்காலத்தில் ஆகாய மார்க்க பாதுகாப்பு ராடார்களை வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தால் அந்த வேண்டுகோள் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளனர். இந்த ராடார்களுடன் தோளிலிருந்து ஏவும் ஏவுகணைகள் (ஐ.ஜி.எல்.ஏ) (IGLA shoulder- tired missiles), நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை (SAM) முறைமைகளையும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்ய முடியுமென இந்திய விமானப்ப…
-
- 5 replies
- 2.7k views
-
-
புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்கைக் கீழே வைத்த விட்டு வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மஹிந்தவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்பு பேச்சாளனுமான கெஹெலிய தெரிவித்துதுள்ளார். சீனா சென்ற மஹிந்த இந்தச் செய்தியை உலக நாடுகளுக்கு உறுதியாகத் தெரிவித்து விட்டுதான் நாடு திருபினார். என்றார் மேலும் : புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 வருடங்களாக இந்த நாட்டை அலைக்கழிக்க வைத்துவிட்டார். அவரால் இந்த நாட்டுக்கு எற்பட்ட உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் மிக அதிகம். அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரபாகரனின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. புலிகள் பலமிழந்த போதெல்லாம் அவர்கள் யுத்த நிறுத்தத்திற்கு வந்து…
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு தாக்குதல் படையினரின் விநியோகத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது தமிழிழ விடுதலைப்புலிகளின் ஆழ்கடல் தாக்குதல் வலிமைகள் ஸ்ரீலங்காப்படையினருக்கு பாரிய ஆபத்தை கொண்டு வரலாம் என சண்டேடைம்ஸ் ஊடக இதழ் தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலை அவர்கள் முல்லைத்தீவு கடலில் நடத்திய ஸ்ரீலங்கா கடற்படையினரின் டோரா படகின் மீதான தாக்குதலின் பின்னரே இந்த ஆபத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 14 கடற்படையினர் பலியானதாக தமிழிழ விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர் தமது தரப்பில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்ததாகவும் தமிழிழ விடுதலைப்புலிகள் அறிவி;த்திருந்தார்கள். எனினும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் படகு தாக்குதலுக்கு உள்ளான பின்னர் தேடுதலை நடத்தியவர்களின் தகவல்படி ஸ்ரீலங்…
-
- 3 replies
- 2.7k views
-
-
பிரபாகரன்...? விடை சொல்கிறார் உருத்திரகுமாரன் சமஸ் ''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம். ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் …
-
- 0 replies
- 2.7k views
-
-
மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.7k views
-
-
அமெரிக்காவில் அல்-ஹைடாவின் அடுத்த தாக்குதலுக்கு புலிகள் அமைப்பு உதவி [19 - April - 2007] ஒசாமா பின்லேடனின் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்காவில் மேற்கொண்ட இரட்டை கோபுரத் தாக்குதல்களின் பின்னர் அல்-ஹைடா சந்தேக நபர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்குள் போலிக் கடவுச்சீட்டுகளைப் பிரயோகித்து பிரவேசிப்பதைத் தடுப்பதற்காக கடவுச்சீட்டுகளைப் பரிசோதனை செய்வதில் பல்வேறு கடுமையானதும் நுணுக்கமானதுமான நடைமுறைகளை அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலம் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் அல்-ஹைடா அமைப்பினர் ஐக்கிய அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக முயற்சித்து வருவதாகவும், இதற்காக அமெரிக்காவுக்குள் அமெரிக்க …
-
- 11 replies
- 2.7k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.வடமராட்சி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகையில் காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனின் படத்திற்கு நிறப்பூச்சு (பெயின்ட்) பூசப்பட்டு உள்ளது. வடமராட்சி பகுதியில் ‘கம்பெரலிய அபிவிருத்தி யுத்தம் ‘ எனும் தொனிப்பொருளின் ஊடாக வடமராட்சி கொட்டடி சித்தி விநாயகர் ஆலய கேணி மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற வீதி ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டன. புனரமைப்பு செய்யப்பட்ட கேணி மற்றும் வீதி ஆகியன மக்கள் மயப்படுத்தப்பட்ட பின்னர் அது குறித்த பதாகைகள் அருகில் காட்சி ப்படுத்தப்பட்டு…
-
- 15 replies
- 2.7k views
-
-
புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான…
-
- 0 replies
- 2.7k views
-
-
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு! கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த கோபுரத்தை திறந்து வைக்கவுள்ளார். 356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் 12 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் 80 வீதமான நிதி சீன அரசாங்கத்தின் நன்கொடையாகும். இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிக்கான அனைத்து ஆலோசனை சேவைகளையும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் வழங்கி இருந்தனர். நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் காணப்படுகின்றன. …
-
- 15 replies
- 2.7k views
- 1 follower
-
-
இலங்கைப் பிரச்சினையில் 2கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவுக்கு முன் ராஜீவுக்குப் பின் என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டு விட்டது. ராஜீவ் மட்டும் கொலை செய்யப்படாமல் இருந்தால் இந்த இலங்கைப் பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும். 1989ல் ராஜீவ் மரியாதை நிமித்தம் டில்லியில் தமிழக முதல்வர் டில்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ், தாங்கள் இரு நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசோலி மாறனும் உடன் இருந்தார். இலங்கைப் பிரச்சனையில் தீர்வு காண முடியுமானால் அது கருணாநிதியால் தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ், மறுநாள் காலை வெளியுறவுத் துறை செயலாளர் நட்வர் சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார…
-
- 22 replies
- 2.7k views
-
-
யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் முன்னேற முடியாது: மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி [சனிக்கிழமை, 23 யூன் 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் முன்னேற முடியாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தினால் கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: யாழ். குடாவில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் உட்பட வாரத்தின் ஏழு நா…
-
- 3 replies
- 2.7k views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சமஷ்டி முறைமையே சிறந்த தீர்வுத்திட்டமாகவுமென நேர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். “இலங்கைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வுத்திட்டமாக சமஷ்டி முறமையை முன்வைக்கலாம். கடந்த 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இந்தத் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்தத் தீர்வுமுறை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களின் பெரும்பாலான மக்களும் சர்வதேச சமூகமும் அங்கீகரித்தன. எனவே, சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது” என எரிக் சொல்ஹெய்ம் அல்ஜசீரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூறினார். சமஷ்டிமுறையானது ஐக்கிய இலங்கைக்குள் இடம்பெறவேண்டும் என்பதே சர்வதேசத்தின் விருப்பம் எனக் குறிப்பிட்ட அவர், அதனையே சர்வதேசம் எதிர்ப…
-
- 10 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பின் சுத்துமாத்துக்கள் அம்பலம்! சனி, 30 ஏப்ரல் 2011 17:00 .இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை சட்ட சிக்கலில் அகப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாடி உள்ளது இலங்கை அரசு. அமெரிக்காவும் பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக புலம் பெயர்ந்த தமிழருக்கு ஆதரவாக செயற்படும் போது இந்தியா இலங்கை அரசு தீர்வு ஒன்றை முன்வைக்கும் பட்சத்தில் இலங்கைக்கு ஆதரவு தர முன்வந்துள்ளது. ஐ.நாவின் சட்ட சிக்கலில் இருந்து தன்னை தப்ப வைத்துக்கொள்ள இலங்கை அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பை பகடைக்காய்களாக பயன்படுத்த உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து இலங்கை அரசு ஒரு தீர்வை நோக்கி சாதகமாக நகர்வதாக இந்தி…
-
- 4 replies
- 2.7k views
- 1 follower
-
-
இலங்கையை பிறப்படமாகக் கொண்ட இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டனர்:- ஏழு மாத ஆண் குழந்தை, மற்றும் ஒரு ஐந்து வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு இளம் குழந்தைகளின் சடலங்களையும் அவர்களின் தாயாரது சடலத்தையும் பிரித்தானிய பொலிசார் மீட்டுள்ளனர். நேற்றைய தினம் வியாழக்கிழமை (09.01.14) பிற்பகல் லண்டன் நேரம் 5.20ற்கு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து வடமேற்கு லண்டன் Woodgrange Close பகுதிக்கு சென்ற பொலிசாரே இந்த சடலங்களை மீட்டுள்ளனர். இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகேஸ்வரன் என்ற இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த பின் தானும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும், தாயினுடைய மரணம்…
-
- 32 replies
- 2.7k views
- 1 follower
-
-
சகோதர தமிழர்களை கொன்றுவிட்டு யுத்தவெற்றிவிழா கொண்டாட முடியாது யுத்தத்தில் எமது சகோதர இனத்தவரான தமிழர்களை கொன்றுவிட்டு நாம் யுத்த வெற்றிவிழாக் கொண்டாட முடியாது. விடுதலைப்புலிகள் என்றாலும் அவர்களும் இலங்கையர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. சிங்கள யுத்த வெற்றிவிழா எனக்கூறி மீண்டும் தமிழர்களை பிரிவினைவாதிகளாக்கி அவர்களை ஓரம்கட்டும் செயற்பாடுகளை கைவிட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார். யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர வடக்கில் மக்களுக்கு உரிமை உண்டு. அதை நாம் தடுக்க மாட்டோம். அவர்கள் விரும்பிய இடங்களில் அவர்களை நின…
-
- 49 replies
- 2.7k views
-