Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம் (இன்றைய நிலை) கொழும்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கொழும்பில் மாத்திரம் இதுவரை 21ஆயிரத்து 111 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து ஆயிரத்து 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 99 ஆயிரத்து 314 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 இலட்சத்து 6 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று …

    • 3 replies
    • 509 views
  2. செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது – கால நிலை சீரின்மையால் அகழ்வை ஆரம்பிப்பதில் தாமதம் adminOctober 13, 2025 செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு பணிகள் ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது , அகழ்வு பணிக்காக பாதீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு கோர பட்ட நிதியை நீதி அமைச்சு விடுவித்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை ஆரம்பிப…

  3. கொழும்பு நகரை அண்மித்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் புகையிரத தண்டவாளத்திற்கருகில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 7.15 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் புகையிரத தண்டவாளத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு காத்திருங்கள் http://www.tamilskynews.com/

  4. [size=4]இலங்கையின் பொருளாதாரம், இவ்வாண்டில் 6.7 சதவீத வளர்ச்சியை அடையுமென அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்தது. இலங்கையில் 8 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென ஆரம்பத்தில் கூறிய நாணய நிதியம், பின்னர் அதனை இரண்டு முறை குறைத்தது. இறுதியாக 6.8 சதவீத வளர்ச்சி ஏற்படுமென நாணய நிதியம் எதிர்வுகூறியிருந்தது. எதிர்வரும் ஆண்டிலும், பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற அளவாக இருக்குமென அது குறிப்பிட்டது. இருப்பினும், இந்தியா உட்பட்ட பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருக்குமெனவும் அனைத்துலக நாணய நிதியம் குறிப்பிடுகிறது.[/size] [size=4]http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12959[/size]

  5. தமிழ் சான்றோர் பேரவை நிறுவனரும்,நந்தன் பத்திரிகையின் ஆசிரியருமான நா.அருணாசலம் வயது 76. சென்னையில் நேற்று மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்...நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் கிராமத்தில் பிறந்த இவர் பல வருடங்கள் வருவாய்துறையில் பணியாற்றினார்..1986 ல் அடையாறு மாணவர் நகலகத்தை தொடங்கி நடத்திவருகிறார்.. தமிழ் மீதும்,தந்தை பெரியாரின் மீதும் பற்று கொண்டவர்.. அத்துடன் நந்தன் வழி என்கிற பத்திரிகையையும் நடத்திவந்தார்.. 1995 ல் பெரியார் ##தமிழிசை மன்றத்தை தொடங்கி தமிழிசை சாதனையாளர்களை வருடந்தோரும் கவுரவித்துவந்தவர்..##தமிழ் சான்றோர் பேரவை தொடங்கி நடத்தினார் . அதன்சார்பாக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத த்தில் தமிழ்வழிக்கல்வியை வலியுருத்தி 102 தமிழ் அறிஞர்களி…

  6. கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவர் புலிகளை அழிப்பதைத்தவிர வேற வழிஏதும் இல்லை என்று கருத்துக்கூரினாராம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வந்ததாம், அறிந்தவர்கள் மேலதிக செய்திகளைத்தாருங்கள்.

  7. ஐநா அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதமளவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தேசிய இயக்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். அண்மையில் இலங்கைக்கு வந்த ஐக்கிய நாடுகள் தொழினுட்ப குழுவின் அறிக்கையும் இந்த பேரவை கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் குழுவினர் இலங்கைக்கு வர சந்தர்ப்பம் அளித்தமை தொடர்பில் வசந்த பண்டார தமது கண்டனத்தை வெ…

  8. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கலாசாரப் பேரவை நிகழ்வில் நடிகர் நாசர் 2016-05-30 21:59:55 (பாஸ்­கரன் கதீஷன், பாரூக் ஷிஹான்) முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பில் வன்­னி­ குறோஸ் கலா­­சாரப் பேர­வையின் ஏற்­பாட்டில் மாபெரும் முத்­தமிழ் கலை­நி­கழ்வு நேற்­று­ முன்­தினம் மாலை வன்னி நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிவ­மோகன் தலை­மையில் இடம்­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக தென்­னிந்­திய நடி­கரும் தென்­னிந்­திய நடிகர் சங்­கத்தின் தலை­வ­ரு­மான நாசர் கலந்து சிறப்­பித்­துள்­ள­துடன் தென்­னிந்­திய நடிகர் சண்­மு­க­ராசா, இலங்கை தமி­ழ­ரசு கட்சி தலைவர் மாவை சேனா­தி­…

  9. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய பிரதமருக்கு இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன?:கேட்கிறார் வியாழேந்திரன் கிழக்கு முதலமைச்சர் தொடர்பான பிரச்சினையை ஆராய உடனடியாக கூட்டத்தினை கூட்டிய பிரதமருக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய இதுவரையில் கூட்டத்தினை கூட்டமுடியாமல்போன காரணம் என்ன என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மைலம்பாவெளி,காமாட்சி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள 25 வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்த…

  10. தொடரும் கைது நடவடிக்கை, அச்சத்தல் மீனவர்கள்.! மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமேசுவரம், தங்கச்சி மடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களிடமிருந்து ஒரு படகு கைப்பற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவு கடற்பரப்பில் நேற்று 600 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எச்சரித்துள்ளதுடன் 6 பேரை கைது செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்றைய மீனவர்கள் தாங்களும் சிறைப…

  11. தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று! தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும் புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர…

  12. இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலில் இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக விசனம் தெரிவித்துள்ள சர்வதேச வழக்குரைஞர்கள் சங்கத்தின் மனித உரிமைகள் கண்காணிப்பகம், சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை உயரதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக வந்த அறிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது விசனத்தை தெரிவித்துள்ளது. நீதித்துறையை பயமுறுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த தாக்குதலைக் கருதுவதாக அவ்வமைப்பு விடுத்துள்ள கடித…

  13. கரப்பான்பூச்சியை கண்டு பயந்த ஹொங்கொங் நாட்டு பெண்ணுக்கு உதவுவது போல் அவருடன் பாலியல் சேட்ட்டையில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். அங்கு தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு பெண் ஒருவர் அறைக்குள் கரப்பான்பூச்சியைக் கண்டுள்ளார். அலறியடித்துக்கொண்டு அங்கிருந்த ஊழியரிடம் இதனை தெரிவித்துள்ளார். பின்னர் கரப்பான்பூச்சிக்கு மருந்து அடிக்க வந்த இளைஞர் பெண்ணை கட்டிப் பிடித்து தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த போது, அப் பெண்மணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அத்துடன், குறித்த வீட்டிற்கு பொலிஸார் …

  14. சட்டவிரோத கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதைத் தடுக்கத் தேவையான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் - குருநாகலில் ஜனாதிபதி Published By: Vishnu 07 Dec, 2025 | 09:04 PM மீள்குடியேற்றத்திற்காக மெத்தெகெட்டிய, கொகரெல்ல சங்கமு ராஜமஹா விஹாரை விகாராதிபதியினால் 20 ஏக்கர் காணி எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். உருவாக்கப்பட இருக்கும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் கீழ் சட்டம் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக தனிப் பிரிவு நிறுவ எதிர்பார்ப்பதாகவும் அதன் கீழ் இந்தப் பிரச்ச…

  15. தமிழீழ விடுதலைப் புலிகளை அவுஸ்திரேலியா தடைசெய்யக் கூடாது என தமிழ் சமூகம் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்யக் கூடாது என அங்கு வாழும் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் கோரியுள்ளனர். அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஸ்டிபன் ஸ்மித், தமது நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வது தொடர்பாக ஆராய்வதாகக் குறிப்பிட்டதை அடுத்தே இந்தக் கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகமயைச் சந்தித்த பின்னரே ஸ்மித் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவுஸ்திரேலிய தமிழ் சம்மேளனத்தின் தலைவர் சிற்றம்பலம் ராகவன் இது தொடர்பில் கருத்துரைக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளை அவுஸ்திரேலியாவில் தடைசெய்தால்…

  16. இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. [size=3][size=4]தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.[/size][/size] தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. [size=3][size=4]ஷிரானிக்கு எதிராக மொத்தத்தில் 14 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.[/size][/size] [size=3][size=4]சுமார் இரண்டு கோடி ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்து ஒ…

  17. பிரதமரின் வீட்டின் முன்பாக வெடி மருந்து கொண்டு சென்றார்களாம் நால்வர் கைது: களுத்துறை மாவட்டம் ஹொரண பிரதேசத்தில் உள்ள பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் இல்லத்திற்கு எதிரில், முச்சக்கர வண்டியில் வெடி மருந்தை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியையும், அவற்றை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 4 பேரையும் தாம் கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 4.5 கிலோ கிராம் வெடி மருந்து, 4 ஜெலக்னைட் குச்சிகள், சிறிதளவு அமோனியம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஹொரணை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றை தாம் கடுவல பிரதேசத்திற்கு கொண்டு செல்விருந்ததாக கைதுசெய்யப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

  18. l அண்மைக்காலங்களில் கொழும்புடன் நட்புறவாக இருப்பதாக நோக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கத்தை அதிகளவுக்கு விமர்சித்து வருகின்றது. இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவுக்குப் பின்னர் கூட்டமைப்பின் மற்றொரு தலைவரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனத்தை எழுப்பியிருக்கிறார். கடந்த வார முற்பகுதியில் அமெரிக்காவில் இருந்த அவர் இலங்கையின் இன, மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸின் உள்ளூர் அரசியல் குழு மத்தியில் உரையாற்றுகையில், தமிழர்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்த நன்நிலை உணர்வு இப்போது ஏமாற்றமாக திரும்பிக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார். பாதுகாப்புப் படைகளிடமிருந்து தனியார் காணிகளை…

  19. Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள் Dec 28, 2025 - 01:11 PM சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே "டித்வா" புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர். அதற்கமைய குறித்த நிதியத்திற்கு 108,000 ரூபாவினை பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வொன்று நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் க…

  20. 08 Jan, 2026 | 04:17 PM இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது. இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்…

  21. நீதியை மறுக்கும் இலங்கை! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர், நீதியை எதிர்பார்த்த தமிழினத்திற்கு வழமைபோன்றதொரு கூட்டத் தொடராகவே நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐநா வெளிப்படுத்தியிருக்கும் அதிருப்தி என்பது தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசு முன்னெடுக்க தயங்கும் செயற்பாடுகளின் பெறுபேறே. இலங்கை அரசு, நீதி, ஜனநாயகம், சமத்துவம், வெளிப்படைதன்மை, பொறுப்புக்கூறுதல் முதலியவற்றில் தன்னை புதுப்பிக்க மறுக்கும் செயற்பாடே. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் பலவற்றிலும் இலங்கையின் புதிய அரசு, பழைய அரசின் மனநிலையிலிருந்து வில மறுத்துள்ளமையும் இங்கு புலப்படுகிறது. ஈழ…

  22. [size=4]யுத்தக் குற்றம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம்: கூட்டமைப்பு வலியுறுத்தல் [/size] [size=4][Friday, 2012-11-30 07:50:50][/size] [size=4][/size] [size=4]அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளாது, இராணுவ மட்டத்தில் மட்டுமே விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனால் சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐநா தூதுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கை வந்துள்ள ஐநாவின் ஆசிய பிராந்திய அபிவிருத்தி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியங்களுக்கான குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹிட் ரோக்கி டோன் தலைமையிலான தூதுக…

  23. (ஆர்.யசி) அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகன தெரிவித்தார். பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளின் போது அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடந்துகொண்டதாக பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நெருக்கமான செயற்பட்டு வருகின்ற பொது சுகாதாரத்…

    • 2 replies
    • 456 views
  24. என்னதான் நடக்கிறது வன்னியில் - நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி வல்லூறுகளைப் போல வட்டமிட்டு குண்டுவீசும் போர் விமானங்கள், இன்னொரு பக்கம் எறிகணை, ஏவுகணை வீச்சு என்று எக்கச்சக்கப் பீதியில் கிடக்கிறது ஈழத்தின் வன்னிப்பகுதி. அங்கே என்ன நடக்கிறது என்பதே தெரியாத அளவுக்குச் சூழ்ந்து கிடக்கிறது போர்மேகம். இந்த நிலையில், இருட்டைக்கிழிக்கும் ஒரு வெளிச்சக் கீற்றாய், வன்னிப் பகுதியில் உண்மை நிலவரத்தைக் கண்டறிய, தன் உயிரையும் துச்சமாக மதித்து அங்கு சென்று திரும்பியிருக்கிறார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்த மூர்த்தி. கொழும்பு திரும்பியுள்ள அவரிடம் நாம் தொலைபேசி மூலம் பேசினோம்... கடும்போர் நடந்து…

  25. பொறியியல் துறையில் விஞ்ஞானியாக வருவது இளம் விஞ்ஞானி அபிஷேக்கின் இலட்சியம் என அபிஷேக்கின் தந்தையான சதீஸ் குமார் சிவராமு எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். மேலும்,தமது மகனின் திறமையினை அடையாளம் கண்டு பலர் பாரட்டுகளை தெரிவித்தவன்னம் உள்ளனர் என்வும் குறிப்பிட்டார். மலையகத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி அபிஷேக் தேவர் சதீஸ்குமார் பூண்டுலோயாவை பிறப்பிடமாக கொண்டவர். பூண்டுலோய தமிழ் மகா வித்தியலாயத்தில் 6ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இவர் நடைப்பெற்ற புலமைப்பரீட்சையில் திறமையாக சித்தியடைந்தவர். இதேவேளை, அபிஷேக் சிறிய மின் உபகரணங்களைப்பயன்படுத்தி லொறியும்,பொக்கோ போன்ற இயந்திரங்களை கைப்பணி பொருட்களை வைத்து செய்துள்ளார். …

    • 1 reply
    • 591 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.