Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்காவின் 3 இலட்சம் மக்கள் அடைபட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் திறந்த வெளிச்சிறைச்சாலகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உலகம் ஒரு பக்கம் அமைதி காக்க, இன்னொரு பக்கம் கிரீஸ் நாட்டின் லெஸ்வோஸ் நகரில், பகனி எனும் தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் 160 மக்கள் பற்றி, இரகசியமாக வெளியிடப்பட்ட ஒரு வீடியோ தொகுப்பு, அலட்டிக்கொள்ளாமல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில், பிடிபட்ட சுமார் 160 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், 180 நாட்களுக்கு மேலாக, தனித்தனியான 200 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இரு அறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை விடுவிப்பது பற்றியோ, அல்லது மேலதிக சட…

  2. தமிழீழ விடுதலைக்காய் தம்முயிரை ஆகுதியாக்கிய விஜயராஜ் நினைவுநாள் இன்று . தமிழீழ வரலாற்றில் அவரது தியாகத்திற்காக விஜயராஜ் என்றென்றும் நன்றியுடன் நினைவுகொள்ளப்படுவார்.

    • 3 replies
    • 407 views
  3. 2013 ஆம் ஆண்டிற்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது ஈழக் கவிஞர் அகரமுதல்வனுக்கு . ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சியின் பளை என்கிற ஊரில் பிறந்த கவிஞர் அகரமுதல்வன் எமது தேசம் குறித்த மக்களின் வலிகளை தனிமனித உணர்வுகளை கவிதையினூடாக எழுதுவருகிறார். ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கியங்கள் நடந்து முடிந்த போருக்கு பிறகு இன்னும் காத்திரமாகவும் வீரியமாகவும் வளர்ந்து வருவதில் இவருக்கும் பெரிய பங்குண்டு . அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்ட “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” எனும் இவரின் கவிதைத் தொகுப்பிற்கு தமிழ் இலக்கிய பரப்பின் முக்கியமான எழுத்தாளராக இருந்த ஜெயந்தன் நினைவாக வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது-2013 அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இருபத்தொராவது வயதில் இந்த விருதினைப் பெறு…

  4. தண்ணீர் உரிமம் தருவதாகக் கூறி பணம் வசூலித்த கும்பலுக்கு யாழில் நடந்த கதி யாழ்.மாவட்டத்திற்கு தண்ணீர் விநியோகஸ்த்தர் உரிமம் தருகிறோம் எனக் கூறி பலரிடம் பணத்தை கொள்ளையிட்டவர்கள் யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளனர். “அக்குவா சேவ்” என்ற பெயரில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர்கள். தமது தண்ணீரை யாழ்.மாவட்டம் முழுவதற்கும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை வழங்குவதாகக் கூறி யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கு மேற்பட்டவர்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கிய பலருக்கு தண்ணீர் வழங்கப்படாததுடன் சிலருக்கு வழங்க…

  5. (ஆர்.யசி) நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது. மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எந்த நேரத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்பதே தெரியாத அச்சுறுத்தல் நிலையில் உள்ளோம் எனவும் அவர் கூறினார். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே…

  6. யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வழமையான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் நடமாடுவதை அவதானித்திருந்தனர். இதனையடுத்து குறித்த இருவரிடமும் கடற்படையினர் விசாரனைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே இருவரிடமும் இரு…

    • 1 reply
    • 277 views
  7. நாட்டின் முக்கிய நபர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தற்போது வழங்கப்பட்டுவரும் பெரும் எடுப்பிலான பாதுகாப்பை குறைக்கும்படியும் அதற்கு செலவிடப்படும் பணத்தை வேறு தேவைகளுக்கு செலவிடலாம் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. வடக்குக்கு விரைகின்றார் இரா.சம்பந்தன்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு அவரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வடக்குக்கு விரைந்துள்ளார். தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே அவர் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கெதிராக தமிழரசுக் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. http://uthayandaily…

  9. சிறிலங்காவில் மக்கள் அச்சம் இன்றி வாழும் நிலை ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் சிறீ சிறீ ரவிசங்கர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 785 views
  10. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பெற்றோலிய வளங்கள் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவிருந்தது நிலையில் வெள்ளைப்பூண்டு, லிற்றோ காஸ் தொடர்பில் அரச, எதிர்க்கட்சியினரிடையில் நீண்ட நேரமாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் எதிர்க்கட்சி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் முக்கியமான விவாதம் இருப்பதாகவும் அமைச்சர் நேரத்தை வீணடிப்பதாகவும் கூறி இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் அரசு தரப்பினர் அமைச்சருக்கு விளக்கமளிக்கும் உரிமை உள்ளதென வாதிட்டு அமைச்சரை விளக்கமளிக்க அனுமதிக்குமாறு ச…

  11. 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – செல்வம் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்க…

    • 0 replies
    • 295 views
  12. பொத்துவில், புத்தளத்தில் ராடர்களைப் பொருத்த ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவி சிறிலங்காவில் காலநிலை பற்றிய தகவல்களை தரக்கூடிய ராடர் வலையமைப்பை நிறுவுவதற்கு, ஜப்பான் 3,422 ரூபா நிதியுதவியை ஜப்பான் வழங்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. சிறிலங்காவின் நிதியமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில், ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகநுமாவும், நிதியமைச்சின் செயலரும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த உதவியின் கீழ் பொத்துவிலிலும், புத்தளத்திலும் இரண்டு ராடர் நிலையங்கள் அமைக்கப்படும். இங்கு டொப்ளர் ராடர்கள் பொருத்தப்பட்டு துல்லியமான காலநிலைத் தகவல்களைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த ராடர் நிலையங்களுக்கும், வ…

    • 0 replies
    • 243 views
  13. ஏறாவூர் பொலிசார் இளைஞர்களை தாக்கிய சம்பவம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (திருக்கோவில் நிருபர்) ஏறாவூர் பொலிஸார் பொதுமக்களை தாக்கிய சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார். ஏறாவூரில் இரு இளைஞர்களை; மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடக அறிக்கை ஒன்றை இன்று சனி…

  14. திருகோணமலை, குச்சவெளி கடற்கரையோரத்தில் இருக்கும் 7 கிலோ மீற்றர் தமிழருக்கு சொந்த மான காணிகளை பயன்படுத்தாத காணிகள் என்ற வரையறைக்குள் உட்படுத்தி கிட்ட தட்ட 400- 500 வரையான காணிகளை அரசாங்கம் சுவீகரித்தமை தெரிந்ததே அத்துடன் இந்த விடயங்கள் மாகாண சபைக்கும் தெரியப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அங்கு ஹோட்டேல் கட்டுவதற்கு 60 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் 50 பேருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டு திட்டத்தில் பெரும்பலானவர்கள் சிங்கள இனத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழநாதம் http://www.eelanatham.net/news/important

  15. நிலத்தை பறிகொடுத்தால் கலாசாரத்தையும் இழப்போம்; அரியநேத்திரன் எம்.பி. தெரிவிப்பு எமது நிலம் பறிபோனால் கலாசாரம், ஒழக்க விழுமியங்களை இழந்து தமிழ் மக்கள் ஏனைய கலாசாரங்களுக்குள் மூழ்கும் துர்ப்பாக்கிய நிலை உருவாகும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சென்.யோசப் குழந்தை யேசுவின் பாலர் பாடசாலையின் பெற்றோர் தின விழா சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அறிவு என்பது மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கின்ற ஒன்றாகும். அதனை செயற்படுத்தும் விதத்தில் தான் அதன் முக்கியத்துவம் வெளிப்பட…

  16. யாழ். பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள்! [Thursday 2017-07-06 07:00] யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று கரும்புலிகள் நாள் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினையும், கரும்புலிகளாக இன்னுயிர் நினைவு சின்னத்திற்கு சுடரேற்றியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=185808&category=TamilNews&language=tamil

  17. சிறிலங்காவில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் முடக்கப்பட்ட போதும், புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு உள்ளபடியே உள்ளது. இந்த வலையமைப்பு இருக்கும் வரையில் புலிகள் மீளவும் உயிர்ப்பதைத் தடை செய்யமுடியாது என சிறிலங்கா அரசு கருதுகிறது. ஆகவே வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி.மூலம் தாம் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலரின் பெயர் விவரங்களைப் பெற்றுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதன் மூலம், விடுதலைப்புலிகள் அமைப்பை முற்றுமுழுதாக அழித்தொழிக்…

  18. நாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்யும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர் ''ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சிலர் விரட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அந்தத் தலைவரை விரட்ட முயற்சித்தாலும், காப்பாற்ற முயற்சித்தாலும் அந்தத் தலைவர் எவ்விதப் பிரயோசனமும் அற்றவர். இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்க்கட்சிக்கு நல்லதொரு தவைலர் உருவாகப் போவதில்லை. எதிர்க்கட்சியின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கைநழுவிச் சென்றுகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் உருவாகும் நிலை…

  19. இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல் November 8, 2021 இறந்தவர்களை நினைவு கூருவோம் எனும் அறிவித்தலை வடக்கு கிழக்கு ஆயர்கள் மீளப்பெற வேண்டும்: சமயம் கடந்து இறந்தவர்களை நினைவு கூருவோம்” எனும் அறிவித்தலை வடகிழக்கு ஆயர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுமாறு கௌரவத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்மாதம் 20ஆம் திகதி “மதங்களைக் கடந்து இறந்தவர்களை நினை…

  20. கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு! கிளிநொச்சி நகரத்தில் பொலிசாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பை அடுத்து குறித்த அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன இந்த நிலையில் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர் . இதனையடுத்து சம்பவ இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் காணி உரிமையாளர்கள்…

  21. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இதேபோல் சேலத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினர், மனித உரிமைகள் அமைப்பினர், தமிழின உணர்வாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர். சேலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் பேனர்களை அப்புறப்படுத்தினாலும், கிச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 20 இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் பேனர்களை வைத்து அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இனி…

  22. காணொளி : இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக BBC தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9918:-----bbc---&catid=1:latest-news&Itemid=18

  23. டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (23) யாழ். மாவட்ட செயலகத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான கூட்டத்துக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் நுளம்புகள் சம்பந்தமான பூச்சியியல் ஆய்விலே டெங்கு நோயைப் பரப்புகின்ற நுளம்புகளும் குடம்பிகளும் அதிகமாக காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய்…

  24. இலங்கையில் ஒரே நாளில் மின்சார தடை, குடிநீர் பிரச்னை, எரிவாயு விநியோகத்தில் சிக்கல்: அவதிப்படும் மக்கள் - தற்போதைய நிலை என்ன? 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இலங்கையில் சமீபத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. இலங்கை மக்கள் இன்றைய தினம் ஒரே நாளில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாட்டில் கடந்த சில வாரங்களாகவே எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், பிரதான எரிவாயு நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தனது விநியோகத்தை இடைநிறுத்தியது. இலங்கைக்கு லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய நிறுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.