Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுமந்திரன் எம்.பி அமெரிக்கா பயணம் Share தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இரண்டு வார கால பயணத்தை மேற்கொண்டு நேற்றிரவு அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித்த ஹேரத், ரவீந்திர சமரவீர, எம்.ஏ.சுமந்திரன் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவொன்று ஒருவார காலம் வொஷிங்டனில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்தப் பயணம் எதிர்வரும் 29ஆம் திகதி முடிவடையவுள்ளதுடன், அதன் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி நியூயோர்க் செல்லவுள்ளார். http://newuthayan.com/story/31224.html

  2. மட்டக்களப்பில் போர்க்காலத்தில் காணாமல்போன முஸ்லிம்களின் புதைகுழிகள் தொடர்பாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக காணாமல்போனோர் தொடர்பாக ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.காத்தான்குடி பிரதேச பிரதிநிதிகள் குழு, காணாமல்போனவர்கள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி. பரணகமவை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடியது. குறிப்பாக, காணாமல் போன முஸ்லிம்கள் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்று தங்களுக்கு வழங்கப்பட வேண்டும், காணாமல்போன முஸ்லிம்களின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரின் சமய முறைப்படி அடக்கம் செய்தல், குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குதல் போன்றன தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. …

  3. யுத்த காலத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகள் மீள கிடைக்கவில்லையென மக்கள் விசனம் யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்கு, கிழக்கு மக்கள் தெரிவித்தனர். அதிக பெறுமதியுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த தங்க நகைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி முன்னாள் அரசாங்கம் 2,379 பேருக்கு அவர்களின் தங்க நகைகளை மீளக்கையளித்தது. எனினும் அதிகப் பெறுமதியுடைய, அதிக எடை கொண்ட தங்க நக…

  4. சமூக ஊடங்களை... முடக்குவதை, ஏற்றுக் கொள்ளமாட்டேன் – நாமல் சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ‘சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு (வி.பி.என்) கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை “அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும், என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274563

  5. இரணைமடுவில் வானூர்தி வளாகம்; நந்திக்கடல் தனியாரிடம்: சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய திட்டம் [ புதன்கிழமை, 24 மார்ச் 2010, 15:17 GMT ] [ கார்வண்ணன் - புதினப்பலகை ] இரணைமடுவில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை மற்றும் அதன் சுற்றாடலில், வானூர்தி வளாகம் [ Aviation Complex ] ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போருக்குப் பிந்திய மீள்கட்டுமானத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இது நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் புவியியல் தகவல் பிரிவின் பணிப்பாளர் இந்திரசிறி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்…

  6. வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வரணி மகாவித்தியாலயத்தில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. 'கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம்.சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன்,பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­வை மறைமுகமாகச் சாடியே, வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஜனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் போட்டுக் கொடுத்து…

  7. மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்…

  8. தம்­ப­தி­யைத் தாக்­கி­விட்டு 17 பவுண் நகை கொள்ளை Share வட்­டுக்­கோட்டை பிள­வத்­தை­யில் நேற்று அதி­காலை 1 மணிக்கு வீடு ஒன்­றுக்­குள் வாள்­க­ளு­டன் புகுந்த கொள்­ளைக் கும்­பல் அங்­கி­ருந்த தம்­ப­தி­யைத் தாக்­கி­விட்டு 17 பவுண் நகை­க­ளைக் கொள்­ளை­யிட்­டுச் சென்­றது என்று வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. கொள்­ளை­யர்­க­ளின் தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த குடும்­பத்­த­லை­வர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் . கொள்­ளை­யர்­கள் வாள்­கள், பொல்­லு­க­ளு­டன் வீட்­டுக்­குள் புகுந்­துள்­ள­னர். …

  9. உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது : உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்த மடல் நாடுகடந்த தமிழீழ அரசு என்ற உங்களின் பணிக்குப் பின்னால், உலகத் தமிழ் இனம் நிற்கின்றது என்பதே பேருண்மை. இதனை நன்கு புரிந்தகொள்ளுங்கள். காலம் எடுக்கும் எந்த நற்பணியும், உறுதியும் செழுமையும் அடையும். உங்களது பணி வெற்றிபெறும். உலகத் தமிழ் இனம் உங்களோடு நிற்கிறது. தயக்கம் வேண்டாம். தொடருங்கள் பின்னால் வருவோம். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உருத்திரகுமாரன் அண்ணா! தமிழர்களின் வரலாற்றில், முக்கியத்துவம் பெறுகின்ற உங்களின் முயற்சிக்கு, முதலில், வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். தோல்வி மனப்பான்மை நெஞ்சைத் தாக்க, ஏக்கமும், துயரமும், வேதைனையும் வாட்ட…

    • 10 replies
    • 1.2k views
  10. சந்தேகநபர்களைத் தாக்குவதற்கு பொலிஸாருக்கு உரிமையில்லை Share குற்றமொன்றில் சந்தேகநபர்களாகக் கைது செய்யப்படுபவர்களைத் தாக்குவதற்கோ, அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கோ பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். மகிந்த அணியினர் தலைமையில் அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான கானொளி ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொலிஸார் நபர் ஒருவரைத் தாக்குவது தொடர்பான காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பி…

  11. -எம்.எம்.அனாம் இலங்கையில் கடந்த 03 தசாப்தங்களாக இருந்த இனப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட வேண்டுமென உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதால் மாத்திரம் பிரச்சினைகள் முடிந்து விடுவதில்லையெனவும் அவர் கூறினார். கல்குடாத் தொகுதி ஐக்கிய முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவும் புதிய காரியாலயத் திறப்பு விழாவும் புதன்கிழமை (26) வாழைச்சேனையில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினைகள் இருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர். இப்பிரச்சினைக…

    • 2 replies
    • 383 views
  12. பாப்பரசர் பிரான்சிஸ் – ஈஸ்டர் தாக்குதலில், உயிரிழந்தவர்களின்... குடும்பத்தினருக்கு இடையில் சந்திப்பு 2019ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாப்பரசர் பிரான்சிஸை இன்று (திங்கட்கிழமை) சந்திக்கின்றனர். கொழும்பு போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் அவர்கள் இன்று பாப்பரஸரை வத்திக்கானில் சந்திக்கவுள்ளனர். இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் பங்குபற்றுதலுடன் புனித பேதுரு பேராலயத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் விசேட புனித ஆராதனை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கொழும்பு பேராயர் …

  13. வெள்ளிக்கிழமை, 30, ஏப்ரல் 2010 (22:27 IST) இந்தியாவிடம் ராஜபக்சே கோரிக்கை இந்த திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என தமிழகத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இவ்விழா தூதராக நியமிக்கப்பட்ட அமிதாப் பச்சனை அதில் கலந்துகொள்ள வேண்டாம் என்று திரைப்பட இயக்குனர் சீமான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தொல். திருமாளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி இந்த திரைப்பட விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம், இலங்கை அதிபர் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். nakkheran

  14. நடேசன், புலித்தேவன் படுகொலைகள் குறித்து புதிய சாட்சியங்கள்! – அவுஸ்ரேலிய அமைப்பின் அறிக்கை கூறுகிறது. [Thursday, 2014-03-06 07:21:53] விடுதலைப் புலிகளின் அரசியல துறை பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரும் கேணல் ரமேஸ் ஆகியோர் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த வேளையில் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கான மேலும் ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவுஸ்திரேலிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கடந்த மாதம் விடுத்திருந்த இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கொடிகளுடன் வந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட தினத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இதற்கான ஆதாரங்களை முன்வைத்திருப்பதாக தெ…

  15. மொழியால் மக்களை வேறுபடுத்தியோர் யார்? போராட்டங்கள், கறுப்புக்கொடி காட்டல்கள் என்ற பதற்றத்துக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி யாழ்ப்பா ணத்திற்கு நேற்று வந்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. இந்தப் பதற்றமான, அரசியல் சூடான கள நிலவரத்தில் இந்தப் பயணத்தைக் கூடுமான வரையில் தவிர்ப்பதே நல்லது என்று அவரது பாதுகாவலர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருப் பார்கள் என்பது நிச்சயம். திட்டமிட்டபடி தேசிய தமிழ் மொழித் தின விழா யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறாமல் உள்ளரங்கத்திற்கு இறுதிநேரத்தில் மாற்றப்பட்டதில் இருந்தே அதனை நிச்சயம் புரிந்துகொள்ளமுடியும். அந்தத் தடைகளை எல்லாம் மீறி தமிழ் மக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலாக மாட்டார்கள் என்று அவர் நம…

    • 1 reply
    • 736 views
  16. மக்கள் எழுச்சிப் போராட்டம்.... 23ஆவது நாளாகவும், தொடர்கிறது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://athavannews.com/2022/1279293

  17. கிழக்கு மாகாண சபையில் நிதி மோசடியா? பிள்ளையான் மறுப்பு வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, மே 9, 2010 தனது மாகாண முதலமைச்சர் செயலகத்தில் பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கு பிள்ளையான் மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் 2008ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையிலிருந்தே மேற்படி நிதிமோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாணசபையின் கணக்காய்வு குழுவுக்கு மேற்படி கணக்காய்வு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே முதலமைச்சரினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D…

    • 0 replies
    • 489 views
  18. சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவுக்குத் தெரியாதாம். [Tuesday, 2014-03-11 17:32:31] சனல்-4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படத்தை தாம் பார்க்கவில்லை என்று ஐ.நா பொதுச்செயலரின் புதிய பேச்சாளர் ஸ்டிபன் டுஜாரீக் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சனல்4 ஊடகம் புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த பெண் போராளிகளின் சடலங்களை படையினர், பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்வது தொடர்பான காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணப்படத்தை பார்க்கவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பான் பான் கீ மூனின் முன்னாள் பேச்சாளர் மார்டின் நெகர்கீ இலங்கை விவகாரம் குறித்து அதிகளவில் பேசியிருப்பதாகவும் புதிய…

  19. தாக்குதலில்... இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, நாமல் அனுதாபம் – வன்முறையை நிறுத்துமாறு... அழைப்பு! பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பயங்கரமான சூழ்நிலையில் இந்த பயங்கரமான நேரத்தில் இறந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். குறிப்பாக, அமரகீர்த்தி அத்துகோரல. எல்லா வகையிலும் அவர் ஒரு நல்ல மனிதர். வன்முறையை நிறுத்துவோம்” என பதிவிட்டுள்ளார். https://athavanne…

  20. - One year ago, Sri Lanka ended its battle against the Tamil Tigers after almost 30 years of fighting. The government has promised a new era of national reconciliation and unity and is banking on economic growth to overcome the legacy of decades of bloody conflict. But Sri Lanka is still feeling the effects of the war. Over 80,000 internally displaced people remain in government-run camps. While others that return home are struggling to restore their livelihoods. Critics say that unless grievances for the minority Tamils are addressed, Sri Lanka may lose its fragile peace. On this edition of 101 East we speak with Mahinda Ra…

  21. சிறிலங்காவில் போரின் போதான சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக, அவரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை, நிலுவையில் உள்ள தீர்மானத்தின் மூலம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் சட்டவாளர் யஸ்மின் சூகா, மற்றும் பிரித்தானிய மனிதஉரிமை சட்டவாளர் குழுவின் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பர்ஹான் ஹக் நேரடியாகப் பதிலளிக்க மறுத்து விட்டார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள் நிலு…

  22. ஆட்சியாளர்கள் மீதான நம்பிககையீனத்தால் புதிய அரசியலமைப்பை எதிர்க்கிறோம் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா கேச­ரிக்கு செவ்வி நேர்­காணல்: ஆர்.ராம்– படப்­பி­டிப்பு: உதேஷ் இந்­திக்க தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கு­வ­தற்கு நாம் எதி­ரா­ன­வர்கள் இல்லை. ஆனால் ஆட்­சியில் உள்ள தலை­வர்கள் மீதான நம்­பிக்கை கேள்விக் குறி­யா­க­வுள்­ளது. அதன் கார­ணத்­தி­னா­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை எதிர்க்க வேண்­டி­யுள்­ளது என வியத்­மக என்னும் தொழில்­வாண்­மை­யா­ளர்கள் அமைப்பின் ஏற்­பாட்­டாளர் கலா­நிதி நாலக்க கொட­ஹேவா தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு, கேள்வி:- ஐ.நா.வில் புலம்­பெயர் அமைப் ப…

  23. தமிழர்கள் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு திருப்பி அளிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு, டி.ஆர்.பாலு தலைமையில் இன்று சந்தித்தது. இதன்போது, இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை, அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர் மறுவாழ்வு பணிகளை விரைவுப்படுத்துமாறும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இச்சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், "ராஜபக்ஷவுடனான சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே…

  24. இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கையின் மிரட்டலுக்கு அடிபணிந்தே இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது என்று "உதயனுக்குத்' தெரிவித்தார் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். ஐ.நா மனித உரிமைகள் சபையில் இந்தியா, அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இது தொடர்பில் பழ.நெடுமாறனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்திய மத்திய காங்கிரஸ் அரசு நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இலங்கைப் போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து விசாரணை நடத்த வழிசெய்ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.