ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
இரகசியம் பரகசியமானது ‐ இதுவரை வெளியிடப்படாது ஜனாதிபதியினால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கை கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. 19 July 10 08:41 am (BST) இதுவரை வெளியிடப்படாது இரகசியமாக ஜனாதிபதியினால் வைக்கப்பட்டிருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதித் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் இன்று கொழும்பில் வெளியிட்டனர். ஜனாதிபதி மகிநித ராஜபக்சவினால் பேராசிரிய…
-
- 0 replies
- 2.2k views
-
-
வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை: முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு மரண தண்டனை January 12, 2022 வெலிக்கடை சிறைச்சாலையில், 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம் திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்று வரை பிற்போட கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் குறித்த தினத்தில் தீர்மானித்திருந்தது. இந்த வழக்கு, நீதியரசர்களான கிஹான் க…
-
- 26 replies
- 2.2k views
-
-
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகளை நடத்தி, இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. நிராயுத பாணியான தமிழர்களை, ” போராளிகள்” என்று ராஜபக்சே அவ்ர்நிக்கும் போதே, அவர்களை படுகொலை செய்வதற்காகத்தான் அப்படி சொல்கிறான் என்று தமிழ்நாட்டில் இருந்த பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகம் கூறியது. அதேபோல உடனடியாக மனித உரிமை கண்காணிப்பு என்ற ஆசியா அளவிலான ஆர்வலர்கள் கூறினார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு கேட்காமல் இல்லை. அனைத்தையும் கேள்விப்பட்டும், டில்லிக்காரர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை. மாறாக எங்கள் கழகத்திற்கு எவ்வளவு அமைச்சரவை தருவீர்கள்? எந்த, எந்த அமைச்சரவை தருவீர்கள்? என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் என்று இப்போது அறிவாலயம் எண்ணிப் பார்க்கிறது. மனித உரிம…
-
- 1 reply
- 2.2k views
-
-
கிளாலியில் உள்ள கடல் நீர் ஏரியிலிருந்து 7கி.மீ தூரத்தில் எமது இராணுவத்தினர் இப்போது நிலைகொண்டுள்ளனர். கிளாலியை அவர்கள் மிக விரைவில் கைப்பற்றி விடுவர். அதன் பின் யாழ் குடாநாட்டிற்கான பிரதான விநியோகப் பாதை திறக்கப்பட்டுவிடும். அதே வேளை ஏ9 பாதைக்கு கிழக்கே நான்கு டிவிசன்களைக் களத்தில் இறக்குவதன் மூலம், 50 கி.மீ நீளமான இடப்பரப்பை வசப்படுத்தி முல்லைத் தீவை கைப்பற்றி விட முடியும். இவ்வாறு அனுராதபுரத்தில் நடைபெற்ற கஜபா ரெஜிமென்டின் வெள்ளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்துள்ளார் பொன்சேகா. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோததபயாவும் இராணுவத்திலிருந்து இளைப்பாறுவதற்கு முன்னா கஜபா படையில பணிபுரிந்தமையும் விழா நிகழ்வின் போது பிரஸ்தாபிபக்கப்பட்டது. இன்னும் 7 கி…
-
- 7 replies
- 2.2k views
-
-
ஓய்ந்திருந்த எறிகணைத்தாக்குதல்கள் இன்று மாலை மீண்டும் ஆரம்பமாகிவிட்டதாக ரி.ரி.என் செய்திகள் தெரிவிக்கின்றன. கொடிகாமம் வரணிப்பகுதியை நோக்கி தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் புலிகளும் பதில் தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் பலாலி முகாமில் கடுஞ்சேதங்கள் இடம்பெற்றதாகவும் தெரிகிறது.
-
- 3 replies
- 2.2k views
-
-
மறுபடியும் பிரபாகரன்.. மறுபடியும் சி.பி.ஐ.. சி.பி.ஐ – சிதம்பரம் குழப்பத்திற்கு பிரபாகரன் காரணமல்ல.. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சரத் பொய்யாகத்தன்னும் சொன்னாலே போதும்… பிரபாகரனின் மரணச்சாட்சிப் பத்திரத்தை சிறீலங்கா அரசு தம்மிடம் தரவேயில்லை என்று சி.பி.ஐ நேற்று மீண்டும் கூறியுள்ளது. முன்னர் ஒரு தடவை இதே அறிக்கையை சி-பி.ஐ வெளியீடு செய்ய, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதை மறுத்து இன்னொரு அறிக்கை விட்டிருந்தார். இப்போது மீண்டும் சி.பி.ஐ அதை மறுத்திருக்கிறது. நாளை ப.சிதம்பரம் மீண்டும் இன்னொரு தடவை மறுக்க நாடகம் மேலும் பல படிகளாக தொடரலாம்… இப்படி இந்தியாவில் இருந்து அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு விதமாகவும், சி.பி.ஐ மறுவிதமாகவும் முரண்பட்ட அறிக்கை விடுவது எதற்காக என்…
-
- 10 replies
- 2.2k views
-
-
தென்னங்கன்றில் அம்மனின் முகம் உரும்பிராயில் அதிசயம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-04 07:56:46| யாழ்ப்பாணம்] உரும்பிராய் வைத்தீஸ்வரா பகுதியில் உள்ள வீடொன்றில் நின்ற தென்னங் கன்றில் அம்மனின் முகம் தோன் றிய அதி சயம் இடம் பெற்றுள்ளது.அழகன் ரமேஸ்வரன் என்பவரது வீட்டி லேயே இந்த அதிசயம் இடம்பெற்றுள்ளது. இந்துக்களின் தாய்த் தெய்வ மாக போற்றப்படும் அம்மனின் முகம், ஆறு வருடங்களேயான தென்னங்கன்றில் தோன்றியுள்ளது. குறித்த வீட்டு உரிமையாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில், இந்த தென்னங்கன்றுகளுடன் வைத்த அனைத்துக் கன்றுகளும் காய்க்கத் தொடங்கிவிட்டது ஆனால் இந்தக் கன்று மட்டும் பழுதடைந்து வளர்ச்சியும் குன்றிக் காணப்பட்டது. இதையடுத்து கடந்த முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10…
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளாக இம்முறை மாவீரர் தின உரை அமைந்துள்ளது – கெஹலிய: http://www.globaltamilnews.net/tamil_news....=2709&cat=1 இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர் தின உரை சர்வதேச சமூகத்திடம் விடுக்கப்பட்ட ஓர் வேண்டுகோளாகவே அமைந்துள்ளதென அரசாங்கப் பாதுகாப்புப் சேச்சாளர் கெஹலி ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வழமையான மாவீரர் தின உரையாக இதனை நோக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் மேற்கொண்ட குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்திடம் மன்னிப்பு கோரும் வகையில் பிரபாகரனின் உரை அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஏற்…
-
- 11 replies
- 2.2k views
-
-
Please Vote for ceasefire in Srilanka. Please dial "0014162604005" and press "1" . This vote been taken by "Canadian Army" media. please act soon
-
- 9 replies
- 2.2k views
-
-
வாகரையின் மமதையில் சிங்களம் மூழ்கிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் கொண்டாட முல்லைத்தீவு படைத்தளம் துவசமானது. ஹா....ஹா......ஹா......
-
- 7 replies
- 2.2k views
-
-
'சர்வதேச விசாரணைகளுக்கு அரசாங்கம் அனுமதிக்காது! - பீரிஸ் நாடாளுமன்றத்தில் உரை!!' இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவ்வித சர்வதேச விசாரணைகளையும் மேற்கொள்ள அரசாங்கம் அனுமதிக்காது என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்த கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு என்பதால், எத்தகைய வெளியாரின் தலையீடுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அடிபணியாது எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் …
-
- 2 replies
- 2.2k views
-
-
எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி [சனிக்கிழமை, 06 யூன் 2009, 08:16 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது…
-
- 12 replies
- 2.2k views
-
-
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்: தமிழ் படைப்பாளிகள் கழகம் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில…
-
- 19 replies
- 2.2k views
-
-
புலிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர்: சரத் பொன்சேகா. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பலவீனமடைந்து விட்டனர் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி மல்வத்த விகாரையில் மல்வத்த மகாநாயக்கர் திப்படுவவெ சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் கூறியதாவது: 150 விடுதலைப் புலி பயங்கரவாதிகள், இராணுவத்திடம் சரணடைந்து விட்டனர். இராணுவத்திடம் சரணடைந்த 6 சிறார்கள், அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலி பயங்கரவாதிகள் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆள் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறையில் புலிகள் உள்ளனர். தமிழ் மக்களால் பயங்கரவாதிகள் வெறுத்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் வடக்கு மற்றும் கிழக…
-
- 7 replies
- 2.2k views
-
-
அன்புக்குரிய சங்கதி வாசகர்களே.. சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக வாகரையிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எம் தமிழ் உறவுகளுக்காக ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் நாயகம் கோபி அனான் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு உங்கள் ஒவ்வொருவரின் கையெழுத்துக்களும் வலுச்சேர்க்குமென எண்ணுவதால் அன்பான வாசகர்களே இவ்மனிதாபிமான உதவிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மதிப்பக்குரிய கோபி அனான் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்; அவர்களுக்கு சமாதானத்திலும் நீதியிலும் நம்பிக்கைகொண்ட தமிழ் மக்களாகிய நாங்கள் உங்களிடம் தாழ்மையாக கேட்டுக்கொள்வது இலங்கையில் உள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், வாகரை ஆகிய ப…
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்…
-
-
- 28 replies
- 2.2k views
- 3 followers
-
-
யாழ்.மாநகர சபையில் மாதாந்த கூட்டங்;களில் இடம்பெறும் குடுமிப்பிடி சண்டைகள் இன்று உச்சம் பெற்றுள்ளது. சொல்லாமல் கொள்ளாமல் குறுக்கு வழியில் அடுத்த ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தை முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் இன்று கூட்டத்தினில் முன்வைத்து அனுமதி பெற முற்பட்டார். அவர் சார்ந்த பொதுசன ஜக்கிய முன்னணியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் போதிய பெரும்பான்மையினை பெறமுடியுமா? என்ற சந்தேகம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை முதல்வரது வலது கரமாக இருந்த மங்கள நேசன் எதிராளியாக மாறியுள்ளதுடன் தனக்கு மேலும் பலரது ஆதரவு இருப்பதாகவும் கூறிவருகின்றார்.முதல்வரது ஊழல்களை அம்பலப்படுத்தியும் வருகின்றார். இந்நிலையில் வரவு-செலவுத்திட்டத்தை வாக்கெடுப்பிற்க…
-
- 0 replies
- 2.2k views
-
-
போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானது, நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாகவும், எமது மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டும். இரா.சம்பந்தன் அறிவுபூர்வமாக பேசவில்லை. உணர்வுபூர்வமா…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் இலங்கை இராணுவம் பொதுமக்கள் தரப்பில் உயிர் இழப்பை தவிர்க்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ததாக இலங்கைப் போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலி இருந்த போதிலும், மிகவும் முக்கியமாக இந்த இறுதிப் போரின் போது கணிசமான அளவு பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது. அப்பாவி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையாக இலங்கை அரசாங்கத்தால் விபரிக்கப்பட்டுவந்த இந்தப் போரில், கணிசமான பொதுமக்கள் இழப…
-
- 1 reply
- 2.2k views
-
-
இரு வெளிநாட்டு பயணிகள் போக்குவரத்து விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம். இரண்டு வெளிநாட்டு பயணிகள் வான்போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கொழும்புக்கான சகல விதமான போக்குவரத்துகளையும் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஹொங் கொங்கை தளமாக கொண்டு இயங்கும் கத்தே பசுபிக், மத்திய கிழக்காசியாவை தளமாக கொண்டு இயங்கும் எமிரேற்ஸ் ஆகிய விமானங்களே மறு அறிவித்தல் வரை தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இவ்நிறுவனங்கள் அறிவித்துள்ளன -Pathivu-
-
- 5 replies
- 2.2k views
-
-
மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம் வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தன. இந்நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு வெசாக் வாரம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் பௌத்தர்களினால் நேற்று முதல் வெசாக் வாரம் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனைமுன்னிட்டு இலங்கை முழுவதும் என்றுமில்லாதவாறு வெசாக்கூடு…
-
- 24 replies
- 2.2k views
-
-
இன்று காலை சில மாணவர்களால் ரொறன்ரோவிலுள்ள இலங்கை துணைதூதரகத்துக்கு முன்னால் ஆரம்பித்த போராட்டம் மிகுந்த மக்கள் ஆதரவை பெற்று ஒரு பாரிய மக்கள் போராட்டமாக வெடித்திருக்கின்றது. ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஏற்பாடு செய்திருந்த சிறிய அளவினாலான கவனயீர்ப்பு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரையும் தூதரகத்துக்கு முன்னால் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்களும் அங்கே வந்து செய்தி சேகரித்துக்கொண்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் வாருங்கள். இடம்: 40 St Clair Ave W (St Clair Ave and Young St)
-
- 12 replies
- 2.2k views
-
-
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. குறிப்பாக சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படைய…
-
- 17 replies
- 2.2k views
-
-
வன்னியில் சிங்களத்தினால் தமிழர்களின் லட்சக்கணக்கான வீடுகள் அழித்தொழிக்கப்பட்டு, இன்று அங்குள்ள எஞ்சிய மக்கள் படங்குகளின் கீழும், மரங்களின் கீழும் ஏதிலிகளாக வாழும் சூழ்நிலையில், மிக வேகமாக வன்னியில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகிறது. வன்னியில் உள்ள தமிழ் பூர்வீக கிராமமான கொக்கிளாயில் 80களில், அங்கிருந்த மக்களை கொன்றொளித்தும், அவர்களின் உடைமைகளை அழித்தும் அப்பகுதிகளில் இருந்து துரத்திய சிங்களம், அங்கு சில சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியது. மீண்டும் இப்போது லண்டனில் இருக்கும் சிங்கள இனவாத அமைப்புகளினதும், இனவாதிகளினதும் உதவியுடன் கொக்கிளாயில் மீண்டும் சிங்கள குடியேற்றங்களை ஆரம்பித்திருக்கிறது. படங்கள்: சிங்கள இராணுவ இணையத்தளத்திலிருந்து ..
-
- 27 replies
- 2.2k views
-
-
டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை - புதிய சிறீலங்கா துணைப்படைக் குழு? திகதி: 06.07.2010 // தமிழீழம் சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, புளொட் குழுவின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும், கே.பி என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதனுக்கும் இடையில் கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, சிறீலங்கா பொருண்மிய அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், தற்பொழுது சிங்களப் படைப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்கி வரும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்…
-
- 20 replies
- 2.2k views
-