Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை! வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி மணிவண்ணன் தெரிவித்தார். பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்வோம் எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பின்…

  2. கேணல் ஜெயம் இறுதி போரில் வீரச்சாவா? விடுதலைப் புலிகளின் அதி முக்கிய, மற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் தற்போது உறுதிசெய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட(2009) போரின்போது இவர்கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் அடிப்படையில் கேணல் ஜெயம் அவர்கள் இறுதிவரை போராடி, இராணுவத்தினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கிட்ட நெருங்கிய வேளை தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளார் எனவும் அறிய…

  3. இலங்கையின் மன்னர் பகுதியில் உள்ள ஆண்டான்குள நரை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் இலங்கை ராணுவ இணையம் Sri Lankan military: Soldiers capture Tamil rebel-held town, fighting kills 43 The Associated PressPublished: June 28, 2008 COLOMBO, Sri Lanka: Government troops captured a Tamil Tiger rebel-held town in war-ravaged northern Sri Lanka while infantry clashes across the region killed 40 rebels and three soldiers, the military said Saturday. Fighting has escalated in this Indian Ocean island in recent months as government forces try to fulfill a pledge to crush the insurgents by th…

  4. உங்களுக்கு தெரிந்த மொழிகளில் எமது பிரச்சனையை முன்பைவிட வேகமாக முன்னெடுக்கவும் எதிரியானவன் தனது பரப்புரையை ஆர்முடுக்க எத்தனிக்கின்றான். நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமல்லாது சீனம்,ஹிந்தி,மலையாளம் தெலுங்கு,ஜப்பான் இன்னும் அறியாத பல மொழிகளிலும் குறிப்பாக அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இணையத்தளங்கள் ஆரம்பிக்கவேண்டும். ------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறைய…

  5. தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் போராளி சிலம்பரசன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 23 replies
    • 6.2k views
  6. இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத பெண் புலிகள்: அல்ஜசீரா [புதன்கிழமை, 1 ஓகஸ்ட் 2007, 15:13 ஈழம்] [பி.கெளரி] தமிழீழ விடுதலைப் புலிகள், தங்களது தாயக விடுதலைக்காக இறுதிவரை போரிட்டு மடிய எண்ணிக்கைக்கு குறைவில்லாத வகையில் மகளிர் படையணிகளை பெற்றுள்ளனர் என்று அல்ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தொடர்பாக அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் பத்தி எழுத்தாளர் கெய்லி கிரே கிளிநொச்சியில் இருந்து எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்: விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தமது நோக்கம் மற்றும் உரிமைகளுக்காக போராடுவதுடன், தமது படையணியையும் மேன்மைப்படுத்தியுள்ளார்கள். சிறிலங்கா இராணுவம் வடக்கில் ஒரு இறுதித் தாக்குதலுக்கு தம்மை தயா…

  7. இலங்கை இராணுவத்தினர் இதுவரை பயன்படுத்தாதக துப்பாக்கி ஒன்றை திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வெள்ளை இரும்பினால் வடிவமைக்கப்பட்ட ரி 56 ரக துப்பாக்கி ஒன்றை மூதூர்வாசி ஒருவரிடம் இருந்து கைப்பற்றியதாக திருகோணமலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துருப்பிடிக்காத இந்த துப்பாக்கி மூலம் குண்டுகளையும் எறிய முடியும் எனவும் இதனை போன்ற துப்பாக்கியை இலங்கை இராணுவத்தினர் இதுவரை பயன்படுத்தியதில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த துப்பாக்கி வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு ஒன்றிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில்; கைதுசெய்யப்பட்ட நபர் மத்திய கிழக்கில் தொழில்புரிநதவர் எனவும்,…

  8. தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேசிய ஆள் அடையாள அட்டையினை வழங்கும் பணியை தொடங்குகிறது. இத் தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கம் கையேடு நாளை மறுதினம் ஈழநாதத்தில் வெளிவரும் என்று தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நன்றி: புதினம் http://www.eelampage.com/?cn=23594

    • 30 replies
    • 6.2k views
  9. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  10. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான இராசதந்திரிகள் குழுவினரின் இலங்கைக்கான திடீர் பயணத்தின் நோக்கம் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் உச்சி மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விடயங்களே இவர்களின் வருகையின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன. சார்க் உச்சி மாநாட்டின் போதுஇ வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தே இந்திய உயர் அதிகாரிகள் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு திட்டத்திற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்ததை அடுத்து இரு தரப்பினரிடையே பாகாப்பு உடன்பாடு ஒன்றும் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரியவருகிறது. சார்க் உச்சி மாநாட்டுக்கு இந்தியப…

    • 46 replies
    • 6.2k views
  11. 2002ஆம் ஆண்டிற்குப் பின்னர் சமதானத்தை ஏற்படுத்துவதற்குப் பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அதற்கான கதவுகளைத் தானே அடைத்துவிட்டார் என ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் ஜசூசி அகாசி தெரிவித்துள்ளார். நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள், டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் ஊடாக உதவிகள், சுனாமிக்குப் பின்னரான கட்டுமான உதவிகள் எனப் பல்வேறு வழிகளின் ஊடாக சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே மூடிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். “இறுதியாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனப் பிரபாகரன் எடுத்த முடிவே அவருக்கு மிகவும் பிழையான மதிப்பீடாக அமைந்துவிட்டது…

    • 70 replies
    • 6.2k views
  12. ரவிராஜ் எம்பி சுடப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக உறுதிப்படுதமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன இத்தகவலை கஜேந்திரன் எம்பி உறுதிப்படுத்தி உள்ளார் நாரகன்பிட்டியில் வைத்து சுடப்பட்டதாக அவர் தெரிவித்தார்

    • 33 replies
    • 6.2k views
  13. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://eurotvlive.com/download/20090316/20..._Belgium_01.wmv பிரித்தானியாவுக்கு மீண்டும் வருகையில் பிருத்தானிய Immigration and border agency ஐ சேர்ந்த அலுவலகர்கள் பிரித்தானிய தமிழர்கள் 10 000 பேர் வரை போராட்டத்துக்கு போய் வந்தார்கள் எனும் தகவலையும் கிட்டத்தட்ட 80 000 பேர் அங்கு கூடினார்கள் எண்றும் கூறினர்... (தங்களுக்குவேலை பழு இண்று அதிகம் எண்றும் சொல்லும் போது)

  14. வெள்ளி 06-04-2007 13:38 மணி தமிழீழம் [சிறீதரன்] சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திரு.ஹரத் அபேவர்த்தனவை மாகாண ஆளுநர் ரெயர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரமவின் சிபார்சின்பேரில் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கையை பிரித்தபின் இருமாதங்கள் கிழக்கின் ஆளுநராக பணியாற்றிய திரு.ஆர்.தணிகைலிங்கம் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கே இவரை நியமித்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு

    • 53 replies
    • 6.1k views
  15. தொப்பிகல காட்டுப் பகுதிக்குள் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிப்பு! கொழும்பு, ஜூலை 30 தொப்பிகல பகுதியிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றினுள் விடுதலைப் புலிகளுக்குச்சொந்தமான ஆயுதக் கிடங்கு ஒன்றினை நேற்றுப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் என்று பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் குறித்த பகுதியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கிடங்கிலிருந்து 120 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 12, 82 மில்லிமீற்றர் ரக மோட்டார் துப்பாக்கி01, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள்125, 82 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியைக் கட்டுப்படுத்தும் …

  16. மேஜர் ஜெனரல் ஜானகப் பெரேரரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெருமளவிலானோர் காயம் அடைந்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் ஜானகப் பெரேராவின் மனைவி உள்ளிட்ட குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வடமத்திய மாகாணசபை குழுத் தலைவர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாக பெரேரா மீது இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் மேலும் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனுரா…

  17. கிளிநொச்சியில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு கொலை எனச் சந்தேகம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்பட்ட பிரவுன் வீதி பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இன்று காலை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று 29-08-2018 காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதிக்கு வயது சுமார் இருபது மதிக்கதக்கது என தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் முகப்பகுதியில் பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில …

  18. கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பார் Thursday, 15 May 2008 கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே நியமிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் தாம் தமது பதவிகளைத் துறக்கப் போவதாகவும் 12 அமைச்சர்கள் எச்சரித்திருக்கின்ற போதிலும், சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானே கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. இது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்று வெளிப்படுத்துவார் எனத் தெரிகின்றது. லண்டனில் விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் இது தொடர்பாகத் தொலைப…

    • 49 replies
    • 6.1k views
  19. நேரடி ஒளிபரப்பு http://www.vakthaa.tv/

    • 2 replies
    • 6.1k views
  20. போரின் முடிவு எப்படியிருந்தாலும்- ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும்-நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும், பிரபாகரன் தோல்வியுறுத்தாலும், போரஸ் மன்னனை அலெக்சாண்டர் வீரனாக நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன். ------------------ எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் தாயே .. சோனியாவுக்கு கருணாநிதி வேண்டுகோள் சென்னை: எங்கள் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று எனக்கு அவர் இளையவராக இருந்தாலும் கூட- ``எங்கள் தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே'' என்று சோனியா காந்தியை பார்த்து நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. இலங்…

    • 35 replies
    • 6.1k views
  21. மாவிலாறை நோக்கிய படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். கல்லாறிலிருந்து இருமுனைகளில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெருமெடுப்பில் படையினர் நகர்வை தொடங்கியுள்ளனர். மங்கிபிரிட்ஜ் தளத்திலிருந்து தரைப்படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்த, விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்த தரைவழியாக படையினர் தமது வலிந்த தாக்குதல் நகர்வை தொடங்கினர். மாவிலாறு விடுதலைப் புலிகளின் முன்னரங்கப்பகுதி நோக்கிய நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப…

  22. கிளிநொச்சி "அன்புச்சோலை" மூதாளர் பேணலகத்தின் புதிய விடுதிக் கட்டடத்தை திருமதி மதிவதனி பிரபாகரன் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து வாசிக்க

    • 35 replies
    • 6.1k views
  23. இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது மகாராஷ்டிர மாநிலம், நாகபுரிலிருந்து இலங்கை கடற்படைக்காக வெடிபொருள்கள் ஏற்றிச்சென்ற லாரி மதுரை மாவட்டம், மேலூரில் வியாழக்கிழமை பிடிபட்டது. நாகபுரியில் உள்ள "சோலார் எக்ஸ்புளோசிவ் லிமிடெட்' நிறுவனத்தினர் இலங்கை கடற்படையினருக்கு 40 பெட்டிகளில் அடைத்து அனுப்பிய வெடிபொருள்களுடன் ஒரு லாரி தூத்துக்குடி துறைமுகத்துக்கு சென்றது. மேலூர் அருகே வியாழக்கிழமை வந்துகொண்டிருந்த அந்த லாரியை நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸôர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். தகவல் அறிந்து மேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மாறன், மதுரை கியூ பிரிவு போலீல் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் லாரியைப் பர…

    • 35 replies
    • 6.1k views
  24. GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்! adminDecember 19, 2023 உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித உரிமை மீறல்களுக்காக மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரி கனேடிய அரசு தடைகளை விதித்தமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கு பொறுப்புக் கூறலை வலியுறுத்தி பல வருட போராட்டத்திற்கு பின்னரே இந்த தடை விதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், சமூக அமைப்புக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.