ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
445 பட்டதாரிகளுக்கு மட்டு’வில் நியமனம்! வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று (27) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகள் நியமனமே மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. நாட்டை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 445 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டன. https://newuthayan.com/445-பட்டதாரிகளுக்கு-மட்டுவ/
-
- 0 replies
- 345 views
-
-
ஹெரோயின் போதைப் பொருள்களை மாணவர்களுக்கு விற்பனை செய்தார் என்ற சநதேகத்தில் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இரண்டு மணிநேரத்தில் 45 ஆயிரம் ரூபா பணம் போதைப்பொருள் விற்பனையூடாகப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: ஹெரோயின் மற்றும் ஏனைய போதைப் பொருள்களைப் பயன்படுத்திய மாணவர்கள் சிலரை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்தனர். அந்த மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்களுக்கு போதைப் பொருளை விநியோகித்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அன்றைய தினம் குறித்த நபர் ஒருவர் மூலம் மட்டும் யாழ் நகரில் இரண்டு மணிநேரத்தில…
-
- 1 reply
- 1.3k views
-
-
45 கிலோ தங்கம் மாதகல் கடலில் சிக்கியது! [Thursday 2014-10-02 08:00] இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 45 கிலோ தங்கம் நேற்றிரவு மாதகல் கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மாதகல் பிரதேசத்திலிருந்து சந்தேக நபர்கள் இருவர், படகு ஒன்றில், இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நேற்றிரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களிடம் இருந்து 45 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவர்கள் பயணித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=117889&catego…
-
- 1 reply
- 714 views
-
-
45 சதவீத நிதியை 58 நாள்களில் செலவு செய்தது மாகாணசபை வடக்கு மாகாண சபையினால் 58 நாள்களில் 45 சதவீதமான நிதி செலவு செய்யப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 38 சதவீதமான நிதி கடந்த ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக பிரதம செயலாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 83 சதவீதமான நிதி கடந்த 28 ஆம் திகதி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக, அதாவது 58 நாள்களுக்குள் 45 சதவீத நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சபையில் தெரிவித்தார். …
-
- 0 replies
- 457 views
-
-
45 தமிழக மீனவர்களுக்கு 10 கோடி ரூபா அபராதம் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 35 நாட்டுப்படகு மீனவர்கள், 10 விசைப்படகு மீனவர்கள் என 45 தமிழக மீனவர்களுக்கு மொத்தம் 10 கோடி ரூபா அபராதம் விதித்து புத்தளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதியன்று கைது செய்தனர். அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் முற்படுத்தியபோது நீளமான ஒரு நாட்டுப் படகிலிருந்த 12 மீனவர்களுக்கு தலா ரூ. 35 இலட்சம் அபராதமும், மற்ற மூன்று நாட்டுப் படகிலிருந்த 23 மீனவர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் அபராதமும் விதித்…
-
-
- 5 replies
- 497 views
-
-
06 MAR, 2024 | 10:28 AM பொத்துஹர பிரதேசத்தில் 5000 ரூபா பெறுமதியான 45 போலி நோட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை சோதனையிட்டபோதே அவரிடமிருந்து இந்த போலி நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொல்பிதிகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார். இவர் ஏற்கனமே பணம் அச்சடிக்கும் இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. https://www.virakesari.lk/article/178035
-
- 2 replies
- 401 views
- 1 follower
-
-
எம்.இஸட். ஷாஜஹான் நீர்கொழும்பில் 45 வருட காலமாக வர்த்தகம் செய்த தமக்கு தற்போதைய நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை நகரில் அதிகரித்துள்ளது என்று நேற்று வியாழக்கிழமை இரவு ஆயுத முனையில் கொள்ளை அடிக்கப்பட்ட புஸ்பா ஜுவலரி உரிமையாளர் எம்.ஏகாம்பரம் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். மூன்று மோட்டார்; சைக்கிள்களில் ஜெக்கட் மற்றும் ஹெல்மட் அணிந்து வந்த ஆறு பேரை கொண்ட கொள்ளை கோஸ்டியினர் நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கொள்ளையிட்டதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர் இது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் புஸ்பா ஜுவலரி உரிமையாளரின் நீர்கொழும்பு இல்லத்திற்கு சென்று விசாரித்தார்…
-
- 1 reply
- 598 views
-
-
450 ஆபாச படங்களுடன் சிக்கிய பிக்கு. ஆபாச படங்களை தனது மடிக்கணனியில் வைத்திருந்த பிக்கு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெலிஓய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து கடந்த 6 ஆம் திகதி குறித்த பிக்கு வெலிஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவருடைய மடிக்கணனியில் பல ஆபாச படங்கள் இருந்துள்ளன. மேலும் இவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிக்கு தன்னை ரத்மலான பாலித தேரர் என அடையாளம் காண்பித்த போதிலும் அவருடைய அடையாள அட்டையில் மித்தெனிய உதித்த என பெயர் குறிப்பிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்துள்ளதுடன் அப்பிரதேச மக்களிடம் தன்னை வௌ;வே…
-
- 5 replies
- 965 views
-
-
450 கிராம் பாண் ஒன்றின் விலை... 30 ரூபாவால் அதிகரிப்பு. கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரீமா நிறுவனத்தினால் வெளியிடப்படடுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கயை கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை 40 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 192 views
-
-
"450 பேர் மட்டுமே பங்கேற்ற மத்தள விமான நிலையத்தின் விமான எண்ணெய் வழங்கல் திறப்பு விழா நிகழ்வில் உபசரிப்புக்காக மட்டும் கடந்த அரசு 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை செலவுசெய்துள்ளதுடன், திறப்புவிழாவுக்காக 60 இலட்சம் ரூபாவை செலவுசெய்துள்ளது'' என அரசு நேற்று தெரிவித்தது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் அஜித் மன்னப்பெரும எம்.பி. எழுப்பிய கேள்விக்கு எரிசக்தி, மின்சக்தி அமைச்சின் சார்பில் பதிலளித்தபோதே ஆளுந்தரப்பு பிரதம கொரடாவும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அஜித் மன்னம்பெரும எம்.பி. தனது கேள்வியில், "2014 ஜூன் மாதம் 22ஆம் திகதி நடத்தப்பட்ட மத்தள விமானநிலையத்தினதும், மாகம்புர துறைமுகத்தினதும் எண்ணெய்க் க…
-
- 0 replies
- 481 views
-
-
Published By: NANTHINI 04 JUN, 2023 | 01:24 PM (லியோ நிரோஷ தர்ஷன்) வருட இறுதிக்குள் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை அடுத்தே இந்த நிதி உதவியை வழங்க தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில், உலக வங்கியின் நிபந்தனைகளை இலகுவாக்கி 450 மில்லியன் டொலர் நிதி உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிதி சந்தையின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைகளை சாதகமான முறைமையின் கீழ் கையாளுதல் போன்ற விடயங்கள் குறித்து கலந்து…
-
- 3 replies
- 296 views
- 1 follower
-
-
450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் களனி பகுதியில் மீட்பு களனி பெதியகொட பகுதியில் 450 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. கொள்கலன் ஒன்றிலிருந்தே 31 கிலோ நிறையுடைய குறித்த கொக்கையின் தொகை மீட்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/13359
-
- 0 replies
- 267 views
-
-
45000 மின்னியலாளர்களுக்கு, இலவச தேசிய தொழில் தகைமை – உரிமம் வழங்கப்படும்! October 6, 2021 மின்னியலாளர்களுக்கு NVQ 3 (தேசிய தொழில் தகைமை மட்டம் 3) இனை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை சுமார் 2000 மின்னியலாளர்கள் NVQ 3 சான்றிதழை பெற்று உரிமம் பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர். இம்மாதத்தில் மேலும் சுமார் 1500 மின்னியலாளர்களுக்கு NVQ 3 இனை பெற்றுக் கொடுப்பதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் 3ஆம் கட்டம் எதிர்வரும் நவம்ப…
-
- 0 replies
- 274 views
-
-
46 ஆவது ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை - அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு (ஆர்.ராம்) • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பே…
-
- 0 replies
- 532 views
-
-
(ஆர்.ராம்) • 30/1 தீர்மானத்திற்கு மேலதிகமான விடயங்களை தயார்ப்படுத்துமாறும் யோசனை • சிரியா, மியன்மார் விடயப் பொறிமுறைகள் குறித்தும் கவனம் • புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் தொடர்பாக ஆழ்ந்த கரிசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு இயலுமானதாக இருக்கும் என்று இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட …
-
- 5 replies
- 929 views
-
-
46 பல்கலை மாணவர் உடபட 106 இளைஞர்கள் யாழில் விடுதலை யாழ் நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 8, 2010 யாழ் தெல்லிப்பளையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 106 தமிழ் இளைஞர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இன்றூ காலை விடுதலை செய்யப்பட்ட இவர்களில் 46 பேர் பல்கலை கழக மாணவர்கள் ஆவர். http://www.eelanatham.net/story/46-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F-106-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
-
- 0 replies
- 697 views
-
-
பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் தற்போது 46 பேர் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி 45 ஆண்களும் ஒரு பெண்ணும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட 20 பேர் 14 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்…
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
46 வருடங்களுக்கு முன்னர் 10 வயதான தன்னையும் தனது இரு நண்பர்களையும், சுவிட்சர்லாந்தில் பிரஜை ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக் கூறி 56 வயதான ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். இந் நிலையில் இந்த விடயம் தொடர்பில் நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் குடியுரிமை உள்ள சுவிட்சர்லாந்து பிரஜையான தற்போது 80 வயதான நபர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறினர். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ள 56 வயதான நபரும் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் நிலையில், கடந்த வருடம் இலங்கைக்கு வந்து இங்கு தங்கியிருக்க ஆர…
-
- 0 replies
- 578 views
-
-
46/1 தீர்மானத்தை நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி ஜெனீவாவில் அறிவிப்பு ! By Shayithan.S September 13, 2022 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் இலங்கையின் இறையான்மையை மீறும் வகையில் அமைந்துள்ளமையினால் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் அதனை நிராகரிகப்பதாக வெவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார். மேலும் பயங்கரவாத தடை சட்டத்திற்கு பதிலாக சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்றவாறு தேசிய பாதுகாப்பு சட்டம் பதிலீடு செய்யப்படும். அத்துடன், இலங்கையின் மறுசீரமைப்பு பொறுப்பு கூறல், மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல், தொடர்…
-
- 4 replies
- 293 views
- 1 follower
-
-
46/1 தீர்மானம் தொடர்பாக... இலங்கை தொடர்ந்தும், ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 46/1 தீர்மானத்தில் நிறுவப்பட்ட அனைத்து வெளியக முன்மொழிவுகளையும் நிராகரிப்பதாக ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான தொடர்ச்சியான முயற்சிகளின் தேவை குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த…
-
- 0 replies
- 485 views
-
-
4600 இராணுவ சிப்பாய்கள் சட்டபூர்வமாக நீக்கம்.! இராணுத்திலிருந்து தப்பிச் சென்ற 4 ஆயிரத்து 600 இராணுவ சிப்பாய்கள் பொது மன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில், 4229 இராணுவ சிப்பாய்களும் 206 கடற்படையினரும் 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலமானது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/7752
-
- 1 reply
- 373 views
-
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளை நிறுவுதல் மற்றும் சர்வதேச குற்றங்களில் சிக்கியுள்ள இலங்கை அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தல் என காட்டமான தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை உள்ளடக்கியதாக அறிக்கை காணப்படுகிறது. அறிக்கையின் முழு விபரம்: “யுத்தம் முடிவடைந்து ஏறக்குறைய 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பொறுப்புக்கூறல் ம…
-
- 1 reply
- 489 views
-
-
47 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு அரிசி, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் உள்ளிட்ட 47 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு அரசாங்கம் வரிவிலக்கு அளிக்க தீர்மானித்துள் ளது. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நேற்று நடைபெற்ற வாழ்க்கை செலவு தொடர்பாக அமைச்சரவை உபகுழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களினடிப்படையிலேயே குறித்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போது நாட்டில் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணமளிப்பதற்கென ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக எதிர்வரும் 2 மாதங்களுக்கு…
-
- 0 replies
- 378 views
-
-
47 இராணுவத்தினரைப் போர்குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளதாம் ஐ.நா அறிக்கை! [saturday 2015-05-23 20:00] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐநா விசாரணை அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிநத ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட இராணுவத்தினர் 47 குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இவ்வறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எப்படியிருப்பினும் இலங்கை தொடர்பாக இடம்பெறுகின்ற விசாரணையின் உத்தியோகபூர்வ அறிக்கை இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்…
-
- 0 replies
- 698 views
-
-
[size=4]By General 2012-11-19 22:24:12[/size] [size=4]ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 நாடுகளின் தூதர்களை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானம் குறித்து வலியுறுத்த திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இடம்பெற்ற டெசோ கலந்துரையாடலில் தீர்மானிக்கபட்டுள்ளது. டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று (19.11.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆ…
-
- 8 replies
- 766 views
-