ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியை கருத்தில் கொண்டு, அரசாங்கம் செப்டம்பர் 23 ஆம் திகதியை (திங்கட்கிழமை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள சிறப்பு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார். விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் இதுவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்த…
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தற்போது செயற்படும் எந்தவொரு நிலையியற் குழுவிற்கும் அரச திணைக்கள தலைவர்களை நியமிக்கவோ அல்லது மாற்றவோ சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பு அமைச்சரவை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 923 views
-
-
நெடுந்தீவு 10ம் வட்டாரத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: நெடுந்தீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்த லக்சனா வயது 12 என்ற குறித்த மாணவி இன்று காலை கடைக்கு சென்று நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை இந் நிலையில் குறித்த சிறுமி 10ம் வட்டாரத்தில் கைவிடப்பட்ட வளவு ஒன்றில் தலையில் பலமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இவரது சடலத்திற்கு அருகில் வெற்று மதுப் போத்தல்களும் சிறுமியின் உள்ளாடைகள் கிழித்தெறியப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. இச்சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்தி…
-
- 4 replies
- 1.2k views
-
-
இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று விடும். இனவாதம் எனும் மிருகத்துக்கு பசி வந்து விட்டால், பிறகு நம்மாள் பிறத்தியாள் என்கிற வித்தியாசமெல்லாம் அதற்குத் தெரிவதில்லை. இதற்கு அண்மைய உதாரணம், மஹிந்த ராஜபக்ஷ. இனவாதத்தை வளர்த்து அதனூடாக தனது ஆட்சியை தொடரலாம் என்று நினைத்த அந்த மனிதனையே – கடைசியில் இனவாத மிருகம் வேட்டையாடித் தீர்த்து விட்டது. பொதுபலசேனா என்கிற காவிப் பயங்கரவாதத்தை உருவாக்கி, அதனூடாக இனவாதத்தினை வளர்த்து விட்டு, அதில் குளிர்காய நினைத்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பமும் கடைசியில், அந்த இனவாதத் தீயிலேயே கருகிப…
-
- 0 replies
- 587 views
-
-
சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில், மஹிந்தவுக்கு, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக “World Icon Award” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சர்வதேச-விருதை-பெற்றார்/
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
29 SEP, 2024 | 10:03 AM தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், …
-
-
- 13 replies
- 806 views
- 1 follower
-
-
அமெரிக்காவிடமிருந்து சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான நவீன ஆயுதத் தளபாடங்களை கொள்வனவு செய்வது குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ரொபேட் எவ்.வில்லாட்டுடன் நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 13 replies
- 2.5k views
-
-
வவுனியா வடக்கு இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொருபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியிருக்கின்றனர். தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொருபத்தினை அகற்றி வெளியே கொண்டு சென்று வைத்து, அதன் மீது நீர் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. கடந்த இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமையால் அந்தப் பகுதி கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து மன்னார் ஆயர் விடுத்த வேண்டுகோளின் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இளமருதங்குளம் …
-
- 0 replies
- 614 views
-
-
சமூக வலைத்தள பதிவுகளை கட்டுப்படுத்தப் புதிய சட்டம் சமூக வலைத்தளங்களில் தனிநபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்றங்களுக்கு எதிராகப் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன் வழக்குகளின் கால தாமதத்தைக் குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதி அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தொடரின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள…
-
- 1 reply
- 407 views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிள்ளையான்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை [Friday January 25 2008 05:49:59 PM GMT] [Naffel] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று இராம கிருஸ்ண வித்தயாலயத்துக்கு அருகில் உள்ள சந்தியில் இருந்து 2 பிள்ளையான் குழு உறுப்பினர்கள் ஆலையடிவேம்பில் உள்ள தமது அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது இவர்களை மோட்டார் சைக்கிலில் தொடர்ந்து வந்த ஒருவர் இவர்கள் மீது துப்பாக்கிசூட்டை நடத்தவே ஒருவர் ஸ்தல…
-
- 0 replies
- 1k views
-
-
வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா அரசாங்கம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் புதிய நிரந்தரக் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவியுள்ளது. ‘எஸ்.எல்.என்.எஸ் புவனேக‘ என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் பிரதேசத்தில் உள்ள நாச்சிக்குடாவில் இந்த நிரந்தர கடற்படைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க நேற்று முன்தினம் இந்தக் கடற்படைத்தளத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில், உருவாக்கப்பட்ட நாச்சிக்குடா கடற்படைப் பிரிவு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா பாதுகாப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அநுராதபரம், - கட பனஹ – முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளரான கின்னஸ் சாதனை கராத்தே வீரர் வசந்த சொய்ஸா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எட்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலும் 15 பேரை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களைத் தேடி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்ட எட்டு பேரில் வசந்த சொய்ஸாவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய இருவரில் ஒருவரும் அநுரதபுரத்தின் இரு வேறு விடுமுறை விடுதிகளின் உரிமையாளர்களும் அடங்குவதாகவும் தனிப்பட்ட விவாகரம் இக்கொலைக்கு காரணம் என தெரியவந்து…
-
- 0 replies
- 463 views
-
-
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழைமை போல தொடங்கியது. ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்…
-
- 1 reply
- 877 views
-
-
பிரம்படி படுகொலை நினைவேந்தல்! adminOctober 13, 2024 யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை (12.10.24) முன்னெடுக்கப்பட்டது. பிரம்படி பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர். https://globaltamilnews.net/2024/207454/
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தை ஆதரிக்கத் தயார் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதன் பின்னணியில் இருந்த அழுத்தங்களை இலங்கையால் புரிந்துகொள்ள முடியும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங்கின் அறிவிப்பை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது என்பது குறித்து பீபீசி செய்தி சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை அரசின் சார்பில் தம்மால் பேச முடியாது என்று ரஜீவ விஜேசிங்க தெளிவுபடுத்தினார். அதேசமயம், எந்த அழுத்தங்களின் அடிப்படையில் மன்மோகன் சிங்கின் அறிக்கை வந்துள்ளது என்பதை தம்மால் புரிந்து கொள்ள முடிவதாகவும் அவர் கூறினார். "இந்த பிரச்சினைய…
-
- 2 replies
- 822 views
-
-
-
- 1 reply
- 591 views
-
-
கோத்தபாயவின் நிறுவனம் ஆயுத விற்பனையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது: தமிழில் குளோபல் தமிழ்செய்திகள்:- 09 நவம்பர் 2015 இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தனியார் துறைநிறுவனமான ரக்னா ஆரக்சக லங்கா நிறுவனத்திடம் காணப்பட்ட ஆயுதங்களை கணக்கிலெடுத்த வேளை இலங்கையில் திட்டமிடப்பட்ட முறையில் ஆயுதவியாபாரம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பிட்டநிறுவனங்களிடம் உள்ள 320 ஆயுதங்களில் தொடர் இலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதும் இந்த கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது,ஆயுதங்களின் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிப்பதை தடுப்பதற்காகவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அவன்ட்கார்டே கப்பலில் மேலதிக ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. முன்னா…
-
- 0 replies
- 181 views
-
-
August 15, 2019 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று காலை திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கண்காணிப்பு பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஸவை மகிந்த களமிறக்கியதற்கு ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக கோத்தாபயவின் பிரவேசம் நாட்டை பேரழிவிற்கு இட்டுச…
-
- 0 replies
- 476 views
-
-
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முத்தையன்கட்டு குளப்பகுதியில் நேற்றையதினம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையை விரட்டி வந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து குறித்த இளைஞனும் யானையை விரட்டியுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது இந்த இளைஞனை யானை தாக்கியுள்ளது. அதனையடுத்து ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞன் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த குறித்த இளைஞன் ஒட்டுசுட்டான் முத்துவிநாயகபுரம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடையதுடையவர் ஆவார். …
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
(பாறுக் ஷிஹான்) யாழ் தலைமைகளின் அந்த நரித்தந்திரத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அவர்களின் எடுபிடிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்க நீங்கள் உறுதி எடுங்கள்.கடந்த தேர்தலில் யாழ்ப்பாணத் தலைமைகள் இங்கே நிராகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மாற்றுத்தலைமையின் அவசியத்தை எம்மக்கள் நன்கு உணர்த்தியுள்ளனர். அதன் காரணமாகவே அம்பாறை மக்களுக்குரிய தலைமைத்துவத்தை வழங்க தமிழ் மக்கள் விடுதலை புலிகளாகிய நாம் முன்வந்துள்ளோம் என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் 01ம் மற்றும் …
-
-
- 2 replies
- 361 views
-
-
ஐ.நா.சபையின் இலங்கைக்கான 20 பரிந்துரைகளில் எவ்விடயத்தையும் நீக்க வேண்டுமென்ற பேச்சுக்கே இடமில்லை. அவைஒவ்வொன்றையும் எவ்வாறு நிறைவேற்ற முடியுமென்ற ஆலோசனைகளையே கட்சிகள் முன்வைக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். ஐ.நா.சபையின் தீர்மானம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியால் கூட்டப்பட்ட இரண்டாவது சர்வகட்சி மகாநாட்டில் பேசப்பட்ட விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்தில் கூட்டப்பட்ட முதலாவது சர்வகட்சி மகா நாட்டுக்குப் பிறகு கடந்த செவ்வ…
-
- 4 replies
- 726 views
-
-
சிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரகசிய சரணாகதி? ஐ.நா.: ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் சிரியாவை பாராட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இது இலங்கையைப் போன்று இரகசியமான முறையில் அதிகளவுக்கு சாதகமாக செயற்படும் விடயமா? என்று நியூயோர்க்கில் ஐ.நா.வை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் மத்தியூ ரஸல் லீ தனது செய்தி ஆய்வில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது; இன்றைய ஐ.நா.வில் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பங்களிப்பு பலவழிகளில், (சிலர் கூறுகின்றனர் வெட்கக் கேடான) ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சிரிய அரசாங்கத்தை பான் கீ மூன் தனிப்பட்ட முறையில் பாராட்டியிருந்தார் என்று ஐ.நா.வுக்கான …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்திலே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் : சுகாதார கல்வி பணியகத்தின் அதிர்ச்சித் தகவல் தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தொற்றினால் இதுவரை இலங்கையில் 357 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக ஒப்பிடும் இவ்வருடத்தில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு எயிட்ஸ் நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை எமது நாட்டில் 380367 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஊடகவியலாளர்களை தெளிவுப்படுத்துவதன் மூலம் மக்களை தெளிவுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் இன்னும் எங்களுடன்இ சிகிச்சை உண்டு எனும் தொனிப்பொருளில் தேசிய எயிட…
-
- 1 reply
- 595 views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள வர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன்று வரை, சிறப்பாக காணப்பட்டதாகவும், அவ்வுறவு தற்போதைய அரசாங்கத்தினால், மேலும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பள்ளிவாசல்களை திறந்து வைக்கும் சம்பிரதாய, சமய வழிபாடுகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை திறந்து வைத்தார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அல்லாத அரச தலைவர் ஒருவர் பள்ளிவாசலொன்றை திறந்த சந்தர்ப்பம் இது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன…
-
- 8 replies
- 811 views
-
-
வளலாய் பிரதேச அபிவிருத்திக்கு 67 மில்லியன் ரூபா நிதியுதவி; ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் [ Sunday,29 November 2015, 06:10:30 ] யாழ்ப்பாணம் – கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பிரதேசத்தின் அபிவிருத்திக்கென நோர்வே அரசாங்கத்தினால் 67 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்காவுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர் தெரிவித்தார். ஸ்ரீலங்காவுக்கான தூதுவராக பதவியேற்ற தோர்ப்ஜோன், நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக வடக்குக்கு நேற்று முன் தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் ஒரு அங்கமாக கடந்த 30 வருடங்களாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து மீள்குட…
-
- 0 replies
- 470 views
-