Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2013-10-18 மட்டக்களப்பு, சித்தாண்டி மாவடிவேம்பு கிறிஸ்தவ தேவாலய வீதியில் வசிக்கும் ஜெயக்குமார் ரேணுகா என்வருக்;கு ஒரே தடவையில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அப் பெண் குழந்தைகள் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வீரகேசரி

  2. புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா [ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் நாள் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக, 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் ஏனையவ…

    • 16 replies
    • 1.6k views
  3. -எஸ்.கே. பிரசாத் கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. மாவீரர் துயிலும் இல்லத்தை இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யவிருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்தே சுமார் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்வதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச சபையில் நேற்று வியாழக்கிழமை (17) நிறைவேற்றப்பட்டது. இதன்பிரகாரம் கரைச்சி பிரதேச சபை ஊழியர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஈடுபடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்தே பொலிஸார் அங்கு க…

  4. குர்ஹாம் சாக்கீ படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை 18 அக்டோபர் 2013 பிரித்தானிய பிரஜை குர்ஹாம் சாக்கீ படுகொலையுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்காலை பிரதேச சபையின் தலைவர் சம்பத் விதாரன பத்திரண மற்றும் ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்ட நத்தார் பண்டிகையின் போது தங்காலை ஹோட்டல் ஒன்றில் குர்ஹாம் சாக்கீ மற்றும் அவரது ரஸ்ய காதலி விக்டோரியோ ஆகியோர் மிக மோசமாக தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டதுடன், அவரது காதலி பாலியல…

  5. சிறீலங்காவில் மனித உரிமைகள் , தமிழர்களுடனான இணக்கப்பாடு ஆகியவற்றை வெளிப்படையாக காரணம் காட்டி கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டினை கனடிய பிரதமர் புறக்கணித்தமைக்கும் கடந்த 30 மாதங்களுக்கும் மேலாக சிறீலங்கா மனிதவுரிமை விடயத்தில் இறுக்கமான போக்கினை சர்வதேச அரங்கில் கடைப்பிடித்து , கனடியத் தமிழர்களது அபிலாசைகளை ஏற்றுப் பயணிக்கும் கனடிய அரசுக்கு - குறிப்பாக மாண்புமிகு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் , வெளி விவகாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் , கனடிய ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும் , சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும் , கனடியத் தமிழர் அமைப்புக்களையும் இணைத்து கனடியத் தமிழர் சமூகம் நடத்தும் மாபெ…

    • 2 replies
    • 590 views
  6. குடும்பத்தைக் கடத்தி கப்பம் வாங்கிய இருவர் சிக்கினர் பொலிஸ் வலையில்; விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தருவதாகத் தொலைபேசியில் தெரிவித்து அந்தக் குடும்பத்தைக் கொழும்புக்குக் கடத்திச் சென்று 28லட்சம் ரூபாவைப் கப்பமாகப் பெற்ற இருவரைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு குறித்த குடும்பத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர்கள் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் மகனை மீட்டுத் தருவதாகவும் அதற்காகக் குறித்த தொகைப் பணத்துடன் கொழும்புக்கு வருமாறும் கூறியுள்ளனர். இதன்படி குடும்பத்தினர் மூவர் கொழும்…

  7. பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை நிராகரிக்கப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு 18 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நிராகரிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சித் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளில் தமது கட்சி பங்கேற்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அமர்வுகளினால் நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவதன் நோக்கம் தரகுப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அமர்வு ஏற்பாடுகளின் மூலம் பாரியளவில் தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்வதே …

  8. வெளிநாட்டு மென்பானங்களை பயன்படுத்துவதை உடன் நிறுத்தவும்;வட மாகாண சபை அமைச்சர் வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ கூட்டங்களிலோ வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார். விவசாயமும் கமநலசேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் சுற்றாடல் அமைச்சின் பொறுப்புகளை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது ; எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலோ அல்லது கலந்துரையாடல்களிலோ வெளிநாட்டு மென்பானங்களைப் பயன்படுத்த வேண்டாம். எ…

  9. நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் உருவாக்கப்பட்ட தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இமாலய வெற்றி எனக்கு கிடைக்காமை எனது வாழ்வில் விழுந்த பெரிய அடியாகும். இருந்தும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் ஊடகங்களினாலேயே கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப…

    • 8 replies
    • 1.1k views
  10. தொடரும் தமிழக மீனவர்களது வேட்டையின் ஓரங்கமாக திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக்கூறி; 36 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்னர். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களையே இன்று வியாழக்கிழமை முற்பகல் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்கள் 4 படகுகளில் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் 36 பேரையும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைக்கவுள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்த மீனவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். ஏற்கனவே மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தினிலும் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் கைது …

  11. காணொளி : இலங்கையின் சிறைகளுக்குள் நடைபெறும் கொலைகள் பற்றிய பெட்டகம் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9625:2013-10-17-20-49-05&catid=1:latest-news&Itemid=18

  12. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=STP2mpxKRc4#t=30 Tamil Poet Cheran in conversation on the BBC World News while he was over on a short reading tour 6-12 October 2013 http://www.arcpublications.co.uk/book...

    • 0 replies
    • 501 views
  13. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலத்த எதிர்ப்புகளை தொடர்ந்து, இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி அன்சாரி, அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் பங்கேற்கின்றனர். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் நடந்த உச்ச கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி, இலங்கை மீது சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தன. ஐ.நா மனித உரிமை அமைப்பும் இலங்கையை கண்ட…

  14. வடக்கு கிழக்கு விரும்பி இணைவதை அரசு நிறைவேற்ற வேண்டும்: விக்கினேஸ்வரன் 16 அக்டோபர் 2013 "அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப் போவதில்லை முரண்டுபிடிக்கப் போவதும் இல்லை" வடக்கும் கிழக்கும் இணைய விரும்பினால் அதற்கு அரசாங்கம் அதை கட்டாயமாக நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இதை பிரிவினைவாதம் தூண்டுவதாகவோ போராட்டம் செய்வதாகவோ நினைத்து வட கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களை துன்பத்தில் விழுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவச…

  15. வவுனியா பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். வவுனியாவில், இன்று மாலை பெய்த கடும் மழை பெய்தததுடன் இடி, மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. வவுனியா, தாண்டிக்குளம், அரச பண்ணையில் தொழில்புரிந்த பெண்ணொருவரே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். மெனிக்பாம், செட்டிக்குளத்தை வதிவிடமாக கொண்ட மகேந்திரன் பராசக்தி என்ற 40 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளார். கடுமழை பெய்துக்கொண்டிருந்த போது குறித்த பெண் மண்வெட்டியை கையில் வைத்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/34527/64//d,fullart.aspx

  16. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் அநாதரவான நிலையில் பெண்ணொருவரது சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பெண் பாலியல் வல்லுறவின் பின்னராக படுகொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. நடுத்தர வயதுடைய குறித்த பெண்மணி கடந்த ஓரிரு நாட்களிற்கு முன்னதாக படுகொலை செய்யப்பட்டு ஆலய தேர் முட்டியினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. காங்கேசன்துறை வீதியினில அதிக மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் இவ்வாறு சடலம் கிடந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துர்நாற்றம் வீசிய நிலையில் அயலவர்கள் தேடுதல் நடத்திய வேளையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சடலம் அடையா…

  17. கனடா பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும்.. 17 அக்டோபர் 2013 அதற்கு கனடா பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - பீரிஸ் கொழும்பில் இருந்து குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- கனடா பிரதமர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்குகொள்ள வேண்டும் என்றும் அதற்கு அழுத்தம் கொடுக்குமாறும் வெளியுறவு அமைச்சர் பேராசியரியர் பீரிஸ் கொழும்பில் உள்ள அவுஸதிரேலிய தூதுவரிடம் கூறியுள்ளார். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கொழும்பில் நேற்று இரவு சந்தித்து உரையாடிய அமைச்சர் பீரிஸ் கனடா பிரதமர் மாநாட்டு வருகை தர மறுப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளார். சில சக்திகளின் அழுத்தங்களினால் கனடா பிரதமர் வருகை தர மறுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கனடா பிரதமரின் வர…

  18. கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணிப்பதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளும்பட்சத்தில், காங்கிரஸ் கட்சிக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பும் என்ற காரணத்தினால் மன்மோகன் சிங் இந்தத் தீர்மானத்தை எடுக்கக் கூடும் என அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமன்றி தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களும் இலங்கைப் பயணத்தைக் கைவிடுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரிவருகின்றனர். மத்திய அமைச்சர்களான ஜீ.கே.வாசன், நாராயணசாமி ஆகியோரு…

  19. இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி 17 அக்டோபர் 2013 இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மற்றும் அரசியல் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டமைக்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடையாது என பிரித்தானிய பாராளுமன்றின் வெளிவிவகார குழுப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பிரித்தானியா பங்கேற்பதனை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்துள்ளனர். கொள்கை அடிப்படையில் அமர்வுகளுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர். மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரதமர் கமரூன் நேரில் பார…

  20. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், தமக்கு உரித்தான அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக, இன்று வியாழக்க்ிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். ஜனாதிபதியின் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடமாகாண சபையின் ஏனைய அமைச்சர்கள் கடந்த 11ஆம் திகதி, தமது அமைச்சுகளுக்கான பொறுப்புக்களை முதலமைச்சர் முன்னிலையில் ஏற்றுப்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home

    • 8 replies
    • 1.2k views
  21. வடக்கு தேர்தல் முடிவினால் சிறிலங்கா படையினர் குழப்பத்தில் – ஒப்புக்கொள்ளும் தளபதியின் உரை [ புதன்கிழமை, 16 ஒக்ரோபர் 2013, 00:48 GMT ] [ வவுனியா செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக குழப்பமடையக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா இராணுவத் தளபதி, வடக்கில் பயணம் மேற்கொண்டு படையினரை சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், நேற்று வவுனியாவில் உள்ள வன்னிப் படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார். அங்கு படையினருடன் நடத்திய கலந்துரையாடலின் போதே, வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவ…

    • 4 replies
    • 837 views
  22. [Tuesday, 2013-06-11 11:08:35] "மாகாணசபைத் தேர்தல் முறைமையானது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்டது. அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது" என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று அரசாங்கம் சொல்லி வருகின்றது. அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், …

  23. அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளர். http://www.seithy.com/breifNews.php?newsID=95175&category=TamilNews&language=tamil

  24. ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய பிக்குகள் முன்னணியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதித் தலைவர்களான சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய பிக்குகள் முன்னணி ஆகிய தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடர கட்சித…

  25. வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று (17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். வட மாகாண சபையின் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புக்களுக்கே சிவி இன்று சத்தியப்பிரமாணம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. http://www.tamizl.com/?p=45063

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.