ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
பெண்களுக்கு சேட்டை விட்டதால் இரு இளைஞர்களுக்கு நையப்புடைப்பு கைபேசி இணைப்பு சிம் அட்டை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேட்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் நையப்புடைத்து அனுப்பிவைத்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றுமுந்தினம் புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது. கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்க…
-
- 0 replies
- 564 views
-
-
அதிகரிக்கும் விசர்நாய் கடியினை தடுப்பதற்காக தெரு நாய்கள் புகலிடம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. 2005ம் ஆண்டு தொடக்கம் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் வருடம் ஒன்றுக்கு விசர்நாய் கடி மருத்துவத்துக்காக 5 மில்லியன் டொலர்கள் செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆகையால் தெருநாய் புகலிடம் ஒன்றை அமைப்பதன் மூலம் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் முதலாவது திறந்த வெளிப்புகலிடம் அநுராதபுரத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இலங்கையில் சுமார் 2.3 மில்லியன் தெருநாய்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாளொன்றுக்க…
-
- 0 replies
- 284 views
-
-
‘ மகிந்தவை வெளியேற்ற ஒன்று திரளுங்கள்’ – முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு JAN 05, 2015 | 0:26by புதினப்பணிமனைin செய்திகள் வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். அதிபர் தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளோம், அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது. இந்த …
-
- 5 replies
- 743 views
-
-
சனல் 4 தொலைக் காட்சியில் ஸ்ரீ லங்காவின் கொலைக் களம் (Sri Lanka's Killing Fields ) என்ற ஒரு மணித்தியால திரைப்படம் ஜூன் 14 காண்பிக்கப் பட உள்ளதாக அறிவித்துள்ளர்கள். அதற்கு முன் ஜெனீவாவில் உள்ள U .N அலுவலகத்தில் இத் திரைப்படம் ஜூன் 3 , 11 .00 மணிக்கு திரையிடப்படும். மேலும் வாசிக்க http://www.channel4.com/info/press/news/un-premiere-for-sri-lanka-war-crimes-film
-
- 14 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்களிக்கவில்லை. அவர், சுகயீனமடைந்துள்ளதாகவும் அதனால் திருகோணமலைக்கு செல்லாமல் கொழும்பிலேயே தங்கிவிட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.tamilmirror.lk/137269
-
- 16 replies
- 935 views
-
-
பாக்கு நீரிணையில் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கையாள்வதற்கும் மீனவர் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவும் இலங்கையும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளன. இதனை கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவின் புதுடில்லி விஜயத்தின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ரம்புக்வெல குறிப்பிட்டிருக்கிறார். பாக்கு நீரிணையில் இந்திய, இலங்கைக் கடற்படையினர் கூட்டாக ரோந்து செல்வதற்கு இந்த இணக்கப்பாடு வழி வகுக்குமா? என்று கேட்கப்பட்டபோது, இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் இன…
-
- 7 replies
- 1.4k views
-
-
டக்ளஸ்தேவானந்தா, கருனா , ஆறுமுகன் தொண்டமான் அரசில் இணைய மைத்திரி விரும்பவில்லையாம் ! [Monday 2015-01-12 12:00] ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான மூன்று எம்.பிக்கள் இ.தொ.கவின் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) போன்றோரை புதிய அரசுக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கிறார் என அறிய வருகின்றது. எனினும் அரசுக்கு வெளியில் இருந்து அவர்கள் வழங்கக் கூடிய ஆதரவை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் புதிய பிரதமர் தீர்மானித்திருக்கிறார் என கொழும்பு அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டக்ளஸ் அரசுக்குள் நுழைவதற்கு விஜயகலா எம்பியும் கூட்டமைப்பும் கடும் எதிர்ப்…
-
- 0 replies
- 652 views
-
-
மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மேலதிகமாக வைத்தியர்களை நியமிக்க கோரிக்கை முருங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போது இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்ற நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகை அதிகமாக காணப்படுவதோடு, வைத்தியர்கள் ஒய்வில்லாமல் பணிபுரிகின்றனர். இவர்கள் விடுமுறைகளில் சென்றால் அனைவரும் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக முருங்கன் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சென்றிருந்தார். இதன் போது முருங்கன் ஆதார வைத்தியசாலைன் அபிவிருத்தி குழு உறுப…
-
- 0 replies
- 270 views
-
-
சங்கமன்கந்தவில் படையினர் புலிகள் மோதல்; இருவர் பலி வீரகேசரி நாளேடு அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான சங்கமன் கந்தவில் விஷேட அதிரடிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது விடுதலைப் புலிகளில் இருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களின் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு அச்சடலங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் மெகசீன் இரண்டும் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அம்பாறை சங்கமன் கந்த பிரதேசத்தில…
-
- 0 replies
- 881 views
-
-
இலங்கை இந்திய மத்திய அரசுடனே ஒன்றிணைந்து பணிபுரிவதாகவும் எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் இணைந்து பணிபுரிவதில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் - இலங்கை என்பது இறையாண்மை நாடு. இறையாண்மை நாடொன்றின் செயற்பாடுகள் என்பன பிரிதொரு அங்கீகரிக்கப்பட்ட நாடொன்றின் அரசுடன் சார்ந்தே இருக்குமே தவிர எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் சார்ந்து இருக்காது. ஒரு நாட்டின் பிரச்சினையில் ஏனைய நாடுகளின் மத்திய அரசே தீர்மானம் மேற்கொள்ள முடியுமே தவிர மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி பயனில்லை என்பதால்…
-
- 6 replies
- 1.3k views
-
-
திகாமடுல்லை நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை (16) ஆலையடிவேம்பில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தில் இவரை இணைத்துக் கொள்ளக்கூடாது எனக்கோரி, கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தை சென்றடைந்தது. 'அன்புக்கு இனிய அம்பாறை மாவட்ட தமிழ் மக்களே, ஒன்றுபடுவோம்! ஓரங்கட்டுவோம்!' எனும் தலைப்பில் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. http://www.tamilmirror.lk/137789#sthash.3iRm1WEr.dpuf
-
- 0 replies
- 375 views
-
-
அமெரிக்க தடைக்கு பயந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது சிறிலங்கா ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. அபுதாபியில் இருந்து வெளியாகும் ‘தி நேசன்’ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தவுடன், நாங்கள், ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டோம். நாங்கள் ஈரானிடம் நேரடியாக எண்ணெய் வாங்கவில்லை. சிங்கப்பூர், டுபாய், புஜாரா ஊடாகவே பெற்று வந்தோம். அடுத்த சில மாதங்களில், அரசுகளுக்…
-
- 1 reply
- 457 views
-
-
மன்னிக்கவும் இந்த இணைப்பு முதலே பதியப்பட்டுவிட்டது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=21334
-
- 0 replies
- 837 views
-
-
இலங்கை குறித்து முக்கிய உப குழுக்கூட்டம் இன்று (ரொபட் அன்டனி) ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இன்று 24 ஆம் திகதி திங்கட்கிழமை "பசுமைத்தாயகம்" அமைப்பினால் உபகுழுக் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இலங்கை மனித உரிமை தொடர்பான இந்த உபகுழுக் கூட்டம் மனித உரிமைப்பேரவை வளாகத்தில் 25 ஆம் இலக்க அறையில் பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த உபகுழுக் கூட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் பிர…
-
- 1 reply
- 504 views
-
-
சனிக்கிழமை, 18 ஜூன் 2011 10:17 சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றும் மேலும் 108 இராணுவத்தினரை எவ்விதக் குற்றச்சாட்டுக்களும் இன்றி கட்டாய ஓய்வில் அனுப்பும் நடவடிக்கையில் சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா ஈடுபட்டு வருவதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவிற்கு பக்கசார்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு கட்டாய ஓய்வை வழங்க பாதுகாப்புச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். கப்டன் தரம் முதல் மேஜர் ஜெரல் தரத்திலுள்ளவர்கள் வரை பல்வேறு இராணுவ உயர் பதவியில் உள்ள 108 பேரே இவ்வாறு கட்டாய ஓய்வில் அனுப்பப்படவுள்ளனர். http://uyarvu.com/index.php?option=com_content&view=article&id=10326:-…
-
- 4 replies
- 970 views
- 1 follower
-
-
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள காந்தி சிலையடியில் இடம்பெற்றது. இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாரளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். இதன்போது மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்தியாவில் இருந்து எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதம்! இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய்க்குழாய் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார். குறித்த விவாதமானது நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1339088
-
- 7 replies
- 624 views
- 1 follower
-
-
கட்டுநாயக்க விமானத்தளத்தை பார்வையிட கண்காணிப்புக்குழு ஏன் அக்கறை காட்டுகிறது * கேள்வி எழுப்புகிறது அரசு - டிட்டோ குகன் - விடுதலைப் புலிகளால் விமானத் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை பார்வையிட அரசாங்கத்திடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லையென போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ள அதேநேரம், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தாத கண்காணிப்புக் குழு கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தின் மீது மட்டும் ஏன் அக்கறை காட்டுகிறதென அரசாங்கம் கேள்வி எழுப்புகிறது. அண்மைக் காலமாகவே நாளாந்தம் வன்முறைகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்சாளர் தொபினூர் ஒமர்சன், சம்பந்…
-
- 0 replies
- 1.6k views
-
-
[Thursday, 2011-06-23 11:47:40] இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் அரசுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுக்களில் முஸ்லிம்களின் தரப்பும் உள்வாங்கப்பட்டு, அதனை முத்தரப்பு பேச்சுக்களாகத் தொடர வேண்டியதன் அவசியத்தை நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருக்கிறோம். இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கையிலுள்ள ஜப்பா னிய தூதுவர் குனி�யா தகஹாஷியிடம் தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயத்தில் இங்கு வாழும் முஸ்லிம்களின் பரிமாணமும் இன்றியமையாதது என்பதையும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். இனப் பிரச்சினை தீர்வை அடிப்படையாகக்கொண்டு அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கலந்துரையாடல்க…
-
- 3 replies
- 812 views
-
-
சிங்கள இராணுவத்தினர் புலிகள் அழிந்த நிலையில் பச்சைகோழி .பல்லிகளை பச்சையாக உண்ணும் காட்சிகளை பாருங்கள் . கோழிகளை உயிரோடு உண்டு அதன் இரத்தம் குடிக்கும் படைகள் http://youtu.be/TXLa06HnlMw http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1309182046&archive=&start_from=&ucat=1&
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
ஓமந்தையில் விபத்து: இராணுவ வீரர் உயிரிழப்பு! வவுனியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் 33 வயதுடைய ரனுவீர ரொசான் என்ற இராணுவ வீரரே உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துத் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை குறித்த இராணுவ வீரர் பணியாற்றும் கனகராயன்குளம் இராணுவ முகாமில் இருந்து சைக்கிள் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஓமந்தை விளக்குவைத்…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும்! - சம்பந்தன் வேண்டுகோள் [Wednesday 2015-02-11 07:00] பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை எட்டுவதற்கு சீனா உதவ வேண்டும் என்று இலங்கை வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலையடுத்து இலங்கையின் அரசியல் களநிலைவரத்தில் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்கள் தொடர்பாக நேரில் கண்டறிவதற்காக இலங்கைக்கு ஒருவார கால பயணத்தை மேற்கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச திணைக்களத்தைச் சேர்ந்த மூவரடங்கிய …
-
- 8 replies
- 611 views
-
-
தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக வெரிடே (verite) ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாக வெரிடே ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க வருவாயை ஈட்டுவதில் வரி வருவா…
-
- 4 replies
- 775 views
- 1 follower
-
-
படுகொலைகள் மந்துவிலில்... யாழ்ப்பாணம், மே, 01 தென்மராட்சி மந்துவில் பகுதியில் நேற்றுமுன்தினம் நண்பகல் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தர்மகுலசிங் கம் (வயது48) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிவான் பூர்வாங்க மரண விசாரணைகளை மேற்கொண்டார். (சி) * * * மீசாலையில்... யாழ்ப்பாணம், மே 1 மீசாலை வங்களா வீதியில் நேற்றுக்காலை 6.15 மணியளவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மீசாலை மேற்கைச்சேர்ந்த இராசமுத்து கிரிதரன் (வயது25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். (சி) * * * நாரந்தனையில்... யாழ…
-
- 0 replies
- 875 views
-
-
இரண்டு பெல் உலங்கு வானூர்திகளை வாங்குகிறது சிறிலங்கா விமானப்படை [ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 08:49 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா விமானப்படைக்கு இரண்டு பெல்- 412 உலங்கு வானூர்திகள் புதிதாகக் கொள்வனவு செய்யப்படவுள்ளன. பாதுகாப்பு அமைச்சு இதற்கென சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் 3.5 பில்லியன் ரூபா நிதியை குறைநிரப்பு பிரேரணை மூலம் கோரியுள்ளது. சிறிலங்கா விமானப்படையின் 4வது உலங்கு வானூர்தி அணிக்காகவே புதிதாக இரண்டு உலங்குவானூர்திகளைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெல்- 412 ஈபி உலங்கு வானூர்திகள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுபவையாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு விமானிகளும் 13 பேரும் இலகுவாகப் பயணம் மேற்கொள்ள முடியும். சிறிலங்…
-
- 1 reply
- 608 views
-