ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
நாடு திரும்பினார் ரவீந்திர - டி.கே.ஜி.கபில முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று (19) அதிகாலை, நாடு திரும்பினார். டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக கிவ்.ஆர் 668 ரக விமானத்தினூடாக, இன்று அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடு-திரும்பினார்-ரவீந்திர/175-222146
-
- 0 replies
- 291 views
-
-
திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் – முன்னாள் மூத்த போராளி மனோகரின் (காக்கா) அறிவுறுத்தல்… தியாகி திலீபனின் 31 ஆவது நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந…
-
- 0 replies
- 884 views
-
-
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 5 வருடமாக குறைக்க முடிவு news இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாக குறைப்பதற்கு அரசியலமைப்பு நிபுனத்துவக் குழு மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். நேற்று தோப்பாவெவ விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 27 ஜனவரி 2015, செவ்வாய் 9:25 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=601553834727589915#sthash.V1u9bsbu.dpuf
-
- 4 replies
- 662 views
-
-
35 இலட்சம் ரூபாய் செலவில் வீதியைப் புனரமைத்துக் கொடுத்த நபர் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கு…
-
- 20 replies
- 1.5k views
- 1 follower
-
-
Posted by சங்கீதா on 23/06/2011 in செய்தி யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெ…
-
- 42 replies
- 3.6k views
- 1 follower
-
-
உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில் Editorial / 2018 ஒக்டோபர் 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:53 Comments - 0 தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குற…
-
- 0 replies
- 540 views
-
-
22 JUL, 2023 | 02:09 PM 1996 ஆம் ஆண்டு 91 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த, இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. செல்லையா நவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியுடன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த சண்முகரட்ணம் சண்முகராஜா என்ற தமிழ் அரசியல் கைதியும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இவர்கள் கடந்த 18 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் தொடர்பில் 2…
-
- 6 replies
- 837 views
- 1 follower
-
-
இறுதிப் போரில் இறந்த பொதுமக்களுக்கு ஆடி அமாவாசையன்று பூஜை _ வீரகேசரி இணையம் 6/28/2011 10:57:16 AM Share வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கு வடமாகாண ஆலயங்களில் எதிர்வரும் ஆடி அமாவாசைத் தினத்தன்று ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளும், பூஜைகளையும் நடத்துவற்கு வடமாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து ஜனாதிபதி வடமாகாண ஆளுனருக்கு விடுத்துள்ள பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தின்போது எண்ணற்ற பொதுமக்கள் மோதல்களில் சிக்கியும் ஷெல்வீச்சுகளில் அகப்பட்டும், துப்பாக்கிச் சூ…
-
- 0 replies
- 501 views
-
-
13ஆவது திருத்த சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.நல்லூர் பிரதேச சபையின் புதிய கட்டிட தொகுதி திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்- மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தமிழ் தேசிய இனத்தின் அடையாளங்களை அழிப்பதிலும் பௌத்தம் இல்லாத இடங்களில் பௌத்த சின்னங்களை வைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான வேலைகளை திட்டமிட்டு செய்து வந்தது. இதற்காக அதிகப்படியான இராணுவம் குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தியது.சுதந்திரமாக கருத்துக்கூற முடியாத சூழல் நிலவியது. ந…
-
- 5 replies
- 563 views
-
-
புலிகளை விடுதலை செய்யுமாறு, கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது…. October 16, 2018 1 Min Read சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்தி வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, தெரிவித்துள்ளது. பத்தரமுல்லை – நெளும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று (15.10.18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோது, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தவறான காரணங்களுக்காவும் சர்வதேசம், புலம்பெயர்த் தமிழ் அமைப்புகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காகவும், புதிய அரசமைப்பை அரசாங்கம் கொண்டு வருவதற்கு…
-
- 1 reply
- 351 views
-
-
இலங்கையின் கொலைக்களம் படத்தை ரணில்-மூன் ஒரே நேரத்தில் பார்ப்பர் Sunday, July 3, 2011, 9:09 உலகம், சிறீலங்கா அமெரிக்கா சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீமூனும் ஒன்றாக இருந்து இலங்கையின் கொலைக்களம் சனல் 4 ஆவணத் திரைப்படத்தை பார்வையிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் பான் கீ மூனைச் சந்தித்து ரணில் பேச்சு நடத்தவுள்ளார். அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் திகிலூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ரணில், அரசின் உயர்மட்டத் தவைர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார…
-
- 6 replies
- 958 views
-
-
தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை இடைநிறுத்த கோரி, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரவுள்ளது. இதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பான் கீ மூனை நியுயோர்க்கில் வைத்து சந்திக்கிறார். தற்போது பிரித்தானியாவில் இருக்கும் அவர், பெரும்பாலும் இன்றையதினம் அமெரிக்கா செல்வார் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு எதிவரும் 12ம் திகதி அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யுத்தக்குற்ற விசாரணை அறிக்கையை செப்டம்பர் மாதம் வரையில் தாமதிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/…
-
- 1 reply
- 484 views
-
-
October 22, 2018 Add Comment Share This! கடந்த 5 ஆண்டுகளாக நரகாசுரனின் பிடியில் சிக்கி தவித்துவந்த வடபகுதி தமிழ் மக்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிலிருந்து விடுதலை கிடைக்கிறது. அந்தவகையில் அன்றையதினம் அவர்களுக்கு தீபாவளி தினமாகவே அமையவுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு அன்றைய அரசு வடபகுதிக்கான தேர்தலை அறிவித்தவுடன் பதவியை எப்படியாவது கைப்பற்றி தமது சுயலாபங்களை மேற்கொள்வதற்காக ஒரு கூட்டாக இணைந்து அதன் ஆட்சிப்பொறுப்பை கைப்பற்றியிருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. …
-
- 1 reply
- 454 views
-
-
40ற்கு மேற்பட்ட இராணுவம் பலியென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன 10 SLA soldiers killed, 25 wounded in Madu [TamilNet, Wednesday, 25 April 2007, 12:38 GMT] Ten Sri Lanka Army soldiers were killed and more than 25 wounded in a explosion in Madu DS Division in Mannar Wednesday evening, according to initial reports. 25 wounded soldiers were admitted at Anurdhapura hospital, medical sources said. Further details are not available at the moment. Sri Lanka Army had stepped up artillery shelling towards Liberation Tigers of Tamileelam controlled area Wednesday morning.
-
- 14 replies
- 5.1k views
-
-
கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை அடிப்படையாக வைத்து தமிழக முதலமைச்சர் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியொன்றை வழங்கத் தயாராகிறார். Thursday, July 7, 2011, 11:12 இந்தியா, உலகம் செனல் 4 நிறுவனத்தின் கொலைக்களம் ஆவணத்திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டியொன்றை வழங்க தயாராகி வருவதாக சென்னைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெட்லைன் டுடே என்ற தொலைக்காட்சி ஆங்கில மொழி ஒளிபரப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த தொலைக்காட்சி நிறுவனம் அமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகளில் இயங்கும் இலத்திரனியல், அச்சு ஊடகத் தகவல்களை வெகுவாக ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி சேவையாகும். செனல் 4 நிறுவனம் வெளியிட்ட…
-
- 1 reply
- 898 views
-
-
பதிலளிப்பாரா? பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கட்டைப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவதாக யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஜந்திற்கும் அதிகமான காவல்நிலையங்களிற்கு சென்று அங்கு காவல்துறை அதிகாரிகளை மிரட்டியும் அவர்கள் முன்னதாகவே பொதுமக்களை அச்சுறுத்திய பல சம்பவங்கள இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவரால் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி இருக்கும் வயோதிப தாய் ஒருவரை தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்;ததாக விஜயகலா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளதும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் காரைநகரினை சேர்ந்த யுவதியொருவர் காதல் வயப்பட்ட நிலையில் …
-
- 0 replies
- 413 views
-
-
மனித உரிமை மீறல்கள்: பாதுகாப்புப் பிரிவின் 30 பேர் கைது [செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 15:13 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்க இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 30 பேர் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பவ்ரெல் அமைப்பு தெரிவித்துள்ளது. பவ்ரெல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி ரொட்றிக்கோ கூறியுள்ளதாவது: ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் பொதுநலப் பணிகளில் ஈடுபட்ட தலைவர்களின் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் தொடர்புடைய 452 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் தொடர்பான எமது அமைப்பின் அறிக்கை எதிர்வரும் 15 ஆம் நாள் வெளியிடப்பட உள்ளது. இதுவரை பொதுமக்களிடமிருந்து ஆயிரக…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஏதிலிகளின் கோரிக்கையை நியூஸிலாந்து பிரதமர் நிராகரிப்பு Posted by காந்தன் on 11/07/2011 in செய்தி நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்தோனேஷியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்றபோது, அகதிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்கள் நியூஸிலாந்திற்கு செல்ல விரும்புகின்றோம். ‘எங்களது எதிர்கால வாழ்க்கை நியூஸிலாந்திலேயே …
-
- 0 replies
- 388 views
-
-
போர் மேலும் 20 ஆண்டுகள் நீடிக்கலாம் அதில் இந்தியா தலையிட முடியாது முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி . இலங்கையில் நடக்கும் போர் மேலும் 20ஆண்டுகள் நீடிக்லாம். ஆனால் அதில் இந்தியா தலையிட முடியாது என்று இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி கூறினார். கடலோர காவல்படை மற்றும் சென்னை பல்கலைககழகம் இணைந்து சென்னை துறைமுகத்தில் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தன. இலங்கை இந்தியா உறவு மற்றும் தற்போது நிலவிவரும் சூழ்நிலை என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.ஆர்.ராகவன் பேசினார். கடலோர காவல்படைக்கு சொந்தமான சாரங்கப்பலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ராகவன் மேலும் கூறியதாவது: இலங்கை மற்றும் இந்தியாவில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிலவிய சூழ்நிலைகள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
அக்னி பரீட்சையாகும் யாழ். தோ்தல் களம்: மனித உரிமை ஆணைக் குழு அதிகாரிகளை அனுப்புமாறு கோரிக்கை [Friday, 2011-07-15 08:30:22] யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளைஅனுப்ப வேண்டும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்வதாகவும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். …
-
- 0 replies
- 313 views
-
-
06 SEP, 2023 | 07:57 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் அவர்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கண்டறிவதற்கு உதவுதல் மற்றும் உண்மையை வெளிப்படுத்தல் ஆகிய ஆணைகளை செயற்படுத்துவதில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே அடையப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழு, இது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழப்பதற்கு வழிவகுத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெ…
-
- 0 replies
- 126 views
- 1 follower
-
-
தமிழர்களுக்காக குரல் கொடுத்துவரும் அனைத்து தரப்பினரையும் கேட்டு கொள்கிறோம்: பொங்கியெழும் மக்கள் படையணி பொங்கியெழும் மக்கள் படையணி, தமிழீழம். 20-07-2011 அன்பான தமிழ் பேசும் மக்களே! இக் காலத்திற்கு பொருத்தமானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை வெளியிடுகிறோம். தற்போதைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசினை பொறிக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைவரதும் கவனத்திட்குமாக இத் தகவலை வெளியிடுகிறோம். அண்மைகாலமாக சிங்கள அரசின் முகத்திரைகள் கலைந்து வரும் நிலையில் அதனை திசை திருப்பவும் தடுப்பதற்கும் தமிழ் மக்களிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்கவும் பல்வேறு பொறிமுறைகளை பயன்படுத்திவருகிறது. போர் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் அதற்கு ஏற்றதுமான ராஜதந்திர நகர்வு…
-
- 1 reply
- 998 views
-
-
வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். யாழ். நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் காலை 9 மணிக்கு அவர் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை மீட்டுத் தரவும், மீள்குடியேற்றம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுமே இவர் இந்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், வடபகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் அனந்தி சசிதரனுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர். காணாமல் போனவர்கள் மற்றும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் போனவர்கள், மீள்குடியேற்றம் போன…
-
- 9 replies
- 850 views
-
-
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களை மையப்படுத்தி வடக்கு கிழக்கில் தற்போது பெரும் அரசியல் தகிடுதாளங்கள் தொடங்கியுள்ளன. வடக்கு, கிழக்கு மக்களுக்கு உள்ள தமிழ்த்தேசியப்பற்றையும் புலிகள் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு உள்ள செல்வாக்கையும் வைத்து அதனை மூலதனமாக்கி தமக்கான வாக்கு வேட்டை நடாத்தவே தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் முன்னிலையில் நிற்கின்றார்கள். வடக்கில் தற்போது 3 அணிகள் தமிழ்த்தேசியத்தையும் புலிப்பபுராணத்தையும் வைத்து களமிறங்க ஆயத்தமாகியுள்ளன. வீட்டுச்சின்னம் மற்றும் சைக்கிள், இன்னொன்று தற்போது புதிதாய் அவதாரம் எடுத்துள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அணி என்பனவாகும். தற்போது முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய பாதையில் பயணிக்க ஆயத்தமாகி வரும் சமயத…
-
- 0 replies
- 629 views
-
-
மாணவர்களை விடுவிக்காதது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும்: மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை. யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் மூவரை சிறிலங்கா கடற்படை கைது செய்து இன்னமும் விடுவிக்காதிருப்பதானது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை: மாணவர்களான சு.யசோதரன், கு.கண்ணன், ந.வேணுகாணன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கல்விச் சமூகத்தினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். படைத்தரப்பின் சமாளிப்பு அறிக்கைகளும், போலி வாக்குறுதிகளும் நீலிக் கண்ணீரும் அல்ல. அம் மாணவர்கள் இரகசியமாக தூக்கிச் செல்லப்படவில்லை. ஊரடங்கு நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட உந்துருளி…
-
- 0 replies
- 767 views
-